சாதிவெறிபிடித்த, அதிகாரத்திமிரெடுத்த, மக்களின் ரத்தம் குடிக்கிற ஓநாய்கள்தான் தமிழகப்போலீசு என்பது மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. 11/09/2011 அன்று பரமக்குடியில் நடந்த இம்மானுவேல் சேகரனின் நினைவுநாள் விழாவில் மூவரைச் சுட்டுக்கொன்றதன் மூலம் மனித ரத்தம் குடிக்க வெறி பிடித்து அலைவதில் இந்திய ராணவத்திற்கும், அமெரிக்க ராணுவத்திற்கும், சிங்கள ராணுவத்திற்கும் நாங்கள் பங்காலிகள் எனக்காட்டியிருக்கிறது தமிழகப்போலீசு.
விழாவிற்கு ஒருவாரத்திற்கு முன்பாகவே ஏராளமான போலீசை கும்பல் கும்பலாக இறக்கிவிட்டு பரமக்குடி நகரில் அலையவிட்டிருந்தது தமிழக அரசு. மக்களைப் பீதியூட்டுகிற வழக்கமான நடைமுறை என்று அப்போது தோன்றினாலும், ஒரு பயங்கரமான சதிதிட்டத்தை அரங்கேற்றத்தான் இந்தப் போலீசுக் கும்பல் வந்திருக்கிறது என்பது பின்னால்தான் தெரிந்தது.
விழாவிற்கு வந்துகொண்டிருந்த ஜான்பாண்டியனை அவர் வந்தால் கலவரம் ஏற்படும் எனக்காரணம் கூறி காலை 11 மணிக்கு எட்டுக் குடியருகே கைது செய்கிறது போலீசு. முத்துராமலிங்கம் குருபூசைக்கு வருகிற ஒட்டுக்கட்சித் தலைவர்களையெல்லாம் வப்பாட்டியைப் போல மிகப் பாதுகாப்பாக அணைத்துக் கூட்டிக்கொண்டு போய் விட்டுவிட்டு வருகிற போலீசு, ஜான்பாண்டியனை மட்டுக் கலவரம் செய்பவராகக் காட்டி தனது திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும் முயற்சியைத் துவக்கி வைக்கிறது.
தேவர்சாதிவெறியின் அடையாளமாக கொண்டாடப்படும் தேவர் குருபூஜைக்கு ஜெயா, மு.க.ஸ்டாலின், நடிகர்கள், போலிக் கம்யூனிஸடுத் தலைவர்கள் உட்பட பலரும் வருவார்கள். அவர்களுக்கு முறை வைத்து அழைத்துச் சென்று பாதுகாப்பாக கொண்டு விடுவதில் இந்த அடிமைப் போலீசுக்கு பிரச்சினை இல்லை. மேலும் அந்த குருபூஜை நாளில் தேவர் சாதிவெறியர்கள் வரும் வழிகளிளெல்லாம் தலித் மக்களை தாக்குவதும், வெறுப்பூட்டுவதும் வருடா வருடம் நடக்கும். அப்போதெல்லாம் போலீசின் துப்பாக்கி வேலை செய்யாது. ஆதிக்க சாதி வெறியர்களின் வன்முறைகளும் பயங்கரவாத நடவடிக்கைகளாக கருதப்பட மாட்டாது.
இதற்கு எதிர்வினையாக தலித் மக்கள் இம்மானுவேல் சேகரனது குருபூஜையை நடத்தத் துவங்கியதும் போலீசும், அரசும் ஆயிரத்தெட்டு நிபந்தனைகளை விதிப்பது வழக்கம். இந்த வருடம் குருபூஜைக்கு வரும் ஜான்பாண்டியனை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? கேட்டால் அவர் ஒரு ரவுடி, கட்டைப் பஞ்சாயத்து செய்பவர் என்று கூறுவார்கள். இந்த வேலைகளை எல்லாக் கட்சித் தளபதிகளும்தான் செய்கிறார்கள். எனில் ஜான்பாண்டியனை மட்டும் அப்படி சித்தரிப்பதற்கு ஆதிக்க சாதி வெறியே முக்கியக் காரணம். சரி தங்களது தலைவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஜான்பாண்டியனின் ஆதரவாளர்கள் சாலை மறியல் செய்யக்கூடாதா? அவர்களை நாய்களைப் போல அடித்து நொறுக்க வேண்டிய அவசியம் என்ன?
ஆதிக்க சாதிக்கூட்டத்திற்கு பிரச்சனை ஏற்படுமென்றால் பிரச்னை ஏற்படுத்துபவர்கள் என தலித்துகளைக் கைது செய்வது, தலித்துகளுக்குப் பிரச்னை ஏற்படுமென்றால் பிரச்னை வராமல் தடுக்கிறோம் என்று தலித்துகளைக் கைது செய்வது தமிழகப் போலீசின் சாதி வழக்கம்.

ஜான்பாண்டியன் கைது செய்யப்படுகிறார். பரமக்குடியில் இருக்கிற அவரது ஆதரவாளர்கள் உடனடியாக அவரை விடுதலை செய்யச் சொல்லி ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். விடுதலை செய்ய மறுக்கும் போலீசு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் பரமக்குடி ஐந்துமுக்கு ரோட்டில் சாலைமறியல் செய்கிறார்கள். சாதாரணமாக, ஓட்டுக்கட்சிகள் உள்படப் பலரும் செய்கின்ற அதே சாலைமறியல்தான். ஆனால், இப்போது அதை ஒரு பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதைப்போல மாற்ற முயலும் முயற்சியாகத் தனது வேட்டையைத் தொடங்கியது. காட்டடி, மாட்டடி என்று சொல்வார்களே அப்படிப்பட்ட போலீசின் வழக்கமான காட்டுமிராண்டித்தனமான அடியை அடிக்க ஆரம்பிக்கிறது. இன்னோரு வகையில் சொல்லப்போனால் வெறிகொண்ட தெருநாய்கள் பாய்ந்து பிறாண்டிக் கடித்துக் குதறுமே அதைபோல அ(க)டிக்கத் துவங்கியது. சிதறி ஓடுகிறார்கள் மக்கள். விரட்டி விரட்டியடிக்கிறது போலீசு. கருணாநிதி கைது செய்யப்பட்டபோது சாலைமறியல் செய்யும் திமுககாரர்களையோ, ஜெயலலிதா கைது செய்யப்பட்டபோது சாலைமறியல் செய்யும் அதிமுககாரர்களையோ என்றாவது தமிழகப்போலீசு விழுந்து பிறாண்டியிருக்குமா? இல்லை தேவர் சிலையில் காக்கா கக்கா போனதற்காக சாலை மறியல் செய்யும் தேவர் சாதி வெறியர்களை என்றாவது தாக்கியிருக்கிறார்களா? தலித்துக்கள் சாலை மறியல் செய்தால் மட்டும் அது பயங்கரவாத நடவடிக்கையா?
அடிதாங்க முடியாமல் சில இளைஞர்கள் அங்கிருந்த தனியார் மருத்துவமனைக்குள் தஞ்சம் புகுந்து கொள்கிறார்கள். மருத்துவமனைக்குள் புகுந்த போலீசு அங்கிருந்தவர்களை வெளியில் இழுத்து சாலையில் போட்டு அடித்துத் துவைக்கிறது. இப்படி அடித்துக்கொண்டிரும்போது டி.எஸ்.பி கீழே விழுகிறார். இனி அடிவாங்கியவர்களின் முறை ஆரம்பிக்கிறது. நையப்புடைக்கப்பட்ட அவரை போலீசு காப்பாற்றிக் கூட்டிச் செல்கிறது. தன்னுடைய நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற நேரம் குறிக்கிறது. கடுமையான தாக்குதலுக்குள்ளான மக்கள் தங்களின் ஆத்திரத்தை அங்கிருந்த வஜ்ரா வாகனத்தை எரித்ததின் மூலம் தணித்துக் கொள்ள முயன்றனர். உணர்ச்சி வசப்பட்டிருந்த மக்கள் கூட்டத்தை தடுத்து நிறுத்த அங்கே போலீசு இல்லை. உணர்ச்சி வசப்படும் அவர்கள் ஏதேனும் செய்ய வேண்டும் என்றே அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்ததால் சற்றுத் தூரமாக இருந்த போலீஸ் ஸ்டேசனுக்கே போலீசுக் கும்பல் போய்விட்டிருந்தது. அதாவது தாங்கள் துப்பாக்கி சூடு நடத்துவதற்கு ஒரு முகாந்திரம் வேண்டுமென்றே அவர்கள் சாதுர்யமாக முதலில் ஒதுங்கி இருக்கிறார்கள்.
பிறகு அங்கிருந்து திரும்புகிறார்கள், சாதிவெறிபிடித்த, அதிகாரத்திமிரெடுத்த, மக்களின் ரத்தம் குடிக்கிற ஓநாய்கள்தான் தமிழகப்போலீசாகிய நாங்கள் என்பதை மீண்டுமொருமுறை நிரூபிப்பதற்கான உத்தரவோடு வந்தார்கள். சுட்டார்கள். பொதுமக்களில் மூன்று பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். ஆபத்தான காயங்களோடு இரண்டுபேர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஏழுபேர் சுடப்பட்டதாக கூறப்படுகிறது. சுடப்பட்டவர்கள் யாரென்கிற விவரம் இன்னும் தெரியவில்லை. சுடப்பட்டவர்களின் உடல்கள் ஐந்துமுனை ரோட்டிலேயே கிடக்க போலீசு மீண்டும் நின்று கொண்டிருந்த மக்களை விரட்டிக்கொண்டு ஒடியது. மக்கள் சிதறி ஓடுகிறார்கள். அப்போதும் போலீசு சுடுகிறது. மதுரை ராமநாதபுரம் ரோட்டில், நடுச்சாலையில் நின்றுகொண்டு ஓடுகின்ற மக்களை நோக்கிக் குறிவைத்துச்சுடுகிறது போலீசு.
