privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்புதுவை ஹிந்துஸ்தான் யூனிலீவர் அடக்குமுறைக்கு எதிராக தொழிலாளிகளின் போராட்டம்!

புதுவை ஹிந்துஸ்தான் யூனிலீவர் அடக்குமுறைக்கு எதிராக தொழிலாளிகளின் போராட்டம்!

-

முதலாளிகளை சந்தையில் ஃபிரீயாக தொழில் முனைய விடும்போது அவர்களிடம் உருவாகும் திறமை மற்றும் போட்டியின் காரணமாக பொருட்களின் விலை தாழ்ந்து அது நுகர்வோருக்கு பலனளிக்கும் என்பது சுதந்திர சந்தையை ஆதரிக்கும் பொருளாதாரப் புலிகளின் கருத்து. ஆனால் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் ஆகிய மயங்கள் அமுல்படுத்தப்பட்ட இந்த 20 ஆண்டுகளில் விலைவாசி பன்மடங்கு உயர்ந்திருக்கின்றதே அன்றி குறையவில்லை என்பதுதான் உலக மக்களின் அனுபவம். மேலும் தொழிலாளர்களின் உழைப்பை எவ்விதத்திலெல்லாம் சுரண்டலாம் என்பதில்தான் முதலாளிகளின் திறமையும் உள்ளது.

இவ்விலைவாசி உயர்வின் நீட்சியாக ஆலைத் தொழிலாளிகள் தங்களுக்கு ஏற்படும் பொருளாதாரப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்துகொள்ள முதலாளிகளுக்கு எதிராக ஊதிய உயர்வு கோரி போராட ஆரம்பிக்கின்றனர். தொழிலாளர்களின் இந்த நியாயமான போராட்டத்தை ஒடுக்க அப்போராட்டங்களுக்கு எதிராக சதிசெய்வது, அச்சுறுத்துவது, மற்றும் தொழிலாளர்களை சாதி ரீதியாக பிளவுபடுத்துவது போன்ற கீழ்த்தரமான வேலைகளை முதலாளிகள் செய்வதும், அதற்கு நமது அரசே உடந்தையாக இருப்பது என்பதும் நமது இந்திய வரலாற்றில் பதிந்த ஒன்றுதான். இதற்கு உள்நாட்டு, பன்னாட்டு முதலாளிகள் என்று விதிவிலக்கல்ல.

இந்திய நுகர்வுச் சந்தையில் 80 சதவீதத்தை வைத்திருக்கும் ஹிந்துஸ்தான் யுனி லீவர் நிறுவனத்தின் புதுச்சேரி கிளை (DETS) வடமங்கலத்தில் இயங்கி வருகின்றது. இந்நிறுவனம் 4 வருடங்களுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்குவதாக தொழிலாளர்ளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஆனால் இந்நிறுவனத்தின் வரலாற்றிலேயே அவ்வொப்பந்ததை முறையாக நடைமுறைப் படுத்தியதில்லை. புதிய ஊதிய உயர்வு நடைமுறை படுத்தப்பட வேண்டிய காலகட்டத்தில் நிர்வாகம் நோவு கோழி போன்று கண்ணை மூடிக்கொண்டு இருக்கும். இதற்கு எதிராக தொழிலாளர்களிடையே சலசலப்பு ஏற்பட்டு போராட்டம் ஆரம்பமாகும்போது நிர்வாகம் சில முன்னனியாளர்களை முடக்கச் செய்வதும் அச்சுறுத்துவதுமாக செய்து முறையான ஊதிய உயர்வினை அமுல்படுத்துவதை காலங்கடத்தும்.

இவ்வாறு காலங்கடத்துவதன் மூலம், தொழிலாளர்களை கோபமுறச் செய்து அதன் மூலம் தவறுகளை இழைக்க வைத்து நிர்வாகத்திற்குச் சாதகமான ஊதிய ஒப்பந்தத்தை 1 அல்லது 11/2 வருடங்கள் கழித்து நிறைவேற்றிக்கொள்ளும்.. இந்த இடைப்பட்ட காலத்திற்குண்டான ஊதியத்தை தொழிலாளர்களுக்கு நிர்வாகம் வழங்குவதில்லை. இதன் மூலம் தொழிலாளிகளின் உழைப்பைச் சுரண்டுவதே நிர்வாகத்தின் நோக்கம்.

2002-ம் ஆண்டு 18 மாதங்கள் கழித்தும் 2007-ல் 1 ஆண்டு கழித்தும் ஊதிய உயர்வை அறிவித்தது. இதனிடையில் 2002-ல் இருவரையும் 2007-ல் ஆறு தொழிலாளர்களையும் பணியிடை செய்தது. இக்காலகட்டங்களில் அந்நிறுவனத்தில் செயல்பட்டு வந்த வெல்ஸ் யூனியன் இதற்கு எதிராக போராட வழிதெரியாது புழுங்கிக் கொண்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாக புதுவையில் செயல்பட்டு வந்த புஜதொமுவின் போராட்டங்களை கண்டு கடந்த 2008-ல் ஒர்க்கர்ஸ் யூனியன் (புஜதொமு) என்ற சங்கத்தை நிறுவினர். ஆரம்பத்தில் ஒர்க்கர்ஸ் யூனியனை (புஜதொமு) அங்கீகரிக்காத நிர்வாகம் தொழிலாளர்கள் பெருமளவில் இணைந்ததை அடுத்து நமது சங்கத்தை அங்கீகரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனடிப்படையில் நிர்வாகம் ஒர்க்கர்ஸ் யூனியனை (புஜதொமு) அழைத்து 2011க்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையினை வெல்ஸ் யூனியனுடன் இணைத்து கடந்த 30-07-11 அன்று தொடங்கியது.

