அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தைச் சேர்ந்த கெனோஷா நகரப் போலீசு கருப்பின இளைஞர் ஒருவரை சுட்டதைத் தொடர்ந்து அந்நகரமே மக்கள் போராட்டத்தால் பற்றி எரிகிறது.

கடந்த 23-ம் தேதி பட்டப் பகலில் 29 வயது கருப்பின இளைஞரான ஜேக்கப் ப்ளேக் என்பவரை துப்பாக்கியால் போலீசு சுட்டது. வாகனத்தில் காத்திருந்த தமது மூன்று குழந்தைகளை நோக்கிச் சென்ற ஜேக்கப்பை முதுகில் பலமுறை சுட்டுள்ளது போலீசு. அதனை ஒருவர் காணொளியாகப் பதிவு செய்து ச்மூக வலைத்தளங்களில் வெளியிட்டதைத் தொடர்ந்து கெனோஷா மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நகரில் விதிக்கப்பட்ட ஊரடங்கையும் மீறி வீதியில் இறங்கி பாட்டில்களையும் பட்டாசுகளையும் வீசி எறிந்து மக்கள் போராடத் துவங்கியுள்ளனர். “நீதியில்லையேல் அமைதியில்லை” என்ற முழக்கத்தை முன்வைத்து மக்கள் போராடினர். போராடும் மக்கள் மீது கண்ணீர்புகை குண்டுகளை வீசி கலைக்கத் துவங்கியது போலீசு.

பிளேக் மீதான துப்பாக்கிச் சூட்டிற்கு நீதி கேட்டு நீதிமன்றத்தை முற்றுகையிட்டிருக்கும் போராட்டக்காரர்கள்.
ஜேக்கப் பிளேக் மீது பலமுறை துப்பாக்கியால் சுட்டது போலீசு. அதனைத் தொடர்ந்து நிற வெறிப் பிரச்சினைக்கு நீதியைக் கோரி மக்கள் வீதியில் இறங்கிப் போராடத் துவங்கியுள்ளனர் (புகைப்படம் : KAMIL KRZACZYNSKI)
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களை சுற்றிவளைத்த செரிப் படையினரை எதிர்கொள்ளும் பெண்மணி (புகைப்படம் : REUTERS/Stephen Maturen)
சம்பவம் நடந்த கெனோஷா கவுண்டியில், கடந்த திங்கள் கிழமை (24-08-2020) இரவு 8 மணிமுதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் செரிப் படை போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை நெட்டித்தள்ளத் துவங்கியது. (புகைப்படம் : TANNEN MAURY)
நீதிமன்ற கட்டிடத்திற்கு முன்னே போராட்டக்காரர்கள் செரிப் படையினருடன் மோதலில் ஈடுபடுகின்றனர் (புகைப்படம் : KAMIL KRZACZYNSKI / AFP)
இரண்டாம் நாளாக தொடர்ந்த போராட்டத்தில், போராட்டக் காரர்கள மீது போலீசு கண்ணீர்புகை குண்டுகளை வீசியதைத் தொடரந்து போராட்டக்காரர்கள் ஓடுகின்றனர் (புகைப்படம் : TANNEN MAURY )
அரசு கட்டிடத்தின் மீது பறந்து கொண்டிருக்கும் அமெரிக்கக் கொடி பற்றி எரிகிறது. (புகைப்படம் : Morry Gash)
ஒரு வாகனம் பற்றி எரிந்து கொண்டிருக்கும் சூழலில் இரண்டு போராட்டக்காரர்கள் கைகளை உயர்த்தி தங்களது எதிர்ப்பை பதிவு செய்கின்றனர். (புகைப்படம் : TANNEN MAURY )
போராட்டத்தின் போது தீவைக்கப்பட்ட வாகனங்கள் பற்றி எரிகின்றன. (புகைப்படம் : TANNEN MAURY )
சட்ட அமலாக்க அதிகாரிகள், கலவர தடுப்பு உடையை அணிந்துகொண்டு, கோபமிக்க போராட்டக்காரர்களை எதிர்கொள்கின்றனர் (புகைப்படம் : TANNEN MAURY)

தமிழாக்கம் : நந்தன்

நன்றி :
அல்ஜசீரா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க