Wednesday, June 17, 2026
முகப்பு பதிவு பக்கம் 579

மோடி அரசின் சமஸ்கிருத திணிப்பை முறியடிப்போம் !

6
sanskrit domination
சமற்கிருத ஆதிக்கம்
  • பல்தேசிய இன அடையாளங்களை அழிக்கவே மோடி அரசின் சமஸ்கிருத – வேத கலாச்சார திணிப்பு!
  • திராவிட – தமிழ்மொழிக்கும், தமிழின பண்பாட்டிற்கும் எதிரியே ஆரிய – சமஸ்கிருதமும் வேத கலாச்சாரமும்!
  • தமிழினமே திரண்டெழு! ஆரிய – பார்ப்பன படையெடுப்பை முறியடிப்போம்!

28-06-2016 அன்று தமிழகம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம்

சென்னையில்

29-06-2016 காலை 11.30 மணி வள்ளுவர்கோட்டம்
மாணவர் பிரதிநிதிகள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்கள்!
மாணவர்களே அணிதிரண்டு வாரீர்!

ன்பார்ந்த மாணவர்களே,

sanskrit domination
சமற்கிருத ஆதிக்கம்

இந்த கல்வி ஆண்டு (2016 – 17) முதல் சமஸ்கிருதத்தை மூன்றாவது மொழியாக கற்பிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உத்தரவிட்டிருக்கிறார். கல்வித்துறையில் காட்ஸ் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதையும், இந்துத்துவா கருத்துக்களை புகுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட தேசிய கல்விக்கொள்கைக்கான வரைவுத்திட்டம்- 2015 சமஸ்கிருதத்தை தனிப்பாடமாக கொண்டுவர வேண்டும் என்று கூறுகிறது.

தேசிய கல்விக்கொள்கையை வகுப்பதற்காக அமைக்கப்பட்ட 5 பேர் குழுவில் உள்ள ஜே.எஸ் ராஜ்புத் என்பவர் ஆர்.எஸ்.எஸ்-ன் தீவிர ஆதரவாளர். இக்கல்விக்கொள்கை மூலம் கல்வியை காவிமயமாக்க திட்டமிட்டு செயல்படுவதை இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம். இதெல்லாம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கல்வி பிரிவான ‘பாரதிய சிக்சன் மண்டல்’ வழிகாட்டுதலின்படிதான் நடைபெற்று வருகிறது.

சமஸ்கிருத திணிப்பின் மூலம் பலதேசிய இனங்களின் இன, மொழி, பண்பாட்டு அடையாளங்களை அழித்து, ஒற்றை மொழி, ஒற்றைக் கலாச்சாரம், ஒற்றை தேசம் என்பதை அதாவது இந்தி – இந்து – இந்தியா என்ற இந்துத்துவா கொள்கையை நிறுவத் துடிக்கிறது, ஆர்.எஸ்.எஸ். இவர்கள் சொல்லும் இந்த இந்துராஷ்டிரத்தின் நோக்கம் என்ன? இயற்கைவளம், கனிமவளம், மனித வளம் என ஒன்றையும் விடாமல் நாட்டை சூறையாடி வரும் ஏகாதிபத்திய முதலாளிகள், அதானி, அம்பானி, டாடா போன்ற தரகு அதிகாரவர்க்க முதலாளிகள், நிலபிரபுத்துவ சக்திகளான ஆளும் வர்க்கங்களுக்கு, அதாவது பெருவாரியான உழைக்கும் மக்களின் எதிரிகளுக்கு சேவை செய்வதை நோக்கமாக கொண்டதுதான் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி யின் இந்துராஷ்டிரம்.

நாட்டின் கல்வித்துறையை உலகவர்த்தக கழகத்தின் காலடியில் அடகு வைத்துவிட்டது மோடி அரசு. அதன் விளைவாக கல்விக்கான மானியங்களை ஒழிப்பது, கல்வி உதவித்தொகைகளை நிறுத்துவது, வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்களை இறக்குமதி செய்வது; அரசுப் பள்ளி, கல்லூரிகளையே ஒழித்துவிட்டு ஆன்-லைன் கல்வி; தேர்வு என கல்வியை வியாபாரப் பண்டமாக்கி கார்ப்பரேட் முதலாளிகளின் கையில் தாரை வார்க்கப்படுகிறது. பெருகிவரும் வேலையில்லாத் திண்டாட்டம் சமூகத்தில் பெரும் நெருக்கடியை உருவாக்கி வருகிறது. மருத்துவம், பொறியியல் என படித்து முடித்தும் வேலை கிடைக்காத இளைஞர்கள், பன்னாட்டுக் கம்பெனிகள் ஆட்குறைப்பு செய்து வீதிக்குத் தள்ளியதால் விரக்தியடைந்த இளைஞர்களின் தற்கொலைகள் அச்சத்தை உருவாக்குகின்றன. விவசாயம், தொழில்துறை, சிறு தொழில்கள், இயற்கை வளங்கள் என அனைத்தையும் ஏகாதிபத்தியங்கள் சூறையாடி வரும் வேலையில், இதை எதிர்த்துப் போராடுவதில் இருந்து மாணவர்கள், இளைஞர்களை, மக்களை திசை திருப்புவதற்காக ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி அவ்வப்போது சாதி-மத வெறியைத் தூண்டி விடுகின்றன.

அமெரிக்காவில் குடியரசுக்கட்சி வேட்பாளரான டிரம்ப் எப்படி வெளியில் இருந்து குடியேறியவர்களுக்கு எதிராகவும், முஸ்லீம்களுக்கு எதிராகவும் வெறியைத் தூண்டி விடுகிறானோ அதைப் போல, மோடியின் பார்ப்பன பாசிச கும்பல் முஸ்லீம்களுக்கு எதிரான இந்துமதவெறியைத் தூண்டி விடுகின்றன. முஸ்லீம்களுக்கு மட்டுமல்ல பெருவாரியான உழைக்கும் மக்களுக்கும் எதிரானதுதான் ஆர்.எஸ்.எஸ்-ம், அதன் இந்துத்துவாக் கொள்கையும். இந்த அபாயங்களின் ஒரு பகுதிதான் சமஸ்கிருத – வேதகலாச்சார திணிப்பு. இதை அனுமதிக்கக் கூடாது. 1965 ல் இந்தித் திணிப்பை முறியடித்தவர்கள் நம் மாணவர்கள். மீண்டும் வீறுகொண்டெழுவோம் இன்று சமஸ்கிருத – வேதகலாச்சாரத்தை திணித்து வரும் ஆரிய – பார்ப்பன படையெடுப்பை முறியடிப்போம்!

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
நெ.41,பிள்ளையார் கோவில் தெரு, மதுரவாயல், சென்னை-95
போன்: 9445112675

பஞ்சாபின் போதை – பாரதிய ஜனதாவின் சேவை !

5

“என்னை மன்னித்து விடுங்கள் தந்தையே. நான் உங்களை அவமதித்து விட்டேன். எனக்கு இரண்டாவது வாழ்க்கையை கொடுத்ததற்கு நன்றி. கடவுளே.. நான் இன்னும் சாகாமல் இருப்பதற்கு நன்றி”

போதை மறுவாழ்வு மையம் வழங்கிய நாட்குறிப்பில் இவ்வாறு எழுதியிருக்கிறான் அந்தப் பையன்.

drug-children
நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது எனது சீனியர் மாணவர்கள் சிலர் ஹெராயின் பொடியை முகர்வதைப் பார்த்தேன். எனக்கும் காசு வாங்காமலேயே கொடுத்தார்கள்

“நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது தந்தையோடு ஒரு திருமணத்திற்குச் சென்றிருந்தேன். அப்போது தான் முதன் முறையாக மதுவைச் சுவைத்துப் பார்த்தேன். மற்ற பையன்கள் அதை ஜன்னத் (சொர்க்கம்) என்றார்கள்”

அந்தப் பையனுக்கு தற்போது 17 வயதாகிறது. பஞ்சாப் மாநிலம் டான் டாரன் மாவட்டத்தைச் சேர்ந்தவன். ஆறாம் வகுப்பு படிக்கும் போது பள்ளிக்கு தினமும் மது போதையோடு வருவதை கவனித்த ஆசிரியர்கள் அவனை பள்ளியிலிருந்து நீக்குகின்றனர். தந்தையோ நிர்வாகத்தின் கையில் காலில் விழுந்து மீண்டும் அவனை பள்ளியில் சேர்க்கிறார்.

“நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது எனது சீனியர் மாணவர்கள் சிலர் ஹெராயின் பொடியை  முகர்வதைப் பார்த்தேன். எனக்கும் காசு வாங்காமலேயே கொடுத்தார்கள். அப்படித் தான் ஹெராயின் பழக்கமானது. பின்னர் எனது சீனியர்கள் ஹெராயின் கொடுப்பதை நிறுத்திக் கொண்டார்கள். என்ன செய்வதென்று தெரியவில்லை. எனது செல்பேசியை விற்றுக் கிடைத்த காசைக் கொண்டு சமாளித்தேன்”

கடந்த ஆண்டு வெளியான பத்தாம் வகுப்புத் தேர்வில் ஆங்கில பாடத்தில் அந்தப் பையன் தோல்வியடைந்துள்ளான்.

”அந்தப் பரீட்சையை முழு போதையில் தான் எழுதினேன். விடைத்தாளில் என்ன எழுதினேன் என்றெல்லாம் எனக்குத் தெரியவில்லை”

கடந்த டிசம்பர் மாதம் தந்தையோடு வயல் வேலையில் ஈடுபட்டிருந்த போது தலை கால் புரியாத போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் கதிரடிக்கும் இயந்திரத்தில் கையை விட்டிருக்கிறான். தற்சமயம் போதை மறுவாழ்வு மையம் ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ள அந்த இளைஞனின் வார்த்தைகளை இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் வாசிக்கும் போது மனம் வலிக்கிறது.

Drug_abuse
ஆண்டு தோறும் சுமார் 7500 கோடி மதிப்பிலான போதை வஸ்துக்களை பஞ்சாப் மாநிலம் மட்டும் நுகர்ந்து வருகிறது

”நான் வெளியே செல்ல வேண்டும். கடைகளுக்குப் போக வேண்டும். கையேந்தி பவன்களில் சாப்பிட வேண்டும். எனது குழந்தைப் பருவம் மொத்தத்தையும் மதுவிலும் போதையிலும் தொலைத்து விட்டேன். இப்போது நான் வாழ வேண்டும் என்று விரும்புகிறேன்”

மற்றுமொரு செய்தியாகக் கடந்து செல்ல விடாமல் நமது மனசாட்சியை உலுக்குகின்றன அந்த வார்த்தைகள்.

பஞ்சாப் என்றதும் நமக்கு என்னவெல்லாம் நினைவிலாடுகின்றன?

இந்தியாவின் கோதுமைக் களஞ்சியம். தேசம் காக்கும் வீரத்தின் களஞ்சியம். பஞ்சாபியர்களின்  கள்ளங்கபடமற்ற முரட்டுத்தனமான அன்பு. பொற்கோவில்.. பஞ்ச நதிகள்.. பசுமையான வயல்கள்… ஆனால் இவையனைத்தும் பழங்கதைகளாகி விட்டன. இன்றைய பஞ்சாபின் நிலையை அடுத்து வரும் சில புள்ளி விவரங்களில் இருந்து புரிந்து கொள்ள முடியும்.

2009-ம் ஆண்டு பஞ்சாபின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சமூக பாதுகாப்புத் துறை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரம் ஒன்றில் சுமார் 67 சதவீத ஊரக குடும்பங்களில் குறைந்தது ஒரு போதை அடிமையாவது இருப்பதாக தெரிவித்திருந்தது.  எய்ம்ஸ் மருத்துவமனை 2015-ம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வு ஒன்றின்படி, ஆண்டு தோறும் சுமார் 7500 கோடி மதிப்பிலான போதை வஸ்துக்களை பஞ்சாப் மாநிலம் மட்டும் நுகர்ந்து வருகிறது. சராசரியாக போதை அடிமை ஒருவர் தனது போதை மருந்து தேவையை பூர்த்தி செய்ய நாளொன்றுக்கு சுமார் 1400 ரூபாய் செலவழிக்கிறார் என்கிறது அதே ஆய்வின் முடிவு.

survey
பஞ்சாப் மாநிலத்தை போதைப் பொருள் கடத்தல் மாபியா கும்பலிடம் அடமானம் வைத்த முதன்மைக் குற்றவாளிகளாக பாரதிய ஜனதா மற்றும் அகாலி தளத்தின் மாநிலத் தலைமைகளே உள்ளன.

உலகின் பிற நாடுகளில் மொத்த மக்கள் தொகையில் போதை மருந்துக்கு அடிமையானவர்களின் சராசரியோடு ஒப்பிடும் போது பஞ்சாபின் சராசரி நான்கு மடங்கு அதிகமாகும். அரசு வெளியிட்டுள்ள தரவுகளின் படியே சுமார் 13 லட்சம் இளைஞர்கள் ஓபியம், ஹெராயின் போன்ற போதைப் பொருட்களை தினசரி உட்கொள்ளும் முழுமையான அடிமைகளாக உள்ளனர். இந்த எண்ணிக்கையை விட குறைந்தது நான்கிலிருந்து ஐந்து மடங்கிற்கும் அதிகமானவர்கள் தொடர்ச்சியான இடைவெளியில் போதை மருந்துகளை உட்கொள்ளும் பழக்கத்திற்கு ஆளானவர்கள் என்கின்றன வேறு சில ஆய்வுகள்.

இந்தளவுக்கு போதை அடிமைத்தனத்தில் ஊறியுள்ள அம்மாநிலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பத்து படுக்கைகள் கொண்ட ஒரே ஒரு மறுவாழ்வு மையமே செயல்பட்டு வருகின்றது. மேலும் மாநில எல்லைக்குள் போதைப் பொருட்கள் நுழைவதைத் தடுக்கும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் வெறும் 12 அதிகாரிகளே நியமிக்கப்பட்டுள்ளனர். மாநில அரசாங்கம் கடந்த பத்தாண்டுகளில் போதைப் பழக்கத்திற்கு எதிராக எடுத்து வருவதாக பீற்றிக் கொள்ளும் நடவடிக்கைகளோ வெறும் கண் துடைப்புகளாகவே உள்ளன.

அகாலி தளம் – பாரதிய ஜனதா கூட்டணியிலான மாநில அரசாங்கம் தமது மாநிலத்தை அமுக்குப் பேயாக அழுத்திக் கொண்டிருக்கும் போதைப் பழக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வக்கற்று, பழியை பாகிஸ்தானின் மீதே போடுகின்றது. ஈரான் – ஆப்கான் – பாகிஸ்தான் எல்லைகளை ஊடுருவிப் பாயும் ”தங்கப் பிறை” (Golden Crescent) எனப்படும் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் பயன்படுத்தும் பாதை இந்திய எல்லையையும் கடந்து செல்கின்றது என்பது உண்மை தான். என்றாலும், பிற எல்லையோர மாநிலங்களைக் காட்டிலும் பல மடங்கு பஞ்சாப் மாநிலத்தில் தான் போதை அடிமைகள் அதிகமாக உள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தை போதைப் பொருள் கடத்தல் மாபியா கும்பலிடம் அடமானம் வைத்த முதன்மைக் குற்றவாளிகளாக பாரதிய ஜனதா மற்றும் அகாலி தளத்தின் மாநிலத் தலைமைகளே உள்ளன. கடந்தண்டு ஜூன் மாதம் தாலுக்கா அளவில் கட்சிப் பொறுப்புகள் வகிக்கும் பாரதிய ஜனதா மற்றும் அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த இரண்டு நிர்வாகிகள் 7.5 கிலோ பாப்பி விதைகளோடு கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர்.

லக்கா என்று அழைக்கப்படும் பா.ஜ.க. இளைஞர் அணி துணை தலைவர் - கடந்த வருடம் போதை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்
லக்கா என்று அழைக்கப்படும் பா.ஜ.க. இளைஞர் அணி துணை தலைவர் உடனிருப்பவர் பா.ஜ.க பஞ்சாப் மாநில தலைவர் கமால் ஷர்மா – கடந்த வருடம் போதை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்

எண்ணற்ற சந்தர்பங்களில் பாரதிய ஜனதாவின் உள்ளூர் தலைவர்கள் போதைப் பொருட்களைக் கடத்தும் போது கைதாகியுள்ளனர். கடந்த 2007-ம் ஆண்டு முதன் முறையாக பாரதிய ஜனதா அகாலி தள கூட்டணி அதிகாரத்தைக் கைப்பற்றியது. சுக்பீர் பாதல் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அந்த சமயத்தில் உளவுத் துறை தலைவராக இருந்த சசி காந்த், போதைப் பொருள் கடத்திலில் ஈடுபட்டுள்ள முக்கிய புள்ளிகளைக் குறித்து ஆய்வறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த அறிக்கையில் நிழலுலக போதை மாபியா கும்பலைச் சேர்ந்த சுமார் 90 பெயர்களைப் பட்டியலிட்டுள்ளார். தற்போது இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு பஞ்சாபின் போதை பிரச்சினை குறித்து பேட்டியளித்துள்ள சசி காந்த், தான் சமர்பித்த அறிக்கையில் குறிப்பிட்ட நபர்களில் சிலர் பாரதிய ஜனதா மற்றும் அகாலி தளம் கட்சியின் எம்.எல்.ஏக்களாகவும் மந்திரிகளாகவும், போலீசு அதிகாரிகளாகவும் இருந்தார்கள் என்பதை தெரிவித்துள்ளார்.

மேற்படி அறிக்கை குறித்து சுமார் ஆறு மாத காலம் கழித்தே நடவடிக்கை எடுத்துள்ளது பாரதிய ஜனதா – அகாலி தளம் தலைமையிலான அரசு. அறிக்கை சமர்ப்பித்த சசி காந்தை பதவிலிருந்து நீக்கி பந்தாடியதே அந்த நடவடிக்கை.

பஞ்சாப் மாநில பா.ஜ.க – அகாலி தலைவர்களுக்கும் போதை மாபியா கும்பல்களுக்கும் இடையிலான உறவு ஊரறிந்த இரகசியமாகவே இருக்கிறது. ஒவ்வொரு தேர்தலின் போதும் இந்தக் கூட்டணி திறந்து விடும் போதை வெள்ளம் மொத்த மாநிலத்தையே கிறுகிறுப்பில் ஆழ்த்துகிறது. பஞ்சாபில் தேர்தல் சமயத்தில் வெள்ளமெனப் பாயும் போதை மருந்தைக் கண்டு இந்திய தேர்தல் ஆணையமே அதிர்ந்து போயிருக்கிறது.

கடந்த 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் பிரச்சாரம் துவங்கி முதல் 40 நாட்களில் மட்டும் தேர்தல் ஆணையத்தின் அதிரடி சோதனைகளில் சுமார் 14,823 கிலோ பாப்பி விதைகள் கைப்பற்றப்பட்டது. மேலும் அதே காலகட்டத்தில், 136 கிலோ ஹெராயின், 76.2 கிலோ ஓபியம் மற்றும் 47 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. 2012ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின் போது 2700 கிலோ பாப்பி விதைகளும், 53.555 கிலோ ஹெராயினும், பத்து லட்சத்திற்கும் அதிகமான போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டன.

பாப்பி இலைகள்
பாப்பி இலைகள்

உலக தேர்தல் சரித்திரத்திலேயே தமிழகத்தின் கண்கண்ட காவல் தெய்வமாம் கண்டெய்னராத்தா காந்தி நோட்டுக்களால் நிகழ்த்திக் காட்டிய சாதனைகளைக் கண்டே அசராத தேர்தல் ஆணையம், பஞ்சாபில் பாய்ந்த போதை மருந்துகளைக் கண்டு ஆடிப் போனது. அப்போதைய தேர்தல் ஆணையர் குரேஷி 2012, மே 3ம் தேதி பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்புகிறார். அதில் பஞ்சாபில் போதை மருந்துப் பழக்கம் அச்சமூட்டும் எல்லைகளைக் கடந்து எங்கோ சென்று விட்டதைக் குறித்து எச்சரித்துள்ளார்.

கடந்த மூன்றாண்டுகளாக போதைப் பொருள் விவகாரம் ஊடகங்களில் சூடுபிடிக்கத் துவங்கியதை அடுத்து அதுவே அரசியல் அரங்கிலும் முக்கியமான பேசு பொருளானது. குறிப்பாக, தில்லியை அடுத்து ஓரளவுக்கு பஞ்சாபில் அடித்தளம் கொண்டுள்ள ஆம் ஆத்மி கட்சி 2017 சட்ட மன்றத் தேர்தலை குறிவைத்து வேலைகளைத் துவக்கிய போது, போதை மருந்து விவகாரத்தையே முக்கியமான பிரச்சார ஆயுதமாகக் கையிலெடுத்ததைத் தொடர்ந்து போதைப் பொருள் மக்களிடையே ஒரு முக்கிய பேசு பொருளானது.

இதையடுத்து ஏதாவது நடவடிக்கை எடுத்ததாக கணக்குக் காட்டியாக வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்ட பா.ஜ.க அகாலி கும்பல், 2014-ம் ஆண்டில் மட்டும் சுமார் 17,068 பேரைக் கைது செய்தது. 2015-ம் ஆண்டில் சுமார் 11,593 பேரைக் கைது செய்தது. கைது செய்யப்பட்டவர்களெல்லாம் போதை மாபியா கும்பலில் முக்கியஸ்தர்களைப் போலவும், இந்தக் கைது நடவடிக்கைகளின் மூலம் போதைப் பழக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்து விடுவோமென்றும் பீற்றிக் கொண்டது மாநில அரசு.

ஆனால், கைதானவர்களில் சுமார் 6,598 பேர்களின் மீது தொடுக்கப்பட்ட வழக்கின் முதல் தகவல் அறிக்கைகளை ஆய்வு செய்து பார்த்த போது, இவர்களெல்லாம் கீழ் நிலையில் ஒரு சில கிராம் அளவு மட்டும் போதை மருந்துகளை விநியோகிப்பவர்களாகவோ அல்லது போதை மருந்துக்கு அடிமையானவர்களாகவோ இருந்ததது தெரிய வந்தது. கைதானவர்களில் சுமார் 40 சதவீதமானோரிடம் வெறும் ஐந்து கிராமுக்கும் குறைவான போதை மருந்தே (சொந்த பயன்பாட்டுக்கு வைத்திருந்தது) பிடிபட்டுள்ளது.

குடி பஞ்சாபின் கொண்டாட்டமான கலாச்சாரத்தின் ஒரு அங்கம் என்பதால் தான் தற்போது அங்கே போதைப் பழக்கம் அதிகரித்திருப்பதற்குக் காரணம் என்கின்றன என்.ஜி.ஓ ஆய்வுகள். ஆனால், விவசாயம் லாபகரமில்லாத தொழிலாக வீழ்ச்சியடைந்த போக்கும் போதைக்கு பஞ்சாப் மாநிலம் அடிமையான போக்கும் ஏறத்தாழ அக்கம் பக்கமாக நடந்திருப்பதைப் பார்க்கும் போது நமக்கு வேறு ஒரு சித்திரம் கிடைக்கிறது. அரசின் புதிய பொருளாதாரக் கொள்கைகள் விவசாயத்தைக் குற்றுயிரும் குலை உயிருமாக்கியுள்ளது. படித்த இளைஞர்களுக்கே வேலையில்லாத நிலை ஒரு பக்கமும், அதிகரித்து வரும் நுகர்வுக் கலாச்சாரம் இன்னொருபக்கமுமாகச் சேர்ந்து இளைய சமுதாயத்தை மன அழுத்தத்திற்குள் தள்ளுகின்றன.

punjab-drug
மது போதைக்கு ஒரு மாநிலத்தையே ஆழ்த்தி வைத்திருப்பது தேர்தல் வெற்றிகளுக்கு உத்திரவாதமளிக்கும் வழிமுறையாக காவிகளின் தெற்கத்திய பங்காளியான ஜெயா ஏற்கனவே நிரூபித்துள்ளார்.
நன்றி படம் : தி இந்து

அதே சமயம் பஞ்சாபில் விவசாயம் நன்றாக நடந்து கொண்டிருந்த காலத்திலேயே கூலி விவசாயிகளிடமிருந்து அதிக உழைப்பை உறிஞ்சியெடுக்க கச்சாவான பாப்பி இலைகளை நிலச்சுவாந்தார்கள் வழங்கும் வழக்கமும் இருந்துள்ளது. இதன் காரணமாக போதைப் பொருட்கள் எளிதாகவும் மலிவாகவும் கிடைக்கும் நிலை பஞ்சாபில் ஏற்பட்டுள்ளது. எல்லை தாண்டி வரும் போதைப் பொருட்கள் ஒருபக்கமென்றால் பக்கத்து மாநிலமான ஹரியானாவில் உள்ள மருந்துக் கம்பெனிகள் தயாரிக்கும் வலிநிவாரணி மாத்திரைகள் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமலேயே மருந்துக் கடைகளில் தடையின்றிக் கிடைக்கின்றன.

எளிதாக கைக்குக் கிடைக்கும் போதைப் பொருட்கள் – வேலையின்றி ஒரு பெரும் பட்டாளம் – அழிந்து போன உள்ளூர் தொழில்கள் – கொன்றொழிக்கப்பட்ட விவசாயத்தினால் மொத்த சமூகமும் நிர்கதியாக்கப்பட்ட நிலை – இவையனைத்துடனும் உள்ளூர் பா.ஜ.க – அகாலி தள கும்பலின் திறமையான போதைப் பொருள் மாபியா வலைப்பின்னலும் சேர்ந்து மொத்த மாநிலத்தையும் மரணப் படுக்கையில் வீழ்த்தியுள்ளன.

ஆனால், பஞ்சாபின் போதை மருந்து பிரச்சினைக்கு ஒரே தனிச்சிறப்பான காரணம் எல்லைக்கு அப்பாலுள்ள இசுலாமிய பயங்கரவாத கும்பல்கள் மாத்திரம் தான் என பித்தலாட்டம் செய்கின்றது அம்மாநிலத்தை ஆளும் பாரதிய ஜனதா – அகாலி கும்பல். இதன் மூலம் மலிவான இந்து – தேசிய வெறியைக் கிளப்ப முயல்வதோடு தமது சொந்தக் கட்சிகளின் இரண்டாம் கட்ட மூன்றாம் கட்டத் தலைவர்கள் போதை மருந்து கடத்தல் வலைப்பின்னலின் சூத்திரதாரிகளாக இருப்பதை மூடி மறைக்கின்றனர். தேச பக்திக்கு மொத்த குத்தகைதாரர்களாக தங்களது பிம்பத்தை உப்பிப் பெருக்கிக் காட்டும் காவி கும்பல், தமது சொந்தக் கட்சியினரே பாகிஸ்தானின் போதை மருந்து கும்பல்களோடு தீவிரவாத வலைப்பின்னலின் வழியே தொடர்பில் இருப்பதையும் உள்நாட்டில் போதை மருந்து மாபியாக்களாக செயல்படுவதையும் கண்டு கொள்ளாமல் இரட்டை வேடம் போடுகின்றது.

அதே சமயம், பஞ்சாப் இளைஞர்களை போதை அடிமைத்தனத்தில் வீழ்த்தியிருப்பதைக் குறித்த விவாதங்களை முன்னெடுப்பவர்களை ”பஞ்சாபின் பெருமிதத்தைக்” குலைப்பவர்களாக சித்தரித்து ”மராத்தி மானூஸ்” “குஜராத்தி அஸ்திமிதா” “கன்னட மாதே” பாணியில் இதையும் ஓட்டுப் பொறுக்கும் உத்தியாக பயன்படுத்த முயற்சித்து வருகின்றனர். தேசத்தின் வளர்ச்சியைக் குறித்து காவி கும்பல் முன்பு கடைபரப்பிய பச்சைப் பொய்களை தோலுரிப்பவர்களை சமூக வலைத்தளங்களில் மொய்த்துக் கொள்ளும் கூலி கும்பல், கேள்வியெழுப்புபவர்களை “தேச துரோகிகள்” என ஊருக்கு முந்திக் கொண்டு முத்திரை குத்தும் சோதித்தறியப்பட்ட நம்பகமான “தேச பக்த” வழிமுறையை இங்கும் பிரயோகிக்கின்றனர்.

அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில் நிலவும் போதை அடிமைத்தனம் குறித்து வெளியாக உள்ள உ(ட்)த்தா பஞ்சாப் என்கிற பாலிவுட் திரைப்படம் தமது மாநிலத்தை கீழ்த்தரமாக சித்தரிப்பதாக கூக்குரலிடுகின்றனர் பாரதிய ஜனதா மற்றும் அகாலி தலைவர்கள். மேற்படி திரைப்படத்திற்கு ஆம் ஆத்மி கட்சி நிதியுதவி செய்திருப்பதாக தனக்கு ”செவி வழி” தகவல் ஒன்று கிடைத்ததாக எந்த ஆதாரமும் இன்றிக் கொளுத்திப் போடுகிறார் மத்திய தணிகைக் குழுவின் தலைவரான பங்கஜ் நிஹாலானி.

மத்தியில் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கைக் கொண்டு உ(ட்)த்தா பஞ்சாப் திரைப்படத்தை முடக்குவதற்கு செய்த முயற்சிகள் மற்றும் பங்கஜ் நிஹாலானியின் கோமாளித்தனமான உளறல்கள் ஊடகங்களின் மூலம் சந்தி சிரித்தது. இறுதியில் அதிகாரத்தின் துணையோடு படத்தை முடக்கும் முயற்சி ஊடகங்களின் மூலம் மக்களிடையே பரபரப்பான விவாதப் பொருளாக மாறியதோடு அறிவுத் துறையினரின் கடுமையான கண்டனங்களையும் பெற்றுள்ள நிலையில், உயர்நீதி மன்றம் அந்த திரைப்படத்திற்கு அனுமதியளித்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் நிலவும் போதை அடிமைத்தனம் குறித்து வெளியாக உள்ள உ(ட்)த்தா பஞ்சாப் என்கிற பாலிவுட் திரைப்படம் தமது மாநிலத்தை கீழ்த்தரமாக சித்தரிப்பதாக கூக்குரலிடுகின்றனர் பாரதிய ஜனதா மற்றும் அகாலி தலைவர்கள்.
பஞ்சாப் மாநிலத்தில் நிலவும் போதை அடிமைத்தனம் குறித்து வெளியாக உள்ள உ(ட்)த்தா பஞ்சாப் என்கிற பாலிவுட் திரைப்படம் தமது மாநிலத்தை கீழ்த்தரமாக சித்தரிப்பதாக கூக்குரலிடுகின்றனர் பாரதிய ஜனதா மற்றும் அகாலி தலைவர்கள்.

பாலிவுட்டின் வழமையான போலிப் பகட்டு மற்றும் மலிவான கவர்ச்சியைத் தாண்டி இத்திரைப்படம் எந்த வகையில் பஞ்சாபின் பிரச்சினைகளை அரசியல், சமூக மற்றும் பண்பாட்டுக் கோணத்தோடு அணுகியுள்ளது என்பது நமக்குத் தெரியாது. எனினும், அரசியல் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள தேசிய போதை போதாமல் உண்மையான போதை மருந்தையே ஆயுதமாக ஏந்திச் சுழற்றும் மத அடிப்படைவாத பாசிஸ்டுகளின் மீதான விமர்சனங்கள் இருக்குமா அல்லது வழக்கமான அரசியலற்ற என்.ஜி.ஓ புலம்பலாக இருக்குமா என்பதை படம் வெளிவந்த பின்னரே நாம் புரிந்து கொள்ள முடியும்.

மது போதைக்கு ஒரு மாநிலத்தையே ஆழ்த்தி வைத்திருப்பது தேர்தல் வெற்றிகளுக்கு உத்திரவாதமளிக்கும் வழிமுறையாக காவிகளின் தெற்கத்திய பங்காளியான ஜெயா ஏற்கனவே நிரூபித்துள்ளார். இந்து பாசிஸ்டுகளோ தேசிய வெறி போதை, மத அடிப்படைவாத போதை, சாதி ஆதிக்க போதை ஆகிய வழக்கமான உத்திகளோடு இப்போது நேரடியான போதை மருந்துகளையே கையிலெடுத்துள்ளனர்.

