“SBI வங்கியில் காலி பணியிடங்களை நிரப்ப நடைபெற்ற தேர்வில் பொருளதாரத்தில் நலிந்த பிரிவினர், என 10% இடஒதுக்கிடுமுறை அமல்படுத்துவதை கண்டித்து திருச்சி ஜங்ஷன் தலைமை SBI வங்கி முற்றுகை போராட்டம் !”

10% இடஓதுக்கீடு சம்பந்தமான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் திருட்டுத்தனமாக SBI வங்கி அதிகாரிகள், மோடி , பாஜக ஆட்சிக்கு, காவடி தூக்குகின்றனர். பார்ப்பனர்களுக்கு சேவை செய்து, தாழ்த்தப்பட்ட மக்களின் இடஓதுக்கீடு உரிமையை பறிக்கும் வகையிலும் சமூக நீதிக்கு அநீதி இழைக்கும் வகையிலும் BC கட்-ஆப் 61.25, MBC கட்-ஆப் 61.25, ST கட்-ஆப் 53.75, EWS பார்ப்பனர் / உயர் சாதியினர் 28.5 – கட் -ஆப் என மதிப்பெண் மோசடியை செய்கின்றனர்.

சாதாரண மக்களுக்கு ஆண்டு வருமானம் ரூ 72 ஆயிரம்; ஆனால் உயர் சாதி பார்ப்பனர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ 8 லட்சம்; இருந்தாலும் அவர்கள் சட்டப்படி ஏழைகள் என்று மோடி அரசு வரையறை செய்து, உழைக்கும் மக்களுக்கு ஏதிரான பாசிசத்தை கட்டமைக்கின்றது.

இந்நிலையில் SBI வங்கியில் காலி பணியிடங்கள் நிரப்ப நடைபெறும் தேர்வில் பொருளாதார நலிந்த பிரிவினர் என 10% இடஒதுக்கீடுமுறையை அமல்படுத்துவதைக் கண்டித்து, 31.07.2019 அன்று திருச்சி ஜங்ஷன் அருகே உள்ள தலைமை SBI வங்கி முற்றுகை போராட்டம் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பிரச்சார செயலர் சீனி விடுதலை அரசு தலைமையில் நடைபெற்றது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இதில் மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன், மக்கள் கலை இலக்கியக் கழக திருச்சி மாவட்ட செயலர் தோழர் ஜீவா, த.பெ.தி கழக உறுப்பினர்கள், திராவிடர் விடுதலை கழகம் மாவட்ட அமைப்பாளர் தோழர் புதியவன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில கொள்கை பரப்புச் செயலர் தோழர் வை.சரவணன், மே 17 இயக்கம் திருச்சி பொறுப்பாளர் தோழர் பாலாஜி, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி திருச்சி மாவட்ட தலைவர் சம்சுதீன், உழைக்கும் மக்கள் சேவைக் கட்சி திருச்சி மாவட்ட தலைவர் Ac ராமலிங்கம் மற்றும் மக்கள் உரிமை கூட்டணி நகர தலைவர் முகம்மது காசிம், நிர்வாகி ஜோசப், தமிழ்தேச மக்கள் முன்னணி தோழர் ரகு, என பல அமைப்பு தோழர்கள், கட்சியினர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈட்பட்ட தோழர்கள் பேரணியாக சிறிது தூரம் முழக்கமிட்டு வந்து SBI வங்கியை முற்றுகையிட்டனர். போராட்டத்தை காண பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் கூடினர். தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்களை போலீசு கைது செய்து வேனில் ஏற்றியது. தோழர்கள் முழக்கமிட்டவாறே கைதாகினர். மத்திய அரசைக் கண்டித்து நடந்த ஜனநாயக சக்திகளின் ஒன்றிணைந்த முற்றுகை போராட்டம், மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் :
மக்கள் அதிகாரம்.
திருச்சி.