இம்முறையும் நிர்வாகமானது வரலாற்றில் தனக்கிருந்த தொழிலாள விரோத அனுபவத்தை செயல்படுத்தத் தொடங்கியது. முதலில் தொழிலாளர்களில் 4 பேருக்கு மெமோ கொடுத்தது. பின்பு ஒர்க்கர்ஸ் யூனியனில் (புஜதொமு) சங்க முன்னனியாளர்கள் ஐவரையும், வெல்ஸ் யூனியனில் இருவரையும் பணி நீக்கம் செய்தது. ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போது தொழிலாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும், பாதுகாக்கப்பட்ட தொழிலாளர்களான சங்க முண்ணனியாளர்களை தொழிலாளர் துறை ஆணையரின் மூலமாக விசாரணை நடத்தாமல் நடவடிக்கை எடுக்கக்கூடது என்றும் தொழிலாளர் நலச் சட்டம் 12(3) கூறுகிறது.

ஆனால் இந்துஸ்தான் யுனிலீவர் நிர்வாகம் இதனை மயிரளவிற்கும் மதிப்பதில்லை.  ஏழு தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ததன் மூலம் உள்ளிருப்புப் போராட்டம் நடக்கும், இதைச் சட்ட விரோதம் என காரணம் காண்பித்து சட்டத்தின் ஓட்டைகளில் புகுந்து விளையாட தீர்மானித்தது. ஆனால் புஜதொமு தனது வழிகாட்டுதலின் மூலம் அவ்வாறு நடவாமல் செய்து நிர்வாகத்தின் முகத்தில் கரியை பூசியது.

இதன் தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல திட்டமிட்டு அதனடிப்படையில் 23-12-11 மேட்டுப்பளையம் தொழிற்பேட்டையில் தொடங்கி பேரணியாக சென்று தொழிலாளர் ஆணையரிடம் மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் செய்வதென திட்டமிடப்பட்டது. ஆனால் காவல்துறையோ அனுமதி வழங்காமல் இழுத்தடிப்பு செய்து நிர்வாகத்திற்கு ஆதரவாக வேலை செய்தது. அனுமதி இல்லையெனில் தடையை மீறி அணிதிரண்டு பேரணி ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என தொழிலாளர்கள் தங்களது நிலைப்பாட்டை போர்க்குணத்துடன் தெரிவித்த பிறகு காவல்துறை இறங்கிவந்து பேரணி வேண்டாம் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ளுங்கள் என அனுமதி அளித்தது.

புதுவை வரலாற்றிலேயே முதல் முறையாக 600 தொழிலார்களுடன், நிர்வாகத்தின் அடாவடித்தனத்தைக் கண்டித்தும், அதற்கு துணைநிற்கும் அரசையும் அம்பலப்படுத்தும் விதமாக 23-12-11 அன்று தொழிலாளர் துறை ஆணையர் முன்பு தோழர் அய்யானார் தலைமையேற்க அதிரடியான முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் தொடங்கியது. இந்துஸ்தான் வெல்ஸ் சங்கத்தைச் சார்ந்த உறுப்பினர்களும், சங்கத் தலைவர் ஜோதிமணி மற்றும் பொருளாளர்கள் விநாயகம், புருசோத்தமன் ஆகியோர் நிர்வாகத்தினை அம்பலப்படுத்தும் விதமாகவும் பேசினர். புஜதொமு அலுவல செயலாளர் தோழர் லோகநாதன் நிர்வாகம் தொழிலாளர்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறது என்றும் 9 வருடங்களாக பஞ்சபடி மாற்றாமல் தருவதினை சுட்டிக்காட்டிப் பேசினார். மேலும் புஜதொமு பொதுசெயலாளர் தோழர் கலை ஆலை முதலாளிகளின் அடக்கு முறைக்கு எதிராக தொழிலாளி வர்க்கம் தனிதனியாக போராடினால் வெற்றிபெற முடியாது அனைத்து ஆலை தொழிலாளர்களும் ஒன்றிணைந்து போராடினால்தான் வெற்றி பெற முடியும் என வலியுறுத்தி பேசினார்.. பிறகு பேரணியாகச் சென்று தொழிலாள ஆணையரிடம் மனு கொடுக்கப்பட்டது. அதில் பணியிடை செய்யப்பட்ட 7 தொழிலாளர்களையும் மீண்டும் பணியமர்த்தவும், cod யினை விரைந்து முடிக்கவுமான கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் இந்துஸ்தான் தொழிலாளர்கள் அல்லாது கோத்ரெஜ், மெடிமிக்ஸ் பவர், லியோ பாஸ்ட்னர், யூகால், MRF, L&T சுஸ்லான் ஆலைத் தொழிலார்களும் கலந்துகொண்டனர். புதுவையில் மாற்றுத் தொழிற்சாலை தொழிலார்களையும் அணிதிரட்டிப் போராடியது இதுவே முதல்முறையாகும். செஞ்சட்டை செங்கொடி சூழ முழக்கமிட்ட ஆர்ப்பட்டத்தை பெருமளவு மக்கள் வியப்புடன் நோக்கினர். அருகிலிருந்த தொழிலாளர்கள் தங்களது வேலையை விடுத்து உரையை கவனத்துடன் கேட்டனர். தொழிலாளர்களுக்கு வர்க்க உணர்வூட்டி,, அவர்களிடம் முதலாளிகளின் இலாபவெறியையும், உழைப்புச் சுரண்டலையும் விளக்கி புரியவைக்கும்போது ஆவர்கள் போர்க்குணத்துடன் அணிதிரள்வாளர்கள் என்பதனை இந்த போராப்பாட்டம் மெய்பித்தது.

_________________________________________________________

– புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுவை.

_________________________________________________________