பரந்துபட்ட மக்களின் மீது பாசிஸ்டுகள் தொடுக்கும் நேரடித் தாக்குதல்களையும் விடுக்கும் நேரடியான சவால்களையும் முறியடிக்கும் வரலாற்றுக் கடமை புரட்சிகர ஜனநாயக சக்திகளின் முன்னுள்ளது. இவர்களை வீழ்த்த உடனடியாக களமிறங்கா விட்டால் நாம் ஒரு தலைமுறையையே காவு கொடுத்த குற்றத்திற்கு ஆளானவர்களாவோம்.

– தமிழரசன்

மேலும் படிக்க:

Drug Menace in Punjab Reaches Epidemic Proportions
The Youth In Punjab Is Addicted To This ‘Terror’ That’s Threatening The State’s Future
Why every political party in Punjab loves a drug addict
Golden Crescent – The Route Through Which Drugs Are Making Their Way Into Punjab
‘Drug hurricane’ lashing India’s Punjab
It’s time to end Punjab’s drug epidemic
High Way, Everywhere
The haze thickens
Why Censoring Udta Punjab Will Not Help Punjab
Liquor at 11, heroin at 14: Story of a drug addict who started too early
Punjab Drug Epidemic: Dark Days Ahead
After drugs flooded campaign in 2012, CEC rang alarm bells to PM

தருமபுரியில் பா .ம.க-வின் பலம் – நேரடி கள ஆய்வு

2
அன்புமணி மட்டும் - என்கிற அவருடைய வலைத்தில் அவரால் மட்டுமே மதுவிலக்கை கொண்டுவர முடியும்.

கொள்கையா, சாதியா, பணமா ? பென்னாகரம் தொகுதி நேரடி ரிப்போர்ட் 2

”மொத்தமா ஜெயிச்சி சி.எம்மா வருவாருன்னு நாங்க நினைக்கல… ஆனா எப்படியும் மாம்பழம் பத்து சீட்டு வரையும் பிடிக்கும்னு நம்பிக்கை இருந்துச்சு.. தீர்ப்பு வந்ததுலேர்ந்து தூக்கம் வரலே சார்.. சின்னய்யா தோத்து போவாருன்னு நாங்களே நினைக்கல.. காலனிக்கார பயலுங்க மொத்தமா காசு வாங்கிக்கினு சூரியனுக்கும் ரெட்டெலைக்கும் குத்திருக்காங்க”

அன்புமணி ராமதாசுக்கு மட்டும் இருக்கும் முதலமைச்சருக்கான சிறப்புத்தகுதிகள்
அன்புமணி ராமதாசுக்கு மட்டும் இருக்கும் முதலமைச்சருக்கான சிறப்புத்தகுதிகள்
படம் நன்றி : anbumani4cm வலைத்தளம்

கூத்தப்பாடி அர்ச்சுனனின் கண்கள் சிவந்திருந்தன… ஆத்திரத்தில் இருந்தார். ஊரைக் கிழித்து நுழையும் சாலையின் இடது புறம் வன்னியர்களின் வீடுகளும் வலதுபுறம் ஆதிதிராவிடர் காலனியும் எம்மை வரவேற்றன. தோற்றத்தில் இரண்டு புறமும் எந்த வேறுபாடுகளையும் காட்டவில்லை. ரேசன் கடையைத் தாண்டியதும் எதிர்பட்ட ஆலமர மேடையில் அர்ச்சுனனும் வேறு சிலரும் அமர்ந்து ஆடு-புலி ஆடிக் கொண்டிருந்தனர்.

”சரிங்க… வன்னியருங்க எல்லாரும் ஒன்னு சேர்ந்து அன்புமணிக்கே போட்டிருந்தாலும் அவரு ஜெயிச்சிருக்கனுமே?”

”அது தாங்க எங்களுக்கும் புரியல.. வன்னியருங்களே கட்சி மாறி ஓட்டு போட்டு துரோகம் பண்ணிருக்கானுங்க”

“நீங்க பா.ம.கவா?”

“இல்ல பாரதிய ஜனதா.. நாந்தான் இந்த ஊரு கிளைச் செயலாளர்?”

“நீங்க தாமரைக்கு ஓட்டுப் போடலையா?”

“சார்.. உண்மைய சொல்றேன்.. தாமரையெல்லாம் நம்ம ஊருக்கு ஆவாது சார். கீழ்மட்டத்துல இருக்கறவனுங்கள கவனிக்க மாட்றானுங்க. மாவட்டத்துல இருக்கறவனுங்களே மேலேர்ந்து வர்ற காசையெல்லாம் அமுக்கிக்கிறானுங்க.. மத்தவுங்களுக்கு அவுக்க மாட்றானுங்க.. அப்புறம் எப்படி கட்சி வளரும் சொல்லுங்க? அவுங்களே பொழச்சினு இருந்தா போதுமா?”

”வினாயகர் சிலையெல்லாம் கட்சி தானே கொடுக்குது?”

“அட நீங்க வேற சார்.. ஏதோ கட்சி இருக்கேன்றதுக்காக நாங்களே கைக்காச போட்டு வச்சினு இருக்கோம்”

அவரது வட்டத்தில் திமுகவுக்கே அதிக வாக்குகள் விழுந்திருந்தன. ஊரில் உள்ள மற்ற வார்டுகளிலும் தி.மு.க-வே அதிக வாக்குகள் பெற்றிருந்தது. நாங்கள் கூத்தப்பாடியின் வன்னியர்கள் பகுதிக்குள் சென்றோம். பரவலாக திமுகவுக்கு வாக்களித்திருந்தாலும் எவரும் வெளிப்படையாக யாருக்கு வாக்களித்தோம் என்பதை பேச மறுத்தனர். பா.ம.கவுக்கு வாக்களித்தவர்கள் மட்டும் வெளிப்படையாகச் சொன்னார்கள். பிற கட்சிகளுக்கு வாக்களித்த வன்னியர்களில் கணிசமானவர்கள் ஒரு பழக்கத்தின் அடிப்படையில் வாக்களித்துள்ளனர். எப்படியும் அன்புமணி ஜெயிக்கத் தான் போகிறார் நாம் ஏன் வழக்கத்தை மாற்ற வேண்டும் என்று கருதியிருக்கின்றனர்.

munusamy-nanjappan-inbasekaran
இன்பசேகரனும் (தற்போதைய திமுக வேட்பாளர்), நஞ்சப்பனும் (சி.பி.ஐ வேட்பாளர்) கே.பி முனுசாமியும்(அதிமுக) அன்புமணிக்கு ஓட்டுக் கேட்டு வேலை பார்த்தாங்க…

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற அன்புமணி, பென்னாகரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து மட்டும் சுமார் 90 ஆயிரம் வாக்குகள் பெற்றிருந்தார். சென்ற 2011 சட்டமன்றத் தேர்தலில் சி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த நஞ்சப்பன் வென்றிருந்தாலும், அதற்கு முன்பு 2010-ல் நடந்த இடைத்தேர்தலில் பா.ம.கவைச் சேர்ந்த ஜி.கே.எம் தமிழ்குமரன் (ஜி.கே மணியின் மகன்) போட்டியிட்டு 41 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றிருந்தார்.

உத்திரவாதமாக விழப்போகும் சாதி வாக்குகள் மற்றும் முதல்வர் வேட்பாளர் என்கிற நட்சத்திர அந்தஸ்தின் காரணமாக எப்படியும் வென்று விடுவோம் என்கிற நம்பிக்கையில் தான் அன்புமணி ராமதாஸ் பென்னாகரத்தைத் தெரிவு செய்திருக்க வேண்டும். நாங்கள் கள்ளிபுரத்தைச் சேர்ந்த உள்ளூர் திமுக பிரமுகர் சங்கரிடம் பேசினோம்.

“ஒரு முதல்வர் வேட்பாளரையே கவுத்திட்டீங்களே?”

”பென்னாகரம் எங்க கோட்டை அப்படின்னு ஆடினு இருந்தானுங்க.. அந்தக் கோட்டைல நாங்க ஓட்டை போட்டுட்டோமில்லே?”

”போன நாடாளுமன்றத் தேர்தலில் பென்னாகரம் பகுதியில் அன்புமணிக்கு நிறைய ஓட்டுக்கள் விழுந்ததே? இப்ப எப்படி குறைந்தது?”

“அவருக்கெல்லாம் ஜெயிக்கிற அளவுக்கு செல்வாக்கு கிடையாதுங்க. போன தேர்தல்ல வேற ஒருபிரச்சினை இருந்திச்சி. அது திவ்யா இளவரசன் பிரச்சினை பத்தி எரிஞ்சினு இருந்த சமயம்.. சாதிக்காரனெல்லாம் ஒன்னு சேர்ந்துகினாங்க. இதே இன்பசேகரனும் (தற்போதைய திமுக வேட்பாளர்), நஞ்சப்பனும் (சி.பி.ஐ வேட்பாளர்) கே.பி முனுசாமியும்(அதிமுக) அன்புமணிக்கு ஓட்டுக் கேட்டு வேலை பார்த்தாங்க… அப்பால இது கட்சிக்கு தெரிஞ்சு போகவுமே இன்பசேகரனை கொஞ்ச நாளைக்கு கட்சியை விட்டு நீக்கி வச்சிருந்தாங்க. இப்ப சமீபத்துல தான் திரும்ப கட்சிக்குள்ற வந்தாரு…”

தி.மு.கவுக்கு இருந்த குறைந்தபட்ச சொரணை உணர்ச்சி கூட சி.பி.ஐக்கு இல்லை என்பதால் நஞ்சப்பன் நடவடிக்கையின்றி தப்பிக் கொண்டார். சிட்டிங் எம்.எல்.ஏவான நஞ்சப்பன் தனது சொந்தக் கட்சித் தொண்டர்களிடமே மதிப்பிழந்து போக, இதுவும் ஒரு காரணம். சி.பி.ஐ கட்சியை சாதிக்கு அப்பால் வைத்துப் பார்த்தே பழகியவர்கள் ஒரு ஆழ்ந்த வெறுப்போடு அவரைக் குறித்துப் பேசினர். அதோடு சேர்த்து நில மோசடி விவகாரம் ஒன்றிலும் அவரது பெயர் அடிபடுகிறது. சாதி சார்பு, ஊழல் முறைகேடு விவகாரங்கள் மற்றும் தொகுதி மக்களை ஐந்தாண்டுகளாக எட்டிப் பார்க்காதது என்று எல்லாம் சேர்ந்து தேர்தலில் வெறும் ஐயாயிரத்தி சொச்சம் வாக்குகளோடு படு கேவலமான தோல்வியை சி.பி.ஐ கட்சிக்கு பரிசளித்துள்ளனர் மக்கள். மேலும் அவரது வெளிப்படையான வன்னிய சாதி சார்ப்பின் காரணமாக பிற சாதி வாக்குகளையும் இழந்திருக்கிறார்.

anbumani vinavu review 1”சாதியைச் சொல்லி ஜெவிச்சி வந்தாரு.. வந்த பின்னால என்னா செய்துட்டாரு?”என்கிறார் கலப்பம்பாடி கிராமத்தைச் சேர்ந்த மாதேஷ். கலப்பம்பாடி கன்னடம் பேசும் ஒக்கலிக சமூகத்தவர்கள் நிறைந்த கிராமம். பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கன்னடம் பேசும் ஒக்கலிகா மற்றும் குருபா இனத்தைச் சேர்ந்த சுமார் பதினைந்தாயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.

”வெறும் ரெண்டு வருசத்துக்கு முன்னே நீங்கெல்லாம் சேர்ந்து தானே அவரை ஜெயிக்க வச்சீங்க?”

“அட ஆமாங்க… நாங்கெல்லாம் போன எம்.பி தேர்தல்ல மாம்பழத்துக்குத் தான் ஓட்டுப் போட்டோம்.. இப்ப சூரியனுக்கு போட்டிருக்கோம்”

“ஏன் அன்னிக்கு மட்டும் பா.ம.க சாதி பார்க்கிற கட்சின்னு உங்களுக்குத் தெரியாதா?”

”தெரியும்.. அன்னிக்கு வி.சி பசங்க ரொம்ப ஆடினு இருந்தாங்க அதனால மாம்பழத்துக்குப் போட்டோம். இன்னிக்கு இவுங்க ரொம்ப ஆடறாங்க.. எலெக்சனுக்கு முன்னே இருபவது வயசுப் பசங்க ஒரு முப்பது நாப்பது பேரு மஞ்ச கொடிய தூக்கிக்கினு பைக்ல ’ஓஓஓ…”ன்னு கத்திட்டே ஓட்டுக் கேட்க வாரானுங்க.. ஊர்ல பொம்பளப் பசங்க இருப்பாங்களேன்னு கூட நினைச்சுப் பார்க்கலை.. ஜெவிக்கிறதுக்கு முன்னேயே இந்த ஆட்டம் போடறாங்களே… ஜெவிச்சி வந்தா என்னா ஆட்டமெல்லாம் ஆட மாட்டாங்க? அதான் சூரியனுக்கு குத்திட்டோம்”

திவ்யா இளவரசன் பிரச்சினை பத்தி எரிஞ்சினு இருந்த சமயம்.. சாதிக்காரனெல்லாம் ஒன்னு சேர்ந்துகினாங்க
திவ்யா இளவரசன் பிரச்சினை பத்தி எரிஞ்சினு இருந்த சமயம்.. சாதிக்காரனெல்லாம் ஒன்னு சேர்ந்துகினாங்க

”நீங்கெல்லாம் காசுக்கு சோரம் போயிட்டீங்களாமே..”

“செருப்பால அடி… காசு குடுத்திருந்தாலும் குடுக்காமே போயிருந்தாலும் நாங்க சூரியனுக்குத் தான் போட்டிருப்போம். எங்கள விடுங்க… வி.சிகாரன் மக்கள் நல கூட்டணில தானே இருக்கான்? அவங்க கட்சி ஆளுங்களே காலனிக்கு வந்து சூரியனுக்கு போடச் சொல்லி கேட்னு போனாங்க.. அவங்கெல்லாம் காசுக்கா சோரம் போனாங்க?”

நாங்கள் நாயுடுக்கள் மற்றும் செட்டியார்கள் அடர்த்தியாக வாழும் எர்ரகொல்லனூர், எட்டியாம்பட்டி, கோடியூர் பகுதிகளுக்குச் சென்றோம். அங்கும் ஏறத்தாழ இதே மாதிரியான உணர்வுகளையே பார்க்க முடிந்தது. பாட்டாளி மக்கள் கட்சி வென்றால் வன்னிய இளைஞர்களின் கொட்டத்தை அடக்க முடியாமல் போய் விடும் என்று பிற இடைநிலைச் சாதியினர் வெளிப்படையாகவே அஞ்சுகின்றனர்.

வன்னியர்களில் முப்பத்தைந்து வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் பிற கட்சியின் ஆதரவாளர்களாக இருக்கும் அதே நேரம், இருபத்தைந்து வயதுக்குட்பட்ட இளைஞர்களில் கணிசமானோர் தீவிர பா.ம.க ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். பா.ம.கவால் எப்படி சாதி இளைஞர்களை குறிவைத்து வளைக்க முடிந்தது?

இது குறித்து அப்பகுதியில் செல்வாக்கோடு செயல்பட்டு வரும் விவசாயிகள் விடுதலை முன்னணியின் வட்டாரச் செயலாளர் கோபிநாத்திடம் பேசினோம். அவர் ஒரு சராசரி வன்னிய இளைஞனின் வாழ்க்கையை விளக்கினார்.

ஒரு படிக்காத வன்னிய இளைஞர் பெரும்பாலும் இருபதுகளின் துவக்கதிலேயே திருமண வாழ்க்கையில் நுழைந்து விடுகிறார். திருமணமான உடனேயே குடும்ப பொறுப்புகள் வந்து சேர்ந்து விடுகின்றது. விவசாயம் லாபகரமான தொழிலாக இல்லை. மழையை நம்பி நடக்கும் மானாவரி விவசாயத்தை அநேகமாக வயதானவர்களே கவனித்துக் கொள்கிறார்கள். இளம் வயதிலேயே திருமணம் முடித்த வன்னிய இளைஞன் தனது மனைவியோடு பெங்களூரு, கோவை அல்லது திருப்பூர் போன்ற பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து விடுகிறார். குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய தேவையிருப்பதால் வம்புதும்புகளுக்குப் போவதில்லை.

கல்லூரிப் படிப்பு முடிக்கும் இளைஞர்களின் வாழ்க்கை வேறு மாதிரியாக உள்ளது. இளங்கலை முடிக்கும் ஒரு மாணவர் இருபத்தொன்று அல்லது இருபத்திரண்டு வயதில் கல்லூரியில் இருந்து வெளியே வருகிறார். படிப்புக்கு ஏற்ற வேலை வழங்கும் தொழில் கட்டமைப்புகள் தருமபுரியில் இல்லை. ஓசூர் அல்லது பெங்களுரில் கிடைக்கும் வேலைகளும் ஐயாயிரத்திற்கும் குறைவான சொற்ப சம்பளத்தோடே வரவேற்கின்றன. அது மாதிரியான வேலைகளில் உடனடியாக சேரவும் மனமின்றி ஊரில் நண்பர்களோடு சேர்ந்து வெட்டியாக ஊர் சுற்றுவது, குடிப்பழக்கத்திற்கு ஆளாவது என்று இருபத்தைந்து அல்லது இருபத்தேழு வயது வரை சில ஆண்டுகளை வீணாக்குகிறார்கள்.

ஆதி திராவிடர் காலனி இளைஞர்களோடு சில்லறையான சச்சரவுகளில் ஈடுபடுவது, பெண்களை கிண்டல் கேலி பேசுவது, இதில் ஏதாவது சலசலப்பு ஏற்படும் போது உள்ளூர் சாதி அமைப்பை பாதுகாப்பிற்காக நாடுவது என்கிற போக்கில் வன்னிய இளைஞர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி இயல்பாக அறிமுகமாகிறது. இந்தப் பகுதி கிராமங்களில் இயங்கும் பா.ம.க கிளைகள் ”கட்சி சீட்டு” நடத்துகின்றன. சில ஆண்டுகளாக இவ்வாறு நடத்தப்படும் ”கட்சி சீட்டினால்” பல கிராமக் கிளைகளில் சில லட்சங்கள் வரை சேர்ந்துள்ளன.

கட்சி ஏதேனும் மாநாடு நடத்தினால் அதற்கு வாகனங்கள் ஏற்பாடு செய்வதற்கும், போக்குவரத்து செலவுகளுக்கும் இந்த தொகையைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். கூடுதலாக, மாநாடு அல்லது கட்சி நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போது அந்த ஊருக்கு அருகிலிருக்கும் சுற்றுலாத் தளங்களுக்குச் செல்வது போல் திட்டமிட்டுக் கொள்கிறார்கள். மூன்று அல்லது நான்கு நாட்கள் வெளியூரில் சுற்றும் போது நண்பர்களோடு குடித்துக் கும்மாளமடிப்பது இளைஞர்களை இயல்பாகவே ஈர்த்துள்ளது.

 மாநாடு அல்லது கட்சி நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போது அந்த ஊருக்கு அருகிலிருக்கும் சுற்றுலாத் தளங்களுக்குச் செல்வது போல் திட்டமிட்டுக் கொள்கிறார்கள். மூன்று அல்லது நான்கு நாட்கள் வெளியூரில் சுற்றும் போது நண்பர்களோடு குடித்துக் கும்மாளமடிப்பது இளைஞர்களை இயல்பாகவே ஈர்த்துள்ளது.
மாநாடு அல்லது கட்சி நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போது அந்த ஊருக்கு அருகிலிருக்கும் சுற்றுலாத் தளங்களுக்குச் செல்வது போல் திட்டமிட்டுக் கொள்கிறார்கள். மூன்று அல்லது நான்கு நாட்கள் வெளியூரில் சுற்றும் போது நண்பர்களோடு குடித்துக் கும்மாளமடிப்பது இளைஞர்களை இயல்பாகவே ஈர்த்துள்ளது.
படம் நன்றி : anbumani4cm வலைத்தளம்

மேலும் எங்காவது குடி போதையில் சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு காவல் நிலையத்திற்கு செல்ல நேர்ந்தால் தன் சார்பாக பேச ஒரு அமைப்பு வேண்டும் என்பதும் இவர்களை பா.ம.கவின் பக்கம் இழுக்கிறது. அடுத்து பொருளாதார ரீதியில் தலித்துகளுக்கும் வன்னியர்களும் பெரியளவிலான வேறுபாடுகள் இல்லை. பல்லாண்டுகளாக திட்டமிட்ட ரீதியில் ஊட்டப்பட்ட ஆண்ட சாதிய பெருமிதமும் பொருளாதார எதார்த்தமும் நேருக்கு நேராக முரண்படும் நிலையில், தமது மேலாதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்ளும் விதமாகவும் வன்னிய இளைஞர்கள் சாதி ரீதியில் அணி திரள்கின்றனர்.

பளிச் மேக்கப்புடனும் காதில் மாட்டிய ஹெட்போனுடனும் அன்புமணியை “நவீன” கோமாளியாக களமிறக்கிய ராமதாசுக்குத் தன் மகனை நேரடியாக ஆட்சிக் கட்டிலில் அமர்த்தும் நோக்கம் கனவில் கூட இருந்திருக்க வாய்ப்பில்லை. நாங்கள் பேசிய அளவில் இதை அந்தக் கட்சித் தொண்டர்களே வெளிப்படையாக ஒப்புக் கொள்கின்றனர். எப்படியும் ஒரு தொங்கு சட்டமன்றம் அமையும்; அப்போது நம்மிடம் ஒரு பத்திலிருந்து பதினைந்து சீட்டுக்கள் இருந்தால் சில அமைச்சரவை சீட்டுக்களோடு ஐந்தாண்டுகளுக்கு அற்பமான சில அரசியல் அலப்பறைகளை கூட்டிக் கொண்டும் அரசியல் அதிகாரம் வாரி வழங்கும் வாய்ப்புகளைக் கொண்டு பொறுக்கித் தின்று கொண்டுமிருக்கலாம் என்பதே மருத்துவர் திரு. தமிழ்குடிதாங்கியின் திட்டமாக இருந்திருக்க வேண்டும்.

அரசியல் கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தையை வாரிசுக்குக் கற்றுக் கொடுத்து விட்டுச் சென்று விடுவோமென்கிற ராமதாசின் திட்டம் இந்தத் தோல்வியோடு முற்றாக ஓய்ந்து விட்டது என்று சொல்வதற்கில்லை. தற்போதைய தேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும் கிடைத்திருக்கும் ஐந்து சதவீத வாக்குகளும், வன்னியர் ஓட்டுக்களும் ராமதாசின் நாவில் எச்சிலூறச் செய்யப் போதுமானவை. சிறந்த அரசாளுகை, வித்தியாசமான நலத் திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்கள் என்று ஒப்பனைக்காக ஒட்டியிருந்த மருவை தூக்கிக் கடாசி விட்டு அடுத்த நத்தம் காலனி எங்கே என்று தேடும் முயற்சியில் காடுவெட்டியை களமிறக்குவதற்கான வாய்ப்புகளை நாம் மறுக்க முடியாது.

ஏனெனில் பாட்டாளி மக்கள் கட்சி என்கிற கந்தல் துணியைப் போர்த்திக் கொண்டிருப்பது வன்னியர் சாதி சங்கம் தான். வன்னியர்களை சாதி ரீதியாக தனிமைப்படுத்துவது, வாய்ப்பிருந்தால் பிரச்சினைகளின் அடிப்படையில் பிற இடைநிலை ஆதிக்க சாதிகளின் தயவைப் பெறுவது, இதைச் சாதிக்க பொது எதிரியாக தாழ்த்தப்பட்ட மக்களை சித்தரிப்பதும் அதற்கான வழிமுறையாக இந்துத்துவ ‘லவ்ஜிஹாத்தின்’ தமிழ் வடிவமான ”நாடகக் காதலை” முன்னிருத்திக் கட்டுவதுமே ஓட்டுப் பொறுக்கவும் பதவி பொறுக்கவுமான உத்திரவாதமான செயல் தந்திரம் என்பதை ராமதாஸ் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளார்.

ராமதாஸ் போன்ற சாதி வெறியர்களின் எண்ணங்கள் நிறைவேறுவதற்கான களத்தை புதிய பொருளாதார கொள்கைகளே ஏற்படுத்திக் கொடுக்கின்றன. புதிய பொருளாதார கொள்கைகள் ஏற்றத்தாழ்வான வளர்ச்சியை பல்வேறு சமூகத் தட்டுகளிடையே (Social Strata) மட்டுமின்றி மாநிலங்களுக்கிடையேயும் ஒரே மாநிலத்தில் உள்ள பிரதேசங்களுக்கிடையும் ஏற்படுத்தியுள்ளது. மக்களை தங்கள் பாரம்பரிய வாழிடங்களில் இருந்து கொத்துக் கொத்தாக பிடுங்கியெறிகிறது. நகர்புறங்களுக்கு மலிவான அத்துக்கூலிகள் வந்து குவிவதை உத்திரவாதப்படுத்த உள்ளூரில் வாழும் வாய்ப்புகளை ஈவிரக்கமின்றி அழித்தொழிக்கிறது.

anbumani vinavu review 2”வன்னியர் பெல்ட்” என்று சொல்லப்படும் தர்மபுரி மாவட்டமோ இதற்கு துலக்கமான எடுத்துக்காட்டாக உள்ளது. சொந்த மண்ணில் பிழைக்கும் வழிகள் அடைபட்டுப் போயிருப்பதால் விட்டேத்தியான இளைஞர்கள் மிகச் சுலபமாக பா.ம.க போன்ற சாதி வெறி அமைப்புகளிடம் அடைக்கலம் தேடுகின்றனர். பற்றியெறியும் இந்த நச்சுச் சூழலில் டாஸ்மாக் சாராயம் எண்ணை வார்க்கிறது.

புராண காலத்தில் சமூக நீதி பேசிய தி.முக போன்ற திராவிட கட்சிகளோ தாங்கள் பெயரளவிற்குப் பேசிவந்த சமூக நீதி அரசியலின் அடியறுக்கும் வேலையை இந்த தாராளவாதக் கொள்கைகள் செய்வதைப் புரிந்து கொள்ளும் அரசியல் தெளிவின்றி அதையே வளர்ச்சி முன்னேற்றம் என்பதாக முன்வைக்கின்றன. அதுவும் மக்களின் நம்பிக்கையை இழந்திருப்பதால் இந்தச் சுற்றில் ஆம் ஆத்மி வகைப்பட்ட பிரச்சார உத்திகளிலும், பாரதிய ஜனதா துவங்கி வைத்த ஈவண்ட் மேனேஜ்மெண்ட் அரசியலிலும் நம்பிக்கை வைத்துக் களமிறங்கித் தோற்றுப் போனது தி.மு.க. ஏற்கனவே ஆளும் வர்க்க கட்சியாக சீரழிந்து விட்ட திமுகவிடம் இதற்கு மேல் கேஜ்ரிவாலின் “நம்ப வைத்துக் கழுத்தறுக்கும்” உத்தியைத் தவிற வேறெதுவும் இல்லை.

மக்களும் மக்களின் எதிரிகளும் மிகக் கூர்மையாக பிளவுபட்டு நிற்கும் இந்நிலையில் உழைக்கும் மக்களை சாதி ரீதியாக பிரிக்கும் இப்போக்கினை புரட்சிகர மற்றும் ஜனநாயக சக்திகள் முறியடிக்கவில்லை என்றால் நத்தம் காலனிகள் தொடர்ந்து எரிக்கப்படும். முன் எப்போதும் சந்தித்திராத சவாலான நீண்ட நெடிய போராட்டம் காத்திருக்கின்றது.

– வினவு செய்தியாளர்கள்.

விஜய் டி.வி-யின் வை ராஜா வை !

0
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி - சூர்யா

முதலில் விஜய் டி.வியும், பிறகு சன் டி.வியும் நடத்திய நடத்துகின்ற கோடீஸ்வரன் நிகழ்ச்சி குறித்து 15 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட கட்டுரை இது. மேற்கத்திய தொலைக்காட்சிகளில் இத்தகைய பரிசு வழங்கும் நிகழ்ச்சிகள் தினுசு தினுசாக உண்டு. அதன் மலிவான பிரதியாக தமிழ் தொலைக்காட்சிகள் நடத்தும் இந்த அபத்தங்கள் ஏதோ மாபெரும் அறிவுலக நடவடிக்கை போலவும், உழைத்து முன்னேறினால் கோடிசுவரனாக மாறலாம் என்றும் பிரமைகளை ஏற்படுத்துகின்றன. அதற்கு தமிழகத்தின் திரையுலக சந்தையை இழந்த இழக்கப்போகும் நட்சத்திரங்களை வைத்து விளம்பரம் செய்து கல்லா கட்டுகின்றனர். “வை ராஜா வை” எனும் மூணு சீட்டு மோசடியை பார்த்து முகம் சுளிக்கும் நமது அன்பிற்குரிய நடுத்தர வர்க்கம் இதை திகில் பட ஆர்வத்தோடு பார்ப்பதும், கலந்து  கொள்ள விரும்புவதும், கோடிசுவரனாக மாற கனவு காண்பதும்…………. என்னவென்பது?

– வினவு

ந்தைகளிலும், சினிமாக்கொட்டகைக ளின் வாயிலிலும் “வை ராஜா வை” என்று முனு சீட்டுக்காரனும், நாடா குத்துபவனும் கூப்பிடுவதைப் பார்த்திருப்பீர்கள். ஆர்வம், தயக்கம், பயம் என்ற பல்வேறு மன நிலைகளில் உள்ள பார்வையாளர்கள் 10, 20 பேர் அவனைச் சுற்றிக் குவிந்து நிற்பதையும் கண்டிருப்பீர்கள்.

இதே காட்சியை இப்படிக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். பல ஆயிரம் வாட் விளக்கொளியில் உயரமானதொரு மேடையில் உட்கார்ந்திருக்கிறான் மூணு சீட்டுக்காரன். கீழே அரங்கத்தில் சுமார் ஒரு கோடி மக்கள். தாத்தா முதல் பேரன் வரை குடும்பம் குடும்பமாக, கை வேலையைப் போட்டுவிட்டு ஓடிவந்து வேடிக்கை பார்க்க நிற்கிறார்கள். தாங்களும் பங்கேற்பதற்கு முண்டியடிக்கிறார்கள்.

சன் டிவி கோட்டீஸ்வரன் நிகழ்ச்சி - சரத் குமார்
சன் டிவி கோட்டீஸ்வரன் நிகழ்ச்சி – சரத்குமார்

கற்பனை செய்து பார்க்கவே வெட்கமாக இல்லையா? தமிழகத்திலும், இந்தியா முழுவதும், ஏன் உலகின் 80 நாடுகளில் நடந்து கொண்டிருப்பது இதுதான். உலகிலேயே அதிகமான பார்வையாளர்கள் இந்தியாவில் தானாம்.

சூது ஒன்றும் நமக்குப் புதிதில்லை. பெண்டாட்டியைப் பணயம் வைத்து சூதாடிய அரசன்முதல் அரசே முன்னின்று நடத்தும் லாட்டரிச் சீட்டு வரை, ஒரு வெகு நீண்ட பாரம்பரியம் நமக்கு உண்டு என்பது உண்மைதான். எனினும் ”இது ஒரு ஒழுக்கக் கேடு” என்ற மதிப்பீடு மக்களிடம் நிலவியதன் காரணமாகத்தான் “விழுந்தால் வீட்டுக்கு – விழாவிட்டால் நாட்டுக்கு” என்றொரு புதுமொழியை உருவாக்கி சூதாட்டத்தையே நாட்டுப்பற்றுள்ள நடவடிக்கையாகச் சித்தரிக்க வேண்டிய அவசியம் அரசுக்கு ஏற்பட்டது.

தமிழக அரசின் லாட்டரிச் சீட்டு முழக்கத்தை கேரடீசுவரன் முழக்கத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள். ‘நான் ரெடி நீங்க ரெடியா’ என்று கேட்பது பார்வையாளர்களை ஏதோ களத்துக்கு அழைப்பது போலவும் சவால் விடுவது போலவும் இல்லையா?

ஆம். குலுக்கல் சீட்டில் பரிசு பெற விரும்பும் அதிருஷ்டசாலிகளுக்கு இங்கே வேலையில்லை. திறமைசாலிகளுக்கு மட்டுமே வேலை. நான்கு விடைகளில் சரியானதை ஊகித்துச் சொல்வதும் ஒரு திறமைதானே எந்தக் குதிரை ஜெயிக்கும் என்று ஊகிப்பதும், எந்த நிறுவன்த்தின் பங்குகள் விலைபோகும் என்று ஊகிப்பதும் ஒரு திறமையில்லாமல் சாத்தியமில்லையல்லவா?

