Wednesday, October 4, 2023
முகப்புநீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்பிரசாத லட்டு கூட 'அவா' தான் பிடிக்கணும் - உயர்நீதிமன்ற தீர்ப்பு !

பிரசாத லட்டு கூட ‘அவா’ தான் பிடிக்கணும் – உயர்நீதிமன்ற தீர்ப்பு !

-

பிரசாத லட்டு கூட ஆவா தான் பிடிக்கனும்

பார்ப்பன சாதியை சேராதவர்கள் கருவறையில் உள்ள சிலையைத் தீண்டினால், சிலை தீட்டுப்பட்டுவிடும் என்றும்; சிலையிலிருந்து கடவுள் வெளியேறிவிடுவார் என்றும் கூறி, திமுக அரசு 2006ஆம் ஆண்டில் தொடங்கிய அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் ஒன்றரை ஆண்டுகாலம் பயிற்சி பெற்ற 207 மாணவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க கூடாது என மதுரையைச் சேர்ந்த பார்ப்பன பட்டர்கள் உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற்றனர். அர்ச்சகர் பயிற்சி பெற்ற இம்மாணவர்களை ‘அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம்’ என சங்கமாக திரட்டியது மனித உரிமைப் பாதுகாப்பு மையம். உடனடியாக உச்சநீதிமன்றம் சென்று இச்சங்கத்தையும் ஒரு தரப்பினராக வழக்கில் இணைத்ததோடு பல்வேறு போராட்டங்களையும் நடத்தி உடனிருந்து வழிகாட்டி வருகிறது மனித உரிமைப் பாதுகாப்பு மையம்.

1970இல் பொரியார் அறிவித்த கருவறை நுழைவுக் கிளர்ச்சியைத் தொடர்ந்து, 1971ல் அர்ச்சகர் வேலையில் நிலவிவந்த வாரிசுரிமையை ஒழிக்கும் சட்டமொன்றைக் கொண்டு வந்தது திமுக அரசு. இதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில்; ‘அர்ச்சகர்கள் எனப்படுவோர் இந்து அறநிலையத் துறையால் நியமிக்கப்படுபவர்கள் என்பதால், அதில் வாரிசுரிமையைக் கோர முடியாது என்றும் தகுதியான நபர்களை அரசு தெரிவு செய்யலாம்’ என்றும் கூறிய உச்சநீதிமன்றம், ‘அவ்வாறு அர்ச்சகராக நியமனம் செய்யப்படுபவர்கள், குறிப்பிட்ட பார்ப்பன உயர்சாதியிலிருந்துதான் தெரிவு செய்யப்படவேண்டும்’ என்றும் வலியுறுத்தியது. ‘இதனை மீறி அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள இந்து மத உரிமையில் தலையிடுவதாகும்’ என்று கூறி, சாதியையும், ஆலயத்தீண்டாமையையும் அங்கீகரித்து தீர்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம். 1972இல் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வண்ணம் திமுக அரசு பிறப்பித்த அரசாணைக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் இடைக்காலத் தடை விதித்தது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற அடிப்படை மத உரிமை கூட இல்லாத பார்ப்பன இந்து மதத்தில் உள்ள தீண்டாமைக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் தருணத்தில் பார்ப்பனமயமான மற்றொரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

பிரசாத லட்டு கூட ஆவா தான் பிடிக்கனும்

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் ஆலயத்தில், தட்டச்சர் ஜவான், பலவேலை, திருமஞ்சனம், நிவேத்தியம், சுயம்பாகி, ஓடல் தீபம், ஓதுவார், மணியடி (தட்டு கும்பம்), யானைப்பாகன் உள்ளிட்ட 10 பணியிடங்களுக்கான பணியிட அறிவிப்பை 05.01.2011 அன்று வெளியிட்டது இந்து அறநிலையத்துறை. அந்த அறிவிப்பு விளம்பரத்தில் திருமஞ்சனம், நிவேத்தியம், சுயம்பாகி ஆகிய பணியிடங்களுக்குப் பார்ப்பனர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பணியிடங்கள் சிலையை திருமுழுக்கு (அபிஷேகம்) செய்வது மற்றும் கோயில் பிரசாதம் தயாரிப்பதற்கான பணியிடங்களாகும். பார்ப்பனர்கள் அல்லாமல் வேறு சாதியினர் இந்த வேலைகளைச் செய்தால் ‘புனிதம்’ கெட்டுவிடும் என்று மற்ற சாதியினரை இழிவுபடுத்தும் பார்ப்பன சாதிவெறியை அப்பட்டமாக தோலுரித்துக்காட்டும் அந்த அறிவிப்பை வெளியிட்டது வேறுயாருமில்லை, இந்து அறநிலையத்துறைதான். ஏற்கனவே அர்ச்சகர் பயிற்சி பெற்று அர்ச்சகர்களாக முடியாமல் தவித்துக்கொண்டிருந்த பார்ப்பனரல்லாத மாணவர்கள் இந்த ‘லட்டு’ செய்யும் பணியிலாவது சேரலாம் என்றெண்ணி அப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தனர்.

