18-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன் – ஜூலை மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் கலந்துகொள்ள ஜப்பான் உள்ளிட்ட 13 அணிகள் நேரடியாக  விளையாட தகுதி பெற்றுவிட்டன. மீதமுள்ள 11 அணிகள் தகுதிசுற்று மூலம் தேர்வு செய்யப்பட உள்ளன. இதற்காக கடந்த சில வாரங்களாக தகுதிசுற்று போட்டிகள் நடைபெற்றன.
தகுதிசுற்றில் டி பிரிவில் இந்தியா, ஆப்கானிஸ்தான், ஹாங்காங் மற்றும் கொலம்பியா ஆகிய 4 அணிகள் இடம்பெற்று இருந்தன. கொல்கத்தாவில் உள்ள சால்ட் கால்பந்து மைதானத்தில் தகுதிசுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இந்த ஆட்டத்தில் இந்தியா அணி ஆப்கானிஸ்தான் மற்றும் கொலம்பியா ஆகிய அணிகளை எளிதில் வீழ்த்தியது.
மேலும் 27 ஆண்டுகளுக்குப் பிறகு 4-0 என்ற கோல் கணக்கில் ஹாங்காங் அணியை வீழ்த்தி டி பிரிவில் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்திற்கு இந்தியா முன்னேறியது. இதன்மூலம் ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடுவதற்கான தகுதியையும் இந்திய அணி பெற்றுள்ளது.
தொடர்ச்சியாக இரண்டு ஆசிய கோப்பை போட்டியில் விளையாட தகுதிபெற்று இந்தியா சாதனை படைத்ததாக, இந்திய கால்பந்து ரசிகர்களும் இந்திய கால்பந்து சம்மேளனம் கடந்த சில வாரங்களாக பெருமை பேசி வருகின்றன.
படிக்க :
♦ திருடனுக்கு கொலை – ஜோசியனுக்கு பரிகாரம் !
♦ ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் !
இந்தியாவின் வெற்றியை கொண்டாடிய இந்திய கால்பந்து ரசிகர்களுக்கு, தற்போது இந்திய கால்பந்து சம்மேளனத்தின் சில செயல்பாடுகளால் மிகுந்த நகைக்கக்கூடியதாக உள்ளது. இச்செயல்பாடுகள் சர்வதேச அளவில் இந்தியா கால்பந்து அணியை தலைகுணிய வைத்துள்ளதாக இந்திய கால்பந்து ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அப்படி என்னதான் செய்தது இந்திய கால்பந்து சம்மேளனம் என்று கேள்வி எழலாம். அதற்கான பதில் இதோ! கடந்த வாரம் பெற்ற இந்திய கால்பந்து அணியின் வெற்றி என்பது வீரர்களின் தகுதியாலோ; திறமையாலோ; பயிற்சி அளித்த பயிற்சியாளர்களின் உழைப்பாலோ கிடைக்க வில்லையாம். கால்பந்து அணிக்கு ஆலோசகர்களாக நியமிக்கப்பட்ட ஒரு ஜோசியரின் உந்து சக்தியால்தான் இப்படி இந்திய அணி வெற்றி பெற்றதாக கூறி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக இந்திய கால்பந்து சம்மேளனத்தின் நிர்வாகி ஒருவர் கூறும்போது, ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் ஒரு ஜோதிடர்தான். சுமார் ரூ.16 இலட்சம் சம்பளத்தில் பணியமர்த்தப்பட்ட அவர்தான் இந்திய கால்பந்து வீரர்களுக்கு உற்சாகமூட்டும் பல செயல்களில் ஈடுபட்டார். அவரின் அளப்பரிய அர்ப்பணிப்பால்தான் இந்தியா இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றிருக்கிறது என்றார். மேலும் அவர் அந்த பதவிக்கு நியமனம் செய்யும்போது அவர் ஜோசியர் என்பது தெரியாது என்றும் பின்னர்தான் அவர் ஜோசியர் என தெரிந்தது என்றும் கூறியுள்ளார்.
இந்திய கால்பந்து சம்மேளனத்தின் இத்தகைய செயலைகண்டு வருத்தமடைந்த இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கோல்கீப்பர் தனுமாய் போஸ், இந்திய கால்பந்து கூட்டமைப்பின் இத்தகைய செயல் என்பது உலக அரங்கில் இந்தியாவை மிகப்பெரிய கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாக்கி உள்ளது. இந்திய கால்பந்து கூட்டமைப்பு முறையான இளையோர் கால்பந்து லீக் போட்டிகளை நடத்தாமல் இருந்ததும் பல கால்பந்து தொடர்களை முடக்கியதும்தான் இந்திய கால்பந்து சம்மேளனம் செய்த சாதனை. தற்போது ஜோதிடர்களின் கைகளில் இந்திய கால்பந்தின் எதிர்காலத்தை சம்மேளனம் ஒப்படைத்துவிட்டது என்பது நகைப்புக்குரியது. மேலும் இந்திய கால்பந்து கூட்டமைப்பில் ஏகப்பட்ட ஊழல்முறைகேடுகள் அறங்கேற்றப்பட்டு வருகிறது. அது தொடர்பாக கேள்வி கேட்பவர்கள் இந்திய கால்பந்து அணியில் இருந்து வெளியேற்றப்படும் நிகழ்வு தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஊழலின் உச்சம் பெற்ற ஒரு நடவடிக்கைதான் கால்பந்து போட்டியின் ஆலோசகராக ஒரு ஜோதிடரை நியமனம் செய்த விவகாரம் என்று கூறினார்.
