கள்ளக்குறிச்சி போராட்டம்: வன்முறைக்கு காரணம் போலீசும், நிர்வாகமும்தான் | மருது வீடியோ

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு IBC தமிழ் யூடியூப் சேனலுக்கு இந்த பேட்டி வீடியோவில் பதில் அளிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்!

டிஜிபி, முதலமைச்சர் போன்ற உச்சபட்ச அதிகாரம் படைத்தவர்கள் இந்த கள்ளக்குறிச்சி மரண விவகாரத்தில் தலையிடவேண்டிய அவசியம் ஏன் நேர்ந்தது. இதற்கு, சாதாரண ஓர் பிரச்சினையை முடிமறைக்க நினைக்கும் மாவட்ட நிர்வாகம்-போலீசு துறையின் செயல்பாடுகள்தான் அடிப்படையாக அமைகிறது.

அந்த பள்ளி நிர்வாகத்தின் சாந்தி என்பவர் திமிர்தனமாக வீடியோ வெளியிடுகிறார். அதாவது இறந்து போன மாணவிக்கு பொறுப்பு பள்ளிக்கூடம் கிடையாது. ஆனால் வன்முறையில் எரிக்கப்பட்ட பொருட்களுக்கு மாணவியின் அம்மாதான் பொறுப்பு என்கிறார்.

இந்த கள்ளக்குறிச்சி வன்முறைக்கு காரணம் மக்கள் அல்ல; மாறாக இந்த போலீசும் மாவட்ட நிர்வாகமும்தான் அவர்கள்தான் கைதுசெய்யப்படவேண்டும். அவர்கள் மீதுதான் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு IBC தமிழ் யூடியூப் சேனலுக்கு இந்த பேட்டி வீடியோவில் பதில் அளிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்…

காணொளியை பாருங்கள் ! பகிருங்கள் !!