பிரசாத லட்டு கூட ஆவா தான் பிடிக்கனும்
பெரியதாக பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்

இதே பணியிடங்களுக்கு விண்ணப்பித்த அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவர் திரு. அரங்கநாதன், உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தார். திருமஞ்சனம், நிவேத்தியம், சுயம்பாகி ஆகிய பணியிடங்களுக்கு பார்ப்பனர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்கிற அறிவிப்பு சாதி வேற்றுமையை தூண்டுவதாகவும், ஆலயத்தீண்டாமையைக் கடைபிடிப்பதாகவும் அரசியலமைப்பு சட்டம் ஷரத்துக்கள் 14, 16 மற்றும் 17 ஆகியவற்றிற்கு எதிராகவும் இருப்பதால் அந்த பணியிடங்களுக்குப் பார்ப்பனர்கள் மட்டுமே தகுதியானவர்கள் என அறிவித்த அறிவிப்பை நிறுத்திவைக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுத்துக்கட்டளை மனுவைத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு 07.02.11 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுகுணா முன்பு விசாரணைக்கு வந்தது. உறுத்துக்கட்டளை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, இடைக்கால தடைவிதிக்கக் கோரும் மனுவைத் தள்ளுபடி செய்ததோடு ‘இத்தகைய’ பழக்கவழக்கங்களை அரசியலைப்பு சட்டம் ஷரத்து 13 அங்கிகரிப்பதாகவும் தெரிவித்தார். அரங்கநாதனுக்காக வழக்காடிய வழக்குரைஞர் சகாதேவன் சாதி வேற்றுமை மற்றும் தீண்டாமை காரணமாக பணிவழங்க மறுப்பது அரசியலமைப்பு சட்டம் வழங்கும் சமத்துவ வேலை வாய்ப்பிற்கான உரிமைக்கு எதிரானது என வாதிட்டதை ஏற்காமல் மத உரிமையில் சமத்துவம் (வெங்காயம்!) எல்லாம் கிடையாது என்பதை அரசியலமைப்பு சட்டம் பிரிவு 25 கூறியிருப்பதாகவும், உச்சநீதிமன்றத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வழக்கு நிலுவையில் இருப்பதால் எதுவும் தற்போது செய்யவியலாது என தடையானை மனுவை தள்ளுபடி செய்து பார்ப்பன மேலாதிக்கத்திற்கு மயிலிறகால் வருடிவிட்டிருக்கிறார் நீதிபதி சுகுணா. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது என்பது வேறுவழக்கென்றும், அது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வழக்கு. ஆனால், இந்தப் பணி கோயில் பணிவிடைகளுக்கான வேலை என்று வாதாடியதையும் நிராகாரிதுள்ளார் நீதிபதி.

பார்ப்பனரல்லாதோர், கோயிலில்; மணியாட்டினால் பூசை செய்தால் கடவுள் சிலையைவிட்டு வெளியேறிவிடுவார் என்று உச்சநீதிமன்றமும், பார்ப்பனரல்லாதோர் பிரசாதம் செய்தால், தண்ணீரெடுத்து சிலையை குளிப்பாட்டினால் இந்துமத உரிமைக்கு எதிரானது என உயர்நீதிமன்றமும் தீர்ப்பு வழங்குகிறது.

இத்தனை நடக்கும்போதும் சாதியா? அது பள்ளிக்கூடத்தில் சேர்க்கும்போது குழந்தைகளிடம் கேட்பதனால்தான் உருவானது என்பதுபோல் பார்ப்பன புரட்டையும் வெட்கமில்லாமல் பேசித்திரிகின்றனர் பார்ப்பன மற்றும் ‘கருப்பு’ அம்பிகள்.

இத்தகைய பார்ப்பன மயமான தீர்ப்பை வழங்கும் நீதிபதி நேர்மையானவராக, பார்ப்பனர் அல்லாதவராக இருந்தால் சரியான தீர்ப்பை வழங்கிவிடுவார்கள் என்ற மூடநம்பிக்கையை இந்த தீர்ப்பு சாட்டையால் அடிக்கிறது. ‘காசு வாங்கிக்கொண்டு தீர்ப்பை எழுதினார்’  என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகாதவர் நீதிபதி சுகுணா! ஆனால், பிரச்சனை நீதித்துறை காவி மயமாக இருப்பது, நீதிபதி பார்ப்பன ஆதரவாளராக இருப்பது. அரசியலமைப்பு சட்டத்தின் ஷரத்துக்கள் 13, 15 மற்றும் 26 ஆகியவை இந்து மதத்தின் தீண்டாமை, பிற்போக்குதனம், சாதி ஒழிப்பு என்பதை ஊறுகாய் போல தொட்டுவிட்டு, மதம் என்பது என்ன? சாதி என்பது என்ன? இந்து மதத்தின் சாதி தொடர்வது ஏன்? மதச்சார்பின்மை என்பது என்ன? என்பதையெல்லாம் விளக்காமல் சாதுர்யமாக பழைய கழிவுகளை கரண்டியில் அள்ளிப் பானையில் போட்டு பொங்கல் வைத்து சமத்துவம் பேசுகிறது ‘அரசியலமைப்புச் சட்டம்’. நீதித்துறை அதற்கு மகுடம் சூட்டுகிறது.