“ஐயோ, எவ்வளவு ஈசியான கேள்வி. இதுகூடத் தெரியல பாரு” என்று இருக்கையை விட்டுத் துள்ளுகிறான் தொலைக்காட்சி முன் அமர்ந்திருக்கும் இளைஞன். கேள்விக்கு பதில் சொல்லும் இளைஞர்களின் இத்தகைய பொதுவான ஆர்வம் ஒரு நொடியில் வேறொன்றாக மாறிவிடுகிறது. ”நமக்கு இவ்வளவு திறமை இருந்தும் சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பதா?” என்று கோடீசுவரனாவதற்கு விண்ணப்பம் போடுகிறார்.

பாலுறவு நடவடிக்கைகளைத் திரையில் பார்த்து, தானே அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டதைப் போலக் கிளர்ச்சியடையும் ரசிகன் திரையரங்கை விட்டு வெளியே வந்தவுடன் அதை மறந்து விடுவதில்லை. பாலியல் வன்முறையாகவும், பெண்களைத் துரத்துவதாகவும், பாலியல் வக்கிரமாகவும் அந்தக் காட்சிகள் சமூகத்திற்குள் மொழிமாற்றம் செய்யப்படுகின்றன. கண்ணெதிரில் மிகச் சுலபமாக ஒருவன் கோடீசுவரன் ஆகும் காட்சி, பத்து கேள்விகளுக்குப் பதில் சொல்லிவிட்டு பல லட்சங்களுடன் புறப்படும் காட்சி பார்வையாளனைச் சும்மா விடாது. நீலத் திரைப்படம் போல இது ஒரு நீலச்சூதாட்டம்.

ஐரோப்பாவில் இச்சூதாட்டம் புதிய பரிமாணத்திற்குச் சென்றுவிட்டது. இங்கே இந்தியாவில் நடக்கும் கோடீசுவரனில் ஜெயித்தவனைக் கண்டு பார்வையாளர்கள் வியக்கிறார்கள் அல்லது பொறாமைப் படுகிறார்கள். தோற்றவனைக் கண்டு கொஞ்சம் அனுதாபப்படுகிறார்கள்.

விசிலடித்து, ஊளையிட்டு, கைதட்டி. தோற்றவனைப் பலவகையிலும் அவமானப் படுத்தி அரங்கை விட்டு வெளியேற்றும் நிகழ்ச்சி இப்போது அங்கே ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது.

“முதல் சுற்றிலேயே தோற்றாலும் சரி, பாதி தூரம் வந்து தோற்றாலும் சரி, தகுதியும் திறமையும் இல்லாமல் கோடீசுவரனாகும் ஆசையை மட்டும் வைத்துக் கொண்டு ஆட்டத்திற்கு வரும் நபர்களாகவே அவர்கள் கருதப்படவேண்டும். இத்தகைய நபர்களுக்கு இரக்கம் காட்டக்கூடாது” என்பது பார்வையாளர்களிடம் உருவாக்கப்படும் மனநிலை.

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி - சூர்யா
விஜய் டிவி நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி – சூர்யா

“இப்படி அவமானப்படுத்தப் படுவதற்காகத் தோற்றவர்கள் கோபப்படக்கூடாது; மாறாக, எல்லா ஏளனங்களையும் அவமரியாதைகளையும் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டு அரங்கை விட்டு வெளியேறும் மனப்பக்குவம் அவர்களுக்கு இருக்க வேண்டும். இது பங்கேற்போரிடம் கோரப்படும் மனப்பக்குவம்.

“நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற முடியாமல் 95 மட்டுமே பெற்றதால், பொறியியல் கல்லூரியில் இடம் பிடிக்க முடியாத மாணவர்கள், விற்பனை இலக்கை எட்ட முடியாததால் வேலையிலிருந்து வெளியேற்றப்படும் விற்பனைப் பிரதிநிதிகள், உழைப்புச் சந்தையில் விலை போகாத தொழிலாளர்கள், சந்தைச் சூதாதட்டத்தின் விதிதெரியாமல் ஏமாந்து போண்டியாகும் விவசாயிகள் போன்றோர் மீது சமூகம் இரக்கம் காட்டத் தேவையில்லை. தோற்றவர்களும் தங்கள் தகுதியின்மை குறித்து குற்றவுணர்வு கொள்ள வேண்டுமேயன்றி கோபம் கொள்ளக்கூடாது” – இதுதான் இந்நிகழ்ச்சி உருவாக்க முனையும் சமூக உளவியல். சூதாட்டத்திலும் கொடியது இதுதான்.

நீங்கள் ரெடியா? போட்டியில் குதிப்பதனால் நீங்கள் ஒரு ரூபாய் கூட இழக்கப் போவதில்லை. உழைப்பு, நேர்மை, இரக்கம் போன்ற மதிப்பீடுகளை மட்டுமே இழப்பீர்கள். வென்றாலோ ஒரு கோடி!.

  • சூரியன்

புதிய கலாச்சாரம், ஜனவரி 2001.

மதுரவாயல் டாஸ்மாக் மூடப்பட்டது – மக்கள் போராட்டத்தின் வெற்றி !

0
போராடும் மக்கள்

சென்னை மதுரவாயல் பகுதியில் இருக்கும் ரேசன் கடை மற்றும் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் 100 மீட்டருக்குள்ளாகவே இருந்தது அந்த டாஸ்மாக் கடை. ஓராண்டுக்கு முன்புதான், ஓம்சக்தி நகரின் முனையில் முளைத்தது அந்த தகர சீட்டுகளால் ஆன டாஸ்மாக் கடை. சின்ன நொளம்பூர், நொளம்பூர், ஓம்சக்தி நகர் மக்களுக்கு வெளியுலகத்துடன் தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் அந்த டாஸ்மாக் கடை வழியாகத்தான் செல்ல வேண்டும். அன்றாடத் தேவைக்கு மளிகைப் பொருட்கள் வாங்க கடைவீதிக்கு செல்வதானாலும் சரி, இதர வேலைகள் அனைத்திற்கும் சென்னையின் பிற பகுதிகளுக்கு பயணிக்க வேண்டுமானாலும் சரி, வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்புவதானாலும் சரி அந்தக் கடையை கடந்து போகாமல் இருக்க முடியாது. சில நேரங்களில் ஓம்சக்தி நகர் இடுகாட்டிலிருந்து எரிந்தும் எரியாமலும் நாயால் கவ்வி இழுத்துவரப்பட்ட பிணங்களுடன், குடிகாரர்களும் போட்டி போட்டுக் கொண்டு பொதுச்சாலையை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பர்.

விடியற்காலை ஐந்து மணியிலிருந்து மதுரவாயல் போலீசு ஆசியுடன் கடை செயல்பட்டுக் கொண்டிருந்தது. பெருவாரியான உழைக்கும் மக்களை கொண்டுள்ள சின்ன நொளம்பூர், ஓம் சக்தி நகர் பகுதி மக்களின் தினக்கூலியை பெருமளவு தின்று கொழுத்துக் கொண்டிருந்தது அந்த பச்சை வர்ணம் பூசப்பட்ட டாஸ்மாக் கடை. கூவம் நதியின் கரையில் அமைந்திருந்த அந்த டாஸ்மாக் கடை வழியாக பெண்கள் தனியே செல்ல பயந்தனர். வாகனத்தில் செல்வோர் அச்சத்துடன் பயணித்தனர். அடிக்கடி விபத்துகளும், திருட்டுச் சம்பவங்களும் நடைபெற்றன. பகுதி மக்கள் குமுறினர்; கொந்தளித்தனர்; மீட்பரைத் தேடிக்கொண்டிருந்தனர்.

அப்போதுதான் அந்த பிரச்சனையில் நுழைந்தது மக்கள் அதிகாரம் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி. ஏற்கனவே தமிழகத்திலேயே முதன்முறையாக மக்களை திரட்டி டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கிய அழிவிடைத்தாங்கி போராட்ட அனுபவமும், ஆயிரக்கணக்கில் மாணவர்களைத் திரட்டி பச்சையப்பன் கல்லூரியில் டாஸ்மாக்கை நொறுக்கிய அனுபவமும் பு.மா.இ.மு.விற்கு இருந்தது. மக்கள் அதிகாரம் தொடர்ச்சியாக டாஸ்மாக் பிரச்சனைக்காக போராடியும் மேலப்பாளையூர் உட்பட சில பகுதிகளில் நிரந்தரமாக டாஸ்மாக் கடையை இழுத்து மூடியும் வந்துள்ளது. இவர்கள் இணைந்து மக்களை அணிதிரட்டினர். மீட்பர் வேறு யாருமல்ல உழைக்கும் மக்களாகிய நீங்கள்தான் என உணர்த்தியவாறு உழைக்கும் மக்களால் ஆன டாஸ்மாக் எதிர்ப்புக் குழு (நொளம்பூர் பகுதி) கட்டியமைத்தனர்.

மக்கள் அதிகாரத்தின் ஏப்ரல் 20 டாஸ்மாக் தலைமை அலுவலக முற்றுகையினைத் தொடர்ந்து மே 2-ம் தேதி பகுதி மக்கள் ஒன்று திரண்டு மே–5-க்குள் டாஸ்மாக் கடையை மூடக்கோரி வட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து மே 5-ம் தேதி தமிழகம் முழுக்க மக்கள் அதிகாரம் டாஸ்மாக்கிற்கு எதிராக நடத்திய போராட்டத்தின் ஒரு பகுதியாக மதுரவாயல் நொளம்பூர் டாஸ்மாக் கடையினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் டாஸ்மாக் எதிர்ப்பு குழுவினர்.

இந்தப் போராட்டத்தில்தான் சத்யா அம்மாவின் மண்டை உடைக்கப்பட்டது. நொளம்பூர் பகுதியை சார்ந்த பள்ளி மாணவர் ஆகாஷ் போலீசார் தாக்கியதில் மயக்கமடைந்தார். பெண்கள், குழந்தைகள் உட்பட பலரும் போலீசின் கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்தனர். போராட்டத்திற்கு முன்பாகவே மக்கள் அதிகாரம் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல் செழியனின் கை, கால்கள் உடைக்கப்பட்டன. நொளம்பூர் பகுதி பு.மா.இ.மு செயலாளர் தோழர் கணேசன் கடுமையாக தாக்கப்பட்டார். பு.மா.இ.மு பச்சையப்பன் கல்லூரி மாணவர் வாசு கை முறிக்கப்பட்டது.

பகுதி உழைக்கும் மக்களின் பங்களிப்புடன் போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. கைது செய்து மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக மண்டபத்திற்கு வெளியிலும் போராட்டம் நடைபெற்றது. இன்னும் கூடுதலாக அதன்பின்னர் ஓட்டுக்கேட்டு வந்த அ.தி.மு.க, பகுஜன் சமாஜ், சி.பி.எம் கட்சியினரை ஊருக்குள் விடாமல் மக்கள் விரட்டியடித்தனர். மதுரவாயல் தொகுதியிலேயே குறைவான வாக்குப்பதிவு நடந்த இடமாக இருந்து தேர்தலையும் புறக்கணித்துள்ளனர் இவர்கள். கிட்டத்தட்ட ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பி பார்க்க வைத்த்து இவர்களின் போராட்டம். சுமார் இரண்டு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்தின் விளைவாகவும், தமிழகம் முழுக்க மக்கள் அதிகாரமும், பல்வேறு அமைப்பினரும், உழைக்கும் மக்களும் இணைந்து நடத்திய போராட்டங்களின் விளைவாகவும் 19-6-2016 அன்று மதுரவாயல் ரேசன்கடை டாஸ்மாக் மூடப்பட்டது.

நேற்று காலையில் டாஸ்மாக்கில் இருந்து சரக்குப்பெட்டிகள் லாரிக்குள் ஏற்றிக் கொண்டிருந்தபோது பு.மா.இ.மு தோழர் சாரதியுடன் உழைக்கும் மக்கள் அங்கு சென்று பார்வையிட்டனர். பார்வையிட்ட ஒவ்வொருவருக்கும் போராட்டத்தின்போது தாங்கள் வாங்கிய அடிகளும், போலீசின் அராஜகமும்தான் நினைவிற்கு வந்தன. கடையை காலி செய்து கொண்டிருந்தவர்களிடம் விசாரிக்கும்போது எல்லாம் “நீங்க செஞ்ச போராட்டத்தாலதான் கடையை மூடுறாங்க” என தெரிவித்தபோது அந்த வலி இன்பமாக மாறிப்போனது.

போராட்டத்தில் கலந்துக்கொள்ளாது போராட்டத்தை கொச்சைப்படுத்திய ஒவ்வொருவரும் பு.மா.இ.மு சாரதியையும், கணேசனையும் சந்தித்து வருத்தம் தெரிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். ஓம்சக்தி நகரில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோதுதான் வெற்றிவேல் செழியனை போலீசு அடித்து இழுத்து சென்றிருந்தது. அப்போது தங்களால் போலீசை தடுத்து அவரை மீட்க முடியவில்லை என்பதை உண்மையான வருத்தத்துடன் தெரிவித்துக் கொண்டனர் அப்பகுதி மக்கள்.

போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகத்திற்கு பேட்டியளித்திருந்த அபிராமி அம்மா நம்மிடையே அவரின் அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டார். அருகிலிருக்கும் குடியிருப்பில் வீட்டுவேலை செய்துவருகிறார் அவர். அவர் வேலை செய்யும் வீட்டின் உரிமையாளர் ஒருபோதும் இவரிடம் ஒருவார்த்தை பேசியதில்லை. சிறிதும் சட்டை செய்ததில்லை. ஆனால் வேலைக்கு விடுப்பு போட்டுவிட்டு போராட்டத்தில் கலந்துக்கொண்டதன் மறுநாளே இவரிடம் அந்த வீட்டம்மா முதன்முறையாக பேசி வாழ்த்து தெரிவித்திருந்தார். அதேபோல் நேற்று வேலைக்கு சென்றபோது டாஸ்மாக் கடை மூடப்பட்டதை சொன்னபோது வேகமாக ஓடிவந்து இவரை கட்டியணைத்து வாழ்த்துகளை தெரிவித்தாராம் அந்த வீட்டம்மா. மேலும், “நீங்க வாங்கின அடி, உதை வீணாகலை. நீங்க ஜெயிச்சிட்டீங்க” என சொன்னதை நம்மிடம் சொல்லி நெகிழ்ந்து போனார் அபிராமி அம்மா. மேலும் இந்தப் போராட்டம் எங்கள் பகுதியின் டாஸ்மாக் பிரச்சனையை மட்டும் தீர்க்கவில்லை, சமூகத்தில் எங்களுக்காஅன அங்கீகாரத்தையும் அளித்துள்ளாதாக சொல்லி ஆனந்த கண்ணீர் சிந்தினார்.

டாஸ்மாக் கடைக்கு எதிரில் கடைபோட்டுள்ள கிரில் கதவு செய்யும் கடைக்காரரிடம் “என்னன்ணே எதிரிலே இருந்தது. போய் தண்ணி குடிச்சிட்டு வர மாதிரி அப்பப்போ சாப்ட்டுட்டு இருந்தீங்க இப்ப மூடிட்டாங்க, இனி என்ன பண்ணப்போறீங்க?” என கிண்டலாக பகுதியைச் சார்ந்த ஒருவர் கேட்டதற்கு, “இது மூடனதுல எனக்கும் சந்தோசம்தான். இதுக்கு முன்னாடி சம்பாதிக்கிறதுல 300, 400 ரூவா இதுக்கே போய்டும். ஆனா இனிமே அப்படி பணம் போகாது, வேற கடைக்கு தேடிப்போனாலும் 100ரூவா தாண்டாது. என்னவிட என் வீட்டுக்காரிக்குதான் சந்தோசம்” என சொல்லியுள்ளார்.

ஆனால் இந்தக் கடை மூடப்பட்டது மட்டுமே சாராயப் பிரச்சனையை முழுமையாக தீர்த்துவிடாது என்பதை இப்பகுதி மக்கள் தெளிவாகவே உணர்ந்துள்ளனர். இந்த பகுதியில் கடை மூடப்பட்டால் வேறு பகுதிக்கு குடிக்கச் செல்வர். அதனால் ஒட்டுமொத்தமாக டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடினால் மட்டுமே நிரந்த தீர்வு கிடைக்கும் என்பதுதான் இவர்களின் நிலைப்பாடாக உள்ளது. அதோடு குடிகாரர்களை மீட்டெடுக்க மாநிலம் முழுவதும் மறுவாழ்வு மையங்களை திறக்கவேண்டும் எனவும் கோரி வருகின்றனர். இந்தக் கடை மூடப்பட்டது மட்டுமே தீர்வல்ல ஆனால் அதே நேரத்தில் மக்கள் அதிகாரத்தின் போராட்டங்கள் இல்லாமல் இந்தத் தீர்வும் நமக்கில்லை என்பதை உணர்ந்தே அடுத்தகட்ட போராட்டத்திற்கு தயாராகி வருகிறது டாஸ்மாக் எதிர்ப்புக்குழு (நொளம்பூர் பகுதி) மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பினர்.

அருகிலிருக்கும் மற்ற பகுதி மக்களை பார்த்து, “எங்க இடத்துல நாங்க ஒண்ணு சேர்ந்து கடையை மூடிட்டோம். நீங்க எப்போ ஒண்ணு சேரப்போறீங்க” என கேட்கின்றனர் டாஸ்மாக் எதிர்ப்பு குழுவினர் ஒவ்வொருவரின் முகத்திலும் தாங்கள் போராடியதன் பெருமிதமும், அடுத்தடுத்த பிரச்சனைகளுக்கு போராட தயாராக உள்ள போர்க்குணமும் தெரிந்தது.

வினவு செய்தியாளர்கள், சென்னை.

காவிகள் நடத்தும் அழிவுகள் – கேலிச் சித்திரங்கள்

0
பாசிஸ்டுகளின் சங்கம்

பாசிஸ்டுகளின் சங்கம்

பாசிஸ்டுகளின் சங்கம்
பாசிஸ்டுகளின் சங்கம்
மோடி :ஹலோ சகோதரா ஹிட்லர்! இன்று என்னுடைய ஆட்சியின் இரண்டாமண்டு நிறைவடைகிறது. இரண்டே ஆண்டுகளில் என்னுடைய இந்தியா உன் ஜெர்மனியைப் போல் இருப்பதைப் பார்!
டொனால்ட் ட்ரம்ப்: நண்பா! நான் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பொறுத்திருங்கள். பிறகு இரண்டே மாதங்களில் ஹிட்லர் பாணி தான்!
சவுதி அரசர் சல்மான்: வா.. ஹாபி.. நாங்கள் சவுதியில் ஹிட்லர் பாணி தான் அமல்படுத்துகிறோம்..
ஹிட்லர்: ஒரு நாள் மக்கள் உங்களுக்கெதிராக கிளர்ந்தெழுவார்கள். பின்னர் எல்லாமே என்னுடைய பாணியிலேயே முடிவுக்கு வரும்.நன்றி : Rebel Politik Arun
—————————————————————–
 புதிய கல்விக் கொள்கை – 2015
புதிய கல்விக் கொள்கை - 2015
புதிய கல்விக் கொள்கை – 2015

உலக வர்த்தக கழகத்தின் ‘ஒப்புதல்’ பெற்ற புதிய கல்விக் கொள்கை – ஆர்.எஸ்.எஸ்-ன் கழிவு

நன்றி : Rebel Politik Arun

——————————————————————————

கருப்பினத்தவர்களுக்கு எதிரான இனவெறி

கருப்பினத்தவர்களுக்கு எதிரான இனவெறி
கருப்பினத்தவர்களுக்கு எதிரான இனவெறி

இந்திய அரசு: இவை தனித்தனியான நிகழ்வுகளே. ஊடகங்களின் மிகைப்படுத்தல்களே, இனவெறி அல்ல!

நன்றி : Rebel Politik Arun

———————————————————

ஏராளமான கேள்விகள் கேட்பதால் பேரா. சாய்பாபா, அருந்ததி ராய் இருவரும் ‘தேச விரோதிகள்தான்’

பேரா. சாய்பாபா மற்றும் அருந்ததி ராய்:
பேரா. சாய்பாபா மற்றும் அருந்ததி ராய் : ஏராளமான கேள்விகள் கேட்பதால் இவர்கள் ‘தேச விரோதிகள்தான்’!

நன்றி : Rebel Politik Arun

 ————————————————————–

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி அழிவு கம்பெனி.

ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி அழிவு கம்பெனி.
ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி அழிவு கம்பெனி.

எச்சரிக்கை – அழிவு வேலை நடைபெறுகிறது.

வேலையின் தன்மை: பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் ஜனநாயகத் தனமை அழிப்பது.

  • எல்லா பார்வையாளர்களும் மனுஸ்மிதி இராணியின் அலுவலகத்தில் அனுமதி பெறவேண்டும்.
  • காக்கி டவுசர் அணிய வேண்டும்.
  • காரண – காரியம் மற்றும் மனித தன்மை போன்றவை கண்டிப்பாக தடை செய்யப்படுகின்றன.நன்றி : Rebel Politik Arun

    ————————————————————-

    மோடி : கார்ப்பரேட் இந்தியாவின் புதிய விற்பனைப் பிரதிநிதி

    மோடி : கார்ப்பரேட் இந்தியாவின் புதிய விற்பனைப் பிரதிநிதி
    மோடி : கார்ப்பரேட் இந்தியாவின் புதிய விற்பனைப் பிரதிநிதி

    நன்றி : Rebel Politik Arun

    ————————————————————–

    தாத்ரி : முகமது அக்லக்- மீள் கொலை!

    தாத்ரி : முகமது அக்லக்- மீள் கொலை!
    தாத்ரி : முகமது அக்லக்- மீள் கொலை!

    கோமாதாவுக்கு ஜெய் !

    ஐயா, நாம் ஏற்கனவே தாத்ரியில் கொன்ற மாட்டிறைச்சி உண்டவரின் தலையை நான் கொய்துவிட்டேன்!

    நன்றி : Rebel Politik Arun

    ————————————————————–

    ஹிந்து பாசிசம் : இந்தியாவின் அரச முகம்.

    ஹிந்து பாசிசம் : இந்தியாவின் அரச முகம்.
    ஹிந்து பாசிசம் : இந்தியாவின் அரச முகம்.

    நன்றி : Rebel Politik Arun

வினவு கேலிச்சித்திரம் – பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட கேலிச்சித்திரங்கள்.

இணையுங்கள்:

இது அம்பானிகளின் தேசம் !

1

”நாம் கட்சிகளைப் பார்க்கத் தேவையில்லை. நல்ல வேட்பாளர்களாகப் பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும். ஊழல் செய்யும் கட்சிகளை ஓட்டுப் போடுவதன் மூலம் தண்டித்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதே போல், ஒரு சில அதிகாரிகள் லஞ்ச ஊழல் புரியும் அயோக்கியர்களாக இருக்கலாம். ஆனால், நல்ல அதிகாரிகளும் இருக்கிறார்கள். சகாயம், உமா சங்கரைப் போல. அவர்களைப் போன்ற அதிகாரிகளைப் போற்ற வேண்டும். இங்கே சட்டத்தின் ஆட்சி நிலவுகிறது. ஒருவேளை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தவறு செய்தால் நீதி மன்றத்தை நாடலாம். கட்டாயம் நீதி வெல்லும். சத்ய மேவ ஜெயதே. ஜெய் ஹிந்த்”.

என்றெல்லாம் நம்மைச் நம்பச் சொல்கின்றன முதலாளிய ஊடகங்கள். இந்த இன்பக் கனவு அவ்வப் போது கலையும் போதெல்லாம் யாராவது ஒரு அண்ணா ஹசாரே – அரவிந்த் கேஜ்ரிவாலை களமிறக்கி கழுத்தில் ஈரத் துணியைச் சுற்றுகின்றன ஊடகங்கள் – கத்தியோடு பின் தொடர்கிறார் மோடி.

உண்மை என்ன?

நாம் ஒரு மேட்ரிக்ஸ் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இங்கே அரசு எப்படி நடக்கிறது, அதிகாரிகள் எப்படிச் செயல்படுகிறார்கள், அரசியல்வாதிகள் எப்படிச் செயல்படுகிறார்கள், அரசியல் கட்சிகள் எப்படிச் செயல்படுகின்றன, நீதிபதிகள் எப்படிச் செயல்படுகின்றனர், நீதி மன்றங்கள் எப்படிச் செயல்படுகின்றன, அங்கே கிடைக்கும் “நீதி” எத்தகையது, அரசின் திட்டங்களும் நிதிக் கொள்கைகளும் யாருக்காக, எப்படி வகுக்கப்படுகின்றன – எப்படிச் செயல்படுத்தப்படுகின்றன, இவற்றையெல்லாம் யார் இயக்குவது என்பதைக் குறித்த உண்மைகள் மிக அரிதான தருணங்களில் ’கசிந்துள்ளன’.

சுமார் ஏழாண்டுகளுக்கு முன் அவ்வாறு வெளியானது தான் நீரா ராடியா நடத்திய பேரங்களின் இரகசிய தொலைபேசி உரையாடற் பதிவுகள்.

இதோ இப்போது அதனினும் அசிங்கமான சில உண்மைகளை அவுட்லுக் மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன.

எஸ்ஸார் டேப்ஸ்

essar
படம் நன்றி : அவுட்லுக்

அல்பசித் கான் என்பவர் எஸ்ஸார் குழுமத்தில் 1999 முதல் 2011-ம் ஆண்டு வரை தலைமைப் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்துள்ளார். ரூயா குடும்பத்தாரின் கட்டுப்பாட்டில் உள்ள எஸ்ஸார் குழுமம் எரிவாயு, இரசாயனம், தொலைதொடர்பு உள்ளிட்ட துறைகளில் கால் பதித்து இதே துறைகளில் உள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் சந்தைப் போட்டியாளராக உள்ளது.

எஸ்ஸார் நிறுவனத்தில்1999-ம் ஆண்டு பணிக்குச் சேரும் அல்பசித் கானுக்கு 2001-லிருந்து 2006-ம் ஆண்டு வரை இரகசியமான ஒரு பணி ஒப்படைக்கப்படுகிறது. எஸ்ஸார் குழுமத்தைச் சேர்ந்த பி.பி.எல் செல்பேசி சேவையைப் பயன்படுத்தும் சில முக்கியமான மத்திய அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், அப்போதைய பாரதிய ஜனதாவின் மத்திய அமைச்சர்கள் மற்றும் போட்டி நிறுவனமான ரிலையன்ஸ் அம்பானி சகோதரர்களின் தொலைபேசி உரையாடல்களை இரகசியமாக பதிவு செய்வதே அந்த இரகசிய உளவு வேலை.

அதை திறம்படஅல்பசித் கானும் நிறைவேற்றுகிறார். பதிவு செய்யப்பட்ட இரகசிய உரையாடல்களை தனது முதலாளிகளிடம் ஒப்படைத்ததுடன், தனது எதிர்கால பாதுகாப்பு கருதி தனியே பிரதிகள் எடுத்து பாதுகாத்துள்ளார். பின், உளவு வேலைக்கான தேவை முடிந்து போன நிலையில் 2011-ல் வேறு சில சில்லறைக் காரணங்களை முன்வைத்து அல்பசித் கான் வேலை நீக்கம் செய்யப்படுகிறார்.

அதன் பிறகு அல்பசித் கான், தன் வசம் உள்ள உரையாடற் பதிவுகளின் பிரதிகளோடு உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சுரேன் உப்பலை நாடுகிறார். பதிவு செய்யப்பட்ட இரகசிய உரையாடல்களை கேட்டு அதிர்ந்து போன சுரேன் உப்பல், உடனடியாக பிரதமர் மோடியின் அலுவலகத்திற்கும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கும் தகவல் தெரிவிக்கிறார். மேலும், எஸ்ஸார் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கு சட்டப்படியான நோட்டீஸ்களையும் அனுப்புகிறார்.

இதற்கிடையே சுரேன் உப்பலை சரிக்கட்டி இரகசியப் பதிவுகளை அமுக்கும் முயற்சியில் ரூயா சகோதரர்கள் நேரடியாக இறங்கியுள்ளனர். நேரடியாக பேரம் பேசிப் பார்த்தும் அவர் மசியாததால், தமது முன்னாள் ஊழியர் அல்பசித் கானை சரிக்கட்டி விடுகின்றனர். அதைத் தொடர்ந்து அல்பசித் கான் வழக்கறிஞர் சுரேன் உப்பல் உடனான தொடர்புகளை முறித்துக் கொள்கிறார். என்றாலும், தன் வசம் அல்பசித் கான் ஏற்கனவே வழங்கிய ஆதாரங்களை ஊடகங்களின் மூலம் அம்பலப்படுத்தியிருக்கிறார் சுரேன் உப்பல்.

என்ன சொல்கின்றன அந்த உரையாடல்கள்?

அம்பானி சகோதரர்கள்
அம்பானி சகோதரர்கள்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் உயரதிகாரி சதீஸ் சேத்திடம் 01.12.2002 அன்று பேசிய முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் தொடர்பான வழக்கு ஒன்றிற்காக பிரமோத் மகாஜன் மூலமாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை சரிக்கட்டுவது தொடர்பாக பேசியுள்ளார். மேலும் ரிலையன்ஸ் குழுமத்தின் மற்றுமொரு உயரதிகாரியும், ராஜ்ய சபை உறுப்பினருமான பாரிமன் நாத்வாதியிடம் பி.எஸ்.என்.எலின் செல்பேசிக் கட்டனங்கள் நிர்ணயிப்பதில் ரிலையன்ஸ் எவ்வாறு பங்காற்றியது என்று சதீஸ் சேத் விவரித்துள்ளார்.

தகவல் தொடர்புத் துறையின் முன்னோடியாக அன்று விளங்கிய பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம் எப்படி படிப்படியாக சீர்குலைக்கப்பட்டது, அதற்கு தேசபக்தி வேடம் போடும் பாரதிய ஜனதா எப்படி அடியாள் வேலை பார்த்தது என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. தரம்தான் தனியார் சேவை என்பது தான் தனியார்மய தாசர்களின் வாதம். ஆனால் அந்த தரத்தின் தரத்தை அம்பலப்படுத்துகிறது இந்த உரையாடல்.

மேலும், தனது போட்டி நிறுவனமான பி.பி.எல்லின் நிறுவனர் ராஜீவ் சந்திரசேகருக்கு 100- 200 கோடி ரூபாயை கொடுத்து செல்பேசி நிறுவனங்களின் கூட்டமைப்பை (COAI) ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சாதகமான முறையில் பிளவு படுத்தும் திட்டம் குறித்து அம்பானியும் சதீஸ் சேத்தும் விவாதித்துள்ளனர்.

அதே போல், 22.11.2002 அன்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் மற்றுமொரு உயரதிகாரியான சங்கர் அத்வாலிடம் பேசிய அம்பானி, தொலைத் தொடர்பு அமைச்சகத்தில் உள்ள சில கோப்புகளை களவாடியதன் மூலம் தாம் அரசுக்குச் செலுத்த வேண்டிய 1,300 கோடி ரூபாய் வரியைத் தவிர்த்துக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சுரேன் உப்பால்
சுரேன் உப்பால்
படம் நன்றி : அவுட்லுக்

 

மேலும், அப்போது தொலைத்தொடர்பில் ரிலையன்ஸ்சுக்கு போட்டியாளராக விளங்கிய சுனில் மிட்டலின் ஏர்டெல் நிறுவனத்திற்கு சாதகமாக அன்றைய பாரதிய ஜனதா அரசின் தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சர் பிரமோத் மகாஜன் எவ்வாறெல்லாம் தரகு வேலையில் ஈடுபட்டார் என்பது பல்வேறு உரையாடல்களின் மூலம் அம்பலமாகியுள்ளது. மகாஜன் தமக்கு கைக்கூலியாக இருப்பதற்கு பரிசாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை நிருபர் ஷிவானி பட்னாகரின் கொலை வழக்கில் மகாஜனுக்கு சாதகமாக நீதிமன்றத்தை வளைக்க அம்பானி நேரடியாக உதவி செய்துள்ளார்.

