PP Letter head

பத்திரிக்கை செய்தி

11.06.2021

ஊரடங்குக் காலத்தில் மக்கள் அல்லல்படும் போது
மூடு டாஸ்மாக்கை !

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்களுடைய வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப் பட்டுள்ள இச்சூழலில் டாஸ்மாக்கை திறக்கப் போவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். எடப்பாடி ஆட்சியில் ஊரடங்குக் காலத்தில் டாஸ்மாக்கை திறக்க எதிர்ப்பு தெரிவித்த திமுக, தற்பொழுது ஆட்சியில் அமர்ந்தவுடன் இந்த நச்சுச் சூழலிலும் டாஸ்மாக்கை திறக்க உத்தரவிட்டது கடும் கண்டனத்துக்குரியது.

ஊரடங்குக்காலத்தில் மக்கள் வேலையின்றி தவிக்கும் சூழலில் அரசால் அளிக்கப்படும் உதவித்தொகை டாஸ்மாக்கிற்கே செல்லும்.

தமிழக அரசு உடனடியாக டாஸ்மாக்கை திறக்கின்ற உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும். அவ்வாறு டாஸ்மாக் திறக்கப்படும் பட்சத்தில் அதற்கு எதிரான மக்கள் போராட்டங்களை ஒருபோதும் தடுக்க முடியாது.


தோழமையுடன்
தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321.