ஆபரேஷன் ககரை கண்டித்து திருவாரூரில் ஆர்ப்பாட்டம்

காடுகள் களவாடப்படுவதற்குத் தடையாக உள்ள மவோயிஸ்டுகளையும் பழங்குடி மக்களையும் படுகொலை செய்யும் ஆபரேஷன் ககர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) பொதுச்செயலாளர் தோழர் பசவராஜ் படுகொலைக்கு நீதி விசாரணை நடத்தக் கோரியும் திருவாரூரில் ஜூன் 17 அன்று மாலை 4:30 மணிக்கு மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரக் கழக மாவட்டப் பொருளாளர் தோழர் முரளி தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் பிரபாகரன், மருதம் மீட்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளர்; தங்க தமிழ்ச்செல்வன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்; ஜி.வி. வரதராஜன், தமிழக விவசாய இயற்கை உழவர் இயக்கம்; ஐயா சிவராமன், திராவிட  கழக நகரச் செயலாளர்; கருணாநிதி, சமூக செயற்பாட்டாளர்; விக்னேஷ், அம்பேத்கர் மக்கள் நல சங்கம், மாநிலச் செயலாளர்; சீமா மகேந்திரன், வி.சி.க பயிலகம்; பக்கிரி தாஸ், விவசாய சங்க உறுப்பினர்; தாமரைச்செல்வன், மன்னார்குடி வடக்குச் செயலாளர்; நாகை மக்கள் அதிகாரக் கழக ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜ்குமார்; மக்கள் அதிகாரக் கழக செயற்குழு உறுப்பினர்கள் வாஞ்சிநாதன், மோகன், குரு; தோழர் அஜித், மக்கள் அதிகாரக் கழகம் மாவட்ட இணை செயலாளர் தோழர் லெனின் ஆகியோர் உரையாற்றினர்.

இறுதியாக உரையாற்றிய மக்கள் அதிகாரக் கழக மாவட்டச்  செயலாளர் தோழர் ஆசாத் சத்தீஸ்கர் மாநிலத்தில் காடுகளிலும் மலைகளிலும் உள்ள கனிம வளங்களைச் சூறையாடி அதானி அம்பானி போன்ற கார்ப்பரேட் கும்பலுக்குக் கொடுப்பதற்காக அங்கு உள்ள பழங்குடி மக்களைப் படுகொலை செய்யும் ஆபரேஷன் ககர்-ஐ ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) பொதுச் செயலாளர் பசவராஜ் படுகொலைக்கு நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் கார்ப்பரேட் நலன்களுக்காக நடத்தப்படும் இயற்கை அழிப்பும் இயற்கை வள சுரண்டலும் பல மடங்காக்கியுள்ளது என்றும் கூறினார்.

மேலும், ”கார்ப்பரேட் இயற்கை வள கொள்ளைக்குத் தடைக்கற்களாக இருப்பவர்கள் அப்பகுதியில் வாழும் பழங்குடியின மக்களும் அவர்களுக்காகப் போராடும் மாவோயிஸ்ட் தோழர்களும்தான். அதனால் அவர்களை கொன்றொழிக்க ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசு கொண்டுவந்த திட்டம்தான் ஆபரேஷன் ககர். இதன் மூலம் பழங்குடியின மக்களைக் காடுகளிலிருந்தும் மலைகளிலிருந்து வெளியேற்றி மலைகளை கார்ப்பரேட்களுக்குத் தாரை வார்த்துக் கொடுக்க மோடி – அமித்ஷா கும்பல் துடிக்கிறது. ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்று திரண்டு போராடினால் மட்டும் தான் இது போன்று பழங்குடி மக்களையும் மாவோயிஸ்ட் தோழர்களையும் பலியிடுவதைத் தடுத்து நிறுத்த முடியும். அதற்காக ஒன்று சேர்வோம். பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை அமைப்போம்” என்று தனது உரையை முடித்தார்

ஆர்ப்பாட்டத்தின் போது ஆபரேஷன் ககருக்கு எதிராகவும், தோழர் பசவராஜ் படுகொலைக்கு நீதி விசாரணை வேண்டியும், கனிம வளக் கொள்ளைக்கு எதிராகவும், ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிச கும்பலுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தகவல்
மக்கள் அதிகாரக் கழகம்,
திருவாரூர்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க