மேலும், அன்றைய பாரதிய ஜனதா அரசின் பெட்ரோலியத் துறை அமைச்சர் ராம் நாயக், ரியலைன்சுக்கு ஆதரவாக பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களை சீரழிப்பது குறித்து அம்பானிகள் நேரடியாக அமைச்சருக்கு வகுப்பே எடுத்துள்ளனர். கோதாவரி இயற்கை எரிவாயு – கே.ஜி பேசின் வழக்கில் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் அம்பானிகளுக்கு ஆதரவாக சரிக்கட்டியுள்ளனர். பாரதிய ஜனதாவின் முந்தைய ஆட்சிக் காலத்தில் பிரதமர் அலுவலகத்திலும் நிதியமைச்சகத்திலும் பணிபுரிந்த மத்திய அரசின் உயரதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் துணையோடு பட்ஜெட் அறிக்கையையே தமக்கு சாதகமாக மாற்றிக் கொண்டுள்ளனர். அமர் சிங்கின் துணையோடு பாரளுமன்ற உறுப்பினர்களை விலை பேசியுள்ளனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகளை பல்வேறு வழக்குகளுக்காக விலைக்கு வாங்கியுள்ளனர். பாராளுமன்ற நிலைக்குழுக்களில் யார் உறுப்பினராக இருக்கலாம், அது என்ன முடிவெடுக்க வேண்டும் என்பதையெல்லாம் அம்பானியே நேரடியாக தீர்மானித்துள்ளார்.

தொகுப்பாக பார்த்தால்,

இங்கே நிலவும் ஜனநாயகம் மக்களுக்கானதல்ல. நிதி, நீதி, நிர்வாகம், இராணுவம், போலீசு என்று அரசு கட்டமைப்பில் உள்ள ஒவ்வொரு அங்கமும் முதலாளிகளுக்கானதாகவே இருப்பது துலக்கமாக வெளிப்பட்டுள்ளது. மக்களின் இறுதி நம்பிக்கையாக உள்ள நீதிமன்றங்களோ அம்பானிகளின் கழிவறைகளாக உள்ளன. தேர்தலில் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்து அனுப்பும் பாராளுமன்றமோ அம்பானிகள் மலம் துடைத்துப் போடும் குப்பைத் தொட்டியாக உள்ளது.

மேற்கண்ட உரையாடல் பதிவுகள் வெளியாகி வாரங்கள் கடந்து விட்ட நிலையிலும் 56 இன்ஞ்ச் மார்பு கொண்ட பிரதமர் வாய் திறக்கவில்லை. “தின்னவும் மாட்டேன் தின்ன விடவும் மாட்டேன்” என்று வாய்கிழிய பேசி அதிகாரத்தைப் பிடித்த மோடி உண்மையில் நாட்டின் வளங்களைக் கொள்ளையடிக்கும் தரகு முதலாளிகளின் கைக்கூலி என்பது எண்ணற்ற சந்தர்ப்பங்களில் ஏற்கனவே அம்பலப்பட்டிருக்கிறது. அதானியின் விமானத்தில் பறக்கிறவர் மக்களுக்கு விசுவாசமாக இருப்பார் என்று யாரையும் இனி நம்ப வைக்க முடியாது.

தேர்தல், காங்-பா.ஜ.க, இதர கட்சிகள், பாராளுமன்றம், அதிகார வர்க்கம், நீதித்துறை அனைத்தும் முதலாளிகளின் சேவைக்கு காத்திருக்கும் அடிமைகள் என்று நிரூபிக்கப்பட்டு விட்டதால் நாம் மாற்றை இந்த அமைப்பில் தேட முடியாது.  மக்களை திரட்டி புதிய அமைப்பை படைப்போம்!

–    தமிழரசன்.

மேலும் படிக்க:

தமிழகத் தேர்தல் ஆணையம் : போயசு தோட்டத்தின் செக்யூரிட்டி !

1

ஞ்சாவூர், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தல்களை ரத்து செய்ததன் மூலம் குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை எனக் காட்டிக் கொண்டிருக்கிறது, தமிழகத் தேர்தல் ஆணையம். ஓட்டிற்குப் பணம் என்ற கழிசடை தேர்தல் பண்பாடு விளையாடியதில் தமிழகத்தின் மற்ற தொகுதிகளுக்கும் அரவக்குறிச்சிக்கும் அதிக வேறுபாடில்லை என்பது தமிழக மக்களுக்கும் தெரியும்; தேர்தல் ஆணையத்திற்கும் தெரியும். ஆனாலும், பணப் பட்டுவாடா நடந்ததைக் கையும் களவுமாக, ஆதாரத்தோடு பிடிக்க முடிந்ததால்தான் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளின் தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டதாகச் சிரிக்காமல் கூறுகிறது, தேர்தல் ஆணையம்.

கரூர்-அய்யம்பாளையத்தில் உள்ள அன்புநாதனின் உதவியாளர் சுதர்சன் வீட்டில் நடந்த சோதனையின்போது பெட்டிபெட்டியாகக் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள். (உள்படம்: அன்புநாதன் )
கரூர்-அய்யம்பாளையத்தில் உள்ள அன்புநாதனின் உதவியாளர் சுதர்சன் வீட்டில் நடந்த சோதனையின்போது பெட்டிபெட்டியாகக் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள். (உள்படம்: அன்புநாதன்)

பணப் பட்டுவாடாவைத் தடுக்கக் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் போன்ற முக்கிய பிரமுகர்கள் போட்டியிடும் 94 தொகுதிகளில் தலா 6 பறக்கும் படை; மற்ற தொகுதிகளில் தலா ஐந்து பறக்கும் படை; அவற்றுக்கு உதவியாக ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் 25 மண்டலக் குழுக்கள் – என தமிழகமெங்கும் 20,000 அரசு அதிகாரிகள், ஊழியர்களைக் கொண்ட 5,639 மண்டலக் குழுக்கள்; இப்பறக்கும் படைகளைக் கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 2 அல்லது 3 எஸ்.பி.க்களைக் கொண்ட குழு; இவற்றுக்கு அப்பால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு ஐ.ஆர்.எஸ். அதிகாரி தலைமையில் 9 பேர் கொண்ட வருமான வரித் துறையின் பறக்கும் படை – என உதார் காட்டி வந்தது, தேர்தல் ஆணையம். ஆனால், இந்தப் படைகளெல்லாம் மற்ற 232 தொகுதிகளில் நடந்த பணப் பட்டுவாடாவைப் பிடிக்க முடியாமல் எதைச் சொரிந்துகொண்டு நின்றன என்பதற்கு சர்வ வல்லமை பொருந்தியதாகக் கூறப்படும் தேர்தல் ஆணையம்தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

பாப்பிரெட்டிப்பட்டி, தருமபுரி தொகுதிகளுக்கான மேலிடப் பார்வையாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரசேகர குமார் நியமிக்கப்பட்டிருந்தார். தேர்தல் முடியும் வரை, அவர் அந்த இரண்டு தொகுதிகளில்தான் தங்கியிருக்க வேண்டும் என்பது தேர்தல் நடத்தை விதிமுறை. ஆனால், அவரை தருமபுரி மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் ஏற்காட்டில் தங்க வைத்திருக்கிறார்; தேர்தலுக்கு முதல்நாள் திருவண்ணாமலை, சிதம்பரம் எனச் சுற்றுலா சென்றுவர ஏற்பாடு செய்து அனுப்பி வைத்திருக்கிறார். மேலிடப் பார்வையாளர் ஆன்மீகப் பயணத்தில் திளைத்த சமயத்தில், அ.தி.மு.க. இந்த இரண்டு தொகுதிகளிலும் பணப் பட்டுவாடாவை நடத்தி முடித்ததாகவும்; தி.மு.க.வும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டதாகவும் அம்பலப்படுத்துகிறது, நக்கீரன் இதழ்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். பணப் பட்டுவாடாவைத் தடுக்க நியமிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட பறக்கும் படைகள் அ.தி.மு.க.வின் ஐந்தாம் படைகளாக வேலை செய்தன என்பது மட்டுமல்ல, தேர்தல் ஆணையமே அ.தி.மு.க.வின் ஏஜெண்டாகச் செயல்பட்டதை அன்புநாதன் மற்றும் கண்டெய்னர் விவகாரங்கள் அம்பலப்படுத்துகின்றன.

ec-jaya-servant-container-money
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட மர்ம கண்டெய்னர்கள்: ஜெயா-சசி கும்பல் கொள்ளையடித்துப் பதுக்கி வைத்த பணத்தைப் பாதுகாக்கும் போலீசு.

அ.தி.மு.க.வின் பணப் பட்டுவாடா மையமாக அன்புநாதன் இருந்ததும்; அவர் தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளுக்கும் பணத்தைக் கடத்திச் செல்வதற்கு கரூர் மாவட்டத் தேர்தல் அதிகாரியான மாவட்ட கலெக்டர் டி.பி.ராஜேஷ் தொடங்கி லோக்கல் இன்ஸ்பெக்டர் வரை மாவட்ட நிர்வாகமே உடந்தையாகச் செயல்பட்டதும் தேர்தல் ஆணையம் அறியாத ஒன்றல்ல. அதேசமயம், அ.தி.மு.க.விற்குள்ளும் அதிகாரிகள் மட்டத்திலும் நடந்த உள்குத்து காரணமாகத்தான் அன்புநாதன் வீட்டைச் சோதனையிட வேண்டிய கட்டாயமும் நெருக்கடியும் தேர்தல் ஆணையத்திற்கு ஏற்பட்டது.

சோதனையின் போதும், அதன் பிறகும் அன்புநாதன் விவகாரத்தை உப்புக்குப் பெறாத ஒன்றாக அமுக்கிவிடுவதில் அ.தி.மு.க. அரசும் தேர்தல் ஆணையமும் கூட்டுக் களவாணிகளாவே செயல்பட்டன. அன்புநாதன் வீட்டில் 250 கோடி ரூபாய் அளவிற்குப் பணம் இருந்ததாக எதிர்க்கட்சிகள் இன்றுங்கூடக் குற்றஞ்சுமத்துகின்றன. அன்புநாதன் குடோனில் கண்டெடுக்கப்பட்ட 12 பணம் எண்ணும் இயந்திரங்கள் இக்குற்றச்சாட்டை நிரூபிக்கும் சாட்சியங்களாக உள்ளன. ஆனால், தேர்தல் ஆணையமோ அன்புநாதனிடமிருந்து வெறும் பத்து இலட்ச ரூபாய்தான் கைப்பற்றப்பட்டதாகக் கூறி அம்பலப்பட்டு, பிறகு நான்கு கோடியே சொச்சமும் சில ரப்பர் பேண்டுகளும் கைப்பற்றப்பட்டதாகக் கூறிச் சமாளித்தது.

ec-jaya-servant-caption-1இந்தச் சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பணத்தைக் குறைத்துக் காட்டும்படியும், அங்கு கைப்பற்றப்பட்ட கண்காணிப்பு கேமிரா பதிவுகளை அழித்துவிடும்படியும் அரசு ஆலோசகரும் முன்னாள் டி.ஜி.பி.யுமான ராமானுஜம் மற்றும் டி.ஜி.பி. அசோக்குமார் ஆகியோர் கரூர் மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டேவுக்குக் கட்டளையிட்டதாகக் கசிந்துவந்த செய்தி குறித்தோ, கைப்பற்றப்பட்ட பணத்தை அன்புநாதனிடம் திருப்பிக் கொடுத்துவிடும்படி கரூர் மாவட்ட ஆட்சியர் கூறியது குறித்தோ, வந்திதா பாண்டேவைக் கொலை செய்ய முயற்சி நடப்பதாகக் கூறி ஒருவர் துப்பாக்கிகளோடு சரண் அடைந்தது குறித்தோ, தேர்தல் ஆணையம் எந்தவொரு விசாரணையும் நடத்தவில்லை.

அதேசமயம், அன்புநாதன் மீது ஓட்டுக்குப் பணம் கொடுத்தது தொடர்பான குற்றவழக்குப் பதியப்படாமல், இந்திய அரசின் முத்திரையைத் தவறாகப் பயன்படுத்தினார் என்ற மொன்னையான வழக்கு மட்டுமே தொடரப்பட்டது. இந்த வழக்கிலும் அன்புநாதனைக் கைது செய்யாத அ.தி.மு.க. போலீசு, அவரைத் ‘தலைமறைவாக’ச் செல்லும்படி வழியனுப்பி வைத்தது. முன்ஜாமீன் கேட்டு அன்புநாதன் மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் தாக்கல் செய்த வழக்கில், அதனை எதிர்த்து வாதிட வழக்குரைஞரை நியமிக்காமல் தேர்தல் ஆணையம் ஒதுங்கிக் கொண்டது. எதிர்த்து வாதிட வேண்டிய அரசு வழக்குரைஞரோ அன்புநாதனின் வழக்குரைஞராக நடந்து கொண்டார். உயர்நீதி மன்றமும் அன்புநாதன் கேட்டுக்கொண்டபடி, அன்புநாதனுக்கு முன்ஜாமீன் அளித்தது. அரசு, உயர்நீதி மன்றம், தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் கூட்டுக் களவாணித்தனம் காரணமாக, மிகத் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட வேண்டிய வழக்கில் நீதி கேலிக்கூத்தாக்கப்பட்டது.

ec-jaya-servant-police-money
காரைக்குடி அ.தி.மு.க. தலைமை அலுவலக வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணத்தைப் பறிமுதல் செய்யும் போலீசு.

அன்புநாதனின் கூட்டாளி மணிமாறன் மற்றும் அன்புநாதனின் உதவியாளர் சுதர்சன் வீடுகளில் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டாலும், அவை குறித்த விவரங்கள் வெளியிடப்படாமல் அமுக்கப்பட்டதோடு, அவர்கள் மீது வழக்கும் பதியப்படவில்லை. இது போன்று, சசிகலாவின் தாய்மாமன் தங்கவேலு, அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது உறவினர் கோழி பாலு, அமைச்சர்கள் தங்கமணி மற்றும் செல்லூர் ராஜுவின் பினாமிகள், சிட்லபாக்கம் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜேந்திரன், பொள்ளாச்சி வேட்பாளர் ஜெயராமனின் உறவினர் டாக்டர் மகேந்திரன், தருமபுரி அ.தி.மு.க. நிர்வாகி டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டுப் பல அ.தி.மு.க. பிரமுகர்களின் வீடுகளிலும் பண்ணைகளிலும் நடத்தப்பட்ட சோதனைகளும் எவ்வித மேல் நடவடிக்கைகளும் இன்றி அமுக்கப்பட்டன.

இத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளும் போட்டிபோட்டுக் கொண்டு ஓட்டுக்குப் பணம் கொடுத்தன என்றாலும், அ.தி.மு.க.வின் பணப்பட்டுவாடாதான் மையப்படுத்தப்பட்ட ரீதியில் பரவலாகவும் பிரம்மாண்டமானதாகவும் அரசு இயந்திரத்தின் துணையோடும் நடத்தப்பட்டது. கோவை வேளாண் பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே உள்ள அப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராமசாமியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையும், இரவு நேரத்தில் மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு நடத்தப்பட்ட பணப் பட்டுவாடாவும் அரசு இயந்திரம் அ.தி.மு.க.வின் கைக்கூலியாகப் பயன்படுத்தப்பட்டதை நிறுவுகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகுதியிலுள்ள ஒரு தனியார் பள்ளியிலிருந்து 3.40 கோடி ரூபாய்; காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.பகுதிச் செயலர் ரவியிடமிருந்து 4 இலட்ச ரூபாய்; பட்டுக்கோட்டை அருகேயுள்ள திட்டக்குடியைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் கோவிந்தராஜ் வீட்டிலிருந்து 49 இலட்ச ரூபாய்; தற்பொழுது தொழிலாளர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் நிலோஃபர் வீட்டிலிருந்து 14 இலட்ச ரூபாய்; சென்னை மாநகராட்சியின் 169-ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.கே.ஜெயச்சந்திரன் வீட்டிலிருந்து 40 இலட்ச ரூபாய்; ஆரணி தொகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் யுவராஜிடமிருந்து 25 இலட்ச ரூபாய் – என அடுத்தடுத்து அ.தி.மு.க. பிரமுகர்களிடமிருந்து கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்டாலும், இவர்களுள் ஒருவர்கூடக் கைது செய்யப்படவுமில்லை; இவர்கள் மீது எந்தப் பிரிவின் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது என்ற விவரமும் வெளியிடப்படவுமில்லை.

ec-jaya-servant-caption-2இவை அனைத்திற்கும் மேலாக, திருப்பூருக்கு அடுத்துள்ள செங்கம்பள்ளியில் கைப்பற்றப்பட்ட மூன்று கண்டெய்னர்களை, அவற்றுள் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் பணம் பதுக்கப்பட்டிருந்தது என்ற விவரத்தைக்கூடச் சொல்லாமல், சேர வேண்டிய இடத்தில் சேர்த்துத் தனது பொறுப்பை நிறைவேற்றிய தேர்தல் ஆணையத்தைக் கண்டு தமிழகமே விக்கித்துப் போனது.

இந்த மூன்று கண்டெய்னர்கள் குறித்து தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி உள்ளிட்டுப் பலரும் நியாயமான பல கேள்விகளை இன்றும் எழுப்பி வருகிறார்கள். “பணம் எடுத்துச் செல்லும் கண்டெய்னர்கள் ஏன் முத்திரையிடப்பட்டுப் பூட்டப்படவில்லை என்பது தொடங்கி ஸ்டேட் பேங்க் அதிகாரிகள் தமது பணம் என அறிவிப்பதற்கு 18 மணி நேரம் எடுத்துக் கொண்டது ஏன் என்பது வரையில்” எழுப்பப்பட்ட எந்தவொரு கேள்விக்கும் தேர்தல் ஆணையமோ, வருமான வரித் துறையோ, ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவோ இதுவரை எந்தவொரு பதிலையும் அளிக்கவில்லை. கள்ளத்தனமான மௌனத்தின் மூலம், கோயபல்சு பொய்களின் மூலம் உண்மையைக் குழிதோண்டிப் புதைத்துவிட முயலுகிறது, அதிகார வர்க்கம். ஆனால், கைப்பற்றப்பட்ட பணம் ஜெயா-சசி கும்பல் ஊரைக் கொள்ளையடித்துக் குவித்து வைத்துள்ள கருப்புப் பணம்தான் எனத் தமிழக மக்கள் நம்புவதற்கு ஆதாரங்களும் சாட்சியங்களும் உள்ளன.

ec-jaya-servant-commissioners
தேர்தல் ஆணையர்களா, ஜெயாவின் சொம்புகளா? (இடமிருந்து) தமிழகத் தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி, தமிழகத்தின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் சந்தீப் சக்சேனா மற்றும் பிரவீண் குமார்.

ஜெயா-சசி கும்பல் அவமானகரமான தோல்வியைச் சந்தித்த 1996 சட்டமன்றத் தேர்தல்கள் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த வேளையில், போயசு தோட்டத்திலிருந்து கண்டெய்னர் லாரிகள் வெளியேறிப் போன வரலாறைத் தமிழகம் இன்னும் மறந்துவிடவில்லை. தமிழகச் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியான சமயத்திலேயே ஜெயாவிற்குச் சொந்தமான சிறுதாவூர் பங்களாவிற்கு கண்டெய்னர் லாரிகள் வந்து போவது பற்றிய செய்திகள் புகைப்படத்தோடு வெளிவந்தன. அப்பொழுது அது குறித்து முறையான, நியாயமான விசாரணையை நடத்தாமல், சிறுதாவூர் பங்களாவில் பணம் பதுக்கப்படவில்லை என ஜெயா-சசி கும்பலுக்கு நற்சான்றிதழ் வழங்கிய தேர்தல் ஆணையம், இப்பொழுதோ முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைத்துவிட்டிருக்கிறது.

தமிழகத்தின் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பணத்தைக் கடத்திக் கொண்டு சேர்ப்பதற்கு இந்திய அரசின் முத்திரையை அன்புநாதன் தவறாகப் பயன்படுத்தினார் என்றால், ஜெயா-சசி கும்பலின் கருப்புப் பணத்தைக் கடத்துவதற்கு இந்திய அரசே உடந்தையாக இருந்திருக்கிறது. தேர்தல் ஆணையம் அதற்கு வாட்ச்மேனாக மாறி காவல் காத்து நின்றது.

ec-jaya-servant-caption-3இப்படி அ.தி.மு.க.வின் விசுவாச அடியாளாக நடந்துகொண்டு வரும் தமிழகத் தேர்தல் ஆணையம் தஞ்சாவூரிலும், அரவக்குறிச்சியிலும் நியாயமான முறையில் தேர்தலை நடத்தும் என நம்ப முடியுமா? அதற்காகத்தான் தேர்தலை ரத்து செய்திருக்கிறது எனக் கூற முடியுமா? அந்த இரண்டு தொகுதிகளின் தேர்தல்களை ஜூன் 13-க்குத் தள்ளி வைத்த தனது முதல் நடவடிக்கையின் மூலம், ஜெயா-சசி கும்பல் நான்கு நாடாளுமன்ற மேலவைத் தொகுதிகளையும் கைப்பற்றுவதற்கு ஏற்பாடு செய்து கொடுக்கும் ஏஜெண்டாகச் செயல்பட்டது. இப்பொழுது தேர்தல்களை ரத்து செய்திருப்பதன் மூலம், அத்தொகுதிகளின் தேர்தலைகளை இடைத் தேர்தலாக மாற்றி, அ.தி.மு.க.வின் அடாவடித்தனமான வெற்றிக்கு உத்தரவாதம் செய்து கொடுத்திருக்கிறது.

தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் குறித்து, அதனின் சுயேச்சைத் தன்மை குறித்து, அதனின் நடுநிலைத்தன்மை குறித்து பார்ப்பன அறிவுஜீவிக் கும்பல் கட்டமைத்த பிம்பங்களெல்லாம் நொறுங்கிப் போய், ஆணையத்தின் கையாலாகத்தனம், அதனின் ஒருதலைச் சார்பு, அதனின் மக்கள் விரோத, ஜனநாயக விரோதத் தன்மை எல்லாம் அம்பலமாகி, அது அம்மணமாக நிற்பதைத் தமிழகம் காண்கிறது. அரசின் எல்லா உறுப்புகளும் தம் நம்பகத்தன்மையை இழந்து நாறிவிட்டன. மக்களின் ஜனநாயக உரிமைகள் அனைத்தும் படிப்படியாகப் பறிக்கப்படுகின்றன. இது ஜனநாயக நாடு என்று காட்டிக்கொள்வதற்கு வெகுசன வாக்குரிமை மட்டுமே எஞ்சியிருந்தது. அந்த மயக்கத்தையும் தேர்தல் ஆணையமே ஒழித்து விட்டது.

– குப்பன்

பெட்டிச் செய்தி

ஒரு போலி வாக்காளருக்கு ஒரு ரூபாய் -ஆணையத்தின் போங்காட்டம்!

.தி.மு.க. தனது வெற்றிக்கு கோடிக்கணக்காகப் பணத்தை மட்டுமல்ல, இலட்சக்கணக்கான போலி வாக்காளர்களையும் இறக்கியிருக்கிறது. பணப் பட்டுவாடா குறித்து மூக்கைச் சிந்திய ‘நடுநிலை’ பத்திரிகைகளுள் ஒன்றுகூட இப்போலி வாக்காளர் முறைகேடு குறித்து கண்டு கொள்ளவில்லை. காரணம், போலி வாக்காளர் சேர்ப்பு என்பது அ.தி.மு.க.வின் தனிப்பட்ட, போட்டியற்ற ராஜாங்கமாக இருந்ததுதான்.

ec-jaya-servant-bogus-voters2009-2014-ம் ஆண்டுகளில் இந்தியாவின் வாக்காளர் எண்ணிக்கை சராசரியாக 13.6 சதவீதம் அளவிற்கு உயர்ந்தபொழுது, தமிழக வாக்காளர் எண்ணிக்கையோ 29.1 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. அக்கால கட்டத்தில் மட்டும் தமிழகத்தில் 1.21 கோடி புதிய வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வாக்காளர் சேர்க்கை எண்ணிக்கை தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஒத்துப் போகவில்லை எனக் குறிப்பிடுகிறது, நக்கீரன்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட நாள் தொடங்கியே போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் எனத் தமிழகத் தேர்தல் ஆணையத்திடம் கோரி வந்தது, தி.மு.க. பா.ம.க.வும் இம்முறைகேடு குறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டது. தேர்தல் ஆணையர் லக்கானி இம்முறையீட்டைக் கண்டுகொள்ளாமல் ஒதுக்கித் தள்ளவே, ஒரு வாக்காளர் பெயர் 13 இடங்களில் இருந்த ஆதாரங்களோடு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது, தி.மு.க. இதன் பிறகு, சென்னை உள்ளிட்டு தமிழகமெங்கும் 6.5 இலட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக அறிவித்தது, தேர்தல் ஆணையம்.

இதன் பிறகும் 32 இலட்சம் போலி வாக்காளர்களைத் தேர்தல் ஆணையம் தனது பட்டியலில் இருந்து நீக்காமல் வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தி இந்து ஆங்கில நாளிதழுக்கு நேர்காணல் அளித்திருக்கும் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி, அதில், “திருவாரூர் தொகுதியில் மட்டும் 11,036 போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும், ஆவடி, கொளத்தூர், திருப்போரூர், பாலக்கோடு, வன்னூர், திருப்பூர்(தெற்கு), பல்லடம், உடுமலை, குன்னம் உள்ளிட்டுப் பல தொகுதிகளில் போலி வாக்காளர்கள் மிதமிஞ்சிய அளவில் சேர்க்கப்பட்டிருந்ததை தி.மு.க. கண்டுபிடித்ததாக”க் குறிப்பிட்டுள்ளார்.

பிரவீண் குமார் தமிழகத் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த காலத்தில்தான், அவரின் ஒத்துழைப்போடு அ.தி.மு.க. போலி வாக்காளர்களைச் சிறுகச்சிறுகச் சேர்த்திருக்கிறது. இதற்கு கைமாறாக, அவருக்கு ரூ.85 இலட்சம் மதிப்புள்ள வீடு செப்.2012-இல் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே நொய்டாவில் அவருக்கு வீடு இருந்தும், அ.தி.மு.க. அரசு விதிமுறைகளை மீறி அவருக்கு சென்னையில் வீடு ஒதுக்கியிருக்கிறது. வீட்டை வாங்கிய 16 மாதங்களுக்குள் 40 இலட்ச ரூபாயைத் திரும்பச் செலுத்தியிருக்கிறார், பிரவீண் குமார். வெறும் 75,300 ரூபாய் மாதச் சம்பளம் வாங்கிய அதிகாரி, ஒன்றரை வருடத்திற்குள் 40 இலட்ச ரூபாயைத் திரும்பச் செலுத்தியிருக்கிறார் என்றால், அதற்கான வருமானம் எப்படி வந்தது?

தமிழகத்தில் 40 இலட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகக் குற்றஞ்சுமத்துகிறது, தி.மு.க. பிரவீண் குமார் வருமானத்திற்கு மீறி 40 இலட்ச ரூபாயைத் திரும்பச் செலுத்தியிருக்கிறார். ஒரு போலி வாக்காளருக்கு ஒரு ரூபாய் என்பதுதான் கணக்கு. ஓட்டுக்குப் பணம் கொடுப்பதைக் காட்டிலும் தேர்தல் ஆணையரை விலைக்கு வாங்குவது எவ்வளவு மலிவானது!

______________________________
புதிய ஜனநாயகம், ஜூன் 2016
______________________________

ஐ.டி யூனியன் : பு.ஜ.தொ.மு.விற்கு தோள் கொடுங்கள் !

0

ன்பார்ந்த வினவு வாசகர்களுக்கு வணக்கம்.

நாங்கள் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஐ.டி ஊழியர்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஐ.டி ஊழியர்களின் தொழிற்சங்க உரிமைகளுக்காக போராடி வருகிறோம்.

Tamil-IT-Posterசமூகத்தில் உள்ள பல்வேறு பிரிவினரும் ஒற்றுமைக்காகவும், பணிப் பாதுகாப்பிற்காகவும், தமது உரிமைகளை நிலைநாட்டிக்கொள்ளவும் தங்களை சங்கத்தில் இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். NASSCOM எனும் சங்கம் வைத்திருக்கும் ஐ.டி. முதலாளிகள், ஐ.டி ஊழியர்களை தொழிற்சங்கம் வைத்துக் கொள்ளக் கூடாதென நேரடியாகவும் மறைமுகமாகவும் மிரட்டிக் கொண்டிருந்தனர். நடப்பில் இருக்கும் தொழிலாளர் சட்டங்களை இம்மியளவும் மதிக்காமல், எட்டுமணி நேர வேலை என்பதை மறுதலித்தும், நினைத்த நேரத்தில் வேலையிலிருந்து தூக்கி எறிந்தும் ஐ.டி. ஊழியர்களை துயரத்தில் தள்ளினர்.

உச்சகட்டமாக, 2014 இறுதியில் ஒரே நேரத்தில் 25 ஆயிரம் ஊழியர்களை வேலையை விட்டுத் துரத்தி விட TCS முடிவு செய்தது. அநீதியான அந்த முடிவை எதிர்த்து சென்னை OMR-ல் பு.ஜ.தொ.மு தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். இந்தியாவிலேயே முதல் முறையாக, ஐ.டி. ஊழியர்களுக்கான தொழிற்சங்கத்தை, ஜனவரி 10, 2015 அன்று புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தொடங்கியது.

அதே ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் உள்ள ஐ.டி நிறுவனங்களில் தொழிலாளர் சட்டங்களை நடைமுறைப்படுத்தக் கோரி பு.ஜ.தொ.மு சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். வழக்கை விசாரித்த நீதிமன்றம் இவ்விசயத்தில் தமிழக அரசு தனது முடிவை அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் தமிழக அரசு எந்த முடிவும் எடுக்காமல் இழுத்தடித்தது. நீதி மன்றமும் ஏன் என்று கேட்கவில்லை. அரசிடமிருந்து பதில் பெற பு.ஜ.தொ.மு அனைத்து வழிகளிலும் முயற்சித்து வந்தது. இப்படியே ஓராண்டு ஓடிப்போனது. அதன் பிறகும் தமிழக அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை. எனவே தமிழக அரசின் இந்த கள்ள மவுனத்தை கலைக்க 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழக அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தோம்.

இந்நிலையில்தான், வழக்கு விசாரணைக்கு வருவதற்கு சற்று முன்பாக, ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அரசு (மே 30 அன்று) பு.ஜ.தொ.மு-வுக்கு அனுப்பிய கடிதத்தில் தனது முடிவை அறிவித்தது. அந்த அறிவிப்பின்படி,

  • அனைத்து தொழிலாளர் சட்டங்களும் தமிழகத்தில் உள்ள அனைத்து I.T. மற்றும் I.T.E.S. நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
  • ஐ.டி ஊழியர்கள் தொழிற்சங்கம் அமைத்துக்கொள்ள எந்தத் தடையும் கிடையாது.
  • ஐ.டி ஊழியர்களுக்கு பணியிடத்தில் தமக்கு ஏற்படும் பிரச்சினைகள் அனைத்தையும் தொழிற்தகராறு சட்டம் 1947-ன் கீழ் தீர்த்துக்கொள்ளலாம்.
  • வேலை நீக்கம் செய்யப்பட்டாலோ, ஆட்குறைப்பு செய்தாலோ தொழிலாளர் ஆணையர் முன் வழக்கு எழுப்பி போராடலாம்.

இந்தச் சட்டங்களை அமல்படுத்துவதை தமிழக அரசு தானாக முன்வந்து செய்யவில்லை. நீதிமன்றத்திலும், தெருக்களிலும், ஐ.டி ஊழியர்கள் மத்தியிலும், நிர்வாக வழிகளிலும் விடாப்பிடியான முயற்சிகள், போராட்டங்கள், பிரச்சாரங்கள் மூலமாக இந்த உத்தரவை அரசின் வாயிலிருந்து வரவழைத்திருக்கிறோம். அதையும் வெளிப்படையாக அறிவிக்காமல் தனிப்பட்ட கடிதத்தின் மூலம் எங்களுக்கு தெரிவித்திருக்கிறது, தமிழக அரசு. எனவே அடுத்ததாக இம்முடிவை வெளிப்படையான அரசாணையாக வெளியிட வேண்டும் என்று போராடவிருக்கிறோம்.

