privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்"புதிய தலைமுறை" நடிகர் சூர்யா நமக்கு முன்மாதிரியா?

“புதிய தலைமுறை” நடிகர் சூர்யா நமக்கு முன்மாதிரியா?

-

உழைத்து முன்னேறலாம் என்ற கருத்து மக்களைக் காயடிக்கவே பயன்படுகிறது!

ழக்கம் போல இந்தக் கட்டுரை மிகுதியாகவோ குறைவாகவோ எதிர்ப்பை சந்திக்கலாம். “எல்லாரையும் குற்றம் சொல்கிறீர்களே, யார்தான் நல்லவர்கள், நீங்க மட்டும் யோக்கியமா, நீங்கள் எதாவது சமூகப்பணி செய்திருக்கிறீர்களா, சினிமாக்காரரை சினிமாக்காரராக பாருங்கள், அவர்களால் முடிந்த உதவி செய்வதை எதிர்க்காமலாவது இருங்கள்….” என்றெல்லாம் வாழையடி வாழையாக ஊட்டப்பட்டிருக்கும் “உன்னால் முடியும் தம்பி” டைப்பில் கேட்பார்கள். ஆனாலும் அப்படி கேட்பவர்கள் கொஞ்சம் அருள் கூர்ந்து இதை படித்து விட்டு அந்தக் கேள்விகள் சரியா என்று சொல்லட்டும்.

தமிழகத்தை மொக்கை தேசமாக்கி வரும் சினிமா, தொலைக்காட்சி, சீரியல்கள் போக நாம் கவலைப்பட வேண்டிய மற்றொரு அயிட்டம் அப்துல் கலாம் டைப் தன்னம்பிக்கை போதை கலாச்சாரம். இதை அன்று அமெரிக்க ரிடர்ன் உதயமூர்த்தி துவங்கி வைத்தார். பின்னர் அப்துல்கலாம் அதை நவீன ஊடக வசதி, ஜனாதிபதி அதிகார வசதி மூலம் தமிழகமெங்கும் விஷமரம் போல வளர்த்தெடுத்தார்.

பள்ளி நிர்வாகிகளது கட்டளைக்காக திரட்டப்பட்ட அந்த அப்பாவிக் குழந்தைகளிடம் “குழந்தைகளே கனவு காணுங்கள், 2020-இல் இந்தியா வல்லரசாகப் போகிறது” என தேசிய கீத மொக்கையாக்கினார். இன்றைக்கு இருவரும் மார்க்கெட்டில் இல்லையென்றாலும் இந்த சரக்குதான் பத்திரிகை, ஊடகங்கள், புத்தகக் கண்காட்சி எல்லாவற்றிலும் விலை போகிற சரக்கு. அதுதான் இது “நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்தால் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை சாதிப்பீர்கள்!”.

உழைத்தால் வெற்றியெனும் இந்த தாராக மந்திரம் மேற்கத்திய நாடுகளின் நடுத்தர வர்க்கத்தை, அரசியல் ரீதியாக மொன்னையாக்குவதற்காகவும், பறிக்கப்பட்ட உரிமைகளுக்கு போராடாமல் இருப்பதற்கும், வாழ்க்கை தோல்விகளுக்கு தன்னையே காரணமெனக் கற்பித்துக் கொள்ளவும், நுகர்வு கலாச்சாரத்தின் மறுபக்கமாக, சுயநலத்தை ஒரு ஒழுக்கம் போல பின்பற்றுவதற்காகவும் திட்டமிட்டு திணிக்கப்பட்ட ஒரு மோசடிச் சரக்காகும். அப்படி அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த சரக்கு போதனைகள் கடந்த பத்திருபது ஆண்டுகளாக தமிழ் வாரப் பத்திரிகைகளில் போதையூட்டும் பல தொடர்களாக வந்திருக்கின்றன.

இந்தியாவிலும் மறுகாலனியாக்கத்தின் விளைவாக ஏழைகள் அதிகரிப்பது போல நடுத்தர வர்க்கமும் அதிகரித்து வருகிறது. அவர்கள் வளர்ச்சிக்கேற்ப இந்த சரக்கும் சந்தையில் மிகுந்த கிராக்கியைக் கொண்டிருக்கிறது. இந்த ‘உழைத்து’ முன்னேறிய முதலாளிகளின் வாழ்க்கையை ஜிகினா வார்த்தையில் செட்டப்போடு தயாரித்துதான் கிழக்கு பதிப்பகத்தின் பெரும்பாலான புத்தகங்கள் படையெடுக்கின்றன.

இக்காலச் சூழலில்தான் எஸ்.ஆர்.எம் எனும் பிரம்மாண்டமான கார்ப்பரேட் உயர்கல்வி தொழிலை நடத்தி வரும் பச்சமுத்து, “புதிய தலைமுறை” பத்திரிகையை ஆரம்பித்தார். தனது தொழிலை இடையூறின்றி ஒரு சேஃப்டியோடு நடத்துவதற்காக இந்த தேர்தலில் ஒரு கட்சி ஆரம்பித்து எல்லா தொகுதிகளிலும் போட்டியிட வைத்தார். அதற்காக மண்வெட்டி விவசாயி தோற்றத்தில், கமாண்டோ படத்தில் ஆர்னால்டு துப்பாக்கியுடன் வருவது போல போஸ் கொடுத்து வெளியிடப்பட்ட சுவரொட்டியை நீங்களும் பார்த்து நகைத்திருப்பீர்கள். தொழில், ஊடகம், கட்சி என்று எல்லா துறைகளிலும் கால் பதித்து தமது சாம்ராஜ்ஜியத்தை விஸ்தரிப்பது இப்போதைய முதலாளிகளின் பாணியாகும். பச்சமுத்துவும் அப்படித்தான்.

புதிய தலைமுறை பத்திரிகையின் முழுமுதல் கொள்கையே இந்த ‘உன்னால் முடியும் தம்பி’ மேட்டர்தான். ஆரம்பத்தில் அட்டை டூ அட்டை இந்த அப்துல் கலாம் டைப் மொக்கையையே போட்டு வதைத்தார்கள். அதனாலேயே ஓரிரண்டு இதழ் வாங்கிவிட்டு நிறுத்தி விட்டேன். அச்சமயம் ஒரு நண்பர் கூட ” இந்த இதழில் வேலை செய்யும் அனைவரும் கொஞ்ச நாளுல மொக்கைச் சக்கரவர்த்தியாகி விடுவாங்க” என்று சொன்னது நினைவுக்கு வருகிறது.

தற்போது இந்த தன்னம்பிக்கை சரக்கோடு, அரசியல், பரபரப்பு நிகழ்வுகள் என்று கொஞ்சம் காக்டெயில் போல கலந்து “புதிய தலைமுறை”யில் தருகிறார்கள். ஆனாலும் சுய முன்னேறத்தின் மூலம் சாதிக்கப் போகும் அந்த இந்திய வல்லரசுக் கனவுதான் இவர்கள் சட்டியில் இருக்கும் ஒரே பதார்த்தம்.

புதிய தலைமுறை இதழின் செய்தியாளர்கள் யுவகிருஷ்ணா (லக்கிலுக்), அதிஷா இருவரும் நடிகர் சூர்யாவை பேட்டி கண்டு அவர் பேசியதையே பெரும் வாழ்க்கை சாதனையாக வரித்தும், விரித்தும் எழுதியிருக்கிறார்கள். சினிமா நடிகரைப் பற்றியதென்பதால்  இந்த கட்டுரை நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதாவது சூர்யா மாபெரும் சாதனையாளராகவும், அவரிடமிருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டுமெனவும் பரவசப்படுகிறார்கள். இதை எழுதியவர்களுக்கும் நிறைய பாராட்டுக்கள்! இப்படி ஒரு கட்டுரை எழுத வாய்ப்பு கொடுத்தமைக்காக நாமும் பாராட்டினை தெரிவித்துக் கொள்வோம்.

சூர்யாவின் சினிமா வெற்றிக்கு காரணம் என்ன? திறமையா? பின்னணியா?

“புதிய தலைமுறை” சூர்யா நமக்கு முன்மாதிரியா? முடிந்தால் அந்தக் கட்டுரையை படித்து விடுங்கள். அதில் சரவணன் எனும் சராசரி நடுத்தர வர்க்க இளைஞன் இன்று வெற்றியடைந்த திரை நட்சத்திரமாக உயர்ந்திருப்பதை சிலாகித்து சொல்கிறார்கள். கல்லூரி முடித்த சரவணன் வேலைக்கு மிகவும் மெனக்கெடவில்லை. அவரது உறவினர்கள் கார்மெண்ட் தொழிலில் இருந்தபடியால் ஒரு வேலையை தேடிக்கொள்கிறார். இதில் தனிப்பட்ட சாதனை எங்கே உள்ளது? அதே போல பட்டப்படிப்பு முடித்ததே சாதனையென்றால் தமிழகத்தில் வருடா வருடம் சில இலட்சம் சாதனையாளர்களை நாம் வாழ்த்த வேண்டும்.

மேலும் சிவக்குமாரின் மகன் என்ற அடையாளமும், அதற்குரிய சமூக அங்கீகாரமும், இறுதியாக சுயசாதி உறவினர்களது ஆதரவும்தான் அய்யாவின் துணித் தொழில் இரகசியம். இதில் அவர் கடுமையாக உழைத்து எட்டாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் மேலாளர் பதவியை அடைகிறாராம். எல்லா குடும்ப நிறுவனங்களிலும் குடும்ப உறுப்பினர்களே முக்கிய பதவியை அடைகிறார்கள். சான்றாக இந்து பேப்பரில் ராம், ரவி, முரளி, மாலினி போன்ற ஐய்யங்கார் வாரிசுகளெல்லாம் அந்த பேப்பரின் உரிமையாளர்கள் என்ற தகுதியில்தானே எடிட்டோரியல் பதவிகளை வகித்தார்கள்? திருபாய் அம்பானியின் மகன்களான முகேஷ், அனில் இருவரும் பொதுத் தேர்வு போட்டித் தேர்வு எழுதியா தலைமை நிர்வாகியானார்கள்?

அவ்வளவு ஏன், பச்சமுத்துவின் முதல் மகன் எஸ்.ஆர்.எம் கல்வித் தொழிலையும், இரண்டாவது மகன் புதிய தலைமுறை பத்திரிகையையும் கவனித்துக் கொள்கிறார்கள்.  இது பச்சமுத்து என்ற பண்ணையாரின் மகன்கள் என்பதால் கிடைத்ததா, இல்லை அவர்கள் சொந்தமாக கஷ்டப்பட்டு உழைத்து கிடைத்ததா?

இடையில் வீட்டிற்கு வரும் இயக்குநர்கள் சரவணனை நடிக்க வரும்படி அழைக்கிறார்களாம். அவரோ விருப்பமில்லாமல் தட்டிக் கழிக்கிறாராம். இதை கொஞ்சம் கூர்ந்து கவனியுங்கள். தமிழகத்தில் ஒரு நடுத்தர வர்க்க இளைஞனிடம் யாராவது ஒரு இயக்குநர் நடிக்க வரும்படி அழைத்தால் என்ன செய்வான்? காலில் விழுந்து அதை ஏற்றுக் கொள்வான். இங்கே சிவக்குமார் பையன் என்ற காரணத்திற்காக வாரிசு அடிப்படையில் மட்டுமே பலர் கூப்பிடுகின்றனர். அவர்களெல்லாம் போண்டா இயக்குநர்கள் என்று கருதிய சரவணன் இறுதியில் அறிவாளி இயக்குநர் மணிரத்தினம் சொந்தப் படம் என்று அழைத்ததும் தட்டமுடியாமல் சம்மதிக்கிறாராம். இப்படியாக “நேருக்கு நேர்” படத்தில் அறிமுகமாகிறார்.

இந்தக் காலத்தில்தான் தமிழக அரசியலில் மட்டுமல்ல, சினிமாவிலும் வாரிசுகளே நுழைய முடியும் என்ற நிலை உருவாகிறது. விஜய், சிம்பு, சூர்யா, அருண் விஜயகுமார், தனுஷ், ஜெயம்ரவி, அதர்வா, விஷால், சிபிராஜ், பிரஷாந்த், கார்த்தி என்று ஏராளம்பேர் வாரிசு தகுதியில்தான் கதாநாயகனாக நடிக்கிறார்கள். அதன்படி சரவணன் சூர்யாவாக மாறியதற்கு சொந்த தனிப்பட்ட தகுதி ஏதும் காரணமில்லை. சொல்லப் போனால் சூர்யாவை விட பல தகுதி கொண்ட இளைஞர்களெல்லாம் இந்த சமூகப்பின்னணி இல்லாமல்தான் சினிமாவில் நுழைய முடியவில்லை.

ஆக சினிமாவில் நுழைவதற்கு இப்படிப்பட்ட வாரிசுகள்தான் நுழைய முடியும் என்பது ஜனநாயகத்திற்கு எதிரானதில்லையா? பழைய மன்னராட்சிக்கும் இதற்கும் என்ன வேறுபாடு? இதேபோல குமுதம், விகடன், தினமலர், தினத்தந்தி போன்ற பத்திரிகைகளிலும்  கூட வாரிசுகளே தீர்மானிக்கிறார்கள். அரசியலை எடுத்துக் கொண்டால் ராகுல் காந்தி முதல் கனிமொழி வரை ஆயிரத்தெட்டு எடுத்துக்காட்டுகள் உண்டு. ஆக அரசியல், சினிமா, ஊடகம் எல்லாம் பணக்கார குடும்பங்களால் மட்டுமே கட்டுப்படுத்தப்படும் என்றால் அந்த நாட்டில் மக்களெல்லாம் அடிமைகள் என்றே பொருள். சூர்யா சினிமாவில் நுழைந்தது என்பதை இந்த பின்னணியில் புரிந்து கொண்டால் உண்மை விளங்கும்.

அடுத்து ஆரம்பத்தில் நான்கைந்து வருடங்கள் அவருக்கு படங்கள் சரியாக அமையவில்லை. தோல்வியாம். இதற்குப் பிறகுதான் அவர் டான்ஸ், சண்டை என்ற வித்தைகளையெல்லாம் கற்கிறாராம். ராகுல்காந்தி அரசியலுக்கு வந்து இளைஞர் காங்கிரஸ் தலைவராகி அதன் பிறகு ஆயிரத்தெட்டு வசதிகளோடு அரசியல் ‘கற்பது’ போல நம்ம சூர்யாவும் கற்றுக் கொள்கிறார். முக்கியமாக அவரது படங்கள் தோல்வியடைந்தன என்றாலும் சினிமா உலகில் இருந்து அவர் தூக்கியெறியப்படவில்லை.

பாரதிராஜா, பாக்யராஜ், இளையராஜா போன்ற கிராமத்து இளைஞர்களெல்லாம் கனவுடன் சென்னை வந்து தமிழக சினிமாவை ஆட்டுவித்ததெல்லாம் இன்று கனவில் கூட சாத்தியமில்லை. ஷங்கர், மணிரத்தினம், கவுதம் மேனன் போன்ற பெரிய இயக்குநர்களிடம் உதவியாளாராக சேரவேண்டுமென்றால் டாக்டர், இன்ஜினியர், எம்.பி.ஏ இன்னபிற உயர்கல்விகளோடு ஆங்கிலம், பிரெஞ்சு, இந்தி என்று கூடுதல் மொழிகளும் தெரிந்திருக்க வேண்டும். இன்று ஒரு சில விதிவிலக்குகள் தவிர சாதாரண இளைஞர்கள் எவரும் சினிமாவில் நுழைய முடியாதபடி அங்கே பெரும் சுவர் எழுப்பப்பட்டு விட்டது. வசதி, சிபாரிசு, அரசியல் பின்னணி என்று இருந்தால்தான் முடியும்.

இப்படித்தான் உண்மையான திறமைகள் தமிழ் சினிமாவில் நுழைய முடியாமலும், அப்படி நுழைந்தாலும் சில ஆதிக்க கும்பல்களின் கட்டுப்பாட்டில் மட்டுமே வேலை செய்ய முடியும். ஆக சூர்யா தனது மேலான பின்னணி காரணமாக பெரிய போட்டிகள் எதுவுமின்றி ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் நீடித்திருக்கிறார்.

இந்நிலையில் இயக்குநர் பாலாவிடம் வாய்ப்பு கேட்டாராம். அவரும் சூர்யாவை வைத்து நந்தாவை எடுத்தாராம். அதன் பிறகு ஏறுமுகமாம்.  இதில் என்ன முன்மாதிரி உள்ளது? இயக்குனர் சொன்னபடி கேட்டு ஒருவர் நடித்திருக்கிறாரே அது அவரது ஆற்றலில்லையா என பலர் கேட்கலாம்.  மார்க்கெட் போன சியான் விக்ரமை முன்னணி நட்சத்திரமாக்கிய இயக்குநர் பாலவிடம் நமது இலக்கிய குருஜி நாயகனாக நடித்தால் கூட கம்பீரமாக மிளிர்வார் எனும்போது நடிப்பு பின்னணியும், அனுபவமும் உடைய சூர்யாவின் வெற்றிக்கு பாலாவை பாராட்டலாமே ஒழிய இதை சூர்யா தனிப்பட்டு உழைத்து முன்னேறியதாகச் சொல்லவதற்கு எதாவது இருக்கிறதா? சினிமா என்பது இயக்குனர் முதல் லைட்பாய் வரை பலரின் கூட்டுமுயற்சி . அதன் வெற்றியை ஒருவருக்கு மட்டுமே உரித்தாக்குவது என்பது மோசடி.  சில நல்ல இயக்குநர்கள, விறுவிறுப்பான கதைகள், வெற்றியடைந்த இசை என்று காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதைதான் சூர்யாவின் வெற்றிப் பின்னணி. இத்தகைய வாய்ப்பு கிடைக்கும் போது உசிலம்பட்டியைச் சேர்ந்த ஒரு இளைஞன் கூட வெற்றி பெறமுடியும். ஆனால் அவனுக்கு சூர்யாவைப் போன்ற பின்னணி இருக்காது என்பதால் அது சாத்தியமில்லை.

