Saturday, November 1, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by மக்கள் அதிகாரக் கழகம்

மக்கள் அதிகாரக் கழகம்

மக்கள் அதிகாரக் கழகம்
76 பதிவுகள் 0 மறுமொழிகள்

கிருஷ்ணகிரி: யானைகள் தாக்கி விவசாயிகள் பலி! மாவட்ட நிர்வாகமும், வனத்துறையுமே குற்றவாளிகள்!

வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் சோலார் மின்வேலி அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் வாக்குறுதி கொடுத்தும் நிறைவேற்றவில்லை. யானைத் தாக்குதலால் விவசாயிகள் உயிரிழக்கும்போது வாக்குறுதிகள் கொடுப்பது, அதன் பிறகு அலட்சியமாக இருப்பது என்ற போக்கிலேயே மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் உள்ளன.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: வாக்குரிமையை மக்களிடமிருந்து பறிக்கும் பாசிச நடவடிக்கையே!

வாக்குரிமையை மக்களிடமிருந்து பறிக்கும், பாஜக-வின் பாசிச உறுப்பான தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை மக்கள் அதிகார கழகம் வன்மையாக கண்டிக்கிறது.

கிருஷ்ணகிரி: பருவமழையால் பயிர்கள் சேதம்!

கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் பெய்த மழையால் அஞ்செட்டி, உரிகம், தின்னூர், அத்திக்கோட்டா, எஸ்.குருபட்டி மற்றும் தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

தஞ்சை: கபிஸ்தலம் – தலித் மக்கள் மீது ஆதிக்க சாதி வெறியர்கள் தாக்குதல்! | ம.அ.க கண்டனம்

கபிஸ்தலம் மேட்டுத்தெருவில் தலித் மக்கள் வாழக்கூடிய பகுதிக்கு செல்லும் சாலையின் நடுவில் ஆதிக்க சாதி வெறியர்கள் வாகனத்தை நிறுத்தி, மது அருந்திக் கொண்டு இருந்துள்ளனர். இது குறித்து கேள்வி எழுப்பிய பட்டியலின இளைஞர்களை கடுமையாக அவர்கள் தாக்கியுள்ளனர்.

தமிழ்நாடு அரசே! நெல் கொள்முதலை முறையாக செய்திடு! | ம.அ.க

அறுவடை செய்த நெல்லை உடனடியாக கொள்முதல் செய்யாமல் பல வாரங்கள் காலம் கடத்துவதாலும், கொள்முதல் நிலையங்கள் தேவையான இடவசதியும் முறையான பாதுகாப்பு வசதியும் இல்லாததாளும் டன் கணக்கில் நெல் மூட்டைகள் வெயிலிலும் மழையிலும் கிடந்து சேதமடைந்து வருகின்றன.

தனியார் பல்கலைக் கழக திருத்தச் சட்டம்: ம.அ.க கண்டனம்

தற்போது செயல்பட்டு வரும் எந்த ஒரு தனியார் கல்லூரியும் விரும்பினால் பல்கலைக்கழகமாக தங்களை மாற்றிக்கொள்ளலாம். அப்படியானால், ஆசிரியர்கள், அலுவலர்கள் ஊதிய விகிதம் முதல் கல்வித் திட்டங்கள், மாணவர்களின் கட்டணம் மற்றும் சேர்க்கை முறை வரை எல்லாவற்றையும் தனியாரே தீர்மானிப்பார்கள்.

Haryana ADGP Puran Kumar’s Suicide due to Caste Discrimination: People’s Power Party Condemns

In his nine-page "finalnote" written before committing suicide, he alleged that, he belonged to a Scheduled Caste and that several senior police and IAS officers, including DGP Kapoor and SP Bijarnia, had harassed him on caste-based grounds and subjected him to professional revenge.

மஞ்சள் பட்டாணி இறக்குமதி வரி விலக்கு நீட்டிப்பு: அதானி-குஜராத்திகளுக்காக ஒழித்துக்கட்டப்படும் இந்திய விவசாயிகள்

உள்நாட்டு பருப்பு வகைகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டாலுக்கு 7,000 - 8,000 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அதைவிட இரண்டு மடங்கு குறைவாக அதுவும் இறக்குமதி வரியே இல்லாமல் மஞ்சள் பட்டாணி இறக்குமதி செய்யப்பட்டு குவிண்டாலுக்கு 3,500 ரூபாய் என சொற்ப விலைக்கு விற்கப்படுகிறது. இது உள்நாட்டு விவசாயிகளை ஒழித்துக்கட்டும் நடவடிக்கையாகும்.