ஐ.டி துறையிலும் நாட்டின் சட்டங்கள் செல்லுபடியாகும் என்ற இந்த அறிவிப்பு வெளியானதும் ‘சட்டத்தின் ஆட்சியை தூக்கிப் பிடிப்பதாக’ சொல்லிக் கொள்ளும் முதலாளித்துவ ஊடகங்கள் அனைத்தும் ‘இனிமேல் ஐ.டி துறையும் உருப்படாமல் போய்விடும்’ என்று ஒப்பாரி வைக்கத் துவங்கி விட்டன.

ஐ.டி முதலாளிகள் சங்கம் வைத்திருப்பதெல்லாம் அவர்களுக்கு பிரச்சினை அல்ல. ஊழியர்கள் சங்கம் வைத்துக்கொள்ளலாம் என்றதும் அனைத்துமே நாசமாகிவிடும் என்று ஊளையிடுகிறார்கள். சங்கம் என்றதுமே இவர்கள் ஏன் இவ்வளவு பதறுகிறார்கள்?

30 லட்சத்துக்கும் அதிகமான ஐ.டி ஊழியர்களின் கடும் உழைப்பால் ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் கோடி ரூபாய் லாபம் சம்பாதிக்கும் ஐ.டி நிறுவனங்கள், தமது லாப வீதத்தை உயர்த்திக் காட்டவும், பங்குச் சந்தையில் பங்கு மதிப்பை ஊதிப் பெருக்கவும், அதன் மூலம் முதலாளிகளும், உயர் மேலாளர்களும் கொள்ளை பணம் குவிக்கவும் செலவுக் குறைப்பு என்ற பெயரில் ஊழியர்களை கசக்கிப் பிழிகிறார்கள், அவர்களது வாழ்க்கையை வைத்து சூதாடுகிறார்கள்.

ஐ.டி ஊழியர்கள் சங்கம் வைத்துக்கொண்டால் என்ன ஆகும்?

  • அப்ரைசல் என்கிற பெயரில் ஐ.டி ஊழியர்கள் பிரித்து ஆளப்படுவது தடுத்து நிறுத்தப்படும்.
  • ஐ.டி ஊழியர்களை நினைத்த நேரத்தில் வேலையிலிருந்து தூக்கி எறிய முடியாது. விருப்பம் போல் ஆட்குறைப்பு செய்ய முடியாது. TCS 25,000 பேரை கேட்பாரின்றி வேலை நீக்கம் செய்ததைப் போல நடந்து கொள்ள முடியாது. ஊழியர்களின் எதிர்கால பணிவாழ்வை காட்டி மிரட்ட முடியாது.
  • எட்டு மணி நேரத்திற்கு மேல் வரம்பின்றி வேலை வாங்க முடியாது.

ஐ.டி துறையில் யூனியன் என்பது சாத்தியமற்ற கனவு என்று பலர் எண்ணிக்கொண்டிருந்த போது பு.ஜ.தொ.மு அதை சாதித்திருக்கிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதல் ஐ.டி தொழிற்சங்கம் நிறுவப்பட்டிருக்கிறது என்பது நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய விசயம். தமிழகத்தில் ஐ.டி ஊழியர்கள் தொழிற்சங்கத்தை ஆழமாகவும் உறுதியாகவும் நிறுவுவதன் மூலம் ஐ.டி முதலாளிகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று அகில இந்தியாவிற்கு தமிழகம் வழிகாட்டுவதை சாதிக்கலாம்.

tamil-IT-Noticeஇப்போது பெற்றிருக்கும் வெற்றி ஒரு சிறிய வெற்றிதான். இந்த வெற்றியை ஒழித்துக்கட்ட ஐ.டி முதலாளிகள் நிச்சயமாக முயற்சிப்பார்கள். எனவே, இனிமேல்தான் ஐ.டி ஊழியர்கள் இன்னும் கடினமான போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. சங்கம் வைத்துக்கொள்ளும் உரிமையை எதிர்த்து நாஸ்காம் நீதிமன்றத்திற்கு சென்றால் அதை எதிர்த்தும் போராட வேண்டும். இத்தகைய போராட்டங்களை நடத்துவதன் மூலம் தான் சங்கம் வைத்துக்கொள்ளும் உரிமையை நிலைநாட்டிக்கொள்ள முடியும்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு ஐ.டி துறையில் ஆட்குறைப்புக்கு எதிராக பிரச்சாரம், போராட்டங்கள், நீதிமன்ற வழக்குகள் என்று செயல்பட்டு வருகிறது. இவற்றுக்கெல்லாம் கணிசமான தொகை செலவாகியிருக்கிறது. குறிப்பாக, ஐ.டி துறையில் சங்கம் வைத்துக்கொள்ளலாம் என்ற இந்த உத்தரவைப் பெற மட்டுமே ரூ 20,000-க்கு மேல் செலவாகியிருக்கிறது. ஒரு சில ஆதரவாளர்களின் நன்கொடை மற்றும் தற்காலிக கடன் மூலம் இந்தச் செலவுகளை சரிக்கட்டி வந்திருக்கிறோம். ஐ.டி ஊழியர்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்க தொடர்ந்து போராடுவதற்கு மேலும் பொருளுதவி தேவைப்படும்.

எனவே, ஐ.டி ஊழியர்களும், பிற வினவு வாசகர்களும் பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர் பிரிவை வலுப்படுத்தவும், போராட்டங்கள், பிரச்சாரங்களை இன்னும் வீச்சாக எடுத்துச் செல்லவும் உங்களால் இயன்ற நிதியை தாருங்கள். கீழ் உள்ள வங்கிக் கணக்கில் நிதியை செலுத்துங்கள், அல்லது எங்களை தொடர்பு கொண்டு நேரில் நிதி தாருங்கள்.

வங்கிக் கணக்கு விபரங்கள்

S KARPAGA VINAYAGAM
Indian Overseas Bank,
R.K. Salai Branch,
Chennai-4
Account Number: 029101000035047
Account Type: Savings
IFSC code: IOBA0000291

ஐ.டி.துறையில் பணிபுரியும் நண்பர்கள் அனைவரும் உடனடியாக சங்கத்தில் இணையுங்கள். உங்கள் நண்பர்களையும் இணையச்சொல்லுங்கள். நமது பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்க இனி சங்கம் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். சங்கத்தில் இணைவதற்கு எமது தொலைபேசி எண்ணிலும், மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளுங்கள்.

English-IT-Notice
Union in IT Sector! Hurdles Overcome!
Put an End to Injustice and Exploitation!!

Dear Friends,

We belong to New Democratic Labour Front (NDLF) – I.T Employees Wing. We have been working to unionize IT employees for the past one and half years.

English-IT-PosterFrom daily wage earners to corporates in IT sector, every section of society have union of their own to safeguard their interests. While lobbying with government and propagating their views in society using their association NASCOM, the IT companies place direct and indirect hurdles for IT employees to form a Trade Union. In the absence of an Union they are able to deny the employees all legal rights such as regular working hours, protection from sudden and arbitrary dismissal etc.

To cap them all, in December 2014 TCS decided to lay off 25,000 senior employees at one go. Against this unjust and unfair move, workers belonging to NDLF launched a struggle in Chennai OMR. On January 10, 2015 NDLF formed the first labour union in India for IT employees.

In the same month, we filed a Public Interest Litigation in Chennai High Court to confirm that Industrial Disputes Act 1947 is applicable to IT companies. The court passed an order asking Tamil Nadu government to spell out its policy decision immediately. However, the government delayed its decision for 15 months, and sent a reply to our petition on May 30, 2016.

According to the government’s stand

  1. IT company employees are free to form trade union.
  2. All the labour welfare legislations are applicable to all the IT and ITES companies. No IT industry has been exempted from the provisions of the Industrial Disputes Act 1947.
  3. IT employees can redress their grievances through evoking the provisions of Industrial Disputes Act 1947.

As a result of our efforts, Tamil Nadu government has legally confirmed our right to form union. This is only the beginning, to complete this victory we should organize ourselves as a Trade Union and realize our demands.

What are the benefits of forming an Union?

  1. Put an end to the ever present, ever terrifying oppressions like Pink Slip, Forced Resignation and sudden Termination
  2. Put an end to the unjust, unfair and unscientific appraisal system.
  3. Ensure job security and promotion as a right.
  4. Realize democratic demands like 8 hours work day
  5. Abolish gender discrimination in work place, compensation levels and promotion. Win legally provided facilities like children’s Creche, maternity leave etc.

All these can be carried out only by a Labour Union registered under Indian Trade Union Act 1926. At present, NDLF – I.T Employees Wing is the only Trade Union of IT employees registered under this act

To win our rights Join the Union Now.
Give a missed call to 9003198576

#ITLabourUnion

New Democratic Labour Front – IT Employees Wing
combatlayoff@gmail.com
www.vinavu.com
fb:\\NDLFITEmployeesWing

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவு.
தொடர்புக்கு 90031 98576.
மின்னஞ்சல் combatlayoff@gmail.com
FB : NDLFITEmployeesWing

பிரதமர் பதவியில் ஒரு மோடி மஸ்தான் !

1

ரு முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், நகர்ப்புறத்துக் கடைவீதிகளில் மோடி வித்தை நடப்பது வழமையான ஒன்று. அந்த வித்தையை நடத்துபவர் பாம்பையும் கீரியையும் மோதவிடப் போவதாக சவுண்டுவிட்டுக் கொண்டேயிருப்பார். ஆனால், எவ்வளவு நேரமானாலும் அந்த மோதல் நடந்துவிடாது.ஆனாலும், அந்த மோதலை வேடிக்கைப் பார்ப்பதற்காகக் கூடும் அப்பாவிகளிடமிருந்து துட்டைக் கறந்துவிடுவார், அவர்.

பொது மக்களின் ‘விழிப்புணர்வு’ காரணமாகவோ அல்லது இந்தியா ‘நவீனமயமாக’ உருவாகிக் கொண்டிருப்பதன் காரணமாகவோ, இந்த மோடி வித்தை தற்காலத்தில் அழியும் நிலைக்குச் சென்றுவிட்டது. பிறகு ஏன், இந்த மலரும் நினைவுகள் எனக் கேட்கிறீர்களா? குஜராத்தில் நடந்து, தற்பொழுது அம்பலமாகியிருக்கும் எரிவாயு துரப்பணவு மோசடியைப் படிக்க நேர்ந்தபொழுது, இந்த மோடிவித்தைதான் எனக்குச் சட்டென நினைவுக்கு வந்தது.

குஜராத் அரசு பெட்ரோலியக் கழகத்தின் கார்ப்பரேட் அலுவலகம்
குஜராத் தலைநகர் காந்திநகரில் அமைந்துள்ள குஜராத் அரசு பெட்ரோலியக் கழகத்தின் கார்ப்பரேட் அலுவலகம்: 20,000 கோடி ஊழலின் தலைமையகம்

தெருவோரத்தில் மோடி வித்தையை நடத்திப் பிழைப்பவனுக்கு மோடி மஸ்தான் என்று பெயர். குஜராத்தில் நடந்துள்ள எரிவாயு மோசடிக்குச் சூத்திரதாரியாக இருந்தவரின் பெயர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி.

நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த சமயத்தில், 2005-ஆம் ஆண்டு வாக்கில், நாடே விக்கித்துப் போகும் வண்ணம், “குஜராத் அரசு பெட்ரோலியக் கழகம், கிருஷ்ணா-கோதாவரிப் படுகையில் 20 இலட்சம் கோடி கன அடி இருப்பு கொண்ட இயற்கை எரிவாயுயைக் கண்டுபிடித்துவிட்டதாகவும், இதன் வர்த்தக மதிப்பு 40 இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமானதென்றும், இந்தக் கண்டுபிடிப்பு நாட்டின் எரிசக்தி தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்வதோடு, ஏற்றுமதிக்கான வாய்ப்புகளையும் திறந்துவிட்டிருப்பதாகவும், குஜராத் அரசு பெட்ரோலியக் கழகம் அப்படுகையில் 2007-இல்எரிவாயு உற்பத்தியைத் தொடங்கிவிடுமென்றும்” அதிரடியாக அறிவித்தார்.

இந்தப் பிரமிக்கத்தக்க அறிவிப்பை மோடி வெளியிட்டு 11 ஆண்டுகளும், உற்பத்தி தொடங்குவதற்காக நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு முடிந்து 9 ஆண்டுகளும் கழிந்துவிட்டன. ஆனால், குஜராத் அரசு பெட்ரோலியக் கழகம் அந்தப் படுகையிலிருந்து இதுநாள் வரை ஒரு கன அடி எரிவாயுவைக்கூட உற்பத்தி செய்யவில்லை. மாறாக, மோடி மஸ்தான் பாம்பையும் கீரியையும் காட்டி காசு பிடுங்குவதைப் போல, கிருஷ்ணா-கோதாவரிப் படுகையிலிருந்து இந்த ஆண்டு எரிவாயுவை உற்பத்தி செய்துவிடுவோம், அடுத்த ஆண்டு உற்பத்தி செய்துவிடுவோம் எனப் போங்காட்டம் ஆடியே, கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கி 2015-ஆம் ஆண்டு முடியவுள்ள ஏழே ஆண்டுகளில், 19,720 கோடி ரூபாயை 13 பொதுத்துறை வங்கிகளிடமிருந்து கடனாக உருவிக் கொண்டுவிட்டது.

gujarat-modi-empty-show
குஜராத் அரசு பெட்ரோலியக் கழகத்திற்கும் பிரிட்டிஷ் கேஸ் நிறுவனத்திற்கும் இடையே இயற்கை எரிவாயு வணிகம் தொடர்பாக நடந்த பேச்சு வார்த்தையில் கலந்துகொண்ட அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்டோர்: நரேந்திர மோடி அரசின் வெட்டி பந்தா. (கோப்புப் படம்)

குஜராத் பெட்ரோலியக் கழகம் கிருஷ்ணா-கோதாவரிப் படுகையில் எரிவாயு உற்பத்தியைத் தொடங்கவில்லை என்பது மட்டுமல்ல, அப்படுகையில் குஜராத் அரசிற்கு ஒதுக்கப்பட்ட வயலில் எரிவாயு இருக்கிறதா, அப்படியே இருந்தாலும் அதனை எடுக்க முடியுமா, அப்படியே எடுத்தாலும் அதனை இலாபம் தரத்தக்க வகையில் சந்தையில் விற்க முடியுமா எனப் பல கேள்விகளும் சந்தேகங்களும் இத்திட்டம் குறித்து எழுப்பப்பட்டுள்ளன. ஏனென்றால், இந்தத் திட்டம் குறித்து குஜராத் பெட்ரோலியக் கழகம் 2009-இல் வெளியிட்ட ஆய்வறிக்கையில், அந்த வயலில் ஒரு இலட்சத்து பத்தாயிரம் கோடி கன அடி மட்டுமே எரிவாயு இருப்பதாகக் கூறியது. வடிவேலுவின் கிணறு காணாமல் போனது போல, 19 இலட்சம் கோடி கன அடி எரிவாயு ‘காணாமல்’ போய்விட்டது மட்டுமல்ல, பூமிக்கு அடியில் புதைந்து கிடப்பதாகச் சொல்லப்படும் இந்த ஒரு இலட்சம் கோடி கன அடி எரிவாயுவை எடுப்பதும் கடந்த ஆறு ஆண்டுகளாக வெறும் காகிதத் திட்டமாகத்தான் இருந்து வருகிறது.

gujarat-petrol-scam-caption-1சங்கப் பரிவாரத்தின் மூத்த தலைவர்களுள் ஒருவரான தீனதயாள் உபாத்யாயாவின் நினைவாக தீனதயாள் மேற்கு எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த வயலில் உள்ள 20 இலட்சம் கோடி கன அடி எரிவாயுவை 1,500 கோடி ரூபாய் செலவில், 2007-இல் எடுக்கத் தொடங்கிவிடுவோம் என 2005-இல் அறிவித்தார், மோடி. அதன் பின், அவரே உற்பத்தி 2011-இல் தொடங்கிவிடும் என்றும், மூலதனச் செலவு 4,100 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என 2008-இல் அறிவித்தார். இதன் பிறகு, இத்திட்டம் குறித்து அறிக்கைகளைச் சமர்ப்பித்த பங்குச் சந்தை கண்காணிப்பு வாரியம், மத்தியத் தணிக்கைத் துறை, குஜராத் அரசு பெட்ரோலியக் கழகம் ஆகிய நிறுவனங்கள் தீனதயாள் மேற்கு வயலில் ஒரு இலட்சத்துப் பத்தாயிரம் கோடி கன அடி மட்டுமே எரிவாயு இருப்பதாகக் கூறியதோடு, இந்த எரிவாயுவை எடுப்பதற்கான மூலதனச் செலவை 8,500 கோடி, 13,000 கோடி, 18,000 கோடி என அதிகரித்துக் கொண்டே சென்றன. இறுதியாக, 2015-இல் அறிக்கை அளித்த மத்திய தணிக்கைத் துறை ஒரு இலட்சத்து பத்தாயிரம் கோடி கன அடி எரிவாயுவை எடுக்க 19,600 கோடி ரூபாய் மூலதனம் தேவைப்படும் என்றும் உற்பத்தி 2016-இல் தொடங்கக் கூடும் என்றும் அறிவித்தது.

ஜெய்ராம் ரமேஷ்
குஜராத் அரசு பெட்ரோலியக் கழகத்தில் நடந்துள்ள 20,000 கோடி ரூபாய் பெறுமான ஊழலைத் தொடர்ச்சியாக அம்பலப்படுத்திவரும் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் சுற்றுப்புறச் சுழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்

ஆனால், இதுவரை உற்பத்தி தொடங்கவில்லை. மாறாக, மூலதனச் செலவிற்காகப் பொதுத்துறை வங்கிகளிடமிருந்து வாங்கப்பட்ட கடன் மட்டும் அதிகரித்துக் கொண்டே சென்றிருக்கிறது. 2011-இல் உற்பத்தி தொடங்கிவிடும் எனக் காட்டி 2008-இல் 2,386 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டிருக்கிறது. 2012-இல் உற்பத்தி தொடங்கிவிடும் எனக் கூறப்பட்ட நேரத்தில் இந்தக் கடன் 6,383 கோடி ரூபாயாக அதிகரித்தது. 2013-இல் கம்பெனி உற்பத்தியை எட்டிவிடும் எனக் கூறப்பட்டபொழுது, கடன் 9,723 கோடி ரூபாயை எட்டிப் பிடித்தது. இப்படியாக 13,900 கோடி ரூபாய், 16,000 கோடி ரூபாய் என அதிகரித்த கடன் தொகை தற்பொழுது 19,716 கோடி ரூபாயைத் தொட்டுவிட்டது.

20 இலட்சம் கோடி கன அடி எரிவாயுவைக் கண்டுபிடித்துவிட்டதாக மோடி அறிவித்ததும்; திட்டச் செலவை 1,500 கோடி ரூபாயிலிருந்து 19,716 கோடி ரூபாயாக அதிகரித்துக் கொண்டே சென்றிருப்பதும்தான் இந்த எரிவாயு ஊழலின் முக்கிய அம்சங்கள். மூலதனச் செலவை அதிகரித்துக் காட்டுவதற்காகவே பல்வேறு முறைகேடுகளும் மோசடிகளும் தில்லுமுல்லுகளும் நடந்துள்ளன. அதிலொன்றுதான் இத்திட்டம் குறித்து தயாரித்து அளிக்கப்பட்ட அறிக்கை. வெறும் நூறு பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையைத் தயாரித்து அளிப்பதற்குள், வங்கிகளிடமிருந்து 4,800 ரூபாய் கடன் பெறப்பட்டிருக்கிறது.

உலகிலேயே 4,800 கோடி கடனில் தயாரிக்கப்பட்ட முதல் அறிக்கை இதுவாகத்தான் இருக்கும். அப்படிபட்ட “காஸ்ட்லியான” அறிக்கையில் தீனதயாள் மேற்கு வயலில் ஒரு இலட்சத்துப் பத்தாயிரம் கோடி கன அடி மட்டுமே எரிவாயு இருப்பதாகக் கூறப்பட்டாலும், அத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது விழலுக்கு இறைத்த நீர் என்ற உண்மையும் அம்பலத்துக்கு வந்தது. இந்த அறிக்கை வெளிவந்த சமயத்தில் சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை 4.2 டாலராக இருந்தது. ஆனால், அறிக்கையோ இந்த வயலில் இருந்து எடுக்கப்படும் எரிவாயுவை 5.7 டாலருக்கு விற்றால்தான் இலாபம் பார்க்க முடியும் எனக் குறிப்பிட்டது. குஜராத் அரசு தயாரித்த அறிக்கையே இத்திட்டம் இலாபகரமானது அல்ல எனக் காட்டிவிட்ட பிறகும், மோடி கும்பல் திட்டத்தைக் கைவிடாமல் உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டு நின்றதற்குக் காரணம், அக்கும்பலுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இடையேயான நெருக்கம்.

gujarat-petrol-scam-caption-2இந்த வயலில் இருந்து எரிவாயுவை எடுக்கும் வேலை ஒப்பந்த அடிப்படையில் அதானி குழுமம், குஜராத்தைச் சேர்ந்த டஃப் டிரில்லிங் மற்றும் மொரீஷியஸ், பார்போடாஸ் ஆகிய வரியில்லா சொர்க்கத் தீவுகளைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் லெட்டர் பேடு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டிருக்கிறது. எரிவாயுவை இந்த ஆண்டு எடுத்துவிடுவோம், அடுத்த ஆண்டு எடுத்துவிடுவோம் எனக் கூறிப் பொதுத்துறை வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடனின் பெரும்பகுதியை இந்த உப்புமா கம்பெனிகள்தான் விழுங்கியுள்ளன.

குறிப்பாக, டஃப் டிரில்லிங் நிறுவனத்திற்கும் எரிவாயு துரப்பணவு தொழிலுக்கும் ஒட்டும் இருந்தது கிடையாது, உறவும் இருந்தது கிடையாது. ஆயுத்த ஆடை தயாரிப்புதான் அந்த நிறுவன முதலாளிகளின் பூர்வாசிரமத் தொழில். குஜராத் அரசு கிருஷ்ணா-கோதாவரிப் படுகையில் எரிவாயு எடுக்கும் திட்டத்தை அறிவித்தவுடனேயே, அம்முதலாளிகள் டஃப் டிரில்லிங் நிறுவனத்தைத் தொடங்கி, 5000 கோடி ரூபாய் பெறுமான ஒப்பந்தத்தைப் பெற்றார்கள். கிருஷ்ணா-கோதாவரிப் படுகையில் எரிவாயுவை எடுப்பதற்கு நவீனமான உயர் தொழில்நுட்பமும் நிபுணத்துவமும் தேவைப்படும் நிலையில், குஜராத் பெட்ரோலியக் கழகம் முன் அனுபவமேயில்லாத ஒரு உப்புமா கம்பெனிக்கு இவ்வளவு பெரிய தொகை கொண்ட ஒப்பந்தத்தை வழங்கியதற்குக் காரணம், அதானி குழுமத்தைப் போலவே இவர்களும் மோடிக்கும் நெருக்கமானவர்கள் என்பதுதான்.

எரிவாயுவை எடுப்பதற்குத் தேவையான கனரக இயந்திரங்களை வாங்கிய செலவு 2,000 கோடி ரூபாய்; கம்பெனியின் பிறவகை செலவுகள் 500 கோடி ரூபாய்; உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் குத்தகைக்கு எடுத்த வயல்களைத் திரும்ப ஒப்படைத்த வகையில் ஏற்பட்ட நட்டம் 2,514 கோடி ரூபாய்; ஒப்பந்த நிறுவனங்களிடமிருந்து வர வேண்டிய நிலுவைத் தொகை 2,000 கோடி ரூபாய் எனக் கணக்குகளைக் காட்டி, பொதுத்துறை வங்கிகளிடமிருந்து பெற்ற கடன்களை குஜராத் பெட்ரோலியக் கழகமும், அதன் ஒப்பந்த நிறுவனங்களும் கூட்டுச் சேர்ந்து ஏப்பம் விட்டுள்ளன.

கௌதம் அதானி
குஜராத் அரசு பெட்ரோலியக் கழகத்தில் நடந்திருக்கும் ஊழலில் நரேந்திர மோடியின் நெருங்கிய கூட்டாளி கௌதம் அதானிக்குப் பெரும் பங்குண்டு

குஜராத் பெட்ரோலியக் கழகம் பொதுத்துறை வங்கிகளுக்குக் கட்ட வேண்டிய வட்டி ஆண்டொன்றுக்கு 2,000 கோடி ரூபாய். ஆனால், அந்த நிறுவனத்தின் ஆண்டு வருமானமே 682 கோடி ரூபாய்தான். அதனின் துணை நிறுவனங்களிலிருந்து கிடைக்கும் வருமானத்தையும் சேர்த்தால், 1,219 கோடி ரூபாய். வட்டி கட்டுவதற்குக்கூட வருமானம் இல்லாமல் திவால் நிலையை எட்டிவிட்ட குஜராத் பெட்ரோலியக் கழகத்திற்கு மேலும் மேலும் சலுகைகள் காட்டப்படுகின்றன.

தீனதயாள் மேற்கு வயலில் உள்ள எரிவாயு மிகவும் ஆழத்திலும் இறுக்கமாகவும் புதைந்து கிடப்பதாகவும், அதனைத் துரப்பணவு செய்து எடுக்க மிகவும் நவீனமான தொழில்நுட்பம் தேவைப்படுவதாகவும், அதனால்தான் கடந்த ஒன்பது ஆண்டுகளாக உற்பத்தியைத் தொடங்க முடியாமல் போய்விட்டதாகவும் கூறித் தாமதத்தை நியாயப்படுத்தி வரும் மோடி ஆதரவாளர்கள், மறுபுறமோ 40,000 @காடி ரூபாய் பெறுமானமுள்ள அந்த எரிவாயுவை நாளைக்கே எடுத்து, அதற்கு மறுநாளே விற்றுப் பொதுத்துறை வங்கிகளின் கடனை அடைத்துவிட முடியுமென்றும் உதார் விடுகிறார்கள்.

ஆனால், குஜராத் பெட்ரோலியக் கழகமோ வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. அதனால் இந்த நிறுவனம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவிடமிருந்து பெற்றுள்ள 3,000 கோடி ரூபாய் பெறுமான கடன் மறுசீரமைப்பு செய்யப்பட்டிருப்பதோடு, இந்த நிறுவனம் வட்டி கட்டுவதற்கு வசதியாக 3,500 கோடி ரூபாயை, அமெரிக்க டாலராக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பரோடா வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் வழங்கியுள்ளன.

பூமியின் அடியில் புதைந்து கிடக்கும் கச்சா எண்ணெய், எரிவாயு வளங்களை அப்படியே முழுவதுமாக எடுத்துவிட முடியாது என்பதால், மோடியின் ஆதரவாளர்கள் வீசும் வாக்குறுதிகளைத் துரப்பணவு தொழில் நிபுணர்கள்கூட நம்ப மறுக்கிறார்கள். தீனதயாள் மேற்கு வயலில் உள்ளதாகக் கூறப்படும் ஒரு இலட்சத்து பத்தாயிரம் கோடி கன அடி இருப்பில் இருந்து எவ்வளவு கன அடி எரிவாயுவை எடுக்க முடியும், அதனை எந்தளவிற்கு இலாபகரமாக விற்க முடியும் என்ற கேள்விகளுக்குத் திட்டமிட்டே பதில் அளிக்க மறுக்கிறது, மோடி கும்பல். தெருவோரத்தில் நடக்கும் மோடி வித்தையில் பாம்பையும் கீரியையும் காட்டிப் பொதுமக்களை ஏமாற்றுவதைப் போல, புதைந்து கிடக்கும் எரிவாயு இருப்பை மட்டுமே காட்டித் தமது மோசடிகளை நியாயப்படுத்திவிட முயன்று வருகிறது, மோடி கும்பல்.

gujarat-petrol-scam-caption-3இந்தத் திட்டம் கூடுதல் செலவு பிடிக்கும் தோல்வியடைந்த ஒன்று என 2015-இல் மத்திய தணிக்கைத் துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதோடு, இதில் நடந்துள்ள முறைகேடுகளையும் அந்த அறிக்கையில் பட்டியல் இட்டிருக்கிறது. குஜராத் பெட்ரோலியக் கழகம் கிருஷ்ணா-கோதாவரிப் படுகையிலிருந்து எரிவாயுவைத் துரப்பணவு செய்வதற்கான திட்டத்தைத் தயாரிக்கும் ஒப்பந்தத்தை கனடா நாட்டைச் சேர்ர்ந்த ஜியோ குளோபல் ரிசோர்சஸ் என்ற நிறுவனத்திற்கு வழங்கியதென்றும், அந்த நிறுவனத்தின் தவறான திட்ட மதிப்பிடுகளின் காரணமாகவே கிணறுகளைத் தோண்டுவதற்கான செலவு 531 @காடி ரூபாயிலிருந்து 6,265 கோடி ரூபாயாக அதிகரித்தது என்றும்; அதானி குழுமம் மற்றும் எஸ்ஸார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட சட்டவிரோதமான சலுகைகளின் காரணமாக 5,000 கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டிருப்பதையும் மத்திய தணிக்கைத் துறை சுட்டிக் காட்டியிருக்கிறது.

அலைக்கற்றை விற்பனையில் இழப்பு ஏற்பட்டுள்ளதைப் போன்றே, கிருஷ்ணா-கோதாவரிப் படுகையில் இருந்து எரிவாயு எடுக்கும் திட்டத்திலும் பல்வேறு முறைகேடுகள் நடந்து, திட்டமும் தோற்றுப் போய், அரசிற்கும் பொதுத்துறை வங்கிகளுக்கும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அலைக்கற்றைகளைக் குறைந்த விலைக்குத் தனியாருக்கு விற்று நாட்டிற்கு நட்டமேற்படுத்தியது ஊழல் என்றால், எரிவாயு எடுக்கும் திட்டத்தில் அதானி, எஸ்ஸார், டஃப் டிரில்லிங், ஜியோ குளோபல் ரிசோர்சஸ் எனக் குறிப்பிட்ட சில தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆதாயமடைவதற்காகப் பொதுத்துறை நிறுவனமும் அதற்குக் கடன் கொடுத்த பொதுத்துறை வங்கிகளும் மொட்டையடிக்கப்பட்டிருப்பதும் ஊழல்தான்.

இந்த எரிவாயு ஊழல் கடந்த ஒன்பது ஆண்டுகளாக நடந்து வருகிறது. இது குறித்து மத்திய தணிக்கைத் துறை ஆறு அறிக்கைகளை அளித்திருக்கிறது. எனினும், அலைக்கற்றை ஊழல் பொதுவெளியில் செய்யப்பட்ட அளவிற்கு, ஊடகங்களில் விவாதிக்கப்பட்ட அளவிற்கு எரிவாயு ஊழல் அம்பலத்திற்கு வரவில்லை. காரணம், வெளிப்படையான ஒன்று. எரிவாயு ஊழலின் சூத்திரதாரி பார்ப்பன-பாசிஸ்டு. அலைக்கற்றை ஊழலில் குற்றஞ்சுமத்தப்பட்டிருப்பவரோ சூத்திர தி.மு.க.-வைச் சேர்ந்தவர்.

– செல்வம்
______________________________
புதிய ஜனநாயகம், ஜூன் 2016

விருதை கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு – வாருங்கள் !

1

நம் பிள்ளைகளுக்காக நாம் போராடாமல் வேறு யார் போராடுவார்கள்?

ன்பார்ந்த பெற்றோர்களே! வணக்கம்!

education-conference-notice-2பெரும்பான்மையான வளர்ந்த நாடுகளில் தாய்மொழியில், பொதுப்பள்ளிகள் மூலமாக அரசுதான் முற்றிலும் இலவசமாக கல்வி வழங்குகிறது. அருகமைப் பள்ளி முறை – அதாவது நம்ம ஊர் ரேசன் கடை போன்று அந்தந்த பகுதியில் வாழும் மக்கள் தங்கள் பிள்ளைகளை அருகிலுள்ள பள்ளிகளில் கல்வி கற்கும், அருகமைப் பள்ளி முறைதான் இன்றளவும் நடைமுறையில் உள்ளது.

