ராபர்ட் கால்டுவெல்லை நினைவுகூர்வோம் !  பார்ப்பன எதிர்ப்பு தமிழ்மரபை மீட்டெடுப்போம் !!

ராபர்ட் கால்டுவெல்பார்ப்பன பாசிசம் ஆட்சியைப் பிடித்திருக்கும் இந்தச் சூழலில், தமிழ் மொழியின் இருப்பைக் காலி செய்திடும் அதிகாரத் திமிர் எல்லாத் தளங்களிலும் கோலோச்சுகின்றது. உயர் கல்வியில் மட்டுமல்ல, அரசுப் பள்ளிகளிலும் இனி தமிழ் இல்லை என்றாக்கிட ஜெயலலிதா ஆங்கிலக் கல்வியைத் திணிக்கின்றார். இன்று சமஸ்கிருதப் பண்பாடும், ஆங்கில மோகமும் வெறிகொண்டு ஆடுகின்றன. தமிழை உயர்த்திப் பிடிப்போரைக் கேவலமாகப் பார்க்கும் பார்ப்பனியப் பார்வை சகலரிடமும் விதைக்கப்படும் சூழலில் தமிழின் பெருமையையும், அதன் தனித்துவத்தையும் உலகுக்கு உரக்கச் சோன்ன ராபர்ட் கால்டுவெல்லின் 200-ஆவது பிறந்த தினத்தை நாம் நினைவு கூர்கிறோம்.

1814-இல் அயர்லாந்தில் பிறந்த கால்டுவெல் கிறித்தவ சமயப் பரப்பிற்காகத்  தமிழகத்திற்கு வந்தார்.  சென்னைக்கு வந்ததும் ”துருவ்” எனும் தமிழ் கற்ற அறிஞரோடும் அந்நாளில் தமிழுக்குத் தொண்டாற்றிய வின்சுலோ, போப், பவர், ஆண்டர்சன் முதலானவர்களோடும் நட்புப் பூண்டார். சென்னை மாநகரில் மூன்று ஆண்டுகள் தங்கிய கால்டுவெல், தமிழ் மக்களின் வாழ்க்கைமுறை, பழக்கவழக்கம், மொழி முதலானவற்றை அறிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக ஏறத்தாழ நானூறு கல் தொலைவில் உள்ள திருநெல்வேலிக்கு நடந்தே சென்றார். அப்பயணத்தின்போது ‘மிலேச்சரான’ கால்டுவெல்லுக்குப் பல சத்திரங்களில் இடம் மறுக்கப்பட்டதால், மாட்டுத்தொழுவங்களில்தான் அவர் தங்க நேர்ந்தது. இறுதியில் திருநெல்வேலி (இன்று தூத்துக்குடி மாவட்டம்) மாவட்டத்தில் தேரிப்பகுதியில் உள்ள இடையன்குடியைத் தேர்ந்தெடுத்து செயல்படத் தொடங்கினார்.

அவரின் நோக்கம் சமயப் பரப்புரையாக இருந்தபோதும், தமிழின் பேரில் ஏற்பட்ட ஈர்ப்பு மொழியாராச்சியை நோக்கி அவரைத் தள்ளியது. அவர் 18 மொழிகளைக் கற்றார். அதுவரை அச்சேறாமல் இருந்த பல பண்டைத் தமிழிலக்கியங்களை (தொல்காப்பியம் உட்பட) பயின்றார். இலக்கிய வேலைகளுக்கிடையே, அந்நாளில் ஒடுக்கப்பட்ட சாதியாக அறியப்பட்ட சாணார்கள் (நாடார்கள்) கல்வி கற்றிடவும், அவர்களின் மீதான சாதி இழிவுகளை அகற்றவும் பாடுபட்டார். அவர் கற்றறிந்த பிற மொழிகளுடன் தமிழ் மொழியை  ஒப்பிட்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு சில முடிவுகளுக்கு வந்து சேர்ந்தார். அதனை ஆய்வுநூலாக அவர் ஆங்கிலத்தில் ”திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” எனும் நூலாக இலண்டன் பதிப்பகம் மூலம் 1856 – இல் வெளியிட்டார்.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் தமிழ் வரலாற்றில் முக்கிய திருப்புமுனை நூல் என்று சொல்லலாம். அதுவரை உருவாக்கப்பட்டிருந்த சமஸ்கிருத மேன்மையை அது உடைத்து நொறுக்கியது.  அதுவரை,  இந்திய மொழிகள் எல்லாம் சமஸ்கிருதத்திலிருந்து பிறந்தவை என்றும்,  அம்மொழியின் இலக்கணமே இதர மொழிகளுக்கு இலக்கணங்களாக ஏற்கப்பட்டன என்றும், தமிழிலுள்ள இலக்கியங்கள் கூட சமஸ்கிருத இலக்கியத்தை வழியொட்டி வந்தவைதான் என்ற கருத்தும்தான் மேலாண்மையில் இருந்து வந்தது.

ராபர்ட் கால்டுவெல் 2ஆசிய மற்றும் ஆப்பிரிக்காவின் நிலம் மற்றும் மக்களின் இனம் சார்ந்த வாழ்நிலையை அறிந்துகொள்ள இலண்டனில் அமைக்கப்பட்ட ஆசியவியல் கழகத்தின் கிளை 1784-ஆம் ஆண்டு கல்கத்தாவில் அமைக்கப்பட்டது. இதன் சார்பாக இந்தியாவில் செயல்பட்ட பலரும் சமஸ்கிருத மூல மொழியிலிருந்தே இந்தியாவில் பேசப்படும் அனைத்து மொழிகளும் கிளைத்திருக்க வேண்டும் என்னும் கருதுகோளை முன்னிறுத்தியே ஆய்வு செய்தனர்.

ஆனால், சென்னையை மையமாகக் கொண்டு செயல்பட்ட எல்லீசு உள்ளிட்டோர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் இந்தோ-ஆரிய மொழிகள் அல்ல என்பதை கால்டுவெல்லுக்கு முன்பே கண்டறிந்து இம்மொழிகளுக்கான திராவிடச் சான்றுகளை அகழ்ந்தெடுத்திருந்தனர். அந்த ஆய்வின் தொடர்ச்சியாக மிக வலுவான ஆதாரங்களுடன் கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம் பின்வரும் உண்மைகளை தெள்ளந் தெளிவாக நிரூபித்தது. 1. தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் எல்லாம் சமஸ்கிருதத்துக்கு நேர் எதிர் தன்மை கொண்ட திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை 2. தமிழில் உள்ள சமஸ்கிருத சொற்களை எடுத்து விட்டாலும் தமிழ் தானாகவே இயங்கும் ஆற்றல் கொண்ட செம்மொழி 3. இதுவரை கருதி வந்தது போல், தமிழ் மரபு என்பது வேத-பார்ப்பன-இந்து மரபின் தொடர்ச்சி அல்ல 4. அதற்கு சமண, பவுத்த, பார்ப்பன எதிர்ப்பு மரபு உள்ளது.

வெறுமனே மொழி ஆராய்ச்சி எனும் எல்லைக்குள் நிறுத்தி விடாமல் தமிழ் மொழி பேசும் இனத்தவர்களின் ஆன்மிகம், பண்பாடு, சாதி மேலாதிக்கம் என அனைத்தும் தழுவிய ஆய்வாக கால்டுவெல் மேற்கொண்டார். அன்று பார்ப்பன மேலாண்மையினை மனமுவந்து ஏற்றுக்கொண்ட சற்சூத்திர தமிழர்கள், ஒடுக்கப்பட்ட மக்களான பறையர்களைத் தமிழர்களாகக் கூட ஏற்க மறுக்கும் சாதிவெறியில்தான் இருந்தனர். ஆனால், கால்டுவெல்லின் ஆய்வு ”பறையர்களே பூர்வீகத் தமிழர்கள்” என்பதை நிறுவியது.

கால்டுவெல்லின் ஒப்பிலக்கண நூல், தமிழ்ச் சமூகத்தில் உருவாக்கிய தாக்கம் ஆழமானது. தமிழ் உயர் தனிச் செம்மொழி என்ற ஆய்வு முடிவு தமிழர்களுக்குத்  தன்னம்பிக்கையையும் சுயமரியாதையையும் உருவாக்கியது. அதன் தொடர்ச்சியாகத்தான் அழிந்துகொண்டிருந்த 2000 ஆண்டு கால தமிழ் இலக்கியக் கருவூலங்களெல்லாம் சி.வை.தாமோதரம் பிள்ளையாலும் உ.வே.சா. வாலும் அச்சு வாகனம் ஏறின. இருபதாம் நூற்றாண்டில் பார்ப்பன எதிர்ப்பு இயக்கம் உருவெடுக்க கால்டுவெல்லின் கோட்பாடுகள் அடித்தளமாயின.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்திராவிட இயக்கம் பின்னாளில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி ஊழல் சாக்கடையில் ஊறிச் சீரழிந்தது.  அதன் ஊழல்களையும் வெற்று முழக்கங்களையும் பித்தலாட்டங்களையும் மட்டும் முன்வைத்து பார்ப்பன ஊடகங்களும் அறிவுத் துறையினரும், திராவிடம் என்பதே மோசடி, இவர்கள் கூறும் வரலாறே கிறித்துவ பாதிரியின் சதியால் உருவாக்கப்பட்டது என்பதைத் தொடர்ச்சியாகப் பரப்புரை செய்கின்றனர். தமிழ் மரபென்பது வேதத்தை முன்னிலைப்படுத்திய மரபென்றும், கால்டுவெல்லும் திராவிட இயக்கமும் கூறுவது போல பார்ப்பன எதிர்ப்பு மரபென்பது தமிழ்ப் பண்பாட்டிலேயே கிடையாது என்றும் நிலைநாட்டிட ஆர்.எஸ். எஸ். முயல்கிறது. ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ எனக் கத்தும் தமிழ் இனவாதிகளும், பார்ப்பனர்களின் சதியோடு கைகோர்த்து, தமிழ் ஆர் .எஸ். எஸ். ஐ வளர்க்கின்றனர்.

இன்று மறுகாலனியாக்கம் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. மத்தியில் மோடியின் பாசிச ஆட்சி வந்துள்ள சூழலில் மீண்டும் சமஸ்கிருத மேலாக்கம், சமஸ்கிருதப் பண்பாடு உயர்த்திப் பிடிக்கப்பட உள்ளது. மக்களிடமும் சமஸ்கிருத பார்ப்பனப் பண்பாட்டின் பேரில் கூடுதலான பற்று விதைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதில் தொடங்கி பெயர்விளங்கா வழிபாடுகளைக் கொண்டுவருவது வரை பார்ப்பனிய மீட்சி நடந்து வருகின்றது. சமணம், பவுத்தம், சித்தர்கள், வள்ளலார் – என இருந்த நமது பார்ப்பன எதிர்ப்பு மரபு மக்களிடையே இருட்டடிப்பு செய்யப்படுகின்றது. இன்னொருபுறம், தமிழை ஆட்சிமொழியாக, நீதிமன்ற மொழியாக, வழிபாட்டு மொழியாகக் கொண்டுவர அரசு மறுக்கின்றது. தாய்மொழிக் கல்வியைத் தரவேண்டிய அரசே அரசுப்பள்ளிகளிலும் ஆங்கிலவழியைக் கொண்டுவந்து தமிழின் அழிவைத் துரிதப்படுத்துகிறது. இவற்றுக்கெதிராகப் போராட, கால்டுவெல் மீள்கண்டுபிடுப்பு செய்த ”உயர்தனிச் செம்மொழியே நம் மொழி” என்பதும், ”பார்ப்பன எதிர்ப்பு மரபே தமிழ் மரபு” என்பதும் இன்னமும் துருவேறாத வாள்களாக உள்ளன. அவற்றை நம் கைகளில் ஏந்துவதே கால்டுவெல்லை நினைவுகூர்வதாகும்.