அதன் லட்சணம்தான் இன்று பல்லிளிக்கிறது. இந்துமத பழக்கவழக்கத்தின்படி, லட்டு, புந்தி கூட ‘அவா…’ செஞ்சாத்தான் லோகம் ஷேமமா இருக்கும்னு உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க முடிகிறது.

செயலாளர்
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்
சென்னைக் கிளை

__________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. லட்டு கூட அவாள் தான் பிடிக்கனும் – உயர்நீதிமன்ற தீர்ப்பு !…

    பார்ப்பனரல்லாதோர், கோயிலில் பூசை செய்தால் கடவுள் சிலையைவிட்டு வெளியேறிவிடுவார் என்று உச்சநீதிமன்றமும், பிரசாதம் செய்தால் இந்துமத உரிமைக்கு எதிரானது என உயர்நீதிமன்றமும் தீர்ப்பு வழங்குகிறது….

  2. மானக்கேடான விஷயம். நீதிமன்றம் வாயிலாக வழக்கை மேலே எடுத்துச் செல்வதுடன், தெருக்களிலும் இறங்கிப் போராடவேண்டும். அத்துடன் மக்கள் அனைவரும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலை மட்டுமல்ல, இந்த நடைமுறை உள்ள அனைத்துக் கோயில்களையும் பகிஷ்கரிக்கவேண்டும். இது தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் பிரச்னையை எழுப்ப, சம்பந்தப்பட்ட தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்மீதும் அனைத்துக் கட்சிகள்மீதும் அழுத்தம் கொடுக்கவேண்டும்.

    • Did you the salary range? Govt gives special reservation for so called low caste people. Other community people are not allowed work in those jobs. Did you the salary structure of those jobs? Bhramins have reservation only in temple servant job which will hardly pay less than 10K… only few bhramins gets more than 25K… 80% of bhramins who works in temple gets less than 10K…

    • @பத்ரி,

      இதில் என்ன மானக்கேடான விஷயம்.. லட்டு பிடிக்கும் வேலை என்ன 5 ஸ்டார் ஹோட்டல் உத்தியோகமா.. இதிலும் வந்து அடிமைத்தன கதையளக்க?

      கோயில் என்பது பொது சொத்து அல்ல.. வியாபார ஸ்தலமும் அல்ல.. அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை.. பொதுவுடமை வாதிகளின் ரவுடித்தனம் இனி செல்லுபடியாகாது..

  3. […] This post was mentioned on Twitter by வினவு, Badri Seshadri, mugunth, கரையான், karthi and others. karthi said: RT @TBCD: #WTF RT @vinavu: பிரசாத லட்டு கூட ‘அவா’ தான் பிடிக்கனும் – உயர்நீதிமன்ற தீர்ப்பு ! https://www.vinavu.com/2011/02/10/hrpc-thiru … […]

  4. நல்லதொரு செய்தி !!! இந்து மதத்தில் சம உரிமைக் கேட்டுக் கேட்டு போராடி சலித்துவிடும் !!! இந்து மதம் என்றால் அது பிரமணவாளின் பொது சொத்து என சொல்லாமல் சொல்லி இருக்கு நீதிமன்றம் !!! பிரமணர் அல்லாதவருக்கு இரண்டு சாய்ஸ் மட்டுமே இந்த நீதிமன்றம் கொடுக்கிறது பிரமணருக்குக் கீழ்படிந்து இந்துவாக இரு ! அல்லது இந்து மதத்தை விலகிச் செல் !!! மக்கள் எதை தேர்ந்து எடுத்துக் கொள்வது அவரவர் விருப்பம்.

    //பார்ப்பனரல்லாதோர், கோயிலில்; மணியாட்டினால் பூசை செய்தால் கடவுள் சிலையைவிட்டு வெளியேறிவிடுவார் என்று உச்சநீதிமன்றமும், பார்ப்பனரல்லாதோர் பிரசாதம் செய்தால், தண்ணீரெடுத்து சிலையை குளிப்பாட்டினால் இந்துமத உரிமைக்கு எதிரானது என உயர்நீதிமன்றமும் தீர்ப்பு வழங்குகிறது.//

    கடவுளை வெளியேற்ற முடியாது ! நாமே இந்து மதத்தை விட்டு வெளியேறிவிடலாம் என்பது எங்க் கருத்து !!!

    லட்டு பிடிக்கவும் கூட உரிமை இல்லாத சமத்துவம் கெட்ட மதக் கட்டமைப்பில் இருப்பதை விட !!! அதை விலக்குவதே நலம் !!!

