Wednesday, December 17, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by மக்கள் அதிகாரக் கழகம்

மக்கள் அதிகாரக் கழகம்

மக்கள் அதிகாரக் கழகம்
91 பதிவுகள் 0 மறுமொழிகள்

சாதி மறுப்பு புரட்சிகர மண விழா தொடர்பான ஓர் முக்கிய அறிவிப்பு!

சாதி மதம் கடந்து காதலிக்க மணம் முடிக்க வேண்டும் ஜனநாயகம்! என்ற முழக்கத்துடன் வெண்மணி ஈகியர் நாளில் நடக்க இருந்த சாதி மறுப்பு புரட்சிகர மண விழா டிசம்பர் 25-க்கு பதில் டிசம்பர் 28 ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றி வைக்கப்படுகிறது.

இ ஃபைலிங் முறைக்கு எதிரான தமிழ்நாடு வழக்கறிஞர் போராட்டம் வெல்லட்டும்! | ம.அ.க

அதிவேக இணைய வசதி, மின் வசதி, ஆற்றல் கொண்டவர்கள் மட்டுமே இனி வழக்கறிஞராக நீடிக்க முடியும் என்ற நிலை உருவாகி வருகிறது. இதன் மூலம் தொடர்ந்து பல தலைமுறைகளாக வழக்கறிஞராக இருப்பவர்கள், பெரும் பணக்கார கும்பல் மட்டுமே நீதித்துறையில் ஆதிக்கம் செலுத்த முடியும் அல்லது ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற நிலை உருவாகும்.

ம.அ.க. மாநில தலைமைக் குழுவின் ஆறாவது கூட்டம் || தீர்மானங்கள்

மக்கள் அதிகாரக் கழகத்தின் ஆறாவது மாநில தலைமைக் குழு கூட்டம் டிசம்பர் 08, 09 ஆகிய நாட்களில் சிறப்பாக நடந்து முடிந்தது. இக்காலகட்டத்தில் தேசிய, சர்வதேசிய நிலைமைகளைப் பரிசீலித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

திருப்பரங்குன்றம்: நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவியில் இருந்து நீக்க வேண்டும் | ம.அ.க.

நீதிமன்ற பாதுகாப்பு பணிகளுக்காக மட்டுமே சிறப்பாக அனுமதிக்கப்பட்டிருந்த சி.ஐ.எஸ்.எஃப் படையை சட்டத்துக்கு புறம்பாகவும் தன்னுடைய தனிப்பட்ட தேவைகளை தீர்த்துக் கொள்வதற்காகவும் பொதுவான சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு அனுப்புவதற்கு எந்த உரிமையும் தகுதியும் இல்லாத போதும் திட்டமிட்டு வேண்டுமென்றே கலவரச் சூழலை ஏற்படுத்துவதற்காக நீதிபதி இச்செயலை செய்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம்: கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்! | ம.அ.க கண்டனம்

நீதிபதி சுவாமிநாதன் அவர்களால் வழங்கப்பட்ட தீர்ப்பானது முன் தீர்ப்புகளையும் சட்டங்களையும் கணக்கில் கொள்ளாமல் இந்து மத வெறி பாசிஸ்டுகளின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே அமைந்துள்ளது. இதனை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிப்பதுடன் ஜி. ஆர். சுவாமிநாதனின் உத்தரவை தமிழ்நாடு அரசு நிறைவேற்றக்கூடாது என்றும் கேட்டுக்கொள்கிறது.

லெப். சாமுவேல் கமலேசன் பணிநீக்க வழக்கு – இந்துராஷ்டிரத்தை நிறுவும் ஆபத்தான தீர்ப்பு!

ஒரு மனிதனின் சுயமரியாதைக்கு எதிராக உயர் அதிகாரிகளால் வழங்கப்படும் உத்தரவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது எப்படி சரியானதாக இருக்க முடியும்? மேற்கண்ட தீர்ப்பானது, இராணுவம் மட்டுமல்ல அரசின் அனைத்து உறுப்புகளையும் காவிமயமாக்கி இந்து இராஷ்டிரத்தை நிறுவுவதற்கான தீர்ப்பாகும்.

