தருமபுரி :
உ.பி.யில் விவசாயிகளை கார் ஏற்றி படுகொலை செய்த மத்திய இணை அமைச்சர் அஜய்மிஸ்ரா மகன் அஷிஷ் மிஸ்ராவை தூக்கிலிடு என்ற முழக்கத்தின் கீழ், திட்டமிட்டு விவசாயிகள் படுகொலையைத் தூண்டிவிடும் BJP – RSS-ஐ கண்டித்தும், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பாக, தருமபுரி BSNL அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் அர்ஜுனன் தலைமை தாங்கினார். தோழர் முத்துக்குமார் – மக்கள் அதிகாரம் – மண்டல ஒருங்கிணைப்பாளர், தோழர் பிரதாபன் – த.மா.வி.ச – மாவட்டச் செயலாளர், தோழர் கோவிந்தராஜ் – CPI(ML) விடுதலை – மாவட்டச் செயலாளர், தோழர் ராஜீஸ்குமார் – DYFI – மாநில தலைவர், ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக தோழர் பெரியண்ணன் – ம.ஜ.இ.மு – மாவட்டச் செயலாளர் நன்றியுரை ஆற்றினார்.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
தருமபுரி மண்டலம்,
9790138614.
***
சென்னை :
உ.பி.யில் விவசாயிகளை கார் ஏற்றி படுகொலை மத்திய இணை அமைச்சர் அஜய்மிஸ்ரா மகன் அஷிஷ் மிஸ்ராவை தூக்கிலிடு என்ற முழக்கத்தின் கீழ் திட்டமிட்டு விவசாயிகள் படுகொலையைத் தூண்டிவிடும் BJP – RSS-ஐக் கண்டித்து, ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பாக, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் மேரி லில்லி தலைமை தாங்கினார். மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் அமிர்தா கண்டன உரையாற்றினார். தோழர் பாலகிருஷ்ணன் கணடன உரையாற்றினார். கடைசி சோறு அமைப்பைச் சேர்ந்த தோழர் பேரோளி, SUCI அமைப்பைச் சேர்ந்த தோழர் செபாஸ்டியன் உள்ளிட்ட பலரும் கண்டன உரையாற்றினர். குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்.
000
திருவாரூர் :
மக்கள் அதிகாரம்,
திருவாரூர்.
000
மதுரை :
மக்கள் அதிகாரம்,
மதுரை மண்டலம்.