மேலும் சினிமாவைப் பொறுத்த வரை ஒரு நடிகரது முகம் தொடர்ந்து திணிக்கப்படும்போது அந்த முகத்தை மக்கள் வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார்கள்.  சான்றாக நடிகர் விஜயை எடுத்துக் கொள்வோம். சூர்யா போல இல்லாமல் அப்பா சந்திரசேகரால் திட்டமிட்டு வளர்த்து நுழைக்கப்பட்டவர் விஜய். நடிக்க வரும்போதே அவருக்கு நடனம், சண்டை, ஃபார்முலா நடிப்பு எல்லாம் தெரியும். ஆனால் ஆரம்ப காலத்தில் வரும் விஜயின் முகத்தை நீங்கள் கூட சகித்திருக்க மாட்டீர்கள். அப்போதெல்லாம் எஸ்.ஏ சந்திரசேகர் மகனுக்கு ஜோடியாக சங்கவி போன்ற நடிகைகளை கவர்ச்சி காட்டி நடிக்க வைத்தார். காதல் காட்சிகளையெல்லாம் நீலப்படங்கள் போல எடுத்தார். அதனால் அன்று ரசிகர்கள் விஜயைப் பார்க்க சென்றார்கள் என்பது கூட உண்மையில்லை. ஆனால் அசராத தந்தையின் முயற்சியால் விஜய் தொடர்ந்து சினிமாவில் நீடிக்க அந்த முகம் இப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. எனவே தற்போது உள்ள தகவல் ஊடக தொழில் நுட்பத்தில் ஒரு வீட்டுப் பூனையைக்கூட ஒருசிலபடங்களில் நடிக்க வைத்து ஸ்டாராக மாற்ற முடியும். தேவர் பிலிம்சின் ஆடு,மாடு, யானைகளெல்லாம் உழைத்து முன்னேறிய கதையாக ஒத்துக் கொண்டால் நாம் சூர்யாவையும் ஒத்துக் கொள்ளலாம்.

கல்வி கற்பது மக்களது உரிமையா? வள்ளல்களது தர்மமா?

சினிமாவிற்கு அடுத்து சூர்யா தனது வள்ளல் பாத்திரத்திற்கு வருகிறார். தந்தை சிவக்குமார் ஆரம்பித்து வைத்த கல்வி உதவியை இப்போது அகரம் என்ற அறக்கட்டளை மூலம் பெரியதாக நடத்தி வருகிறாராம். ஏழை மாணவர்களுக்கு உதவி, கல்லூரி படிப்பு, காம்பஸ் இன்டர்வீயு என்று வேலை வாங்கித் தருவது வரை செய்கிறாராம். இது தெரியாமல் தமிழக இளைஞர்கள் அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் போய் தவமிருக்கிறார்களே ஏன்? கன்னியாகுமரி முதல் சென்னை வரை படிப்புக்கும், வேலைக்கும் அலையும் அத்தனை இளைஞர்களும் சூர்யா வீட்டிற்கு வந்தால் எதிர்காலத்தையே வெறும் ஐந்து நிமிடத்தில் பெற்று விடலாமே?

கருணாநிதியும், ஜெயலலிதாவும் போட்டி போட்டுக் கொண்டு இலவசங்களை அள்ளிவிடுவது மக்களை பிச்சைக்காரர்களாக்கும் உத்தி என்று நோகாமல் எக்காளம் பேசுபவர்கள் சூர்யாவின் இந்த கல்விப் பிச்சை பற்றி என்ன சொல்வார்கள்? உடனே இது கல்வி என்பதால் டி.வியோடு ஒப்பிட முடியாது, படிப்பைக் கொடுத்தால் அந்த பையன் தனது எதிர்காலத்தை தானே அடைவான், இது அடிப்படையான சமூக மாற்றத்திற்கான உதவி என்று வாதாடுவார்கள்.

ஒரு குழந்தை படிப்பதும், படிக்காமல் போவதும் அதனுடைய தனிப்பட்ட பிரச்சினையா? இல்லை அந்த குடும்பத்தின் பிரச்சினையா? இல்லை இவர்களைப் போன்ற ஒட்டு மொத்த மக்களிடமிருந்து வரிவசூலிக்கும் அரசின் பிரச்சினையா? நாட்டு மக்களுக்கு இலவச, தரமான கல்வி கொடுக்க வேண்டிய அரசு அதை ஒழித்து விட்டு காசு இருப்பவனுக்குத்தான் கல்வி என்று சுயநிதிக் கல்லூரி முதலாளிகளை ஊக்குவிக்கிறது. புதிய தலைமுறையில் தன்னம்பிக்கை சரக்கை போதிக்கும் பச்சமுத்துவின் எஸ்.எம்.ஆர் கல்லூரிகளில் இலவசமாகவா கல்வி கொடுக்கிறார்கள்? இல்லை பல இலட்சங்களில் மாணவர்களுக்கு கல்வியை விற்கிறார்கள்.

நடிகர் சூர்யா வெற்றிகரமான நட்சத்திரமாக உருவெடுத்து, அகரம் அறக்கட்டளையை நடத்தும் இந்தக் காலத்தில்தான் ஏழைகளும், கீழ்த்தட்டு நடுத்தர மக்களும் உயர்கல்வி கற்க முடியாது என்ற நிலைமை வந்து விட்டது. மாதச்சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கமும் குழந்தைகளின் கல்விக்காக நுரை விடும் அளவுக்கு வதைபட்டு ஒடுகிறது. இதில இந்த நல்லவர் கல்வி உதவி செய்கிறாராம். யாரை ஏமாற்றுகிறீர்கள்?

சமீபத்தில் கூட சென்னை எம்.சி.ராஜா அரசு விடுதியில் படிக்கும் தலித் மாணவர்கள் விடுதியின் அவல நிலை காரணமாக சாலை மறியல் செய்தார்கள். இன்னும் நிலைமை அப்படியேதான் உள்ளது. இதற்கு முன் பல வருடங்களாக அப்படித்தான் உள்ளது. ஒரு வேளை சூர்யாவிற்கு கல்விதான் அக்கறை என்றிருந்தால் இந்த சாலை மறியலில் கலந்து கொண்டிருக்க வேண்டும். அல்லது தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக தமிழகமெங்கும் பெற்றோர்கள் போராடினார்களே அதில் கலந்து கொண்டிருக்க வேண்டும்.

சமீபத்தில் சென்னை மேட்டுக்குடி பள்ளி ஒன்று ஏழைகளை பள்ளியில் சேர்க்கச் சொல்லும் அரசின் கொள்கை முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்களிடம் பிரச்சாரம் செய்கிறது. இந்த பள்ளி நிர்வாகத்தை கண்டித்து சூர்யா உண்ணாவிரதமோ குறைந்தபட்சம் மெழுகுவர்த்தி போராட்டமோ செய்வாரா?  எஸ்.ஆர்.எம் கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களிடம் 25லிருந்து 50 இலட்சமும் இல்லை அதற்கு மேலும் வசூலிக்கிறாரே பச்சமுத்து அவரை எதிர்த்து ஒரு அறிக்கையாவது விட்டுப் பார்க்கட்டுமே. அதை நமது புதிய தலைமுறை செய்தியாளர்கள் ஒரு ரிப்போர்ட்டாக எழுதட்டும். நாமும் சூர்யாவின் சமூக கடமையை மெச்சுவோம்.

ஆம். இன்றைக்கு நமது மாணவர்களுக்கு தரமான இலவசமான கல்வி கிடைக்க வேண்டுமென்றால் நாம் அதற்காக அரசை எதிர்த்து போராட வேண்டும். இது ஒன்றும் நமக்கு தரப்படும் பிச்சை அல்ல. நமது உரிமை. பறிக்கப்பட்ட அந்த உரிமைக்காக மக்கள் அணி திரண்டு போராடும்போது மட்டுமே அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை என்ற நிலையை சமூகம் அடைய முடியும். இந்த போராட்ட உணர்வு இருக்கக் கூடாது என்ற அடிமைகளின் நிலையைத்தான் இத்தகைய கல்வி வள்ளல்களின் நடவடிக்கைகள் உருவாக்குகிறது. மேலும் சமூகமாக நாம் சேர்ந்து போராடி பெற வேண்டிய உரிமைக்கான சிந்தனையை, இப்படி பணக்காரர்களின் கருணை உள்ளத்தால் ஒரு சிலருக்கு வழி ஏற்படும் என்ற மாயையை உருவாக்கி அழிக்கிறார்கள்.

நண்பர்களே, நடிகர் சூர்யாவின் சினிமா பிடிக்கும், அவரது நடிப்பு பிடிக்கும் என்று சொன்னால் பிரச்சினை அல்ல. அது வெறும் இரசனை சம்பந்தப்பட்டது. ஆனால் அவரது வெற்றியிலிருந்து நாமும் கற்றுக் கொண்டு உழைத்தால் நல்ல நிலையை அடைய முடியும் என்று சொன்னால் அது ஆபாசமானது, கண்டனத்திற்குரியது. அயன் படத்தின் டிக்கெட் சிலநூறுகள் என்றால் அது பல ஆயிரங்களில் தியேட்டர் முதலாளிக்கும், இலட்சங்களில் வினியோகஸ்தருக்கும், கோடிகளில் தயாரிப்பாளருக்கும் போகிறது. அந்த கோடிகளில் சிலவற்றை எடுத்துக் கொள்ளும் கோடீஸ்வரன்தான் சூர்யா. இவரைப் போன்ற பெரும் பணக்காரர்கள் தத்தமது குடும்பங்களின் தேவைக்கு மீறி பிரம்மாண்டமாக சேர்த்து வைத்திருக்கும் பணத்தால்தான் பல ஏழைகள் படிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. இதை மறைக்க ஒரு லட்சத்தை தானம் செய்து அதை பல லட்சங்களுக்கு விளம்பரம் செய்கிறார்கள். தன்னை ஒரு வள்ளல் போல முன்னிறுத்துகிறார்கள். ஊடகங்களும் இந்த நட்சத்திர சேவையை செவ்வனே செய்து வருகிறது.

உன்னால் முடியும் தம்பி சித்தாந்தத்தின் சூட்சுமே மக்களை காயடிப்பதுதான். இதில் தொடர்ந்து பயணம் செய்தால் நடுத்தர வர்க்கம் பாசிசத்தை ஆதரிக்கும் மனநிலைக்கு இயல்பாக பழகிக் கொள்ளும். ஆளும் வர்க்கமும் அதைத்தான் விரும்புகிறது. மக்களைச் சுரண்டி வாழும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இப்போது “கார்ப்பரேட் சமூக பொறுப்பு” என்று சீன்போடுவது அதிகரித்திருக்கிறது.

நமது இயலாமை என்பது நமது பறிக்கப்பட்ட செல்வத்தில் இருக்கிறது என்பதை புரிந்து கொள்வதுதான் நமது விடுதலைக்கான ஒரே வழி. ஆகவே இந்த கனவான்களையும், தரும வள்ளல்களையும் எப்போதும் விலக்கி வையுங்கள். விடுதலைக்கான சிந்தனையை பாதுகாத்துக் கொள்ளுங்கள். நமக்கான முன்னுதாரணங்களை நாம் பகத்சிங்கிடம் தேடவேண்டுமே ஒழிய, ஒரு கட்டவுட் நட்சத்திரத்திடமிருந்து அல்ல.

____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. சரியாக சொன்னீர்கள் தோழர்
    உலகத்துல எவனுமே நல்லவன் இல்ல, எலோரும் நாசமா போகட்டும் , 2012 ல உலகம் அழிஞ்சா தான் திருந்துவாணுக…சரிதானே

  2. வெற்றி மனிதர்கள் கடந்து வந்தப் பாதையைத் தெரிந்து கொள்வதில் தவறில்லை! எந்தத் துறையாகினும்! பகுத்தறிந்து நமக்குத் தேவையானதை அறியலாம்! பின் பற்றுவது அவரவர் விருப்பம்!

    புரட்சித் தலைவர்களும் பின்பற்றுதலுக்குறியவர்களே! அவர்களை மட்டுமே பின்பற்ற வேண்டும் என கட்டுரையாளர் எதிர்பார்ப்பது, அவரது அதீத ஆசை!

  3. //ஒரு வேளை சூர்யாவிற்கு கல்விதான் அக்கறை என்றிருந்தால் இந்த சாலை மறியலில் கலந்து கொண்டிருக்க வேண்டும். அல்லது தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக தமிழகமெங்கும் பெற்றோர்கள் போராடினார்களே அதில் கலந்து கொண்டிருக்க வேண்டும்.//

    ஓஹோ! அப்ப இதில் எல்லாம் கலந்து கொண்டால் மட்டும் நீங்கள் பாராட்டுவீர்கள் வேறு மாதிரி வழியில் செய்தால் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள். ரைட்டு. இதில் எல்லாம் கலந்து கொண்டால் தான் ஒருவர் சூப்பர் என்று நிர்ணயிப்பது யார்? உங்களுக்கு இது பெரிய விஷயம் போல மற்றவர்களுக்கு சூர்யா போல செய்வது பெரிய விஷயம்.

    இது தான் சரி என்று கூற நீங்கள் யார்? போராட்டத்தில் கலந்து கொள்கிறவர்கள் எல்லோரும் அதற்காகத்தான் உழைப்பவர்கள் என்று அர்த்தமில்லை அதே போல கலந்து கொள்ளாமல் வேறு வழிகளில் தங்கள் உதவிகளை செய்பவர்கள் எல்லாம் முட்டாள்களும் அல்ல. ஊருல உங்களை தவிர மற்ற எல்லோருமே உங்களுக்கு முட்டாள்கள் தான்.

    //நமது புதிய தலைமுறை செய்தியாளர்கள் ஒரு ரிப்போர்ட்டாக எழுதட்டும். நாமும் சூர்யாவின் சமூக கடமையை மெச்சுவோம்.//

    நீங்க மெச்சுனா என்ன மெச்சாட்டி என்ன? இப்ப யார் வந்து நீங்க பாராட்டலை என்று கூறினார்கள்.

    //உன்னால் முடியும் தம்பி சித்தாந்தத்தின் சூட்சுமே மக்களை காயடிப்பதுதான். இதில் தொடர்ந்து பயணம் செய்தால் நடுத்தர வர்க்கம் பாசிசத்தை ஆதரிக்கும் மனநிலைக்கு இயல்பாக பழகிக் கொள்ளும்.//

    ஆமா! வினவு சொல்லிட்டாங்க.. இனி மேல் எல்லோரும் “உ(எ)ன்னால முடியாது தம்பி” என்று தான் பாடவேண்டும்.

    புதிய தலைமுறை சிறப்பான பல கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. உங்கள் வாதப்படி அதனால் மற்றவர்களுக்கு பயன் இல்லை என்று வைத்துக்கொண்டாலும் உங்கள் தளத்தை படித்தால் வரும் தலைவலி நிச்சயம் இல்லை.

    வாழ்த்துக்கள் புதிய தலைமுறை. சிறப்பான கட்டுரைகளை வழக்கம் போல கொடுங்கள்.

    ஆனா ஒண்ணுங்க வினவு (ஆவனாத்தான் இரண்டு னு சொல்லிடாதீங்க) இது மாதிரி யோசிக்க உங்களால மட்டுமே முடியும்.

    • ஆனா ஒன்னுங்க ஆவன்னா தாங்க ரெண்டு, எவ்வளவு விளக்கு விளக்குன்னு விளக்கமாக எழுதினாலும் உங்களால மட்டும் தாங்க இப்படி பதில் சொல்ல முடியும்.

      • குறைவற்ற உங்க விரிந்த பார்வையில் இதைத்தாண்டி வேறொதுவும் தெரியவில்லையோ. சொல்வதை விளங்கச் சொல்லுமையா மங்குனி அமைச்சரே

    • //உங்கள் தளத்தை படித்தால் வரும் தலைவலி நிச்சயம் இல்லை.//

      புதிய தலைமுறையை படிச்சா தலைவலி வருவதில்லை. படிச்சு, கூலா அடுத்த வேலையை பார்க்க போயிரலாம்.

      வினவை படிச்ச மட்டும் போதாது. தெருவில் இறங்கி போராடணும். இது பெரிய தலைவலியா இருக்குன்னு கிரி பீல் பண்ணி சொல்றார்.

      இந்த பின்னூட்டம் உருப்படியான பின்னூட்டம். வினவு சரியான பாதையில தான் போயிருட்டிருக்கு.

  4. போலித்தன ஹீரோ ஒர்ஷிப் பற்றி நல்ல விளக்கம்..மக்கள் விழிக்கணும்..

    //சமீபத்தில் சென்னை மேட்டுக்குடி பள்ளி ஒன்று ஏழைகளை பள்ளியில் சேர்க்கச் சொல்லும் அரசின் கொள்கை முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்களிடம் பிரச்சாரம் செய்கிறது. //

    இது குறித்து வருத்தத்தோடு என் பதிவும் இன்று..

    ஏழை என்ற இளக்காரம்?.
    http://punnagaithesam.blogspot.com/2011/04/blog-post_27.html

  5. ஆதிக்கத்தின் பிடியில் சிக்கித்தவிக்கிற இந்திய கல்வியில் கட்டமைப்பு, இன்னும் கடைக்கோடி கிராமப்புற மாணவனுக்கு பாராமுகமாகவே இருப்பது நம்மக்கு தெரிந்ததே… தட்டி தட்டிச் சலித்துபோன என் கைகளுக்கு வலுவில்லை.. எவ்வளவு நாள் தான் தட்டிக்கொண்டே இருப்பது.. தனிமனித விளம்பரமோ இல்லை வியாபாரமோ, இப்படியான ஜன்னல்கள் (கதவுகள் கூட இல்லை) அங்கொன்றும் இங்கொன்றுமாய் திறப்பதினால் ஏதோ ஒரு நம்பிக்கையில் இன்னொருவனும் கல்வி கற்க முடிகிறது..!!!
    இந்த கட்டுரையில் ஒரு பதிவு குறிப்பிடப்படவேண்டியது “அகரம் அறக்கட்டளையை நடத்தும் இந்தக் காலத்தில்தான் ஏழைகளும், கீழ்த்தட்டு நடுத்தர மக்களும் உயர்கல்வி கற்க முடியாது என்ற நிலைமை வந்து விட்டது” – எனக்கு சரியாய் விளங்கவில்லை.. அரசே கல்வியை மறுக்குபோது யாரோ ஒருவரிடமிருந்து பெறுகிற கல்வி எந்த அளவுக்கு சீர்குலைக்கும்னு புரியல..

    – தோழமையுடன் ரவீந்திரன்.

  6. அடநான் இத்தன நாள் உங்கள மாறியே சிந்திசேன்ங்க… இப்ப கொஞ்சம் மாறுபடரேன்… எதிர்க்கலைங்க மாறுபடரேன்..

    இன்றைய டீன் ஏஜ் பையனிடம் போய் சுபாஷ் சந்திர போஸ்சை பற்றி பேசினால் நிச்சயம் மறுமொழி கூற மாட்டான். அது அவனுக்கு இந்த விதத்தில் சொன்ன்னால் தான் போய்ச்சேரும். சூர்யா இப்படித்தான் முன்னேறினார் என்றும் அவர் இந்த உதவிகள் செய்தார் என்றும் கூறினால் (அவர் செய்த்து அவர் சம்பாத்திததில் 100ல் ஒரு பங்காகவே இருக்கட்டும்ங்க) நாம இப்படி ( நம்ம தலைவன் மாதிரி (??!!)) செய்யனும்ன்னு அவனுக்கு தோணும்.. அவன் அந்த அர்த்தத்துல அத புரிஞ்சுக்கறது தான் நமக்கு நல்லது.