ஒரு போர்க்களத்தை நினைவூட்டுகிறது அந்தக்காட்சி.
ஏற்கனவே சாதி வெறியூட்டப்பட்ட ரெளடிக் கும்பலாக வளர்க்கப்பட்டிருக்கிற போலீசு, ஒரு பக்கா பாசிஸ்ட்டான, சாதித்திமிரின் மொத்த உருவமான, பார்ப்பன ஜெயலலிதாவின் ஆசீர்வாதத்தோடு தங்களின் வெறியைத் தீர்த்துக்கொள்வதற்காகவே சுடுகிறது. மேலும் பாசிச ஜெயா பதவிக்கு வந்த உடன் போலீசுக்கு அனைத்து அதிகாரமும் வழங்கி அவர்களை குளிப்பாட்டி பலமுறை பேசியிருக்கிறார். இப்படி ஜெயாவால் அதிகார போதை வெறியேறிய போலீசு இப்படி அப்பாவி மக்களை சுட்டுக் கொல்வதற்கு எந்த தயக்கத்தையும் காட்டவில்லை. எல்லாம் அம்மா கொடுத்திருக்கும் அதிகாரம் என்பது போல நடந்திருக்கிறது.
முத்துராமலிங்கம் குருபூசையின் போது அனைத்து ஓட்டுக்கட்சித் தலைவர்களும் வருகிறார்கள், போகிறார்கள். ஆனால், இம்மானுவேல் சேகரனின் நினைவுநாளின் போது எந்த ஓட்டுக்கட்சித் தலைவனும் வருவதில்லை. ஏன் வருவதில்லை என்பதைப்பற்றிக்கூடச் சிந்திக்காமல் அந்த ஓட்டுக்கட்சிகளில் இருக்கும் தலித் இளைஞர்கள் தங்கள் தலைவர்களின் படங்களைத் தாங்களே பிளக்ஸ் பேனர்களில் போட்டுக்கொண்டு அவர்களும் இந்த விழாவிலே கலந்துகொள்வது போன்ற பிரமையை ஏற்படுத்துகிறார்கள்.
இதோ, திட்டமிட்டே, ஜெயாவின் ஆசிகளோடு, துப்பாக்கியால் சுட்டு 4 பேரைக்கொலை செய்திருக்கிறது போலீசு. ஓரிடத்தில் இன்ஸ்பெக்டர் கைத்துப்பாக்கியினால் சுட்டு இருவரைக் கொன்றிருக்கிறார். மதுரையிலும் துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறது. இருவர் படுகாயமடைந்திருக்கிறார்கள். பத்திரிகைகளிலே என்ன எழுதப்போகிறார்கள்? கலவரம் செய்தார்கள், அதை அடக்கப்போன போலீசாரைத் தாக்கினார்கள், கலவரத்தை அடக்க போலீசார் சுட்டனர் என்றுதான் எழுதப்போகிறார்கள்.
“இவெங்களும் ஆட்டம் அதிகமாகத்தான போட்ராங்க” என்கிற, ஆதிக்க சாதிப்பார்வையில் ஊறிக்கிடக்கும் ‘மக்களும்’ இதைக்கலவரம் என்றே நம்புவார்கள். பரப்புவார்கள். கலவரம் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும் என்றுதான் ஓட்டுக் கட்சித் தலைவர்கள் பேசுவார்கள். அவர்களது அகராதியில் போலீசு எப்போதுமே கலவரம் செய்யாது. எதிர்க்கட்சியாக இருப்பவர்களோ, சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்பார்கள். ஆனால், சட்டம் ஒழுங்கைக் கெடுத்தது போலீசுதான் எனச்சொல்லமாட்டார்கள்.
இந்த துப்பாக்கி சூட்டில் இறந்து போனவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயை வீசியிருக்கும் பாசிச ஜெயா யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறாராம். வன்முறையில் ஈடுபட்டது ஜெயாவில் காவல் நாய்களான தமிழக போலீசு. வன்முறைக்கு பலியானது தலித் மக்கள். எனில் ஜெயாவின் வேண்டுகோளுக்கு என்ன பொருள்? இனி இந்த ‘கலவர’ வழக்குகளுக்காக நூற்றுக்கணக்கான தலித்துக்கள் மீது பொய் வழக்கு போடப்படும். அவர்கள் இனி வரும் ஆண்டுகள் முழுவதும் வழக்கு, வாய்தா, சிறை என்று அலைய வேண்டும். இது கொடியங்குளம் ‘கலவரம்’ போதே நடந்திருக்கிறது. அந்த வழக்குகளுக்காக பல கிராம தலித் மக்கள் இன்றும் நீதிமன்றங்களுக்கு அலைகிறார்கள். சுட்டுகொன்றது போதாது என்று இப்படி நீதிமன்றங்கள் மூலமும் சித்திரவதை செய்கிறார்கள்.
ஆதிக்க சாதிக்கும்பல்கள் ஆடாத ஆட்டங்களெல்லாம் ஆடுகையில் அவர்களோடு சேர்ந்து கொண்டு, போதையில் மிதக்கும் போலீசு, தலித்துகள் உணர்வுபூர்வமாக ஏதேனும் செய்தால் கீச்சாதிப்பயலுக்கு திமிரப்பாருடா எனக் குமுறுகிறது. எல்லாத்துறைகளிலும் ஆதிக்கசாதி உணர்வுதான் வெளிப்படுகிறது. அதுதான் இப்போது ஆறு பேரைப் பழிவாங்கியிருக்கிறது. இனியும் இது அதிகரிக்கவே செய்யும். இதை யார் உணர்கிறார்களோ இல்லையோ, போலீசில் வேலை பார்க்கும் தலித்துகளும், ஓட்டுக்கட்சிகளில் இருக்கும் தலித்துகளும் உணரவேண்டும்.
இப்போது பாசிச ஜெயா போலீசை வைத்து செய்திருக்கும் இந்தக் கொலைக்கு புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, சே.கு தமிழரசன் போன்ற விலை போன தலித் அமைப்புத் தலைவர்கள் வக்காலத்து வாங்குவார்கள். இத்தகைய பிழைப்புவாதிகளையும் தலித் மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
சாதிவெறிபிடித்த, அதிகாரத்திமிரெடுத்த, மக்களின் ரத்தம் குடிக்கிற ஓநாய்கள்தான் தமிழகப்போலீசு என்பதும் ஜெயாவின் ஆட்சிக்காலங்களில் அது இரட்டிப்பாகிறது என்பதும், ஒட்டுக்கட்சிகள் இதை எப்போதும் சுட்டிக்காட்டுவதில்லை என்பதும் மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிற இந்நேரத்தில் போலீசிலும் ஓட்டுக் கட்சிகளிலும் இனியும் நாம் இருக்கமுடியுமா என தலித்துகள் உடனடியாக முடிவு செய்யவேண்டும். வெளியேற வேண்டும். உங்களுக்காக புரட்சிகர அமைப்புகள் காத்திருக்கின்றன.
_____________________________________________________________
– குருசாமி மயில்வாகனன்
________________________________________________________
துப்பாக்கி எடுத்து சுட்ட ரெண்டு போலீஸ் காரர்கள் தலித் என்று சொல்லப்படுகிறதே… 69 சதம் தலித் தானே ரைபிள் தூக்கும் காவலர்களாக இருக்கிறார்கள்… போலீசில் தலித்தே இல்லை அவர்கள் அனைவரும் மேல் சாதியினர் என்று கூறப் போகிறீர்களா?
மேலும் பள்ளர்களை எவ்வாறு தலித் என்று கூறலாம் என்று பள்ளர்களே வினவுகிறார்களே… ?
முத்துராமலிங்க தேவரின் விசுவாச அடியாட்கள் சிலரும் கூட பள்ளர்கள் தான். இவர்களுக்கு போட்ட எலும்புத் துண்டை தான் “தன் சொத்து பத்து எல்லாத்தையும் ஏழைகளுக்கு எழுதிவைத்தார் தேவர்” என்று வரலாறு கூறுகிறது. தேவரின் அடியாட்களாகவே பள்ளர்கள் இருந்த போது, இந்த போலிஸ் படையில் அவர்கள் இருந்தது ஒன்றும் ஆச்சரியம் இல்லையே?
adithiravidar nalathurai minister maggalakuga onnumey panna mattengraru antha velaya vittuttu vera vela parkalam
en sagothargal mayinthu vitargal ivargalai kappatherkagavey than govt adithiravidar nalathurai entra oru amaipey engaluku vendam
பொன் பரம குரு காவல் துறை தலைவராக இருந்த காலம் முதல் தேவர் இனத்தவரே அதிகமாக தேர்ந்தெடுக்கபடுகிறார்கள் .இன்றும் அவர்களே தனி பெருன்பான்மை காவல்துறையில்
.உயர விரும்பும் மக்களை கேலி செய்வதே உம்மை போன்றவர்களின் வேலையா ! சாதி வெறி யும் மத வெறியும் ஊழலும் இந்த நாட்டின் …………………………………சாபக்கேடுகள்.
nethaji
do u know that ur name notifies ur caste
do u like to say your caste
vinavu may avoid some caste name such as nethaji, pon, and like this…and ofcourse my name too but its real name wat to do
நீங்கள் சாதி வெறியரா? மத வெறியரா? நான் யார் என்று தெரிந்து கொள்வதை விட நான் என்ன எழுதியிருக்கிறேன் என்பதை பாரும். உம்மை போன்றவர்களுக்கு பதிலளிக்க விருப்பமில்லைதான். இருப்பினும் தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டு ஆங்கில பெயரில் உலாவும் இந்திய மதத்தை விட்டு வெறு மதத்தில் இருந்து கொண்டு கேள்வி கேட்டு இந்த நாட்டை குட்டி சுவராக்கி விட்டீர்கள். வினவு விருப்பப்பட்டால் முகவரி தெரிவிக்கவும் நானே வருகிறேன். உமக்காக அல்ல………..