அழகு.
____________________________________

புதிய ஜனநாயகம், ஜூன் 2014

____________________________________

153 மறுமொழிகள்

  1. “சவ்கியமா?” இதை வைத்துகொண்டு ஒரு இந்தி அதிகாரி தமிழ் மொழி சமஸ்கிருதத்திலிருந்து வந்தது என பாடம் எடுத்துக்கொண்டிருந்தார்.நான் :நலமா? என்புதுதான் தமிழ் வார்த்தை, அது வேறு மொழி வார்த்தை, இப்பொது கூட தமிழ்நாட்டில் பஸ் என்றுதான் சொல்கிறார்கள் அதற்காக பஸ் தமிழ் வார்த்தையல்ல தமிழ் ஆங்கிலத்தில் இருந்து பிரந்ததல்ல என கூறினேன்.

    உடனே அந்த அதிகாரி (பஞசாப்பி)என்னை அமைதியாக இருக்கும்படிதான் சொன்னாரே தவிர உண்மையை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

  2. அன்பு வினவிற்கு…

    மிக சிறந்த கட்டுரை…

    இன்று தமிழ் உயர் தனி செம்மொழி என்கிற மதிப்பை பெற முதன்மை காரணமாக திகழ்ந்தவர் கால்டுவெல். தமிழ் மொழியை ஆரிய தாக்கத்தில் இருந்து மீட்டெடுத்து அதன் தனி தன்மையை உலகறிய செய்ததில் கால்ட்வெல்லின் பங்கு தமிழ் மொழி வரலாற்றில் மிக பெரிய மைல் கல்லாகும்.

    சமற்கிருத மொழி அதன் பெயருக்கு ஏற்றார் போலவே அது “செயற்கையாக” நன்கு செய்ய பட்ட மொழி தான். அது இயற்கையான இயல்பான மொழி அல்ல. அதனால் தானோ என்னவோ அந்த மொழி உருவான சொற்ப காலத்திலேயே பாடைக்கு சென்று விட்டது . ஆனால், நன்கு செய்ய பட்ட மொழியாக கூறப்படும் சமற்கிருதம் எதில் இருந்து எடுத்து செய்யப்பட்டது என்பது தான் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது. இந்த உண்மையை தெரிந்து கொள்ள கால்டுவெல் அவர்களின் “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்”என்னும் நூல் பேருதவியாக இருக்கும்..அந்த நூலில் அவர் வெளியிட்ட ஆய்வுகளின் சாராம்சம் இது தான் ..

    ” பிறமொழி நூல்கள் சிலவற்றில் எவ்வுளவுக்கு எவ்வளவு வடமொழி சொற்களை பயின்று வருகின்றனவோ அவ்வுளவுக்கு அவ்வளவு அந் நூல்கள் அவ்வம் மொழியினரால் சிறப்புடன் போற்றப்படும். தமிழிலோ, எவ்வுளவுக்கு எவ்வளவு தமிழ் நூல்கள் வடமொழியின் உதவியை நாடாமல் தனித்தியங்குகின்றதோ அவ்வளவுக்கு அவ்வளவு சிறப்புடன் போற்ற படும் “.
    -கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்.

    ஆக, கால்டுவெல் மேற்காட்டிய சீரிய நெறியில் தமிழ் மொழியின் தூய்மையை,தனித்தன்மையை,தனி பெரும் வரலாற்றை தமிழ் பகைவர்களின் விளங்க கூறவேண்டுமானால் ஆரியத்தின் தாக்குதலில் இருந்து காக்க வேண்டும்.

    • //அதனால் தானோ என்னவோ அந்த மொழி உருவான சொற்ப காலத்திலேயே பாடைக்கு சென்று விட்டது//

      அக்மார்க் கிருத்துவ வார்த்தைகள்…உபயம் கால்டுவெல்… 😀

    • Dear Sister,
      Sanskrit is the name coined later my somebody.
      Its original name is vadamozhi like Thenmozhi(tamizh).
      Both are unique.Both have hundreds of nikandu and lakhs of verb roots.Millions of words.

      Both languages do not have death because they do not have birth.
      Kal thonri man thonraa kaalathe mun thorni mootha mozhi- both vada and then mozhigal.
      They are the medium of knowledge to make aware about the nature and universe.
      In RDBMS terms they are called medium of META-DATA.

      Later people used them for their own conversations.
      Like Mobile phone ,etc were used by technicians/business and later it is used by everybody and even for lean purposes ,now-a-days.
      Regards,
      Ganesh

  3. தமிழ் கலாசாரமும் இந்து வேத கலாசாரமும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை என்பதை நிரூபிக்க – உள்ளூர்காரனை ஒழிக்க வெளியூரில் இருந்து வந்திருந்தாலும் கிறிஸ்தவர்களது முஸ்லீம்களது துணையை வரவேற்ற அந்தக் காலத்துக் கம்யூனிஸ்டுகளையும் அதே கோட்பாட்டை இன்றும் முயற்சிக்கும் வினவு போன்ற ஆரஞ்சு சட்டை (சிவப்பு கொஞ்சம் வெளுத்து விட்டது)தோழர்களையும் சமாளிக்க – வியாசன் போன்ற விஷயம் தெரிந்தவர்களின் உடனடி உதவி தேவை.

  4. //ஆனால், கால்டுவெல்லின் ஆய்வு ”பறையர்களே பூர்வீகத் தமிழர்கள்” என்பதை நிறுவியது.//

    அவர் எப்ப அப்படி சொன்னார் வினவு அவர்களே.. இதுதான் கேப்பில் கப்பல் விடுவதா.. இது உண்மையெனில் ஆதாரங்கள் தேவை தோழரே

    • கேப்பில் கப்பல் விட்டது இங்கிருக்கிற ஆதிக்க சாதிகள். ஒப்பிலக்கண மூன்றாவது பதிப்பில் இது வெளிவந்திருக்கிறது. படியுங்கள்.

      • தென்றல்

        திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (A Comparative Grammar of the Dravidian or South Indian Family Languages, 1856)

        இது கால்டுவெல் அவர்களின் ஆராய்ச்சி புத்தகம். இந்த பதிப்பில் அந்த கப்பல்விட்ட பகுதி எங்கே என கூற முடியுமா.. தோழரே

        • கல்நெஞ்சம் அவர்களுக்கு,

          1875வெளியிடப்பட்ட இரண்டாம் பதிப்பின் திருத்தப்பட்ட பதிப்பு (2008) (1875 – Caldwell Robert. A comparative Grammar of the Dravidian of South Indian family of Languages – London.) Trubner & Co., Ludgate Hill.), கவிதா சரண் பதிப்பகத்தில் கிடைக்கிறது. விடுபட்ட அனைத்து கட்டுரைகளும் இதில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. வாசியுங்கள்.

          எந்தெந்த பகுதிகள் விடுபட்டது அதன் அரசியல் என்ன என்பதை வ.கீதாவின் கீழ்கண்ட கட்டுரையை வாசிப்பதன் மூலம் அறியலாம். http://azhiyasudargal.blogspot.com/2010/06/blog-post_11.html

          • தென்றல் அவர்களுக்கு,

            கீழே கொடுக்கப்பட்ட லீங்கை பதிவிறக்கம் செய்யவும். இது உலக அளவில் பிரபலமான கட்டுரைகளின் இணைய நூலகம் குறிப்பாக இந்திய கட்டுரைகளைக் கொன்டது. இது ஜெர்மானிய தளத்தில் ஆங்கில மொழியில் PDF format ல் உள்ளது இதன் அளவு சுமார் 65 MB.

            __________________________(இத்தகைய இணைப்புகளை இங்கே பகிரவேண்டாம் -வினவு)

            கால்டுவெல் கைப்பட எழுதிய A Comparative Grammar of the Dravidian or South Indian Family Languages, 1856
            இதிலே பறையர் என்ற வார்த்தை இல்லை.

            Blog என்பது எவர் வேண்டுமானாலும் எழுதலாம். http://azhiyasudargal.blogspot.com/2010/06/blog-post_11.html இந்த உதார் கட்டுரையை படிக்கவேண்டாம்.

            • கல்நெஞ்சம்,

              Tiru வ.கீதா அவர்களீன் “நீக்கப்பட்ட பகுதிகள் – ஒரு ஆய்வு” என்ற கட்டுரைக்கு அறிவு பூர்வமாக பதில் சொல்ல இயலாத கல்நெஞ்சம் அதை உதார் கட்டுரை என்று கூறி புரம் காட்டி ஓடுவது அழகாக உள்ளது !

              கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கைணத்தின் பதிப்புகளில் நீக்கப்பட்டு உள்ளவை :

              [1]புதிய பதிப்பையும் பழைய பதிப்பையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் நமக்கு உடனடியாகத் தெரிய வருவது இதுதான். பழைய பதிப்பில், ‘திராவிடர்கள்’ என்று அடையாளப்படுத்தப்பட்டவைர்களுக்கும் ‘சூத்திரர்கள்’ என்று அடையாளப்படுத்தப்பட்டவர்களுக்கும் உள்ள உறவு, அச்சொற்கள் குறிக்கும் பொருளில் உள்ள வேறுபாடுகள் குறித்து கால்டுவெல் மொழிந்துள்ள கருத்துகளில் கணிசமான பகுதி நீக்கப்பட்டுள்ளது

              [2]அடுத்து விடப்பட்டுள்ள பகுதியாவது Antiquity of Tamil என்ற தலைப்பிட்ட ஒரு பெரும் பகுதி. திராவிட இலக்கியங்களின், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு மொழி இலக்கியங்களின் தொன்மை, வரலாறு, பழம்பெருமை முதலியவற்றைப் பற்றிப் பேசும் பகுதியாக இது அமைந்துள்ளது. இது முழுமையாகவே நீக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் தமிழ் மொழியிலக்கியம் பற்றிக் கால்டுவெல் முன்வைத்த சர்ச்சைக் குரிய கருத்துகளும் அடங்கும்.

              [3]நூலில் பிற்சேர்க்கைகளாக இணைக்கப்பட்ட- ‘பறையர்கள் திராவிடர்களா?’ ‘நீலகிரித் தோடர்கள் திராவிடர் களா?’ என்று தலைப்பிடப்பட்ட இரு கட்டுரைகளும் – நீக்கப் பட்டுள்ளன.

            • கல்நெஞ்சம் ,

              கால்டுவெல் எழுதிய அந்த நூலில் பறையர் என்ற வார்த்தையே இல்லை என்றா சாதிக்கிறீர் ?

              http://books.google.com/books?id=nxwYAAAAYAAJ&pg=PA599&source=gbs_selected_pages&cad=3#v=onepage&q=pareiya&f=false

              Title A Comparative Grammar of the Dravidian Or South-Indian Family of Languages
              Author Robert Caldwell
              Edition 2
              Publisher Trübner, 1875
              Original from the New York Public Library
              Digitized Apr 1, 2008
              Length 608 pages

              இந்த இணைப்பிற்கு சென்று ”pareiya ” அல்லது “paraiah” என்றுத் தேடுங்கள்.
              நிறையப் பக்கங்கள் கிடைக்கும். தாங்கள் ஒன்றும் பறையர் என்று தமிழில் தேடவில்லையே?