அனைவருக்கும் ஒரே சீரான, தரமான கல்வி முறைதான் மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றல், தனி மனித ஆளுமை வளர்ச்சி ஆகியவற்றுக்கு அடிப்படையானது. அதை அரசுதான் இலாப நோக்கமின்றி அனைவருக்கும் வழங்க முடியும். இந்தியாவில் பார்ப்பனிய சாதிக் கொடுமையுடன், வர்க்கப் பாகுபாடுகளும் அதிகரித்துள்ள இன்றைய நிலையில் பணத்திற்கு தகுந்த பள்ளிக்கூடம் என்பது, மேலும் இத்தகைய பாகுபாடுகளை அதிகரிக்கச் செய்யும். பணம் சம்பாதிக்க மட்டும் படிப்பு என்ற கல்வி தனியார்மயக் கொள்கையை ஒழிப்பது, பாம்பைப் பார்த்தவுடன் அடிக்கும் முடிவுக்கு ஒப்பானது. ஆனால், அதை பெற்றோர்கள் வரவேற்பது என்ற நிலை குறித்து நாம் சிந்திக்க வேண்டும்.

தனியார் பள்ளி தரமானதா?

education-conference-notice-3தனியார் பள்ளியில் படித்தால், தன் பிள்ளை ஆங்கிலம் பேசுவான், அறிவு வளரும், டாக்டர், எஞ்சினியர் ஆவான், நம்மைப் போல் கஷ்டப்பட மாட்டான், அதிகம் பணம் சம்பாதிப்பான் என்ற மூட நம்பிக்கையில், அவரவர் வசதிக்கேற்றாற்போல தனியார் மெட்ரிக் பள்ளிகளை நோக்கி விட்டில் பூச்சியாய் ஓடுகிறார்கள். பட்டம் பெற்ற லட்சக் கணக்கான இளைஞர்கள் உரிய வேலை வாய்ப்பின்ற கிடைத்த சம்பளத்திற்கு உரிமைகளற்ற கூலிகளாய் பணிபுரியும் அவலத்தை அவர்கள் பார்ப்பதில்லை.

தனியார் பள்ளி தாளாளர்களுக்கு ஒழுக்கம், நேர்மை எதுவும் கிடையாது. கட்டணக் கொள்ளை அடிப்பது, பணம் கட்டாத மாணவர்களை துன்புறுத்துவது, பெற்றோர்களை அவமானப்படுத்துவது, 10-ம் வகுப்பு பாடத்தை 9-ம் வகுப்பிலும், 12-ம் வகுப்பு பாடத்தை 11-ம் வகுப்பிலும் படிக்கச் சொல்வது என்று மாணவர்களின் படிக்கும் முறை, பாயாசத்தின் சுவை அறியாத கரண்டி போல மாணவர்களிடம் பதிய வைக்கப்படுகிறது.

கருப்புப் பணமாக கல்விக் கட்டணம், வினாத்தாள் முன்கூட்டியே சொல்வது, காப்பி அடிக்க அனுமதிப்பது, தேர்வு கண்காணிப்பாளரை பிக்ஸ் பண்ணுவது என அனைத்து முறைகேடுகளிலும் ஈடுபடுவது தவறில்லை; அதுதான் திறமை என்று மாணவர்களுக்கு வாழ்க்கை பற்றிய தவறான சிந்தனைகளை பள்ளிப் பருவத்திலேயே ஏற்படுத்துகிறார்கள். பெற்றோர்களும் அதற்கு உடன்படுகிறார்கள்.

தங்களிடம் பணிபுரியும் ஆசிரியர்களைக் கொத்தடிமைகளாக, குறைந்த சம்பளத்திற்கு ஓய்வு இன்றி வேலை வாங்குவது, அவர்களை செங்கல் சூளைக்கு ஆள் பிடிக்கும் புரோக்கர் போல் மாணவர்களைப் பிடித்து வரச் சொல்லுவது, தவறினால் பணி நீக்கம் செய்வது. இத்தகைய முறைகேடுகள் பற்றி தெரிந்த பெற்றோர் காரியவாதமாக தனியார் பள்ளி பற்றி பேச மறுக்கிறார்கள். ஆசிரியர் இல்லை, சொல்லிக் கொடுப்பதில்லை என அரசுப் பள்ளிகளின் தரம் பற்றி மிகையாக பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள்.

அரசுப் பள்ளியே நமது பள்ளி!

education-conference-notice-4புத்தகம், நோட்டு, சீருடை, செருப்பு, மதிய உணவு, சைக்கிள் என மாணவர்களுக்கு வழங்கி – கற்றல், கற்பித்தலை அறிவியல்பூர்வமான சேவையாக செயல்படுத்தும் அரசுப் பள்ளிகளோடு அனைத்திலும் கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகளை ஒருநாளும் ஒப்பிட முடியாது. அரசுப் பள்ளி மாணவன், வீட்டு வேலை முதல் விவசாய வேலை வரை செய்து, வறுமையில் டியூசன் படிக்காத சூழலில்தான், அரசுப் பள்ளி மாணவர்கள் 80 சதவீத தேர்ச்சி, 495 மதிப்பெண் என பெறுகிறார்கள்.

இன்றைக்கு உயர்பதவிகளில் இருப்பவர்கள், மருத்துவ நிபுணர்கள், விஞ்ஞானிகள், அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள் என பெரும்பான்மையானவர்கள், அரசுப் பள்ளியில் தாய்மொழியில் படித்தவர்கள்தான். அரசுப் பள்ளிகளில் போதிய கட்டமைப்பு இல்லை, ஆசிரியர்கள் பற்றாக்குறை, இருக்கும் ஆசிரியர்களும் சரியாகச் சொல்லி கொடுப்பதில்லை என்ற குறைகள் பெற்றோர்கள் கண்காணித்துப் போராடினால் சரிசெய்ய முடியும்.

அரசின் தனியார்மய கொள்கையால் கல்வி, சுகாதாரம், மருத்துவம், குடிநீர், விவசாயம் என்ற அடிப்படை வாழ்வுரிமைகள் அனைத்தும் சூறையாடப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட அனைத்து பிரிவு மக்களும் போராடுகிறார்கள். பொறுப்பான முறையில் தீர்வு காண வேண்டிய அரசோ, போராடுபவர்கள் மீது தடியடி, பொய் வழக்கு, சிறை, சித்ரவதை என அடக்குமுறை செய்கிறது. நீதிமன்றமும் அதற்கு துணை நிற்கிறது.

education-conference-notice-5

மக்கள் நல அரசு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சி, மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அதிகார வர்க்கத்தினர் மற்றும் நீதித்துறையினர் என அனைத்தும் மக்களின் எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு காணுவதில்லை. அவர்கள் வகுத்த விதிமுறைகள், சட்டங்கள், கொள்கைகள் ஆகியவற்றை அவர்களே கடைப்பிடிக்க முடியாமல் மீறுகிறார்கள். மக்கள் நலன்களுக்குஎ திராகச் செயல்படுகிறார்கள். இந்த நிலையில் ஆங்கிலேயர்களை எதிர்த்த சுதந்திரப்போராட்டம்போல், மக்களுக்கான கொள்கையை அமல்படுத்தும் அரசை புதிதாக உருவாக்குவதைத் தவிர வேறு வழியில்லை.

உயிராதாரமான குடிநீர் இன்று வாட்டர் பாட்டில் என்ற மாறி நிற்கும் பயங்கரம். அதே போல் தனியார் பள்ளிகளை தரம் என ஆதரிப்பது எதிர்காலத் தலைமுறையையே பாதிக்கும்.

அனைவருக்கும் சமமான, தரமான கல்வியை இலவசமாக வழங்கும் அரசுப் பள்ளியை ஆதரித்து அதனை மேம்படுத்த பெற்றோர்கள் போராட வேண்டும்.

நம் பிள்ளைகளுக்கா நாம் போராடாமல் வேறு யார் போராடுவார்கள்?

அரசுப் பள்ளியே நமது பள்ளி!
கல்வி ஒரு சேவையே! வணிகமல்ல!!
கல்வி வியாபாரத்தை புறக்கணிப்போம்!

mini-marathon-in-support-of-govt-school

கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு 2016

மினி மாரத்தான்
ஜூன் 19, காலை 6 மணி
சித்தூர் புறவழிச்சாலை

பேரணி, மாநாடு, தப்பாட்டம், புரட்சிகர கலைநிகழ்ச்சி

ஜூன் 25, சனி மாலை 5 மணி
வானொலித் திடல், விருத்தாசலம்

பேரணி துவங்குமிடம்:
திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி,
விருத்தாசலம்
மாலை 4 மணி

தலைமை
திரு வை.வெங்கடேசன், மாவட்டத் தலைவர், மா.க.உ.பெ. சங்கம், விருத்தாசலம்

வரவேற்புரை
திரு வா.அன்பழகன், பத்திரப் பதிவுத்துறை (ஓய்வு), துணைத்தலைவர், , மா.க.உ.ப.ச, விருத்தாசலம்

துவக்க உரை:
பாரதி தம்பி, பத்திரிகையாளர் (கற்க கசடற நூலாசிரியர்), ஆனந்த விகடன், சென்னை

சிறப்புரை
மதிப்பெண் பெறுவது மட்டுமே கல்வித் தரத்தின் அடையாளம் அல்ல

பேராசிரியர் ந.சி சந்திரசேகரன், முதல்வர் (ஓய்வு), கந்தசாமி கண்டர் கல்லூரி, நாமக்கல்
புலவர் சிவராம சேது, தலைமை ஆசிரியர் (ஓய்வு), அ.ஆ.மே.நி.பள்ளி, விருத்தாசலம்
மாணவர் மாரிமுத்து, பு.மா.இ.மு, டாஸ்மாக் எதிர்ப்புப் போராளி, சென்னை

கல்வி நிதியை களவாடும் நகராட்சிகள்
டாக்டர் மு. வள்ளுவன், மு.நகர் மன்றத் தலைவர், விருத்தாசலம்
வழக்கறிஞர் ர.புஷ்பதேவன், மா.செ, ம.உ.பா.மையம், விருத்தாசலம்
திரு ச.செந்தாமரைக்கந்தன், செயலாளர், மா.க.உ.பெ.சங்கம், விருத்தாசலம்

சமூக ஏற்றத் தாழ்வுகளை, சாதி வேறுபாடுகளை அகற்றும் அரசுப் பள்ளிகளில் அனைவரையும் சேர்ப்போம்!

பேராசிரியர் திருமதி சாந்தி, சென்னை
தோழர் த. கணேசன், மாநில அமைப்பாளர், பு.மா.இ.மு, சென்னை
திரு கோ.பாக்கியராஜ், தலைமை ஆசிரியர், இலங்கியனூர், மா.தலைவர், ஆதி திராவிட ஆதிவாசிகள் நலத்துறை ஆசிரியர், காப்பாளர் சங்கம்.

நிறைவுரை
வழக்கறிஞர் சி.ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.

வாழ்த்துரை
திருமதி மங்கையர்க்கரசி, மா.க.உ.பெ.சங்கம், விருத்தாசலம்
வழக்கறிஞர் ச.செந்தில்குமார், மா.தலைவர், ம.உ.பா.மை, கடலூர்
வழக்கறிஞர் சி.செந்தில், மா.து செயலாளர், ம.உ.பா.மை, சிதம்பரம்
திரு. ஆ. செல்வம், மா.து. தலைவர், ம.உ.பா.மை, விருத்தாசலம்.
திரு கோ. தமிழரசன், தலைமை ஆசிரியர் (ஓய்வு), சேத்தியாதோப்பு.
தோழர் முருகானந்தம், ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம், விருத்தாசலம்
தோழர் கதிர், செயலர், பு.மா.இ.மு, விருத்தாசலம்
திரு சிறுத்தொண்ட நாயனார், தலைமை ஆசிரியர், தே.பவழங்குடி
திரு த. கலையரசன், மா.க.உ.பெ.சங்கம், சிதம்பரம்
தோழர் எம். முஜிபூர் ரஹ்மான், மா.க.உ.பெ.சங்கம், சிதம்பரம்
திரு டி. ரவிச்சந்திரன், மா.க.உ.பெ.சங்கம், சிதம்பரம்

நன்றியுரை
க.செல்வகுமார், செ.கு.உ., ம.உ.பா.மையம், விருத்தாசலம்

கல்வி உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வருகிறோம். நிதிச்சுமை எங்களை பெருமளவில் அழுத்துகிறது.

நிதி தாருங்கள்! மாநாட்டுக்கு வாருங்கள், நன்றி!

மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்
9345067646
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
கடலூர் மாவட்டம் 93600 61121

அம்பேத்கர் விழாவில் கண்ணீர் சிந்திய தலித்துகள் !

0

“எங்களைக் கொல்லாதீர்கள்!” – அம்பேத்கர் விழாவில் கண்ணீர் சிந்திய தலித்துகள் : ஆனந்த் தெல்தும்டே

manual-scavenging-1பாபா சாகேப் அம்பேத்கரின் 125-வது பிறந்த நாள் விழாவைக் கொண்டாட நாடு தயாராகிக் கொண்டிருந்த வேளையில், தாழ்த்தப்பட்டோரில் ஒரு பிரிவினரான மலம் அள்ளும் துப்புரவுப் பணியாளர்கள் டில்லியில் கூடியிருந்தனர். அஸ்ஸாம் மாநிலம் திப்ருகாரிலிருந்து நான்கு மாதங்களுக்கு முன் தொடங்கிய “பீம் யாத்ரா” என்ற அவர்களது பயணம், சுமார் 500 மாவட்டங்கள், 30 மாநிலங்கள், 3,500 கி.மீ. தூரத்தைக் கடந்து ஏப்ரல் 13-ம் தேதியன்று டில்லி ஜந்தர் மந்தரை வந்தடைந்திருந்தது.

manual-scavenging-caption-2அவர்களுடைய பெயர் துப்புரவுத் தொழிலாளர் இயக்கம். “எங்களைக் கொல்லாதீர்கள்!” என்பது அவர்களின் முழக்கம். ஆண்டொன்றுக்கு 22,000 துப்புரவுத் தொழிலாளர்கள் கேட்பாரின்றி கொல்லப்படுகிறார்கள். (பா.ஜ.க. எம்.பி. தருண் விஜய், சென்ற மாதம் நாடாளுமன்றத்தில் இந்தப் புள்ளிவிவரத்தை ஒப்புக் கொண்டிருக்கிறார்) தங்கள் பெற்றோரும் உற்றாரும் மலத்தொட்டிகளிலும், கழிவுநீர் சாக்கடைகளிலும் மூச்சுத் திணறி இறந்த அந்தக் கொடூரக் கதைகளை, கண்களில் நீர் வழிய, துக்கம் தொண்டையை அடைக்க விவரித்தார்கள் பல குழந்தைகள். அந்தக் கதைகள் கொடூரமானதொரு அபத்தத்தின் குறியீடுகள். ஒருபுறம் அம்பேத்கர் ஒரு மாபெரும் பிம்பமாக கட்டமைக்கப்படுகிறார். அவர் எந்த மக்களுக்காக வாழ்ந்து போராடினாரோ அம்மக்களோ உயிர் வாழ்வதற்காகக் கையேந்தி நிற்கிறார்கள். நீக்கமற நிறைந்திருக்கும் போலித்தனம்!

இந்திய அரசியல் சட்டம் தீண்டாமையை ஒழித்துவிட்டது. ஆனால் தீண்டாமையை மறு உற்பத்தி செய்யும் சூழலை மாற்றுவதற்கு அது ஒன்றும் செய்யவில்லை. துப்புரவுப் பணியாளர்கள் தீண்டாமையின் ஆகக் கொடிய வடிவத்தை அனுபவிப்பவர்கள். சாதி இந்துக்களுக்கு மட்டுமல்ல, மற்ற தலித் சாதிகளுக்கும் கூட அவர்கள் தீண்டத்தகாதவர்கள்தான். தீண்டாமை விடயத்தில் காந்தியின் கருத்துகள் எத்தனை பிற்போக்கானவையாக இருந்தாலும், “தோட்டிகள்” என்று அழைக்கப்படும் துப்புரவுப் பணியாளர்கள்தான் தலித்துகளின் பிரதிநிதிகள் என்று அவர் சரியாகவே அடையாளம் கண்டார். தன் கருத்தை நிலைநாட்ட அவர்களில் ஒருவனாகத் தன்னை அடையாளம் காட்டிக் காட்டிக்கொண்டார். அவர்கள் மீதான அன்பைக் காட்டுவதற்காக அவர்கள் குடியிருப்பிலேயே வாழ்ந்தார். காந்தியின் பெயரால் உறுதியேற்றுக் கொள்ளும் அரசு, மனிதத்தன்மையைக் கொல்லும் இந்த பணியை சட்டவிரோதமாக்குவதற்கும் அம்மக்களுடைய மறுவாழ்வுக்கும் முன்னுரிமை தந்திருக்க வேண்டும். ஆனால் மனித மலத்தை மனிதனே அள்ளும் கொடுமை பற்றி பெரும் கவலை கொண்டிருப்பது போல காட்டிக் கொள்ளும் இந்த அரசு, அடுக்கடுக்காக கமிட்டிகளை மட்டும் அமைத்து இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை மட்டும் கடந்த
46 ஆண்டுகளாகத் தள்ளிப்போட்டு வருகிறது.

manual-scavenging-modi-clean-india
நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டம் எத்துணை பெரிய மோசடி

1949-ல் தொடங்கிய இந்த ஆட்டம் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. 1949-ல் அன்றைய பம்பாய் அரசு, வி.என். பார்வே என்பவர் தலைமையில் “துப்புரவுப் பணியாளர் வாழ்நிலை ஆய்வுக்குழு” ஒன்றை அமைத்தது. 1952-ல் அக்குழு தனது அறிக்கையை கொடுத்தது. 1955-ல் மத்திய உள்துறை அமைச்சகம் அக்குழுவின் முதன்மையான பரிந்துரைகள் அனைத்தையும் எல்லா மாநில அரசுகளுக்கும் சுற்றுக்கு விட்டு, அவற்றை அமல்படுத்துமாறு கோரியது. எதுவும் நடக்கவில்லை.

1957-ல் என்.ஆர்.மல்கானி என்பவர் தலைமையில் மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு குழுவை அமைத்து, மலம் அள்ளும் தொழிலை முடிவுக்கு கொண்டுவர திட்டம் வகுக்குமாறு கோரியது. 1960-ல் தனது அறிக்கையை அளித்த இக்குழு, மனிதக் கழிவை மனிதர் அகற்றும் கொடுமையை மூன்றாவது ஐந்தாண்டு திட்ட காலத்திற்குள் முடிவுக்கு கொண்டு வர மத்திய மாநில அரசுகள் திட்டமிட வேண்டுமெனக் கோரியது. இதுவும் நடக்கவில்லை.

நகராட்சி நிர்வாகத்துக்கு வெளியே, தனியார் கழிவறைகளில் மனித மலத்தை அகற்றும் பணி, பரம்பரைத் தொழிலாக துப்புரவுப் பணியாளர்கள் மீது திணிக்கப்படும் இடங்களில் அதனை முடிவுக்கு கொண்டு வருமாறு 1965-ல் இன்னொரு குழு பரிந்துரைத்தது. இதுவும் கிடப்பில் போடப்பட்டது.

1968-69 ல் தொழிலாளர்களுக்கான தேசிய கமிசன், துப்புரவுப் பணியாளர்களின் பணிநிலை மற்றும் வாழ்நிலைகளை முறைப்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த சட்டமொன்றை இயற்றுமாறு பரிந்துரைத்தது. காந்தி நூற்றாண்டையொட்டி 1969-ல் திறந்த கழிவறைகள் அனைத்தையும், நவீனக் கழிவறைகளாக மாற்றுவதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டது. அது துவக்க நிலையிலேயே தோல்வியடைந்தது. இதே திட்டத்தை 1980-ல் அறிவித்த உள்துறை அமைச்சகம், மனிதக் கழிவகற்றும் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட துப்புரவுப் பணியாளர்களையும் அவர்களது சுற்றத்தாரையும் குறிப்பிட்ட சில நகரங்களில் வேறு கவுரவமான தொழில்களில் பணியமர்த்தும் திட்டம் ஒன்றை அறிவித்தது. 1985-ல் இத்திட்டம் உள்துறையிடமிருந்து மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு மாற்றப்பட்டது. 1991-ல் திட்டக்குழு இத்திட்டத்தை இரண்டாகப் பிரித்தது. கழிவறைகளை மாற்றியமைக்கும் பொறுப்பு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறைகளிடம் ஒப்படைக்கப்பட்டது. துப்புரவுப் பணியாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பொறுப்பு மக்கள் நல்வாழ்வுத் துறையிடம் விடப்பட்டது. 1992-ல் துப்புரவுப் பணியாளர்களை மனிதக்கழிவகற்றும் பணியிலிருந்து விடுவித்தல் மற்றும்
மறுவாழ்வளித்தல் என்ற திட்டத்தை நல்வாழ்வுத்துறை அறிவித்தது. எதுவும் நடக்கவில்லை.

கிரிமினல் அலட்சியம்!

manual-scavenging-killed-in-drainage
விழுப்புரம்-கா.குப்பம் பகுதியில் சாக்கடை அடைப்பை நீக்குவதற்காக இறங்கிய 19 வயதான அந்தோணிராஜுக்கு அந்தக் குழியே சவக்குழியானது. (கோப்புப் படம்)

அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 14, 17, 21, 23 ஆகியவற்றின் படியே மனிதக்கழிவகற்றும் பணி தடுக்கப்பட்டிருக்க வேண்டும். சிவில் உரிமைப் பாதுகாப்புச் சட்டம் (1955) இன் 7அ மற்றும் 15அ பிரிவுகள், மனிதக்கழிவகற்றும் பணியிலிருந்து துப்புரவுப் பணியாளர்களை விடுவிப்பதற்கும், தொடர்ந்து அவர்களை அப்பணியில் ஈடுபடுத்துவோருக்கு தண்டனை விதிக்கவும் வகை செய்கின்றன.

1993-ல் “மனிதக் கழிவு அகற்றுதல் மற்றும் திறந்த கழிவறைகள் தடுப்புச் சட்டம்” என்றொரு மத்திய சட்டம் இயற்றப்பட்டது. 1997 வரை அது அரசிதழில் வெளியிடப்படவில்லை. 2000 ஆண்டு வரையில் எந்த மாநிலமும் இதன் அடிப்படையில் சட்டமியற்றவில்லை. துப்புரவுப் பணியாளர்களின் குழந்தைகளால் 1994-இல் துவக்கப்பட்ட “சஃபாய் காம்கார் ஆந்தோலன்” என்ற அமைப்பும், சில தன்னார்வக் குழுக்களும், மலம் அள்ளும் தொழிலில் ஈடுபடும் சமூகத்தைச் சேர்ந்த 7 பேரும் இணைந்து டிசம்பர் 2003-ல் பொதுநல வழக்கு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தொடுத்தனர். நீதிமன்ற அவமதிப்புக்காக அரசின் மீது நடவடிக்கை கோரினர். “தங்கள் மீது தவறே இல்லை” என்று மாநில அரசுகள் வாதாடின. இந்தப் பொய்யை முறியடிக்க, ஏராளமான தரவுகளைத் திரட்டி 12 ஆண்டு காலம் போராடி, 27 மார்ச் 2014 அன்று ஒரு சாதகமான தீர்ப்பினைப் பெற்றனர்.

“1993 முதல் மனிதக் கழிவு அகற்றும் பணியிலும் கழிவுநீர் கால்வாயிலும் உயிரிழந்த துப்புரவுப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு பத்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 1268 பேர் இவ்வாறு இறந்திருப்பதாகவும், இவர்களில் 18 பேருக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்றும் பீம் யாத்ராவில் பங்கேற்றவர்கள் தமது உரையில் குறிப்பிட்டனர்.

மனிதக் கழிவகற்றும் பணியைத் தடை செய்து 2013-ல் நாடாளுமன்றமும் ஒரு சட்டம் பிறப்பித்திருக்கிறது. ஆனால் எல்லா மாநில அரசுகளும் “எங்கள் மாநிலத்தில் இப்பிரச்சினை இல்லவே இல்லை” என்றே சாதிக்கின்றன. ஆனால் 7,94,000 பேர் மனிதக்கழிவு அகற்றும் பணியில் ஈடுபட்டிருப்பதாக 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு கூறுகிறது. இச்சட்டத்தை மீறுவோரில் மற்றெல்லோரையும் விட அரசுக்குத்தான் முதலிடம்.

ரயில்வே துறை வடிவமைக்கும் ரயில் பெட்டிகளின் கழிவறைகள், தண்டவாளத்தில் மலம் விழுகின்ற வகையில்தான் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைத் துப்புரவுப் பணியாளர்கள்தான் தம் கையால் சுத்தம் செய்கிறார்கள். “தூய்மை இந்தியா இயக்கத்தின் விளைவாக 2019-ல் இந்தியாவில் மனிதக் கழிவை மனிதர் அகற்றுவது முடிவுக்கு வந்து விடும்” என்று தடபுடலாக அறிவித்தது மட்டுமின்றி, இந்தியாவில் புல்லட் ரயில் வலைப்பின்னலை உருவாக்கப்போவதாகவெல்லாம் பேசினார் பிரதமர். ஆனால் ரயில் பெட்டிகளில் உள்ள இந்தக் கழிவறைகள், பயோ டாய்லெட்டுகளாக எப்போது மாற்றியமைக்கப்படும் என்பதற்கு மட்டும், ஒரு கால இலக்கை அவரால் சொல்ல முடியவில்லை.

ஏன் இந்த அலட்சியம்?

manual-scavenging-caption-1ஏப்ரல் 19-ம் தேதியன்று, பீம் யாத்ரா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மைய அரசு, மனிதக் கழிவை அகற்றும் துப்புரவுப் பணியாளர்கள் பற்றிய விவரங்களை மாநில அரசுகளிடமிருந்து பெற முடியவில்லை என்பதால், தானே நேரடியாக ஆய்வு நடத்த முடிவு செய்திருப்பதாகக் கூறியிருக்கிறது. அரசுக்கு இதில் ஈடுபாடில்லை என்பது பளிச்சென்று தெரிகிறது. இந்த ஆய்வைக் காட்டி இன்னும் பத்து ஆண்டுகளுக்கு துப்புரவுப் பணியாளர்கள் இழுத்தடிக்கப்படுவார்கள்.

உலக அரங்கில் தலைமைப் பாத்திரம் ஆற்ற பெரிதும் ஆசைப்படும் ஒரு தேசம், இப்படிப்பட்ட ஒரு அவமானத்தை எதற்காகச் சுமக்க வேண்டும்? இதற்கு விடை காண்பது கடினமல்ல. ஆகச்சிறுபான்மையான துப்புரவுப் பணியாளர் சமூகம் துண்டு துண்டாக சிதறிக் கிடக்கிறது. மொத்த சமூகத்திலிருந்து மட்டுமின்றி, தலித் சமூகத்திலிருந்தும் துண்டிக்கப்பட்டு எல்லா ஊர்களிலும் ஏதோ ஓர் மூலையிலுள்ள சேரியில் ஒடுங்கிக் கிடக்கிறது. அரசியல் கட்சிகளின் வாக்கு கணக்கில் இந்தச் சமூகத்துக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. இருப்பினும், இது பற்றி ஏன் பேசுகிறார்கள் என்றால், இப்பிரச்சினை தங்களுடைய தேசிய கவுரவத்துக்கு இழுக்காக அமைந்திருப்பதாக எண்ணி ஆளும் வர்க்கத்தினர் சங்கடப்படுகிறார்கள். அந்தக் காலத்து சீர்திருத்தவாதிகள், நியாயப்படுத்த முடியாத கவுரவக் குறைச்சலான விவகாரமாக தீண்டாமையைக் கருதினார்களல்லவா, அது போலத்தான். தீண்டாமையைப் போலவே, மனிதக் கழிவை மனிதர் அகற்றும் வழக்கமும் நிலப்பிரபுத்துவக் கலாச்சாரத்துடன் இணைந்திருக்கிறது. இதனை ஒழித்தால் பெரும்பான்மை சமூகத்தின் அதிருப்தியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

இப்பிரச்சினையின்பால் ஆளும் வர்க்கம் கடைப்பிடிக்கும் அணுகுமுறையைப் புரிந்து கொள்வதில் நமக்கு சிரமம் ஒன்றும் இல்லை. மனிதக் கழிவகற்றும் துப்புரவுப் பணியாளர்களின்பால் தலித் இயக்கங்கள் காட்டும் அலட்சியம்தான் விசித்திரமானது. மைய நீரோட்டத்திலுள்ள தலித் அமைப்புகள் இப்பிரச்சினையைக் கையிலெடுத்ததே இல்லை. அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பெறுவது மட்டும்தான் தலித் இயக்கத்தின் முதன்மையான போர்தந்திரமாக உள்ளது.

protest-against-manual-scavenging
கையால் மலம் அள்ளும் இழிவு தாழ்த்தப்பட்டோர் மீது சுமத்தப்படுவதை முற்றிலுமாகத் தடை செய்யக் கோரி கோயம்புத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)

அம்பேத்கர் அரசியலில் பிரதிநிதித்துவம் பெறப் போராடினார். பின்னர் அதனை பொது வேலைவாய்ப்பிற்குக் கொண்டு சென்றார். வேலைவாய்ப்புக்கு கல்வி முன் நிபந்தனை ஆனது. தலித் மக்களின் அரசியல் நலன்களை தலித் அரசியல்வாதிகள் பாதுகாப்பார்கள் என்பதும், அதிகார வர்க்கப் பதவிகளில் அமரும் படித்த தலித்துகள் உழைக்கும் மக்களுக்கு பாதுகாப்புக் கவசமாக விளங்குவார்கள் என்பதும் அவரது எதிர்பார்ப்பு. எனவேதான், பெரும்பான்மைதலித் மக்களின் பொருளாயத பிரச்சினைகள் கையாளப்படவில்லை. உழைக்கும் தலித் மக்களிடமிருந்து தன்னை அந்நியப்படுத்திக் கொண்டுவிட்ட தலித் இயக்கத்தின் அக்கறையோ, இட ஒதுக்கீடு மட்டும்தான் என்று ஆகிவிட்டது.

கடந்த 70 ஆண்டுகளில் தலித் மக்கள் மத்தியில் உருவாகி வந்திருக்கும் நடுத்தர வர்க்கம், தலித் மக்களிடமிருந்து முற்றாகத் தன்னைத் துண்டித்துக் கொண்டு விட்டது. பீம் யாத்ராவில் அம்பேத்கர் மாபெரும் உந்து சக்தியாகத் திகழ்ந்ததும், அம்பேத்கரிஸ்டுகள் யாரும் அங்கே இல்லாமலிருந்ததும் மேற்கண்ட உண்மையின் வெளிப்பாடாக அமைந்திருந்தது. குறிப்பிடத்தக்க முற்போக்காளர்கள் பலரும் ஏழைத் துப்புரவுப் பணியாளர்களின் போராட்டத்துக்கு தமது ஆதரவைத் தெரிவித்துக் கொண்டனர். ஆனால் அம்பேத்கரிஸ்டுகள் என்று தம்மை அழைத்துக் கொள்வோர், அங்கே வராமலிருந்ததன் மூலம் தம்மை இனங்காட்டிக் கொண்டனர்.

(எகனாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி, மே,7, 2016 இதழில் வெளியான கட்டுரையின் சற்றே சுருக்கப்பட்ட மொழியாக்கம்)
______________________________
புதிய ஜனநாயகம், ஜூன் 2016
______________________________

பா.ஜ.க ஹோண்டா கூட்டணியை முறியடித்த தொழிலாளர்கள்

0

வெற்றியின் முதல் படியில் ஹோண்டா தொழிலாளர் போராட்டம்

“இது எங்களுக்கான போராட்டம் மட்டும் அல்ல; ஒப்பந்த தொழிலாளர்களான எங்கள் சகோதரர்களுக்காக, அவர்கள் மிகக் கொடூரமாகச் சுரண்டப்படுவதை எதிர்த்தும் நாங்கள் போராடுகிறோம்.”
திலீப், நிரந்தரத் தொழிலாளி,
ஹோண்டா மோட்டார்ஸ், ராஜஸ்தான்.