இந்த கட்டுரையில் எழுத பட்டிருப்பது சரி எனதான் நான் கூறுவேன் , கருணாநிதியை ஒப்பிடுகையில் ஜெயலலிதா தலித் விரோதிதான். இன்னும் சொல்ல போனால் அண்ணா திமுக தேவர் கட்சியே.
ஆனால் இந்த பழங்கதைகள் பேசுவதில் பலன் இல்லை, கட்டுரையாளர் கூறியது போல், போலி தலித் தலைவர்களை புறம்தள்ளி தலித் இளைஞர்கள்
அரசியலில் ஈடுபடுவதே இந்த பிரச்சனைக்கான தீர்வு.
என்னாடா இந்த மனுசன காணாமேனு நெனச்சேன் வந்துடீயா
வரவேண்டிய நேரத்தில கண்டிப்பா வருவோம்ல…
//வரவேண்டிய நேரத்தில கண்டிப்பா வருவோம்ல…// பெரும்பான்மை இந்துக்கள் இப்படி அடிச்சிக்கிறதுக்குக் காரணம் முஸ்லீம்னு சொல்லீறாதீங்க மிஸ்டர் மிருகம்.
வர்றது முக்கியம் இல்ல உருப்படியாயன பதில சொல்ல மாட்டீங்களே
முத்துராமலிங்கத்தின் அம்மாவுடன் பிறந்தவர்களில் ஒரு பெண்ணுக்கும் சேதுபதிக்கும் இருந்த நட்பால்(!!) பெற்ற
சொத்தை பின்னாளில் முதுராமளிங்கத்திர்க்கு பெற்றுக்கொடுத்தவர்கள் குடும்பர்கள்.முத்துராமலிங்கம் தன சொத்தை பதினேழு பாகமாக பிரித்து 14 ஐ கள்ளர்&மறவர்களுக்கும் 2 ஐ குடும்பர்களுக்கும்(சொத்தை பெட்டரு கொடுத்ததில் உதவியவர்கள்) 1 1/2 ஐ அவர்க்கும் வைத்துக்கொண்டார். varalaaru theriyaamal kallaththanam purivathe kallargalin tholil.
தலித்களின் இரத்தத்தை குடிக்கும் ஜெயா பாசிச பார்ப்பன ஆதிக்கசாதி வெறியர்களின் அடியாட்களான போலிஸின் வன்முறை பயங்கரவாதத்தை கண்டிக்கிறோம்
click the link and read
>>>> இந்து மதத்தைவிட்டு நீங்க வேண்டும்?. பன்றியை விட கேவலமா?
அனைவரும் வெட்கித் தலைகுனியவேண்டிய விஷயமல்லவா இது…? தலித் இளைஞர்கள் உயிரை அரசு குறைத்து மதிப்பிடுகிறது
.
மனிதன்//
போலிஸ் என்பதே ஆளும்வர்க்கத்தின் அடிமை தான் அதில் என்ன தலித். கட்டளையிட்டால் செய்வது தான் போலீஸ்,இராணுவத்தில் உள்ள எல்லா சாதியினரின் வேலையே.நாய்களின் என்ன சாதி பிரிவு. காலம் காலமாக உயர்ந்தசாதிக்காரர்கள் தலித்துக்களை வைத்து தலீத்துக்களை தாக்குவதும்,சண்டைமூட்டிவிடுவதும்,பிரித்துவைப்பதும் தான் அவர்களை தந்திரமே.அதை தான் நீயும் சொல்கிறாய்.
ஆக ஒரு தலித் போலீஸ் அனால் அவனுக்கு பட்டம் “நாய்”…
அதிகார வர்க்கத்தின் ஏவல் வேலை செய்யும் எவனும் _______________தான் . அது மேற்கண்ட “manithan” ஆக இருந்தாலும் சரி..
முன்குறிப்பு : இது அனைத்துப் பிரிவினருக்கும் பொருந்தும்.
இமானுவேல் சேகரனின் நினைவுநாளன்று அன்னாருக்கு அஞ்சலி செலுத்தச் செல்பவர்கள் லாரிகளிலும், வேன்களிலும், கார்களிலும் பறக்கின்றனர். அவர்களது ஒற்றுமைக்கு என் பாராட்டுக்கள். ஆனால், கனத்த இதயத்துடன் அமைதியாகத்தானே போகவேண்டும். ஏன் விசிலடித்துக்கொண்டு.. ஊய் ஊய்..னு கத்திக்கிட்டு, அசிங்கமாகப் பேசிக்கொண்டு போகணும்?
தங்கள் தலைவருக்கு அஞ்சலி செலுத்தத் தானே செல்கிறார்கள்? அவர் இறந்தநாளைத் தானே குருபூஜையாகக் கும்பிடுகிறார்கள். அவரது நினைவிடத்தை கோயிலாக மதித்துதானே கும்பிடச் செல்கிறார்கள்? அப்புறம் ஏன் இந்த ஆர்ப்பாட்டம்? ஒரு மனிதன் செத்த நாளன்று அமைதியாய் அவன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்யவேண்டுமா? அல்லது சந்தோஷக் கூச்சல் போட்டுக்கொண்டு “ஒருவழியாய் ஒழிஞ்சாண்டா..” என்பது போல கூத்தாடிக்கொண்டு போகவேண்டுமா?
ஏன் இப்படி செய்கிறார்கள்.
அனைத்து தரப்பினரும் புருவம் உயர்த்தி வியக்குமளவிற்கு ஒழுங்கைப் பேணிக்காப்பதை விட்டுவிட்டு தலைவர் எனும்போர்வையில் சில வெறி பிடித்த ரவுடிகளின் கைப்பாவைகளாக ஆகி இப்படி உயிர் விடுவதேன்??????
இந்தக் கேள்விகளுக்கு அவரவர் மனசாட்சி பதில் சொல்லட்டும். மனிதம் வாழட்டும்!
அனைத்து பிரிவினருக்கும் பொருந்தும் என்று முன்குறித்து விட்டு, அதற்கு கீழே குறிப்பிட்ட ஒரு பிரிவினரை மட்டுமே சாடியிருக்கிறீர்களே. இது தான் நவீன சமதர்மமோ!!
நேற்று கண்டவற்றைத்தான் அதில் குறிப்பிட்டிருக்கிறேன். நேற்று நடந்தத்தைத்தான் சாடியிருக்கிறேன். இதுபோல நடந்துகொள்ளும் அனைத்துக் குழுக்களுக்கும் இது பொருந்தும் – தேவர் குருபூஜை உட்பட.
thiru Rishi
திரு ரிஷி
எனது பாட்டன் முப்பட்டான் காலத்தில் இருந்து சாவிற்கு கூட மேளத்துடன் ஆட்டதுடன் தான் எடுத்து செல்கிறார்கள், நீங்கள் தவறான குறிப்பிட்ட கண்ணோடத்தை வைத்துகொண்டு பேசுவது தவறு
உண்மைதான் ராஜா. அதை ஏன் அப்படி செய்கிறார்கள் என்பதை உணர்ந்து பார்த்தால் நலம். மனித உடலை விட்டு உயிர் நீங்கியதும், அதன்பின் என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் அந்த உயிர் தன்னுடலின் அருகிலோ உறவினர்களை சுற்றிசுற்றியோ வந்துகொண்டிருக்கும் என்பர். நாம் விடாமல் அழுதுகொண்டு இருந்தால் பாசத்திற்கு கட்டுப்பட்ட அவ்வுயிர் அவ்வளவு எளிதில் நீங்கிப் போகாது என்பர். அது அந்த உயிருக்கு மேலும் மேலும் துன்பத்தையே தரும்; எனவே மேளதாள ஆட்டத்துடன் அடக்கம் செய்யும்போது திருப்தியடைந்து உயிர் அவ்விடத்தை விட்டு அகன்றுவிடும் என்று கூறுவார்கள். இது உண்மையா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. செத்தால்தான் தெரியும்!! இது அந்தத் தருணத்திற்கு சரி. ஒவ்வொரு வருடமும் சரியா???
இமானுவேல் என்ற வார்த்தையை தவிரித்திருக்கலாம். அல்லது பொதுவாக “குருபூஜைகள்” என்று குறிப்பிட்டிருக்கலாம்.
நான் அவரது பெயரை தவிர்த்துவிட்டே சொல்லியிருக்கவேண்டும். சுட்டியதற்கு நன்றி.
//ஒரு மனிதன் செத்த நாளன்று அமைதியாய் அவன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்யவேண்டுமா?// இம்மானுவேல் இறப்பை ‘செத்த நாளென்று’ எழுதியபோதே வெளிப்பட்டுவிட்டது, உன்னுடைய வக்கிரம் பிடித்த சாதிவெறி..அப்புறம் என்னத்துக்கு இந்த அறிவுரை?
//ஒரு மனிதன் செத்த நாளன்று அமைதியாய் அவன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்யவேண்டுமா?//
“அவன்” என்றுகூட சொல்லியிருக்கிறேன். பொதுவாக மனிதர்களைக் குறித்ததான வாக்கியப்பிரயோகம் இது. என் தந்தைக்கும்கூட இது பொருந்தும். ஆனபோதிலும், அந்த வார்த்தை உங்களைக் காயப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். எனக்கு எந்த வக்கிரவெறியும் இல்லை. சொல்வதை, சொல்லப்படும் “context”ல் பார்க்கப் பழகலாமே!