              நன்றி

    • கல்நெஞ்சம்,

      கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கைணத்தின் புதீய பதிவுகளில் ”பறையர்களே பூர்வீகத் தமிழர்கள்” என்ற பகுதிகளை நீக்கிய அதிமோதவி மொக்கை பதிவு ஆசிரியர்கலிடம்[__________] அல்லவா நீங்கள் ஆதாரம் கேட்க வேண்டும் !

      கல்நெஞ்சம்://ஆதாரங்கள் தேவை தோழரே

      • @Saravanan
        நான் ஆதாரமாய் காட்டிய ஓரிஜ்னல் வெர்சன் ஆப் கால்டுவெல் அவர்களின் புத்தகத்தின் இணையதள முகவரியை வினவு நீக்கி உள்ளது..

        இதிலே தென்றல் கூறிய திராவிட ஓப்பிலணக்கனம் மூன்றாம் பகுதியிலே பறையர் என்ற வார்த்தையே இல்லை…..

        • இருந்தாலும் உங்களுக்கு இத்துணை கல்நெஞ்சம் கூடாது. முதல் பதிப்பின் (1856) பதிப்பகத்தார் யார்? அவர்கள் இதை ஏன் நீக்கினார்கள்? இரண்டாவது பதிப்பின் (1875, 2008) திருத்தப்பட்ட பதிப்பில் இது ஏன் சேர்க்கப்பட வேண்டும்? சென்னை பல்கலைக்கழக பதிப்பில் இது ஏன் விடுபட்டிருக்கிறது (1913)? இது ஏன் தமிழ் சூழ்நிலையில் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது என்று சிந்திக்கலாம் இல்லையா?

          ஒப்பிலக்கணம் எழுதுவதற்கு அடிப்படையே கால்டுவெல்லின் பறையர்கள் மற்றும் நாடார்கள் குறித்த இனவரைவியல் ஆராய்ச்சிகள் தான். கவிதாசரண் பதிப்பகத்தில் கிடைக்கிற புத்தகத்தை வாங்கி வாசியுங்கள் கல்நெஞ்சம். தோழர் சரவணன், வ.கீதா சுட்டிகாட்டும் விடுபட்ட பகுதிகளை [1] [2] [3] என்று வைத்திருக்கிறார். அதற்காவது பதில் சொல்ல முயற்சி செய்யலாம்.

          • @சிவப்பு
            வெறும் google books ல் பறையர் என்ற வார்த்தையை வைத்து search செய்து அதை highlight செய்து காட்டினால் அது உண்மை ஆகிவிடுமா.

            @தென்றல்
            இந்த புத்தகத்தை ஆங்கிலத்திலே இலவசமாய் படிக்கலாம்.

            பின்குறிப்பு
            கால்டுவெல் தங்கி பணிபுரிந்த ஊர் இடையன்குடி,திருநெல்வேலி மாவட்டம். அது என் தாயாரின் ஊர். இந்த புத்தகத்தை ஆங்கிலத்தில் படித்தவன்.
            மற்ற சாதிகளை திட்டி எழுதும் வினவு தன் பறையர் சாதியை மட்டும் கேப்பிலே கப்பல் விட்டதை தான் வன்மையாக கண்டிக்கிறேன். சாதியே இல்லை பார்ப்பான் ஓழிக என கத்தும் வினவு. தன் சாதி மானத்தை மட்டும் காத்துக்கொள்ளுகிறது..

            • கல்நெஞ்சம்,

              ஆதாரம் கொடுத்து விட்டேன். இனியாவது உங்கள் attitude மாறுமா கல்நெஞ்சம்?

              ராபர்ட் கால்டுவெல் அவர்களீன் புத்தகம் முழுமையாக கிடைக்கின்றது.பக்கம் 540 முதல் 554 வரை உள்ள APPENDIX முழுமையாக படிக்கவும் !

              தலைப்பு:

              ARE THE PAEIARS (PAREIYAS) OF SOUTHERN INDIA
              DRAVIDIANS ?

              பறையர்கள் தமிழர்கள் தான் : Proof :
              ————————————————

              [1]The Pareiyas constitute a well-defined, distinct, ancient caste, independent of every other; and the Pareiya caste has subdivisions of its own, its own peculiar usages, its own traditions, and its own jealousy of the encroachments of the castes which are above
              it and below it.

              [2]They constitute, perhaps, the most numerous caste in the Tamil country.

              Note:

              #### From page no 545 paragraph 2 from A COMPARATIVE GRAMMAR OF THE DRAVIDIAN OR SOUTH-INDIAN FAMILY OF LANGUAGES.

              ####Resorce:
              https://archive.org/details/comparativegramm00caldrich

              //மற்ற சாதிகளை திட்டி எழுதும் வினவு தன் பறையர் சாதியை மட்டும் கேப்பிலே கப்பல் விட்டதை தான் வன்மையாக கண்டிக்கிறேன். சாதியே இல்லை பார்ப்பான் ஓழிக என கத்தும் வினவு. தன் சாதி மானத்தை மட்டும் காத்துக்கொள்ளுகிறது..//

              • கல்நெஞ்சம்,

                ராபர்ட் கால்டுவெல் அவர்கள் கூறும் செய்தி என்ன ?

                [1]The Pareiyas constitute a well-defined, distinct, ancient caste, independent of every other

                [2]They constitute, perhaps, the most numerous caste in the Tamil country.

                What is the logical meaning of these two sentences ?

                ####The Pareiyas constitute ancient caste and most numerous caste in the Tamil country.

                ####When we translate this in to Tamil then We can understand that what vinavu said is CORRECT. YES WE GET…….

                ####பறையர்கள் பண்டைய சாதி மற்றும் தமிழ் நாட்டின் பெரும்பான்மை ஜாதி ஆவார்கள்.
                எனவே
                ”——————-பறையர்களே பூர்வீகத் தமிழர்கள்——————-”

            • கல்நெஞ்சம்,

              [1]நீங்கள் எவ்வளவு பெரிய முட்டாள் என்பது உங்கள் பீன்னூடங்கள் மூலம் அறிய முடிகீன்றது. வினவு மற்றும் ம க இ க வில் அனைத்து சாதி மக்களும் இருக்கையில், ஒரு குறிப்பிட்ட சாதி மக்களுக்காக மட்டும் வினவு கேப்பிலே கப்பல் விடுவதாக கூறுவது போன்று வேறு மிக பெரிய முட்டாள் தனம் உலகில் ஏதும் இல்லை !

              [2]திரு ராபர்ட் கால்டுவெல் அவர்கள் தமிழ் நாட்டில் ஆய்வு செய்த மானுடவீயல்[anthropology] சார் விடயங்களை வினவு வெளியீடும் போது, ஒடுக்கப்பட்ட மக்களான பறையர்களைத் தமிழர்களாகக் கூட ஏற்க மறுக்கும் சாதிவெறியில் உழலும் உம்மை சாதி வெறியன் என்று கூறுவதா ? அல்லது சாதி பித்தன் என்று மொழீவதா ?

              [3] இக் கட்டுரை தமிழ் நாட்டு மூத்தகுடிகளான நாடார் மக்களை பற்றியும் பேசுவது உம் சாதி வெறி கண்களுக்கு தெரியவில்லையா ?

              [4] நீர் இப் புத்தகத்தை ஆங்கீலத்தில் படித்த அழகு தான் உம் பீன்னூடங்கள் மூலம் அறிய முடிகீன்றதே !

              //கால்டுவெல் தங்கி பணிபுரிந்த ஊர் இடையன்குடி,திருநெல்வேலி மாவட்டம். அது என் தாயாரின் ஊர். இந்த புத்தகத்தை ஆங்கிலத்தில் படித்தவன்.//

              //மற்ற சாதிகளை திட்டி எழுதும் வினவு தன் பறையர் சாதியை மட்டும் கேப்பிலே கப்பல் விட்டதை தான் வன்மையாக கண்டிக்கிறேன். சாதியே இல்லை பார்ப்பான் ஓழிக என கத்தும் வினவு. தன் சாதி மானத்தை மட்டும் காத்துக்கொள்ளுகிறது..//

        • கல்நெஞ்சம்,

          [1]ஒரு புத்தகத்தீன்[ கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கைணத்தின்] பதிப்பாசிரியர் உள் நோக்கத்துடன் நீக்கும் பகுதிகளை நாம் நம் சொந்த முயற்சியில் தான் தேட வேண்டுமே தவீர தென்றலையோ ,வினவையோ குறை சொல்வதில் என்ன பயன் ?

          [2]திரு வ.கீதா அவர்கள் எழுதிய “நீக்கப்பட்ட பகுதிகள் – ஒரு ஆய்வு” என்ற கட்டுரை உங்களுக்கு தெளிவை அளித்து இருக்க வேண்டும். ஆனால் அதனை உதார் கட்டுரை என்று கூறி ஒதுக்குவது தான் இப்போது உள்ள சிக்கல்.

          [3] உங்களீன் இச் சிக்கலை நீங்களே தவிர்த்து இவ் விவாதத்தில் முன்னேருவீர்கள் என நம்புகின்றேன்

        • வினவு
          ஏன் என்னுடைய லிங்குகளை மட்டும் நீக்க காரணம் என்ன. கால்டுவெல் அவர்களின் புத்தகத்தை மின்நூலாக எவர் வேண்டுமானாலும் படிக்கலாம். அவரின் புத்தகங்கள் மின்னுலாக கொடுக்கப்பட்டு உள்ளது. முதலில் நான் கொடுத்த லிங்க .pdf format. தற்போது நான் கொடுத்த லிங்க pdf format ல் இல்லை..

          ஏதோ துப்பில்லாத கட்டுரையை மேற்கோள்காட்டும் வினவு.. http://azhiyasudargal.blogspot.com/2010/06/blog-post_11.html

          ஏன் கால்டுவெல்லின் சொந்த கட்டுரையை வெளியிட்ட நிறுவனத்தின் லிங்கை மட்டும் மறுப்பது ஏன்..
          திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (A Comparative Grammar of the Dravidian or South Indian Family Languages, 1856
          https://archive.org/details/comparativegramm00caldrich

          இது கலிபோர்னியா பல்கலைகழகத்தின் மின் நூலகம். எவர் வோண்டுமானாலும் படிக்கலம். பறையர் இனத்தவரும் கூட படிக்கலாம்.

          • கல்நெஞ்சம்,

            அப்படி போடுங்க கல்நெஞ்சம்! இந்த அழீய சுவடுகள் தளத்தில் எழுதீய எழுத்தாளர்கள்

            அனைவரும் மொக்கைகள், முட்டாள்கள்! நீங்க மட்டும் தான் தமிழ் நாட்டு தமிழ் அறிவு ஜீவி ! ஒத்துகொள்கின்றேம் கல்லு !

            ஒரு சின்ன திருத்தம் அறிவு ஜீவி !

            இந்த தளத்தின் கட்டுரைகளை மேற்கோள் காட்டுவது வினவு அல்ல அறிவு ஜீவி கல்லு ! திரு தென்றலும் , நானும் தான்.

            திரு வ.கீதா அவர்களீன் கட்டுரைக்கு பதில் சொல்ல துப்பு இல்லாத கல்லு சரியான மரமண்டை தான் போல !

            //ஏதோ துப்பில்லாத கட்டுரையை மேற்கோள்காட்டும் வினவு.. http://azhiyasudargal.blogspot.com/2010/06/blog-post_11.html//

          • கல்நெஞ்சம்,

            [1]அது இன்னா “பறையர் இனத்தவரும் கூட படிக்கலாம்” என்று சொல்லுரிங்க கல்லுநெஞ்சு ?