ராஜஸ்தான் மாநிலம், ஆல்வார் மாவட்டத்தில் குஷ்கேரா தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ஹோண்டா மோட்டார்ஸ்-ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த தொழிலாளர்களின் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க அம்சம், நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களிடையே ஏற்பட்ட ஐக்கியமும் ஒற்றுமையும்தான். அந்தப் பிணைப்பை நிரந்தரத் தொழிலாளர்கள் முன்கையெடுத்து நிலைநாட்டியதுதான்.

honda-sit-in-strike
பிப்ரவரி 16 அன்று ஹோண்டா தொழிற்சாலைக்குள் அந்நிர்வாகத்தின் அடாவடித்தனத்தையும் ஒடுக்குமுறையையும் கண்டித்து உற்பத்தியை நிறுத்தி வைத்து நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் இணைந்து நடத்திய போராட்டம்

நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களிடையே ஒற்றுமையே காணமுடியாத அளவிற்குப் பிளவு இருப்பதுபோலத் தென்படுவதெல்லாம் வெறும் மாயை என்பதையும், மொழி, இனம், பண்பாட்டு வேறுபாடுகளைக் கடந்து தொழிலாளி வர்க்கம் ஐக்கியப்பட்டு, முதலாளித்துவ சுரண்டல், அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராட முடியும் என்பதையும் அப்போராட்டம் மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறது.

ஜப்பானைச் சேர்ந்த தேசங்கடந்த தொழிற்கழகமான ஹோண்டா மோட்டார்ஸ், இந்திய இரு சக்கர வாகன சந்தையில் 22 சதவீதத்தைத் தனது பிடியில் வைத்திருக்கிறது. அரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் ஹோண்டா நிறுவனத்திற்குத் தொழிற்சாலைகள் இருந்தாலும், ராஜஸ்தானிலுள்ள தொழிற்சாலைதான் உற்பத்தித் திறனில் ஆசியாவிலேயே முதன்மையானது எனக் கூறப்படுகிறது. அத்தொழிற்சாலையில் நாளொன்றுக்கு 4,400 இரு சக்கர வாகனங்கள் தயாரிக்கப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 20 விநாடிகளுக்குள் ஒரு பைக் அல்லது ஒரு ஸ்கூட்டர்.

எஃப் 2 எனச் சுருக்கமாக அழைக்கப்படும் ஹோண்டா நிறுவனத்தின் ராஜஸ்தான் தொழிற்சாலையில் நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கை கிட்டதட்ட 4,000. ஒரு தொழிலாளி, ஓவர் டைமையும் சேர்த்துக் கணக்கிட்டால், 12 மணி நேரத்தில் ஒரு வாகனத்தைத் தயாரிக்கிறார் எனக் கொள்ளலாம்.

எட்டு மணி நேரம் கொண்ட ஷிஃப்டில், உணவு இடைவேளை முப்பது நிமிடங்கள், தலா 15 நிமிடங்கள் கொண்ட இரண்டு தேநீர் இடைவேளை, மீதமுள்ள ஏழு மணி நேரமும் ஒரு விநாடியைக்கூட வீணாக்காமல் இயந்திரங்களோடு போட்டிபோட்டு உற்பத்தி செய்து தள்ளிக் கொண்டேயிருக்க வேண்டும். இதில் எந்த இடையூறையும் – சிறுநீர் கழிக்கவோ, தொழிலாளி சற்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவோ நிர்வாகம் அனுமதிப்பதில்லை. இடைவேளை நேரத்தில் ஒரு நிரந்தரத் தொழிலாளி சிறுநீர் கழித்துவிட்டுத் திரும்ப ஓரிரு விநாடி தாமதமானாலும், அவருக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்படுவதோடு, எச்சரிக்கை நோட்டீசும் தரப்படும்.

ஒரு ஒப்பந்த தொழிலாளி இவ்வாறான ‘தவறை’ச் செய்தால், அவரிடம் எந்தவிதமான விளக்கமும் கேட்காமல், அவர் வேலையிலிருந்து துரத்தப்படுவார். ஒப்பந்த தொழிலாளிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டாலும், அதன் காரணமாக ஒருநாள்கூட விடுப்பு எடுக்க முடியாது. அப்படி எடுத்துவிட்டால், அவருடைய ஒப்பந்த காலம் அடுத்த ஆண்டிற்குப் புதுப்பிக்கப் படாமல் ரத்து செய்யப்படும்.

சிறு தவறுக்குக்கூட நிரந்தரத் தொழிலாளர்கள் தகாத வார்த்தைகளால் ஏசப்பட்டு, அவமானப்படுத்தப்படுவதும்; ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதும் ஹோண்டா நிர்வாகத்தில் சர்வ சாதாரணமானது.

honda-workers-solidarity
ஹோண்டா தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து குர்கான், மானேசர், தாபுகாரா சிறப்புப் பொருளாதார மண்டலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் குர்கானில் உள்ள தேவிலால் விளையட்டு அரங்க மைதானத்தில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

4,000 தொழிலாளர்கள் வேலை செய்து வரும் ராஜஸ்தானிலுள்ள ஹோண்டாவின் எஃப் 2 தொழிற்சாலையில் 472 பேர்தான் நிரந்தரத் தொழிலாளர்கள். மீதமுள்ள அனைவரும் பல்வேறு ஏஜென்சியின் கீழ்வரும் ஒப்பந்த தொழிலாளர்கள். ஓவர்டைமையும் சேர்த்துக் கணக்கிட்டால், ஒரு நிரந்தரத் தொழிலாளி மாதமொன்றுக்கு ரூ 22,000 வரை ஊதியம் பெறலாம். ஆனால், அதே வேலையைச் செய்யும் ஒப்பந்தத் தொழிலாளியின் மாதக் கூலி ரூ 10,000 தான்.

சலிக்காமல், எதிர்த்துப் பேசாமல், கடினமாக வேலை செய்தால் நிரந்தரத் தொழிலாளியாகி விடலாம் என்ற கனவில் ஒப்பந்த தொழிலாளி இருத்தி வைக்கப்படுகிறான். ஆனால், நிரந்தரத் தொழிலாளியாக உயர்வு பெறுவதற்கு ஹோண்டா நிர்வாகம் நடத்தும் தேர்வில் தோல்வியடையச் செய்வதன் மூலம் ஒப்பந்த தொழிலாளி ஒப்பந்த தொழிலாளியாகவே நிறுத்தப்படுகிறான்.

மோடி பிரதமராகப் பதவியேற்றுக் கொண்ட சில மாதங்களிலேயே, ராஜஸ்தானை ஆளும் பா.ஜ.க. அரசு தொழிலாளர் நலச் சட்டம், தொழிற்பழகுநர் சட்டம், ஒப்பந்த தொழிலாளர் சட்டம், தொழிற்சாலை சட்டம் ஆகியவற்றில் திருத்தங்களைச் செய்து, ராஜஸ்தானைப் பன்னாட்டு நிறுவனங்களின் பலிபீடமாக மாற்றியது. இத்திருத்தங்கள் தொழிலாளர்களைத் தமது கொத்தடிமைகளாக நடத்துவதற்கு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அதிகாரமளித்தன.

இத்திருத்தங்கள் தொழிலாளர்கள் மத்தியில் பீதியை உருவாக்கி விடும் என பா.ஜ.க.வின் வசுந்தரா ராஜே அரசும், பன்னாட்டு நிறுவனங்களும் கனவு கண்டன. அந்த எண்ணத்தில் சம்மட்டி அடியாக இறங்கியது, ஹோண்டா தொழிலாளர்களின் ஐக்கியமும் போராட்டமும். தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்பட்டவுடேனேயே, ஆகஸ்டு 2015-ல் ஹோண்டா தொழிற்சாலையில் தொழிற்சங்கத்தைத் தொடங்கக் கோரும் விண்ணப்பம் தொழிலாளர் நலத் துறையிடம் அளிக்கப்பட்டது.

honda-breaking-bondsதொழிலாளர்களின் நியாயமான, சட்டபூர்வமான, ஜனநாயகப்பூர்வமான இக்கோரிக்கையை, பா.ஜ.க. அரசும், ஹோண்டா நிர்வாகமும் சட்டவிரோதமான, மோசடியான குறுக்கு வழிகளில் முறியடிக்க முனைந்தன. தொழிற்சங்கத்தைக் கட்டுவதற்கு ஆதரவாகக் கையெழுத்திட்ட 227 தொழிலாளர்களுள் ஒரு 21 பேரின் கையெழுத்தைப் போலியாக (ஃபோர்ஜரி)ப் போட்டு, தொழிற்சங்கம் தொடங்க தங்களுக்கு விருப்பமில்லை என்ற மனுவைத் தயாரித்து, தொழிலாளர் நலத் துறையிடம் கொடுத்தது, நிர்வாகம். இது குறித்து எந்தவொரு முறையான விசாரணையையும் நடத்தாமல், தொழிலாளர்களின் விண்ணப்பத்தை முடக்கி வைத்தது, தொழிலாளர் நலத் துறை.

தொழிற்சங்கத் தலைவராக முன்நிறுத்தப்பட்ட நரேஷ்குமாரை பீகாருக்கு மாற்றியது நிர்வாகம். இதற்கு அவர் அடிபணிய மறுக்கவே, அவரும் தொழிற்சங்கச் செயலராக முன்நிறுத்தப்பட்ட ராஜ்பால் உள்ளிட்டு மூன்று பேரைப் பணி நீக்கம் செய்ததோடு, மேலும் 5 தொழிலாளர்களைப் பணியிடை நீக்கம் செய்தது. மேலும், செப்டம்பர் 2015 தொடங்கி பிப்ரவரி 2016-க்குள் தொழிற்சங்கத்திற்கு ஆதரவாகச் செயல்பட்ட 1,200 ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு, அந்த வேலை சுமை முழுவதும் மற்ற தொழிலாளர்கள் மீது வலுக்கட்டாயமாக ஏற்றப்பட்டது. நிர்வாகத்தின் அடியாட்கள், தொழிலாளர்கள் என்ற போர்வையில் உற்பத்திப் பிரிவுக்குள் கொண்டுவரப்பட்டு, தொழிலாளர்கள் அவர்களின் நேரடிக் கண்காணிப்பிற்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டனர்.

இவ்வாறு தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையேயான முரண்பாடு சிறுகச்சிறுக முற்றி, பிப்ரவரி 16 அன்று போராட்டமாக வெடித்தது. அன்றைய தினம், தொடர்ந்து மூன்று நாட்கள் ஓவர் டைம் வேலை வாங்கப்பட்ட ஒரு ஒப்பந்த தொழிலாளியை நான்காவது நாளாகவும் ஓவர் டைம் செய்யுமாறு அதிகாரிகள் நிர்பந்திக்க, அவர் தனது உடல் நிலையைக் காட்டி மறுத்தார். அவரின் நிலையைப் பரிசீலிக்கவே மறுத்த சூப்பர்வைசர்கள், அத்தொழிலாளியைத் தரக்குறைவாகப் பேசியும் அடித்தும் அவமானப்படுத்தினர். நிர்வாகத்தின் இந்த ஈனத்தனமான செயலையடுத்து, குமுறிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் உற்பத்தி நிறுத்தம் போராட்டத்தை உடனடியாகவே தொடங்கினர். “ஏ” ஷிப்டில் வேலை செய்துகொண்டிருந்த 2,000 தொழிலாளர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு, ஒப்பந்த தொழிலாளியைத் தாக்கிய மேலாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியதோடு நின்றுவிடாமல், பணி நீக்கம் மற்றும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தொழிற்சங்க முன்னணியாளர்கள், வேலை நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களை மீண்டும் பணியமர்த்தவும், தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கவும் கோரி தொழிற்சாலைக்குள்ளேயே போராட்டத்தைத் தொடர்ந்தனர். அதேபொழுதில், அடுத்த ஷிப்டுக்கு வரத்
தயாராக தொழிற்சாலையின் வாசலில் நின்றுகொண்டிருந்த தொழிலாளர்களும் நிர்வாகத்தைக் கண்டித்துப் போராட்டத்தைத் தொடங்கினர்.

தொழிலாளர்களின் இந்தப் பதிலடியை எதிர்பார்க்காத நிர்வாகம் போலீசின் உதவியோடு போராட்டத்தை முறியடிக்க முனைந்தது. தொழிற்சாலைகளின் அனைத்து நுழைவாயில்களையும் அடைத்து உள்ளே போராடிக் கொண்டிருந்த தொழிலாளர்களைத் தொழிற்சாலைக்குள் சிறை வைத்தது. நிர்வாகத்தின் கைக்கூலியாக வந்த வட்டாட்சியர், பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஐந்து முன்னணியாளர்களை அழைத்துச் சென்று, போலீசிடம் ஒப்படைத்தார். இதனையடுத்து பின்புற வாயில் வழியாக போலீசையும் ரவுடிகளையும் தொழிற்சாலைக்குள் இறக்கி, போராடிய தொழிலாளர்கள் மீது மிருகத்தனமான தாக்குதலை நடத்தியது. போலீசிடம் ஒப்படைக்கப்பட்ட முன்னணியாளர்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல், தொடர்ந்து எட்டு நாட்கள் சட்டவிரோதக் காவலில் வைத்திருந்து, சித்திரவதை செய்தது.

இதன் பிறகும் பிப்.16 அன்று தொடங்கிய போராட்டத்தின் கனல் தணிந்து போகாமல் கனன்று கொண்டிருக்கவே, தொழிற்சங்க முன்னணியாளர்களைத் தேடித் தேடிக் கைது செய்தது, போலீசு. மொத்தமாக 44 தொழிலாளர்கள் பிணையில் வெளியில் வர முடியாத வழக்குகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். போராடிய தொழிலாளர்கள் ஆலையைச் சுற்றி 500 மீட்டருக்குள் நுழையமுடியாதபடி நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. புதிய ஒப்பந்த தொழிலாளர்களைப் பணிக்கு எடுத்தும், குஜராத்தில் உள்ள தனது ஆலையின் உற்பத்தி இலக்கைக் கூட்டியும் உற்பத்தி சரிந்துவிடாமல் காப்பாற்ற முனைந்தது, ஹோண்டா நிர்வாகம்.

இந்தப் போராட்டத்தையும், அதன் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களையும் வெளியுலகிற்குத் தெரிந்துவிடாதபடி மூடி மறைத்துவிட ஹோண்டா நிர்வாகமும், போலீசு, நீதிமன்றம் உள்ளிட்ட அதிகார வர்க்கமும் கூட்டுக் களவாணிகளாகச் செயல்பட்டன. தொழிலாளர்களைச் சந்தித்து, அவர்களின் கருத்துக்களைப் பதிவு செய்த “நியூஸ் லாண்டரி” என்ற இணைய தளப் பத்திரிகையைச் சேர்ந்த அமித் என்ற பத்திரிகையாளர் ஹோண்டா நிர்வாகத்தின் அடியாட்களால் மிரட்டப்பட்டதோடு, உள்ளூர் போலீசு நிலையத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டார்.

ஆனாலும், ஹோண்டா தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவான கருத்துகளும் செய்திகளும் போராட்டங்களும் பரவியதை ஹோண்டா-பா.ஜ.க.கூட்டணியால் தடுக்க முடியவில்லை. குறிப்பாக, உள்ளூர் பொதுமக்கள் கட்சி வேறுபாடின்றி, ஹோண்டா தொழிலாளர்களுக்கு ஆதரவாக நின்று கிராமக் கூட்டங்களை நடத்தினர். தாபகுரா, மானேசர் ஆகிய இடங்களில் உள்ள மாருதி தொழிலாளர்களும், மானேசரில் உள்ள ஹோண்டா தொழிலாளர்களும் போராட்டங்களை நடத்தினர். இந்த நிலைமைகள் ஹோண்டா-பா.ஜ.க. ராஜஸ்தான் அரசு கூட்டணியைப் பின்வாங்கச் செய்து, கைது செய்யப்பட்ட 44 தொழிலாளர்களுள் 39 பேருக்குப் பிணை வழங்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது.

ஹோண்டா நிர்வாகம் தொழிலாளர்கள் மத்தியில் ஐக்கியம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத் திட்டமிட்டே, தனது தொழிற்சாலையில் உ.பி., பீகார், ஒரிசா எனப் பல்வேறு மாநிங்களைச் சேர்ந்தவர்களை ஒப்பந்த தொழிலாளர்களாகப் பணிக்கு எடுத்து வருகிறது. எனினும், ஹோண்டா தொழிலாளர்கள் நிரந்தர, ஒப்பந்த தொழிலாளர்கள் மத்தியில் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் மத்தியிலும் ஐக்கியத்தைச் சாதித்துள்ளனர். இவையெல்லாம், ஹோண்டா தொழிலாளர்கள் தமது தொழிற்சங்க உரிமைக்காக கடந்த ஆண்டு ஆகஸ்டு தொடங்கி விடாப்பிடியாக நடத்திவரும் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க வெற்றிகளாகும்.

போராட்டத்தின் வெற்றி தோல்வியைக் காட்டிலும், வேறுபாடுகளைக் கடந்து இத்தொழிலாளர்கள் சாதித்திருக்கும் ஒற்றுமை மிகவும் முக்கியமானது. சர்வதேச மூலதனமும் அரசும் இணைந்து நடத்தும் இத்தாக்குதலை முறியடிக்க தொழிலாளி வர்க்கமும் தேச, இனப் பிரிவினை கடந்த ஒற்றுமையைச் சாதிக்க முடியும். சாதித்தாக வேண்டும்.

– குப்பன்
______________________________
புதிய ஜனநாயகம், ஜூன் 2016
______________________________

கொள்கையா, சாதியா, பணமா ? பென்னாகரம் தொகுதி நேரடி ரிப்போர்ட்

5

கொள்கையா, சாதியா, பணமா? தேர்தல் வெற்றியைத் தீர்மானிப்பது எது?

“மக்கள் சரியில்லைங்க. மக்கள் அயோக்கியர்களாக இருக்கிறதாலே அரசியல்வாதிகளும் அயோக்கியர்களா இருக்காங்க. அரசியல்வாதிகள் அயோக்கியர்களா இருக்கிறதாலே அரசாங்கங்களும் அயோக்கியத்தனமா நடக்குது. எல்லாமே காசுதான். ஓட்டு வாங்க பணத்தை முதலீடு செஞ்சி பதவிக்கு வர்றவன், வந்த பின்னாலே அதை பத்து மடங்கா திருப்பி எடுக்கத்தானே நினைப்பான்?” – அவரது உரையாடலில் வலிந்து திணிக்கப்பட்ட ஒரு மேடை பேச்சு பாணி இருந்தது.

அவர் தன்னை ”தோழர் கிருஷ்ணமூர்த்தி” என்றே அறிமுகப்படுத்திக் கொண்டார். பேச்சின் இடையிலும் தன்னைத் தானே குறிப்பிடும் போதும் பிறர் அழைக்கும் போதும் “தோழர்” என்கிற அடைமொழி தவறி விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். அவர் எர்ரகொல்லனூர் கிளை சி.பி.ஐ. கட்சியின் செயலாளர். எர்ரகொல்லனூர் பென்னாகரம் நகரிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

அன்புமணி
வன்னிய சாதி வாக்குகளை அறுவடை செய்து வெற்றி பெற்றுவிடலாம் எனக் கனவு கொண்டிருந்த அன்புமணியை, டெபாசிட்டைக் காலிசெய்து தோற்கடித்தனர் பெண்ணாகரம் தொகுதி மக்கள்

“இந்த ஊர்லயே மாமா தாங்க நல்லா அரசியல் பேசுவாரு… தி.மு.க.காரன் ஓட்டுக்கு காசு கொடுத்தப்ப கூட வேண்டாம்னு சொல்லி அனுப்பிட்டாரு. ஆனா அத்தை தனியா போயி நாலு ஓட்டுக்கு ரெண்டாயிரம் ரூவாய்னு கறாரா பேசி வாங்கினு வந்திருச்சி” என்றார் மணிவண்ணன். தோழர் கிருஷ்ணமூர்த்தியின் மருமகன் இவர். நடுச்சபையில் வேட்டி உரிந்து விழுந்தவரைப் போல் துணுக்குற்றார் தோழர் கிருஷ்ணமூர்த்தி.

“என்னாங்க செய்யிறது.. வீட்டுல பொம்பளைங்க பேராசை பிடிச்சவளுங்களா இருக்காளுங்க. அவளுங்களுக்கு அரசியலெல்லாம் புரியறதில்லே” சற்றுத் தொலைவில் சாயம் போய் படபடத்துக் கொண்டிருந்த அவரது கட்சிக் கொடியிலிருந்த சிவப்பு தோழரின் முகத்தில் சட்டென ஏறியது.

அன்புமணி தலைகுப்புறக் கவிழ்ந்ததற்கு இரண்டு நாள் கழித்து நாங்கள் பென்னாகரம் சென்றிருந்தோம். அவரது தோல்வியை நூலாகப் பிடித்துக் கொண்டு மக்கள் எப்படி ஓட்டளிக்கிறார்கள், எதற்காக ஓட்டளிக்கிறார்கள், தேர்தல் அரசியல் சமூகத்தின் வேர்மட்ட அளவில் எப்படிச் செயல்படுகிறது, வெற்றி- தோல்வியை தீர்மானிக்கும் சமன்பாடுகள் எவை என்பதைப் புரிந்து கொள்வதே எமது பயணத்தின் நோக்கங்கள்.

பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட வன்னியர் மற்றும் ஆதிதிராவிடர்கள் நெருக்கமாக வசிக்கும் சில கிராமங்கள், பென்னாகரம் நகரப் பகுதி மற்றும் வன்னியரல்லாத பிற சாதியினர் வசிக்கும் பகுதிகளைத் தெரிவு செய்தோம்.

pennagaram-election-sowmiya
அன்புமணியின் மனைவியும் மக்களும் அவருக்காக வன்னிய சாதி உழைக்கும் மக்களிடத்தில் பிரச்சார வேட்டை நடத்தியதைப் பற்றிக் கேட்டபொழுது, அவுங்க கலரைப் பாரு, நம்ம கலரைப் பாரு, ரெண்டு பேரும் ஒரு சாதியாப்பா?” என்று கேலி செய்து சிரித்தனர்.

“ஒரு சிட்டிங் எம்.எல்.ஏ. ஐயாயிரத்தி சொச்சம் ஓட்டு வாங்கி டெப்பாசிட்டையும் பறிகொடுத்து தோற்கிறார் என்பது மகா கேவலமாச்சே தோழர். அதிலும் பென்னாகரம் சி.பி.ஐ. கட்சி செல்வாக்கோடு இருக்கும் பகுதியாச்சே? இங்கே வி.சி. ஓட்டு இருக்கு, தே.மு.தி.க.வுக்கு ஆதரவு இருக்கு…எப்படி தோற்றீர்கள்?”

“எல்லா பயலும் பணம் குடுத்துட்டான். எங்க கிட்டே குடுக்க பணமில்லே.. வேற என்னத்த சொல்ல?”

“பா.ம.க.வுமா?”

“இவங்க ரெண்டு பேரும் நேரடியா ஓட்டுக்கு ஐநூறு, அறுநூறு கொடுத்தாங்க. பா.ம.க.வுக்கு சாதி ஓட்டு இருக்கு… அதனால அவன் அந்தந்த ஊர் நாட்டாமைக்காரங்க கிட்டே நாலைஞ்சி லச்சம் குடுத்து ஊர்காரன் ஓட்டையெல்லாம் அப்படியே லம்பா வளைச்சிட்டான்னு சொல்லிக்கிறாங்க?”

“அப்படி கொடுத்திருந்தா அன்புமணி ஜெயித்திருக்கனுமே?”

அவர் முகத்தில் ஒரு பிரகாசம் தோன்றியது. “ஆங்.எப்படி ஜெயிப்பான்னு கேட்கிறேன். மொத்த ஓட்டுல வன்னியர் ஓட்டு பாதிக்கும் கொஞ்சம் கீழேன்னா மத்த சாதி ஓட்டு பாதிக்கும் கொஞ்சம் மேல இருக்கே?”

“மத்த ஓட்டெல்லாம் பிரியாதா?”

pennagaram-election-anbumani-campaign
நத்தம் காலனியில் தாழ்த்தப்பட்டோர் வீடுகளையும் உடமைகளையும் சூறையாடிக் கொளுத்திய (இடது படம்) வன்னிய சாதிவெறியன் அன்புமணியின் ஹை-டெக் பிரச்சாரம்: ஒய்யாரக் கொண்டைக்குள்ள ஈறும் பேனும்.

“அங்கதான் விசயமே இருக்கு… ஏற்கனவே அன்புமணி எம்.பி.யா ஜெயிச்ச பின்னாடி வன்னியருங்க ரொம்ப கொட்டமடிச்சிட்டாங்க. சின்னச் சின்ன பசங்க கும்பலா பைக்ல டர்ர்ருன்னு வர்றதும் போறதும்… ரோட்டுல மத்த சாதிக்காரனை மறிச்சி கலாட்டா பன்றதும்…ஏகப்பட்ட தொல்லை. திரும்ப எம்.எல்.ஏ.வா ஜெயிச்சா கையிலெ பிடிக்க முடியுமா? அதான் மத்த சாதிக்காரனெல்லாம் அன்புமணி தோற்கனும்னா இன்பசேகரனுக்கு போட்டா தான் ஆகும்னு முடிவெடுத்திருக்காங்க… அதே மாதிரி வன்னியர்கள்லேயும் தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வும் ஆதரவு இருக்கு. அந்த ஓட்டு பிரியுமில்லே?”

”அப்படின்னா இதர சாதிக்காரங்க சேர்ந்து தான் பா.ம.க.வை தோற்கடிச்சதா சொல்றீங்க?”

”அட ஆமாங்க. இந்த ஊர்ல பத்து பதினோரு வன்னியர் குடும்பங்கள் தான் இருக்கும். மத்தபடி பெரும்பாலும் நாயுடு – ஒக்கலிகா சமூகம் தான்… எங்க வார்டை எடுத்துக்கங்க… மொத்தம் 930 ஓட்டு இருக்கு. அதுல தி.மு.க.வுக்கு 430 ஓட்டு, அ.தி.மு.க.வுக்கு 175 ஓட்டு விழுந்திருக்கு.. பா.ம.க.வுக்கு 27 ஓட்டு தான் கிடைச்சிருக்கு” என்று ஒரு இடைவெளி விட்டர்வர் “சி.பி.ஐ.க்கு 30 ஓட்டு விழுந்திச்சி” என்றார். பின், “மத்த சாதிக்காரர்களை பகைச்சிகிட்டு அவங்க ஜெயிக்க முடியுமா?” என்று தன் மருமகனைப் பார்த்து கேட்டார். இருவரின் முகங்களிலும் வெற்றிப் பெருமிதம்.

“உங்கள் வீட்டில் யாருக்குப் போட்டார்கள்” என்கிற சங்கடமான கேள்வியைத் தவிர்த்து விட்டோம்.

இந்தத் தேர்தலில் சந்தேகமின்றி காசு விளையாடியிருக்கிறது. காசு மட்டுமின்றி, சாதி உள்ளிட்ட வேறு காரணிகளும் கூட உள்ளது. ஒரே வீட்டிற்கு தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் போட்டி போட்டு காசு கொடுத்துள்ளனர். பா.ம.க. ஊர் நாட்டாமைகளுக்குச் செலவு செய்ததாக மற்ற கட்சியினர் சொல்கின்றனர். இன்னாரென்று குறிப்பான ஆதாரங்கள் எதையும் கூறவில்லை. நேற்று முளைத்த நாம் தமிழர் கட்சியினர் வெளியூரில் இருந்து ஆட்களை இறக்கி வேலை செய்திருக்கின்றனர். இவர்கள் வாங்கிய சில நூறு ஓட்டுக்களுக்கு செலவழித்த தொகையை கணக்கிட்டால் ஓப்பீட்டளவில் பெரிய கட்சிகளுக்கு இணையாக செலவழித்துள்ளனர்.

“உங்க ஏரியாவுல எவ்வளவு காசு கொடுத்தாங்க?” பென்னாகரம் பேருந்து நிலையத்திற்கு அருகே தேநீர் கடை நடத்தும் ஒருவரிடம் பேச்சுக் கொடுத்தோம்.

“இவங்க ஐநூறு, அவங்க அறுநூறு” என்றார் முகத்தில் கொஞ்சம் வெட்கம் எட்டிப் பார்த்தது.

“வீட்ல மொத்தம் எத்தனை ஓட்டு?”

“மொத்தம் ஆறு ஓட்டு இருக்குங்க..”

“அப்ப ஆறாயிரத்துக்கு மேல தேறியிருக்குமே?”

“எதுனா செலவுக்கு ஆகுமில்லே?”

“ஏன் பணம் வாங்கினீங்க? காசு வாங்கி ஓட்டை விற்பது தப்பில்லையா? நாளைக்கு தெரு விளக்கு எரியலெ, ரோடு சரியில்லென்னு அவன் கிட்டே போயி நிக்க முடியுமா உங்களால?”

pennagaram-election-cartoon“என்னா சார், அவன் வூட்டு துட்டையா குட்த்தான்? எல்லாம் நம்ப கிட்ட கொள்ளெ அடிச்சது தானே? இப்படி தேர்தல்னா தானே துட்ட கண்ல காட்றானுவோ? இப்ப காசு குடுக்காம ஒருத்தன் ஜெயிக்கிறான்னே வையிங்க… அவன் மட்டும் ஜெயிச்சி வந்து என்னாத்த கிழிக்கப் போறான்? எப்டியும் ஜெயிச்சி உள்ற போன திருடத் தானே போறான்?” அவரது முகத்தில் இருந்த வெட்கம் அகன்றது; தர்மாவேசத்தோடு பேசிச் சென்றவரை தடுத்து அடுத்த கேள்வியை கேட்டோம்.

“சரிங்க… ரெண்டு கட்சிக்காரன்ட்டையும் துட்டு வாங்கியிருக்கீங்களே, யாருக்குப் போட்டீங்க?”

“மூணு வோட்டு தி.மு.க.வுக்கு, மூணு வோட்டு ரெட்டெலைக்கு” கோபம் அடங்கி நியாயஸ்தராக பேசினார்.

“இப்படி காசு வாங்கிட்டு சொந்த சாதிக்காரருக்கே துரோகம் செஞ்சிருக்கீங்களே; உங்கள மாதிரி ஆளுங்க இருந்தா எப்படிங்க அன்புமணி முதலமைச்சர் ஆவாரு?”

“பென்னாகரத்துல ஜெயிச்சி தான் அவரு முதலமைச்சர் ஆகப் போறாரா? கோயமுத்தூர்ல, மதுரைல, திருச்சில, மெட்றாசுல எல்லாம் ஜெயிக்க வேணாம்? சாதிய சொல்லித் தானே இம்மாம் பெரிய கட்சி ஆனாங்க; சாதிக்கு என்ன செஞ்சாங்க? நாங்க கஸ்டப்படறோம், துன்றோம்… சாதியா சோறு போட்டுச்சி… இல்ல சாதிக்காரன்னு ஆத்திர அவசரத்துக்கு ஐயா கிட்ட கைமாத்து கேட்ட குடுத்துட போறாரா?”

“ரெண்டு கட்சியும் காசு கொடுக்கலைன்னா மாம்பழத்துக்கு தானே போட்டிருப்பீங்க?”

“அப்டி இல்ல சார். எப்டியும் சூரியனோ ரெட்டெலையோ தான் வரப் போவுது.இன்னாத்துக்கு ஓட்டை வேஸ்ட் பண்ணனும்? அவுங்க ரெண்டு பேர்ல யாருக்கோ தான் போட்ருப்பேன்”

மக்கள் ஜெயிக்கும் குதிரையின் மேல் பந்தயம் கட்டுகிறார்கள். இதில் பணம் ஒரு துணைக்காரணியாக சேர்ந்து விடுகிறது. மக்கள் எவருக்கும் பணம் வாங்குவதில் சிறிதளவுக்கும் கூச்சமோ தயக்கமோ இல்லை.”நம்ம காசு தானே” என்கிற உரிமையில் கைநீட்டுகிறார்கள். சில இடங்களில் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதை தடுத்த மாற்றுக் கட்சிக்காரர்களை மக்களே அடித்து விரட்டியுள்ளனர்.

pennagaram-election-anbumani-campaign-2மல்லாபுரம், கூத்தப்பள்ளி, குளத்துமேடு பகுதி மக்கள் தங்களுக்கு கட்சிகளிடமிருந்து காசு வருவது தாமதமானதும் உள்ளூர் கட்சிப் பிரமுகர்களின் வீட்டைச் சூழ்ந்து கொண்டு சண்டையிட்டிருக்கிறார்கள். “யாரு அப்பமூட்டு காசு, மேலயிருந்து குடுத்தா நீ அமுக்க பார்க்கிறயா?” என்று கேட்டு ஏசியிருக்கிறார்கள்.

காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போட்டவர்களை மூன்று வகையாக பார்க்க முடிகிறது.