    பகுத்தறிபவர்கள் அறியட்டும், மற்ற ஆட்டு மந்தை கூட்ட ஆடுகளை நல்ல பக்கம் திருப்பி விடுவோம் அது போதும் அவர்களும் சிந்திக்க வேண்டும் என நினைத்தால், அது நம் வாழ் நாளில் நடக்காது.

    இதற்கு நிச்சயம் மறு மொழி எதிர்பார்கிறேன்

    • கூத்தாடி,

      நீங்க சீரியஸாத்தான் பேசிருக்கீங்க. ஆனாலும் எனக்கு இந்தக் கதை நியாபகத்துக்கு வருது. அதாவது என்னான்னா, இந்தக் கொக்கு பிடிக்க என்ன செய்யனும்னா… முதல் கட்டமா அப்டியே நைசா அதும் பக்கதுல நடந்து போயி அதோட தலையில கப்புன்னு ஒரு வெண்ணைக் கட்டிய வச்சிடனும். அப்புறம் அப்டியே தள்ளி நின்னு அந்த வெண்ணை வெயில்ல உருகி கண்ணை மறைக்கிற வரைக்கும் பொருமையா காத்துக்கிடக்கனும். கண்ணை மறைத்ததும் அப்படியே கபால்னு பாஞ்சு போய் பிடிச்சுடனும். நான் சரியாத் தானே பேசிருக்கேன்?
      சரி விடுங்க.
      நீங்க சொல்றா மாதிரி பூவைப் புய்ப்பம்னு சொல்ல முடியாதுங்க. ஏன்னா, ஊர்ல நாட்ல பயபுள்ளைங்க படிக்கவே வக்கு வழியில்லாம அலையுதுங்க. கடனை உடனை வாங்கி பள்ளிக்கூடத்தில் சேத்து வுட்டா அவன் என்னடான்னா ஊட்டுப் பத்திரத்த எடுத்து வைய்யு முதல்லன்னு சொல்றான். கெவுருமென்டுக்கே தனியார் பள்ளிக்கூட தொழிலதிபருங்க பெப்பே காட்றானுங்க. இந்த சூரியா அதையெல்லாம் எதிர்த்தோ – போராடும் பொதுமக்களுக்கு ஆதரவாகவோ ஒரு தும்மல் கூட தும்மலை.
      இந்த லக்கிலுக்கு எழுதின கட்டுரைல என்னாமோ இளைஞர்களின் ஆதர்ச நாயகன் சூர்யா தான்னு எழுதியிருக்காப்ல. அவரென்னடான்னா நவ்ரத்னா கூல் தைலத்துக்கு டான்சாடின நேரம் போக மித்த நேரத்துல டைம்பாஸ் பண்ண ஏதோ கருப்புப்பணத்துல கொஞ்சத்த அள்ளி விடுறாரு. அப்டி இருக்கும் போது மேயப் போன ஆடு எங்க மேயுதுன்னு பார்க்கிறது தப்பில்லைங்களே?
      இன்றைய டீன் ஏஜ் பைய்யனிடம் சூரியாவைப் பத்திப் பேசறதை விட சக்கீலா பத்திப் பேசினாக் கூடத் தான் ஆர்வமா மறுமொழி சொல்வான். அதுக்காக அவுகளப் பத்தி விளக்கித் தான் சமூக அக்கறையை ஊட்டனும்னு சொல்றீங்களா?

  7. தனது சுய லாபத்திற்காக மனித சமுதாயதிற்கு எதிரான
    நடவடிக்கைகளில் திட்டமிட்டு ஈடுபடுபவனை சாடுவோம்! கடுமையாக எதிர்ப்போம்!

    ஏனைய பிற பிழைகளை அறிவுறுத்தி இதை இப்படி செய்திருக்க வேண்டும்
    என்று வழி கட்டுவோம், அதுவே அவசிய தேவையாகிறது.

    உங்கள் மொழியின் கடுமை வாசகர்களுக்கு அறிவை தரலாம், சம்பந்த பட்டவர்களுக்கு
    வழி காட்டுமா என்பது சந்தேகமே, அணுகுமுறை ஆக்கபூர்வமான விளைவை குறித்தே
    அமைதல் வேண்டாமோ?

    சமுதாய நலன் குறித்து சிந்திக்கும் பெரும்பாலான சக்திகள் விமர்சனம் என்ற முதல்
    படியிலேயே நின்று விடுகிறனர், வாசகனும் அறிதல் என்ற நிலையிலேயே நின்று விடுகிறான்.
    “திருத்தம்” கூற யாருமேயில்லை.

    முதலில் தேவை அறிந்து நாம் நம்மை திருத்திக்கொள்வோமாக!!!

  8. ஸ்யப்ப்ப்ப்ப்ப்..எதை எழுதினா ஹிட்ஸ் வரும்முன்னு நினைச்சி வினவுல பதிவு எழுத ஆரம்பிச்சிடாங்க போல..

    • விட்டா வினவு என்ன எழுதனும்னு நீங்க லிஸ்டு கொடுப்பீங்க போல

    • @@@@ பாக்குறவனை எல்லாம் குறை சொல்வது திட்டுவது.எவனும் உருப்படக்கூடாது தெருவுல இறங்கி போராடி போராடி நாட்டை நாசமாக்கணும்… – வினவுத்துவ கொள்கை..@@@

      இதைத்தானே சந்தோஷ் நீங்க வினவு பஸ்ஸில் எழுதுனீங்க. சரி தெருவில இறங்கி போராடினா நாடு நாசமாகும்னு சொல்றீங்களே அப்ப நாட்டை நலம் பெறச்செய்ய என்ன வழின்னு கல்வெட்டுல பொறிச்சு வச்சு நீங்க அதுக்கு பக்கத்துலேயே போய் உக்காந்தீங்கன்னா நாங்கெல்லாம் வந்து படிச்சிட்டு விவரமாயிக்குவோம். நாட்டின் நன்மையை முதன்மையாக எண்ணும் நீங்கள் இதை நிச்சயம் செய்வீர்கள் என எதிர்பாக்கிறேன்

    • வினவு ஏற்கெனவே நல்லா ஹிட்டாத்தான் சந்தோஷ் போய்ட்ருக்கு. நடுத்தர வர்க்கத்தை குத்திக்காட்டும் இப்படிப்பட்ட நல்ல கட்டுரைகள் எதையாவது எழுதினால் அதற்கு பதில் சொல்ல முடியாமல் உங்களைப் போன்ற மத்தியமர்கள் ஹிட்ஸ் ஹிட்ஸ் என்று காமெடி பன்னுவது தான் கேவலமாக இருக்கிறது. ஆமா இதே டயலாக்கை எத்தனை நாளைக்கு தான் (எத்தனை பதிவுக்குத் தான்) பேசுவீங்க ? டயலாக்கை மாத்துங்கப்பா.

  9. மிக நல்ல கட்டுரை. தர்மகர்த்தா சிந்தனை எல்லா துறைகளிலும் கோசலோச்சுவதை இந்த கட்டுரை மிக நன்றாக விளக்குகின்றது.

    ஆதவன்.

  10. புதிய தலைமுறை செய்தியாளர்கள் தங்களுடைய பணியை சரியாக நிறைவேற்றியுள்ளனர்.
    சரி.இதனுடன் அவர்கள் முன்னேறிய(முன்னேறியிருந்தால்)கதையை உண்மையாக கூறுவார்களா?

  11. 2007 வரை இன்சினீரிங் கல்லூரிகளில் டோட் 1‍‍ (அரசு கல்லூரிகள்), டோட் 2 (தனியார் கல்லூரிகளில் கவுன்சிலிங்கில் தேர்வு செய்யப்படும் ரூ 14,000 கட்டணம்), டோட் 3 ‍(தனியார் கல்லூரிகளில் கவுன்சிலிங்கில் தேர்வு செய்யப்படும் ரூ 36,000 கட்டணம்) என மூன்று வகைகள் இருந்து வந்தன. இப்போது டோட் 2 வை தூக்கிவிட்டு டோட் 3 டோட் 2 என்று மாற்றி வைக்கப்பட்டுள்ளது. இவ்வகையில் ரூ 12,000 முதல் 14,000 ல் கிடைத்து வந்த படிப்பு 36,000 க்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் இது மட்டுமின்றி அவர்கள் பிடுங்கும் இதர கட்டணங்கள் ஒரு வருடத்துக்கு 1 லட்சத்துக்கும் மேலே வந்து விடுகிறது. இதையெல்லாம் தட்டி கேட்காமல், சும்மா 1000 நோட்டுபுத்தகங்கள், 50 கணினிகள் வழங்கி தங்களை ஒரு சமூக சேவகராய் காட்டிக்கொள்வது அவ‌ர்களுக்கு தன்னை தானே தர்மவானாக கருதிக்கொள்ளும் சுய திருப்தியை,சுய‌ அரிப்பை தருமே ஒழிய சமூகத்தை மயிரளவேனும் மாற்றாது. அதை கட்டுரைகளாக்கும் சிலருக்கும் ஒரு சினிமா நட்சத்திரத்தை பேட்டி கண்ட திருப்தி கிடைக்குமே ஒழிய சமூகத்துக்கு ஒண்ணும் விளங்காது.

  12. சரியாதான் சொல்றீங்க… ஆனா அரசாங்கமே மக்களை பிச்சைகாரன் மாதிரி இலவசத்த தூக்கி எறிஞ்சுட்டு கோடி கோடியா ஏப்பம் விட்டு ஆட்சியாலும் அரசியல்வாதிகள் பாக்கெட்ல கொட்டுது. அதுக்கெல்லாம் நீங்க ஏன் ஒண்ணுமே சொல்றதில்லை.

  13. நண்பரே… முதலிலேயே சொல்லிவிடுகிறேன், நான் சூர்யாவின் ரசிகரல்ல. எனினும் நீங்கள் குறிப்பிட்ட மற்ற கதாநாயகர் லிஸ்டிலிருந்து சூர்யா தள்ளி நிற்கிறார். என்னதான் மேனேஜர் உத்யோகம், திரையுலகை அடுத்து வெளியே வேலை என்று இருந்தாலும் அதை என்னால் தவறாகக் காணமுடியவில்லை… எனக்கு “பவர்” இருந்தால் என் மகனையும் மேலாளர் ஆக்க எனக்கு விருப்பம் அதிகமாகத்தான் இருக்கும். சரி இதைவிடுங்கள், சூர்யா ஒரு வாரிசு என்பதால் உங்களால் அவரை ஒத்துக் கொள்ளமுடியவில்லை இல்லையா? எனில் சூர்யாவை ஒரு நடிகராகப் பாருங்கள்.. எந்தவொரு வாரிசும் நடிப்பில்லையே நீடிக்க முடியாது என்பது நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியதில்லை… உதா: சிபிராஜ்!

    சரி.. போகட்டும்… இதெல்லாம் தவறாகவே இருக்கட்டும்.
    அகரம் பவுண்டேஷன் பற்றி நீங்கள் கூறுவதுதான் உறுத்தலாக இருக்கிறது. ஏனெனில் அதன் பலனை அனுபவித்தவர்கள் எனது அண்ணன் குடும்பத்தினர்.. பரிட்ச்சையில் நல்ல மார்க் எடுத்திருந்தும் படிக்கவைக்க முடியாமல் இருந்த சூழ்நிலையில் சூர்யாவின் அகரம் தான் உதவியது… அண்ணன் மகனது நான்கு வருட பொறியியல் படிப்புக்கும் (அதுவும் சென்னையில்) சூர்யாவே செலவு செய்கிறார்… நிற்க.. சூர்யா கோடிகளில் சம்பாதிக்கட்டும்.. யார்தான் சம்பாதிக்கவில்லை?? அவர்களில் ஒருவரேனும் முன் வந்து இதைச் செய்தார்களா?? இல்லை.. என்னைப் பொறுத்தவரையில் ஒரே ஒருவனைப் படிக்க வைத்தாலும் சூர்யா ஒரு “வள்ளல்” தான்!!! நீங்கள் ஆயிரத்தெட்டு குற்றம் சொல்லிக்கொண்டு பதிவுக்கு ஹிட்ஸ் வாங்கிக் கொண்டேயிருங்கள்… (அதற்காகத்தானே எழுதவந்தோம்!) இவற்றையெல்லாம் கடந்து சென்று கொண்டேயிருப்போம்!!

    மற்றபடி உங்களது மற்ற பதிவுகள் எப்பொழுதும் வாசிக்கத் தக்கன!

  14. சூர்யா நடத்தும் “அகரம்” நிறுவனமே கறுப்பை வெள்ளை ஆக்கத்தான் என்று சொல்லப்படுகிறதே! அது உண்மையா?

  15. செய்யட்டும் ஐய்யா செய்யட்டும் நல்லா செய்யட்டும், நல்லது தான் செய்றார். செய்யட்டும்…

    ஆனா இதையே காரணமா வச்சி நாளைக்கு அவரு “கண்ணாடி போடாத கலைஞர்” ஆகாம இருந்தா நல்லது… இப்ப இருக்காரே ஒரு கருப்பு எம் சி ஆறு… அவர மாதிரி…

    அப்படி ஒரு நாள் வந்தால்… நீங்க எல்லாரும் என்ன சொல்வீங்க… ஆகா பாருடா… சொந்த காசுலே எல்லாத்தையும் கொடுத்தாரு நாம இப்ப நம்ம ஆட்சிய இந்த கண்ணாடி இல்லாத கலீஞர் கிட்டே கொடுப்போம்னு கொடுப்பீங்க…

  16. நாட்டில் நிலவுகிறது பலப் பல பலவீனங்கள். 1947ல் 37 கோடி ஜனத்தொகை. இன்று 121 கோடி ஜனத்தொகை. எவ்வளவோ முன்னேறியிருந்தும், வருமை பேய் நம்மைவிட்டு போகவில்லை. அரசிடம் வருமானம் பற்றாக்குறை. அதனால் தனியார் துறையை திறந்துவிடுகிறது. தனியார் நிறுவனங்கள் இந்த வசதிப் பற்றாக்குறையை வைத்து கொள்ளை லாபம் அடிக்கிறது.

    ஏழைகள் நாம், நம்முடைய கண்ணீரை நாமே தொடைத்துக்கொள்வோம். அதற்கு பல பல தியாகங்கள் செய்ய வேண்டும். முதலில் குடியை நிறுத்துவோம். உலக நடப்புகளை தெரிந்துக்கொள்வோம். ஒழுக்கத்தோடு வாழ்வோம். கிடைக்கும் வருவாயில் சிறிதளவேனும் சேமிப்போம். ஓட்டுக்காக இலவசங்களையோ, பணத்தையோ வாங்காதிருப்போம். அவர்களின் பேச்சுக்கு மயங்கி ஓட்டைப் போடாதிருப்போம். தனி மனிதர்களின் குழுக்கள் தான் சமுதாயம். தனி மனித ஒழுக்கம் தான் முதலில் தேவை. அப்போது தான் வரப்புயர நெல் உயரும் என்கின்ற கொள்கைக்கேற்ப தனிமனிதன் ஒழுக்கோத்தோடு வாழத் தொடங்கினால் அவனை ஆளுகின்ற அரசாங்கமும் ஒழுக்கத்தோடு இருக்கும்.

    அழுது பயண் இல்லை. ஆர்பாட்டமும் தேவையில்லை. அமைதியாகவே புரட்சி மலர்ந்து விடும். மொட்டாய் இருப்பதை யாரும் வன்முறையால் கத்திக்கொண்டு கீறி பூவை மலர வைத்து விடமுடியாது.

  17. Superrrrrrrrb Article…..

    En manakumuralkal inke velipatrukinrathu……great Article…..
    Ivanukaluku Media le epoum vallal mathiri kanpikanum….last Pongal time le poor students ku help parenu perle ,Vijay TV le ivan panna alumbu thanga mudiyala ….ivanuku periya Fans Group vera….unmaiyana manitharkal likes this article ……great to Read my dear Vinavu…..Dont Follow Him(Cine Peoples)….Follow u

  18. “மேலும் சினிமாவைப் பொறுத்த வரை ஒரு நடிகரது முகம் தொடர்ந்து திணிக்கப்படும்போது அந்த முகத்தை மக்கள் வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார்கள்.”

    ஒருவரின் பார்வைக்கு சகிக்கமுடியாத ‘அழகைக்’ கொண்டவர் மற்றொருவரின் காதலராவது இப்படித்தான். மீண்டும் மீண்டும் பார்க்கிற போது மனதில் ஆழமாகப் பதிவாகி பிறகு அதுவே அழகானதாகத் தோன்றுகிறது. மனம் ஏற்கிறது. இது ஒரு வகை உளவியல். இப்படித்தான் சிலர் கதாநாயகர்களாகவும் நாயகிகளாகவும் மனதில் இடம் பிடிக்கிறார்கள்.

    “உன்னால் முடியும் தம்பி சித்தாந்தத்தின் சூட்சுமே மக்களை காயடிப்பதுதான்.”

    அலுவலகங்களில் ‘கேரியர் டெவலப்மெண்ட்’ என்று சொல்லித்தான் ஊழியர்களைக் காயடிக்கிறார்கள்.

    சிறந்த பதிவு. பலரை சிந்திக்கத்தூண்டும். வாழ்த்துக்கள்.

  19. அகரம்… நடிகர் சூர்யாவால் மட்டுமே நடத்தபடுவதாக பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது… அதில் தங்களை இணைத்து கொண்டு சில மாத காலம் மக்களிடம் சென்று வேலைகளை செய்வது நடுத்தர வகுப்பு மக்களே… அகரத்திற்கு கருப்பு பணத்தை அள்ளி தெளிக்கும் முதலாளிகளை விட… நடிகர் சூர்யாவை விட… அதில் தங்களை இணைத்து கொண்டு நேரத்தை செலவு செய்து களத்திற்கு சென்று வரும் நடுத்தர வகுப்பு மக்களின் உழைப்பு சூர்யா சுரண்டி விளம்பரம் தேடி கொண்டு இருக்கிறார்… விஜய் டிவி போன்றவை அந்த கதாநாயகன் பிம்பத்தை பெரிதாக்கி கொண்டு இருக்கிறது… இப்போது புதிய தலைமுறை…

    மற்றபடி சூர்யா ஒரு சராசரி நடிகர்தான்… ஈழத்தில் நடந்த இனபடுகொலை முடிந்து போன பிரச்சனை… என சொன்ன சராசரிக்கு கீழான பொது புத்தியுள்ள மனிதர்…

    புதிய தலைமுறையில் சுற்றுசூழல் ஆர்வலர்களின் நல்ல கட்டுரைகளும்… போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வினா/விடை போன்றவை படிக்கும் மாணவர்களுக்கு பயன் உள்ளதாக வந்திருந்து பார்த்துள்ளேன்… இதையெல்லாம் பின் தள்ளிவிடும் இழிவான வியாபார தந்திரமாக மக்கு மர மண்டை சூர்யாவை காட்சி பொருளாக்கியுள்ளார்கள்…

  20. I havent seen such a crappy website ever in my life… all u maniacs do is complain about others… if u cant compete with the world y complain abt whos doing good?

