privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்புதிய தலைமுறை-எஸ்.ஆர்.எம்-IJ கட்சி பாரிவேந்த பச்சமுத்துவுக்கு பிறந்தநாள் வாழ்த்து!

புதிய தலைமுறை-எஸ்.ஆர்.எம்-IJ கட்சி பாரிவேந்த பச்சமுத்துவுக்கு பிறந்தநாள் வாழ்த்து!

-

செய்தி -26

பாரிவேந்தர்-பச்சமுத்து
பச்சமுத்து – படம் நன்றி கலகக்குரல்

ரிரு மாதங்களாகவே தலைப்பில் உள்ள கம்பெனிகளின் முதலாளியும் இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவருமான டாக்டர் பாரிவேந்தர் என்ற பச்சமுத்துவின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் வார, வாரமிருமுறை, மாத இதழ்களில் விளம்பரங்களாக படையெடுத்தன. சேலம், திருப்பூர், நெல்லை, திருச்சி என்று பல்வேறு மாவட்ட தலைகள் கொடுத்த விளம்பரங்கள் அனைத்தும் ஒரே டிசைனில் இருந்ததைப் பார்த்தால் எல்லாம் தலையே செய்த செட்டப் என்று புரிந்து கொள்ள ரொம்ப அறிவு தேவையில்லை.

இன்று ஆகஸ்ட்டு 24 அவரது பிறந்த நாளை ஒட்டி எல்லா தினசரிகளிலும் வண்ண விளம்பரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இப்படி கைக்காசு போட்டு தன்னையே வாழ்த்திக் கொள்ளும் தலைவருக்கு வினவு தனது சொந்த செலவில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கிறது. வாழ்த்துக்குரிய கவியாடல் செய்யும் கவித்திறன் நமக்கில்லை என்பதால் இன்று அனைத்து மாவட்ட ஐ.ஜே.கே நிர்வாகிகள் அளித்திருக்கும் விளம்பர வாசகங்களின் உதவியுடன் வினவு வாழ்த்தை வடித்திருக்கிறோம்.

குறிப்பு: தடித்த நீல நிற வரிகள் அவர்களுடையவை; மெல்லிய வரிகள் நம்முடையவை!

______________________________

* ஆகஸ்ட் 24 டாக்டர் பாரிவேந்தர் அவர்களின் பிறந்த நாள்! இளைஞர் எழுச்சி நாள்!

எஸ்.ஆர்.எம் குரூப்பில் படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்தான் அமுதசுரபி போல அய்யாவுக்கு பணத்தை அள்ளித் தருபவர்கள். அதனால்தான் இன்றைய தினத்தை இளைஞர் எழுச்சியாக கொண்டாடுகிறோம்.

* இந்திய அளவில் குடும்ப ஆட்சியை அகற்றுதல்.

அரசியலில் இருக்கும் மற்ற குடும்பங்களை அகற்றினால்தான் புதிய தலைமுறை பத்திரிகை, டி.வி, எஸ்.ஆர்.எம் குழும கல்லூரிகளில் இருக்கும் எங்களது குடும்பம் அரியணை ஏறும். கல்லூரியிலும் குடும்பம். கோட்டையிலும் குடும்பம்! தொலைக்காட்சியிலும் குடும்பம். அரசியல் கட்சியிலும் குடும்பம்!

* சோம்பேறியாக்கி, சுயமரியாதையை இழக்கும் இலவசம் தவிர்த்தல்!

அதனால்தான் எங்கள் கல்லூரி கட்டணத்தை சில பல இலட்சங்களில் வைத்திருக்கிறோம். துட்டை லீகலாக வாங்குவதால் எங்களது சுயமரியாதை கெடாது. துட்டை கொடுத்தவன் கொடுத்துட்டமே என்று படிக்க வேண்டியிருப்பதால் சோம்பேறித்தனம் கிடையாது. ஒரு கல் மூன்று மாங்காய்!

* உடலைக் கெடுத்து, உயிரைக் குடிக்கும் மதுவை ஒழித்தல்

மல்லையா, மிடாஸ் போன்று நாங்களும் ஆரம்பத்தில் மது ஆலைகள் தொடங்க நினைத்து ஜஸ்ட் மிஸ்ஸாகி கல்வி ஆலைகள் பக்கம் திரும்பி விட்டோம். எதிர்காலத்தில் சரக்கு ஆலை துவங்கும் போது இந்த இலட்சியத்தை திரும்பப் பெறுவோம். இது உறுதி!