முதலாவதாக, யாருக்கு ஓட்டுப் போடுவது என்பதை முன்பே தீர்மானித்துக் கொண்டவர்கள்.தாம் ஓட்டுப் போடும் கட்சியை ‘உரிமையோடு’ அணுகி காசு வாங்கிக் கொண்டு, அதே கட்சிக்கு ஓட்டுப் போட்டுள்ளனர். தீர்மானித்ததற்கு மாறான கட்சியின் முன்வந்து காசு கொடுத்தாலும் மறுப்பதில்லை; ஆனால் ஓட்டு, தீர்மானத்தின் அடிப்படையில்தான். கூத்தப்பாடி கிராமத்திற்குட்பட்ட காலனியில் பெரும்பான்மையான ஓட்டுக்கள் தி.மு.க.வுக்குப் பதிவாகியுள்ளது. நாங்கள் அங்குள்ள மக்கள் சிலரிடம் பேசினோம்.

“சூரியன் கட்சி ஜெயிச்சி வந்தாங்கண்ணா டாஸ்மார்க்கு கடைய மூடுவாங்கன்னு நெனைச்சோம்” என்கிறார் ராஜாமணி அம்மாள்.

”இருந்தாலும் துட்டு வாங்கிட்டு தானே ஓட்டுப் போட்டீங்க?”

“காசு கெடக்குது சார்; கருணாநிதி வந்திருக்கலாம்; வராம பூட்டாரே” என்று அங்கலாய்த்துக் கொண்டார்.

“ஏன் கருணாநிதி வந்திருந்தா மட்டும் உங்க பிரச்சினை எல்லாம் தீர்த்திருப்பாரா?”

“யாரு வந்தாலும் ஒரு பிரச்சினையும் தீரப் போறதில்லே; ஏதோ படிச்சவுகளுக்கு வேலை எடுத்துக் கொடுப்பாருன்னு சொன்னாங்க” என்கிறார் அருகில் நின்ற ராமக்காள்.

அந்தக் காலனியில் இருபத்தைந்து வயதுக்குட்பட்ட இளைஞர்களில் அநேகர் பட்டதாரிகள்.அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு முறையான வேலையில்லை.பி.காம்.பட்டதாரியான ராஜு வேலையின்றி இருக்கிறார்.பெங்களூர் சென்றால் எதாவது கொரியர் டெலிவரி வேலை கிடைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார். பி.ஏ. தமிழ் இலக்கியம் படித்த சதீஸ், ஓசூரில் உள்ள இயந்திர உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் கூலி வேலைக்குச் செல்கிறார்.

இந்தக் காலனியில் சென்ற தேர்தல்களில் இரட்டை இலைக்கு அதிக வாக்குகள் பதிவாகியுள்ளது. வேறு சில பகுதிகளில் உத்திரவாதமாக இரட்டை இலைக்கே ஓட்டு விழும் என்கிற மாதிரியான பகுதிகளில் அக்கட்சியினர் காசு கொடுக்கவில்லை. அந்த மாதிரியான இடங்களில் ஒன்று, நம்மை ஏமாற்றி விட்டார்களே என்கிற ஆத்திரத்தில் ஓட்டுப் போடாமலோ அல்லது நோட்டாவிற்கோ ஓட்டுப் போட்டுள்ளனர். ஒரு கட்சி சார்பான பகுதிகளில் சம்பந்தப்பட்ட கட்சி காசு கொடுக்காமல் மாற்றுக் கட்சி காசு கொடுத்தால், அங்கே கணிசமாக மாற்றிப் போட்டுள்ளனர்.

இரண்டாவது பிரிவினர், எந்தக் கட்சி காசு கொடுத்ததோ அதே கட்சிக்கே ஓட்டுப் போட்டுள்ளனர். உள்ளூர் அளவில் உள்ள கட்சிப் பிரமுகர்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்து ஏரியாக்களைப் பிரித்துக் கொண்டு மேலிடத்திலிருந்து வரும் தொகையில் தாங்கள் அமுக்கியது போக எஞ்சியதை மக்களுக்கு விநியோகிக்கும் புரோக்கர்களாகச் செயல்பட்டுள்ளனர். இது மாதிரியான பகுதிகளில் கீழ்மட்டத்தில் கிளைக்கழக அளவில் பொறுப்பில் உள்ளவர்களுக்கு இடையே நல்ல புரிந்துணர்வு இருக்கிறது. தங்களுக்குள் சச்சரவின்றி ஓட்டுக்களைப் பிரித்துக் கொண்டு பணத்தை விநியோகித்துள்ளனர். இது போன்ற பகுதிகளில் ஒரே வீட்டுக்கு இரண்டு, மூன்று கட்சிகள் காசு கொடுத்து வாக்காளர்களைக் குழப்பியடிக்காமல் ஜனநாயகத்தை சிறப்பாக காப்பாற்றியிருக்கிறார்கள்.

கள்ளிபுரம் காலனி பகுதியில் ஊர் மக்களே கூட்டம் போட்டு பா.ம.க.வுக்கு ஓட்டுப் போடுவதில்லை என்று தீர்மானித்துள்ளனர். மற்ற இரு கட்சிகளில் எதற்கு ஓட்டுப் போடுவது என்பதைத் தீர்மானிக்க இரு பெரிய கட்சிகளையும் உள்ளூர் புரோக்கர்கள் மூலமாக அணுகியுள்ளனர். இரு தரப்புடனும் சமமாக பேரம் பேசி கடைசியில் தி.மு.க.வுடனான பேரம் படிந்துள்ளது. அதன்படி, தி.மு.க. வேட்பாளர் இன்பசேகரன் கோயில் கட்டுவதற்கு நிதி அளிப்பதாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.

மூன்றாவது பிரிவினர், எல்லா கட்சிகளிடமும் காசு வாங்கிக் கொண்டு வீட்டிலிருக்கும் ஓட்டுக்களை விகிதாச்சார அடிப்படையில் பிரித்துப் போட்டுள்ளனர். இவர்களுக்கு கட்சி, அரசியல் பற்றியோ அல்லது கட்சிகள் தரப்பில் அளிக்கப்படும் வாக்குறுதிகள் பற்றியோ பெரியளவில் மதிப்பு இல்லை. “யார் ஜெயித்தாலும் எதுவும் மாறப் போவதில்லை”,”எவன் ஜெயிச்சாலும் திருடத்தான் போகிறான்”, “ஓட்டுப் போட்டாலும் ஒன்றுதான் போடாவிட்டாலும் ஒன்றுதான்”, “தேர்தல் என்பதே மக்களை ஏமாற்றுவதற்காகத்தான்” என்றெல்லாம் ‘தத்துவார்த்தமாக’ பேசத் துவங்கும் இவர்கள், இந்த தேர்தலைப் பயன்படுத்திக் கொண்டு முடிந்தவரை கட்சிகளிடமிருந்து ’கறந்து’ விட வேண்டும் என்கிறார்கள். இப்போது விட்டால் எப்படியும் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நம்மைப் பார்க்க இவர்களில் எவனும் வரப் போவதில்லை என்று சொல்லும் இவர்கள், கிடைத்தற்கரிய வாய்ப்பைத் தவறவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.

என்.ஜி.ஓ.க்களோ, தேர்தல் ஆணையமோ, புதிய தலைமுறை மொக்கைகளோ சொல்வது போல் நல்ல வேட்பாளர்களைத் தேடி அவர்களை சட்டமன்றத்திற்கு அனுப்பினால் தங்கள் வாழ்க்கை சிறப்படைந்து விடும் என்கிற மூட நம்பிக்கைகள் மக்களுக்கே இல்லை. சீசனுக்கு விற்கப்படும் பண்டங்களைப் போல் தான் தங்கள் ஓட்டுரிமையை அவர்கள் பாவிக்கிறார்கள்.

***

அதே நேரத்தில் பணத்துக்கு சற்றும் குறையாத முக்கியத்துவத்தை சாதியும் பெற்றிருக்கிறது. பென்னாகரம் தொகுதியின் மொத்த வாக்குகள் சுமார் 2,26,000 வாக்குகள். அதில் 1,10,000 வன்னியர்கள், சுமார் 40,000 தாழ்த்தப்பட்டோர்; ஒக்கலிகர்,குறும்பர் போன்ற சாதியினர் 15,000. தெலுங்கு பேசும் நாயக்கர், நாயுடு போன்றோர் 15,000. முஸ்லிம்கள் 20,000; இவையன்றி மற்ற சாதியினர் என்பது உத்தேசமான சாதி ரீதியான வாக்கு கணக்கு.

தொகுதியின் வ.கம்யூ எம்.எல்.ஏ.வான நஞ்சப்பன் இந்த தேர்தலில் வெறும் 5,000 வாக்குகள்தான் வாங்கியிருக்கிறார். அவரே மறைமுகமாக அ.தி.மு.க.வுக்கு ஆதரவளித்ததுதான் இதற்குக் காரணம் என்றும் கூறுகிறார்கள். தி.மு.க.விற்கு ஓட்டளித்தால்தான் பா.ம.க.வை தோற்கடிக்க முடியும் என்று, தாழ்த்தப்பட்ட மக்களை தி.மு.க.விற்கு ஓட்டளிக்குமாறு வி.சி. கட்சியைச் சேர்ந்தவர்களே சில கிராமங்களில் கோரியிருக்கின்றனர்.

வன்னியர் வாக்குகள் சரிபாதி இருந்தும் அன்புமணி ஏன் படுதோல்வி அடைந்தார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமானால், அவர் எம்.பி.தேர்தலில் எப்படி வெற்றி பெற்றார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் பென்னாகரம் தொகுதியில் மட்டும் அன்புமணி 93,000 வாக்குகள் பெற்றிருக்கிறார். இளவரசன் -திவ்யா காதலுக்கு எதிராக பா.ம.க. தோற்றுவித்திருந்த சாதிவெறி, வன்னியர்கள் மத்தியில் மட்டுமின்றி மற்ற ஆதிக்க சாதியினரிடமும் செல்வாக்கு செலுத்தியதே இதற்கு முதற்காரணம். அன்று அ.தி.மு.க.வின் கே.பி.முனுசாமி, தி.மு.க.வின் இன்பசேகரன், வலது கம்யூ. கட்சியின் நஞ்சப்பன் ஆகிய அனைவரும் அன்புமணிக்கு ஆதரவாக வேலை செய்தனரென்று அனைவரும் கூறுகின்றனர்.

இன்பசேகரனின் தந்தையான மறைந்த பெரியண்ணன் எம்.எல்.ஏ, ஏற்கெனவே பா.ம.க. விலிருந்து தி.மு.க.விற்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இன்பசேகரனின் நடவடிக்கை பற்றி தி.மு.க. தலைமைக்குத் தெரிந்த போதிலும், இந்த காரணத்தை நேரடியாகச் சொல்ல அஞ்சி, “உட்கட்சி தேர்தல் விவகாரத்தில் கட்சி விரோத நடவடிக்கை” என்று கூறி அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். அவருடைய சாதி செல்வாக்கு காரணமாக தேர்தலுக்கு ஆறு மாதங்கள் முன் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொண்டு விட்டனர்.

2014-இல் அன்புமணி வெற்றி பெற்றதன் பின்புலம் இதுதான். வன்னியர் மட்டுமல்ல, குறிப்பிட்ட வட்டாரத்தில் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் சாதி எதுவாக இருந்தாலும் சரி, அந்த சாதியின் பெயரால் இயங்கும் கட்சியை மற்றெல்லா சாதியினரும் உள்ளூர வெறுக்கவே செய்கின்றனர். இந்த வெறுப்புணர்வை தலித் மக்களுக்கு எதிராகத் தந்திரமாக மடை மாற்றி விட்டதன் மூலம் 2014-இல் அன்புமணி வெற்றி பெற்றிருக்கிறார். அவ்வளவே. வெற்றி பெற்ற பின்னர் பா.ம.க.வினர் தங்களது அடாவடித்தனங்கள் காரணமாக மற்ற ஆதிக்க சாதியினரின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டது மட்டுமின்றி, வன்னியர் சமூக மக்கள் மத்தியிலேயே தனிமைப்பட்டுவிட்டனர் என்பதையும் அனைவரும் கூறுகின்றனர்.

இருந்த போதிலும் 20 முதல் 25 வயது வரை உள்ள வன்னிய இளைஞர்கள் அநேகமாக பா.ம.க.வுக்குத்தான் வாக்களித்துள்ளனர். வெறும் சாதிவெறியை மட்டும் வைத்து இளைஞர்களைக் கட்டுக்குள் முடியாது என்பதால், “கட்சி சீட்டு” என்ற பெயரில் எல்லா கிராமங்களிலும் ஏலச்சீட்டு நடத்தியிருக்கின்றனர். இந்தப் பணத்திலிருந்து வட்டிக்கு கொடுப்பது, கட்சி மாநாட்டுக்கு பஸ் செலவு, தண்ணி அடிக்கும் செலவுக்கு இதனைப் பயன்படுத்திக் கொள்வது போன்ற வழிமுறைகள் மூலம் இளைஞர்களை தம் பிடியில் பராமரித்திருக்கின்றனர். மேற்படி இளைஞர் படை வாங்கின காசுக்கு மேலே கூவி, தொகுதி மக்களை வெற்றிகரமாக அன்புமணிக்கு எதிராகத் திருப்பி விட்டது.

“பாட்டாளி சொந்தங்களே நம்மைக் கவிழ்த்து விடுவார்கள்” என்ற பயமும் அன்புமணிக்கு இருந்திருக்கிறது. இதனால் தேர்தல் பிரச்சாரத்தில் பல காமெடி காட்சிகள் அரங்கேறியிருக்கின்றன. கிராமத்திற்கு வாக்கு கேட்க செல்லும்போது, கிராமத்தின் எல்லையிலேயே உட்கார்ந்து கொண்டு,”எனக்கு ஓட்டு போடுவதாக சத்தியம் செய்தால்தான் ஊருக்குள் வருவேன்” என்று அன்புமணி சென்டிமென்டாக போட்டுத் தாக்கியிருக்கிறார். “இதென்னடா வம்பு” என்று பாட்டாளி சொந்தங்களும் சத்தியம் செய்து அவரை ஊருக்குள் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். நம்ம்..பி உள்ளே போனவரை இந்தக் கும்மு கும்மி விட்டார்கள்.

அன்புமணியின் மனைவி மக்களும் பென்னாகரத்தில் தங்கி வாக்கு சேகரித்திருக்கிறார்கள். அது பற்றி வன்னிய சமூக உழைக்கும் மக்களிடம் கேட்டபோது, “அவுங்க கலரைப் பாரு, நம்ம கலரைப் பாரு, ரெண்டு பேரும் ஒரு சாதியாப்பா?” என்று கேலி செய்து சிரித்தனர்.
இனி, தேர்தல் காலத்தில் மட்டும் கருப்பு நிறத்துக்கு மாறிக்கொள்ளும் படியாக ஃபேர் அண்டு லவ்லி கம்பெனிக்காரன் ஏதாவது கிரீம் கண்டுபிடித்தால்தான் உண்டு.

தனது தோல்விக்கு பணம்தான் காரணம் என்று சாதிக்கிறார் அன்புமணி. தோற்றவர்கள் பலரும் அப்படித்தான் சொல்லிக் கொள்கிறார்கள். இந்த தேர்தலில் “பணம்” வெற்றிக்கு காரணமாக இருந்ததைக் காட்டிலும், தோற்றவர்கள் தமது தோல்விக்கான காரணத்தை மறைத்துக் கொள்வதற்குப் பெரிதும் உதவியிருக்கிறது.

– வினவு செய்தியாளர்கள்
______________________________
புதிய ஜனநாயகம், ஜூன் 2016
______________________________

மோடியின் ஆட்சி இந்து ராஷ்டிரம்தான் !

1

மோடி ஆட்சியில், இந்துவெறி பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு விசுவாசமான அரசு பயங்கரவாதிகள் மீதான வழக்குகள் கைவிடப்பட்டு அடுத்தடுத்து அவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். காங்கிரசு அரசின் பழிவாங்கும் செயல், ஓட்டுக்காக முஸ்லிம்களை அனுசரித்துப் போகும் செயல் என்று கூறி இந்த வழக்குகளை ஒன்றுமில்லாத விவகாரமாக்குவது, இந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்துவெறி பயங்கரவாதிகளை விடுதலை செய்வது, இதற்கேற்ப நாட்டின் புலனாய்வு அமைப்புகள், நீதித்துறை உள்ளிட்ட அரசு எந்திரத்தையே மாற்றியமைப்பது என்ற திட்டத்துடன் மோடி கும்பல் செயல்பட்டு வருகிறது.

இதன்படி, மோடி – அமித் ஷா கும்பல் ஆட்சிக்கு வந்ததும், குஜராத்தின் நரோடா பாட்டியாவில் நடத்தப்பட்ட இந்துவெறி பயங்கரவாத கொலைவெறியாட்ட வழக்கில் 26 ஆண்டு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட குஜராத்தின் முன்னாள் அமைச்சரான மாயா கோத்நானி பிணையில் விடுவிக்கப்பட்டார். குஜராத்தில் போலி மோதல் கொலைகளுக்கு மூளையாகச் செயல்பட்ட அரசு பயங்கரவாத வெறியன் டி.ஜி. வன்சாரா, மோடி அரசால் பிணையில் விடுவிக்கப்பட்டு, கௌரவமாக ஓய்வு பெற்றுச் சென்றுவிட்டான். இஷ்ரத் ஜஹான் கொலை வழக்கிலும், சொராபுதீன் கொலை வழக்கிலும் குஜராத்தின் கிரிமினல் போலீசு அதிகாரிகள் பிணையில் விடுவிக்கப்பட்டு, அந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது. சோராபுதீன் வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட அமித் ஷாவை அவ்வழக்கிலிருந்து விடுவித்ததற்குப் பரிசாக, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவத்துக்கு கேரள ஆளுநர் பதவி தரப்பட்டது. இந்த வரிசையில் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இந்துவெறி பயங்கரவாத பெண் சாமியாரான பிரக்யா சிங் மற்றும் ஐந்து இந்துவெறியர்களுக்கு இதில் தொடர்பில்லை என்று இப்போது தேசியப் புலனாய்வுக் கழகம் அறிவித்துள்ளது.

malegaon-blasts
மலேகானில் இந்துவெறியர்கள் நடத்திய குண்டுவெடிப்பு பயங்கரத்தின் கோரம்

மலேகானில் கடந்த 2008-ஆம் ஆண்டில் நடந்த குண்டுவெடிப்பானது, முஸ்லிம்கள்தான் பயங்கரவாதிகள் என்று பழிபோட்டு ஒடுக்குவதற்காக இந்துவெறி பயங்கரவாதிகள் நடத்திய மிகப் பெரிய சதித் திட்டத்தின் ஒரு அங்கமாகும். குஜராத்தில் நடந்த இந்துவெறி பயங்கரவாதப் படுகொலைகளுக்குப் பிறகு, இஸ்லாமிய பயங்கரவாத அச்சுறுத்தல் நிலவுவதாகப் பீதியூட்டி அடக்குமுறையை ஏவுவது, அதன் மூலம் இஸ்லாமியர்களை ஆத்திரமூட்டி எதிர்த்தாக்குதலைத் தொடுக்குமாறு தூண்டுவது, அப்படி அவர்கள் செய்யாத பட்சத்தில் தாங்களே அத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி பழியை முஸ்லிம்கள் மீது போடுவது – என்ற சதித் திட்ட நிகழ்ச்சிநிரலின்படி, இதற்காகவே தனியாக ஒரு சதிகார வலைப்பின்னல் உருவாக்கப்பட்டு, குண்டுகள் தயாரிப்பு மற்றும் குண்டுவைப்புச் சதிகளை இந்துவெறி பயங்கரவாதிகள் தொடங்கினர்.

கடந்த 2006-ஆம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸ் .பயங்கரவாதிகள் மகாராஷ்டிராவின் நான்டெட் நகரில் இரகசியமாக வெடிகுண்டுகள் தயாரித்துக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டு இருவர் மாண்டனர். ஐந்து பேர் படுகாயமடைந்தனர். அதைத் தொடர்ந்து இந்துவெறி பயங்கரவாதிகள் 21 பேரை மகாராஷ்டிர பயங்கரவாத எதிர்ப்புப் போலீசு அடுத்தடுத்து கைது செய்து, அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.

அதைத் தொடர்ந்து கடந்த 2006-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ஆம் நாளன்று மகாராஷ்டிரா மாநிலம் மலேகான் நகரில் முஸ்லிம்கள் நெருக்கமாக வாழும் பகுதியில் 4 குண்டுகள் வெடித்தன. 2007-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் டெல்லிக்கும் பாகிஸ்தானின் லாகூருக்குமிடையே ஓடும் சம்ஜவ்தா விரைவு வண்டியில் அரியானா மாநிலத்தின் பானிபட் அருகே குண்டு வெடித்தது. அதே ஆண்டு மே மாதத்தில் ஐதராபாத்தின் மெக்கா மசூதியில் குண்டு வெடித்தது. அதைத் தொடர்ந்து நவம்பர் 11 அன்று ராஜஸ்தானின் அஜ்மீர் தர்காவில் ரம்ஜான் நோன்பு காலத்தில் குண்டுகள் வெடித்தன. மீண்டும் 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ஆம் தேதி ரம்ஜான் விழாவின்போது மலேகானில், மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டுகள் வெடித்தன. இதில் 7 பேர் கொல்லப்பட்டு 79 பேர் படுகாயமடைந்தனர்.

malegaon-blasts-accused-released
லேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி, கடந்த ஏப்ரலில் மும்பை கீழமை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம்கள்

இப்படி ஒவ்வொரு முறையும் குண்டுகள் வெடிக்கும்போதும், எவ்வித விசாரணையுமின்றி முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்ற கருத்து ஊடகங்களால் திட்டமிட்டே உருவாக்கப்பட்டன. மலேகான் குண்டுவெடிப்புகள் குறித்து ஆரம்ப விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே முஸ்லிம் குடியிருப்புகளைச் சுற்றிவளைத்து, சட்டவிரோதமாக நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களை போலீசு இழுத்துச் சென்றது. பின்னர், இவர்கள்தான் குண்டு வைத்தார்கள் என்று சல்மான் பார்சி, நூருல் ஹூதா, சபீர் அகமது, ரைஸ் அகமது, முகம்மது அலி, ஆஷிப் கான், ஜாவித் ஷேக், பரூக் அன்சாரி, அப்ரார் அகமது – ஆகிய ஒன்பது அப்பாவி முஸ்லிம்கள் மகாராஷ்டிர மாநில தீவிரவாத எதிர்ப்புப் போலீசுப் படையால் கைது செய்யப்பட்டு, இந்த வழக்கில் விசாரிக்கப்பட்டு வந்தனர். கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டு சிறையிடப்பட்ட அவர்களது இளமையும் எதிர்காலமும் நொறுங்கிப் போயின.

இதற்கிடையே சம்ஜவ்தா விரைவு வண்டி குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ். ரகத்தைச் சேர்ந்த வெடிபொருட்களை முன்னாள் ராணுவ அதிகாரியான சிறீகாந்த் புரோகித் என்பவன் கள்ளத்தனமாக ஜம்முவிலிருந்து வாங்கிக் கொடுத்ததற்கான தடயங்கள் கிடைத்தன. மலேகான் குண்டுவெடிப்புகளிலும் ஆர்.டி.எக்ஸ் .ரக வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது. இக்குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளின் சேசிஸ் எண்ணைக் கொண்டு, அது அபிநவ் பாரத் எனும் இந்துத்துவ அமைப்பின் முக்கிய பிரமுகராக இருந்த பெண் சாமியாரான சாத்வி பிரக்யா சிங்கினுடையது என்பதை மகாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்புப் போலீசுப்படைத் தலைவரான ஹேமந்த் கார்கரே கண்டறிந்தார்.

malegaon-blasts-hemand-karkare
இந்துவெறி பயங்கரவாதிகள் குண்டுவைப்புகளில் ஈடுபட்டுள்ளதை ஆதாரங்களுடன் வெளிக்கொணர்ந்த மகாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்புப் போலீசுப்படைத் தலைவரான ஹேமந்த் கார்கரே.

அதைத் தொடர்ந்து கடந்த 2008-இல் பிரக்யா சிங், முன்னாள் இராணுவ அதிகாரியான சிறீகாந்த் புரோகித், ஜம்முவில் சாரதா பீடம் என்ற பெயரில் ஆசிரமம் நடத்திவந்த தயானந்த் பாண்டே மற்றும் மலேகான் குண்டு வெடிப்பில் ஈடுபட்ட இந்துவெறி பயங்கரவாதிகளை கார்கரே கைது செய்தார். 2006-2008 ஆம் ஆண்டுகளுக்கிடையே ஒன்பது குண்டு வெடிப்புகளை நடத்தி நூற்றுக்கும் மேற்பட்டோரைக் கொன்றுள்ள இப்பயங்கரவாதச் சதியில் இந்துவெறியர்கள் ஈடுபட்டுள்ளதை வாக்குமூலமாகப் பெற்று பல்வேறு ஆதாரங்களுடன் அவர் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தார். இந்துவெறியர்களும் அரசு எந்திரமும் எதை மறைத்தார்களோ அதை வெளிக்கொண்டுவந்து, கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம்கள் அப்பாவிகள் என்றும், இந்துவெறியர்கள்தான் குண்டு வைத்தார்கள் என்றும் முதன் முறையாக நிரூபித்தார். அதன் பிறகுதான் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஒன்பது அப்பாவி முஸ்லிம்களுக்குப் பிணை கிடைத்தது.

பின்னர் இந்த வழக்கை சி.பி.ஐ. எடுத்துக் கொண்டு விசாரணை நடத்தியபோது, இந்துவெறி பயங்கரவாதிகளின் சதிகள் படிப்படியாக வெளிவரத் தொடங்கின. இதற்கான ஆதாரங்களைத் திரட்டிய போலீசு அதிகாரியான கர்காரே, 2008 நவம்பர் 26 அன்று மும்பையில் நடந்த இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையின் போது திட்டமிட்டே கொல்லப்பட்டார்.

மலேகான் குண்டுவெடிப்பு சதியில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ்.இன் முழுநேர ஊழியரான சுவாமி அசீமானந்தாவை கடந்த 2010-ஆம் ஆண்டு நவம்பரில் சி.பி.ஐ. கைது செய்து சிறையிலடைத்து விசாரணை நடத்தியது. “மலேகான் நகரில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருப்பதால், எங்களது முதலாவது குண்டு வெடிப்பை அங்கே நடத்தினோம். … அஜ்மீர் தர்காவுக்கு இந்துக்களும் அதிக அளவில் வழிபாட்டுக்கு வருவதால் அதனைத் தடுத்து இந்துக்களை அசசுறுத்துவதற்காக அங்கே குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது…. சம்ஜவ்தா விரைவு வண்டி குண்டுவெடிப்பை சுனில் ஜோஷி பொறுப்பேற்று நடத்தினான்” என்று அவர் தானே முன்வந்து நீதிபதி முன்னிலையில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். மலேகான் உள்ளிட்ட குண்டுவெடிப்புகளை இந்துவெறியர்கள்தான் செய்தனர் என்று பல்வேறு சாட்சியங்கள், தடயவியல் ஆதாரங்கள், ஒப்புதல் வாக்குமூலங்கள் வாயிலாக தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, அன்று காங்கிரசு கூட்டணி ஆட்சியின் உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், இது இந்து பயங்கரவாதம் என்று வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார்.

பிரக்யா சிங்
தேசிய புலனாய்வுக் கழகத்தால் குற்றமற்றவராக அறிவிக்கப்பட்டுள்ள இந்துவெறி பயங்கரவாத பெண் சாமியார் பிரக்யா சிங்

பின்னர்,2011-ஆம் ஆண்டில் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கை மைய அரசின் தேசியப் புலனாய்வுக் கழகம் ( என்.ஐ.ஏ.) விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, கைது செய்யப்பட்ட ஒன்பது அப்பாவி முஸ்லிம்களும் குற்றமற்றவர்கள் என்று ஐந்தாண்டுகளுக்குப் பிறகு ஆதாரங்களைச் சமர்பித்தது. இவர்களில் ஷபீர் அகமது ஏற்கெனவே விபத்தொன்றில் இறந்து விட்டார். எஞ்சியுள்ள எட்டு பேர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்று கடந்த ஏப்ரல் 26 அன்று மும்பை கீழமை நீதிமன்றம் அவர்கள் அனைவரையும் விடுதலை செய்துள்ளது.

மலேகான் குண்டுவெடிப்பு விசாரணையை முடித்த தேசிய புலனாய்வுக் கழகம், மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மே 13 அன்று குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தது. இந்த அறிக்கையில், மகாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்புப் போலீசார் இந்த வழக்கு விசாரணையில் உள்நோக்கத்துடன் செயல்பட்டிருப்பதாகவும்,பெண் சாமியாரான பிரக்யா சிங் மற்றும் 5 பேருக்கு இக்குண்டுவெடிப்பில் தொடர்பில்லை என்றும், அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்குப் போதிய ஆதாரங்கள் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. அதேசமயம் மகாராஷ்டிரா மாநில அமைப்பு ரீதியான குற்றத் தடுப்புச் சட்டப்படி, முன்னாள் ராணுவ அதிகாரி சிறீகாந்த் புரோகித் உள்ளிட்ட 10 பேர் மீதான வழக்கு விசாரணை தொடரும் என்றும் அறிவித்துள்ளது.

அசீமானந்தா
“மலேகான் நகரில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருப்பதால் எங்களது முதலாவது குண்டு வெடிப்பை அங்கே நடத்தினோம்…” என்று தானே முன்வந்து நீதிபதி முன்னிலையில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்த அசீமானந்தா.

இந்துவெறி பயங்கரவாதிகளை வழக்குகளிலிருந்து விடுவிப்பதற்காக தேசியப் புலனாய்வுக் கழகம் கீழ்த்தரமாக இயங்குவதை மலேகான் வழக்கு நிரூபித்துக் காட்டிவிட்டது. அரசியல் தலையீடு காரணமாக, சி.பி.ஐ. நடுநிலையாகச் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக காங்கிரசு ஆட்சின் போது பா.ஜ.க. கூச்சல் போட்டது. ஆனால் இப்போது மோடி ஆட்சிக்கு வந்ததும் தேசிய புலனாய்வுக் கழகம் அப்பட்டமாகவே இந்துவெறி கும்பலின் கைப்பாவையாகி நிற்கிறது. இதற்கு அரசியல் தலையீடு மட்டும் காரணமல்ல; புலனாய்வு அமைப்புகளின் அதிகார வர்க்கமே இந்துமயமாகியிருப்பதையே இது நிரூபித்துக் காட்டுகிறது.

மோடி கும்பலின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே, தேசியப் புலனாய்வுக் கழகத்தின் தலைமை இயக்குனராகப் பதவி வகித்துவரும் சரத்குமாரின் பதவிக்காலம் கடந்த அக்டோபர் 31,2015-இல் முடிவுக்கு வந்துள்ள போதிலும், அரசியல் சாசன விதிகளுக்கு எதிராக அவரது பதவிக்காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மோடி ஆட்சிக்கு வந்ததும், மலேகான் உள்ளிட்ட குண்டுவெடிப்பு வழக்குகளை மென்மையாகக் கையாளுமாறு சுஹாஸ் வார்கி என்ற தேசிய புலனாய்வுக் கழகத்தின் போலீசு அதிகாரி தனக்கு நிர்பந்தங்கள் கொடுத்ததாக முன்னாள் அரசு தரப்பு சிறப்பு வழக்குரைஞரான ரோகினி சாலியன் கூறியிருப்பதே இப்புலனாய்வு அமைப்பின் யோக்கியதையை அம்பலப்படுத்திக் காட்டுகிறது.

நடப்பது சட்டத்தின் ஆட்சி என்றும், அதிகார வர்க்கமும், நீதித்துறையும் நடுநிலையானது என்றும் பரப்பப்படும் மாயைகள் தகர்ந்து, இந்நிறுவனங்கள் சீரழிந்து கிடப்பதையும், இந்நிறுவனங்களின் அதிகார வர்க்கமே இந்துமயமாகியிருப்பதையும் மலேகான் மற்றும் இஷ்ரத் ஜஹான் வழக்குகள் நிரூபித்துக் காட்டுகின்றன.

– குமார்
______________________________
புதிய ஜனநாயகம், ஜூன் 2016
______________________________