privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்வி 31 % தேர்ச்சி விகிதம் : விருதை அரசு பள்ளி முற்றுகை !

31 % தேர்ச்சி விகிதம் : விருதை அரசு பள்ளி முற்றுகை !

-

விருத்தாச்சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் +2 மாணவர் 31% தேர்ச்சி,

கல்வித் துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை கோரி

விருத்தாசலம் மாவட்டக் கல்வி அலுவலகம்

முற்றுகை போராட்டம்

நாள் : 17-5-13 வெள்ளி, காலை 10-30 மணி

தமிழக அரசே !
31% மாணவர் தேர்ச்சிக்கு 45000 மாதச் சம்பளம் ஏன்?
தேர்ச்சியின்மைக்கு காரணமான ஆசிரியர் மீது நடவடிக்கை எடு!
அரசுப் பள்ளிகளை கண்காணிக்கத் தவறிய மாவட்டக் கல்வி அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்!

ன்பார்ந்த பெற்றோர்களே!

அனைவருக்கும் தரமான கல்வியை அரசு இலவசமாக வழங்க வேண்டும் என்பது வாழ்வுரிமையின் ஒரு அங்கம் என்பதை அரசியலமைப்புச் சட்டம் உத்திரவாதப்படுத்தியிருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் +2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி எந்த அரசுப் பள்ளிகளிலும் இல்லை. மாணவர் தேர்ச்சி விகிதம் பெரும்பாலான பள்ளிகளில் 22% முதல் 38% வரைதான் உள்ளது. விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் இந்த ஆண்டு 31% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

poster

ஏழை மாணவர்கள்தானே, எத்தனை பேர் பெயிலானால் என்ன குறைந்த கூலிக்கு தனியார் கம்பெனிகளுக்கு வேலைக்கு ஆள் கிடைப்பார்கள் என்ற அரசின் அலட்சியப் போக்குதான் இந்த நிலைக்குக் காரணம். அரசு பள்ளியில் 35 மார்க் எடுத்து தேர்ச்சி அடைய கூட வைக்க முடியவில்லை. உரிய மதிப்பெண் இல்லாமல் தேர்ச்சியடைந்த மாணவர்களும், மேல்படிப்புக்கு செல்ல முடியாத அவலம். இதே நிலை நீடித்தால் வருங்காலத்தில் பெரும் பகுதி அடித்தட்டு மாணவர்கள் கல்வியிலிருந்தே புறக்கணிக்கப்படும் அபாயம் உள்ளது. மாணவர் தேர்ச்சியின்மைக்கு காரணமான ஆசிரியர்கள் மீதும், கண்காணிக்கத் தவறிய கல்வித் துறை அதிகாரிகள் மீதும் அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது, ஏன் மௌனம் காக்கிறது?

தனியார் பள்ளிகளில் ஆசிரியருக்கு ரூ 3,000 சம்பளத்தில் வேலை. அங்கு மட்டும் 100 சதவீத மாணவர் தேர்ச்சி எப்படி சாத்தியமாகிறது? கொத்தடிமை போல் பள்ளி முதலாளி ஆசிரியர்களை பிழிந்து எடுக்கிறார்கள். ரூ 45,000 மாதச் சம்பளம் வாங்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களோ, வியாபாரத்தில் முதலீடு, தனியார் பள்ளிகளில் பங்குதாரர், பகுதி நேரமாக தனியார் பள்ளியில் பாடம் நடத்துவது, வட்டித் தொழிலில் ஈடுபடுவது, குடிப்பது என ஆசிரியர் பொறுப்பை மீறி மோசமாக நடந்து கொள்கிறார்கள். எதிர்கால சமூகத்தை உருவாக்குவதில் ஆசிரியர் பணியின் பொறுப்பு பற்றி துளியும் அக்கறை இல்லை.

கல்வித் துறை அதிகாரிகள் அரசுப் பள்ளிகளுக்கு சென்று முறையாக ஆய்வு நடத்துவதில்லை, கண்காணிப்பதில்லை. பாலம் இடிந்து விழுந்தால் பொறியாளர் கைது செய்யப்படுகிறார். கைதி தப்பி ஓடி விட்டால் போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். ரயில் விபத்து நடந்தால் ரயில்வே மந்திரி ராஜினாமா செய்கிறார். அரசுப் பள்ளி மாணவர்கள் ஆயிரக்கணக்கில் தேர்ச்சி அடையாமல் போனதற்கு தமிழக அரசு யாரை கைது செய்தது, யாரை சஸ்பெண்ட் செய்தது? ஏன் செய்யவில்லை என்பதை நாம் கேட்க வேண்டாமா? கல்வி வியாபாரத்தில் ஈடுபடாத அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் உண்டா? தமிழக அரசும் தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பிரச்சாரம் செய்கிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்காக இவர்கள் எப்படி குரல் கொடுப்பார்கள். பெற்றோர்களாகிய நாம்தான் களத்தில் இறங்கி போராட வேண்டும்.

