20.06.2023

தமிழ்நாட்டைச் சேர்ந்த குறவர் இன மக்கள்  மீது சித்திரவதை!
பாலியல் வன்கொடுமை!

ஆந்திரா சித்தூர் போலீசை தூக்கில் போடு!

கண்டன அறிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம், புலியாண்டப்பட்டி கிராமத்தில் உள்ள குறவர் இனத்தை சேர்ந்த 7 வயது சிறுவன், 5 பெண்கள் உட்பட 7 பேரை, ஆந்திர மாநிலம் சித்தூர் போலீசு கடந்த 11ம் தேதி  விசாரணைக்கு அழைத்துச் செல்லும் போதே சித்திரவதை செய்துள்ளது.

ஆந்திர போலீசு  மீது புகார் செய்த அந்த கிராமத்தை சேர்ந்த 2 பெண்கள் உள்ளிட்ட மேலும் 3 பேரையும் இரவோடு இரவாக மீண்டும் அதே சித்தூர் போலீசு  கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முன்னிறுத்தாமல்  காவல்நிலையத்தில் ஒருவார காலமாக வைத்து, விசாரணை என்ற பெயரில் அவர்கள் மீது பல்வேறு சித்திரவதைகள் செய்துள்ளது சித்தூர் போலீஸ்.

முகங்களை பிளாஸ்டிக் கவர்களால் மூடியும் பிளாஸ்டிக் பைப்களை கொண்டு  கொடூரமாக தாக்கியும் துன்புறுத்தியுள்ளனர். மேலும் இரண்டு பெண்களை பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளனர்.

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், வழக்கறிஞர்கள் முயற்சிகள் மூலமாக கைது செய்யப்பட்ட 10 பேர்களில் 8 பேர் மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் இருவர் சிறையில்  உள்ளனர்.

பாதிக்கப்பட்ட அப்பெண்களுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


படிக்க: இருளர்கள் மீது தொடரும் போலீசின் வெறியாட்டங்கள் !


உச்ச நீதிமன்றம்  பல்வேறு தீர்ப்புகளின் மூலம் கைது செய்வதற்கான விதிமுறைகளை வகுத்தளித்த போதும் அவை ஒருபோதும் இந்த நாட்டின்  சாதாரண மக்களை கைது செய்யும் போது பின்பற்றப்படுவதில்லை.

போலீஸ், ராணுவம், துணை ராணுவ படையினர் மேற்கொள்ளக்கூடிய குற்றங்களுக்கான தண்டனை என்பது பொதுமக்களுக்கு வழங்கப்படும் தண்டனையை விட பல மடங்கானதாக இருக்கும் வேண்டும். அதற்கான போராட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும்.

ஆகவே தமிழ்நாடு அரசு ஆனது,  குற்றம் இழைத்த ஆந்திர சித்தூர் போலீசை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும்  இக்குற்றம் தொடர்பான சிறப்பு நீதிமன்றம் அமைத்து தொடர்புடைய போலீசுக்கு உச்சபட்ச தண்டனை வழங்குவதற்கான உரிய நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

மேலும் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் உரிய இழப்பீட்டை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர்.சி வெற்றி வேல்செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு  – புதுவை.
9962366321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க