நாள்: 06-10-2020

பத்திரிகை செய்தி

க்டோபர் 6, 2020 அன்று சென்னையில் மக்கள் அதிகாரத்தின் மாநில செயற்குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் கூடி கீழ்கண்ட முடிவுகளை எடுத்துள்ளோம்.

அமைப்பு விரோத, சீர்குலைவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் மாநிலப் பொருளாளர் காளியப்பன் மற்றும் தலைமைக் குழு உறுப்பினர் த.கணேசன், அனைத்து பொறுப்புகளில் இருந்தும், மக்கள் அதிகாரத்தின் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்தும் நீக்கப்படுகின்றனர். அவர்களுடன் மக்கள் அதிகாரத்தின் உறுப்பினர்கள் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என தெரிவித்துக் கொள்கிறோம்.

தலைமைக் குழுவில் இருந்து மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வழக்கறிஞர் சி.ராஜு கருத்து வேறுபாடு காரணமாக, மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்தும், தலைமைக் குழு மற்றும் செயற்குழுவில் இருந்தும் உடனடியாக விடுவிக்கப்படுகிறார். தலைமைக் குழு உறுப்பினர் தோழர் சுரேசு சக்தி முருகன், வேறு பணிகள் காரணமாக தலைமைக் குழு மற்றும் செயற்குழுவில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

அதே போன்று கடலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் பாலு, விழுப்புரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன், திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் ஆகியோர் அவர்கள் வகித்த மண்டல ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகளில் இருந்தும், செயற்குழுவில் இருந்தும் உடனடியாக விடுவிக்கப்படுகின்றனர்.

தலைமைக் குழுவின் புதிய உறுப்பினர்களாக தோழர்கள் வெற்றிவேல் செழியன், மருது, குருசாமி, முத்துகுமார் மற்றும் சாந்தகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநில ஒருங்கிணைப்பாளராக தோழர் வெற்றிவேல் செழியன், மாநிலப் பொருளாளராக தோழர் குருசாமி, மாநில செய்தித் தொடர்பாளராக தோழர் மருது என தேர்வு செய்யப்பட்டனர். மக்கள் அதிகாரத்தின் அனைத்து உறுப்பினர்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ள தலைமைக் குழுவின் கீழ் வழக்கம் போல் இயங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். தமிழகம் மற்றும் புதுவை மக்களும், அனைத்து சனநாயக சக்திகளும் மக்கள் அதிகாரத்தின் அரசியல்-அமைப்பு செயல்பாடுகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறு வேண்டுகிறோம்.

தோழமையுடன்,
வெற்றிவேல் செழியன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு-புதுவை