* லஞ்சம் – ஊழல் அற்ற நேர்மை அரசியலை நிலைநாட்டல்.

கேப்டன், அண்ணா ஹசாரே, சரத்குமார், கார்த்திக்ன்னு டெல்லிக் காக்காய் முதல் உசிலம்பட்டி குரங்கு வரை  இதை சொல்லும் போது நாங்க மட்டும் சொல்லலேன்னா எப்படி? இது டெம்ப்ளேட் ரூல் பாஸ்!

* இரண்டு முறைக்கு மேல் எவரும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பதை தவிர்த்தல்.

நல்லாப் பாருங்க, தவிர்க்கணும்ணுதான் சொல்லிருக்கோம். சட்டமெல்லாம் கிடையாது. எங்கள் டி.வி, பத்திரிகை, கல்லூரிகளுக்கெல்லாம் எங்க (பாரிவேந்தரது) குடும்பத்தினர்தான் ஆயுட்கால நிர்வாகிகள்ன்னு நாங்களாவே வைக்கல. இதெல்லாம் மாணவர்களும், டிவி பார்க்கிற தமிழக மக்களும் இட்ட அன்புக் கட்டளை. இது வேற, அது வேற!

* தடையில்லா மின்சாரம், தனியார் துறை மூலமும் கிடைக்க வழி செய்தல் ( குஜராத், மும்பை போல).

தமிழ்நாட்டு அரசாங்கம் தனியாரிடம் யூனிட் ஒன்றுக்கு 18 ரூபாய் கொடுத்து வாங்குகிறது. இதனால் தமிழக மின்சார வாரியம் திவாலாகினாலும், பல முதலாளிகள் பில்லியனராகியிருக்கிறார்கள். நாங்க ஆட்சிக்கு வந்தா யூனிட் ஒன்றுக்கு நூறு ரூபாய் கொடுத்து வாங்குவோம். ஏன்னா விக்கிறதும் நாங்க தானே! அதனால் உலக பணக்காரர்களின் முதலிடம் எங்களுக்கு உறுதி.

* விவசாய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு படித்த இளைஞரை முதல்வர் ஆக்குதல்.

தமிழகத்திலேயே கட்சி போஸ்டருக்கு மண்வெட்டி தூக்கி, ஏரோட்டி, களை பறித்து விவசாயி போஸ் கொடுத்த ஒரே ஆளு நாந்தாங்கிறதை நினைவுபடுத்தினீங்கன்னா இந்த இலட்சியத்திற்கு அர்த்தம் புரியும். என் புள்ளைங்க, இல்லேன்னா பேரங்க, இல்லேன்னா கொள்ளுன்னு யாராவது இந்த முழக்கத்தை நிறைவேற்றுவது உறுதி. இதற்காகவே தமிழ்நாடு முழுக்க பல விவசாய நிலங்களை வாங்கி வைத்துள்ளோம்.

இக்கொள்கைள் நிறைவேற்ற அயராது பாடுபடும் டாக்டர் பாரிவேந்தர் பச்சமுத்து பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்!

– வினவு

பின் குறிப்பு: ஊரறிய முதலாளியா ஆன பிறகு அவனவன் கட்சி கிட்சின்னு நன்கொடை கேட்டு தாளிச்ச தாளிப்பை நிறுத்துவதற்காகவே ஐயா இந்தக் கட்சியை ஆரம்பித்தார். ஆனாலும் கட்சியின் வளர்ச்சியை பார்த்த பிறகுதான் நெஜமாகவே ஆட்சியை பிடித்துத்தான் பார்ப்போமே என்று தோன்றியது. ஆகவே இது காமடி விளம்பரமல்ல சீரியஸ் விளம்பரம்ணு சொல்ல வைக்கிற நிலைமைக்கு வாசகர்கள் வினவை ஆக்கிவிடக்கூடாது. ஆக்கிட்டீங்கன்னா அழுதுருவோம்!

இதையும் படிக்கலாம்:

___________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்