விவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை !

இது வெறும் போராட்டம் அல்ல; இது ஒரு போர்; வேளாண் சட்டத்தை திரும்பப் பெறாமல் இங்கிருந்து களைய மாட்டோம்; போராட்டத்தில் வெல்வோம் அல்லது இங்கேயே செத்து மடிவோம் என்று உறுதியுடன் நிற்கின்றனர் விவசாயிகள்

வேளாண் சட்ட திருத்தங்களை மத்திய அரசு கைவிட கோரி டெல்லி போராட்ட களத்தில் உயிர் நீத்த விவசாயப் போராளிகளுக்கு வீரவணக்கம் என்கிற தலைப்பில் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை (20/12/2020) மாலையில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

வேளாண் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடும் குளிரில் போராடிவரும் பஞ்சாப் அரியானா விவசாயிகளின் போராட்ட குணத்தையும் அதில் உயிர் நீத்த தியாகிகளின் தீரத்தையும் உயர்த்திப் பிடிக்கும் வண்ணம் முதலில் அவர்களுக்கு “வீர வணக்கம்” நிகழ்வுடன் கூட்டம் தொடங்கியது.

படிக்க :
♦ பாசிசத்தை ஆதரித்து நிற்கும் ஃபேஸ்புக் !
♦ என்.ஐ.ஏ., உபா சட்டத் திருத்தங்கள் : சட்டப்பூர்வமாகிறது பாசிசம் !

மக்கள் அதிகாரம் மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் குருசாமி, தனது தலைமை உரையுடன் கூட்டத்தை துவங்கி வைத்தார். இந்த வேளாண் சட்ட திருத்தத்திற்கு எதிராக பஞ்சாப் அரியானா விவசாயிகள் குடும்பம் குடும்பமாக குழந்தை குட்டிகளுடன் சாரை சாரையாக ஊர்வலமாக வந்து எப்படி இவ்வளவு தீரத்துடன் கடும் குளிரை கூட பொருட்படுத்தாமல் போராடி வருகின்றனர் என்பதை பார்க்கும் போது ஒரே வியப்பாக உள்ளது. இது போன்ற போராட்டங்கள் தான் நாடு முழுவதும் நடக்க வேண்டும். அதற்கு பஞ்சாப் அரியானா விவசாயிகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என தன் தலைமையுரையில் கூறினார்.

அடுத்ததாக மக்கள் அதிகாரம் மாநில செய்தி தொடர்பாளர் தோழர் மருது, இது வெறும் போராட்டம் அல்ல; இது ஒரு போர்; ஏனென்றால் மன்னர்கள் காலத்தில் தன் படைகளை எல்லாம் எல்லையில் குவித்து வைத்து தன்னுடைய பலத்தை காட்டி மக்களை மிரட்டி பணிய வைக்க முயற்சி செய்வார்கள். அதுபோலத்தான் இந்த கார்ப்பரேட் காவி மோடி அரசு டெல்லி எல்லைப்பகுதியில் ராணுவத் துருப்புகளை நிறுத்திவைத்து அங்கு போராடி வரும் விவசாயிகளை மிரட்டும் விதமாக நடந்து கொண்டது ஆனால் அங்கு விவசாயிகள் அனைத்தையும் தகர்த்தெறிந்து விட்டு முன்னேறினர். இந்த வேளாண் சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெறும் வரை நாங்கள் எக்காரணம் கொண்டும் பின்வாங்க மாட்டோம் இப்போராட்டம் ஒன்று வெல்லும் இல்லையேல் இங்கே மடிந்து சாவோம் என உறுதியுடன் போராடி வருகின்றனர்.

இதற்கு ஆதரவு தெரிவித்து பல கலைஞர்கள் இந்த மத்திய அரசிடம் வாங்கிய சக்ரா, சாகித்திய அகடாமி போன்ற விருதுகளை திரும்ப ஒப்படைத்தனர் இது பெரும் அவலம் என்பதை புரிந்து கொண்ட சாகித்திய அகடாமி விருதை திரும்ப பெற எங்களுக்கு உரிமை இல்லை என கூறி வருகின்றனர்.

இப்போராட்டத்திற்காக தன்னுடைய சிறைத்துறை டிஜிபி பதவியை துறந்த லக்மிந்தர் சிங் ஜாகர் முதல் பிஎச்டி பட்டம் படித்த இளைஞர்கள் வரை அவர்கள் கூறுவது ஒன்றுதான்; ”முதலில் நாங்கள் விவசாயிகள் விவசாயிகளின் பிள்ளைகள் பின்புதான் காவலர்கள் அதிகாரிகள்” என வர்க்கப் பார்வையுடன் பதாகைகளை ஏந்திக் கொண்டு இந்தப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் ஆர் எஸ் எஸ் சங்கிகளுக்கும் ஊடகங்களுக்கும் மத்திய அரசுக்கும் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

பஞ்சாப் அரியானா விவசாயிகள் போன்று நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், ஒரே வர்க்கமாய் அணிதிரண்டு போராடுவதன் மூலம்தான் இந்த கார்ப்பரேட் காவி அரசை நாம் வீழ்த்த முடியும் என்பதன் அவசியத்தை எடுத்துக் கூறி தனது சிறப்புரையை முடித்துக் கொண்டார்.

இறுதியாக மக்கள் அதிகாரம் மதுரை பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் ராமலிங்கம் நன்றி உரையாற்றினார்.

தகவல்
மக்கள் அதிகாரம்
மதுரை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க