அரியானா: கூடுதல் டி.ஜி.பி பூரன்குமார் சாதிய வன்கொடுமையால் தற்கொலை! | ம.அ.க கண்டனம்

பூரன் குமார் எழுதிய ஒன்பது பக்க "இறுதிக் குறிப்பில்", தான் ஒரு பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்றும், டி.ஜி.பி கபூர், எஸ்.பி. பிஜார்னியா உட்பட பல மூத்த காவல்துறை மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தன்னை சாதி ரீதியாக துன்புறுத்தியதாகவும் தொழில் ரீதியான பழிவாங்குதலுக்கு ஆளாக்கியதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

அம்பேத்கர் புகைப்படம் வைத்ததற்காக தலித் இளைஞரைத் தாக்கிய ஆதிக்கச் சாதி வெறியர்கள்

தமிழரசனின் இரு சக்கர வாகனத்தில் அம்பேத்கர் படமும் நீல சிவப்புக் கட்சி கொடியும் ஒட்டியிருப்பதைப் பார்த்து அவர் தலித் சாதியைச் சார்ந்தவர் என்பதை அறிந்துகொண்டு, இது யாரு வண்டி என்று கேட்டு, தமிழரசனை சாதியைச் சொல்லி இழிவாக பேசி தாக்கியுள்ளனர்.

ம.அ.க-வின் மூன்றாவது செயற்குழு கூட்டத் தீர்மானங்களை உயர்த்திப் பிடிப்போம்!

15.10.2025 மற்றும் 16.10.2025 ஆகிய இரு தேதிகளில் மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநிலச் செயற்குழுவானது கழகத்தின் மாநிலப் பொருளாளர் தோழர் அமிர்தா அவர்களின் தலைமையில் கூடியது. சர்வதேச, தேச மற்றும் தமிழ்நாடு தொடர்பான அரசியல், பொருளாதாரப் பிரச்சனைகள் தொடர்பாக 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கிருஷ்ணகிரி – சூளகிரி, தளி ஒன்றியங்கள்: அடிப்படை வசதிகளின்றி துயரப்படும் மக்கள்

தளி பஞ்சாயத்து ஒன்றியத்தின் தசையன்மடுவு கிராமத்தில் சுமார் 40 இருளர் குடும்பங்கள் வசிக்கின்றனர். மாநில அரசு 40 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களுக்காக வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளது. இருப்பினும், இந்த வீடுகளில் பலவற்றிற்கு வீட்டுப் பட்டாக்கள் மற்றும் மின்சார இணைப்புகள் இன்னும் கிடைக்கவில்லை.

கிருஷ்ணகிரி – தென்பெண்ணை ஆற்றின் அவலநிலை: கர்நாடகா, தமிழ்நாடு அரசுகளின் அலட்சியம்

பெங்களூரில் உள்ள சுத்திகரிக்கப்படாத மற்றும் தொழிற்சாலை கழிவுகள், தென்பெண்ணை ஆற்றில் விடப்படுவதன் காரணமாக, கெலவரப்பள்ளி அணையிலிருந்து வெளிவரும் நீரானது, குவியல் குவியலாக நுரை பொங்கி வருகிறது. இது மிகப்பெரிய அளவில் சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.

திண்டுக்கல் ஆணவப்படுகொலை – தமிழ்நாட்டில் தொடரும் ஆணவ படுகொலைகள்!

திருமணமான நாள் முதலிருந்தே ஆர்த்தி குடும்பத்தினரிடமிருந்து அச்சுறுத்தல் இருந்து வந்துள்ளது. அக்டோபர் 12-ந் தேதி பால் கறவைக்காக ராமசந்திரன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பெண்ணின் தந்தை சாதிவெறியன் சந்திரன் வழிமறித்து அறிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளான்.

மக்கள் அதிகாரக் கழகம் – கிருஷ்ணகிரி மாவட்டச் செயற்குழு தீர்மானங்கள்: அக்டோபர் – 2025

மக்கள் அதிகாரக் கழகம், கிருஷ்ணகிரி மாவட்டச் செயற்குழு கூட்டம் அக்டோபர் 12 அன்று நடைபெற்றது. அதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.