  21. நல்ல கட்டுரை வினவு. கலைஞரின் இலவசத்துக்கும்,சாய்பாபாவின் கல்வி,மருத்துவமனை சேவைகளுக்கும்,நடிகர் சூர்யாவின் அறக்கட்டளைக்கும் என்ன சம்மந்தம் அனைத்தும் கருப்புப் பணங்களே மக்களிடமிருந்து கொள்ளை அடிக்கப்பட்டவையே நம் கையை வெட்டி நமக்கே சூப்புகொடுப்பதை கூட உணர முடியாமல் உணர்சியற்ற சவமாய் வாழ்வதில் அர்த்தமில்லை. இந்த கட்டுரை சுரனை உள்ளவர்க்கு புரிந்தால் போதும்.

  22. செல்லுலாய்ட் கண்ணாடி :

    கந்தன் கருணையின்
    ஜிகினா ஒளி வட்டத்தில்,
    கிராபிக்ஸ் இல்லாத
    இருண்டகாலத்தில்
    உதித்த தலைமுறை.
    கதா நாயகி
    கிடக்காத காரணத்தால்
    கம்ப ராமாயணத்தில்
    கதா காலட்சேபம்.
    பழைய தலைமுறை!

    சினிமாவில் நுழைய
    பதினாறு முறை
    படையெடுக்காமல்,
    வாரிசு அஸ்திரத்தால்
    பின் வாசல் வழியாக
    கஜினியாகிப் போனது
    புதிய தலைமுறை.

    சினிமாவில் விதையூன்றி,
    செடியாகிக் காய்க்கிறது.
    வீட்டில் பூத்திருக்கும்
    புத்தம்புதிய தலைமுறை மட்டும்
    சினிமாவிலிருந்து விலகி
    வெட்டியான் வேலைதேடி
    செட்டில் ஆகப் போகவதில்லை.
    அதுவும் சினிமாவில்
    பணம் காய்க்கும் ஆலமரந்தான்.

    வாரிசுகள் பெருக்கத்தால்
    ஒரு வட்டத்துள் சுருட்டப்படும்
    சினிமா ரீல்கள்.
    திரையுலகை பட்டா போடும்
    தலைமுறை ஆக்கிரமிப்பு

    தையல் இயந்திரமும்
    பலகை பலப்பமும்
    இவர்களின்
    இல்லாத மனிதாபிமானத்தை
    எடுத்தியம்பும் கருவிகள்.

    இந்த எடுபடாத
    பாடாவதியைத்தான்
    நமக்கு
    நாசூக்காக,
    ஒரு ‘எம்.பி.ஏ’ தனமாக,
    ஒரு டைரக்டர் டச்சில்
    மனிதாபிமானத்தை
    பிழிந்து கொடுக்கிறார்
    அகரம் அறக்கட்டளையில்.
    அது தனித் திறமைதான்.

    ஏனென்றால்,
    இன்றைய அகரம்
    நாளைய லகரம்.
    அகரம் லகரமாகி,
    நாளையொரு தேதியில்
    தன்னிகர்ப் பல்கலையாகலாம்.
    மனிதாபிமானப் பரிமாணம்.

    ***

    இருக்கட்டும் நண்பா,
    அது ஒரு நிழலுலகம்.
    நீ
    நிஜத்துக்கு வா.

    கிரீசில்,
    கால்தடம் பதியாத
    எங்கேயோ ஒரு
    ஏகாந்த லொகேஷனில்,
    காதலர்களின்
    கனவுப் பாட்டில்
    நீயும் கலந்திருந்தாய்.

    ஜெர்மன் நகரத்து
    வீதிகளில் உலாவி,
    ஆல்ப்ஸ் மலைச் சரிவு
    மரத்தைச் சுற்றிய
    காதல் கிறக்கத்தில்
    நீயும் கிறங்கிப்போனாய்.
    கொடுத்து வைத்தவன் நீ;
    காட்சி முடியும் வரை.

    காட்சி முடிந்து,
    மூத்திரச் சந்தைக் கடந்து
    உன் இருப்பிடத்துள்
    குனிந்து செல்.
    உனக்கு
    இன்றைய ‘டின்னர்’ மெனு :
    ஒரு ரூபாய் அரிசியில்
    வடித்துவைத்த சோறு!

  23. திரையுலகில் இருப்பவர்கள் எதைச் செய்தாலும் அதை பாராட்டியோ அல்லது காறித்துப்பியோ எழுதுவது பத்திரிக்கைகளின் தலயாய பணி.

    சினிமாக்காரன் தும்மினாலோ துப்பினாலோ அது செய்தியாகி விடுகிறது. விடுமுறை நாட்களில் சினிமா தான் டிவியை ஆக்கிரமிக்கிறது. எனவே இன்றைய இளைஞ்சர்களுக்கு சுபாஷ் சந்திர போஸ் விட சூரியா தான் அதிகம் தெரிந்திருக்கிறது. கிசுகிசுக்களின் மூலம் சூர்யாவை விட நடிகைகளை நன்கு தெரிந்திருக்கிறது. இப்படி இவர்களை பற்றி எதாவது எழுதி இலவச விளம்பரம் தருவது ‘ஊடக தர்மம்’.

    எத்தனையோ சுப்பனும் குப்பனும் எதோ ஒரு குக்கிராமத்தில் இருந்து கொண்டு கையில் காசு இல்லாத நிலையிலும் நாலு பேருக்கு நல்லது செய்தால், அது அந்த நால்வரை தவிர வேறு யாருக்கும் தெரியப்போவதில்லை.

    முதலில் ஊடகங்கள் திருந்த வேண்டும்.
    புகழின் உச்சியில் இருப்பவர்கள் எது வேண்டுமானாலும் செய்வார்கள். அதை நாம் ஏன் பொருட்படுத்த வேண்டும்?
    இது போன்ற தேவையற்ற, சினிமாக்காரர்களின் பதிவை வினவு தவிர்க்கலாமே!

  24. சினிமா உணவில் ஊறுகாயைப் போன்றது. அதையே உணவாகக் கொள்ளாதீர்கள்.

  25. நடிகர்களை வேறோர் தளத்திற்கு எடுத்துச் சென்று commoditise செய்வதில் பத்திரிகைகள் எப்போதுமே பெரும் ஆர்வம் காட்டுகின்றன. தஸாப்தங்களுக்கு ‘brand’ செய்யத் தேவையான material-ஐ உருவாக்கிக் கொள்ள முனைகின்றன. மேலே பலர் சொல்லியிருப்பது போல சூர்யா பொருட்படுத்தத்தக்க பொதுசிந்தனை உடையவர் அல்ல. ‘fairness cream’ விளம்பரங்கள் முதல் அவருடைய நிலைப்பாடுகள் சகித்துக் கொள்ள முடியாதவையே!

  26. கல்வி உரிமையாக பார்கப்பட வேண்டும், எனத் துண்டிய சிந்தனைக்கு நன்றி.

  27. இன்றைக்கு கனிமொழியை நான் இந்தக் கட்சியின் தொண்டர் என்ற முறையிலேதான் பார்க்கிறேனே தவிர, கனிமொழி என்னுடைய மகள் என்பதால் மாத்திரம் வளர்ச்சி பெற்றதாக யாரும் கருத முடியாது.

    நான் இன்று காலையில் ஒரு புள்ளி விவரத்தை எடுத்துப் பார்த்தேன். அரசு சார்பில் வேலையில்லாதோருக்கு பணிகள் கிடைக்கப்பாடுபட்டிருக்கிறோம் என்ற போதிலும், தொண்டறம் பேணும் அமைப்புக்களின் துணையுடன்; மாநிலங்களவை உறுப்பினர், கவிஞர் கனிமொழி அந்தந்த மாவட்ட அமைச்சர்களோடும், மாவட்ட ஆட்சியர்களோடும், தொழில் நிறுவனங்களோடும் இணைந்து, காரியாபட்டி, நாகர்கோவில், வேலூர், உதகமண்டலம், விருதுநகர், கடலூர், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய நகரங்களில் வேலை வாய்ப்பினைத் தேடித்தரும் முகாம்களை நடத்தி, இந்த அனைத்து இடங்களிலும் 2 லட்சத்து 33 ஆயிரத்து 712 வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் நேர் காணலுக்கு அழைக்கப்பட்டு, அவர்களில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 998 பேர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.

    இவர்களில் குறிப்பாக திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் 36 ஆயிரத்து 297 பேர்கள் -திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 22 ஆயிரத்து 408 பேர் – கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 19 ஆயிரத்து 98 பேர் – வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வர்கள் 17 ஆயிரத்து 2 பேர் – து£த்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 16 ஆயிரத்து 663 பேர் -குமரி மாவட்டத்தைச் சேர்ந்த வர்கள் 5 ஆயிரத்து 77 பேர் – நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 2 ஆயிரத்து 165 பேர் – காரியாப்பட்டியில் 1 ஆயிரத்து 196 பேர். இவ்வாறு வேலை வாய்ப்பு கிடைத்தவர்களை அணியில் 55 ஆயிரத்து 656 பேர்களின் வேலை வாய்ப்பு ஆய்விலே உள்ளது. இவர்களுக்கும் பணி கிடைப்பதற்கான வாய்ப்புக் கூறு கள் உள்ளன என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

    எனவே கனிமொழி கருணாநிதியின் மகள் என்ற முறையிலே மட்டும் இந்த இயக்கத்திலே பயன்படவில்லை. அவர் தொண்டுள்ளத்தோடு பாடுபட்டு வருகிறார். இன்னும் சொல்லப்போனால், நாட்டுப்புற கலைகளை வளர்க்க வேண்டும் என்பதற்காக சென்னை சங்கமம் நிகழ்ச்சிகளை நடத்தி, அதன் காரணமாக அவருக்கு எந்த அளவுக்கு பெயரும், புகழும் ஏற்பட்டுள்ளது என்பதையெல்லாம் நான் நன்றாக அறிவேன்.

  28. //இவரைப் போன்ற பெரும் பணக்காரர்கள் தத்தமது குடும்பங்களின் தேவைக்கு மீறி பிரம்மாண்டமாக சேர்த்து வைத்திருக்கும் பணத்தால்தான் பல ஏழைகள் படிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை//

    அட நான் என்னவோ அரசாங்கம் சரியாக கார்ப்பொரேஷன் பள்ளிக்கூடங்களை நடத்தாததால் தான் ஏழைகள் படிக்க முடிவதில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். எல்லாம் சூரியாவின் சதி என்பதி விளக்கியதற்கு வினவுக்கு நன்றி.

  29. @மன்னார்சாமி :

    ஆமாங்க ஆனா நான் சூர்யா வெறும் நடிகன் தான் அவன் தலைவன் இல்லன்னு சொன்னா அதுக்கப்பறம் இன்றைய பசங்ககிட்ட நான் போய் என்ன சொன்னாலும் கேக்க மாட்டாங்களே.. அது அவாவனுக்கா புரியனும்.புளி போட்டு நாம வெளக்க முடியாது

  30. கல்வியை நம் அடிப்படை உரிமையாகப் பார்க்கவேண்டுமேயன்றி வள்ளல்கள் போடும் பிச்சையாகப் பார்க்கக்கூடாது என்கிறீர்கள். நல்ல கோணம்! சரி.. இதற்காக நாம் தெருவில் இறங்கி போராட வேண்டுமென்கிறீர்கள்..சரி.. அதை எப்படி செயலாக்குவது??

  31. வினவு சொல்வதில் இருந்து நான் எடுத்துக்கொள்வது :
    கல்வி , வேலைவாய்ப்பு என்பது எல்லாம் நமது உரிமைகள் , அதை நாம் போராடி வெல்ல வேண்டிய அவசியமோ, யாசித்து பெற வேண்டிய அவசியமோ இல்லை. பணக்காரர்களின் முதலாளித்துவ ஆதிக்கத்தை நாம் போராடி வென்றாலே [வென்றால் மட்டுமே] நமது உரிமைகள் நமக்கு உரித்தாகும்.
    மற்றவர்கள் விவுக்கு சொல்ல நினைப்பது :
    வலியவர்களை வென்று அதன் பிறகு நம் உரிமைகளை பெறுவதற்கான சாத்தியத்தை விட , நமக்கு வேடியவற்றை நாமே தன்னம்பிக்கையுடன் போராடி வெல்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.

  32. “குழந்தைகளே கனவு காணுங்கள், 2020-இல் இந்தியா வல்லரசாகப் போகிறது”

    ஐயோகோ எங்கே இந்திய வல்லரசாக வளர்ந்திடுமோ என்ற தனது சீனத்து முதலாளிகளின் பயத்தை நன்றாகவே பிரதிபலிக்கிறது வினவு , அதனாலதான் எப்பவும் இந்தியாவின் முன்னேற்றத்தையும் கூட குறை சொல்கிறது , அகில உலக பஞ்சாயத்து தலைவர் வினவு உலகத்தின் எந்த பகுதியில் யார் என்ன செய்தலும் விமரிசிக்கும் இவர் சீனா பற்றி மட்டும் வாய் திறக்காதது ஏனோ, சீனாவும் சீனர்களும் எந்த தவறுமே செய்ததில்லையா ? ( வாங்குற காசுக்கு மேலேயே கூவறான் பாரு )

  33. \\வழக்கம் போல இந்தக் கட்டுரை மிகுதியாகவோ குறைவாகவோ எதிர்ப்பை சந்திக்கலாம். “எல்லாரையும் குற்றம் சொல்கிறீர்களே, யார்தான் நல்லவர்கள், நீங்க மட்டும் யோக்கியமா, நீங்கள் எதாவது சமூகப்பணி செய்திருக்கிறீர்களா, சினிமாக்காரரை சினிமாக்காரராக பாருங்கள், அவர்களால் முடிந்த உதவி செய்வதை எதிர்க்காமலாவது இருங்கள்….” \\ அது சரி, நீங்க பதிவு போட்டு சமுதாய முன்னேற்றத்துக்காக சாதித்ததுதான் என்னன்னு ஒரு பதுவு போடுங்களேன், தெரிஞ்சுக்குறோம்.

  34. \\உழைத்து முன்னேறலாம் என்ற கருத்து மக்களைக் காயடிக்கவே பயன்படுகிறது!\\ உழைக்காமலேயே முன்னேறலாம் என்கிறீர்களா? உழைப்பதே தவறு என்கிறீர்களா? உழைக்க வேண்டாமென்று அறிவுறுத்துகிறீர்களா ?
    என்னதான் சொல்ல வரீங்க?

    • Communism itself is idea of lazy people. For example, if your grandfather, dad and yourself had worked hard for three generations and accumulated wealth, communism will tell that you and you neighbor who is a drunkard should be equal in economical terms. You will be forced to share your property and income with them. They will say nothing is yours. Everything belongs to government. But who is going to enjoy it? Those who work and those who never work will enjoy same benefits.

      Ipdi vettiya blog ezhutharavanum, naal muzhukka vela paakaravanum “equal”… athuthaan communism.

  35. \\எல்லா குடும்ப நிறுவனங்களிலும் குடும்ப உறுப்பினர்களே முக்கிய பதவியை அடைகிறார்கள். சான்றாக இந்து பேப்பரில் ராம், ரவி, முரளி, மாலினி போன்ற ஐய்யங்கார் வாரிசுகளெல்லாம் அந்த பேப்பரின் உரிமையாளர்கள் என்ற தகுதியில்தானே எடிட்டோரியல் பதவிகளை வகித்தார்கள்? திருபாய் அம்பானியின் மகன்களான முகேஷ், அனில் இருவரும் பொதுத் தேர்வு போட்டித் தேர்வு எழுதியா தலைமை நிர்வாகியானார்கள்?

    அவ்வளவு ஏன், பச்சமுத்துவின் முதல் மகன் எஸ்.ஆர்.எம் கல்வித் தொழிலையும், இரண்டாவது மகன் புதிய தலைமுறை பத்திரிகையையும் கவனித்துக் கொள்கிறார்கள். இது பச்சமுத்து என்ற பண்ணையாரின் மகன்கள் என்பதால் கிடைத்ததா, இல்லை அவர்கள் சொந்தமாக கஷ்டப்பட்டு உழைத்து கிடைத்ததா?\\ இந்த உதாரணங்களில் எல்லாம் ஒரு ஒற்றுமை உண்டு. தொழில், கல்வி நிறுவனம், அரசியல் எல்லாவற்றிலும் தந்தை சம்பாதித்து வைத்திருந்ததை அப்படியே மகனுக்குக் கொடுப்பார்கள், அதை அவன் அப்படியே வைத்துக் கொண்டு மேலும் விரிவு படுத்துவான். அம்பானி மறைந்தபோது அவரது சொத்துக்களின் மதிப்பு 60,000 கோடி ரூபாய்கள். கல்வி நிறுவனத்தின் முதலாளி எல்லா கல்லோரிகளையும் கொடுத்திருப்பார், கட்சியைப் பொறுத்தவரை தொண்டர்கள், கட்சியின் சொத்துக்கள், வெளிநாட்டில் பதுக்கப் பட்டிருக்கும் ஆயிரக் கணக்கான கள்ளப் எல்லாம் வரும். சினிமா நடிகனுக்கு அப்படி எதுவும் இல்லை. திரைத் துறை சம்பந்தப் பட்டவரின் மகன் என்பது ஒரு நுழைவுச் சீட்டு மட்டுமே, அதற்க்கப்புறம் திறைமையை நிரூபிக்க வேண்டியது நடிகனின் கையில் தான் உள்ளது, ஐம்பது படங்கள், நூறு படங்கள் ஓடவைக்க எந்தக் கொம்பனாலும் முடியாது. ஒவ்வொரு படத்திலும் அவன் தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டும், படம் ஓட வேண்டும், தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் லாபம் பார்க்க வேண்டும், இல்லாவிட்டால் நீ காலி, அட்ரஸ் இல்லாமல் போய்விடுவாய்.

  36. \\ஆக சினிமாவில் நுழைவதற்கு இப்படிப்பட்ட வாரிசுகள்தான் நுழைய முடியும் என்பது ஜனநாயகத்திற்கு எதிரானதில்லையா? பழைய மன்னராட்சிக்கும் இதற்கும் என்ன வேறுபாடு? இதேபோல குமுதம், விகடன், தினமலர், தினத்தந்தி போன்ற பத்திரிகைகளிலும் கூட வாரிசுகளே தீர்மானிக்கிறார்கள். அரசியலை எடுத்துக் கொண்டால் ராகுல் காந்தி முதல் கனிமொழி வரை ஆயிரத்தெட்டு எடுத்துக்காட்டுகள் உண்டு. \\ பாராதிராஜாவின் வாரிசு, சத்தியராஜின் வாரிசு, கருணாநிதியின் மகன் மு.க.முத்து இன்னும் எத்தனையோ பேர் நடிக்க வந்தார்கள், அவர்களெல்லாம் ஏன் பெயரும் புகழும், பணமும் சேர்க்க முடியவில்லை?

