PP Letter headபத்திரிக்கைச்செய்தி

25.06.2020

சாத்தான்குளம் – தந்தை மகன் போலீசால் அடித்து கொலை!
கொலை வழக்கில் கொலைகார போலிசை கைது செய் !

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கிரிமினல் போலீசு செல்போன் கடை நடத்திய தந்தை ஜெயராஜ் அவரது மகன் பெனிக்ஸ் இருவரையும் காவல் நிலையத்தில் அடித்து துன்புறுத்தி கொன்றுள்ளனர். எதிர்த்து பேசியதால் பெனிக்ஸின் ஆசனவாயில் பகுதியில் லத்தியால் தாக்கியுள்ளனர்.

இருவரும் போலீசிடம் தகராறு செய்து கெட்ட வார்த்தையில் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், கொரோனா பரப்ப முயன்று அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், சாலையில் விழுந்து புரண்டதால் காயம் ஏற்பட்டதாகவும் பொய் வழக்கினை போலிசு போட்டுள்ளது.

இரத்தப்போக்குடன் கடுமையான காயங்களுடன் நீதிபதி அவர்களை ரிமாண்ட் செய்து சிறைக்கு அனுப்பியுள்ளார். அரசு மருத்துவர் எந்த காயமும் இல்லை என சான்றளித்துள்ளார். சிறையிலும் காயங்களுடன் மருத்துவ சிகிச்சையின்றி அடைக்கப்பட்டுள்ளனர். போலீசை பகைத்து கொண்டு யாரும் எதுவும் செய்ய முடியாது என்பதைதான் இப்படுகொலை காட்டுகிறது.

“சாதாரண மனிதன் இரண்டு பேரை அடித்து கொன்றால் என்ன தண்டனையோ அது கொலைகார போலீசுக்கு வழங்கப்பட வேண்டும்..” என இறந்தவர் சகோதரி கதறுகிறார். ஒரே நேரத்தில் மகனையும், கனவனையும் இழந்து குடும்பமே நிராதரவாக உள்ளது. போலீசாரின் தாக்குதலால் கொல்லப்பட்டவர்களின் அலறல் சத்தம் வீதியில் கேட்டது என அருகாமையில் உள்ளவர்கள் சொல்கிறார்கள்.

முதல் நாள் இரவே இறந்தவர்களின் உறவினர் போலீசு நிலையம் சென்று அவர்களை விட்டு விடுங்கள் நாங்கள் தனியார் மருத்துவமனையில் வைத்தியம் பார்த்து கொள்கிறோம் என கெஞ்சி கேட்டுள்ளார். போலீசார் காவல் நிலைய கேட்டை பூட்டி அவரை வெளியே துரத்தி விட்டனர்.

இப்படுகொலையை கண்டித்து இரண்டு நாட்களாக தூத்துக்குடி மாவட்ட மக்கள் போர்க்கோலம் பூண்டுள்ளனர். எம்.எல்.ஏ, எம்பிக்கள் போராட்ட வரிசையில் நிற்கின்றனர்.

தமிழகம் முழுவதும் (புதன்) மொபைல் கடை உரிமையாளர்கள் கடையடைப்பு நடத்தி கண்டன ஆர்பாட்டம் நடத்தி உள்ளனர்.

படிக்க:
உடுமலை சங்கர் கொலை வழக்கு தீர்ப்பு : சாதி ஆணவக் கொலைகளுக்கான அங்கீகாரம் !
♦ சாத்தான் குளம் : போலீசு நடத்திய படுகொலை !

மதுரை உயர்நீதிமன்றம் தானாகவே வழக்கை விசாரணைக்கு ஏற்று மாஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு உத்திரவிட்டுள்ளது. தமிழக அரசு இரண்டு துணை ஆய்வாளர்களை சஸ்பெண்ட் செய்தும் மற்றவர்களை பணியிடமாற்றமும் செய்துள்ளது. அரசு வேலை, 20 இலட்சம் ரூபாய் நிதி உதவி அறிவித்துள்ளது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

சாத்தான் குளத்தில் மட்டுமல்ல கொரோனா ஊரடங்கு காலத்தில் போலீசார் வரம்பற்ற அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு கேட்பாரில்லாமல் மக்களை அடித்து துன்புறுத்துகின்றனர். பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கின்றனர். நீதிமன்றம் தனது இருகண்களை கட்டி கொண்டு போலீசாரின் அத்தனை ரவுடித்தனத்திற்கும் துணை போகிறது.

இதனை விடக்கூடாது. எதிர்கால பாசிச நடவடிக்கையின், போலிசு ராஜ்யத்தின் அறிகுறிகள் இவை. இவற்றுக்கு எதிராக மக்கள் போராட வேண்டும் என மக்கள் அதிகாரம் அழைக்கிறது .

  • சாத்தான்குளம் – தந்தை மகன் போலீசால் அடித்து கொலை!
  • கொலை வழக்கில் கொலைகார போலிசை கைது செய் !
  • மருத்துவ சிகிச்சை அளிக்காத நீதிதுறை நடுவர், அரசு மருத்துவர், சிறை அலுவலர் மீதும் நடவடிக்கை எடு!
  • வரம்பற்ற போலீசு அதிகாரத்தை அனுமதியோம்!
  • போலீசை மக்கள் கண்காணிப்பில் வைக்கப் போராடுவோம்!

மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை 26.06.2020 அன்று மக்கள் அதிகாரம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

தோழமையுடன்
வழக்கறிஞர் சி.இராஜூ,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை

தொடர்புக்கு : 99623 66321.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க