privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்எங்கும் இந்துராஷ்டிர பிரச்சாரம் எதிலும் இஸ்லாமிய மதவெறி பிரச்சாரம்

எங்கும் இந்துராஷ்டிர பிரச்சாரம் எதிலும் இஸ்லாமிய மதவெறி பிரச்சாரம்

ஆஷிபா முதல் பில்கிஸ்பானு வரை இந்துமதவெறி காவிக் கும்பலால் பாலியல் பலாத்காரம், சித்திரவதை செய்ததை கைகட்டி வாய்பொத்தி மௌனம் காக்க வேண்டும் அவர்கள்தான் சகிப்புதன்மையுடைய இஸ்லாமியர்கள்.

-

ர்.எஸ்.எஸ் – பா.ஜ.க போன்ற சங் பரிவார் கும்பலின் கருத்துக்களுக்கும் அவர்களின் மதவெறி நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்பு தெரிவிக்காது மௌனம் காப்பதுதான் சகிப்புதன்மை என்கிறார் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் சத்ய பால்.

அண்மையில் ஆர்எஸ்எஸ்-இன் டெல்லி விளம்பரப் பிரிவின் சார்பாக விருது வழங்கும் நிகழ்ச்சி புதுடெல்லியில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் சத்ய பால் சிங் தனது இந்துராஷ்ட்டிர மதவெறி பிரச்சாரத்தையும் இஸ்லாமிய மத வெறுப்பையும் முன்வைத்து மேடையில் பேசினார்.

தொடர்ந்து இஸ்லாமியர் மீதான வெறுப்பை உமிழ்ந்து வரும் சங் பரிவார் கும்பலின் காவி பாசிச கருத்தைதான் இன்று மத்திய இணையமைச்சர் நேரடியாக ஆர்.எஸ்.எஸ்-இன் டெல்லி செய்தி ஊடகப்பிரிவு நிகழ்ச்சியின் மேடையில் பிரகடனப்படுத்தியிருக்கிறார்.

படிக்க : நீதித்துறையால் பாசிசத்திற்கு முட்டுக்கட்டை போட முடியாது!

மேடையில் அவர் பேசுகையில் இந்திய நாட்டின் கட்டமைப்பே இந்துராஷ்டிர அடிப்படையிலானதுதான் என்றும் இது பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அகண்ட பாரத தேசம்தான் என்றும் பேசினார்.

மேலும் “ஊழல் லஞ்சத்தை விட வகுப்புவாதமே இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சினை என்று பேசிய அவர், இந்தியாவில் சகிப்புதன்மை கொண்ட இஸ்லாமியர்களை விரல் விட்டு எண்ணிவிட முடியும். அவர்களை தவிர்த்து மீதமுள்ள அனைவருமே ஏதோ ஒரு வகையில் மத அடிப்படைவாதிகளாகவும் வகுப்புவாதிகளாகவும்தான் செயல்படுகிறார்கள்” என்று தன்னுடைய மதவெறுப்பு அரசியலை தொடர்ந்து பேசினார்.

“அப்படி சகிப்புத்தன்மை கொண்டவர்களாக இஸ்லாமியர் சிலர் இருக்கிறார்கள். அது ஒரு மூகமுடி. அவர்கள் பதவியில் இருந்து ஓய்வு பெற்றதும் தங்களுடைய மதவாதக் கருத்தைப் பேசத் தொடங்குகிறார்கள்” என்றும் தாக்கி பேசினார்.

மேலும் “ஊடகங்கள் தங்களுடைய முதல் பக்கங்களில் எதிர்மறையான செய்திகளை வெளியிடுவதை நிறுத்திவிட்டு நேர்மறையான செய்திகளை வெளியிட வேண்டும். நீங்கள் எழுதும் தலைப்புகளை வெளியிட சரியான நேரம் இதுதானா என்பதையும் சிந்தித்து வெளியிட வேண்டும். மேலும் பத்திரிகை என்பது சமூகம் மற்றும் தேசத்தின் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும்” எனவும் கூறினார்.

