privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்வைஃபேஸ்புக் பார்வைதமிழகத்தில் கொரோனா புள்ளிவிவரங்கள் உணர்த்துவது என்ன ? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா 

தமிழகத்தில் கொரோனா புள்ளிவிவரங்கள் உணர்த்துவது என்ன ? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா 

ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கொரோனாவை நாம் எதிர்கொள்ளும் முறைகளில் தளர்வு இருக்கக்கூடாது என்பதற்காகவே இந்த பதிவு, யாரேனும் கொரோனாவை எளிதாக எடுத்துக்கொண்டிருந்தால் இந்த பதிவை காட்டுங்கள்.

-

தமிழகத்தின் கொரோனா மரண விகிதாச்சாரம் குறித்த விபரங்கள் அதன் மூலம் நாம் பெற வேண்டிய படிப்பினை குறித்த பதிவு !

துவரை நிகழ்ந்துள்ள பதிவுசெய்யப்பட்ட கொரோனா மரணங்களில்; 46.5% மரணங்கள் 41 முதல் 60 வயது வரை உள்ள மக்களுக்கு நிகழ்ந்துள்ளது. 46.5% மரணங்கள் 60 வயதுக்கு மேல் உள்ள முதியோர்களுக்கு நிகழ்ந்துள்ளது. 7% மரணங்கள் 21 முதல் 40 வயதுடையோருக்கு நிகழ்ந்துள்ளது. 20 வயதுக்கு குறைவானோரில் இதுவரை ஒரு மரணமும் நிகழவில்லை.

மேற்சொன்ன தகவல்களில் இருந்து கிடைக்கும் படிப்பினை யாது?

அமெரிக்கா / இத்தாலி / சீனாவிடம் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், 40 முதல் 60 வயதுடைய மக்களுக்கு அந்த நாடுகளில் 2% மட்டுமே மரணம் நிகழ்ந்துள்ளது. அங்கே 80% மரணங்கள் 60+ வயதினருக்கு நிகழ்ந்துள்ளது.

எனவே 46.5% மரணம் உழைக்கும் வர்க்கமாகவும் மத்திய வயதினர் என்று பொருள் கொள்ளப்படும் 41 முதல் 60 வயதினருக்கு நிகழ்ந்துள்ளதை நாம் கவனமின்றி கடந்து செல்ல முடியாது.

மேலும் 21-40 வயதினரிடையே மரண விகிதங்கள் என்பது மேற்சொன்ன உலக நாடுகளில் 1%க்கும் குறைவாக பதிவாகியுள்ளது, நம்மிடையே இது 7% பதிவாகியுள்ளது.

நம்மிடையே அதிகமான தொற்று பெறுபவர்கள் பட்டியலில் கிட்டத்தட்ட 95% பேர் 13 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள்.

இதிலும் மிக அதிகமான தொற்றுக்குள்ளானவர்கள் 21 வயது முதல் 40 வயதினராகவே இருக்கின்றனர். மேற்சொன்ன தகவல்களின் மூலம் நாம் பெற வேண்டிய படிப்பினைகள்.

✅ கொரோனாவால் நூறு மரணங்கள் நிகழ்ந்தால் அதில் ஏழு மரணங்கள் 21 வயது முதல் 40 வயதினருக்கு நிகழும்.

எனவே இளைஞர்களான 21 வயது முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் கட்டாயம் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். இவர்களுக்கு தொற்றா நோய்கள் பெருமளவு இருக்காது. மிக திடகாத்திரமான உடல் நலத்துடன் இருப்பார்கள். இருப்பினும் நிகழ்ந்த மரணங்களுள் 7% பேர் இந்த வயதினருக்கு நிகழ்ந்துள்ளது இது வைரஸின் வீரியம் மற்றும் அது நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை தகர்க்கும் -, 0n 9B87776சக்தியை குறிக்கிறது.

21 முதல் 40 வயதினர் என்ன செய்யலாம் ???

நீங்கள் கல்லூரி செல்லும் மாணவரா? உங்களை நம்பி குடும்பத்தின் பொருளாதாரம் தற்போது இல்லையா? தயவு செய்து வீட்டிலேயே இருங்கள்.
வெளியே வராதீர்கள். முதல் ஊரடங்கில் எப்படி வீட்டிலேயே இருந்தீர்களோ? அதே மாதிரி இருங்கள்.