            [2]ஏன் சாதி வெறி கல்லு, ஒன்ன மாதிரி ______ இனத்து வித்து,குலகொழுந்து படித்தா உமக்கு புரியாதா ?

            //இது கலிபோர்னியா பல்கலைகழகத்தின் மின் நூலகம். எவர் வோண்டுமானாலும் படிக்கலம். பறையர் இனத்தவரும் கூட படிக்கலாம்.//

  5. //வியாசன் போன்ற விஷயம் தெரிந்தவர்களின்///

    அட ராமா, ராமா ஏண்டா என்னய இந்த கழிசடை பசங்களோட எல்லாம் கூட்டு சேர வைக்குறே?

  6. //தாய்மொழிக் கல்வியைத் தரவேண்டிய அரசே அரசுப்பள்ளிகளிலும் ஆங்கிலவழியைக் கொண்டுவந்து தமிழின் அழிவைத் துரிதப்படுத்துகிறது//

    Language grows with its people
    —————————————-

    Everybody knows in this competitive world , to survive one needs good knowledge and communication.
    When society doesn’t innovate and move forward, its language will loose its glory .

    Greek was the language of science
    then came the Arabic because it translated Greek books and built knowledge base on it
    Latin translated books from Arabic and it became the language of science.
    Now English has taken over it.

    Today most of the new books are written in English.In Tamil only translated books are available.
    Todays world is for science people not for literature people.

    Language of a Corporate
    ——————————-
    For anybody to succeed it is important to learn the science in English.
    Today it is language of multi location corporation

    Beating the wrong bush
    ————————
    When you dont know who you are, others will name you.
    When a society forgot its root it is natural for others to claim. Sanskrit was confined to religious studies and never were a threat to others. Others learned Sanskrit not for science but for literature and religious purpose only.
    Sanskrit was never a threat for Tamil for its existence . But may be you can say Sanskrit took the wrong credit

    Language for poor
    ————————
    Vinavu should suggest tamil should be taught everywhere but saying only poor people who rely on Govt schools should be forced to learn in Tamil is injustice.
    Poor should get the opportunity to learn the appropriate tools and Govt is providing the opportunity,it is not forcing but facilitating.

    History and Tamil 🙂 can be in Tamil. Even geography shouldn’t be in Tamil
    I learned in Tamil but I had plenty of time to learn English and become productive(?) and get a job.
    I have lost better job opportunities because of lack of my communication while looking for my first job.
    Current generation students dont have the luxury of time.

    • ராமன் அவர்களுக்கு ,

      தாய்மொழிக் கல்வி என்பது அறிவியல்பூர்வமானது என்பதை நாங்கள் மட்டும் கூறவில்லை ஐக்கியநாட்டு அவையும் தான் கூறுகிறது. ஆங்கில அறிவு என்பது தேவை தான். ஏனெனில் பெரும்பாலான அறிவியல் நூல்கள் ஆங்கிலத்தில் தான் உள்ளது என்பதை மறுக்க முடியாது.

      ஆனால் அவ்வாங்கில அறிவியல் நூல்களில் உள்ள கலைச் சொற்களை படித்தவுடனே புரிந்து கொள்ள முடியாது என்பதை ஆங்கிலம் அறிந்த யாவரும் அறிவர். இங்கே நாம் புரிந்து கொள்ளவேண்டியது என்னவெனில் , மொழி என்பது ஒரு புரிந்துரையாடத தேவையான ஒரு ஊடகம் அவ்வளவே.

      ஆங்கிலத்தில் புலமைப் பெற்ற ஒருவர் அறிவியல் அறிஞராக இருக்க வேண்டியதில்லை. அதேபோல ஐன்ஸ்டீன் போல ஒரு அறிவியல் ஆய்வாளர், ஆங்கிலத்தில் புலமைப் பெற்றிருக்கத் தேவையில்லை . அறிவியலுக்குத் தேவையான கலைச் சொற்களை ஆங்கிலம் தானேக் கொண்டிருக்கவில்லை மாறாக அதை அந்த அறிவிலாளர்கள் தாம் உருவாக்குகிறார்கள் மட்டுமில்லாமல் அக்கலைச் சொற்களை பிறிதொரு மொழியிடம் இருந்து எடுத்தாளவும் செய்கிறார்கள்.

      ஆங்கிலமும் மக்கள் ஒரு சாரருக்குத் தாய் மொழிதான். அவர்களைப் பொருத்தமட்டில் அனுகூலமான விடயம் யாதெனில் , அறிவியல் நூற்கள் அவர்கள் மொழியில் இருப்பது தான். கணிபொறி,கணிப்பொறியியல்,தகவல் தொழில்நுட்பம்….இது போன்ற சொற்கள் தமிழ் மொழிக்கு புதிது தானே.

      புரிந்து கொள்ள கடினம் என்றால் எந்த மொழியிலும் கடினமே . புரிந்து கொள்ள எளிதென்றால் எந்த மொழியிலும் எளிதே.

      நன்றி

  7. தமிழ் சமுதாயம் வளர ஆங்கில அறிவு அவசியம்! இந்திய மொழிகள் எல்லாவற்றிலும், தமிழ் உட்பட, இன்று எஞ்சி இருப்பது, நமது பழைய பஞசங்கங்களே! குறுகிய சாதி சார்ந்த, சமஸ்க்ருத விஷத்தை முறியடிக்க , அத்தகைய கலப்பில்லாத ஆங்கில விஞ்ஞான அறிவே அவசியம்!

    நண்பர் வியாசன் போன்ற தமிழ் தேசிய வாதிகளை மறந்துவிடாதீர்கள்! தமிழில் ஒட்டிகொண்டு வரும் இந்துத்வா மற்றும் உயர்சாதி வெறியையும் மறந்து விடாதீர்கள்!

  8. ராமன் அவர்களுக்கு

    \\History and Tamil can be in Tamil. Even geography shouldn’t be in Tamil
    I learned in Tamil but I had plenty of time to learn English and become productive(?) and get a job.
    I have lost better job opportunities because of lack of my communication while looking for my first job.
    Current generation students dont have the luxury of time.\\

    நீங்கள் கூறுகிற ஆங்கிலம் செயல்பாட்டு ஆங்கிலம். Functional English என்று அழைப்பார்கள். Functional Englishன் வேலை, பணக்கார சீமாட்டி, நாய் வளர்ப்பதைப் போன்றது. பொது அரங்குகளில் சிறுநீர் கழித்துவிடக் கூடாது என்று சில பயிற்சிகளை அளிப்பார்கள். அதைப்போன்றது தான் Functional English அருகதையும். முதலாளிகள் இதைத்தான் விரும்புகிறார்கள். எக்ச்சூமி மேடம், மே ஐ கம்மீன்! யு ஆர் வெல்கம், பை த பை என்று சங்கேத மொழிகளுக்கு பழக்குவது இதன் வேலை. மெட்ரிகுலேசன் பள்ளிகளிலும் இதைத்தான் செய்கிறார்கள். ஒவ்வொரு நாளும் குழந்தைகள் எங்க மிஸ் டி-வேர்ட்ஸ் டென் டைம்ஸ் ரைட் பண்ண சொல்லியிருக்காங்க என்பதுடன் முடிந்துவிடுகிற கேலிக்கூத்துதான் அரங்கேறுகிறது.

    தாய்மொழியில் கல்வி என்பது வெறும் வேலைக்காக மட்டுமல்ல. சிந்திப்பதற்காகவும் தான். பத்து வரிகளை (ஆங்கிலமோ தமிழோ) எழுத முடிகிறவர்கள் இன்றைக்கு தாய்மொழிக் கல்வியில் பயின்றவர்கள் கணிசமாக இருக்கிறார்கள். இராமனிடத்திலும் அதுதான் வெளிப்படுகிறது என்று கருதுகிறேன்.

    வரலாறும் தமிழும் ஆங்கிலத்தில் இருக்கிறது. தமிழ் கற்றறிந்தவர் மொழிபெயர்ப்பிலும் சிறப்பாக இருக்கிறார் என்பதை மறந்துவிடக்கூடாது. எனது தமிழாசிரியர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் சிறப்பான புலமை பெற்றவர்கள்.

    வேலைக்கும் மொழிக்கும் நேரடித்தொடர்பு இல்லை. நீங்கள் மேக்பத் மற்றும் ஹேம்லட்டை கரைத்து குடித்து ஒப்பித்தாலும் உங்களை யாரும் வேலைக்கு எடுக்கமாட்டார்கள். முதலாளிகள் இதில் தெளிவாக இருக்கிறார்கள். They higher for attitudes not for skills என்பது கார்ப்பரேட் சூழலில் பயன்படுகிற வளமையான சொலவடை. ராமன் இப்படித்தான் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதை உங்களுடைய HR இடத்தில் கேட்டால் புரியும்.

    அறிவியலின் மொழி கணிதம் மற்றும் சிந்தனை. இதற்கு ஆங்கிலமோ கிரேக்கமோ தேவையில்லை.
    பவுலிங்கின் தவிர்ப்புத்தத்துவத்தை (Pauli’s Exclusion Principle) எனது தாய்மொழியிலேயே கற்கிற வாய்ப்பு கிடைத்தது. அது இப்படிச் சொல்கிறது, “ஓர் அணுவில் உள்ள இரண்டு எலக்ட்ரான்களின் நான்கு குவாண்டம் எண்களின் மதிப்பும் தொகுப்பும் ஒன்றாயிராது” இதை இளங்கலை இயற்பியல் வகுப்பில் சொன்னபோது ஆசிரியர் உட்பட அனைவரும் சிரிக்கவே செய்தார்கள். ஆனால் சிரித்தவர்கள் யாரும் இயற்பியலில் பட்ட ஆராய்ச்சி மேற்படிப்புக்கு வரவில்லை. எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அதற்கு காரணம் தாய்மொழிவழிக் கல்வி எனக்குக் கொடுத்த சிந்திக்கிற சுதந்திரம்.

    மொழி வளம் வர்க்கப்பார்வையிலிருந்தும் வளம் பெறும். அதனால் தான் மார்க்சின் ஆங்கில மொழிபெயர்ப்பு “A specter of communism is haunting Europe” என்ற வாக்கியம் பாட்டாளிகளுக்கான மொழியாக இருக்கிறது.

    • //. Functional English //

      அந்த அறிவு இருந்து இருந்தால் எனக்கு தன்னம்பிக்கை கிடைத்து இருக்கும் . ஆங்கிலத்தில் பேச முடியாமல் கல்லூரியில் சோபிக்க முடியவில்லை . நேர்முக தேர்வில் உளறல்கள் . வாடா MS பண்ண அமெரிக்கா போகலாம் என்று நண்பன் அழைத்த பொது போக தன்னம்பிக்கை வரவில்லை

      தமிழில் நல்ல அறிவோடு இருந்தாலும் குறிப்பிட்டா எல்லையை தாண்ட முடியாது . குண்டு சட்டியில் குதிரை ஓட்டலாம்

      //ய்மொழியில் கல்வி என்பது வெறும் வேலைக்காக மட்டுமல்ல. சிந்திப்பதற்காகவும் தான்//
      பொது அடிவாய் மின்னோட்டமும் நேர் மின் அழுத்தமும் என்கின்ற ரீதியில் இருந்த எலேக்ட்ரோன்சிஸ் படித்து ஒன்னும் புரியவில்லை. அதற்கு Vce என்று குறியீடு கொடுத்து இருந்தார்கள் . நல்ல வேளையாக எங்களுக்கு ஆங்கிலத்தில் கற்பித்தார் ஆசிரியர் . மிகவும் எளிமையாக இருந்தது .