    • இ.செ என்ன சொல்ல வருகிறீர்கள் ? இந்து மதத்தை விட்டு வெளியேறலாம் ஆனால் கடவுளை ஒழிக்க முடியாது பின்னர் எங்கு செல்வது உங்கள் இஸ்லாத்துக்கா ? ஒரு மடமையில் இருந்து இன்னொரு மடமைக்கா ? அங்கே சென்று மௌலவிகளுக்கும் கட்டப் பஞ்சாயத்து செய்யும் ஜமாத்துகளுக்கும் அடிமையாக இருப்பதா?
      அல்லாவைப் பற்றி கேள்வி எழுப்பிய ரசூலின் கதி என்ன ஆனது? அவரை ஜமாத்தை விட்டே தள்ளி வைத்தார்கள். இந்து மதத்திலாவது இருந்து கொண்டே கடுமையாக தாக்கலாம் ஆனால் நிறுவனமயப்பட்ட இசுலாத்தில் என்ன ஆகும் முதலில் தள்ளி வைப்பார்கள் மீண்டும் தொடர்ந்தால் காபிர் என்பார்கள் பின்னர் பத்வா விதித்து ஒரே அடியாக கதையை முடிப்பார்கள்.
      நீங்கள் முதலில் இஸ்லாத்தை சரி படுத்துங்கள் மற்றதை பற்றி பிறகு பேசலாம்.

      • ///இ.செ என்ன சொல்ல வருகிறீர்கள் ? இந்து மதத்தை விட்டு வெளியேறலாம் ஆனால் கடவுளை ஒழிக்க முடியாது பின்னர் எங்கு செல்வது உங்கள் இஸ்லாத்துக்கா ? ஒரு மடமையில் இருந்து இன்னொரு மடமைக்கா ? அங்கே சென்று மௌலவிகளுக்கும் கட்டப் பஞ்சாயத்து செய்யும் ஜமாத்துகளுக்கும் அடிமையாக இருப்பதா?
        அல்லாவைப் பற்றி கேள்வி எழுப்பிய ரசூலின் கதி என்ன ஆனது? அவரை ஜமாத்தை விட்டே தள்ளி வைத்தார்கள். இந்து மதத்திலாவது இருந்து கொண்டே கடுமையாக தாக்கலாம் ஆனால் நிறுவனமயப்பட்ட இசுலாத்தில் என்ன ஆகும் முதலில் தள்ளி வைப்பார்கள் மீண்டும் தொடர்ந்தால் காபிர் என்பார்கள் பின்னர் பத்வா விதித்து ஒரே அடியாக கதையை முடிப்பார்கள்.
        நீங்கள் முதலில் இஸ்லாத்தை சரி படுத்துங்கள் மற்றதை பற்றி பிறகு பேசலாம்.///
        Neenga enna solla virumburinga elill?Hindhu madha thula apdilaam illa naanga ella suthandhiramum petrirukkom nu solringala?? Oru Muslim Tholugai vaika therinja yaar venna endha masudhiyilayum tholugai nadatha mudiyum..avar elaya irundhalum sari panakarana irundhaalum sari karupana irundhaalum arabiya irundhaalum ellarum avaruku pinaadi ninnu tholuvaanga..Ulagathula endha naatla ulla pallivasala yum neenga poi thola vaikalam..,Andha urimaya ISLAM 1400 yrs munnadiye thandha Samathuvam thaan adhu!! AANAA Endha oru Hindhu va vadhu Thaaltha patta Caste nu neenga solra unga hindhu madhatha serndhavangala thanjore periyal kovil a puja panni neenga kadavula nenaikuradha kulupaati sutham senji puja panna vainga apram neenga islam pathi pesunga. ungala la adhu mudiyuma indha 21 century la idhu indha HINDU madathula SAATHIYAMA NU parunga??

        • அய்யா முற்போக்கு பட்டுக்கோட்டை -கொட்டைப்பாக்கை நினைவு படுத்துகிறீர்கள். அவர் மதத்தை விட்டு விலக வேண்டும் என்கிறார் ஆனால் அதற்கு அப்பறம் தெளிவான முடிவை சொல்லவில்லை. அவர் எல்லா புகழும் இறைவனுக்கே என்று முழங்குபவர்.எனவே அவர் இசுலாத்துக்கு தான் அழைக்கிறார் என்று முடிவு செய்யலாம். ஆனால் அது இன்னொரு அடிமைத்தனத்தில் அல்லவா சென்று முடியும்.அதற்கு மதத்தை தூக்கி வீசிவிட்டு நாத்திகர்களாக மாறுங்கள் என்று சொல்லி இருக்கலாம். நான் நாத்திகன் எனக்கு இந்த மதக் குப்பைகளில் நம்பிக்கை இல்லை.இதை நான் இந்து மதம் என்ற என் மீது திணிக்கப்பட்ட ஒரு அமைப்பில் சொல்ல முடிகிறது அதை இசுலாத்தில் இருந்து கொண்டு சொல்ல முடியுமா என்பது தான் எனது கேள்வி.தொழுகை நடத்த சம உரிமை இருக்கலாம் அப்படி உரிமை இருப்பதனாலேயே அது சிறந்த மாற்று என்று ஆகிவிடாது.ஆனால் ஏன் தொழ வேண்டும் எனக் கேள்வி கேட்க முடியுமா?.மாற்றம் என்பது தன்னளவில் தொடங்குகிறது என்று நான் நம்புகிறேன்.அடுத்தவருக்கு எளிதாக ஆலோசனை சொல்லலாம் ஆனால் நாம் பின்பற்றமுடியுமா என்று சிந்தித்துவிட்டு பின்னர் சொல்வது நலம். மதங்களை ஒழிப்பது தான் இறுதி தீர்வாக இருக்க முடியும்.