நான் பார்ப்பது என்னவென்றால், இந்த வயதினர் தான் வெளியே தேவையில்லாமல் வந்து கும்பல் கும்பலாக கூட்டம் கூட்டமாக தேனீர்கடைகளில் காணும் இடங்களிலெல்லாம் நின்று துணி முகக்கவசம் கூட அணியாமல் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

படிக்க:
♦ ஏப்ரல் மாதத்தில் மட்டும் 12 கோடி இந்திய மக்கள் வேலையிழப்பு !
♦ கொரோனா நோயாளிகளை தற்போது குணப்படுத்தும் மருத்துவர்கள் நீட் தேர்வு எழுதியவர்களா ?

ஆனால் அவர்களுக்கே தெரியாது இந்த வயதினர் தான் நிகழும் இத்தனை மரணங்களுக்கும் காரணம் என்று.. எப்படி என்றா கேட்கிறீர்கள்??

நிகழும் கொரோனா தொற்றுகளில் 90% அறிகுறிகள் இல்லாமல் வருகிறது. இந்த தொற்றை வீட்டிற்கு வெளியே வாங்கிகொண்டு வீட்டில் இருக்கும் முதியோர்களுக்கு கொடுப்பது யார்???

21 வயது முதல் 40 வயதுடைய மக்கள் தான். எனவே தயவு செய்து வீட்டின் பொருளாதாரத்தில் பங்கு எடுக்காத இந்த வயதினர் வீட்டிலேயே இருங்கள்.

  • வெளியே வந்தால் மாஸ்க் அணியுங்கள்.
  • கூட்டம் கூடாதீர்கள்.
  • பைக் எடுத்துக்கொண்டு வெளியே சுற்றாதீர்கள்.
  • வெளியே சென்று வீடு திரும்பினால் கை கழுவுங்கள். முடிந்தால் குளித்து விடுங்கள்.
  • திருமணங்கள் / சமயக்கூட்டங்களை தவிருங்கள்.
  • வேலைக்கு சென்றால் வேலை முடிந்ததும் வீடு திரும்புங்கள்.

அடுத்து 41 வயது முதல் 60 வயதினரிடையே, 46.5% மரணங்கள் நிகழ்வது என்பதை மிக மிக கவனமாக நாம் பார்க்க வேண்டும். இவர்கள் தான் குடும்பத்தின் ஒரே சம்பாதிக்கும் தலைவராக இருக்கலாம்.

மேலும் இந்த வயதை குடும்பத்தலைவர்கள் நெருங்கும் போது தான் குடும்பத்தில் முக்கியமான நிகழ்வுகள் அரங்கேற இருக்கும். கட்டாயம் வீட்டில் உட்கார முடியாது. வேலை செய்யச்சென்றே ஆக வேண்டும். எனவே மிக அதிக கவனம் எடுக்க வேண்டியது இந்த வயதினர் தான்.

முடிந்தால் சர்ஜிகல் 3 ப்ளை மாஸ்க் வாங்கி தினமும் ஒன்று என்று அலுவல் நேரத்தில் உபயோகப்படுத்துங்கள். துணி மாஸ்க் உபயோகித்தால் அது கட்டாயம் இரண்டு /மூன்று லேயர் இருக்கிறதா என்று பாருங்கள். அவ்வாறு இல்லையென்றால் கைக்குட்டையை இரண்டு லேயர்களாக மடித்து அந்த துணிக்கவசத்துக்குள் வைத்துக்கொள்ளுங்கள்.

  • கண்ட இடங்களை தொடாதீர்கள்.
  • கைகளை அடிக்கடி சேனிடைசர் கொண்டு கழுவுங்கள்.
  • நேரம் கிடைத்தால் சோப் போட்டு நன்றாக கை கழுவுங்கள்.
  • ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை சோப் போட்டு கை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
  • பவர் இல்லாத கண்ணாடியை வாங்கி அணியலாம்.
  • தேவையில்லாமல் கண்களுக்கு கைகள் செல்வது தடுக்கப்படும்.
  • அலுவல் நேரத்தில் எப்போதும் முகக்கவசம் அணிந்திருங்கள்.
  • வீட்டுக்கு திரும்பும் போது கைகளை சோப் போட்டு கழுவுங்கள்.
  • முடிந்தால் உடையை வெளியே களைந்து விட்டு வீட்டுக்குள் நுழையுங்கள்.
  • முடிந்தால் குளித்து விடுங்கள்.
  • கால்கள்- கைகள்- முகம் என்ற வரிசையில் சோப் போட்டு கழுவுங்கள்