இவர் கூறும் இதுபோன்ற கருத்துக்களை சாதாரணமான மேடை பேச்சாக கடந்த செல்ல முடியாது. இந்த ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க சங் பரிவார் கும்பல் கூறும் சகிப்புதன்மைக்கு விளக்கம் என்ன என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

குஜராத் இனப்படுகொலை நடந்த போதும் கர்ப்பினியின் வயிற்றை கிழித்தெறிந்து சிசுவைக் கொன்ற போதும் மௌனம் காக்க வேண்டும் அவர்கள்தான் சகிப்புதன்மையுடைய இஸ்லாமியர்கள்.

ஆஷிபா முதல் பில்கிஸ்பானு வரை இந்துமதவெறி காவிக் கும்பலால் பாலியல் பலாத்காரம், சித்திரவதை செய்ததை கைகட்டி வாய்பொத்தி மௌனம் காக்க வேண்டும் அவர்கள்தான் சகிப்புதன்மையுடைய இஸ்லாமியர்கள்.

அக்லக் முதல் பெகலுக்கான் வரை மாட்டு இறைச்சி வைத்திருந்தார்கள் என்று கூறி அடித்துக்கொன்ற போது அமைதி காக்க வேண்டும் அவர்கள்தான் சகிப்புதன்மையுடைய இஸ்லாமியர்கள்.

இப்படி அனைத்து மனித தன்மையற்ற செயல்களை பார்த்துக்கொண்டும் சகித்துக் கொண்டும் ஒரு மனிதன் வாழ முடியுமா? வாழ்ந்துதான் ஆக வேண்டும் என்கிறது இந்த காவிக் கும்பல்.

ஆளுநர் மற்றும் துணைவேந்தர் போன்ற பதவிகளில் நீடிக்கும்போது எதை பற்றியும் வாய்திறக்காத  இஸ்லாமிய அதிகாரிகள் பதவி ஓய்வு பெற்றதும் வகுப்புவாதத்தை முன்வைத்து பேசுகின்றனர் என்கிறார் அமைச்சர். இவ்வாறு கூறுவதன் காரணம் ஒன்றுதான். அரசு அதிகாரிகளாக செயல்பட்டு கொண்டிருந்தாலும் சரி அல்லது உயர் பதவிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் சரி இந்த காவி பாசிசக் கும்பலின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இவர்களின் மதவெறி தாக்குதலுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்பதுதான்.

காவி கும்பலின் மதவெறி நடவடிக்கைகளை கண்டிப்பவர்களையும் அவற்றை விமர்சனம் செய்பவர்களையும் இஸ்லாமிய வகுப்புவாதிகள் சகிப்புதன்மை அற்றவர்கள் என்று கூறுகிறது இக்கும்பல்.

படிக்க : மன் கி பாத்: கேட்காத மாணவர்களை விடுதிக்குள் அடைத்த கல்லூரி!

மேலும் செய்தி ஊடகங்களை கிட்டத்தட்ட முழுமையாக விழுங்கிவிட்ட பா.ஜ.க -ஆர்.எஸ்.எஸ் சங் பரிவார் கும்பல், அவற்றின் முன்பக்கத்தில் என்ன வர வேண்டும் என்பதை தீர்மானிக்கின்றனர். தவறியும் தங்களை பற்றிய எதிர் செய்திகள் வந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கின்றனர்.

இதுபோன்ற பாசிச நடவடிக்கைகள் இஸ்லாமியர் மீதான வெறுப்பு பிரச்சாரங்கள் இன்று சாதாரணவையாக மாறி வருகிறது. அந்த வகையில் பதவிகளில் அமர்ந்திருக்கும் பா.ஜ.க அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் மதக் கலவரங்களை தூண்டும் வகையில் பேசி வருகின்றனர்.

தொடர்ந்து இதுபோல் பேசிவரும் சங் பரிவார் கும்பல்களின் பாசிச நடவடிக்கைகளை முறியடிக்க நேரடி களத்தில் இறங்க போகிறோமா.? அல்லது சகித்துக் கொண்டு கண்களை மூடிக்கொண்டு கடந்து போக போகிறோமா.? இக்காவி கும்பலை வீழ்த்த வேண்டுமெனில் உழைக்கும் மக்களாய் நாம் ஒன்று சேர வேண்டும், இதன் மூலம் மட்டுமே இதுபோன்ற மதவெறி பாசிஸ்ட் கும்பலை வீழ்த்த முடியும்.

சித்திக்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க