      • அண்ணே எழில் இக்பாலுன்னு பெயர் வச்சவுடனே அவர முசுலிம்ன்னு நேனச்சுட்டீகளா அவரு முசுலிமு இல்லாப்பா மெய்யலுமே கொஞ்ச நேரத்துல அவரே வந்து சொல்வாரு வெயிட்டிங் ப்ளீஸ்

      • இந்த இந்துமதத்தில் சற்றும் மூளைக்கு வேலைக் கொடுக்க விடமாட்டார்கள். இந்த அவா’க்கள் வழியில் நானும் பஜனைப் போட்டுத் திரிந்திருந்தால், நானும் உங்களை மாதிரித் தான் மக்குத் தனமாக சிந்தித்திருப்பேன். எனது பெற்றோர், எனக்கு கொடுத்த அறிவுச் சுதந்திரம் மூளைக்கு இம்மி அளவு வேலைக் கொடுத்திருக்கின்றதால் பெருமிதம் கொள்கிறேன்.

        ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன், உலகின் மிகவும் பிர்போக்கு சிந்தனையைக் கொண்டவர்கள் வாழும் நாடு இந்தியா, இந்து மதம் மட்டுமில்லை, அம்மத்ததில் இருந்து எதோ ஒரு காரணத்துக்காக எம்மத்ததை பின்பற்றினாலும், இந்நாட்டில் வாழும் பலர் பலர் மூளைக்கு வேளை கொடுப்பது இல்லை.

        குறிப்பாக இந்து மதம் என்பது கடல் போன்றது, அதாவது இந்து மதம் என்ற ஒன்றே இல்லை எனலாம். இது இந்திய சுதேச மதங்கள் என்றுத் தான் கூறவேண்டும், இவற்றில் வளர்ந்துவந்த வைதிகம் அனைத்தையும் கலப்பிடமாக்கி, வெட்டி ஒட்டி இந்து மதமாக மலர்ந்தது. ஆனால் இவற்றில் ஆதிக்கச் சாதி பிரிவினர் தமது அதிகாரம், பொருளாதாரத்துக்காக இந்த மதத்தை பயன்படுத்தி வருகின்றனர். வயிற்றுப் பிழைப்புக்காக எனக் கூறலாம். இதில் சில அப்பாவி ஜென்மங்களை எப்படியெல்லாம் கொடுமை படுத்தி உள்ளது. அவர்களுக்கு வேறு வழி இல்லாமல் வாழ்ந்த காலத்தில் ஒரு பெட்டர் சாய்ஸாக இஸ்லாமும், கிருத்துவமும் வந்தேறின. இதற்கு முன் இருந்த பௌத்தத்தை வைதிகம் விரட்டியது தனிக்கதை.

        இஸ்லாமும், கிருத்தவமும் என்னப் பெரிய மதங்கள்? தத்துவம் இல்லை, முட்டாள்த்தனமான கொள்கைகள் என்பது இந்துமத பிடுங்கிகள் பலரின் வாதம். ஆனால் ! இந்து மதம் தராத கௌரவத்தை அவை மக்களுக்கு தந்தன. குறைந்தப் பட்சம் ஒரு தலித் பாதிரியாராக ஆக முடியும், அவர்களை ஆதிக்கச் சாதி கிருத்துவர் ஏற்றுக் கொள்வார்களா எனக் கேட்கலாம். ஆனால் குறைந்தது அய்யராக வரும் வாய்ப்பையாவது தந்துள்ளன. ஒரு தலித் முஸ்லிம் பிரியாணி சமைத்தால் அனைத்து முஸ்லிமும் சமத்துமாக பிரசாதமாக ஏற்றுக் கொள்வார்கள். இதில் சில முஸ்லிம் ஆதிக்கச் சாதியினர் மணம் பிணங்கினாலும், அனைத்து சாதிகளையும் சமத்துவமாக ஏற்றுக் கொள்ளும் சாய்ஸை அந்த மதங்கள் தந்துள்ளன.

        ஆனால் நம் இந்து மதத்தை பாருங்கோ !! பிரசாதம் பிசையவே தலித்த்களுக்கு உரிமை இல்லை என்றால் !! குறைந்தபட்ச விடுதலை உரிமையைக் கூட தர மறுத்தால். பிறகு இப்படியான மதத்தில் அதிகப் பட்ச உரிமைகளை போராடி வெல்லல்லாம் என்பது வெறும் கனவே !!! சத்தியமாக விடமாட்டார்கள் !!!

        இது தான் என்வாதம் !!! அப்புறம் அய்யா எழில் அவர்களே ! இந்து மதம் சற்றும் மூளைக்கு வேலைக் கொடுக்கவிடுவதில்லை என்பதை தாங்களே நிறுபித்துவிட்டீர்கள் !