      அடுத்தது நான் இப்பொழுது தமிழில் படித்து புரிந்து கொண்டேன் என்று வைத்து கொள்ளுங்கள் , இதை நான் ஒரு அலுவலத்தில் பணிபுரியும் வேற்று மாநிலதாரிடம் விளக்க வேண்டும் . எப்படி செய்வது ?

      என்னுடைய அறிவின் பயன் என்ன ? ஒரு வேளை அணைத்து தமிழ் கொண்ட அறிவிய ஆராய்ச்சி கழகம் இருந்தால் அங்கே பணிபுரியும் வாய்ப்பு பெற்றால் அதற்கு பயன் கிட்டும் .

      //இராமனிடத்திலும் அதுதான் வெளிப்படுகிறது என்று கருதுகிறேன்.//

      எனது தாய்மொழி தமிழ் அல்ல

      //. நீங்கள் மேக்பத் மற்றும் ஹேம்லட்டை கரைத்து குடித்து ஒப்பித்தாலும் உங்களை யாரும் வேலைக்கு எடுக்கமாட்டார்கள்//

      தமிழ் அறிவு என்றால் திருக்குறளையும் சிலபதிகாரதையும் படிப்பது மட்டும் தானா ?
      Communication skill என்றுதான் கூறுவார்கள் literature ஸ்கில் கிடையாது

      //ஓர் அணுவில் உள்ள இரண்டு எலக்ட்ரான்களின் நான்கு குவாண்டம் எண்களின் மதிப்பும் தொகுப்பும் ஒன்றாயிராது”//

      //அறிவியலின் மொழி கணிதம் மற்றும் சிந்தனை. //

      எல்லாம் சரிதான் . தமிழ் மொழியில் அறிவியல் வளராததால் அதற்குரிய vocabulary கிடையாது .
      உதாரணமாக photo negative என்பதை “இருட்டுக்கு பதில் வெளிச்சமும் வெளிச்சத்திற்கு பதில் இருட்டும் உள்ள பட சுருள் ” என்று எனது இயற்பியலில் படித்தேன் . சிந்தனை செய்வதற்குரிய சொல்லாடல்கள் இல்லை என்றால் சிந்திக்கவே முடியாது

      அடுத்து knowledge infrastructure எனபது தமிழில் கிடையாது . நல்ல புத்தகங்கள் ஆங்கிலத்தில் உள்ளன . தமிழில் வேண்டும் என்றால் யாரவது மொழி பெயர்த்தல் மட்டுமே சாத்தியம்

      ஆங்கிலம் தெரிந்தவர்கள் இணையத்தில் மேயலாம் . தமிழில் படித்தவன் கதி சுத்தி சுத்தி வந்தாலும் கவிதையும் கட்டுரையும் தான் கிடைக்கும் . துளிர் என்று ஒரே ஒரு அறிவியல் பத்திர்க்கை வருகிறது . எங்க ஊரு நூலகத்துக்கு சந்தா செலுத்தலாம் என்று பார்த்தால் ஒரு பதிலும் வரமாட்டேன் என்கிறது

      //இயற்பியலில் பட்ட ஆராய்ச்சி மேற்படிப்புக்கு வரவில்லை//
      Phd என்று நினைகிறேன் . அதை முழுக்க தமிழிலேயே செய்தீர்களா ? உங்களுக்கு எனது அனுதாபங்கள் . யாருடனும் தொடர்பு கொண்டு உங்கள் சிந்தனையை அறிவியல் மொழயில் பேச முடியாமல் , தமிழில் உரைத்து பாருங்கள் . அந்தோ பரிதாபம்

  9. கால்டுவெல் பல தவறான கருத்துக்களை கொண்டிருந்தார். கிறிஸ்தவ மயப்படுத்துவதற்காக தமிழ்நாட்டில் தமிழை உயர்வு செய்வதாகக் கூறி சாதிச்சண்டையை ஆயுதமாகப்பயன்படுத்தினார். அய்யங்கார் என்ற பார்ப்பன சாதி எப்படி உருவானது என்பதை கால்டுவெல் அறியவில்லை. இன்று பிறாமணர்களாக பார்ப்பனர்களாக இருக்கும் மக்களின் 5000 வருடத்திற்கு முந்தைய முதாதையல்களும் இங்குள்ள பறையல் பள்ளர் நாடார் கோனார் ……. அனைவரின் முதாதையரும் ஒரு கூட்டமே. வேதகாலத்து சாதியற்ற சமுதாயம்தான் இந்தியாவில் இநத பல லட்சம் சாதியாக வாழ்ந்து வருகின்றது. ஆமாம் கால்டுவெல் மொழிபெயர்த்த ஆங்கில திருக்குறள் திருவாசகம் ஆகிய இரு தமிழ நூல்களையும் கிறிஸ்தவ திருச்சபை படிகின்றதா? கிறிஸ்தவ தேவாலயங்களில் வாசிப்பதுண்டா ? பொருள் குறித்து விவாதிப்பதுண்டா? இன்று சர்ச் களில் திருக்குறளுக்கு என்ன இடம் ? கிறிஸ்தவ கோவில்களில் திருக்குறளுக்கு இடம் கிடையாது. இவன் என்ன தமிழன் ? இவர்கள் செய்தது தமிழ் தொண்டா ?????????? முட்டாள்தனமாது! ஏமாற்று வித்தை. ஏமாறமாட்டோம்.

    • நீங்க ஏமாற வேண்டாம் ஏமாற்றாமல் இருந்தாலே போதும் அன்புராஜ் வேத காலம்னா என்ன அதுல ஜாதியற்ற சமுகம் எப்பிடி இருந்ததுனு கொஞ்சம் விளக்கமாகவும் ஆதார பூர்வமாகவும் சொல்லுங்க அப்புறம் யார் ஏமாத்துறதுனு தெரிஞ்சுக்கலாமே

    • தமிழ்நாட்டில் இந்துக் கோயில்களில் தேவரங்களுக்கே இடமில்லாமலிருக்கும் போது, அதைப் பற்றிப் பேசாமல் உலகில் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் தமிழில் பாடி, தமிழில் ஆராதனை செய்து, தமிழில் செபித்து, தமிழில் கடவுளை வேண்டி, தமிழில் பூசை செய்யும் தமிழ்க் கிறித்தவர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியாது என்பது உங்களில் பதிலிலிருந்து தெரிகிறது. பல கிறித்தவ பாதிரிமார்கள் திருக்குறளில் புலமை பெற்றவர்கள். உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தொடங்கிய தமிழ்த்தூது வண்.பிதா தனிநாயகம் அடிகளார் கூட கிறித்தவ பாதிரியார் தான். கிறித்தவ தேவாலயங்களில் திருக்குறளை வாசிக்க எந்த தடையும் கிடையாது. ஆனால் தமிழ்நாட்டில் சைவ ஆலயங்களில் தேவாரம் கூடப் பாட முடியாதிருக்கும் பொது திருக்குறளை வாசிக்க முடியுமா? நீங்கள் ஜோக்கடிகிறீர்கள் போல் தெரிகிறது. 🙂

      தமிழ் இந்துக்கள் தமிழ்க் கிறித்தவர்களிடம் பிச்சை வாங்க வேண்டும்

      http://www.viyaasan.blogspot.ca/2013_06_01_archive.html

      ஈழத்தமிழ்மகன் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழா- 2013

      http://www.viyaasan.blogspot.ca/2013/06/2013.html

  10. //கால்டுவெல் பல தவறான கருத்துக்களை கொண்டிருந்தார். கிறிஸ்தவ மயப்படுத்துவதற்காக தமிழ்நாட்டில் தமிழை உயர்வு செய்வதாகக் கூறி சாதிச்சண்டையை ஆயுதமாகப்பயன்படுத்தினார். அய்யங்கார் என்ற பார்ப்பன சாதி எப்படி உருவானது என்பதை கால்டுவெல் அறியவில்லை//

    கால்டுவெல் எந்த தவறான கருத்தையும் கொள்ளவில்லை. தமிழகத்தில் உள்ள சாதி நிலைகளை பற்றி தெளிவான பார்வையோடு இருந்ததால் ஆதிக்க சாதியை சேர்ந்தவர்கள் அவர் சாதிகளுக்கு எதிராக செயல்படுவதாக கூறி அவர் மீது சேற்றை வாரி இறைத்தார்கள். கால்டுவெல்லின் திராவிட கருத்தியல் என்பது பெரியாரின் கருத்தியலோடு ஒப்பு நோக்க வேண்டியது. இந்து மதத்தின் சாதிய கொடுன்கொன்மைகளுக்கு ஆதரவான கருத்துக்களை சாடி தன்னுடைய ஆய்வை மேற்கொண்டார். இது அப்போதிருந்த பிராமண வேளாள சாதியினருக்கு மிகவும் வெறுப்பினை ஏற்படுத்தியது. இது குறித்து கீற்று இணையத்தில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது அதை நீங்கள் படிக்கவும்..

    அதில் கூற பட்டுள்ள சில விஷயங்களை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்….

    “பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக் காலத்தில் திருநெல்வேலிச் சீமை முழுவதும் இவ்வகை கிறித்தவத் தொண்டர்களின் சமயப்பணி நடைபெற்ற சூழலில் கால்டுவெல் பணியாற்றினார். இவருக்கு தட்பவெட்பச் சூழல், உடல்நலம் கெட வாய்ப்பாயிற்று. எனவே, 1854 இல் தமது தாயகத்துக்குத் திரும்பிச் சென்றார். அங்கு ஓய்வாக இருந்து திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூலை உருவாக்கி 1856 இல் இலண்டன் நகரத்தில் அச்சிட்டு வெளியிட்டார். கால்டுவெல் உருவாக்கிய இந்நூல்தென்னிந்திய திராவிட மொழிக்குடும்பம் குறித்த நிலையான ஆவணமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து 1857 இல் போப் – உருவாக்கிய தமிழ் இலக்கண நூலும், 1858இல் சாமுவேல்பிள்ளை உருவாக்கிய தொல்காப்பிய நன்னூல் என்னும் நூலும் 1862 இல் வின்சுலோ உருவாக்கிய தமிழ்-ஆங்கில அகராதி மற்றும் ஆங்கில-தமிழ் அகராதியும் தமிழியல் ஆய்வு வளர்ச்சியில் முக்கிய பணிகளாக உருப்பெற்றன. 1860 இல் பர்னல் எழுதிய ‘தென்னிந்திய தொல் லெழுத்தியல் கூறுகள்’ குறித்த நூலும் குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைந்தது. கால்டுவெல் செயல்பட்ட இச்சூழலில், தமிழ்ச்சூழல் எவ்வகையில் செயல்பட்டுக் கொண்டிருந்தது என்பது குறித்த புரிதல் தேவை. இதனைப் பின்வரும் வகையில் தொகுக்கலாம்.

    – வடலூர் இராமலிங்கன் என்னும் வள்ளலார் (1823-1874) சமரச சுத்த சன்மார்க்கம் என்னும் சமயச் சீர்திருத்தப் பணியைச் செய்துகொண் டிருந்த காலம்.

    – சைவ சமய மறுமலர்ச்சியைக் காலனியத்தின் மூலம் உருப்பெறும் மறுமலர்ச்சிக்கு இணை யாகக் கட்டமைக்க ஆறுமுகநாவலர் (1822-1879) முயற்சி எடுத்துக் கொண்ட காலமும் இதுவாகும்.