நிகழும் மரணங்களில் 84% ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய் போன்ற ஏதேனும் தொற்றா நோய் இருப்பவர்களுக்கு நிகழ்ந்துள்ளது. பெரும்பான்மை தொற்றா நோய்கள் 41 வயது முதல் 60 வயதில் தான் கண்டறியப்படுகிறது.

எனவே கட்டாயம் உங்களது சுகர் / பிரசர் அளவுகள் நார்மலாக இருப்பதை உறுதி செய்யுங்கள். கொரோனா தொற்றே ஏற்பட்டாலும் நமது சுகர் பிரசர் அளவுகள் சரியாக இருந்தால் எந்த பாதிப்பும் ஏற்படாமல் மீள முடியும். தொற்று நோயாக மாறாமல் தடுக்க முடியும்.

நீரிழிவு/ ரத்த கொதிப்பு போன்றவற்றிற்கு எடுக்கும் மருந்துகளில் கவனம் தேவை. தேவையில்லாமல் மருத்துவமனைகளை விஜயம் செய்வதை தவிர்க்கவும். வைபவங்கள் / விருந்துகள் / கேளிக்கைகள் இந்த நேரத்தில் தேவையற்றது. ஒதுங்கிக்கொள்ளுங்கள்.

நிகழும் ஒவ்வொரு நூறு மரணங்களுக்கு 47 மரணங்கள் உங்கள் வயதுடையோருக்கு நிகழ்ந்துள்ளது என்பதை மறவாதீர்கள். அடுத்த வயதினர் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள். இவர்களை பாதுகாப்பது என்பது முன் சொன்ன வயதுடையோர் எப்படி இருக்கிறார்கள் என்பதை பொறுத்தே அமையும்.

காரணம். அவர்கள் தான் வீட்டிலிருக்கும் முதியோர்களுக்கு நோயைக் கொண்டு சென்று பரிசளிக்கின்றனர். இருப்பினும் வீடுகளிலும் முதியோர்களிடம் இருந்து ஆறு அடி இடைவெளி விட்டு இருப்பது சிறந்தது.

முதியோர்கள் இருக்கும் வீடுகளில் அவர்களிடம் பேசும் போது
மாஸ்க் அணிவது சிறந்தது.

அவர்களை அருகில் சென்று கவனித்துக்கொள்ளும் மக்கள் மாஸ்க் அணிவது சிறந்தது.

அவர்களுக்கு இருக்கும் நீரிழிவு ரத்த கொதிப்பு போன்றவற்றிற்கு தேவையான மருந்துகளை வாங்கித்தர வேண்டும்.

அவசர தேவையன்றி மருத்துவமனைகள்/கிளினிக்குகளுக்கு அவர்கள் வருவதை தவிர்க்க வேண்டும்.

கட்டாயம் திருமணங்கள்/ கூட்டங்கள் / பயணங்களை தவிர்க்க வேண்டும்.

வீட்டில் தனியாக கழிப்பறையுடன் கூடிய அறை இருந்தால் அதை அவர்களுக்கு ஒதுக்க வேண்டும்

மேற்சொன்னவற்றை நாம் அடுத்த ஓராண்டுக்கு கடைபிடிக்க வேண்டும்

எனது அனுமானம் சரியென்றால் கொரோனா வைரஸ் தொற்று அடுத்த ஓராண்டுக்கு வீரியத்தில் குறைவின்றி சமூகத்தில் உலவி வரும். அதற்காக ஒரு வருடம் ஊரடங்கு போட முடியாது.

அப்படி கண்டிப்பான ஊரடங்கு போட்டால் ஏற்படும் பொருளாதார சரிவில் இதுவரை மரணம் ஏற்படாமல் பாதுகாக்கப்படும். 0-20 வயது வரை உள்ளவர்களிடையே பசி மரணங்கள் ஏற்படக்கூடும்.