        இக்பால் என்ற பெயர் வைத்தாலே முஸ்லிம், டேவிட் என்றாலே கிருத்துவன், வேறு மதக்காரன் தம் மதத்தை விமர்சிக்கக் கூடாது, ஆனால் நாம் விமர்சிப்போம். இது எல்லாம் ஆரோகியமான விமர்சன ஒழுக்கமா?

        நான் முஸ்லிம் இல்லை, கிருத்தவன் இல்லை சொல்லிவிட்டேன், இன்னமும் சட்டப்படி ஒரு இந்துவே !!! பூணூலை அறுத்த என்னால் ! சான்றிதழிலும், சட்டத்திலும் இந்து என்று நூலை அறுக்க முடியாததால் விட்டுவிட்டேன் !!!

        எந்தவொரு மனிதனும் எந்த மதத்தையும் விமர்சிக்கலாம் என்பது என் கருத்து !!! ஒரு பெண்ணின் மார்சேலையை நான்கு பேரி இழுத்தால், அதை தடுக்க நான் என்ன பெண்ணாகாவே போக முடியும், அப்படி போக நான் என்ன கண்ணனா?????

        அதே போல தவறுகள் எங்கிருந்தாலும், தட்டிக் கேட்பதில் தவறில்லை.

        • வெட்கக் கேடான விஷயம். இது போன்ற பார்ப்பன மனப்பாங்கை அழிக்க, முடிவு எடுக்கும் இடத்தில் அமர்ந்திருக்கும் பார்ப்பனர்கள், மற்றும் தலித் லட்டு பிடித்தால் தின்ன மாட்டேன் என்று சொல்லும் பணம் படைத்த, கோவில்களுக்கு நிதி கொடுக்கும் பார்ப்பனர் அல்லாத பிற ஆதிக்க சாதி இந்துக்கள் இருவருமே அற வழிப் போராட்டங்களின் மூலமாக முடக்கப் பட வேண்டும்.

        • http://tamilcharam.net/end-of-pondicherryblog/

          இந்த சுட்டியில் எல்லா புகழும் இறைவனுக்கே! என்று நீங்கள் முழங்கி உள்ளதைப் பார்த்துதான் அவ்வாறு கூறினேன்.
          ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனக்கு கடவுள் மத நம்பிக்கை இல்லை. நான் இந்து என்று அரசாங்கள் சொல்கிறது.இது என் மீது திணிக்கப்பட்டது அவ்வளவே. இதில் என்னை சூத்திரன் என்று சொல்கிறார்கள் என்று எங்கு செல்வது ? பல காலம் நாத்திகம் பேசிய பெரியார்தாசன் மதம் மாறிய பின் இன்று எங்கே சென்றார் என்றே தெரியவில்லை. அந்த அளவு இஸ்லாத்தில் ஜனநாயகம் இருக்கிறது.மதம் மாறினால் நீங்கள் ஒரு அமைப்புக்குள் சென்று விடுகிறீர்கள் பின்னர் அதன் அடிமைத்தனங்களை நீங்கள் ஏற்றுக்கொண்டாக வேண்டிய நிலை இருக்கிறது அதற்கு பதில் எல்லாவற்றையும் நிராகரிக்கலாம் என்று தான் சொன்னேன்.எந்த மதத்தையும் விமர்சிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. மாற்றம் என்பது தன்னளவில் தொடங்குகிறது என்பதை அழுத்தமாக நம்புகிறேன் அதனால் தான் நான் மாற்றத்தை பற்றி உங்கள் அளவில் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டேன்.இதில் எனக்கு மூளை இல்லை என்றெல்லாம் கீழிறங்க வேண்டியது இல்லை. அது என் கவலை

        • Then why Shia and Sunny Killing each other.Pakistan seperated accusing India of feudal cast system..But after 65 years of seperation even now in Pakistan low cast (Musalli)people canNot go in to Masque to drink water.Seperate tape provided outside Mosque for them.Ahmadis are not reconed as Muslims there.RCs do not like Protestant. Iyers do not go with Iyengar and in Iyengar Vadakalai and Thenkalai NAAMAN. These idiotic things are all in all religions.Therefore come we all join together to remove these FOOLISHNESS instead of accusing each other.Then Iqbal Selvan if you are hindu by birth my advise is be as human being with your original name.By cahnging the name you do not change anything but fool yourself and fool others.

    • Iqbal, dont fool the people in the common forum. you are speaking as if you dont have any knowledge on history. I would suggest you to read the below link which exposes the condition of so called pure religious. Do you have any idea about the ‘slave business’?

      http://psenthilraja.wordpress.com/2009/09/10/untouchability-is-it-really-evil/

      I have replied so many times in this forum about the cast system in india. It is nothing to so with hindu religious. None of Hindu God belongs to bhramin religious as per govt record.

      Parvathi – SC, Krishna – MBC, Ram -OBC….