ஊதிய உயர்வுக்காக போராடும் ஆசிரியர்கள், கல்வித்தரத்தை மேம்படுத்த, அரசு பள்ளிகளைக் காப்பாற்ற ஏழை மாணவர்களின் கல்வி உரிமைக்காக போராட முன்வர வேண்டும். புற்றீசல்களாக தனியார் பள்ளிகள் பெருகி வரும் சூழலில் அரசுப் பள்ளிகள் முடமாக்கப்படுவதை நாம் அனுமதிக்கக் கூடாது. மருத்துவம், குடி தண்ணீர், மின்வெட்டு, மின் கட்டண உயர்வு, ரேசன் கடை போன்ற அனைத்தும் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்படும் மக்கள் போராடினால் அரசு போலீசை வைத்து அச்சுறுத்துகிறது.

நம் வாழ்க்கையின் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணமான அரசின் தனியார்மயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கையை எதிர்த்து போராடுவதைத் தவிர குறுக்கு வழிகள் ஏதுமில்லை. தனியார் கொள்ளை லாபம் அடிக்க வசதியாக அடிப்படையான அனைத்தும் அரசு பொறுப்பில் இருந்து விலக்கப்படுகிறது. காசு உள்ளவர்கள் மட்டுமே தனியாரிடம் இத்தகைய சேவையை பெற முடியும். கோடிக்கணக்கான ஏழை மக்கள் கல்வி தனியார் மயத்தால் கல்வி கற்கும் உரிமையிலிருந்து அப்புறப்படுத்தப்படும் நிலைதான் உருவாகும்.

தனியார் பள்ளிகளின் தரம் என்ன? மார்க் எடுக்கும் எந்திரமாக நமது மாணவர்களை மாற்றி பெற்றோர்களிடமிருந்து பல மடங்கு பணத்தை கறக்கிறார்கள். தனியார் கல்வி நிறுவனங்கள், சிட்பண்ட், ஈமு கோழி வளர்ப்பு போல் பல்வேறு கவர்ச்சிகரமான கல்வி விளம்பரங்களை அள்ளி வீசுகின்றன. செங்கல் சூளைக்கு வேலை செய்ய படிப்பறிவு அற்ற உழைக்கும் மக்களை குடும்பத்தோடு லாரியில் வருட சம்பளத்திற்கு உரிமைகள் ஏதுமற்ற அடிமைகளாக ஏற்றிச் செல்வது போல், பொறியியல் கல்லூரி மாணவர்களை படிக்கும் போதே ஒப்பந்த கூலிகளாக நியமனம் செய்கின்றனர். இதற்குப் பெயர் பிளேஸ்மென்ட், உரிமைகளற்ற இயந்திரமாக, அடிமைத்தனமாக மனிதனை மாற்றுவதுதான் தனியார் மய கல்வியின் சாதனை.

பாதிக்கப்பட்ட மக்களாக, கல்வி உரிமைக்காகவும், பிற உரிமைகளுக்காகவும் ஒன்று திரண்டு போராட வேண்டும்.

இந்த மாதம் 25-5-13-ம் தேதி கடலூர் மஞ்சகுப்பம் மணிக்கூண்டு அருகில் அனைவருக்கும் தரமான இலவசக் கல்வியை அரசே வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்காக நடத்தப்படும் மாநாட்டிலும் இந்த முற்றுகை போராட்டத்திலும் தாங்கள் அவசியம் கலந்து கொள்ள வேண்டும்.banner

பள்ளி மாணவர்கள் தங்களுக்கு ஆசிரியர் இல்லை, ஒழுங்காக பாடம் நடத்துவதில்லை, கழிப்பிடம் இல்லை, குடிநீர் இல்லை, போதிய வகுப்பறை இல்லை என்பதற்காக போராட முடியாது என்பதால்தான் பெற்றோர்களாகிய நாம் மாணவர்களின் கல்வி உரிமைக்காக போராட வேண்டும். வாருங்கள், எமது சங்கத்தில் சேருங்கள் என்ற அழைக்கிறோம்.

தகவல்:
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்,
மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
பேச : 9345180948 9345067646