ரிஷி,
நீங்கள் சுட்டிக்காட்டும் அனைத்து நடவடிக்கையும், தேவர் குரு பூஜைக்கு தேவர் சாதியினர் செய்வதுதான். கூடுதலாக, வழியுலுள்ள சேரிகளின் மீது தாக்குதலும் நடக்கும்.
தேவர் சாதியினர் செய்வது தவறாக தெரியாதபோது – அவர்களை வழி நடத்துபவர்கள் //தலைவர் எனும்போர்வையில் சில வெறி பிடித்த ரவுடிகள்// ஆக தெரியாத போது, இமானுவல் சேகரன், தலித் மக்கள் என்றதும், //அனைத்து தரப்பினரும் புருவம் உயர்த்தி வியக்குமளவிற்கு ஒழுங்கைப் பேணிக்காப்பதை // எதிர்பார்க்கும் உங்கள் உளவியளை கேள்விக்கு உள்ளாக்குவது நல்லது. – நட்புடன் நோக்கன்.
நோக்கன்,
என்னுடைய 5.1.1 படித்துக்கொள்ளுங்கள். தேவர் சாதியினர் செய்வது சரி என வாதிடவில்லை. //தலைவர் எனும்போர்வையில் சில வெறி பிடித்த ரவுடிகள்// என்று சொல்லியிருக்கும் கருத்தில் முன்குறிப்பிட்டிருக்கிறேன், இது அனைத்துக் குழுக்களுக்கும் பொருந்தும் என. தேவர் சாதியைச் சேர்ந்தவர்களும் இது போன்ற செயல்களில் ஈடுபடும்போது அவர்களை வழிநடத்துவோருக்கும் இக்கருத்து பொருந்தும்.
//என்னுடைய 5.1.1 படித்துக்கொள்ளுங்கள். தேவர் சாதியினர் செய்வது சரி என வாதிடவில்லை. //தலைவர் எனும்போர்வையில் சில வெறி பிடித்த ரவுடிகள்// என்று சொல்லியிருக்கும் கருத்தில் முன்குறிப்பிட்டிருக்கிறேன், இது அனைத்துக் குழுக்களுக்கும் பொருந்தும் என. தேவர் சாதியைச் சேர்ந்தவர்களும் இது போன்ற செயல்களில் ஈடுபடும்போது அவர்களை வழிநடத்துவோருக்கும் இக்கருத்து பொருந்தும்.//
உங்களோட 5.1.1யை படித்தேன். நீங்கள் கட்டுரையையோ அல்லது பரமக்குடியில் என்ன நடந்துள்ளது என்பதை செய்தித்தாள்களிலோ படித்தீர்களா?
அங்கு சாதிவிழா கொண்டாடும் எல்லா சாதியினர் மீதும் ‘பொதுப்படையாக’ துப்பாக்கிச்சுடு நடக்க வில்லை. அப்படி நடந்திருதால் உங்க ‘அட்வைஸ்’ குறித்து யோசிக்கலாம். ஆனால் நடந்துள்ளதோ தேவர் சாதி வெறியுடன் கூட்டணியமைத்துள்ள பாப்பாத்தி ஜெயாவின் திட்டமிட்ட தலித் வெறுப்பு படுகொலை. இதில் உங்களது கடமை அட்வைஸ் செய்வதுடன் அதுவும் பொதுவா விழாக் கொண்டாட்டத்தில் டிசிப்ளீன் என்பதுடன். அதுவும் குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும், நின்று கொள்ளும் எனில் அதை சந்தேகப்படவும், கிண்டலடித்து சுட்டிக் காட்டவும் எங்களுக்கு சகல வாய்ப்பும் உளளதை அறியத் தருகிறேன்.
ரிஷி
neenga vasama matikitinga
thayavuseidu unmaya oothukoonga
தேவர் சாதியினர் செய்வதையும் சேர்த்துதான் சொல்கிறோம்…
நான் ஒரு சப்பாத்தி என்று அட்டைகள் மன்றத்தில் ஒரு முதல்வரே சொல்லும் போது காலம் காலமாய் அடிமை படுத்தப்பட்ட கூட்டம் என்ன நாங்கள் ஒரு உப்புமா என்றா சொல்லும்
உங்களது பெயரை ‘சண்டாளன்’ என்று உரக்க கூறும் உம் சிந்தனை, ‘பாப்பாத்தியை’ சப்பாத்தி என்று சொல்லவைப்பதன் அர்த்தம் என்ன? அடிமைத் தனம் வெளியில் இருந்து மட்டும் அல்ல, உம்முள்ளும் இருக்கிறது.
ஒரு சப்பாத்தி சில நாட்களுக்கு முன்பு அட்டைகள் மன்றத்தில் நான் ரொம்ப புத்திசாலி. நான் ஒவ்வொரு வெடியையும் பார்த்து பார்த்துதான் வெடிப்பேன் என்று சொன்னது எவ்வளவு உண்மை
தலித்துக்களில் உள்ள பிழைப்புவாதிகள் பணம் வந்தவுடன் கருப்பு பார்ப்பனராக அல்லது புதிய பார்ப்பனராக மாறி விடுகின்றனர். அதனால்தான் தமிழரசன், கிருழ்ணசாமி முதலானோர் ஜெஜெக்கு வக்காலத்து வாங்குகின்றனர்.
தலித்துக்கள் பிழைப்புவாத ஓட்டுக் கட்சிகளில் இருந்து வெளியேறி, புரட்சிகர அமைப்புகளில் சேர வேண்டு.
ஆதவன்
பணம் வந்த உடன் அத்தனை தலித்தும் பிழைப்பு வாதியாக தான் மாறுகிறான்.. எங்கே ஒரு தலித்துக்கு உதவி செய்யக்கூடிய முன்னேறிய பணக்கார தலித் ஒருத்தனாவது காட்டு… தலித்கள் பெரும்பாலும் மற்ற சாதியினரின் உதவியை தான் பெற கூடியவர்களாக இருக்கிறார்கள்…
தலித் எனும் அடையாளத்தை வைத்து ஒட்டு வாங்கி அல்லது காலேஜ் சீட்டு வங்கி முன்னேறிய தலித், தன் முன்னேற்றத்துக்கு பின் மதம் மாறி தன் தலித் அடையாளத்தை துடைத்தெரிய முனைகிறானே ஒழிய, இன்னொரு தலித்தை முன்னேற்ற தன் வருமானத்தில் ஒரு சதவீதம் செலவு செய்வோம் என்று இருந்த்தது கிடையாது…
சரியான கருத்து. அப்படி தலித் செய்து இருந்தால் இன்னெரம் எல்ல தலித்தும் முன்னுக்கு வந்திருப்பர்.
மேலே, காவல்துறையில் வேலைப்பார்க்கும் தலித்துக்கள் நாயா?என்றுக் கேள்விக்கேட்டீர்கள்.பணம் வந்த உடன் அத்தனை தலித்தும் பிழைப்பு வாதியாக தான் மாறுகிறான்.என்று தாங்களே கூறுகீறீர்கள்.அப்படிப் பார்த்தால் காவல்துறையில் வேலைப்பார்க்கும் தலித்துக்கள் மட்டும் பிழைப்பு வாதியாக(நாயா)மாறாமல் இருப்பார்கள் என்று தாங்கள் நம்புவது எப்படி நாயம்.உங்கள் கேள்வியும், உங்கள் பதிலுமே முரண்பாடாக இல்லையா?
அவன் உம்மை பார்த்துதான் ஓடுகிறான் எப்படியென்றால் அவன் பணம் கல்வி அடைந்து உயர்ந்த பின்பும் அவன் மீது சாதிய துவேசத்தை வேறு வழிகளில் காண்பிக்கிறீர்கள் தாக்கு பிடிக்க முடியாத மரியாதையில்லா அந்தநிலையை விட்டு அடுத்த கட்ட்த்திற்கு போக முயற்சிக்கிறார்கள் பலர். ஆனால் சிலர் மட்டும் உம்மை போன்றோரின் துவேசத்தையும் மீறி தாழ்த்தபட்ட்வர்களுக்காக உழைத்து கொண்டுதான் இருக்கிறார்கள். எனவே சாதி இந்துக்கள் அவர்களை இந்துக்களாக முழுமையாக ஏற்று கொள்ளும் வரை சலுகையும் இருக்கும் இது போன்ற் சாதிய துவேசமும் இருக்கும். மனிதனாக மாறுஙகள். தாழ்த்தபட்டவனுக்கு தான் இந்து மதத்தை பற்றி முழுமையாக புரியவில்லை. உண்மையாகவே அவர்கள் கடவுளின் முரட்டு குழந்தைகள்.
nethaji please change your name…thank you
தயவு செய்து நீங்கள் மதம் மாற வேண்டும்!!! போதுமா?
ரிஷி
\\அனைத்து தரப்பினரும் புருவம் உயர்த்தி வியக்குமளவிற்கு ஒழுங்கைப் பேணிக்காப்பதை விட்டுவிட்டு தலைவர் எனும்போர்வையில் சில வெறி பிடித்த ரவுடிகளின் கைப்பாவைகளாக ஆகி இப்படி உயிர் விடுவதேன்??????//
யார் சார் ரவுடி? சாதி வெறிப்பிடித்து முதுக்குளத்தூர் கலவரத்தை தூண்டிவிட்டவரா?இல்லை மேலவலவில் தலித்தின் தலையை வெட்டியவர்களா? இல்லை கீழ்வெண்மனியின் தீயிட்டு கொளித்தியவர்களா?இல்லை அதற்கு எதிர்வினையாக தன் உயிரையும்,உடைமையும் தற்காத்துக்கொள்ள போராடியவர்களா?