      The person who wrote the vedas… himself is not a bhramin… He belongs to fisher community. you please educate yourself…
      I request the people to read the history of each and every cast… before muslism and christion invading…

      Why you people are so much interested to do this job… as if it is high paid job… I am not bhramin… Still i prefer the bhramins (not only by birth) to do this job… It doesn’t mean that the bhramin community is suprior to me…They are well trained for this job. Bhramin is nothing to with community… They are free to do this job if their family converted to bhramin. means.. thier enitre family must follow the rules and regulation of bhramins…

      because, they are trained for this job from the childhood… Regarding the ladu… whether you people agree / not… Bhramins are professional in making the ladu… they are great chef… nobody can question on it?…

  5. அவல் லட்டு நல்லா இருக்கும், அவாள் லட்டு நன்னா இருக்கனும்னு அவாளையே பிடிக்க வைக்கிறாளோ என்னவோ, பிள்ளையார் பிடிக்கும் கைதான் லட்டு பிடிக்க ஏற்றக் கைன்னு எதாவது கணக்கு இருக்கனும் 🙂

    • //அவாள் லட்டு நன்னா இருக்கனும்னு அவாளையே பிடிக்க வைக்கிறாளோ என்னவோ, பிள்ளையார் பிடிக்கும் கைதான் லட்டு பிடிக்க ஏற்றக் கைன்னு எதாவது கணக்கு இருக்கனும்//

      அதுக்கும் ஆகமம் வெங்காயம்னு எதாவது இருக்கும் கோவி சார்………………………:-)

      • உண்மை தான் அவா’ள் கைகள் லட்டுப் பிடிக்க முன் மூக்கில் இருக்கும். அப்போது தான் தூக்கலாக இருக்கும் !!! கேடுகெட்ட இந்து மத கட்டமைப்பு திருத்தவும் மாட்டானுங்க, திருத்த விடவும் மாட்டானுங்க !!! ஒழிக்கவும் விடமாட்டானுங்க !!!

  6. பிராமணனை தவிர மற்ற அணைத்து ஜாதியினரும் மொத்தமாக இந்த வேலைக்கு வின்னபிக்காமல் இருக்க வேண்டும், யானை பாகன் வேலையை பார்பனனால் கண்டிப்பாக செய்ய முடியாது இப்படி செய்து தான் பார்பனனை தனிமை படுத்த வேண்டும்

      • மஸ்ஜிதில் யானையை கட்டி வைக்க மாட்டோம், அந்த யானைக்கு குறுக்குல பட்ட போடுறத , நீடல பட்ட போடுரதான்னு சண்ட போட்டுக்குட்டு கோர்ட் கேசுன்னு அலையை மாட்டோம்

      • மசூதிகளில் லட்டுக் கொடுப்பதில்லை, ஒரு தலித் பிரியாணி செய்தாலும், அனைவரும் உண்ணுகிறோம், ஏன் தலித்தை தள்ளி வைத்த ஆதிக்கச் சாதிக் கூட வாங்கி புசிக்கும் !!!

        • தாழ்த்தப்பட்ட மக்களை முஸ்லீம்களாக மாறுவதைவிட இந்துக்களாக இருந்து போராடி சாவதே மேல். முஸ்லீம் மதம் உலகத்திலேயே மிகவும் பிற்போக்குத்தனமான மதம்.ஆண்ணாதிக்கத்தின் உச்சம் தான் முஸ்லீம்களின் மதம். RSSக்கும் ஜாமாத்துக்களுக்கும் வித்தியாசமே கிடையாது. இரண்டையும் ஒழிக்கப்படவேண்டியது.

        • I agree you have zero percentage knowledge on Hindu temple customs. It doesn’t mean that you can speak in a way you want… by they way… each and every temple has its own customs… I understand your proplem… the religious which is orginated from desert can think beyond the limit.. By the way.. Bhramins cant prepare the food in all the temples.. And also, each and every community has its own bhramin community which is bascil orginated from thier own community…

  7. ராமேஸ்வரம் கோயிலில் வெளிப் பிரகாரத்தில் ‘இங்கு பிராமனர்கள் அல்லாதவர்களுக்கு அனுமதியில்லை’ என்ற அறிவிப்பு வைக்கப்பட்டிருக்கும். அது சமயலறைக்கான அறிவிப்பு. இதனை படித்துவிட்டும் கூட மான ரோசமின்றி சென்று கொண்டிருக்கும் பக்தர் கூட்டம்.

  8. நீதிமன்றங்களில் நீதிபதிகளாக பெரும்பாலும் அவாள்தான இருக்கிறா. அப்புறம் எப்படி அவாக்கிட்ட இருந்து இதுக்கு எதிரா தீர்ப்பு வரும்னு எதிர்பார்க்கமுடியும்.

    இந்த செய்தியைப் பார்க்கும்போது இதில் திமுக அரசு மீதும் தவறு இருப்பதாக தோன்றுகிறது. அவர்கள் இந்த விளம்பரம் வெளியிடும்போதே இந்த நிபந்தனையை போடாமல் வெளியிட்டிருக்கலாம் அல்லவா?

    • ஒரு பிரமணானவன் எந்த தொழிலும் செய்யக் கூடாது பிக்க்ஷை எடுத்துத் தானு உண்ண வேண்டும் ஓய் !!! அங்குள்ள அவா’க்கள் எல்லாம் பிரமணர் இல்லை, சாதி மாறியவர்கள் !!! சரி தானே !!!