  37. \\ஷங்கர், மணிரத்தினம், கவுதம் மேனன் போன்ற பெரிய இயக்குநர்களிடம் உதவியாளாராக சேரவேண்டுமென்றால் டாக்டர், இன்ஜினியர், எம்.பி.ஏ இன்னபிற உயர்கல்விகளோடு ஆங்கிலம், பிரெஞ்சு, இந்தி என்று கூடுதல் மொழிகளும் தெரிந்திருக்க வேண்டும். \\ இவங்க கிட்ட ஏன் சார், நீங்க உதவி இயக்குனரா சேரனும்? சினிமா டைரக்ட் செய்வது எப்படின்னு தமிழ்வாணன் ஒரு புத்தகம் எழுதியிருக்காரு, படிச்சிட்டு நேரா படமெடுத்து வெளியிடுங்களேன்?

  38. \\மார்க்கெட் போன சியான் விக்ரமை முன்னணி நட்சத்திரமாக்கிய இயக்குநர் பாலவிடம் நமது இலக்கிய குருஜி நாயகனாக நடித்தால் கூட கம்பீரமாக மிளிர்வார் எனும்போது நடிப்பு பின்னணியும், அனுபவமும் உடைய சூர்யாவின் வெற்றிக்கு பாலாவை பாராட்டலாமே ஒழிய இதை சூர்யா தனிப்பட்டு உழைத்து முன்னேறியதாகச் சொல்லவதற்கு எதாவது இருக்கிறதா? \\ அதுசரி, ரகுமான் என்ற நடிகர் கூடத்தான் மார்கெட் இல்லாமல் இருந்தார், இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் அவரை வைத்து புதுப் புத்து அர்த்தங்கள் என்ற படத்தை எடுத்து சூப்பர் டூப்பர் ஹிட் ஆக ஒட்டிக் காட்டினார். ஏன் அந்த ரகுமான் தொடர்ந்து நடித்து வெற்றியடைய முடியவில்லை? மணிரத்னம் எடுத்த ரோஜா, பம்பாய் இரண்டுமே ஹிட் படங்கள், அதன் கதாநாயகன் வேறு எந்தப் படத்திலும் நடித்து வெற்றி பெற முடியவில்லையே, மேலும் தொடர்ந்து நடிகனாகவும் நிலை நிறுத்திக் கொள்ள முடியவில்லையே, ஏன்? ஆக, உங்க வாதத்தில் லாஜிக் இல்லை, சூர்யா மேல சேற்றை வாரியடிக்க பதிவு போட்டுள்ளீர்கள்?

  39. \\சினிமா என்பது இயக்குனர் முதல் லைட்பாய் வரை பலரின் கூட்டுமுயற்சி . அதன் வெற்றியை ஒருவருக்கு மட்டுமே உரித்தாக்குவது என்பது மோசடி.\\ அது சரி, இனி வரும் படங்களின் போஸ்டர்களில் நடிகரின் படத்தைப் போடாமல் அந்தப் படத்தின் லைட்பாய் படத்தை மட்டுமே போடச் சொல்லுங்கள். எல்லாப் படமும் முன்னூறு நாட்கள் ஓடுதான்னு பார்ப்போம்.

  40. \\இத்தகைய வாய்ப்பு கிடைக்கும் போது உசிலம்பட்டியைச் சேர்ந்த ஒரு இளைஞன் கூட வெற்றி பெறமுடியும். ஆனால் அவனுக்கு சூர்யாவைப் போன்ற பின்னணி இருக்காது என்பதால் அது சாத்தியமில்லை.\\ அரவிந்த் சாமி வெற்றி பெற வில்லை. சிபிராஜ் வெற்றி பெறவில்லை, பாரதிராஜா பையன் வெற்றி பெறவில்லை, சத்யராஜின் அண்ணன் பையன் வெற்றி பெறவில்லை. நடிகர் விஜயகுமாரின் பையை கூட ஏதோ நடிக்கிறார், ஆனாலும் ஆஹா ஒஹோ என்று சொல்லிக் கொள்ளுமளவுக்கு ஒன்றுமில்லை. நடிகனின் மகன் என்பதால் மட்டுமே உங்கள் படம் ஓடும் என்ற நிச்சயம் இல்லை. சொல்லப் போனான், ஒரு படம் ஏன் ஓடுகிறது ஒரு சில படங்கள் அவ்வளவாக ஓடுவதில்லை இதற்க்கானா பார்முலா என்ன என்று இதுவரைக்கும் யாருக்குமே தெறியவில்லை, அப்படி யாரவது சொல்ல முடியுமானால், அவரை மாதத்திற்கு லட்சக் கணக்கில் சம்பளம் கொடுத்து வேலைக்கு அமர்த்திக் கொள்ளை திரையுலகம் தயாராக இருக்கிறது, நீங்க போறீங்களா?

  41. \\சினிமாவிற்கு அடுத்து சூர்யா தனது வள்ளல் பாத்திரத்திற்கு வருகிறார். தந்தை சிவக்குமார் ஆரம்பித்து வைத்த கல்வி உதவியை இப்போது அகரம் என்ற அறக்கட்டளை மூலம் பெரியதாக நடத்தி வருகிறாராம். ஏழை மாணவர்களுக்கு உதவி, கல்லூரி படிப்பு, காம்பஸ் இன்டர்வீயு என்று வேலை வாங்கித் தருவது வரை செய்கிறாராம். இது தெரியாமல் தமிழக இளைஞர்கள் அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் போய் தவமிருக்கிறார்களே ஏன்? கன்னியாகுமரி முதல் சென்னை வரை படிப்புக்கும், வேலைக்கும் அலையும் அத்தனை இளைஞர்களும் சூர்யா வீட்டிற்கு வந்தால் எதிர்காலத்தையே வெறும் ஐந்து நிமிடத்தில் பெற்று விடலாமே?\\ ஏதோ அவரால முடிஞ்சது ஒரு சில நூறு பேர்களாவது பயனடைகிறார்களே, அதுவரையாவது சந்தோஷப் படுங்கள் ஐயா. அவர் அதையும் நிறுத்திவிட்டால், நீங்கள் பதிவு போட்டே பிள்ளைகளை படிக்க வைத்து விலை வாங்கிக் கொடுத்து விடுவீர்களா? நீங்கள் சாதித்தது தான் என்னவென்று சொல்லுங்களேன்?

  42. \\ஒரு குழந்தை படிப்பதும், படிக்காமல் போவதும் அதனுடைய தனிப்பட்ட பிரச்சினையா? இல்லை அந்த குடும்பத்தின் பிரச்சினையா? இல்லை இவர்களைப் போன்ற ஒட்டு மொத்த மக்களிடமிருந்து வரிவசூலிக்கும் அரசின் பிரச்சினையா? \\ இது ரொம்ப பேத்தலாக இருக்கிறது. அரசாங்கமே அத்தனையும் செய்துவிடும் என்று சொல்லும் நாட்டில் கூட தனிமனிதர்களும் பரஸ்பரம் உதவிக் கொள்ள வேண்டிய சூழ்நிலையும் இருக்கும். உதாரணத்திற்கு நடந்து செல்லும் போது சாலையில் விபத்து நடந்துவிட்டால் அங்குள்ள மக்கள் தான் உடனடியாக பாதிக்கப் பட்டவருக்கு ஓடிவந்து உதவ வேண்டுமே தவிர, அரசு இருக்கிறது, அவர்களே இந்த விபத்தை கண்டுபிடித்து காயமடைந்தவரை காப்பாற்றட்டும் நமக்கென்ன என்று போகச் சொல்வீர்களா? இங்கே நடக்கும் அரசால் மக்களுக்கு எதையுமே உருப்படியாகச் செய்வதாகத் தெரியவில்லை, இந்த மாதிரி ஒருத்தர் உதவ ஆரம்பித்தால், நாளடைவில் அதற்க்கு ஆதரவு பெருகி, இன்றைக்கு சிலர் மட்டுமே பயன் பேரும் இந்தச் சேவையில் பல்லாயிரக் கணக்கானோர் பயன் பேரும் நாளும் வந்தடையுமே. பெங்களூருவில் இஸ்கான் கோவிலில் ஆரம்பத்தில் சில நூறு குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்க ஆரம்பித்து, அதைப் பார்த்து இன்போசிஸ் நாராயண மூர்த்தி உட்பட பலர் உதவ முன்வந்து இன்று பத்து லட்சம் குழந்தைகளுக்கு உணவு வழங்குகிறார்களே!! ஆரம்பத்திலேயே டாப் கியரில் போக முடியாது சார், யாரவது செடியை நடத்தும், பலர் தண்ணீர் ஊற்றுவார்கள், ஒருநாளைக்கு அது நிழலும், கனியும் தரும் பெரிய மரமாக வளர்ந்து மக்களுக்கு பயன் தரும், எதையும் எதிர்மறையாக என்ன வேண்டாம், +ve thinking ம் கொஞ்சமாவது வளர்த்துக் கொள்ளுங்கள்.

  43. அட பாவமே, சூர்யாவை கூட நீங்கள் விட்டு வைக்க வில்லையா? இத்தனைக்கும் இவருக்கும் ற்ஸ்ஸ் க்கு கூட எந்த தொடர்பும் இல்லையே? யுரேக்கா, இவர் இன்னும் மதம் மாறவில்லை. அதனால் தானே இவரை பற்றிய இந்த விமர்சனம்.

    30 வருடம் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் ஆட்சி செய்து உள்ளீர்கள். நீங்கள் என்ன கிழித்தீர்கள் தொழிற் புரட்சி வேண்டாம். குறைந்த பட்சம் விவசாய புரட்சியாவது செய்து இருக்க வேண்டாமா?

    தற்போதே புள்ளி விவரப்படி மேற்கு வங்கத்தின் விவசாய வளர்ச்சி 3 . 3 சதம் தான். மாநிலத்தின் கடன் சுமை மட்டும் பல லட்சம் கோடி தாண்டி உள்ளது.

    உங்கள் மொழியில் பாசிச நரேந்திர மோடி கூட அவர்கள் மாநிலத்தில் 9 % விவசாய வளர்ச்சி செய்து உள்ளார். அனைத்து கிராமங்களும் தண்ணீர் மற்றும் மின்சாரம் பெற்று தன் நிறைவு பெற்று உள்ளது. அவர் ஆட்சிக்கு வந்து ஒன்பது வருடங்கள் கூட ஆகா வில்லை.

    இந்த லட்சணத்தில் அப்துல் கலாம் அவர்களை பற்றி விமர்சிக்கும் உங்களுக்கு வெட்கமாக இல்லை. அப்துல் கலாம் எத்தனையோ லட்ச கணக்கான மக்களுக்கு ஒரு உதாரண புருஷர். எனக்கும் அவர் தான் ஒரு சிறந்த முன் உதாரணம்.

    கடைசியாக, இந்தியாவிலேயே உங்கள் கம்யுனிச அமைப்பு தான் மிகப்பெரிய அரசு ஊழியர்கள் அமைப்பு. நீங்கள் லஞ்சத்தை எதிர்த்து என்ன கிழித்தீர்கள். உங்கள் ஊழியர்கள் அமைப்பு ஒழுங்காக செயல் பட்டாலேயே, பெருவாரியான மக்கள் நல்வாழ்வு பெற்று இருப்பார்களே?

  44. \\நாட்டு மக்களுக்கு இலவச, தரமான கல்வி கொடுக்க வேண்டிய அரசு அதை ஒழித்து விட்டு காசு இருப்பவனுக்குத்தான் கல்வி என்று சுயநிதிக் கல்லூரி முதலாளிகளை ஊக்குவிக்கிறது. புதிய தலைமுறையில் தன்னம்பிக்கை சரக்கை போதிக்கும் பச்சமுத்துவின் எஸ்.எம்.ஆர் கல்லூரிகளில் இலவசமாகவா கல்வி கொடுக்கிறார்கள்? இல்லை பல இலட்சங்களில் மாணவர்களுக்கு கல்வியை விற்கிறார்கள்.\\ இதற்க்கு நீங்க போயி ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த முதலமைச்சரைக் கேளுங்க, ஏதோ தன்னால் முடிந்ததைச் செய்வோம் என்று இருக்கும் சூர்யா அதற்கென்ன பண்ணுவாரு?

  45. \\நடிகர் சூர்யா வெற்றிகரமான நட்சத்திரமாக உருவெடுத்து, அகரம் அறக்கட்டளையை நடத்தும் இந்தக் காலத்தில்தான் ஏழைகளும், கீழ்த்தட்டு நடுத்தர மக்களும் உயர்கல்வி கற்க முடியாது என்ற நிலைமை வந்து விட்டது. மாதச்சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கமும் குழந்தைகளின் கல்விக்காக நுரை விடும் அளவுக்கு வதைபட்டு ஒடுகிறது. இதில இந்த நல்லவர் கல்வி உதவி செய்கிறாராம். யாரை ஏமாற்றுகிறீர்கள்?\\ அப்படி ஏமாந்து நீர் இழந்தது என்னவென்று கூற முடியுமா?

  46. \\சமீபத்தில் கூட சென்னை எம்.சி.ராஜா அரசு விடுதியில் படிக்கும் தலித் மாணவர்கள் விடுதியின் அவல நிலை காரணமாக சாலை மறியல் செய்தார்கள். இன்னும் நிலைமை அப்படியேதான் உள்ளது. இதற்கு முன் பல வருடங்களாக அப்படித்தான் உள்ளது. ஒரு வேளை சூர்யாவிற்கு கல்விதான் அக்கறை என்றிருந்தால் இந்த சாலை மறியலில் கலந்து கொண்டிருக்க வேண்டும். அல்லது தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக தமிழகமெங்கும் பெற்றோர்கள் போராடினார்களே அதில் கலந்து கொண்டிருக்க வேண்டும்.\\ ஐயா, சூர்யா ஒரு நடிகர், சாதாரண குடிமகன், அவருக்குன்னு தொழில் ஒன்னு இருக்கு, பெண்டாட்டி பிள்ளை குட்டிகளும் இருக்கு, எல்லாவற்றையும் அவர் கவனிக்கணும். உங்களைப் போல முற்றும் துறந்த பிளாக் மட்டுமே போடும் பைனரி புலி அல்ல. இதையெல்லாம் செய்த பின் தன்னால் முடிந்தததை இந்தச் சமூகத்துக்குச் செய்ய வேண்டுமென்று நினைக்கிறார். இதைச் செய்யாமலேயே கூட, காவிரிப் பிரச்சினைக்கும், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கும் திரையுலகம் போடும் உண்ணாவிரதக் கூட்டங்களில் வந்து உட்கார்ந்து இருந்து விட்டு சல்லிப் பைசா கூட செலவு செய்யாமல் மற்ற வெங்காய ஸ்டார்களைப் போலவே போக முடியும், யாரும் கேட்கப் போவதில்லை. இருந்தும் அவரால் முடிந்ததைச் செய்ய முயற்சிக்கிறார், இதைப் பாராட்ட மனமில்லை என்றாலும் சும்மாவாவது இருங்கள். இதைக் கூடாது என்று சொல்லிவிட்டு, நீங்கள் அதற்க்கு மாறாக என்ன சமுதாயத்திற்குச் செய்தீர்கள், செய்யப் போகிறீர்கள் என்று சொல்லுங்கள், தெரிந்துகொள்கிறோம்.

    • //இதைக் கூடாது என்று சொல்லிவிட்டு, நீங்கள் அதற்க்கு மாறாக என்ன சமுதாயத்திற்குச் செய்தீர்கள், செய்யப் போகிறீர்கள் என்று சொல்லுங்கள், தெரிந்துகொள்கிறோம்.//
      இதையேதான் நானும் கேட்கிறேன். மாற்றாக என்ன வைத்திருக்கிறீர்கள் என்று. வினவிடம் இருந்து பதில் வரவில்லை. ஆரோக்கியமான விவாதத்திற்கு நான் தயார். ஆனால் புலிகேசி போன்றோர் உள்நுழைந்து விவாதத்தின் ஆரோக்கியத்தையே கெடுத்துவிடுகின்றனர்!! 🙁

      • ரிஷி, மேட்டர் என்னான்னா? சூர்யா எதாவது சொன்னா உனக்கென்னா நீ அத பாக்காம போவேண்டியாதுதானேன்னு நம்ம லார்ட் லபக்குதாஸ் சொன்னாறா, அதையே நான் திருப்பி கேட்டேன் வினவு என்ன சொன்ன உமக்கென்ன நீ பாக்காம போயிடுன்னு. இது ஒரு தப்பா? இப்படி வெளக்கென்ன மாதிரி கருத்து எழுதினா வேற எப்படித்தான் பதில் எழுத. உங்கள் பாத்தா பெரிய படிப்பு படிச்சவரு மாதிரி தெரியுது நீங்களே சொல்லுங்க சார்.

        • // உங்கள் பாத்தா பெரிய படிப்பு படிச்சவரு மாதிரி தெரியுது நீங்களே சொல்லுங்க சார்.// – hahaha cant stop laughing.
          Dont mistake me Rishi, i just like that comment, not to insult you. 🙂

          • பரவாயில்லை மணிகண்டன். அவர் சொன்னதைப் படித்து எனக்கும் சிரிப்பு வந்துவிட்டது..
            பெரிய படிப்பு – மனித மனங்களைப் படிக்கிற படிப்புதான்..! 🙂

        • புலிகேசி,
          ஏதாவது சொல்லலாம்தான். ஆனா ரெண்டு பேரும் தெருச்சண்ட மாதிரி போட்டுக்கிறீங்க. ஓரமா நின்னு வேடிக்கை வேணா பார்க்கலாம். நடுவில புகுந்தா சரிப்படாது.

  47. \\சமீபத்தில் சென்னை மேட்டுக்குடி பள்ளி ஒன்று ஏழைகளை பள்ளியில் சேர்க்கச் சொல்லும் அரசின் கொள்கை முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்களிடம் பிரச்சாரம் செய்கிறது. இந்த பள்ளி நிர்வாகத்தை கண்டித்து சூர்யா உண்ணாவிரதமோ குறைந்தபட்சம் மெழுகுவர்த்தி போராட்டமோ செய்வாரா? எஸ்.ஆர்.எம் கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களிடம் 25லிருந்து 50 இலட்சமும் இல்லை அதற்கு மேலும் வசூலிக்கிறாரே பச்சமுத்து அவரை எதிர்த்து ஒரு அறிக்கையாவது விட்டுப் பார்க்கட்டுமே. அதை நமது புதிய தலைமுறை செய்தியாளர்கள் ஒரு ரிப்போர்ட்டாக எழுதட்டும். நாமும் சூர்யாவின் சமூக கடமையை மெச்சுவோம்.\\ அவரு நீங்க சொல்வதையெல்லாம் செய்ய உங்க வேலைக் காரன் அல்ல. நீங்கள் மேலே சொன்னதையெல்லாம் அவர் செய்தாக வேண்டும் என்று எந்தச் சட்டமும் இல்லை. இதைச் செய்ய வேண்டியது நீங்கள் தேர்ந்தெடுத்த அரசின் கடமை. சூர்யா தன்னால் முடிந்ததை ஒரு உதவியாகச் செய்கிறார். இனாமாக வந்த மட்டை பல்லைப் பிடித்துப் பார்க்கக் கூடாது என்பார்கள், நீங்கள் அதைத்தான் செய்ய எத்தனிக்கிறீர்கள்.