டிசம்பர் 25 – சாதி மறுப்பு புரட்சிகர மண ஏற்பு விழா || ம.அ.க அறிவிப்பு

நவம்பர் 29-இல் நடக்க இருந்த சாதி மறுப்பு புரட்சிகர மண ஏற்பு விழா டிசம்பர் 25ஆம் தேதி (25.12.2025) வெண்மணி ஈகியர் நாளில், மாலை 4.00 மணி அளவில் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த அதே திருமண மண்டபத்தில் (அ.பா.வளையாபதி மகால், திருமோகூர், யா.ஒத்தக்கடை, மதுரை) நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

நான்கு தொழிலாளர் சட்டங்களைத் திரும்பப்பெறு! | ம.அ.க. கண்டனம்

தொழிலாளர்களை, கார்ப்பரேட் முதலாளிகள், காண்ட்ராக்ட் முதலாளிகள், போலீசு கொண்ட ஒரு கும்பலின் அதிகாரத்தின் கீழ் கொத்தடிமைகளாக்கும் இச்சட்டங்களை எதிர்ப்பை மீறி நடைமுறைப்படுத்திய பாசிச மோடி அரசை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

மாநில உரிமைகளுக்கு சவக்குழி வெட்டும் உச்சநீதிமன்ற கருத்துரை!

உச்ச நீதிமன்ற கருத்துரையானது குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மேலான அதிகாரத்தை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. தற்போது இருக்கும் குறைந்தபட்ச மாநில அதிகாரங்களைக் கூட ஒழித்துக்கட்டுவதாக உள்ளது. மாநில உரிமைகளுக்கு சவக்குழி வெட்டும் இக்கருத்துரையை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

மண ஏற்பு விழா ஒத்திவைப்பு – அறிவிப்பு

நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் கடந்த நவம்பர் 17 ஆம் தேதி உயிரிழந்தார். அமைப்பின் முதுபெரும் தோழர் இறந்துவிட்ட காரணத்தினால் மண ஏற்பு விழாவினை ஒத்தி வைக்கிறோம். திருமணம் நடத்துவதற்கான குறிப்பான தேதியை விரைவில் அறிவிக்கிறோம்.

பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன?

எதிர்க்கட்சிகளோ இந்த கட்டமைப்புக்குள்ளேயே பி.ஜே.பி-யை தோற்கடித்து விட முடியும் என்ற மாயையை மக்களுக்கு உருவாக்குகிறார்கள். இதன் மூலம் தங்களை நம்பும் மக்களுக்கும் கூட துரோகம் இழைக்கிறார்கள்.

பொதுக் கூட்டங்கள், பேரணிகளுக்கு கட்டுப்பாடு: கருத்துரிமையை குழிதோண்டி புதைக்கும் தமிழ்நாடு அரசு!

பணம் படைத்த அரசியல் கட்சிகளும் கார்ப்பரேட் அரசியல் கட்சிகளும் பாசிச கட்சிகளும் மட்டுமே பரப்புரையில் ஈடுபட முடியும் என்பதற்கான பரிந்துரைகளை ஆளும் தி.மு.க அரசு வெளியிட்டுள்ளது. இதனை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிப்பதுடன் மேற்கண்ட பரிந்துரைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது.

கோவை மாணவி மீதான பாலியல் வன்முறை: தோற்றுப் போனது அரசு கட்டமைப்பு!

பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு சில மணி நேரங்கள் ஆடையின்றி அந்தப் பெண் துடிதுடித்தார் என்பதை கேட்கும்போதெல்லாம் நம் நெஞ்சமெல்லாம் பதறுகிறது. கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று பெருமை பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில்தான் இப்படி ஒரு நிகழ்வும் நடைபெற்று இருக்கிறது என்பது தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம்.

மரபணு திருத்தப்பட்ட பருப்பு வகைகள்: கார்ப்பரேட்மயமாக்கல்தான் தற்சார்பா?

ஏற்கெனவே மரபணு திருத்தப்பட்ட நெல் விதிகளைத் தடை செய்யக் கோரி விவசாயிகள் போராடிவரும் சூழலில், தற்போது மத்திய அரசு மரபணு திருத்தப்பட்ட பருப்பு வகைகளைப் பயிரிடுவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறது.

சாலையோரக் கடைகளை அடாவடியாக அகற்றிய ஓசூர் மாநகராட்சி!

ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களை பெரும் தனியார் நிறுவனங்கள், அரசியல் செல்வாக்குள்ள தனி நபர்கள் சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளதை மாநகராட்சி நிர்வாகம் கண்டும் காணாமல் இருக்கிறது என்பதுதான் உண்மை. உழைக்கும் மக்களுக்கு ஒரு நீதி, பணக்காரர்களுக்கு ஒரு நீதியா?