பொதுபடையாக பேசும் ஆண்மைத்தனமானவர்கள் சாதியை கடந்து திருமணம் செய்வதோ,சாதிக்கு எதிராக போராடுபவர்களாக இருப்பவர்களாகவோ இருந்தால் தான் பேசவேண்டும்.
சாதி வெறிப்பிடித்து முதுக்குளத்தூர் கலவரத்தை தூண்டிவிட்டவர் யார்?
மேலவலவில் தலித்தின் தலையை வெட்டியவர்கள் யார்?
கீழ்வெண்மனியின் தீயிட்டு கொளித்தியவர்கள் யார்?
அது யாராக இருந்தாலும் அவர்கள் ரவுடிகளே!
சக மனிதனின் உரிமைகளைப் பறித்து அவனை ஒடுக்குபவன் எவனாயிருந்தாலும் அவன் ரவுடியே!
//பொதுபடையாக பேசும் ஆண்மைத்தனமானவர்கள் சாதியை கடந்து திருமணம் செய்வதோ,சாதிக்கு எதிராக போராடுபவர்களாக இருப்பவர்களாகவோ இருந்தால் தான் பேசவேண்டும்.//
அடுத்தமுறை பேசும்போது, கருத்துக்களைத் தெரிவிப்பதற்கான தகுதிகள் என்னென்ன என்று மீரா அவர்களிடம் கேட்டறிந்தபின் தெரிவிக்கவேண்டுமா? 🙂
“சாதியே ஒழியவேண்டும்; என்னுடன் போராட்டத்தில் இணைந்து கொள்” என்று மீரா அழைப்பு விடுத்தால் இணையத் தயார். “மேல்சாதிவர்க்கம் மட்டும் ஆட்டம் போடலாமா.. தலித்துகளும் ஆட்டம் போடணும்” என்று சாதிவெறியை ஊக்குவிக்கும் விதமாக மீரா பேசினால்.. ஐ யாம் ஸாரி.. இந்த ஆட்டத்துக்கு நான் வரலை.
//சாதி வெறிப்பிடித்து முதுக்குளத்தூர் கலவரத்தை தூண்டிவிட்டவர் யார்?
மேலவலவில் தலித்தின் தலையை வெட்டியவர்கள் யார்?
கீழ்வெண்மனியின் தீயிட்டு கொளித்தியவர்கள் யார்?
அது யாராக இருந்தாலும் அவர்கள் ரவுடிகளே!
சக மனிதனின் உரிமைகளைப் பறித்து அவனை ஒடுக்குபவன் எவனாயிருந்தாலும் அவன் ரவுடியே!//
அதெல்லாம் சரிதான் ஆனா இங்கெல்லாமே போலீசு தாழ்த்தப்பட்டவர்கள் மீதுதான் அதாவது பாதிக்கப்பட்டவர்கள் மீதுதான் தாக்குதல் தொடுத்தது. பரமக்குடியில் செய்தது போலவே. போலீசு, அரசு, ஆளும் வர்க்கத்தின் இந்த தலித் வெறுப்பை அம்பலப்படுத்தித்தான் கட்டுரை உள்ளது. கட்டுரை உங்களுக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன். சிரமப்படாமல் ஒன்னுக்கு ரெண்டு முறை வாசித்துவிடுங்கள்.
மனிதனுக்கு மனிதன் சமத்துவம் இல்லாத இந்த நேர்மையற்ற நாட்டில் வாழ்வதே வெட்ககேடு !!! மீரா!!
மேலும் பள்ளர்களை எவ்வாறு தலித் என்று கூறலாம் என்று பள்ளர்களே வினவுகிறார்களே,this is very worst concept,all the community people thinking we are separately liberated from all the problem.the sc / st leaders are dividing the people separetaly (pallar or mallar of devendira kula vallar and paraiyar and sakkaliyar or arandathiyar & st so manies caste ) .this is very usefull to govt and prahmins.
ஜான்பான்டியன் என்ன தியாகியா?
கட்டுரையை படித்துவிட்டு கமெண்டு போடுமாறு வேண்டுகிறேன்.
avanum krishnasamy yai pol iru porukki thaan..
athai vittuththallungko..
ingka etha pesuromo athukku pathil sollungo ..
//உங்களுக்காக புரட்சிகர அமைப்புகள் காத்திருக்கின்றன//
நடத்துங்க தலைவா !!!!
Nadathuvom Thalaiva!
ஆதிக்க சாதியினரை எதிர்க்கும் அதே நேரத்தில் இவ்வாறு எஸ்சியினருக்கு ஆதரவாகவும் மேலும் தூந்டுவதாகவும் வினவில் எழுதுவது கண்டிக்கத்தக்கது…
// ஆதிக்க சாதிக்கும்பல்கள் ஆடாத ஆட்டங்களெல்லாம் ஆடுகையில் அவர்களோடு சேர்ந்து கொண்டு, போதையில் மிதக்கும் போலீசு, தலித்துகள் உணர்வுபூர்வமாக ஏதேனும் செய்தால் கீச்சாதிப்பயலுக்கு திமிரப்பாருடா எனக் குமுறுகிறது//
– தேவர் சாதியினர் செய்தால் அது “ஆடாத ஆட்டம்”.. ஆனால் இவர்கள் செய்வது மட்டும் “உணர்வுப்பூர்வமா”?
உணர்வு பூர்வமாக செல்பவன் தான் லாரிகளிலும் வேண்களிலும் கார்களிலும் தெருவெங்கும் ஊளையிட்டு கொண்டு போவானா?? இவர்களது உணர்வுப்பூர்வ ஆட்டங்களால் எத்தனை அப்பாவிகளின்/ அந்த இடத்தில் வசிப்பவர்களின் அன்றாட வாழ்வு பாதிக்கிறது?
//போலீசில் வேலை பார்க்கும் தலித்துகளும், ஓட்டுக்கட்சிகளில் இருக்கும் தலித்துகளும் உணரவேண்டும்//
சாதுரியமான, கமுக்கமான சாதி வெறி தூண்டல்… இது நாள் வரை வினவு நடுநிலையாக இருக்குமென நினைத்திருந்தேன்.. அது தவறு என்று புரிகிறது…
///
“இவெங்களும் ஆட்டம் அதிகமாகத்தான போட்ராங்க” என்கிற, ஆதிக்க சாதிப்பார்வையில் ஊறிக்கிடக்கும் ‘மக்களும்’ இதைக்கலவரம் என்றே நம்புவார்கள்
///
இவங்க மட்டும் தான் ஆட்டம் போடுறாங்கணு மக்கள் நினைகளையே.. இவங்களும் ஆட்டம் போடுறாங்க-னு தான் நினைக்கிறாங்க.. இதுல தேவர் சாதியினரும் ஆட்டம் போடுகிறார்கள் என்று தான் பொருள்..
போலீஸ் குவிப்பு, கலவரம், தடியடி, துப்பாக்கி சூடு, 144 தடை உத்தரவு.. இதெல்லாம் தேவையா.. எல்லாம் இரு சாததியினராலும் தானே..
என் கோபம் எல்லா தேவர் மற்றும் எஸ்ஸி சாதியினர் மேல் அல்ல.. இப்படி கூட்டங்களுக்கும் கலவாரங்களுக்கும் காரணமானவர்கள் நாயினும் கீழ்குணம் கொண்டவர்களே அன்றி வேறென்ன சொல்வது…
தியாகி இம்மாணுவெல் சேகரன் மற்றும் முத்துறாமலிங்க தேவர் பற்றி நானும் கேள்வி பட்டிருக்கிறேன்.. அவர்கள் பெயருக்கு பெருமை சேர்ப்பதாக சொல்லி வருடா வருடம் இவர்கள் செய்யும் செயல்களால் அவர்கள் பெயருக்கு அசிங்கம் மட்டுமே மிஞ்சுகிறது.. இது வருத்தப்பட வேண்டிய விஷயம்.
இப்படி சொல்வதை வைத்து நான் தேவர் சாதி என்றும் அல்லது anti-SC என்றும் நினைக்க வேண்டாம்.. இந்த இரு தரப்பு வியாதிகளாலும் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர்-11 அன்றும் அக்டோபர்-30 அன்றும் இவ்வாறு கடுமையாக பாதிக்கப்படும் பரமக்குடியில் வாழும் சராசரி மக்களில் ஒருவன் !!
உண்மை..
//- தேவர் சாதியினர் செய்தால் அது “ஆடாத ஆட்டம்”.. ஆனால் இவர்கள் செய்வது மட்டும் “உணர்வுப்பூர்வமா”?// இத பேசுவதற்கு உனக்கு ஒரேயொரு விசயத்தை செய்தால் மட்டுமே யோக்யதை உண்டு. அது ஆடாத ஆட்டமாடும் தேவர் சாதி வெறியர்கள் மீது துப்பாக்கிச்சுடு நடத்தி அவர்களின் கோட்டத்தை அடக்கிவிட்டு அப்புறமா இதைப் பேசலாம். செய்வியா? முதலில் தேவர் சாதி வெறியர்களை ஒடுக்க குரல் கொடுப்பியா அந்த திமிர் உனக்கு இருககா? இல்லாம ஏன் சும்மா கூவுற?
அறிவாளி அசுரரே, உங்கள் பெயரை போலவே உங்கள் பேச்சிலும் அசுர திமிர் இருக்கிறது.. ஆனால் அந்த வீணா போன வெட்டி திமிர் எனக்கு வேண்டாம்..
உங்களை போலவே நான் தேவர் சாதி வன்முறைகளையும் சேர்த்தே சாடினேன்..
ஆனால், அந்த ஆதிக்க சாதியரின் ஆட்டங்களை அடக்க நீங்கள் செய்யும் / சொல்லும் எதிர் வன்முறை சரியான வழி அல்ல…
நீங்கள் பிறப்பால் சிறுபான்மையெனமாக இருக்கலாம்.. ஆனால் சிறிய அளவு கூட மூளை இல்லாதவர் போல செய்ய வேண்டாம்..
