மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் இன்று (செப்டம்பர் 27) நடைபெற்றது. தமிழகம் முழுவதும் சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டன. பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இந்தப் போராட்டங்களில் மக்கள் அதிகாரம், பு.ஜ.தொ.மு, பு.மா.இ.மு தோழர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பங்கேற்றவர்களை போலீசு கைது செய்தது.
சென்னை :
ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் சார்பாக மூன்று வேளாண் விரோத சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி நாடு முழுவதும் நடக்கும் கடையடைப்பினை ஆதரித்து சென்னை கிண்டி பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி, சுதேசி இந்தியா, suci, விவசாய சங்கங்கள், தொழிற் சங்கங்கள் மற்றும் மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகள் கலந்து கொண்டன.
This slideshow requires JavaScript.
தகவல் :
மக்கள் அதிகாரம்
சென்னை மண்டலம்.
***
காஞ்சிபுரம் :
இன்று 27/09/2021 விவசாயிகள் – தொழிலாளர்கள் ஒன்றுபட்டு நடத்துகின்ற நாடு தழுவிய அளவிலான முழு அடைப்பு ( பந்த் ) போராட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை, திருவள்ளூர், காஞ்சி மாவட்டக் குழுவுக்குட்பட்ட சங்கமான டி.ஐ மெட்டல் ஃபாரமிங் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக ஆலை வாயில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் தோழர் மு.சரவணன் அவர்கள் தலைமை தாங்கினார். தலைமை உரையில் விவசாயிகள் 10 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். எந்தத் தீர்வும் இதுவரை எட்டப்படவில்லை. மோடி அரசு விவசாயிகளையும் தொழிலாளர்களையும் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை.
மாறாக, கார்ப்பரேட் நலனுக்காக எல்லா சட்டங்களையும் ஒழித்துக் கட்டுகின்ற ஒரு பாசிச அரசாக மாறி வருகிறது. அதை பகத்சிங் வழியில் முறியடிப்போம் என அறைகூவல் விடுத்தார்.
அதனைத் தொடர்ந்து சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் ப.சக்திவேல் அவர்கள் சிறப்புரையாற்றினார் . சிறப்புரையில் மூன்று வேளாண் சட்டங்களின் ஆபத்துக்களை விளக்கிப் பேசினார். தொழிலாளர் விரோத சட்டங்களையும் விளக்கிப் பேசினார்.
மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு சட்ட விரோத நடவடிக்கைகள் அனைத்தையும் சட்டபூர்வமாக மாற்றுகின்ற கார்ப்பரேட் – காவி பாசிசத்தை அரங்கேற்றும் அரசாக செயல்படுகிறது.
This slideshow requires JavaScript.
அனைத்து உழைக்கும் மக்களையும் ஒன்றிணைத்து இதை முறியடிக்க வேண்டிய கடமை தொழிலாளர்களுக்கு உள்ளது. விவசாயிகள் – தொழிலாளர்கள் ஒருங்கிணைந்த போராட்டம் வெல்லட்டும் வெல்லட்டும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
அதனை தொடர்ந்து சங்கத்தின் துணைத் தலைவர் தோழர் தனசேகரன் அவர்கள் நன்றியுரை கூறினார். இந்த கண்டனக் கூட்டத்தில் தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டு காவி – கார்ப்பரேட் பாசிச மோடி அரசுக்கு எதிராக விண்ணதிர முழக்கமிட்டனர்.
இவண்,
டி.ஐ மெட்டல் ஃபாரமிங் தொழிலாளர் சங்கம்,
(இணைப்பு : பு. ஜ. தொ. மு., மாநில ஒருங்கிணைப்புக் குழு)
***
வேலூர் :
செப்டம்பர் 27 நாடு தழுவிய பொதுவேலைநிறுத்தத்தை ஆதரித்து வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கிளைச்சங்க தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர். ஒன்றிய அரசை கண்டித்து தோழர்கள் முழக்கமிட்டனர்.தோழர் சுந்தர் .மோடி அரசு கொண்டுவந்த வேளாண் சட்டத்தையும், தொழிளாளர் விரோத சட்டங்களையும், அடக்குமுறை சட்டங்களையும், மின்சார மசோதா ஆகிய சட்டங்களை ரத்து செய்யும் வரை மக்கள் போரட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும் என பேசினார்.இறுதியாக தோழர் முருகன் நன்றியுரை ஆற்றினார்.
தகவல் :
பு.ஜ.தொ.மு,
வேலூர்.