இருப்பினும் நோயின் பரவலை தடுக்க இதுபோன்ற தளர்வுடன் கூடிய ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருப்பது சிறந்தது. அதற்கு காரணம் நம் நாட்டின்

✅மக்கள் தொகை
✅மக்கள் தொகை அடர்த்தி
✅புலம் பெயர்ந்த மக்கள் தொகை
✅மக்களிடையே நிலவும் அறியாமை
✅80% மக்கள் அன்றாட ஜீவனத்துக்கு கட்டாயம் வெளியே வரவேண்டிய கட்டாயம்.
✅கல்லாமை
✅ வறுமை
✅ பொருளாதாரம்

இன்னும் ஓராண்டுக்கு நம்மையும் நம்மை சார்ந்தோரையும் காக்க
நம்மிடையே கொரோனா குறித்த அறிவு, எச்சரிக்கை உணர்வு நிதம் வாங்கும் மூச்சுக்காற்று போல் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

இன்னும் தொடர்வோம்.

***

இந்திய அளவில் இதுவரை பெறப்பட்டுள்ள கோவிட் நோய் குறித்த தகவல்களும் அதில் இருந்து நாம் பெற வேண்டிய படிப்பினைகளும் !

துவரை பாதிக்கப்பட்டோரில் 100-இல் 93.63 சதவிகிதம் பேருக்கு சாதாரண நோய் தொற்றாகவே கொரோனா வெளிப்பட்டிருக்கிறது.

✅இது ஆறுதலான செய்தி✅

இருப்பினும் மீதம் உள்ள 6.33% பேருக்கு தீவிர சிகிச்சை தேவைப்பட்டுள்ளது. அந்த 6.33% இல், 2.94% க்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

2.94% பேருக்கு ஆக்சிஜன் தேவைப்பட்டுள்ளது. 0.45% பேருக்கு வெண்ட்டிலேட்டர் எனும் செயற்கை சுவாச இயந்திர சிகிச்சை தேவைப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை தேவைப்பட்ட 6.33% பேரில் 3.5% பேரை நாம் இழந்திருக்கிறோம்.

❌இது துற்செய்தி❌

அதாவது மருத்துவமனையில் ஆக்சிஜன்/ வெண்ட்டிலேட்டர்/ ஐசியூ இந்த மூன்றில் ஏதாவது சிகிச்சை எடுப்பவர்களில் இரண்டு பேரில் ஒருவர் இறக்கிறார் என்று அர்த்தம்.

ஒரு கோடி பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பதை நாம் கண்டறிந்தால், அப்போது 45000 பேருக்கு வெண்ட்டிலேட்டர் தேவைப்படும் சூழல் ஏற்படும்.

நம் நாட்டில் இருப்பது 40,000 வெண்ட்டிலேட்டர்கள்.இப்போது ஒரு பத்தாயிரம் கூடி இருக்கலாம். 3.5 லட்சம் பேர் மரணிக்கும் வாய்ப்பு இருக்கிறது . (CASE FATALITY RATE AT 3.5%) சுமார் மூன்று லட்சம் பேருக்கு ஐசியூ அட்மிஷன் தேவைப்படும். (அதிகபட்சம் நம்மிடம் ஒரு லட்சம் ஐசியூ பெட்களுக்கு மேல் இல்லை) மூன்று லட்சம் பேருக்கு ஆக்சிஜன் தேவைப்படும்.

நான் கூறுவது அனைத்தும், நாட்டின் மக்கள் தொகையில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாக இருக்கும் ஒரு கோடி மக்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்படும் போது நிகழ்ந்திருக்கும். நான் கூறியது அனைத்தும் அனுமானங்கள் அல்ல.
அறிவியல். இதுவரை நிகழ்ந்ததை வைத்து எதிர்காலத்தை திறம்பட கணிக்கும் அறிவியல்.

ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கொரோனாவை நாம் எதிர்கொள்ளும் முறைகளில் தளர்வு இருக்கக்கூடாது என்பதற்காகவே இந்த பதிவு, யாரேனும் கொரோனாவை எளிதாக எடுத்துக்கொண்டிருந்தால் இந்த பதிவை காட்டுங்கள்.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க