இந்த சாதி வெறி, திமிர் எல்லத்ம் ஓரங்காட்டி விட்டு சமூகத்துல அறிவாதாரத்திலும் பொருளாதாரத்திலும் முன்னேறு.. அப்புறம் ஆதிக்க சாதியரை எளிதா எதிர்க்கலாம்… போய் புள்ள குட்டிய படிக்க வையிங்க…
அதை விட்டுட்டு இப்படி அரக்கத்த்னமா அடிக்கிட்டு சாகாதீங்க… அடுத்தவங்களையும் அப்பாவிகளையும் சாகடிக்காததேங்க.. இது அசுரதனமே அன்றி அறிவாளிதனம் அல்ல..
கடைசியாக,
ஏண்டா.. ஆன்லயன்ல எழுதுறதால இப்படி மரியாதை குறைவா எழுத்துரத்துக்கு உனக்கு ஆண்மை தேவை இல்ல… உன் கோபத்தை காமிக்க வேண்டிய இடத்துல, காமிக்க வேண்டிய விதத்திலே காமி.. நீ இங்க வந்து இப்படி கொந்தலிச்சாப்புழ ஒரு மண்ணும் / மயிரும் ஆகாது..
நீ சொன்ன மாதிரி, அந்த திமிர் இருந்தா எல்லாம் சரி ஆகும் பட்சத்தில், எவன் மேல உனக்கு இந்த சாதி வெறி இருக்கோ, அவனை நேர போய் அடி.. நாளைக்கே அடி.. ஏன் அக்டோபர்-30 அல்லது அடுத்த செப்டம்பர்-11 வரை வெய்ட் பண்ணனும்?? அதை விட்டு இப்படி மதத்தனமா ஊரை கெடுக்காதே…
//இந்த சாதி வெறி, திமிர் எல்லத்ம் ஓரங்காட்டி விட்டு சமூகத்துல அறிவாதாரத்திலும் பொருளாதாரத்திலும் முன்னேறு.. அப்புறம் ஆதிக்க சாதியரை எளிதா எதிர்க்கலாம்… போய் புள்ள குட்டிய படிக்க வையிங்க…//
ரொம்ப நியாயம் பேசுறிங்களே சார்.
அறிவாதாரத்திலும் பொருளாதாரத்திலும் தாழ்ந்தவர்கள் என்றால் சுட்டுக் கொன்று விடுவீர்களா?
புள்ள குட்டிங்க படிக்கலனா இங்க வாழ முடியாதா? வாழக் கூடாதா?
உங்க அறிவாளித்தனம், நியாயம், கரிசனம் எல்லாம் இவ்ளோ தானா?
உங்கள மாதிரியே நானும் படிக்கணும், சம்பாதிக்கணும்; அப்புறம் தான் உங்க கிட்ட நான் பேசணும், அப்புறம் தான் நான் என் உரிமைகளுக்காக போராடணும் என்று நீங்க நினைக்குறதும் பேசுறதும் என்ன வகையான ஜனநாயகம் சார்?
இரண்டையுமே (குரு பூஜைகள்) தடை செய்ய பொது மக்கள் போராடலாம் மற்றும் அரசு கவனத்திற்கு இதை எடுத்து சென்று தடை செய்ய வைக்கலாம் அல்லது நீதி மன்றத்தில் பொது வழக்கு தொடுத்து இதை போன்ற குரு பூஜைகளை தடை செய்ய முடியும். பல உயிர்களை காப்பாற்ற பிரசினைகளை தவிர்க்க முடியும். “கடுமையாக பாதிக்கப்படும் பரமக்குடியில் வாழும் சராசரி மக்களில் ஒருவன்?” செய்வீர்களா?????????????????????
சராசரி மக்களில் ஒருவரே, Eththanai Murai Thevar Saathiyin Saathiveriyai Itharkku Mun Kandithirukkeerkal. Itharkku Mun Eththanai Murai Aathikka Saathi Veriyarkalai nokki police thuppaakki neendullathu. konjam Sollungalen Parpom. Imanuvel Sekaranum thalaivar Avarai konra muthuramalingamum Thalaivar, Sabaash nalla manmketta Nadunilamai.
1 ) முதல்வர் கூறுகிறார் இன்று தேவரை பற்றி சுவரில் தவறாக எழுதியிருந்ததால் பழனி குமார் என்ற மாணவன் கொலை செய்யப்பட்டார். தவறாக இருந்தால் போலீஸ் அல்லவா புலன்விசாரணை நடத்த வேண்டும் . யாரென்று தெரியாமலே ஒரு மாணவனை வெட்டுவது முதல்வர் சட்டத்தில் சரியோ! கொலைக்காக இன்னும் யாரும் கைது செய்யப்பட வில்லை.
2 ) தேவர் குரு பூஜையின் போது காவல் துறை அனைத்து தலைவருக்கும் பாதுகாப்பு கொடுக்க முடிகிறது . ஒரே ஒரு ஜான் பாண்டியனுக்கு (இவர் மட்டுமல்ல அரசியலில் அனைவரும் அயோக்கியர்கள்தான் ) பாதுகாப்பு கொடுக்க முடியவில்லையா? விரும்பவில்லையா? இந்த நாட்டில் சாதி கொடுமை இன்னும் ஒழியவில்லை என்பதன் அடையாளம் 2011 ல் .
3 ) உயர் நீதி மன்றத்தில் காவல் நிலையம் கொளுத்தப்பட்ட போது கூட சுட உத்தரவு கொடுக்கவில்லை.
4 ) இலங்கை தமிழர்களுக்கு குரல் கொடுக்கும் இந்த தமிழ் இனம் இவர்களுக்கு கொடுக்காதது ஏன்?
5 ) பார்பனர்கள் போயி தேவர் நம்மை ஆள துடிக்கும் நிகழ்வாகவே இது என தெரிகிறது. இது தேவர் இனத்தவரின் திட்டமிட்ட சதி. இதன் பின்னணியில் தேவர் அரசியல்வாதிகள் (தி.மு.க மற்றும் அ.தி.மு.க.) உள்ளனர். அக்டோபரில் நடக்கும் தேவர் குரு பூஜையை நிறுத்தினால் உண்மை குற்றவாளிகளை அடையாளம் காணலாம்.
Manithanum, JP um Itharkku Pathil Solvaarkala???????
தமிழ் என்று பொது பெயரில் வரும் சாதி கடந்த தமிழரே//
ஜான்பாண்டியன் அவர்களைப்பற்றி பேசும் முன் உன் சாதி வெறி பிடித்த சமுகத்தின் அநீதியை ஒழித்துவிட்டு வா. சாதி ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலையினை கொன்றுக்கொண்டு இருக்கும் கோரமுகம்.
மனிதனுக்கு மனிதன் சமத்துவம் இல்லாத இந்த நாட்டில் வாழ்வதே வெட்ககேடு !!!
இதை யார் உணர்கிறார்களோ இல்லையோ, போலீசில் வேலை பார்க்கும் தலித்துகளும், ஓட்டுக்கட்சிகளில் இருக்கும் தலித்துகளும் உணரவேண்டும்.
ஜான் பாண்டியனும் தியாகி இல்லை…
இம்மானுவேல் சேகரனும் தியாகி இல்லை…
முத்துராமலிங்கமும் தியாகி இல்லை…
இவர்களில் யாரும் தெய்வமும் இல்லை… தெய்வமாக மனிதனை என்றுமே வணங்க கூடாது…
இந்த நாட்டில் மகாத்மா காந்திக்கே குரு பூஜை கிடையாது… பிறகு இந்த மனிதர்களுக்கு எதற்கு?
ஜான் பாண்டியன்.இம்மானுவேல்.முத்துராமலிங்கம் யாருமே தெயவம் இல்லை என்று கூறும் தாங்கள் மகாத்மா காந்திக்கே குரு பூஜை இல்லை என்றுக் கூறி வறுத்த படுகிறீர்கள்.மகாத்மா எந்த கடவுளின் அவதாரம்?.மேற்கண்ட முவராவது ஒரு குறிப்பிட்ட சமுகத்தை தவறான பாதைக்கு அழைத்து சென்றவர்கள்.ஆனால் காந்தியோ ஒட்டு மொத்த சமுகத்தையே சீரலித்தவர்.ஒரு பொம்மள பொருக்கிக்கு குருபூஜை கேக்கும் தாக்கல் எப்படியோ?அரிஜனம்னு பெயர் வைத்து தலித்துகளை சமுகத்தில் இருந்து ஒதிக்கியவர் காந்தீ…தீ…தீ…
காந்தியும் தியாகி இல்லை.. கடுவுள் இல்லை… என கடைசி வரியில் செதுகொல்லுகிறேன்.. போதுமா…
\\மேற்கண்ட முவராவது ஒரு குறிப்பிட்ட சமுகத்தை தவறான பாதைக்கு அழைத்து சென்றவர்கள்.\\
ஒரு சிறிய திருத்தம்.. அந்த மூவரில் ஜான் பாண்டியன், முத்துராமலிங்கம் ஆகியோர்தான் ஒரு குறிப்பிட்ட சமுகத்தை தவறான பாதைக்கு அழைத்து சென்றவர்கள்.. ஆனால் இம்மானுவேல் சேகரன் அப்படி இல்லை.. அவர் பேச்சு வார்த்தைகளில் தலித் மக்களுக்குத் தலைமை தாங்கியவர், ஒரு போராளி..
Iththanai Naal Muthuramalingathukku Kurupoosai Kondadi Kummiyadukkum Pothu Enga Paas Poneenga. NARI niyaam Pesuthudoi.
