privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்போராட்டத்தில் நாங்கள்தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சையை இலவசமாக்கு ! PRPC மனு நீதிமன்றத்தில் விசாரணை !

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சையை இலவசமாக்கு ! PRPC மனு நீதிமன்றத்தில் விசாரணை !

மார்ச் 27 ம் தேதியிலிருந்து இன்று வரை இவ்வழக்கில் 5 உத்திரவுகளை நீதிமன்றம் வழங்கி உள்ளது. எனினும் அரசு தரப்பு போதிய நடவடிக்கைகளை எடுக்காது காலம் தாழ்த்துகிறது.

-

தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் நடவடிக்கைகளை ஒருங்கிணைந்த முறையில் எடுக்கக் கோரியும், தனியார் மருத்துவமனையில் கொரோனா நோய் சிகிச்சையை நோயாளிகள் தலையில் கட்டுகின்ற தமிழக அரசின் அரசாணையை எதிர்த்தும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய சென்னைக்கிளை செயலாளர் வழக்கறிஞர் திரு. ஜிம்ராஜ் மில்டன் இரண்டு பொதுநல வழக்குகளை (WP.7414/2020 & WP.7456/2020) தாக்கல் செய்திருந்தார்.

இதில் முதல் வழக்கில் மூன்று மாதங்களுக்கும் மேலாக பதில் மனு தாக்கல் செய்யாமல் மத்திய அரசும் தமிழக அரசும் இழுத்தடித்து வருகின்றன. மேலும் மருத்துவர்கள் மற்றும் முன்னணி ஊழியர்களின் பாதுகாப்பு உபகரணங்கள் (PPE) வழங்கக் கோரிய கோரிக்கையில் தமிழக அரசை status report தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தமிழக அரசு போதிய விவரங்கள் இன்றி status report தாக்கல் செய்ததால் நீதிமன்றம் கண்டித்திருந்தது.

அதற்கு பின்னர் Additional Status Report தாக்கல் செய்திருந்தது. அதிலும் போதிய விவரங்கள் இல்லாமல் இருந்ததை சுட்டிக்காட்டி நமது தரப்பில் Objections தாக்கல் செய்யப்பட்டது. மேலும் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர் திரு.ரவீந்திரநாத் அவர்களும் இவ்வழக்கில் நமது நிலைப்பாட்டை ஆதரித்து Supporting Affidavit தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இவ்வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வந்த பொழுது, தமிழக சுகாதாரத்துறை முன்னாள் செயலாளர் திருமதி. பீலா ராஜேஷ் அவர்கள், நாம் தாக்கல் செய்த objectionக்கு பதில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் WP.7456/2020 வழக்கில் மத்திய அரசும், தமிழக அரசின் சார்பில் தற்போதை சுகாதாரத்துறை செயலாளர் திரு.ராதாகிருஷ்ணன் அவர்களும் எதிர்மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதிபதிகள் சுப்பையா & கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக 23.06.2020 அன்று விசாரணைக்கு வந்த பொழுது, அரசு தாக்கல் செய்த எதிர்மனுக்களுக்கு நமது தரப்பில் பதிலுரை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் கூடுதல் ஆவணங்களும் (5வது தொகுப்பு) தாக்கல் செய்யப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

ஏற்கனவே 17.06.2020 அன்றைய விசாரணையின் போது, இதே போன்ற வழக்கினை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இதுவும் அது போன்ற வழக்கு என்று கூடுதல் அரசின் தலைமை வழக்கறிஞர் திரு.S.R.ராஜகோபால் வாதிட்டார். அதற்கு பதிலளித்து வாதிட்ட நமது தரப்பு வழக்கறிஞர் திரு.பாலன் ஹரிதாஸ் அவர்கள் “ஏதாவது வழக்கினை சொல்லி எங்கள் வழக்கினை திசைதிருப்பக்கூடாது, முதலில் வழக்கில் எங்களது வாதத்தை விரிவாக கேளுங்கள். அதன்பின் வழக்கில் முகாந்திரம் இல்லையெனில், தள்ளுபடி செய்யுங்கள். ஏற்கனவே இதே உயர்நீதிமன்றம் இவ்வழக்கில் 5 முறை இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றும் குறிப்பிட்டார். நீதிபதிகள் அதனை ஏற்று விசாரணையை தள்ளி வைத்தனர்.

வழக்கு விசாரணை 19.06.2020 மற்றும் 23.06.2020 ஆகிய இரு தேதிகளிலும் தள்ளி வைக்கப்பட்டு மீண்டும் 07.07.2020 அன்று விசாரணைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

படிக்க:
பயங்கரவாதிகளுக்கு உதவிய தேவேந்தர் சிங்கிற்குப் பிணை : இதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி !
♦ சாத்தான்குளம் – தந்தை மகன் படுகொலையை கண்டித்து மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

மார்ச் 27 ம் தேதியிலிருந்து இன்று வரை நமது வழக்கில் 5 உத்திரவுகளை நீதிமன்றம் வழங்கி உள்ளது. பேரிடர் காலத்தை அரசு எதிர் கொள்வதில் உள்ள பிரச்சனைகளை முன்கூட்டியே எடுத்து சொல்வது, அவ்வப்பொழுது நடைமுறையில் ஏற்படும் சிக்கல்களையும் கடும் உழைப்பை செலுத்தி உரிய ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் சமர்பித்து சமூக கடமையை ஆற்றுவதே நமது நோக்கம். அந்த வகையில் ஆதாரங்களை பல நூற்றுக்கணக்கான பக்கங்களில் இது வரை 5 தொகுப்புகளாக சமர்பித்து உள்ளோம். ஆனால் அரசோ தங்களுக்கு உதவும் வாய்ப்பாக இதனை பார்க்காமல், எதிர்நிலை எடுத்து வழக்கை முடித்து விடவேண்டும் என வினையாற்றுவது ஆபத்தான சூழலில் வதைபடும் மக்கள் நலனுக்கு உகந்தது அல்ல என்பதே நமது பார்வை.

நாம் போராடுவது, உயிர் காக்கும் மருத்துவர்களின் பாதுகாப்புக்காகவும், கொரானாவிலிருந்து மக்கள் உயிரை காக்கும் மருத்துவத்திற்கும் தான் என்பதால் இடையூறுகளை கடந்து போக வேண்டும் என்பதை உணர்ந்து உள்ளோம். அதனால் இதனை உணர்ந்த மருத்துவர்கள், பத்திரிக்கையாளர்கள், மூத்த வழக்கறிஞர்கள், சமூக செயல்பாட்டாளர்களின் ஆதரவோவோடு பயணிப்போம்.

***

கொரோனா சிகிச்சையும் ! கட்டணம் வசூலும் ! என்ற தலைப்பில் ஜூன் 23, 2020 அன்று சத்தியம் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சியில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் வழக்கறிஞர் மில்டன் பங்கேற்றார் !

கரோனாவை எதிர்த்து போராடும் மருத்துவர்களையும், மருத்துவ‌த்துறை சார்ந்த அத்தனை ஊழியர்களையும் பாதுகாக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளை அரசு கையகப்படுத்தி, இலவச மருத்துவம் பார்க்க வேண்டும் என நமது பொதுநல வழக்கில் நீதிமன்றத்தில் முன்வைத்த வாதங்களை வழக்கறிஞர் மில்டன் முன்வைக்கிறார்.
பாருங்கள்! பகிருங்கள்!

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னைக்கிளை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க