    – பிரம்மசமாஜம், ஆரிய சமாஜம் போன்ற சமயச்சீர்திருத்த இயக்கங்கள் செயல்பட்ட காலமும் இதுவாகும்.

    – சென்னை இலௌகிக சங்கம் (1878-1888) என்னும் நாத்திக இயக்கம் செயல்பட்ட காலமும் இதுவாகும்.

    மேற்குறித்த அமைப்புகள் எதுவும் கட்டமைக்காத கருத்துநிலையைக் கால்டுவெல் தமது நூலின் மூலமாகக் கட்டமைத்தார். ‘திராவிடம்’ என்னும் அக்கருத்துநிலை, அவரால் 1856 இல் உருவாக்கப்பட்டு, அவர் தமது நூலை 1875 இல் இரண்டாம் பதிப்பாகக் கொண்டு வரும் போது மேலும் வளர்த்தெடுத்த நிலையைக் காண முடிகிறது. 1856-1875 காலச்சூழலில், தமிழ்ச்சூழலில் உருவான புதிய கூறுகள் அனைத்தையும் தமது நூலில் அவர் இணைத்தார். அந்நூல் சென்னைப்பல்கலைக்கழகப் பாடநூல் ஆக்கப்பட்டது. கால்டுவெல், சென்னைப் பல்கலைக்கழக – ஆட்சிமன்ற உறுப்பினராக அங்கீகரிக்கப்பட்டார். 1879 இல் சென்னைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றும் தகுதியும் அவருக்கு ஏற்பட்டது. 1913 இல் கால்டு வெல்லின் ஒப்பிலக்கண நூலைச் சில மாற்றங்களுடன் பல்கலைக்கழகம் வெளியிட்டது. அந்நூலில் செய்யப் பட்ட மாற்றங்கள், கால்டுவெல் முன்னெடுத்த திராவிட இயல் குறித்த கருத்து நிலையைச் தமிழ்ச்சமூகம் எதிர் கொண்டதற்கான ஆதாரமாகக் கொள்ள இயலும். அந்நூலில் நீக்கப்பட்ட பகுதிகள், எவ்வகையான கருத்து நிலை சார்ந்து செயல்பட்டது என்பதைத் தொகுத்துக் கொள்வோம்.

    – கால்டுவெல், தமிழ் இலக்கிய உருவாக்கம் நடைபெற்ற போக்குகளை அவரது கண் ணோட்டத்தில் பதிவு செய்து இருந்தார். அதில் ‘சமண இலக்கிய வட்டம்’ என்னும் பகுதியும்,‘பார்ப்பனிய எதிர்ப்பு இலக்கிய வட்டம்’ என்னும் பகுதியும் இடம்பெற்றிருந்தது.

    – பறையர்கள் என்னும் மக்கள், ஆதிதிராவிடர்கள் என்னும் கருத்து நிலை சார்ந்த கருத்துக்களைக் கால்டுவெல் பதிவு செய்திருந்தார். 1849 இல் ஒடுக்கப்பட்ட சாணர்கள் குறித்த இனவரை வியல் நூலைக் கால்டுவெல் எழுதியிருந்தார். இந்தப் பின்புலத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்த பதிவைச் செய்தார்.

    – இந்து மத நடவடிக்கைகள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இருப்பதையும் பிற் காலத்தில் விரிவாகப் பதிவு செய்தார். இந்தக் கருத்தின் பல கூறுகளும் இவரது நூலில் இடம் பெற்றிருந்தன.

    கால்டுவெல் நூலிலிருந்து அகற்றப்பட்ட பகுதிகளின் அரசியல் கருத்துநிலையைப் புரிந்துகொள்ளப் பின் கண்ட வரையறையை முன்வைக்கலாம்

    – சைவ மற்றும் வைதீக மரபுக்கு மாறான சமண மரபு முன்வைக்கப்படுகிறது.

    – சாதிய அடிப்படையில் ஒடுக்கப்படும் மக்கள் திராவிடர்கள் என்னும் அடையாளத்திற்குள் கொண்டு வரப்படுகிறார்கள்.

    – சமசுகிருத கருத்துநிலை சார்ந்த நிலைப் பாட்டிற்கு எதிரான கருத்துக்கள் முன்வைக்கப் படுகின்றன.

    – ‘இந்துமதம்’ என்னும் கட்டமைப்பு கேள்விக்கு ஆளாக்கப்படுகிறது.

    கால்டுவெல் நூலில் நீக்கப்பட்ட பகுதிகள் மூலம், திராவிட இயல் சார்ந்த கருத்துக்களாக கால்டுவெல் கருதியவை நீக்கப்பட்டு சுத்தமாக்கப்படும் சூழல் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (1913) உருவானது. இத்தன்மை உருப்பெற்றதற்கான காரணம், ‘வைதீக கருத்துநிலை சார்ந்தவர்கள்’, குறிப்பாக சைவர்கள், கால்டுவெல் சொல்லும் திராவிடக் கருத்தியலை ஏற்றுக்கொள்ள இயலாதவர்கள்.

    சைவமரபு சார்ந்த திராவிடக் கருத்தியலை முன்னெடுக்க முயன்றவர்கள். சமூகத்தின் ஆதிக்க சாதியாக இருந்த வெள்ளாளர்கள் மற்றும் பார்ப்பனர்கள் கட்ட விரும்பிய திராவிட இயலுக்குப் புறம்பானதாகக் கால்டுவெல் கூறும் திராவிட இயல் அமைந்திருக்கிறது. வைதீக மரபுகள் சார்ந்த சாதியப் படிநிலைகளை ஏற்றுக் கொண்டவர்கள் கருதும் திராவிடம், கால்டுவெல் பேசும் திராவிடத்தை ஏற்கும் வகையில் இல்லை. இந்த முரண்தான் கால்டு வெல் நூலின் பகுதிகளை நீக்குவதற்கு அடிப்படையாக அமைவதைப் புரிந்துகொள்ள வேண்டும். மேற்குறித்த சைவம் சார்ந்த திராவிட மரபுகளை மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை (1855-1897) தொடங்கி, மறைமலை யடிகள் (1876-1950) வழியாக உருவான திராவிட வெள்ளாள மரபைப் புரிந்துகொள்ள முடியும். இவ்வகையில் கால்டுவெல் கட்டமைத்த திராவிட இயல் என்பது பின்வரும் கூறுகளில் கவனத்தில் கொள்ளத் தக்கது.

    – ஐரோப்பிய புத்தொளி மரபில் உருவான மொழிகளில் மரபுகளை அடிப்படையாகக் கொண்டு, திராவிடமொழிக் குடும்பம் என்பதைக் கண்டறிந்தது

    – திராவிட மொழிகளைப் பேசுபவர்கள் கொண் டிருந்த சாதிய மரபுகளை ஏற்றுக் கொள்ளாதது.

    – இந்து மதம் என்னும் பெயரில் வைதீகம் கட்டமைத்த கருத்துக்கள் முற்றிலும் மாறானது.

    – சாதிய படிநிலைச் சமூக உளவியல் தன்மையில் வாழும், ஆதிக்க சாதி மற்றும் ஆதிக்க சமயம் ஆகியவற்றுக்கு முரணானது.”

    ஆதாரம்:http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagamfeb2014/26164-1814-2014

    //ஆமாம் கால்டுவெல் மொழிபெயர்த்த ஆங்கில திருக்குறள் திருவாசகம் ஆகிய இரு தமிழ நூல்களையும் கிறிஸ்தவ திருச்சபை படிகின்றதா? கிறிஸ்தவ தேவாலயங்களில் வாசிப்பதுண்டா ? பொருள் குறித்து விவாதிப்பதுண்டா? இன்று சர்ச் களில் திருக்குறளுக்கு என்ன இடம் ? கிறிஸ்தவ கோவில்களில் திருக்குறளுக்கு இடம் கிடையாது//

    இதற்க்கு கால்டுவெல் என்ன செய்வார்.. கால்டுவெல் செய்த பணியை இப்போது இருக்கும் எந்த கிறித்துவ பாதிரிகளும் முன்னெடுப்பதில்லை. மக்களை மத ரீதியாக பிளவு படுத்தி வைப்பதிலே தான் இருக்கிறார்கள். இப்போது இருக்கும் கிருத்துவர்கள் யாரும் தன்னை தமிழர்களாக உணர்வதில்லை. என்னமோ, தாங்கள் ஐரோப்பாவில் இருந்து வந்தது போல் நினைத்து கொள்கிறார்கள். இவர்களின் இந்த அய்ரோப்பிய அடிமை மனோபாவம் தான் திருக்குறளை திருச்சபை ஏற விடாமல் செய்வது.

    • ரெபேக்கா மேரி,

      “ராபர்ட் கால்டுவெல்லை நினைவு கூர்வோம்” என்ற வினவின் கட்டுரைக்கு ஈடு இணையான கீற்று கட்டுரையை பின்னூட்டமாக வெளி இட்டதற்கு மிக்க நன்றி ரெபேக்கா மேரி.

      மிக்க பயன் உள்ள தகவல்

    • // இருக்கும் கிருத்துவர்கள் யாரும் தன்னை தமிழர்களாக உணர்வதில்லை. என்னமோ, தாங்கள் ஐரோப்பாவில் இருந்து வந்தது போல் நினைத்து கொள்கிறார்கள். //

      Identity crisis + Freakonomics

      • இதில் கொஞ்சம் கூட உண்மையில்லை. இலங்கையில் கிறித்தவர்கள் தம்மைத் தமிழர்களாக மட்டும் தான் அடையாளப்பதுத்துகிறார்கள். ஈழவிடுதலைப் போராட்டத்தில் கிறித்தவ பாதிரிமார்களின் பங்களிப்பையும், உயிர்த்தியாகத்தையும் குறைத்து மதிப்பிட முடியாது. அவர்கள் தம்மைத் தமிழர்களாக உணர்ந்து போராட்டத்தில் இணைந்து கொண்டதைத் திரித்து, ஈழவிடுதலைப் போராட்டத்தை கிறித்தவ சதியாகக் கூட சில இந்திய இந்துத்துவா இயக்கங்களும், சுப்பிரமணியம் சுவாமி போன்ற சிங்கள ஆதரவாளர்களும் கதை பரப்பி விட்டடதுண்டு. ஆனால் உண்மை அதுவல்ல. இலங்கையில் தமிழர்களுக்கிடையே இந்து-கிறித்தவ என்ற பிளவு கிடையாது. எல்லோருமே தமிழர்கள் தான். தமிழ்நாட்டில் கூட என்னுடைய அனுபவத்தில் கிறித்தவர்கள் தம்மைத் தமிழர்களாகத் தான் உணர்கிறார்கள். ஒரு சில new converts தான் தங்களைப் பாப்பாண்டவரை விடக் கூடுதலான கிறித்தவர்கள் போல் காட்டிக் கொள்ள, ஐரோப்பிய மோகம் கொண்டலைகிறார்கள்.

  11. //இன்று சர்ச் களில் திருக்குறளுக்கு என்ன இடம் ? கிறிஸ்தவ கோவில்களில் திருக்குறளுக்கு இடம் கிடையாது//
    //இவர்களின் இந்த அய்ரோப்பிய அடிமை மனோபாவம் தான் திருக்குறளை திருச்சபை ஏற விடாமல் செய்வது.//

    திருக்குறள் மதம் சார்ந்த நூலல்ல திருச்சபையிலோ கோவில்களிலோ படிக்கப்படுவதற்கு.
    உங்கள் தகவலுக்கு: சேக்ஸ்பியருக்கும் கூட கிறிஸ்தவ கோவில்களில் இடம் கிடையாது.