  48. \\ஆம். இன்றைக்கு நமது மாணவர்களுக்கு தரமான இலவசமான கல்வி கிடைக்க வேண்டுமென்றால் நாம் அதற்காக அரசை எதிர்த்து போராட வேண்டும். இது ஒன்றும் நமக்கு தரப்படும் பிச்சை அல்ல. நமது உரிமை. பறிக்கப்பட்ட அந்த உரிமைக்காக மக்கள் அணி திரண்டு போராடும்போது மட்டுமே அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை என்ற நிலையை சமூகம் அடைய முடியும். இந்த போராட்ட உணர்வு இருக்கக் கூடாது என்ற அடிமைகளின் நிலையைத்தான் இத்தகைய கல்வி வள்ளல்களின் நடவடிக்கைகள் உருவாக்குகிறது. மேலும் சமூகமாக நாம் சேர்ந்து போராடி பெற வேண்டிய உரிமைக்கான சிந்தனையை, இப்படி பணக்காரர்களின் கருணை உள்ளத்தால் ஒரு சிலருக்கு வழி ஏற்படும் என்ற மாயையை உருவாக்கி அழிக்கிறார்கள்.\\ சூர்யா சில நூறு பேருக்கு செய்யும் உதவியை, ஆறு கோடி பேரை அமுக்க உதவிடுமா? இதெல்லாம் உமக்கே ஓவராகத் தெரியவில்லையா?

  49. \\நண்பர்களே, நடிகர் சூர்யாவின் சினிமா பிடிக்கும், அவரது நடிப்பு பிடிக்கும் என்று சொன்னால் பிரச்சினை அல்ல. அது வெறும் இரசனை சம்பந்தப்பட்டது. ஆனால் அவரது வெற்றியிலிருந்து நாமும் கற்றுக் கொண்டு உழைத்தால் நல்ல நிலையை அடைய முடியும் என்று சொன்னால் அது ஆபாசமானது, கண்டனத்திற்குரியது. \\ நீங்க ஆணியே புடுங்க வேண்டாம், பாடமே கத்துக்க வேண்டாம், அப்படி கத்துக்க வேண்டுமென்று அவர் உங்களிடம் சொல்லவுமில்லை, அப்பாடி யாரவது சொல்லியிருந்தால், நீங்கள் தான் புத்திசாளியாயிற்றே, ஏன் காதில் வாங்க வேண்டும், விட்டுத் தள்ளுங்களேன்?

  50. \\இவரைப் போன்ற பெரும் பணக்காரர்கள் தத்தமது குடும்பங்களின் தேவைக்கு மீறி பிரம்மாண்டமாக சேர்த்து வைத்திருக்கும் பணத்தால்தான் பல ஏழைகள் படிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. இதை மறைக்க ஒரு லட்சத்தை தானம் செய்து அதை பல லட்சங்களுக்கு விளம்பரம் செய்கிறார்கள். தன்னை ஒரு வள்ளல் போல முன்னிறுத்துகிறார்கள். ஊடகங்களும் இந்த நட்சத்திர சேவையை செவ்வனே செய்து வருகிறது.\\ எத்தனையோ அயல் மாநில நடிகர்கள்/நடிகைகள் இங்கே வந்தார்கள், மாகட் போனதும் மூட்டை முடிச்சைக் கட்டிக் கொண்டு கிளம்பிவிட்டார்கள். அவர்கள் சம்பாதித்ததில் ஒரு சல்லி பைசா கூட செலவு செய்யாமல் தான் சென்றார்கள். இன்றைக்கும் சிலர் அப்படித்தான் இருக்கிறார்கள், உங்களால் என்ன செய்ய முடிந்தது, செய்ய முடியும்? ஒருத்தன் ஏதோ மக்களுக்கு நல்லது செய்ய முயற்ச்சிக்கும் போது, அதில் நொள்ளை நொட்டை என்று பார்த்துக் கொண்டு ஒவ்வொன்றுக்கும் அர்த்தம் கற்ப்பித்துக் கொண்டிருந்தால் இப்போது கிடைக்கும் சிறு உதவிகளையும் கிடைக்காமல் போகச் செய்து விடும், அதுதான் உமது நோக்கமா?

  51. \\நமது இயலாமை என்பது நமது பறிக்கப்பட்ட செல்வத்தில் இருக்கிறது என்பதை புரிந்து கொள்வதுதான் நமது விடுதலைக்கான ஒரே வழி. ஆகவே இந்த கனவான்களையும், தரும வள்ளல்களையும் எப்போதும் விலக்கி வையுங்கள். விடுதலைக்கான சிந்தனையை பாதுகாத்துக் கொள்ளுங்கள். நமக்கான முன்னுதாரணங்களை நாம் பகத்சிங்கிடம் தேடவேண்டுமே ஒழிய, ஒரு கட்டவுட் நட்சத்திரத்திடமிருந்து அல்ல.\\ முதலில் ஆளும் அரசு இலவசம் கொடுப்பதை நிறுத்தச் சொல்லி அந்தப் பணத்தை கல்வி, மருத்துவம் மற்றும் மாநில முன்னேற்றத் திட்டங்களுக்குச் செலவு செய்யச் சொல்லுங்கள். 1.76 கோடிகளை லவட்டியவனுங்க சமுதாயத்துக்கு ஒன்னும் பண்ணவில்லை. அப்படி யானை போவதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, சில கோடி சம்பாதிக்கும் நடிகன் ஏதோ தன்னால் முடிந்த உதவியைச் செய்ய முன் வந்துள்ளான், அதைப் பார்த்து அநியாயம், அட்டூழியம் என்று குய்யோ..முறையோ.. என்று கூக்குரல் இடுவது எந்த விதத்தில் நியாயம்? நல்ல அரசு வந்து, ஊழல் இல்லாத ஆட்சி தந்து, மக்களுக்கு வேண்டியதை அரசே செய்து கொடுக்கும் என்ற நிலை வரும் வரை இந்த மாதிரி உதவிகளை ஏற்றுக் கொள்வோம், அதற்க்கப்புறம் நிராகரித்துவிடலாம். [அது ஏங்க இந்த ஜன்மத்துல நடக்கப் போவுது..ஹா..ஹா.ஹா..]

  52. நீங்க ஆணியே புடுங்க வேண்டாம், பாடமே கத்துக்க வேண்டாம், அப்படி கத்துக்க வேண்டுமென்று அவர் உங்களிடம் சொல்லவுமில்லை, அப்பாடி யாரவது சொல்லியிருந்தால், நீங்கள் தான் புத்திசாளியாயிற்றே, ஏன் காதில் வாங்க வேண்டும், விட்டுத் தள்ளுங்களேன் ///////
    அட என் அறிவாளி மங்குனி… நீங்கள் ஆணியே புடுங்க வேண்டாம், வினவை படிக்கவே வேண்டாம், படித்தாலும் கருத்து எழுதவே வேண்டாம். அப்படி யாரும் உங்களிடம் சொல்லவுமில்லை, அப்பாடி யாராவது சொல்லயிருந்தால் நீங்கள்தான் புத்திசாளியாயிற்றே, ஏன் காதில் வாங்க வேண்டும், விட்டுத்தள்ளுங்களேன். அதை விட்டுவிட்டு இப்படி ஒரே மேட்டரைச்சொல்ல ஒரு டஜன் கருத்தை எழுதினால் மூக்கில் மீசையை விட்டு மூளையை குடைந்துவிடுவேன். பீ கேர்புல் #என்னைச் சொன்னேன்

  53. @Two Dozen th காகிதப் புலிகேசி

    நீங்க சொல்லியிருப்பது உங்களுக்கும் பொருந்தும், நீங்க என்னுடைய ஒன்னேகால் டஜன் கமெண்டுகளைப் படிக்க வேண்டுமென்று அவசியமில்லை. வேண்டுமென்றால் வினவு அவர்கள் என் கமேடுகளை நீக்கிக் கொள்ளட்டும், நடுவில் நீர் என்ன சொம்பில் வெற்றிலை எச்சில பொலீச்…பொலீச்… என்று துப்பும் நாட்டமையா, இல்லை வினாவுக்கு மவுத் பீஸா?

  54. நீங்க சொல்லியிருப்பது உங்களுக்கும் பொருந்தும், நீங்க என்னுடைய ஒன்னேகால் டஜன் கமெண்டுகளைப் படிக்க வேண்டுமென்று அவசியமில்லை. வேண்டுமென்றால் வினவு அவர்கள் என் கமேடுகளை நீக்கிக் கொள்ளட்டும், நடுவில் நீர் என்ன சொம்பில் வெற்றிலை எச்சில பொலீச்…பொலீச்… என்று துப்பும் நாட்டமையா, இல்லை வினாவுக்கு மவுத் பீஸா?///

    அட என் மங்குனி, நீங்க சொல்லியிருப்பது உங்களுக்கும் பொருந்தும், நீங்க என்னுடைய ஒத்தை கமெண்டைப் படிக்க வேண்டுமென்று அவசியமில்லை. வேண்டுமென்றால் வினவு அவர்கள் என் கமென்டை நீக்கிக் கொள்ளட்டும், நடுவில் நீர் என்ன சொம்பில் வெற்றிலை எச்சில பொலீச்…பொலீச்… என்று துப்பும் நாட்டமையா, இல்லை வினாவுக்கு மவுத் பீஸா? இல்லை சூரியாவின் மவுத் பீஸா, இல்லை பீஸா வின் மவுத்தா?

  55. @240000000000000000000000000000000 -ம் வெங்காயகேசி

    நான் எத்தனை கமேடுகள் போட வேண்டும் என்று நாட்டாமை செய்ய நீ யார்? தேவையில்லாததைச் செய்ய வேண்டாம். இங்கே எழுதப் பட்டுள்ள கட்டுரை, அதற்க்கு எனது பின்னூட்டம். இதில் மாற்றுக் கருத்து இருந்தால் தெரிவிக்கவும். இல்லை என்றால் உடலில் உள்ள சில துளைகளை மூடிக் கொண்டு ஒரு ஸ்டெப் பேக் போகவும். குரைக்கும் உனக்கு தொடர்ந்து பதில் எழுதுவேன் என்று எதிர்பார்க்க வேண்டாம்.

    • நான் எத்தனை கமேடுகள் போட வேண்டும் என்று நாட்டாமை செய்ய நீ யார்? தேவையில்லாததைச் செய்ய வேண்டாம். இங்கே எழுதப் பட்டுள்ள கட்டுரை, அதற்க்கு எனது பின்னூட்டம். இதில் மாற்றுக் கருத்து இருந்தால் தெரிவிக்கவும். இல்லை என்றால் உடலில் உள்ள சில துளைகளை மூடிக் கொண்டு ஒரு ஸ்டெப் பேக் போகவும். குரைக்கும் உனக்கு தொடர்ந்து பதில் எழுதுவேன் என்று எதிர்பார்க்க வேண்டாம்.//////

      அட மங்குனியே, நான் என்ன கருத்து போட வேண்டும் என்று நாட்டாமை செய்ய நீ யார்? தேவையில்லாததைச் செய்ய வேண்டாம். இங்கே எழதப்பட்டுள்ள உன் பின்னூட்டம், அதற்கு பதில் அளித்தது என் பின்னூட்டம். அதற்கு பதில் இருந்தால் அளிக்கவும். இல்லை என்றால் உடலில் எதாவது துளை இருந்தால் அதை மூடிக்கொண்டு ஒன் ஸ்டெப் பேக் போகவும். குரைக்கும் உனக்கு தொடர்ந்து பதில் எழுதுவேன் என்று எதிர்பார்க்க வேண்டாம்

  56. வினவின் இந்தப் பதிவு தரும் இறுக்கத்தை நீக்குவதற்கு ஜெயதேவ் Vs புலிகேசியின் பின்னூட்ட சண்டை உதவுகிறது. சிரிப்பாகத்தான் இருக்கிறது :-))

  57. Dear All,

    A good report on Surya. But who is making him as a star. for his film we are claiming tickets are sold to some hundreds. But who is buying the tickets. teh same middle class and low class people who needs education. If he is spending this money on his education like these kind of “surya’s” will not come. we are creating these kind of super personalities, and we are crying that they are having more money. if we stop buying this nonsense cinema tickets for higher price every thing will come in control. we are doing mistake and blaming others as usual.

  58. சூர்யாவை முன்னிறுத்தி இந்த ‘உன்னால் முடியும் தம்பி’ சுய முன்னேற்ற புராணங்களை மக்கள் மனதில் ஏற்றும் தன்மையை (டாடா, பிர்லா Etc ஆரம்பத்தில் சைக்கிளிலேயே டியூப்லைட்டை கட்டிட்டு போய் வித்தாராம்!!! என்கிற ரீதியில்) வலியுறுத்தி அத்தோடு நின்றால் பரவாயில்லை; அரசின் கடமை மக்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டியது என்கிற விஷயத்தை மக்கள் மனதிலிருந்து அகற்றி, தனியாரிடம் காசுக்கு முண்டியடித்து தனக்கு மட்டும் ஸ்பெஷல் படிப்புகளை வாங்கிக் கொள்ளும் மனப்பான்மையை வளர்க்கும் தொழிலை ஊடகங்களும், இது போன்ற கதாநாயகர்களும் செய்வதை, கல்வி உரிமை பறிக்கப்படுவதை எதிர்க்க விரும்பாதவர்களாக, போராடாதவர்களாக மக்களை திசைமாற்றும் விஷயத்தை, இக்கட்டுரை விளக்கிப் பேசியிருக்கிறது.

    //நமது இயலாமை என்பது நமது பறிக்கப்பட்ட செல்வத்தில் இருக்கிறது என்பதை புரிந்து கொள்வதுதான் நமது விடுதலைக்கான ஒரே வழி.//

    வாழ்த்துக்கள். அருமையான பதிவு.

  59. pesama ipadi irunthal thaan nallavar. vallavar nu neengale 1 konar notes potrunga. Pinnadi varra sandhathigal athai paarthu, padichu athan padi nadanthupanga. neenga nenaipathai seithal than avar nallavar. illai endral ethu mathire ezuthi neengale ungala comedy piece-a a akikureenga. 🙂 solla varum karuthukkalai mattum sollunga. athai vittu vittu yaraiyachum ezuthu vittu athuku 1 katturai nu time waste pannathinga. ungalukku pidikathavargalai ippadi news poduvomnu mirattum ennam erupathu pola eruku. chinna pulla thanama la erukku…neengalum porattam pannom, athai panninom nu solring. But onnum nadakalaiye… oruvelai ungalala mudiyalaingra vaitharichal naalayo? ada pongappa…1st ungaloda santhega bhuthi, chinna bhuthi, neenga than appatakkar ingra ennathai vittutu positive-a ethachum pannunga. neenga ellariyum kurai solvathu pola than ungalaiyum ellarum kurai solgirargal. But neenga koochame pada matinga…

  60. வினவு ஏதோ சீரியஸ்ஸா பதிவு போடறாருன்னு நினைச்சேன். ஆனால் வாதம் பண்ணுவதற்கு தயாராக இல்லை என்பது எனக்கு இப்போதுதான் தெரிகிறது. நான் புடிச்ச முயலுக்கு 3 காலுன்னு சொன்னதையே திரும்பத் திரும்ப சொன்னா எரிச்சலாத்தான் வருது. பல கருத்துக்களை நல்லாத்தான் வினவு குழாம் சொல்றாங்க. ஆனா அவர்கள் சொல்வதிலும் இருக்கும் குற்றம் குறைபாட்டை ஏத்துக்க மாட்டேங்கறாங்க. இங்கு பின்னூட்ட அன்பர்கள் முன்வைத்திருக்கும் சில கேள்விகளுக்கு அவர்கள் பதிலே அளிக்கவில்லை என்பதிலிருந்தே அவர்களின் வறட்டுப் பிடிவாதம் புரிகிறது!!

  61. //அதுசரி, ரகுமான் என்ற நடிகர் கூடத்தான் மார்கெட் இல்லாமல் இருந்தார், இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் அவரை வைத்து புதுப் புத்து அர்த்தங்கள் என்ற படத்தை எடுத்து சூப்பர் டூப்பர் ஹிட் ஆக ஒட்டிக் காட்டினார். ஏன் அந்த ரகுமான் தொடர்ந்து நடித்து வெற்றியடைய முடியவில்லை? மணிரத்னம் எடுத்த ரோஜா, பம்பாய் இரண்டுமே ஹிட் படங்கள், அதன் கதாநாயகன் வேறு எந்தப் படத்திலும் நடித்து வெற்றி பெற முடியவில்லையே, மேலும் தொடர்ந்து நடிகனாகவும் நிலை நிறுத்திக் கொள்ள முடியவில்லையே, ஏன்?

    ஒருவேளை அவர்களுக்கு இவரை போல சொம்படிக்க தெரியவில்லையோ?

  62. //ஏதோ அவரால முடிஞ்சது ஒரு சில நூறு பேர்களாவது பயனடைகிறார்களே, அதுவரையாவது சந்தோஷப் படுங்கள் ஐயா. அவர் அதையும் நிறுத்திவிட்டால், நீங்கள் பதிவு போட்டே பிள்ளைகளை படிக்க வைத்து விலை வாங்கிக் கொடுத்து விடுவீர்களா? நீங்கள் சாதித்தது தான் என்னவென்று சொல்லுங்களேன்?

    ஆமாங்க கல்வி வள்ளல் சூர்யா இத நிறுத்திட்டா அப்பறம் பிள்ளைகளை யார் படிக்க வைப்பது… பாவம் அவரு பிள்ளைகளை படிக்க வைக்கணும்னு நவரத்னா கூல் தைலம் , பெப்சி குளிர்பானம் , அப்பறம் அந்த காப்பி இப்படி கஷ்டபடு நடிச்ச சம்பாதிச்ச பணத்தை எல்லாம் ஒண்ணுவிடாம தந்துகிட்டு இருக்காரு .. அவரை போயி காரி துப்பலாமா?

    ஆமா எனக்கு பெரிய சந்தேகம் … கல்விக்கு உதவி பண்ண அறக்கட்டளை தொடங்கிதான் பண்ண முடியுமா? நீ சம்பாதிக்கிற பணத்த அடுத்தவனுக்கு கொடுக்க எதுக்குயா அறக்கட்டளை? அரக்கட்டளைன்னு வந்தாலே நம்ம பயபுல்லைக்க கண்டிப்பா சந்தேகபடத்தான் செய்வானுக?