      • சரியாய் சொன்னிங்க இக்பால் செல்வன்….!

        அந்தணன் என்றால் அந்த+நேரத்திற்கு மட்டும் என்று வாழ்பவன். அதாவது அடுத்த நேரத்திற்கு என்று எதையும் சேர்க்காதவன்.
        அப்படி யாராவது இருந்தால் காட்டும் ஒருமுறை பார்த்துகிறேன்.

        அப்புறம் பாகன் உத்தியோகத்தையும் நீரே பார்க்க வேண்டியதுதானே ஓய்…!
        அதுக்கு சதம் போட்டு சனி அள்ளினால் மோட்சம்மையா ….!
        ஏன் அதுக்கு மட்டும் சூத்திர வளை தேடுறேல் …?

      • அன்பு அழகா ,நீதிபதி முக்கியமல்ல ,இந்த தீர்ப்ப சொன்ன நீதிபதி பார்ப்பனர் இல்ல .இந்து மத சட்டமே மனு நீதி சட்டம் தானே .

  9. காலம் கண்டிப்பாக மாற்றங்களை ஏற்படுத்தும்! தகுதியுள்ள அனைத்து வகுப்பினரும், ஆலய வழிபாடு நடத்திக் கொடுக்க உள்ள தடை,விரைவில் விலகும்!

      • kaargi!

        ஜால்ரா அடிக்க விடமாட்டிங்களே! நான் உமது வழிக்கு வந்தாலும் விட மாட்டீரோ! ஒரு வேளை என்னிடம் இதுபோல எதிர்பார்க்கவில்லையோ?

      • m.k.radha!

        நான் நித்தியாக மாறினால், நீங்கள் தான் கேமிரா!(தற்போது விளக்கும் வீடியோகேமிராவில் இணைக்கப்பட்டுள்ளது!)

  10. நல்ல சாட்டையடியான கட்டுரை………………………..
    எங்கப்பா நம்ம கிராஸ் பெல்டுகளை இன்னும் காணோம்………………………………..

    • ஏன் பத்ரியே வந்து முதல் பின்னூட்டம் இட்டிருப்பது உங்கள் கண்ணில் படவில்லையா? பார்ப்பண அர்ச்சகர்கள் பெற்ற தடையாணை அநியாயமானது என்பதுதான் சிந்திக்க தெரிந்தவரின் கருத்து.

  11. எவ்வளவு சொன்னாலும் எவ்வளவு ஆதாரங்களைக் காட்டினாலும் மக்கள் திருந்துவதாய் இல்லை……….
    அந்த அளவிற்கு கடவுள் எனும் சொல்லை வைத்து ஒரு குறிப்பிட்ட கூட்டம் மக்களை மூளைச் சலவை செய்துள்ளார்கள் தாங்கள் அடிமைகளாக நடத்தப் படுகிறோம் என்பதைக்கூட அறியா வண்ணம் மக்களின் மூளை மழுங்கடிக்கப் பட்டுள்ளது……………………

  12. We are ready to change our thoughts If the MINORITY(and the upcoming) Government ready to cancel the quota in all departments.

    Now a days we are the people who are financially in the backward position but still we dont have any quota in all the departments.

    • கண்டிப்பா உங்களுக்கு கோட்டா தர தயார் தான். மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளியாக வேலை செய்ய நீங்கள் தயாரா? ரயில்வேயில் பீ அள்ளும் வேலைக்கு நீங்கள் தயாரா? இதுக்கெல்லாம் தயார் என்றால் சொல்லுங்கள் அதில் கோட்டா வாங்கித் தர முதல் குரலை நான் கொடுக்கிறேன்.

      குறைந்தபட்சம் இந்தக் கோயில் பாகன் வேலைக்காவது கோட்டா வேண்டும் என்று கேட்கலாமே?

      என்ன அய்யர்’வால்’ தயாரா?

      • நீங்க வேற கார்கி உடனே டோண்டுன்னு ஒருத்தர் பூநூல இறுக்கி பிச்சுக்கிட்டே ஓடிவந்து எங்க ஆளு ஒருத்தர் இங்கிலாந்துல பொய்
        சவுசாலயம் (“கழிப்பிடம்” இதுல கூட சமற்கிருதம் தான்) கட்டி பொது சேவை செஞ்சாரு தூர் வாரினாருன்னு கதை விடுவார் அப்படியும் கூட அவர் முதலாளியா இருந்திருப்பாரே தவிர தொழிலாளியா ஒருபோழுத்ம் இருந்திருக்க மாட்டார்…………………..

        • Mr.கோகுலகிருட்டிணன், what is your problem… Even the owner of the payed toilet is also from the same cast… have you ever think about that….

          You are asking against us because you are very well about the weekness of our community..

      • கார்கி, நீ கக்கூஸு கழுவு ஒரு பத்து நாளைக்கு. நீ கழுவுறதை பார்த்திட்டு அப்புறம் நாங்க சரின்றோம்! வெண்ணை. பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்குற [obscured]