இராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த தங்கம், வைரம், வைடூரியம் போன்ற நவரத்தின ஆபரணங்கள் எங்கே..?

நண்பர்களே….

பொ.வேல்சாமி

ஞ்சை பெரிய கோவிலுக்கு இராஜராஜ சோழனும் அவருடைய அக்காள் குந்தவை நாச்சியாரும் மற்றும் பலரும் கொடுத்த பல்வேறு வகையான ஆபரணங்களைப் பற்றிய தகவல்களை இராஜராஜ சோழன் வெட்டிய கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. குறைந்தபட்சம் அந்த ஆபரணங்களை ஒரு லாரியிலாவது ஏற்ற வேண்டும். இராஜராஜ சோழன் காலத்திற்கு பின்னர் வந்த ஆட்சியாளர்களும் இறுதியாக ஆட்சி செய்த மராட்டிய மன்னர்கள் காலம் வரையில் அந்த ஆபரணங்கள் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன. மராட்டிய மன்னர்களும் ஏராளமான நிலங்களையும் நகைகளையும் தஞ்சை பெரிய கோவிலுக்கு அளித்த கல்வெட்டுகளும் உள்ளன. இந்த நிலங்களும் நகைகளும் எங்கே போயின..?

படிக்க:
அரசியலமைப்பை புறக்கணிக்கும் தேசியக் கல்விக் கொள்கை – 2019 !
இந்திய நாடு அடி(மை) மாடு ! புதிய ஜனநாயகம் ஜூன் 2019

இதே போன்று ஸ்ரீரங்கம் கோவிலுக்கும் திருப்பதி கோவிலுக்கும் சோழர் காலத்திலிருந்து 19-ம் நூற்றாண்டு வரை பல்வேறு வகையான நில தானங்களையும் பெரு மதிப்புள்ள ஆபரணங்களையும் பல மன்னர்கள் கொடுத்துள்ளனர். “கோயிலொழுகுஎன்ற நூலில் ஸ்ரீரங்கம் கோவில் பெற்ற தானங்களும் அக்கோவில் சார்ந்த பல வரலாற்று நிகழ்வுகளும் கடந்த 1000 ஆண்டுகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே போன்று திருப்பதி கோவிலில் வரலாற்றுக் காலங்களில் பதிவு செய்யப்பட்ட நூலைதிருமலை ஒழுகுஎன்று குறிப்பிட்டுள்ளார்கள். இந்த இரண்டு பதிவுகளிலும் சொல்லப்பட்ட சொத்துகளும் நகைகளும் இன்றும் அந்தந்த கோவில்களில் உள்ளன. தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் ஏன் இவை இல்லை..?

ஸ்ரீரங்கம், திருப்பதி கோவில்களில் காலங்காலமாகப் பதிவு செய்யப்பட்ட செய்திகள் நூலாக வெளிவந்துள்ளன. அந்த இரண்டு நூல்களின் இணைப்பை உங்களுக்கு கொடுத்துள்ளேன். மேலும் இராஜராஜ சோழன் கொடுத்த ஆபரணங்களைப் பற்றிய கல்வெட்டுகள் ஒரு தனித் தொகுதியாகதஞ்சை பெருவுடையார் கோவில் கல்வெட்டுகள் பாகம் 1 ” (தானங்களைப் பற்றியது) வெளிவந்துள்ளது. அந்த நூலின் இணைப்பையும் கீழே உங்களுக்குக் கொடுத்துள்ளேன்.

(கீழுள்ள கோப்புகளை தரவிறக்கம் செய்ய, லிங்கின் மீது அழுத்தி, Free Download பட்டனை அழுத்தவும்)

தஞ்சை பெரிய கோவிலுக்கு இராஜராஜ சோழன் கொடுத்த தங்கம் வைரம் வைடூரியம் முத்து பவளம் போன்ற இரத்தினங்களால் செய்த நகைகளின் தொகுதிகளைக் கூறும் கல்வெட்டுகள் தஞ்சை பெருவுடையார் கோயில் கல்வெட்டுகள்

கோயிலொழுகு (ஸ்ரீரங்கம் கோவில் வரலாற்றுப் பதிவு – 1000 ஆண்டு காலத்துப் பதிவுகள்)

1976-ல் பதிப்பிக்கப்பட்டது கோயிலொழுகு – 1976

திருமலை ஒழுகு (திருப்பதி கோவில் வரலாற்றுப் பதிவு – 1000 ஆண்டு காலத்துப் பதிவுகள்) திருமலை ஒழுகு

பொ.வேல்சாமி : தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:

  • பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
  • கோவில் நிலம் சாதி
  • பொய்யும் வழுவும்