கோஷங்கள் வலுக்கத் தொடங்கி, கூட்டம் ஓரளவுக்கு கட்டுக்கடங்காத நிலைக்குப் போகத் தொடங்கவே, அண்ணா நகர் துணை கமிஷனர் செந்தில்வேலன் ஸ்பாட்டுக்கு வந்திறங்கினார். சாலை மறியலைக் கைவிடுமாறு கூறி, பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கினார்.
http://viruvirupu.com/2011/09/12/8591/
Neengathan Appo Avrpakkathula irunthu RUNNING COMMENT Kuduththeengalo, Please Se Junior Vikadan. Police already plan for this. Nallathan Yokkiya Vesam Podureenga, Keep it up.
செங்கொடி போன்ற தோழர்களின் இறப்பு ஏற்படுத்தாத கலகத்தை ஜான் பாண்டியனின் கைது ஏற்படுத்தியதுக்கு காரணம் என்ன?செங்கொடியும் தாழ்த்தப்பட்ட சமுகத்தை சார்ந்தவள் தானே.தங்கள் சமுகத்தை சேர்ந்த பெண் இறந்ததற்கு காரணமாக இருந்த ஆளும்வர்க்கத்தின் மீது ஏன் இந்த சமுகத்தினருக்கு கோபம் வரவில்லை.
கல்பனா …என்னமா பேசுர… செங்கொடி ஓரு ஏழைப்பெண்..மக்களுக்கு உதவ நினைத்தவள்….
ஜான் பாண்டியன்..தியாகி??? ஏழைகளின் வள்ளல்????
நமக்கு சுடசுட செய்திதான் முக்கியம்..
Time pass ஆக வேண்டாமா…
மரியம்பிச்சை செய்தால் ரவுடிதனம்,பாசிசம்…ஜாண் பாண்டியன் செய்தால் தலித் வன்கொடுமை…கம்யுனிசமா?
வினவு அவர்களே பாசிசம் என்றால் என்னவென்று சொல்ல முடியுமா?
https://www.vinavu.com/2011/05/28/rowdy-mariam-pichai/
P.S.. Plz reply to my email.. if u are going delete this comment…
Perukketha Maathirithan Pesureenga.. mariyapichai Enga Saathiveriyai Ethirthu Poraadinar. Seruppu Pottu Nadakka vidaama pona Vali Theriyuma Mr.KALNENCHAM.
கோபம் வருகிறது. அந்த கோபம் தான் இந்த ஏழு உயிரிழப்புக்கு காரணம். நேர்மையை தொலைத்த நாடு எப்படி போராடினாலும் நவீன அரசியவாதிகளை (விஞ்ஞான திருடர்களை ) ஜெயிப்பது மிகக் கடினமாக உள்ளது.
//கோபம் வருகிறது.அந்த கோபம் தான் இந்த ஏழு உயிரிழப்புக்கு காரணம்.//
அப்படி என்றால் சமுகப்பிரச்சனைக்காக தாழ்த்தப்பட்ட மக்கள் பழியாக்கப்படுவதைக்கண்டு குமறிக்கொண்டிருந்த அச்சமுகத்தினருக்கு தங்கள் கோபத்தை வெளிக்காட்டக்கிடைத்த தருணம்னு சொல்லுறீங்களா?
தாழ்த்தப்பட்ட மக்கள் சாணக்கியர்களாக இல்லை கல்பனா! தாழ்த்தப்பட்ட தலைகளுக்கே என்ன நிலையில் நாம் நிற்பது என்பது புரியவில்லை. அரசியல் வியூகம் அவர்களுக்கு புரியவில்லை. அவர்கள் சாணக்கியர்களாக மாற முயற்சிக்க வேண்டும்.
அப்பாவி உயிர்கள் இனியும் போக வேண்டாம்….
தலித் மக்களை ஒதுக்கி வைத்துவிட்டு பிற்பட்ட சாதியினரை மட்டும் தூக்கி விட்ட பெரியாரால் வந்த வினையில் இதுவும் ஒன்று!திராவிட அரசியல் பிற்பட்ட மக்களை தூக்கி விட்டதோடு மட்டும் நில்லாமல தலித் மக்களின் துன்பங்களை கண்டு கொல்லாமல் விட்டது ஜெயா மட்டுமல்ல பெரியார் அண்ணா கருணாநிதி எம் ஜி ஆர எல்லாருமே தலித் மக்களின் துன்பங்களை புரிந்து கொண்டவர்களே அல்ல!!
***********************************************************************************
தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்தினால் தாழ்த்தப்பட்டவர்கள் என்ன செய்ய
வேண்டும் என்று ஈவேரா கூறுகிறார் :-
‘‘உங்களை யாராவது கிராமவாசிகள் துன்புறுத்தினால், இழிவாய் நடத்தினால் எதிர்த்து நிற்க வேண்டும். முடியாவிட்டால் வேறு பட்டணங்களுக்குக் குடியேறிவிட வேண்டும். அங்கும் ஜீவனத்திற்கு மார்க்கமில்லாவிட்டால் இம்மாதிரியான கொடுமையான மதத்தை உதறித் தள்ளிவிட்டு சமத்துவமுள்ள மதத்திற்குப் போய்விட வேண்டும். அதுவும் முடியாவிட்டால் வெளிநாடுகளுக்காவது கூலிகளாய்ப் போய் உயிரையாவது விட வேண்டும். இம்மாதிரியான உறுதியான முறைகளைக் கையாளத் துணியவில்லையானால், உங்கள் மீது சுமத்தப்பட்ட இழிவு சுலபத்தில் ஒழியாது என்றே சொல்லுவேன்.’’ (குடியரசு 16-6-1929)
*****************************************************************************
அதாவது நான் உங்களுக்கு உதவுகிரேன்னு சொல்லவே இல்ல!!அவுங்களே போராடனுமாம் முடியலன்னா ஊற விட்டு ஒடுங்கடான்னு சொல்லாம சொல்றார்!!இதுதான் பெரியாரின் உண்மை முகம்!
நமக்கு உண்மை கசக்கிறது. ஒரு ஹீரோவோ இல்லை தலைவன் தலைவியோ விடுதலை தேடி தரமுடியாது நாமே தான் அதை செய்ய வேண்டும் என்று சொன்னால் தலித் விரோதி. யாரையாவது நம்பியே நாசமபோற நம் சிந்தனையை மாற்ற வேண்டும். நம் விடுதலையை நம் போராட்டத்தை நாம் ஒவ்வருவரும் கையில் எடுக்க வேண்டும்.
போற்றி பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே
AYYO புரட்சி தீ சீமான் எங்கே ? இளைய தளபதி …. தீபந்தம் எடுத்து தீண்டாமை கொளுத்து எங்கே ?
வேஷம் போடும் சீமான் எங்கே ? ஈழ தமிழர்களுக்கு மட்டுமே குரல் கொடுப்பாரோ! மற்றவர்கள் மனிதர்கள் இல்லையா?
துக்கம் அனுஷ்ட்டிப்பதை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது, அடுத்து விசாரணை கமிஷன், ஒன்றும் நடக்க போவதில்லை, குறைந்த பட்சம் சம்பந்தப்பட்ட காவலர்களை வேலையில் இருந்து கூட தூக்க போவதில்லை, இறந்தவர்களுக்கு 1 லட்சம் இழப்பீடு அவ்வளுதான், என்னதான் சொல்ல வர்றாங்க .? அடங்கு ….!
உங்களை மாதிரி ஆட்கள் கொம்பு சீவிவிடும் வேலையை நன்றாக செய்கிறீர்கள்.ஜான் பாண்டியன் போன்றவர் கைது முன்னெச்சரிக்கை நடவடிக்கை.செய்தியை போடும் போதே 7 பேர்கள் என்று சொல்லாமல்7 தலித்துகள் என்று எழுதும் போதே ஒரு முடிவோடு இருப்பது புரிகிறது. 50 வருட அரசியல் செய்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை கைது செய்த போது கூட இத்தனை பேர் சாகவில்லை. இது எதைக் காட்டுகிறது என்று உட்கார்ந்து யோசித்துப் பாருங்கள்.
காவல்துறையும் அரசும் இந்தப் படுகொலைகளை திசைமாற்றி சாதிப்பிரச்சினையை விசிறி விடத் துடிக்கிறது.
1999இல் மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டபோது திமுக அரசு வழிநடத்திய போலீஸ் ‘உசிலம்பட்டியைச் சேர்ந்த பாண்டியம்மாள் எனும் பெண்காவலரை பாலியல் ரீதியாக அத்துமீற கூட்டத்தினர் முயற்சித்ததால் தாக்குதல் நடத்தினோம்’ எனச் சொன்னது.
நேற்று மதுரையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் ‘பாண்டியம்மாள் என்ற பெண்காவலர் தாக்கப்பட்டதால் தடியடியும் துப்பாக்கிச் சூடும் ‘ நடத்தபப்ட்டது என்கிறது.
பாண்டியம்மாள் + உசிலம்பட்டி …தமிழன் பொதுப் புத்திக்கு க்ளூ கொடுக்கும் வேலையை ஆளும் வர்க்கம் செய்து..இன்ன சாதிக்கார போலீசை அதுவும் பொம்பள போலீசை கைவச்சிருக்கானுக..பிறகு போலீசு சுடாம என்ன பண்ணும்?…இதை அனைத்து டீக்கடைகளிலும் பேச வைக்க அரசு முயல்கிறது..
தலித் மக்கள் மீதான ஒவ்வொரு தாக்குதலுக்கும் பாண்டியம்மாள்களைப் பிரசவிக்கும் அதிகார வர்க்கத்தின் அயோக்கியத்தனத்தை ஒழித்துக்கட்ட வேண்டும்..