    வினவின் இந்த பதிவின் சாராம்சம் , இவர்களை போன்ற ஆட்களிடம் இருந்தேல்லாம் நாம் காற்று கொள்ள வேண்டும் என்று எழுதியதை எதிர்பதே… காசு கொடுத்தால் மலத்தை கூட உடம்புக்கு நல்லது ரொம்ப சுவையா இருக்கும் அள்ளி தின்னுங்க என்று கூவும் இவர்களிடம் இருந்து நாம் என்ன கற்று கொள்ள வேண்டி இருக்கிறது? இவர் என்ன படித்து சொந்த அறிவில் நிலவுக்கு ராக்கெட் விட்டாரா? அவரிடம் இருந்து நாங்கள் காற்று கொள்ள….

  63. \\ஒருவேளை அவர்களுக்கு இவரை போல சொம்படிக்க தெரியவில்லையோ?\\ படத்தை போய் உட்கார்ந்து பார்க்கிரவனுக்கா நீங்க சொம்படிக்கப் போறீங்க? நீங்க சென்னையில உட்கார்ந்துகிட்டு சொம்படிச்சா மத்த எல்லா ஊர்லயும் படம் ஓடிவிடுமா? நீங்க வேலை செய்யும் இடத்தில் சொம்படிக்கலாம், உங்களுக்கு மார்க்கு போடும் வாத்தியாருக்கு சொம்படிக்காலாம், கண்ணில் படம் எல்லோருக்கும் சொம்படிக்கலாம், அதன் மூலம் சாதிக்க முடியும், ஆனால் படம் ஓட அது உதவாது. ஒரு படம் ஓடனும்னா அதைப் பார்க்கும் ரசிகனுக்கு படம் பிடிச்சிருக்கனும், இல்லைன்னா துண்டை உதறி தோலில் போட்டுக்கிட்டு போயிடுவான், சந்திக்கும் எல்லோரிடத்திலும், அந்த படத்துகேது போயிடாதீங்கப்பான்னும் ஓசியா விளம்பரம் செய்து விடுவான். பிழைப்பு நாறிடும்.

  64. \\ஆமாங்க கல்வி வள்ளல் சூர்யா இத நிறுத்திட்டா அப்பறம் பிள்ளைகளை யார் படிக்க வைப்பது… \\ இங்க யாரும் யாரையும் நம்பி இல்லீங்க. இன்னைக்கு சூர்யா என்ற ஒரு நடிகர் இல்லாமலே இருந்திருந்தாலும் அவரால் இன்று பயன் பெரும்
    பிள்ளைகள், வேறு எதாவது ஒரு வழியில் வாழ்ந்துதான் இருப்பார்கள். நேரு, காந்தி போன்றோர் மரணமடைந்த போது, கூடவே எல்லோரும் செத்துப் போய் விடவில்லை. இங்கு அது அல்ல விவாதம். இருக்கும் வரை நம்மால் முடிந்ததை பிறருக்கு உதவுவோம் என்பதே. ஒரு ஆங்கில துணுக்கு சில மாதங்களுக்கு முன் படித்தேன், கடற்கரையில் ஒருத்தன் நடந்து போய்க் கொண்டிருந்தான், அப்போது நூற்றுக் கணக்கில் மீன்கள் கரையில் வீசப் பட்டு சாகத் துடித்துக் கொண்டிருந்தன, அவன் சிலவற்றை எடுத்து மீண்டும் தண்ணீருக்குள் வீசிக் கொண்டே நடந்தான். அதைப் பார்த்த இன்னொருத்தன் கேட்டான், “There are hundreds of fishes going to die, what difference does your act make?” அதற்க்கு முதலாமாவன் சொன்னான், “It won’t make any difference to the those which are going to die, but it makes all the difference to the few I am throwing back into the water”. அன்பரே, முடிந்தால் இதை உணர்ந்து கொள்ளவும்.

  65. \\பாவம் அவரு பிள்ளைகளை படிக்க வைக்கணும்னு நவரத்னா கூல் தைலம் , பெப்சி குளிர்பானம் , அப்பறம் அந்த காப்பி இப்படி கஷ்டபடு நடிச்ச சம்பாதிச்ச பணத்தை எல்லாம் ஒண்ணுவிடாம தந்துகிட்டு இருக்காரு .. அவரை போயி காரி துப்பலாமா?\\ அப்படி தைலம் தடவி, பெப்சி & காபி குடிச்சு, சம்பாதிச்ச பணத்தை மொத்தமா அவரே கூட வச்சிக்கலாம். யாரு கேட்க முடியும். அது சரி, சம்பாதிச்ச பணத்தை எல்லாம் ஒண்ணுவிடாம தந்து விட வேண்டும் என்று சொல்லும் முன்னாடி, ஒரு நிமிஷம் கண்ணை மூடி நாம் சம்பாதிப்பதில் எவ்வளவு ஏழைகளுக்குச் செலவிடுகிறோம் யோசிச்சுப் பார்க்கலாமே? அது ரொம்ப கேவலமா இல்ல இருக்கும்? அப்படியே அண்ணாந்து பாத்து ஆடாம அசையாம காரி துப்புங்க.

    • வலதுகையால கொடுப்பது இடதுகைக்கு தெரியக்கூடாதுன்னு சொல்லுவாங்க, ஆனா ஒரு ரூபா கொடுத்துபுட்டு அதை பத்து ரூவாவுக்கு விளம்பரம் பண்ணும் சூரியா மாதிரி ஆளுங்க, அதுக்கு சொம்படிக்க புதிய தலைமுறை மாதிரி ஆளுங்க. மான்க்கேடு. இதையெல்லாம் கேட்டா நீ என்ன புடுங்குன்ன்னஃனு திருப்பி கேட்டு லுக்கு விடுவானுங்க.

      அந்த அல்லக்கைங்க கிட்ட சொல்லிகறது ஒன்னுதான். நான் கொடுப்பேன் கொடுக்காம போவேன், ஆனா ஊரெல்லாம் என் நண்கொடையை பேட்டி கொடுத்து திரியமாட்டேன். சினிமால கைய கால ஆட்டிபுட்டு நான் இளைஞர்களுக்கு வழிகாட்டின்னு லூசுத்தனமா உளர மாட்டேன். நான் ஒரு சராசரி மனிதன். சூரியாவும் பத்திரிக்கை ஆசாமிகளும் கேவலமான மனிதர்கள்.

      ஜெயதேவதாசை பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை, சும்மா வீம்புக்கு எழுதிட்டிருக்கார்.

  66. \\ ஆமா எனக்கு பெரிய சந்தேகம் … கல்விக்கு உதவி பண்ண அறக்கட்டளை தொடங்கிதான் பண்ண முடியுமா? நீ சம்பாதிக்கிற பணத்த அடுத்தவனுக்கு கொடுக்க எதுக்குயா அறக்கட்டளை? அரக்கட்டளைன்னு வந்தாலே நம்ம பயபுல்லைக்க கண்டிப்பா சந்தேகபடத்தான் செய்வானுக?\\ நீங்க எவ்வளவுதான் சம்பாதிச்சாலும், போறவங்க வரவங்க எல்லோருக்கும் கொடுத்துக் கொண்டே இருந்தே, ஆண்டியாக நிற்க வேண்டியது தான். மத்தவங்களுக்கு உதவுவதற்குப் பதிலாக, உங்களை தூக்கி விட நாலு பேரு தேவைப் படும். தனக்கு மிஞ்சியதுதான் தானம். [ஒரு மாசத்து முயற்ச்சிதான் பண்ணிப் பாருங்களேன், நீங்க சந்திக்கும் உங்களை விட எளியவர் எல்லோருக்கும் ஒரு நூறு ரூபாய் மாத்திரம் கொடுத்துப் பாருங்க, அப்புறம் புரிஞ்சிக்குவீங்க.] எத்தனையோ பேரு கஷ்டப் பட்டுகிட்டு இருக்காங்க. ஆனா, பணம் ஒரு பக்கம் மித மிஞ்சிப் போயி இருக்கு, ஆனா, அவங்களுக்கும் உதவும் எண்ணமும் இருக்கு, எப்படி உதவுவது என்று தெரியவில்லை. ஒரு நம்பிக்கையான ஆள் கிடைத்தால் பரவாயில்லை என்று நினைக்கிறார்கள். சூர்யா அந்த மாதிரியான ஒரு இடைப் பட்ட சமூக சேவகராக இங்கு கருதப் படுகிறார். அவ்வளவுதான். நீங்க கூட இது போல சேவை செய்யலாம், அல்லது உங்களுக்கு சரி என்னும் முறையிலும் செய்யலாம். ஆனால், ஒண்ணுமே செய்யாமல் உட்கார்ந்துகொண்டு, ஊரில் உள்ளவனை பார்த்து நொள்ளை நொட்டை என்பது எதற்கு?

  67. \\வினவின் இந்த பதிவின் சாராம்சம் , இவர்களை போன்ற ஆட்களிடம் இருந்தேல்லாம் நாம் காற்று கொள்ள வேண்டும் என்று எழுதியதை எதிர்பதே… \\ கத்து கிட்டே இருங்க, சாகிற வரைக்கும் உருப்படியா யாருக்கும் எதையும் செய்திடாதீங்க, பார்க்கிறவனை நொள்ளை, நொட்டை என்று சொல்லிகிட்டே இருங்க. இதுவும் ஒரு பொழப்பு.

    • ரசிகனின் காசை டிக்கெட் கட்டணம் என்ற பெயரில் பிக்பாக்கெட் அடித்து கோடி கோடியாக சம்பாதிக்கும் சினிமா கழிசடைகளிடம் கற்றுக்கொள்ளும் அளவுக்கு இந்த சமூகம் கேவலமாகிவிட்டதா? ஏன் காந்தி, நேரு, பெரியார், அம்பேத்கர், நேதாஜி போன்ற தலைவர்களின் நினைவு இனி தேவையில்லையா? பாடப்புத்தகங்களிருந்து அவர்களை ஒழித்து சூரியாவையும், திரிஷாவையும் நமது குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கச்சொல்லி போராடாலாம். அதற்கு திரு தாஸ் தலைமை தாங்கட்டும்

  68. நண்பர்களே, நடிகர் சூர்யாவின் சினிமா பிடிக்கும், அவரது நடிப்பு பிடிக்கும் என்று சொன்னால் பிரச்சினை அல்ல. அது வெறும் இரசனை சம்பந்தப்பட்டது. ஆனால் அவரது வெற்றியிலிருந்து நாமும் கற்றுக் கொண்டு உழைத்தால் நல்ல நிலையை அடைய முடியும் என்று சொன்னால் அது ஆபாசமானது, கண்டனத்திற்குரியது/////

    வினவின் இந்த கருத்து மிகச் சரியானது. இன்றைய சமூக சீர்கேடுகளுக்கு இந்தக் கேவலமான சினிமாவும் ஒரு முக்கிய காரணம். பெண்கள் பின்னால் பொறுக்கித்தனமாக சுற்றுவதையே காவியமாக படைக்கும் இந்த தமிழ்சினிமாவின் கழிசடைகளுக்கு சமூக முன்னேற்றத்தைப் பற்றிப் பேச தகுதியே கிடையாது. அரை நிர்வாண கவர்ச்சிப்படம் போட்டு வியாபாரம் செய்யும் இந்த பத்திரிக்கைத்துறை பொறுக்கிகளுக்கும் இதுவே பொறுந்தும்

  69. எப்படிப்பட்ட பண்பான நாடு இது. இன்று எப்படி போய்விட்டது? இந்த சினிமா பொறுக்கிகளை கொண்டாடி பின்னூட்டம் எழுதும் திரு தாஸ் போன்றவர்கள் ஒரு முறை நமது சுதந்திர போராட்ட கால வரலாற்றை பார்கட்டும். கட்டபொம்மனும் ஊமைத்துறையும் மருது சகோதரர்களும், பூலித்தேவனும் வாழ்ந்த மண்ணில் கேவலம் ஒரு சினிமா கழிசடையை வாழ்வின் நாயகனாக கொண்டாடுவதா. சோற்றில் உப்பு போட்டு தின்பவர் அப்படிச் சிந்திக்கவும் முடியுமா?

  70. வெள்ளையனுக்கு எதிராக தனது இன்னுயிரை நீத்த பகத்சிங், சுகதேவ், ராஜகுரு, சந்திரசேகர் ஆசாத், அஸ்வகுல்லாஹ் கான், திருப்பூர் குமரன், வாஞ்சிநாதன் உள்ளிட்ட எண்ணற்ற வரலாற்று நாயகர்கள் நம் இளைஞர்களுக்கு வழிகாட்டியா இல்லை அந்த வெள்ளைகாரனின் எச்சில் காசை பெறுக்கும் இந்த நடிகர்கள் நமக்கு வழிகாட்டியா. மூளை இருப்பவர்கள் சிந்திக்கட்டும். மற்ற அஃறினைகள் நடிகனுக்கு துதிபாடட்டும்.

  71. 23 வயதில் பகத்சிங் துக்கிலேரினான், 30 வயதில் நேதாஜி இராணுவத்தை கட்டினார், 35 வயிதில் திப்பு சுல்தான் வெள்ளையனை தோற்கடித்து விரட்டி விட்டார், 40 வயதில் காந்தி வெள்ளை நிறவெறியை எதிரத்து சத்யாகிரகம் செய்தார். சூர்யா ஒவ்வொரு சினிமாவிலும் ஒவ்வொரு பெண்ணை துரத்திக்கொண்டு காதலிக்கிறார். தன்மானம் இருப்பவர்கள் ஒரு கழிசடை சினிமா நாயகனை முன்னுதாரணமாக கொள்வாரோ?

  72. இன்று வள்ளல் என்பார்கள் நாளை தலைவர் என்பார்கள் நாளை மறுநாள் முதல்வர் என்பார்கள். ச்சீய் மானங்கெட்டவர்கள்

  73. \\நான் கொடுப்பேன் கொடுக்காம போவேன், ஆனா ஊரெல்லாம் என் நண்கொடையை பேட்டி கொடுத்து திரியமாட்டேன்.\\ இதுதான் உங்க பாலிசின்னா தாராளமா வச்சுக்குங்க சார், ஆனா உங்க வழிதான் உலகத்துலேயே சிறந்ததாக இருக்கணும்னு அவசியம் இல்லியே? சரவணா ஸ்டோருக்கு விளம்பரம் தரலாம், லலிதா ஜுவல்லரிக்கு விளம்பரம் தரலாம், அரசுப் பணத்தில் ஒரு கிலோ அரிசி, இலவச வந்த தொலைக் காட்சி கொடுத்தாலும் அரசு செலவிலேயே நாங்க தான் குடுத்தொம்னும் விளம்பரம் தரலாம், ஆனா, சில ஏழை மாணவர்களுக்கு உதவ விளம்பரம் தந்தால் அது சமூக விரோதமாகி விடுமோ? இந்த விளம்பரம் ஒன்னும் அமிதாப் பச்சனோ, சச்சின் டெண்டுல்கரோ காசுக்காக நடிக்கிறார்களோ அது போன்ற விளம்பரம் அல்ல. இந்த மாதிரி ஒரு அமைப்பு உள்ளது, உதவ மனமுள்ளவர்கள் தாரளமாக முன்வந்து உதவுங்கள் என்று சொல்லவே விளம்பரம். வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியக் கூடாது என்றால், இந்த நற்பணி சொற்ப பெருக்கே உதவும், வளராது, விளம்பரப் படுத்தினால், மேலும் மேலும் உதவுவார்கள், மேலும் பலர் பயனடைவார்கள் என்ற எண்ணம் தான்.

  74. \\சினிமால கைய கால ஆட்டிபுட்டு நான் இளைஞர்களுக்கு வழிகாட்டின்னு லூசுத்தனமா உளர மாட்டேன்.\\ சினிமாவில் நடிப்பது ஒன்றும் சட்டத்திற்குப் புறம்பான வேலையல்ல, அங்கீகரிக்கப் பட்ட தொழிலே. எந்தத் தொழிலையும் இழிவாகப் பேச வேண்டாம்.

    \\ஜெயதேவதாசை பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை, சும்மா வீம்புக்கு எழுதிட்டிருக்கார்.\\ மக்களுக்கு பாடுபடவேண்டிய முதலமைச்சர் லட்சக் கணக்கான கோடி ரூபாய்களைக் கொள்ளையடிக்கிறார், சாராயம் விற்கிறார், ஆற்று மணல் அத்தனையும் திருடிவிற்க்கிறார், மீனவன் செத்தால் அவருக்குக் கவலையில்லை, அண்டை மாநில நதிப் பிரச்சினைகள் எதையும் தீர்க்க வில்லை. இவர் குடும்பத்தில் எல்லோரும் ஆயிரக்கணக்கான கோடிகளில் தொழில் செய்கிறார்கள், மக்கள் எல்லோரும் வரியவர்காலாக ஆகிக் கொண்டே போகிறார்கள். அப்படியிருக்க, சில கோடிகள் சம்பாதிக்கும் சாதாரணமான ஒருத்தன், மாணவர்கள் கல்வி பெறட்டும் என்று உதவ முன் வந்திருப்பதை வரவேற்கிறேன், இதை வீம்பு என்று சொன்னால், அது உங்கள் இஷ்டம்.

  75. \\ரசிகனின் காசை டிக்கெட் கட்டணம் என்ற பெயரில் பிக்பாக்கெட் அடித்து கோடி கோடியாக சம்பாதிக்கும் சினிமா கழிசடைகளிடம் கற்றுக்கொள்ளும் அளவுக்கு இந்த சமூகம் கேவலமாகிவிட்டதா? \\ நீங்களா தியேட்டருக்குத் தேடித் போயி, பிளாக்குல கூட டிக்கட் கிடைச்சா வாங்கி உங்க சந்தோஷத்துக்காக படத்தைப் பார்த்துவிட்டு, இப்போ என்னமோ நீங்க காசு கொடுத்த நடிகர்களை வாழ வைப்பது போல பேசுகிறீர்களே? நீங்கள் திரையரங்குக்கே போகாமல் வீட்டிலேயே இருங்கள் ஐயா, யார் வித்தலை பாக்கு வச்சு கூப்பிட்டாங்க?
    \\ஏன் காந்தி, நேரு, பெரியார், அம்பேத்கர், நேதாஜி போன்ற தலைவர்களின் நினைவு இனி தேவையில்லையா?\\
    ஏதோ ஒருத்தன் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்க உதவி செய்யப் போனா, எதுக்காக இந்த பெரிய மனுஷனுங்களை இங்க இழுத்துகிட்டு வந்து நியாயம் வைக்கிறீர்கள் நண்பரே? சூர்யா இவங்களை மறந்திடுங்கன்னு சொன்னாரா?