***
தருமபுரி :
மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்கு, அகில இந்திய விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து, செப்-27 அகில இந்திய விவசாயிகள் பந்தை ஆதரித்து தருமபுரியில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பின் கீழ் இரயில் மறியல் போராட்டம் நடைப்பெற்றது.
This slideshow requires JavaScript.
இரயில் மறியலுக்கு முன்னர், இரயில் நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு AIKSCC ஒருங்கிணைப்பாளர் தோழர் அர்ஜூனன் தலைமை தாங்கினார். தோழர் முத்துக்குமார் – மக்கள் அதிகாரம், மண்டல ஒருங்கிணைப்பாளர், தோழர் கோவிந்தராஜ் – CPI (ML) விடுதலை, தோழர் கிரைசாமேரி – மாதர் சங்கம், தோழர் ரங்கநாயகி – தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தோழர் பெரியண்ணன் – மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணி, தோழர் சத்தியநாதன் – புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி ஆகியோர் கலந்துகொண்டு உறையாற்றினர்.
அதனைத் தொடர்ந்து நடந்த இரயில் மறியல் போராட்டத்தில், 40 பேர் கைது செய்யப்பட்டு, இரயில்வே மண்டபத்தில் வைத்துள்ளனர்.
தகவல் :
மக்கள் அதிகாரம்
தருமபுரி மண்டலம்
9790138614.
***
பென்னாகரம் :
27.9.2021 தேதி அன்று மோடி அரசின் மூன்று வேளாண் சட்டதிருத்தங்களை வாபஸ் வாங்கு, அனைத்து பொதுத் துறைகளையும் தனியாருக்கு தாரைவார்க்கும் மோடி அரசைக் கண்டித்து அகில இந்திய விவசாயிகள் சங்கம் அறைகூவல் விடுத்த பந்த்-ஐ ஆதரித்து பெண்ணாகரம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு அனைத்து கட்சி தோழர்களும் அணிதிரண்டு முழக்கமிட்டவாறு ஊர்வலமாகச் சென்றனர்.
பின்னர், புதிய பேருந்து நிலையத்தில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு CPM மாவட்ட செயற்குழு உறுப்பினர் V.மாதன் தலைமை தாங்கினார். மக்கள் அதிகாரம், பெண்ணாகரம் பகுதி ஒருங்கிணைப்புக் குழுவின் தோழர் அருண் கண்டன உரையாற்றினார். திமுக ஒன்றிய செயலாளர். காளியப்பன் கண்டன உரையாற்றினர்.
This slideshow requires JavaScript.
பொதுமக்கள் திரளாக போராட்டத்தை நின்று கவனித்தனர். பிறகு 65 தோழர்களை போலீசு கைது செய்து பென்னாகரம் கார்ல் மார்க்ஸ் மண்டபத்தில் அவர்களை அடைத்து வைத்துள்ளனர்.
தகவல்:
மக்கள் அதிகாரம், பென்னாகரம்.
தருமபுரி மண்டலம்.
97901 38614
***
நல்லம்பள்ளி, தருமபுரி :
இன்று 27.9. 2021 தேதி மோடி அரசின் மூன்று வேளாண் சட்ட திருத்தங்களை வாபஸ் வாங்கு, நல்லம்பள்ளியில் விவசாய சங்கம் சார்பாக நடைப்பெற்ற மறியல் போராட்டத்தில் மக்கள் அதிகாரம் சார்பாக தோழர் செல்வராஜ் மற்றும் இதர மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டனர்.
This slideshow requires JavaScript.
தகவல் :
மக்கள் அதிகாரம்
நல்லம்பள்ளி
தருமபுரி மண்டலம்.
***
சேலம் :
இன்று 27.9. 2021 தேதி மோடி அரசின் 3 வேளாண் சட்ட திருத்தங்களை வாபஸ் வாங்கு, சேலத்தில் விவசாய சங்கள் சார்பாக நடைப்பெற்ற மறியல் போராட்டத்தில் மக்கள் அதிகாரம் சார்பாக தோழர் கந்தம்மாள் மற்றும் பிற மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டனர்.
This slideshow requires JavaScript.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
தருமபுரி மண்டலம்.
***
திருநெல்வேலி :
மோடி அரசின் வேளாண் திருத்த மசோதாவை தகர்த்தெறிவோம்
நாடு முழுவதும் விவசாயிகள் நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் மக்கள் அதிகாரம் சார்பாக நெல்லை மாவட்டம் வண்ணார்பேட்டையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் தோழர்கள் கலந்து கொண்டனர்.