    இலங்கையில் பல (தமிழ்) கிறிஸ்தவர்களுக்கு திருக்குறளிலுள்ள பல குறள்கள் தெரியும்.

  12. ராமன் அவர்களுக்கு

    \\Phd என்று நினைகிறேன் . அதை முழுக்க தமிழிலேயே செய்தீர்களா ? உங்களுக்கு எனது அனுதாபங்கள் . யாருடனும் தொடர்பு கொண்டு உங்கள் சிந்தனையை அறிவியல் மொழயில் பேச முடியாமல் \\

    பட்ட ஆராய்ச்சி மேற்படிப்பு என்பது Post-Doctorate. பள்ளி கல்விக்குப் பிறகு அனைத்தும் ஆங்கிலத்தில் தான் இருந்தது. வாசிப்பு பழக்கத்தை விவாதம் செய்வதை தாய்மொழிக் கல்விச் சூழலில் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். ஆக அறிவியலை புரிந்துகொள்வதில் தடையேதும் இருக்கமுடியாது என்று கருதுகிறேன்.

    \\ தமிழில் உரைத்து பாருங்கள் . அந்தோ பரிதாபம்\\

    இளந்தோழர்களர்களின் அறிவியல் முகாமில் கலந்து கொண்டிருக்கிறேன். பரிதாபம் எல்லாம் ஏற்படவில்லை. புரிந்து விளக்குவதற்கு தேவை நாம் கொண்டிருக்கிற நோக்கங்களும் இலட்சியங்களும் தான் காரணமே இருக்கமுடியுமே தவிர ஆங்கிலம் ஒரு பொருட்டல்ல. வேலை செய்கிறவர்களை ஒட்டச் சுரண்டும் நிர்வாகத்திற்கும் HRக்கும் எதிராக ஒரு நாலுவரி ஆங்கிலத்தில் எழுதி உங்களது கம்பெனியில் ஒட்டுங்கள். பிறகு நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ளலாம். சுயமரியாதையும் தன்மானமும் இல்லாமல் ஒரு மொழியை கற்பதால் என்ன பலன் கிடைத்துவிடும்?

  13. ராமன் அவர்களுக்கு,

    \\ எல்லாம் சரிதான் . தமிழ் மொழியில் அறிவியல் வளராததால் அதற்குரிய vocabulary கிடையாது . உதாரணமாக photo negative என்பதை “இருட்டுக்கு பதில் வெளிச்சமும் வெளிச்சத்திற்கு பதில் இருட்டும் உள்ள பட சுருள் ” என்று எனது இயற்பியலில் படித்தேன் . சிந்தனை செய்வதற்குரிய சொல்லாடல்கள் இல்லை என்றால் சிந்திக்கவே முடியாது\\

    ஆங்கிலத்தில் எனது ஆராய்ச்சி தலைப்பு Negative Refraction in Photonic bandgap Crystals. அர்த்தம் புரிந்துவிட்டதா? இதை தமிழில் சொன்னாலும் அதே நிலைதான்; “ஆற்றல் பட்டை படிகங்களில் எதிர்மறை ஒளிவிலகல்” இங்கு பிரச்சனை கல்விக்கான வாய்ப்பு; அது வழங்கப்பட்டால் ஒருவர் ஆராய்ச்சியை எந்த மொழியில் வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம். Vocabulary என்பதெல்லாம் தானாக வரும். வர்த்தக சுதந்திரத்திற்கும் வாங்கி விற்கும் சுதந்திரத்திற்கும் தேவைப்படுகிற இங்கிலிபீசைத்தான் அறிவு அறிவு என்று கூறுவது மோசடியானது.

    ——————

    \\என்னுடைய அறிவின் பயன் என்ன ? ஒரு வேளை அணைத்து தமிழ் கொண்ட அறிவிய ஆராய்ச்சி கழகம் இருந்தால் அங்கே பணிபுரியும் வாய்ப்பு பெற்றால் அதற்கு பயன் கிட்டும் \\

    ஐஐடியிலும் பணிபுரியலாம். எங்களது மாணவர்கள் யாரும் மோசம் போய்விடவில்லை. ஆக தாய்மொழிவழிக்கல்வி இருக்கின்ற சூழ்நிலையில் வலியுறுத்தப்பட வேண்டும். இதுபோக அனைத்து தமிழ் கொண்ட அறிவியல் ஆராய்ச்சி கழகம் சோசலிச சமூகத்தில் மட்டுமே சாத்தியம்.

    ————

    \\ பொது அடிவாய் மின்னோட்டமும் நேர் மின் அழுத்தமும் என்கின்ற ரீதியில் இருந்த எலேக்ட்ரோன்சிஸ் படித்து ஒன்னும் புரியவில்லை. அதற்கு Vce என்று குறியீடு கொடுத்து இருந்தார்கள் . நல்ல வேளையாக எங்களுக்கு ஆங்கிலத்தில் கற்பித்தார் ஆசிரியர் . மிகவும் எளிமையாக இருந்தது .\\

    பங்கு ஆசிரியருக்கு உரியது. ஆங்கிலத்திற்கு என்ன சம்பந்தம்? இயற்பியலில் ஆங்கிலத்திற்கு என்ன பங்கு உண்டு? தாவரவியலில் கூடத்தான் ராவனெல்லா மடகாஸ்கரியன்சிஸ் என்று விசிறிவாழையை அழைக்கிறார்கள். எது புரிந்தது?

    • தோழர் தென்றல் ,
      //இதுபோக அனைத்து தமிழ் கொண்ட அறிவியல் ஆராய்ச்சி கழகம் சோசலிச சமூகத்தில் மட்டுமே சாத்தியம்.//

      மிக சரியாக சொன்னீர்கள் ….

      இங்கே வாதிடுபவர்கள் , ஒன்றை சரியாக புரிந்து கொள்ளாமலே பேசுகிறார்கள். தாய்மொழிக் கல்வியின் அழிவு என்பது திட்டமிட்ட ஒன்று மற்றும் தனியார்மயத்தின் நேரடியான விளைவுகளில் ஒன்றாகும் . உலகெங்கும் மக்கள் அவர்தம் தாய்மொழியிலே பயின்று/ஆராய்ந்து கொண்டிருக்க தலைகீழ் மாற்றமாக இங்கே தாய்மொழி என்பது வெறும் கலாச்சாரம் ,பண்பாடு,பழஞ்சுவடி படித்தல் போன்ற கருத்தாக பதியபடுகிறது.

      வெறும் நுகர்வு சார்ந்த விடயமாக மற்றும் அதை அடையும் பொருட்டு ஒரு பொருளாதார ஏற்றத்துக்காக/வேலை வாய்ப்பிற்காக அல்லது நமது சுயசார்பை நசுக்குவதுமான கல்வியாகவே இன்று நம் மீது ஆங்கிலத்தை திணிக்கிறார்கள்.

      நமது கல்வியென்பது நமது பொருளாதார சுயசார்பை நிலை நிறுத்துவதற்கு அடித்தளமாக இருக்க வேண்டும். ஆனால் பாருங்கள் , அது ஏகாதிபத்தியதிற்கு அடிவருடவே பயன்படுகிறது. இந்த சமூக அமைப்பில் இது போன்ற கல்வி சூழலில் எம்மொழிக் கல்வியும் அடிமைத் தனத்தை வளர்க்கவே செய்யும்.

    • //ஆங்கிலத்தில் எனது ஆராய்ச்சி தலைப்பு Negative Refraction in Photonic bandgap Crystals. அர்த்தம் புரிந்துவிட்டதா? இதை தமிழில் சொன்னாலும் அதே நிலைதான்; “ஆற்றல் பட்டை படிகங்களில் எதிர்மறை ஒளிவிலகல்” இங்கு //

      சேம் சைடு கோல் போட்டுடீங்கள ?

      ஆற்றல் பட்டை படிகங்களில் எதிர்மறை ஒளிவிலகல் என்று தமிழில் சொன்னால் கூட யாருக்கும் புரியாது என்று ஒப்பு கொள்கிறீர்கள் அதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள தமிழ் மாணவனால் கூகுளை பயன் படுத்த முடியாது . கிணற்று தவளையாக இருக்க வேண்டியது தான் .

      அடுத்து அதை மீண்டும் ஒருமுறை ஆங்கிலத்தில் படித்து ஆற்றல் பட்டை தான் hotonic bandgap Crystals என்று தெரிந்து கொள்ள வேண்டும் .

      நாடு தழுவிய கருத்தரங்கில் கலந்து கொள்ள முடியாது . அவன் ஆங்கிலத்தில் கற்று கொள்ளும் வரை அவனால் ஆற்றல் பட்டை என்பதை ஆங்கிலத்தில் சொல்ல தெரிந்து கொள்ளும் வரை அவனால் வினவு தலத்தில் கூட என்ன செய்து கொண்டு இருக்கிறேன் என்று சக தமிழனுக்கு சொல்லி புரிய வைக்க முடியாது .

      அதனால் பொன்னான நேரத்தை வீணாக்காமல் ஆங்கிலத்திலே படித்துவிடுவது நல்லது .

      கிணற்றிலேயே இருக்கும் வரை தவளை பாசை போதும் . மொழி வெறியினால் ஏழை மாணவர்களை முடமாக்காதீர்கள்

      // ராவனெல்லா மடகாஸ்கரியன்சிஸ் //

      இலத்தீன் அறிவியல் மொழியாக இருந்தது . அதனால் இலத்தீனில் இருக்கிறது அது ஆங்கிலத்தில் இல்லை . தமிழ் இலக்கிய மொழியாக மட்டும் இருக்கிறது . அதை அறிவியல் மொழியாக மாற்றுகிறேன் பேர்வழி எனபது வீண் வேலை

      • ராமன்,

        கலைச் சொற்கள் தமிழில் இல்லாதது தமிழின் குறைபாடா இல்லை அம்மொழியை பேசும் மக்களின் குறைபாடா இல்லை இந்த அமைப்பின் குறைபாடா ?

        தமிழில் கலைச் சொற்களைப் பேசினால் யாருக்கும் புரியாது என்பது எதனால்?

        இல்லை அறிவியலுக்கென்று தனி மொழி இருக்கிறதா? ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் பின்னால் எதாவது ஒரு மொழிப் பின்னணி இருக்கிறதா? அல்லது எல்லா அறிவியலாளர்களும் முதலில் இருந்தே ஆங்கிலத்தில் தான் ஆராய்ந்தார்களா?

        தோழர் தென்றல் கூறியது போல , தமிழர்கள் அவர்களின் ஆராய்ச்சியை இங்கு செய்யாமல் வெளிநாடுகளில் ஏன் செய்கிறார்கள்?

        உலகில் எங்கு ஒரு கண்டுபிடிப்பு நிகழ்ந்தாலும் அதை உடனடியாக ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்கிறார்கள் மற்றும் அதற்கேற்றாற்போல் சொற்களையும் பிற மொழிகளில் இருந்தே எடுத்தாளுகிறார்கள் மற்றும் அவர்களின் பரந்துபட்ட ஆதிக்கமும் இதற்க்கு ஒரு காரணம்.

        ஆங்கிலத்தில் ஆகச் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகள் எழுதப்பட்டு இருக்கின்றன. அதை யாரும் மறுப்பதற்கில்லை. அதற்காக ஒட்டு மொத்த மக்களும் ஆங்கிலத்தை படித்து பின்பு அந்த அறிவு செல்வதை பெறுவதென்பது இந்த அமைப்பில் , காசுக்குக் கல்வி பெரும் அமைப்பில் ஒருபோதும் நடவாத காரியம்.

