privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விஏன் வேண்டும் சமச்சீர் கல்வி? - அரங்கக் கூட்டம் !

ஏன் வேண்டும் சமச்சீர் கல்வி? – அரங்கக் கூட்டம் !

-

வணிகமயமாகும் கல்விக் கொள்கைக்கு முடிவு கட்டுவோம்!
இலவசக் கட்டாயக் கல்வி உரிமையை நிலைநாட்டுவோம்!!

அரங்கக் கூட்டம்

19.07.2011, செவ்வாய்க்கிழமை, காலை 9.00 மணி

நியூ G.G. மஹால், MMDA பஸ் டெப்போ பின்புறம், அரும்பாக்கம், சென்னை

தொடர்புக்கு – 94451 12675

————————————

நிகழ்ச்சி நிரல்

தலைமை

தோழர். த.கணேசன்,  மாநில அமைப்பாளர், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, தமிழ்நாடு

உரை நிகழ்த்துவோர் 

ஏன் வேண்டும் சமச்சீர் கல்வி?

திரு. ச.சீ. இராஜகோபாலன், மூத்த கல்வியாளர், சமச்சீர் கல்விக்குழு உறுப்பினர்

கல்வி கார்ப்பரேட்மயம் என்பது உலகமயம் உருவாக்கும் புதிய பார்ப்பனியம்

தோழர். மருதையன், பொதுச் செயலாளர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு

கட்டாய இலவசக் கல்வி தருவது அரசின் கடமை! கல்வி தனியார்மயம் என்பது ஏழைகள் மீதான வன்கொடுமை!

தோழர். சீ. ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.

அனைவரும் வருக !

__________________________________________________________________________

தொடர்புக்கு

வ. கார்த்திகேயன்.
41, பிள்ளையார் கோவில் தெரு, மதுரவாயல், சென்னை – 95, http://rsyf.wordpress.com

வினவு – (91) 97100 82506

__________________________________________________________________________

தமிழக அரசே!

கட்டணக் கொள்கையை ஒழித்துக் கட்டு!
அனைத்துத் தனியார் கல்வி
நிறுவனங்களையும் அரசுடைமையாக்கு!

அரசுப் பள்ளிகளில் போதுமான
ஆசிரியர்களை நியமி!

அடிப்படைக் கட்டுமான வசதிகளைச்
செய்து கொடு!

சமச்சீர் கல்வியை அனைவருக்கும்
கட்டாயமாக – இலவசமாக வழங்கு!

அரசுப் பள்ளிகளில்
படித்த மாணவர்களுக்கு மட்டும்
உயர்கல்விப் படிப்புகளுக்கு அனுமதி கொடு!

அரசுக் கல்வி நிறுவனங்களில்
படித்தவர்களுக்கே
அரசு வேலை என்று ஆணையிடு!

உழைக்கும் மக்களே!

மனித மாண்பை மேம்படுத்தும்
கல்வியை ஒரு பண்டமாக்கி,
மக்களைக் கொள்ளையடிக்கும்
கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபவெறிக்கு,
அடிமைகளை உருவாக்கும்
தனியார்மய – உலகமயக் கல்விக் கொள்கைக்குக்
கல்லறை கட்டுவோம்!

ஆங்கிலவழிப் பயிற்சி – தரமான கல்வி
என்ற போர்வையில் புகுத்தப்படும்
புதிய பார்ப்பனியக் கல்விமுறையைத்
தூக்கியெறிவோம்!

பெற்றோர்களே!

10-வது மற்றும் +2 தேர்வுகளில்
சாதனை நிகழ்த்துவது
தனியார் பள்ளிகளை விட
அரசுப் பள்ளிகளே!

ஆங்கிலவழிப் பயிற்சி – தரமான கல்வி
என்ற மோகத்திற்குப் பலியாகி,
குழந்தைகளை பிராய்லர் கோழி போல்
வளர்க்கும் கல்வி வியாபாரிகளிடம்
சிக்கிச் சீரழியாதீர்!

அரசுப் பள்ளி, கல்லூரி ஆசிரியர் பெருமக்களே!

மாணவர்களுக்கு முறையாகக்
கற்றுக் கொடுப்பதில்லை,
ஒழுக்கமாக வளர்ப்பதில்லை என்று
அரசுப் பள்ளிகளையும், ஆசிரியர்களையும்
கேவலப்படுத்திக் கொச்சைப்படுத்தும்
தனியார் பள்ளி முதலாளிகளுக்கு
எதிராக அணிதிரள்வீர்!

தனியார் பள்ளி ஆசிரியர்களே!

அற்பச் சம்பளம் கொடுத்து
உங்களைக் கொத்தடிமைகளைப் போல
நடத்துவதோடு, கல்விக் கொள்ளைக்குக்
கருவியாகப் பயன்படுத்தும்
தனியார் பள்ளி வியாபாரிகளுக்கு
எதிராக சங்கமாகத் திரண்டு போராடுவீர்!

__________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்