இந்த ஜோதிடம் எல்லாம் ஒரு திரைதான். கூட்டமைப்பு நிர்வாகிகள் தங்களது அயல்நாட்டு சொகுசு பயணத்திற்காக இந்த பணத்தை பயன்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்திய கால்பந்து ஜோசியர் நியமிக்கப்படுவது என்பது இது ஒன்றும் புதியதல்ல; டெல்லியில் உள்ள கால்பந்து கிளப் ஒன்று பாபா என்ற ஒரு சாமியாரை நியமித்தது டெல்லி அணி வெற்றி பெற்ற பிறகு அவரால்தான் இந்த வெற்றி நடந்தது என்று அந்த கிளப் உறுப்பினர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர் என்று கூறினார் போஸ்.
உலகத்தில் உள்ள கால்பந்து சம்மேளனங்கள் அனைத்தும் தங்களது அணி வெற்றிபெற அறிவியலையும், தொழில்நுட்பங்களையும், தீவிர பயிற்சிகளையும்தான் நம்பி உள்ளன. அதன்மூலம் மட்டுமே ஒரு அணியின் வெற்றி அமையும் என்பதில் உறுதியாக உள்ளனர். அதற்கான செயல்பாடுகளில்தான் அனைத்து கால்பந்து அணியினரும் இருக்கின்றனர். ஆனால் இந்தியா அணிக்கான தலைமை ஜோதிடரை நியமித்து வெற்றிக்காக வெற்றிலையில் மை தடவி பாத்துக்கொண்டிருக்கிறது.
கடந்த வாரம் இந்திய கால்பந்து ரசிகர்கள் இந்தியாவின் வெற்றியை கொண்டாடினார்கள். ஆனால் இப்போது ஜோசியர் நியமனம் என்ற கூமுட்டை தனத்தைப்பற்றி கவலையும் அடைந்து வருகிறார்கள்.
ஏற்கனவே இதுபோன்ற ஓர் கூமுட்டை சம்பவம் உ.பி.யில் அரங்கேற்யுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் 2,500 டன் தங்கப்புதையல் இருப்பதாக ஷோபன் சர்க்கார் என்ற போலி சாமியார் கூறினார். அதைத்தொடர்ந்து பல கோடி ரூபாய் செலவு செய்து அந்த இடத்தில் தோண்டி பார்க்கும்போது அங்கு கல்லும் மண்ணையும் தவிர வேறுஒன்றும் கிடைக்கவில்லை.
படிக்க :
♦ கால்பந்து வெற்றியை வெனிசுலா மக்களுக்கு அர்ப்பணித்த மரடோனா !
♦ மதத்தின் தடைகளைத் தகர்த்து கால்பந்து விளையாட்டில் சாதிக்கும் ஈரான் பெண்கள்
அறிவியலை முழுமையாக புறக்கணித்துவிட்டு, பிற்போக்கு தனமான மூடநம்பிக்கைகளை புனிதமானது என ஒன்றிய பாசிச பாஜக அரசும், ஆர்.எஸ்.எஸ் சங் பரிவார அமைப்புகளும் கூறி வருகின்றன. அதன் நீட்சிதான் இந்த சமியார் நியமனம்.
இதற்குமுன் ஸ்ரோ ஏவிய ராகேட்டில் எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்து அனுப்பிய இந்திய அரசின் கூமுட்டை தனத்தை நாம் அறிந்திருப்போம். தற்போது விளையாட்டு துறையில் ஜோதிடரை நியமித்து விட்டார்கள். இனி விஞ்ஞானம், மருத்துவம், அறிவியல் போன்ற பல்வேறு துறைகளில் இதுபோன்ற அறிவியல் அறிவற்ற ஜோதிடர்கள் நியமனம் செய்யப்படுவதை நாம் எதிர்பார்க்கலாம்.
ஆர்.எஸ்.எஸ் – பாஜக சங் பரிவாரங்களில் உள்ள அறிவிளிகளின் கூமுட்டை தனங்களை முறியடிக்க, பகுத்தறிவு – முற்போக்கு எனும் ஆயுதங்களை ஏந்துவதை தவிர வேறுவழி ஒன்றும் இருக்க முடியாது.

வினோதன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க