பூலித் தேவன் பிறந்த நாளை, சசிகலாவின் கணவன் நடராஜன் அரசு பாதுகாப்புடன் கொண்டாடுவான். தலித்களின் தலைவரான இமானுவேல் சேகரனின் பிறந்தநாளுக்கு தலைமையேற்க எங்கள் தலைவர் ஜான் பாண்டியன் வந்தால் அரசு அவரைக் கைது செய்வது ஏன்?
இந்த் கேள்விக்கு பதில் மேலே உள்ளக் கட்டுரையில் உள்ளது.கட்டுரையை மீண்டும் ஒருமுறை படிக்கவும்.
////இப்படி அடித்துக்கொண்டிரும்போது டி.எஸ்.பி கீழே விழுகிறார். இனி அடிவாங்கியவர்களின் முறை ஆரம்பிக்கிறது. நையப்புடைக்கப்பட்ட அவரை போலீசு காப்பாற்றிக் கூட்டிச் செல்கிறது. தன்னுடைய நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற நேரம் குறிக்கிறது. கடுமையான தாக்குதலுக்குள்ளான மக்கள் தங்களின் ஆத்திரத்தை அங்கிருந்த வஜ்ரா வாகனத்தை எரித்ததின் மூலம் தணித்துக் கொள்ள முயன்றனர். உணர்ச்சி வசப்பட்டிருந்த மக்கள் கூட்டத்தை தடுத்து நிறுத்த அங்கே போலீசு இல்லை. உணர்ச்சி வசப்படும் அவர்கள் ஏதேனும் செய்ய வேண்டும் என்றே அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்ததால் சற்றுத் தூரமாக இருந்த போலீஸ் ஸ்டேசனுக்கே போலீசுக் கும்பல் போய்விட்டிருந்தது. அதாவது தாங்கள் துப்பாக்கி சூடு நடத்துவதற்கு ஒரு முகாந்திரம் வேண்டுமென்றே அவர்கள் சாதுர்யமாக முதலில் ஒதுங்கி இருக்கிறார்கள்./////
ஜூவிகடன் பாணியில் வெறும் யூகங்கள் இவை. உண்மை என்று எப்படி எடுத்துக்கொள்வது. ஆதாரமில்லாத யூகங்கள். ஏன் இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க ? ஜூவிக்கும் உங்களுக்கும் அப்ப என்ன வித்தியாசம் ?
மற்றபடி, துப்பாக்கி சூடு தவரிக்கபட்டீருக்க வேண்டும். தமிழகத்தில் இது போல் இனி நடக்காது என்று கருதியது தவறாகிவிட்டது.
ஜான் பாண்டியன் பல ஆண்டுகள் சிறையில் இருக்க காரணம் பற்று எழுதுங்களேன். கோவையை சேர்ந்த விவேகானந்தன் என்பவரை கூலிப்படை மூலம் கொலை செய்த குற்றத்திற்க்காகத்தான் சிறை. மாஃபிய போல் பணம் வாங்கி கொண்டு செய்த கொலை. இவருக்கு ‘ஆதாரவு’ தெரிவிப்பவர்கள் மீது போலிஸார் வன்மம் கொண்டும் செயல்ப்பட்டிருக்கலாம். நடந்தது என்ன என்று முழுசா அறிய சில நாட்கள் ஆகும்.அவசரப்பட வேண்டாம்.
1.Athiyamaan please read Joo.Vee, police already prpared with stones for this. Verum Yookangal Alla.
2. John Pandian Periya thalaivara illaiya enpathu irukkattum, Imanuelukku ninavanchali sellutha avarai ean thadukka vendum./ Muthuramalingathukku anchali selluthum thevar saathi veriyarkal ellurum yokkiyavaankala? avarkal ethanai murai ippadi thadukkapaattirukkiraarka?
///உணர்ச்சி வசப்படும் அவர்கள் ஏதேனும் செய்ய வேண்டும் என்றே அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்ததால் சற்றுத் தூரமாக இருந்த போலீஸ் ஸ்டேசனுக்கே போலீசுக் கும்பல் போய்விட்டிருந்தது. அதாவது தாங்கள் துப்பாக்கி சூடு நடத்துவதற்கு ஒரு முகாந்திரம் வேண்டுமென்றே அவர்கள் சாதுர்யமாக முதலில் ஒதுங்கி இருக்கிறார்கள்.///
இதைதான் ஆதரமில்லாத யூகம் என்றேன். போலிஸார் திட்டமிட்டும் அப்படி செய்தார்கள் என்று என்ன அடிப்படையில் சொல்கிறார் ? போலிஸாரின் மனதிற்க்குள் புகுந்து, அவர்களின் ‘திட்டங்களை’, ’நோக்கங்களை’ படிக்கும் அளவுக்கு இக்கட்டுரையாளர் என்ன பெரிய மந்திரவாதியா ?
மந்திரவாதி இல்ல ஓய். அவருக்கு சொந்த ஊரே அதாம்லே. எல்லா அதிகாரிகளும் மாமன் மச்சாம்லே. இப்போ வெளங்குதா. வினவு என்ன ஒன்ன மாதிரி ஜோசியம் பாத்து எழுதுறவருன்னு நெனச்சியாலே.
// John Pandian Periya thalaivara illaiya enpathu irukkattum, Imanuelukku ninavanchali sellutha avarai ean thadukka vendum./ Muthuramalingathukku anchali selluthum thevar saathi veriyarkal ellurum yokkiyavaankala? avarkal ethanai murai ippadi thadukkapaattirukkiraarka?//
இதை பற்றி எனது two cents :
1. இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவு நாளை, சிறு கூட்டங்களாக (100 பேர்களுக்குள்)பரவலாக தமிழகம் எங்கும் தலித்துகள் மற்றும் இதர லிபரல்வாதிகள் நடத்தலாம். முக்கியமாக வெளியூர் செல்லாமல், தங்கள் வாழும் பகுதியில் மட்டும் சிறு கூட்டங்கள் நடத்தலாம். பரமகுடிக்கு வெளியூர் மக்கள் செல்ல தேவையில்லை.
2. அக்கூட்டங்களில் இமானுவேல் சேகரன் மற்றும் அம்பேத்காரின் சிந்தனைகளை பற்றி பேசலாம். நாடகங்கள், பாடல்கள் நிகழ்த்தலாம். கடவுள் நம்பிக்கை உடையவர்கள் அமைதியான முறையில் கூட்டு பிராத்தனை செய்யலாம்.
3. முத்துராமலிங்க தேவர் பற்றி தலித்துகள் பேசுவதை, விமர்சிப்பதை, எழுதுவதை முற்றாக சில ஆண்டுகள் தவிர்க்கலாம். அது முடிந்து போன் விசியம். தேவர் சாதியினருக்கு அவர் கடவுள் போல் இன்று கட்டமைக்கப்பட்டுள்ளார். அவரை ‘இழிவு’ செய்தனர் என்று வெகுண்டு எழுந்து, முட்டாளதனமாக, காட்டுமிராண்டித்தனமாக ஒரு 16 வயது சிறுவனை வெட்டி கொல்லும் கொடூரர்கள் நிறைந்த கூட்டம் அது. எனவே தேவரை பற்றி வெளிப்படையாக பேசவே வேண்டாம். எதிர்காலத்தில் செய்ய வேண்டிய பாஸிட்டாவன விசியங்களை மட்டும் பேசலாம்.
4. தேவர் குரு பூஜை அன்று வெளியே செல்லாமல், வீடுகளில் இருப்பது நலம். தேவர் குரு பூஜை நிகழ்வுகளை தடுப்பது சாத்தியமல்ல. அன்று அவர்கள் வண்டிகளில் கோசம் இட்டு, வெறு பிடித்த முறையில் அலைவார்கள் தாம். விலகிச் செல்வதே விவேகம்.
நான் சொல்வது கோழைத்தனமாக அல்லது சுயமரியாதைக்கு இழுக்காக தோன்றலாம். ஆனால் இதை விட்டால், அமைதியாக முன்னேற வேறு வழி இப்போதைக்கு இல்லை. இன்னும் ஒரு 60 ஆண்டுகள் கழித்து, ஒரு புதிய தலைமுறை உருவானால், நல்ல மாற்றம் சாத்தியம்.
அப்படியும் முடியலையா ? தூக்கு போட்டு சாகலாம் …… இதை சொல்லாமல் விட்டுடிங்க K.R.அதியமான் .
ஒருவன் அடக்கு முறை செய்யும் போது அதை எதிர்க்காமல் ஒதுங்கி கொள்வது எந்த வகை நியாயம் .
தலித் மக்கள் ஒரு சாதியாக இணைத்திருப்பது இப்போதைக்கு ஒரு சில நன்மை கொடுக்கலாம்
ஆனால் அது நிரதரமாக நீடித்தால் அவர்களும் ஒரு தேவர் சாதி வெறியர்கள் போலதான் மாறுவார்கள் .
நம் முன்னே இருப்பது இரண்டு பிரச்சினை தான் ஒன்று பொருளாதாரம் . இரண்டு அதை அடையும் வழி
இதில் ஜாதியும் இல்லை மதமும் இல்லை . எல்லோரும்க்கும் இது பொருந்தும் .
( அப்புறம் அதியமான் அவர்களே வெளிய எவனாவது உங்க குடும்ப சொந்தகளை மானபங்க படுத்தவோ . அல்லது கொலை செய்வவோ வந்தால் அப்படியே விட்டுடுங்க ஒரு 60 வருஷம் கழிந்தால் எல்லாம் சரி ஆகும் . வாழ்க இந்து பாசிசம் )
tamil,
நீ யார் என்று தெரிகிறது. யாருயா இந்து ஃபாசிஸ்ட் ? அறிவுகெட்டதனமான பே