கொரோனா நோயாளிகளை தற்போது குணப்படுத்தும் மருத்துவர்கள் நீட் தேர்வு எழுதியவர்களா? – டாக்டர் சக்திராஜன்

மிழ்நாட்டில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவந்தாலும், நோயாளிகளை நிர்வகிக்கும் விதமும் சோதனைகள், மரணங்களின் எண்ணிக்கை இந்தியாவின் பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் மிகச் சிறப்பாகவே இருக்கிறது.

இதற்கு முக்கியமான காரணம், இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி மருத்துவக் கல்லூரியில் நுழைந்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் சேவைதான் என்று குறிப்பிடுகிறார் டாக்டர் சக்திராஜன். தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத் துறையில் பணியாற்றும் சக்திராஜன், ஒரு சிறுநீரக நிபுணர். அவர் எழுதிய இந்தக் கட்டுரை, தி வயர் இணைய இதழில் வந்திருக்கிறது.

அவர் சொல்வதில் சில விஷயங்கள் மிகவும் கவனிக்கத்தக்கவை.

1. கொரோனா பாதிப்பு ஏற்படும்வரை அரசு மருத்துவமனைகள் சுத்தமில்லாதவை, மருத்துவம் சரியாக இருக்காது. தனியார் மருத்துவமனைகளே சிறந்தவை என்ற எண்ணம் வலுவாக இருந்தது. கொரோனா பாதிப்பு, பொது மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியிருக்கிறது.

2. மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து ஒட்டுமொத்த பொது சுகாதாரக் கட்டமைப்பும் தூங்காமல் பணியாற்றுகிறது. மருத்துவர்கள் முதல் தூய்மைப் பணியாளர்கள்வரை, இரவு பகல் பாராமல், தங்கள் உடல்நலத்தைப் பாராமல் நோயாளிகளுக்காக பணியாற்றுகிறார்கள்.

3. ஆனால், தனியார் மருத்துவமனைகள் ஒட்டுமொத்தமாக மூடப்பட்டுவிட்டன. குஜராத் போன்ற மாநிலங்களில் தனியார் மருத்துவமனைகளைத் திறக்க வேண்டுமென்றே உத்தரவுபோட வேண்டிவந்தது. மகாராஷ்ட்ராவில் தனியார் மருத்துவர்கள் கொரோனா நோயாளிகளுக்கா பணியாற்றாவிட்டால் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டது.

4. இவையெல்லாம் தனியார் மருத்துவமனைகளில் சமூக பொறுப்பு இல்லாமையையே சுட்டிக்காட்டுகின்றன.

5. தமிழ்நாடு பொது சுகாதாரக் கட்டமைப்பில் 18,000 மருத்துவர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்களில் 12,000 பேர் கிராமப்புறங்களில் வேலை பார்க்கிறார்கள். லட்சக்கணக்கான செவிலியர்கள் பணியாற்றுகிறார்கள். இந்த காலகட்டத்தில் ஒருவர்கூட ராஜினாமா செய்வதாகச் சொல்லவில்லை. மருத்துவர்கள், செவிலியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டபோதும் யாரும் தங்கள் கடமையை உதறிவிட்டுச் செல்லவில்லை. சமூகப் பொறுப்பினாலேயே இத்தனையும் அவர்கள் செய்தார்கள்.

படிக்க:
♦ மத்திய மாநில அரசுகளை கண்டித்து உழவர் உரிமை போராட்டம் !
♦ தன் மீது கருணை காட்டுமாறு மன்றாடிய சாவர்க்கர் !

6. இந்த சமூகப் பொறுப்பு எப்படி ஏற்படுகிறது? ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டின் மூலம் மருத்துவம் படிக்க வரும் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இதில் முக்கியமானவர்கள். கிராமப்புறங்களில் பணியாற்றும் 12,000 பேரில் பெரும்பாலானவர்கள் இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் என உறுதியாகச் சொல்ல முடியும். உயர்ந்த ஜாதியாக கருதப்படும் ஜாதியினர் இங்கு மிகக் குறைவு.

7. மருத்துவ மேல் படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படும் 50 சதவீத இட ஒதுக்கீடு, அவர்களை ஓய்வுபெறும்வரை அரசுப் பணியில் பணியாற்ற வைக்கிறது. ஆனால், நீட் தேர்வின் அறிமுகம் முதல் தலைமுறை மருத்துவர்கள் உருவாவதைத் தடுக்கிறது. நகர்ப்புற மேட்டுக்குடியினர் வாங்கக்கூடிய ஒரு பொருளாக மருத்துவத்தை மாற்றியிருக்கிறது.

8. நீட் தேர்வு எழுதாமல் மருத்துவம் பார்த்தவர்களால்தான், தமிழ்நாட்டில் கொரோனா மரணங்களைக் குறைக்க முடிந்திருக்கிறது. நீட் தேர்வு ஒருபோதும் திறமையை மதிப்பிட அளவுகோலாகாது என்பதை இந்த கொரோனா உணர்த்தியிருக்கிறது. மேலும் இந்தத் தேர்வுகளை நடத்துவது இந்தியாவின் பொது சுகாதாரத் துறையை நாசமாக்கிவிடும்.

9. அரசு மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீட்டை முதுகலை படிப்பில் வழங்கக்கூடாது; பட்டயப் படிப்பில்தான் வழங்க வேண்டுமென்கிறது மருத்துவக் கவுன்சில். இதைச் சொல்ல அதற்கு அதிகாரமே இல்லை.

10. கடந்த ஆண்டு பட்டயப் படிப்புகள் பட்டப்படிப்புகளாக மாற்றப்பட்டுவிட்ட நிலையில், கிராமங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்களால் இதில் நுழையவே முடியாது. மேலும் அகில இந்திய பிரிவுக்கு வழங்கப்படும் மருத்துவ இடங்களுக்கு கடந்த 9 ஆண்டுகளாக ஓபிசி இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. இதனால், 2500 மாணவர்கள் வருடம்தோறும் வாய்ப்புகளை இழக்கிறார்கள்.

11. இம்மாதிரி இடஒதுக்கீட்டை நீக்குவது, தேசிய மருத்துவ ஆணையத்தை செயல்படுத்துவது மூலம் தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில்கூட பொது சுகாதாரக் கட்டமைப்பு நாசமாகப் போகிறது. மற்றொரு பெருந்தொற்றை நம்மால் எதிர்கொள்ள முடியாது.

முழுக் கட்டுரைக்கான லிங்க் கீழே.

நன்றி : ஃபேஸ்புக்கில் முரளிதரன் காசி விஸ்வநாதன் 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க