  76. \\எப்படிப்பட்ட பண்பான நாடு இது. இன்று எப்படி போய்விட்டது? இந்த சினிமா பொறுக்கிகளை கொண்டாடி பின்னூட்டம் எழுதும் திரு தாஸ் போன்றவர்கள் ஒரு முறை நமது சுதந்திர போராட்ட கால வரலாற்றை பார்கட்டும். கட்டபொம்மனும் ஊமைத்துறையும் மருது சகோதரர்களும், பூலித்தேவனும் வாழ்ந்த மண்ணில் கேவலம் ஒரு சினிமா கழிசடையை வாழ்வின் நாயகனாக கொண்டாடுவதா. சோற்றில் உப்பு போட்டு தின்பவர் அப்படிச் சிந்திக்கவும் முடியுமா?\\ இந்த வீர வசனமெல்லாம் எனக்கும் தெரியும். மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் ஒருத்தனிடம் அற்பமாக ஆயிரத்துக்கும் ரெண்டாயிரத்துக்கும், இலவசத்துக்கும் வெட்கமில்லாமல் இன்று ஓட்டை விற்கும் கேவலமான நிலையில் மக்கள் இருக்கிறார்கள். வெற்றி பெற்ற பின் அவன் ஒரு லட்சம் கோடி அடித்தால் என்ன பத்து லட்சம் கோடி அடித்தால் என்ன, எதுவும் கேட்க முடியாது. நீங்கள் பேசும் வீரம், ஓட்டுப் போடும் போது இருக்க வேண்டும், ஆட்சிக்கு வந்தவன் அராஜகம் பண்ணும்போது இருக்க வேண்டும், அங்கேயெல்லாம் விட்டு விட்டு, ஏதோ எழி மாணவர்கள் கல்விக்கு உதவ முன் வந்துள்ள ஒரு நடிகனிடம் வந்து ஆ..ஊ… என்று டயலாக் விடுவது நியாயமில்லை.

  77. \\வெள்ளையனுக்கு எதிராக தனது இன்னுயிரை நீத்த பகத்சிங், சுகதேவ், ராஜகுரு, சந்திரசேகர் ஆசாத், அஸ்வகுல்லாஹ் கான், திருப்பூர் குமரன், வாஞ்சிநாதன் உள்ளிட்ட எண்ணற்ற வரலாற்று நாயகர்கள் நம் இளைஞர்களுக்கு வழிகாட்டியா இல்லை அந்த வெள்ளைகாரனின் எச்சில் காசை பெறுக்கும் இந்த நடிகர்கள் நமக்கு வழிகாட்டியா. மூளை இருப்பவர்கள் சிந்திக்கட்டும். மற்ற அஃறினைகள் நடிகனுக்கு துதிபாடட்டும்.\\ இத்தனை இருந்தும் என்ன பிரயோஜனம், சாராயம் விர்ப்பவனிடமும், மணல் கொள்ளையனிடமும் லட்சம் கோடிகளில் கொள்ளையடிப்பவனிடமும்
    நாட்டை காசுக்கு விற்று விட்டீர்களே?

  78. \\23 வயதில் பகத்சிங் துக்கிலேரினான், 30 வயதில் நேதாஜி இராணுவத்தை கட்டினார், 35 வயிதில் திப்பு சுல்தான் வெள்ளையனை தோற்கடித்து விரட்டி விட்டார், 40 வயதில் காந்தி வெள்ளை நிறவெறியை எதிரத்து சத்யாகிரகம் செய்தார். \\ சும்மா தமாஷ் பண்ணாதீங்க சார். இவங்களுக்கும் உங்களுக்கும் என்ன சார் சம்பந்தம்? இவங்க கூட சுதந்திரப் போராட்டுத்தில் கலந்துகிட்டு ஒண்ணா ஜெயிலில் கலி திண்றீர்களா? நேதாஜி ராணுவத்தில போராடுனீர்களா? சும்மா படிச்சிட்டு ஊற சுத்திகிட்டே இந்த வெளு வெளுக்கிரீங்களே சார்? முதலில், உங்க ஊர் எம்.எல்.ஏ திருடுவதை எர்த்து கேட்க உங்களுக்கு திராணி இருக்கானு பாருங்க சார், அப்புறம் மத்ததைப் பாப்போம்.

  79. \\சூர்யா ஒவ்வொரு சினிமாவிலும் ஒவ்வொரு பெண்ணை துரத்திக்கொண்டு காதலிக்கிறார். தன்மானம் இருப்பவர்கள் ஒரு கழிசடை சினிமா நாயகனை முன்னுதாரணமாக கொள்வாரோ? \\ தோ… பாருடா…அண்ணாச்சி தீர்ப்பு சொல்லிட்டாரு!! அண்ணே அது வெறும் நடிப்பு, நிஜமல்ல. நடிப்பு அவரது தொழில், அதில், படத்துக்கு ஒரு நடிகையுடன் கூட நடிக்கிறாரே தவிர அவங்க கூட அவர் ஒன்னும் குடும்பம் நடத்தவில்லை. மறந்திடாதீங்க.

  80. \\இன்று வள்ளல் என்பார்கள் நாளை தலைவர் என்பார்கள் நாளை மறுநாள் முதல்வர் என்பார்கள். ச்சீய் மானங்கெட்டவர்கள்\\ சொல்றவன் சொல்லட்டுமே, நீங்க நல்லவனா பார்த்து தேர்ந்தெடுங்களேன்?

  81. காமரஜர்னு ஒருத்தர் இருந்தாருங்க, அப்புறம் பக்தவத்சலம், கக்கன் மாதிரியும் சிலர் இருந்தாங்க, இன்னைக்கு நல்லவங்க இருக்கலாம், ஆனா அரசியலில் இருக்காங்களான்னு தெரியலை. திருடன், கொலைகாரன், முடிச்சவிக்கி மொள்ளாமாறி இவனுங்களாதான் எல்லாப் பயல்களும் இருக்கானுங்க. இருப்பதில், நல்லக் கண்ணு அவர்கள் தேவலாம்னு சொல்லிக்கிறாங்க, ஆனா அவரு எங்கே பதவிக்கு வரப் போறாரு!!

    • காமரஜர்னு ஒருத்தர் இருந்தாருங்க, அப்புறம் பக்தவத்சலம், கக்கன் மாதிரியும் சிலர் இருந்தாங்க, இன்னைக்கு நல்லவங்க இருக்கலாம், ஆனா அரசியலில் இருக்காங்களான்னு தெரியலை.///

      இதுக்கும் சூர்யாகிட்ட ஒரு விளம்பரம் நடிக்கச்சொல்லே………………………
      யோவ் உம் மொக்க முடியல சாமி…..

  82. அவன் சம்பாதிக்குறான். அவன் செலவு பண்றான். பண்ணல. அது அவனோட இஷ்டம். நீங்க காசு குடுத்து படம் பார்த்தால் அவர் இப்படி தன இருக்கனும்ன்னு எந்த அடிப்படையில் கேட்கிறீர்கள்?. நீ மொதல்ல மாதவன் சொல்றத கேட்குறியா? நீ 1st பண்ணுயா. நான் பண்றேன்.நீயும் பண்ணின நல்லா இருக்கும் ன்னு சொல்லு. அவன பண்ண சொல்றதை எல்லாம் நீ பண்ணிட்டியா?. சூர்யாவோ, வேற யாரோ. மத்தவங்கல இப்படி தான் பண்ணனும். எங்களுக்கு பிடிச்சவங்க கூடத்தான் பேசணும். பழகனும். பிடிக்காதவங்க கிட்ட மத்தவங்க பேச கூடாது ன்னு சொல்ல நே என்ன பட்டாபட்டி டவுசெர் போட்ட நாட்டாமையா? உங்களுக்கு அமெரிக்கா, பெப்சி, கோக் பிடிக்காது என்பதற்காக எல்லாருக்கும் அப்படியே பிடிக்க கூடாது என்பது தான் சர்வாதிகாரத்தனம். உங்களுக்கு பிடிக்கலேன்னா பேசாம வேற வேலைய பார்க்கவேண்டியதுதானே? நீங்க use பண்ற விண்டோஸ்,MS ஆபீஸ், ன்னு நெறைய அமெரிக்கா பொருட்களை உபயோகிக்குறீங்க. so உங்கள பத்தியும் எழுதனும்ல? . நீங்க நல்லவரா? மற்றவனையே குற்றம் சொல்லிட்டே இருக்கீங்களே உங்களுக்கும் கலைஞர் மாதிரி அலுக்கவே அழுக்கதா? அவருக்கு தன்னை யாராச்சும் பாராட்டிகிட்டே இருக்கனும்.பாராட்டு விழா நடத்திகிட்டே இருக்கணும்.உங்களுக்கும் அப்படி தான். நீங்க சொல்ற மாதிரி தான் எல்லாரும் இருக்கனும். அல்லது அப்படி பிடிக்காதவங்களை or யாரையாச்சும் திட்டனும். குற்றம் குறை சொல்லிட்டே இருக்கனும். இது 1 வியாதி. நன் என்னால் முடிந்த அளவுக்கு படிக்க வசதி இல்லாத குழந்தைகளுக்கு, முடியாத குழந்தைகளுக்கு படிப்பு செலவுகளை ஏற்றுக் கொள்கிறேன். அவர் எதோ பண்றார். எவ்வளவோ குடுக்குறார். விளம்பரம் பண்றார். என்னமோ பண்றார். ஆனால் 1 குழந்தையசும் பலன் அடையுதில்ல? உனக்கு ஏன்யா காண்டு?உன் காசை நான் சொல்றபடிதான் செலவு பண்ணனும்னு நான் உன்னை சொன்ன உனக்கு எப்படி இருக்கும்?. உன்னால முடில. உன் வயித்தெரிச்சள இப்படி காட்டிக்குற. போய் எதாச்சும் உருப்படியா 4 பேருக்கு நல்லது பண்ணு. அப்புறமா என்ன வேணாலும் சொல்லு. ஏன்னா? 4 பேருக்கு நல்லதுன எதுவுமே தப்பில்ல… 🙂 🙂 🙂

  83. @ mokka das

    என்னப்பா உமக்கு வேலையே கூகுளில் ID Create பண்ணுவதுதானா? விதம் விதமா சட்டை பேன்ட் போடுற மாதிரி இத்தனை பெயரில் கமெண்டு போடுறியே, அப்புறம் என் பெயரை நக்கலடிக்க இந்த பெயரை உண்டு பண்ணியிருப்பே போலிருக்கே!! இந்த சலசலப்புக்கெல்லாம் மிரளும் ஆள் நாள் இல்லை. உன்னை மாதிரி நிறைய மொக்கப் பசங்களைப் பார்த்தாச்சு, அது சரி Mr.Common Man இத்தனை தியாகிகளைக் கண்டுபிடிச்சு என்னமோ அவங்க கூடவே சுதந்திரப் போராட்டத்தில தளபதியா நின்னு போராடுனா மாதிரி போட்டிருக்காரே, அவரையே “ரொம்ப நல்லவன்” யாராச்சும் இருந்தாங்கன்னா கண்டுபிடிக்கச் சொல்லுங்களேன், என்கிட்ட வந்தா நான் எங்கே போவேன்? இல்லாத பயல்களையும் காணாத பயல்களையும் கண்டுபிடிச்சு குடுக்க நான் என்ன போலீஸ் ஸ்டே ஷனா இல்ல எம்.எல்.ஏ. வா? இல்ல இவன்தான் நல்லவன் என்று சொல்ல நான் என்ன கோர்ட்டா? வந்துட்டாய்ங்கய நல்ல கேள்வியைத் தூக்கிட்டு.

  84. // நமக்கான முன்னுதாரணங்களை நாம் பகத்சிங்கிடம் தேடவேண்டுமே ஒழிய, ஒரு கட்டவுட் நட்சத்திரத்திடமிருந்து அல்ல.//…வருங்காலத்தில்”பகத்சிங்” பற்றி கூட விமர்சனங்கள் போடுவீர்கள்??????

  85. உங்கள் முடிவான கருத்தான “நமக்கான முன்னுதாரணங்களை நாம் பகத்சிங்கிடம் தேடவேண்டுமே ஒழிய, ஒரு கட்டவுட் நட்சத்திரத்திடமிருந்து அல்ல” உடன் நான் முழுமையாக உடன் படுகிறேன்.

    இருந்தாலும் என்னுடைய கருத்து இதுதான்.

    1. திரு சூர்யா அவர்கள், தன்னால் இயன்ற உதவியை பல பேருக்கு கல்வி கற்க செய்வதில் தவறு இல்லை, ஆனால் அந்த வழிமுறை தான் தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கல்வி கற்க நாம் செய்ய வேண்டிய வழிமுறையா என்றால் இல்லவே இல்லை. மேலும் திரு சூர்யா மற்றும் அவரின் நண்பர்கள் செய்வது போல் பல மனிதர்கள் செய்து கொண்டு உள்ளார்கள் எந்தவித பிரதி பலனும் இல்லாமல், எந்தவித விளம்பரமும் இல்லாமல். எனவே இதை ஒரு பொருட்டாக நாம் எடுத்துகொள்ள தேவை இல்லை.

    2. //ஆம். இன்றைக்கு நமது மாணவர்களுக்கு தரமான இலவசமான கல்வி கிடைக்க வேண்டுமென்றால் நாம் அதற்காக அரசை எதிர்த்து போராட வேண்டும்.//
    இதுவும் இன்றைய சமுக சுழலில் சாத்தியம் இல்லாத ஒன்று. ஆதிகாரத்தை கையுள் வைத்திருக்கும் கும்பல் தான் இன்று கல்வியை வியாபாரமாக செயல் படுத்திகொண்டு உள்ளது.

    இன்றைய நிலையில் இவை அனைத்துக்கும் தீர்வு, மக்களின்பால் பற்று கொண்ட, வினவு போன்ற அனைவரும் அரசியலில் ஈடுபட்டு, அதிகாரத்தை தங்கள் கையில் எடுப்பது தான் ஒரே வழி. அதை நோக்கி நாம் அனைவரும் செயல் படுவோம். அதை விடுத்தது தேர்தல் புறக்கணிப்பு, விதியுள் இறங்கி போராடுதல் எல்லாம் நிங்களும் நானும் நினைக்கும் மாற்றத்தை தராது. தந்தால் மிக்க மகிழ்ச்சி.

    வினவும், சவுகுக்கும், நாம் அனைவரும் செய்ய வேண்டியது என்ன? என்று பல மாதங்களுக்கு முன் எழுதியது.

    //வருகின்ற தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் நாம் நமது மாற்றத்தை தொடங்குவோம்.

    மிண்டும் தலைப்புக்கு வருகிறேன், வினவும், சவுகுக்கும் உண்மையிலேயே இந்த சமுதாயம் மாறவேண்டும் என்ற விருப்பம் இருக்கும் என்றால், வருகின்ற சட்ட மன்ற தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் ஒரு நல்லவரை வெற்றி பெற செய்து இந்த சமுகத்திக்கு ஒரு செய்தியை சொல்ல முடியுமா? ஒரு அரசியல் மாற்றத்திற்கு ஆரம்பமாக இருக்க முடியுமா?, அதற்கு உலகம் முழுவதும் இருக்கின்ற தமிழ் நண்பர்களை இணைத்து செயல்படுத்த முடியுமா?

    Source: http://www.shansugan.net/2011/01/24/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE/
    //

  86. அருமையான பதிப்பு.

    உண்மை. இதுபோன்ற உதவிகளை எதிர்பார்க்கும் மனப்பான்மை போராட்ட குணத்தினை மங்க வைக்கத்தான் செய்கின்றது.

    சூரியா நமக்கெல்லாம் முன்மாதிரி இல்லை. இருப்பினும் அவரின் உள்ளக்குறுகுறுப்பிற்கு ஏதாவது செய்வதை குறை கூற இயலாது. தினம் தினம் இந்த பிரச்சனைகளால் பாதிக்கப்படும் மக்கள் தெருவில் இறங்கி போராடாமல் சூரியாவும், சந்திராவும் போராடி எந்த பயனும் இல்லை. அவர்களை குறை கூறியும் பயனில்லை.

  87. ella mathathinarum punbaduvathu pol ullathu… thangal velipadaiyana karuthuku palam ullathe thavira andha palathin vilaval neridum sila sangadangal silarai thuburuthum.. kobam sankyathanthudam vara vedum athu samuthaya prachanaigaluku mattum seiyalbada vendum. kamal soll varuvathu, anuthapapada avan endha mandhthinaravathu irukalam. ithil mathathinn kalavalithanam seiyalbadathu..

  88. வாழ்க உலக மக்கள் அனைவரும்! வாழ்க ஈரேழு லோகங்களும்!!!

    “தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றமாட்டோம்:

    தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம் என்ற பெயரைக் கொண்டிருப்பதால், இந்தப் பிரச்னையில் எந்த தர்மசங்கடமும் இல்லை. தமிழ்த் திரைப்பட நடிகர் சங்கம் என்று உருவாக்க வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள்.

    கலைக்கு மொழி, மதம், சாதி கிடையாது. பல திரைப்பட பிரபலங்கள் பொறுப்பு வகித்த பாரம்பரியம் மிக்க அமைப்பு இது. இதன் பெயரை மாற்ற முடியாது. தொடர்ந்து இந்தப் பெயரிலேயே சங்கம் செயல்படும். விருப்பம் இருப்பவர்கள் புதிதாகத் தொடங்கலாம். மாற்றுக் கருத்து இல்லை.”-சரத்குமார்”

    நீங்க சொல்வது உங்கள் சம்பத்தப்பட்ட வகையில் மிகவும் சரியே. ஹி…ஹி..ஹி.. ஏன்னா திராவிடத்தையும் தாண்டி நீங்க பொது கலாசார முன்னேற்றத்தின் தலைவர் என்பது எங்களுக்கு தெரியாதா என்ன??? வாழ்க உலக மக்கள் அனைவரும்! வாழ்க ஈரேழு லோகங்களும்!!!

    Pl c Link:
    http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Tamilnadu&artid=544550&SectionID=129&MainSectionID=129

  89. These are all the methods followed by the channels to make familiar their own programs. How can we accept that Suriya is to be followed by the people who want to achieve in their life. There should be sensor for tv channels for telecasting programs like movies. This is nothing but a foolish attitude to make us fools.

  90. ரஜினியை உட்பட பல நடிகர்களை போலவே சூரியாவும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று சென்றிருந்தால் இப்படி ஒரு கட்டுரை வந்திருக்காது. தமிழ் திரை உலகில் நிறைந்திருக்கும் தென்லுங்கர்ர்கள் மத்தியில் ஒரு தமிழனாய் வளர்ந்துவரும் ஒரே காரணத்திற்கு மட்டுமே சூரியாவை நாம் பாராட்ட வேண்டும். “To avoid criticism say nothing, do nothing, and be nothing”

Leave a Reply to Common Man பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க