This slideshow requires JavaScript.
தகவல் :
மக்கள் அதிகாரம்
நெல்லை மண்டலம்
9385353605
***
திருமங்கலம் :
டெல்லியில் 10 மாதங்களாக போராடும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து,
♦ 3 வேளாண் சட்டங்களை, மின்சார ஒழுங்குமுறை மசோதாவை திரும்பப் பெறு !
♦ நாட்டின் பொதுச் சொத்துக்களை விற்காதே! பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை திரும்பப் பெறு !
♦ 44 தொழிலாளர் சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றியதை ரத்து செய் !
ஆகிய முழக்கங்களை முன்வைத்து, அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு தலைமையில் மதுரை திருமங்கலத்தில் இரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
This slideshow requires JavaScript.
இதில் மக்கள் அதிகாரம், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் பல்வேறு இடதுசாரி அமைப்புகள், ஜனநாயக சக்திகள் கலந்து கொண்டனர். இரயிலை மறிக்க சென்றபோது காவல்துறை தடுப்பணை வைத்து தடுத்து நிறுத்தினர். ஆனால், போராட்டக் குழு அதையும் மீறி இரயிலை மறிக்க முன்னேறியதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு இறுதியில் போராட்டக் குழு அனைவரையும் போலீசு கைது செய்தது.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
மதுரை மண்டலம்.
***
உசிலம்பட்டி :
மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து இன்று நடைபெற்ற (27.9.2021) பஸ் மறியல் போராட்டத்தில் உசிலை, செல்லம் பட்டியில் மக்கள் அதிகாரம் தோழர்கள் குருசாமி தலைமையில் கலந்து கொண்டு கைதானார்கள்.
This slideshow requires JavaScript.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
மதுரை மண்டலம்.
***
போடி :
மக்கள் அதிகாரம் மதுரை மண்டலம் சார்பாக போடி பகுதியில் தோழர்.கணேசன் தலைமையில் மூன்று வேளாண் சட்டங்களையும், மின்சார சட்டத்தையும் ரத்து செய்யக்கோரி விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

தகவல்:
மக்கள் அதிகாரம்
போடி.
***
புதுச்சேரி :
மூன்று வேளாண் சட்டத்துக்கு எதிராக நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக புதுச்சேரியில் நடைபெற்ற மறியல் போரட்டத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டனர்.
This slideshow requires JavaScript.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
புதுவை.
***
கடலூர் :
கடலூரில் அகில இந்திய விவசாயிகள் போராட்டம் ஒருங்கிணைப்புக் குழு நடத்திய நாடு தழுவிய கடையடைப்பு, சாலை மறியலில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக தோழர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் முழக்கமிட்டு கலந்து கொண்டு கைதாகினர்.
This slideshow requires JavaScript.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
கடலூர் மண்டலம்.
***
சீர்காழி :
ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பாக 3 தேசவிரோத வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று 27.09.2021, 11.00 மணி அளவில் நடக்கும் கடையடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டத்தை ஆதரித்து இன்று சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் போராடும் விவசாய சங்கங்கள், இடதுசாரி, முற்போக்கு, ஜனநாயக அமைப்புகளின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
This slideshow requires JavaScript.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
கடலூர் மண்டலம்.
***
விருதாச்சலம் :
கடலூர் மண்டலம் அகில இந்திய விவசாயிகள் போராட்டம் ஒருங்கிணைப்புக் குழு நடத்திய நாடு தழுவிய கடையடைப்பு, சாலை மறியலில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக தோழர் முருகானந்தம் தலைமையில் விருதாச்சலம் பாலக்கரையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் முழக்கமிட்டு கலந்து கொண்டு கைதாகினர்.
This slideshow requires JavaScript.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
கடலூர் மண்டலம்.
***
திருவாரூர் :
கார்ப்பரேட் நலன் காக்கும் மோடி அரசின் வேளாண் விரோத சட்டங்களை எதிர்த்து இன்று திருவாரூரில் நடைபெற்ற இரயில் மறியல் போராட்டம்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருவாரூர்.
***
தூத்துக்குடி :
மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று நாடுதழுவி போராட்டத்தின் ஒரு பகுதியாக, தூத்துக்குடி BSNL அலுவலகத்தில் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டனர்.
This slideshow requires JavaScript.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
தூத்துக்குடி.

Related