        பேசுவதற்கு ஒரு மொழி , படிப்பதற்கு/அறிவியலுக்கு/வழக்காடுவதற்கு ஒரு மொழி , கோவிலுக்கு ஒரு மொழி என மக்களை ஏன் கொடுமைப் படுத்த வேண்டும்?

        அதை விட ஆர்வலர்கள் சிலர் அதை கற்றறிந்து மொழி பெயர்க்கலாம். உலகம் முழுதும் உள்ள மொழிகளில் இருந்து அறிவியல் கண்டுபிடிப்புகளை தமிழுக்கு கொண்டு வரலாம்.இது ஒன்றும் ஒரே நாளில் நடக்கவியலாது. அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யாத/செய்ய இயலாத இந்த அரசமைப்பில் இதற்கெல்லாம் வழியில்லை என்பது மிகவும் துயரமானது.

        நன்றி.

      • Hi Raman,

        //அடுத்து அதை மீண்டும் ஒருமுறை ஆங்கிலத்தில் படித்து ஆற்றல் பட்டை தான் hotonic bandgap Crystals என்று தெரிந்து கொள்ள வேண்டும்.//

        One just need to know the nomemclature in English too. By adding this within brackets along with the tamil nomemclature, one can learn things both in mother tongue and international tongue.

        //நாடு தழுவிய கருத்தரங்கில் கலந்து கொள்ள முடியாது//

        ஆங்கில வழியில் படித்தால்தான் ஆங்கிலம் புரியுமா? ஆங்கிலத்தில் பேச முடியுமா? எவ்வளவு தூரம் அறியாமையில் (அடிமைத்தனத்தில்) ஊறியிருக்கிறீர்கள் என்று இதிலிருந்தே தெரிகிறது.

        //நேரத்தை வீணாக்காமல் ஆங்கிலத்திலே படித்துவிடுவது நல்லது//.

        நேரத்தை வீணாக்காமல் உங்கள் வீட்டில் குழந்தைகளை ஆங்கிலத்திலே பேசி வளர்த்துவிடுங்கள். உறவினர்களிடம் பழக விடாதீர்கள். வெளியில் சமுகத்திற்கு கொண்டு செல்லாதீர்கள். முடிந்தால் ஆங்கில தம்பதியிடம் அவர்களுக்கு செலவுகளுக்கும் சிரமத்திற்கும் கட்டணம் செலுத்தி உங்கள் குழந்தைகளைக் கொடுத்து விடுங்கள்.

        //மொழி வெறியினால் ஏழை மாணவர்களை முடமாக்காதீர்கள் //

        ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம்.

        // ராவனெல்லா மடகாஸ்கரியன்சிஸ் // //இலத்தீன் அறிவியல் மொழியாக இருந்தது . அதனால் இலத்தீனில் இருக்கிறது//

        எல்லா மொழியும் அறிவியல் மொழிதான். ரோம பேரரசின் ஆதிக்கத்தினால் லத்தின் மொழி ஆளும் வர்க்கத்தின் பொது மற்றும் சங்கேத மொழியாக இருந்தது. அதனாலேயே அது அன்றைய ‘அறிவுஜீவிகளின்’ எழத்து மொழியாக இருந்தது. By the by, the scientific name Ravenala comes from Malagasy word ‘ravinala’ which means “forest leaves”.
        The genus Musa of Banana is the latinization of the Arabic name for the fruit, mauz. And the word “banana” came to English from Spanish and Portuguese, which in turn apparently obtained it from a West African language (possibly Wolof). The same is the case of almost all non-european plants and animals.

        //தமிழ் இலக்கிய மொழியாக மட்டும் இருக்கிறது . அதை அறிவியல் மொழியாக மாற்றுகிறேன் பேர்வழி எனபது வீண் வேலை//

        நலங்கிள்ளியின் ஆங்கில மாயை என்ற அருமையான நூலை உங்களுக்கு பரிந்துரைக்கிறேன். இங்கிலாந்தில் லத்தீன் தேவபாஷையாகவும் ஆங்கிலம் நீசபாஷையாகவும் இருந்ததையும் ஆங்கிலத்தை தனது உரிய நிலைக்குக் கொண்டுவர நாட்டுப்பற்றுள்ள ஆங்கிலயர்கள் எத்தனைப் போராட்டங்கள் நடத்தினர் என்பதையும் விளக்கியிருக்கிறார். போராட்டங்களினால் சில அறிஞர்கள் உயிரையும் துறந்தனர். (I will give you more ‘googleable’ details tomorrow)

        • //One just need to know the nomemclature in English too. By adding this within brackets along with the tamil nomemclature, one can learn things both in mother tongue and international tongue.//

          அததையா கேட்குறேன் . எதுக்கு ரெண்டு வேலை ?

          //நேரத்தை வீணாக்காமல் உங்கள் வீட்டில் குழந்தைகளை ஆங்கிலத்திலே பேசி வளர்த்துவிடுங்கள். உறவினர்களிடம் பழக விடாதீர்கள்//

          அறிவியலை ஆங்கிலத்தில் படிங்க என்று சொன்னதை இப்படி திரித்து என்னை பூசாண்டியாகி , நாங்கள் நல்லவராகி கொள்வது . ரொம்ப நல்லவராமா

          //எல்லா மொழியும் அறிவியல் மொழிதான்//

          எல்லா மொழியும் அறிவியல் மொழிதான் பிற மொழியினரும் ஏற்றுக்கொள்ளும் வரை

          //இங்கிலாந்தில் லத்தீன் தேவபாஷையாகவும் ஆங்கிலம் நீசபாஷையாகவும் இருந்ததையும் ஆங்கிலத்தை தனது உரிய நிலைக்குக் கொண்டுவர நாட்டுப்பற்றுள்ள ஆங்கிலயர்கள் எத்தனைப் போராட்டங்கள் நடத்தினர் என்பதையும் விளக்கியிருக்கிறார்//

          நீங்களும் போராட்டம் நடத்தி உங்கள் தமிழை உலகோர் மெச்சும் அறிவியல் மொழியாகுங்கள் .

          வரலாறு அவர்களுக்கு எப்படி ஒரு பாதை அமைத்து தந்தது அதே போல ஒரு பாதை தமிழுக்கு இருக்கிறதா ? புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கலாம் . புலியா ஆகா முடியாது

          //googleable//

          Also teach me how to search in Tamil and get all the resources i want

    • தென்றல், உங்கள் தமிழார்வம் மற்றும் அறிவியல் புலமை என்னை ஆச்சர்யபடுதுகிறது.உஙகள் மெயில் ஐ.டி தரமுடியுமா? உஙளோடு பேச விரும்புகிறேன்.

      • பென் அவர்களுக்கு,

        மின்னஞ்சலை பொதுத்தளத்தில் பதிவு செய்வதில் (அனாமேதய மின்னஞ்சலாக இருந்தாலும்) பல்வேறு சிக்கல்கள் உள்ளன. வாசகர்களை சந்திக்கிற கூட்டம் நடைபெற்றால் சந்திக்க முடியுமா என்று பார்ப்போம். நன்றி.

  14. ராமன் அவர்களுக்கு,

    \\ அந்த அறிவு இருந்து இருந்தால் எனக்கு தன்னம்பிக்கை கிடைத்து இருக்கும் . ஆங்கிலத்தில் பேச முடியாமல் கல்லூரியில் சோபிக்க முடியவில்லை . நேர்முக தேர்வில் உளறல்கள் . வாடா MS பண்ண அமெரிக்கா போகலாம் என்று நண்பன் அழைத்த பொது போக தன்னம்பிக்கை வரவில்லை.
    தமிழில் நல்ல அறிவோடு இருந்தாலும் குறிப்பிட்டா எல்லையை தாண்ட முடியாது . குண்டு சட்டியில் குதிரை ஓட்டலாம்.\\

    தமிழில் பயின்றவர்கள் ஆங்கிலத்தில் சிறப்பாக இருப்பதற்கு பிரேத்யக பயிற்சி எல்லாம் தேவையில்லை. தாய்மொழியைக் கற்கிற பொழுதே ஆங்கிலத்தையும் கற்கலாம். ஒரு மொழியாக. தமிழிலும் மொழிபெயர்ப்பு பகுதிகள் சிக்கலாகத்தான் இருந்தது. தாய்மொழிக்கல்வியில் விவாதங்களில் பங்கெடுத்து இருந்திருந்தீர்களேயானால் நேர்முகத்தேர்வில் உளறல்கள் வந்திருக்குமா?

    வேதியலில் இரண்டாவது தொகுதியின் உணவுக்கலப்படம் பாடத்தை நாங்கள் பட்டி மன்றம் வடிவில் நடத்தினோம். 12ஆம் வகுப்பில் இதுபோன்ற சூழ்நிலைகள் பிற பள்ளிகளில் சாத்தியமா?

    எனது இயற்பியல் ஆசிரியர் அண்டம் (Universe) பாடத்தை மாணவர்களையே செமினாராக எடுக்கச் சொன்னார். எதற்கு வர வேண்டும் தயக்கம்? சூழலை உறுதிப்படுத்துங்கள். கல்வியைச் சரக்காக பார்க்கும் மனோபாவம் மாறினாலே நமது குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலத்தை தரமுடியும். அதை தாய்மொழிக்கல்வியில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.

    \\ அடுத்தது நான் இப்பொழுது தமிழில் படித்து புரிந்து கொண்டேன் என்று வைத்து கொள்ளுங்கள் , இதை நான் ஒரு அலுவலத்தில் பணிபுரியும் வேற்று மாநிலதாரிடம் விளக்க வேண்டும் . எப்படி செய்வது ? என்னுடைய அறிவின் பயன் என்ன ? \\

    வேற்று மாநிலத்தவருக்கு மட்டும் ஆங்கிலம் தெரியுமா என்ன? நீங்கள் சொல்வதைப் போல ஆங்கிலத்தில் தான் நாங்களும் விளக்குகிறோம். ஆனால் இதற்கு எது காரணம்? ஆங்கிலமா?

    நீங்கள் ஒரு கார்ப்பரேட் சூழ்நிலையில் இருந்தால் ஒரு தொழிற்சங்கத்தைக் கட்டுங்கள். இதற்கு அங்கிலம் உதவினால் அதுதான் உங்களது அறிவின் பயன். அப்பொழுது கூட யாரும் உங்களது ஆங்கில அறிவை பாராட்ட மாட்டார்கள். போராடும் குணத்தைத்தான் பாராட்டுவார்கள்.

    \\ தமிழ் அறிவு என்றால் திருக்குறளையும் சிலபதிகாரதையும் படிப்பது மட்டும் தானா ?
    Communication skill என்றுதான் கூறுவார்கள் literature ஸ்கில் கிடையாது\\

    உங்களது கம்யுனிகேசன் ஸ்கில்ஸ் தான் வாங்கி விற்கும் சுதந்திரம் வாணிபச் சுதந்திரம் என்றாயிற்றே? என்றைக்கு நீங்கள் சாப்ட்வேர் துறைக்குள் நுழைந்தீர்களோ அன்றைக்கு நீங்கள் முதலில் இழந்தது இந்த கம்யுனிகேசன் ஸ்கில்சைத்தான். எத்துனை முறை உங்களது HRக்கு பத்திபத்தியாக மின்னஞ்சல் அனுப்பினீர்கள்? கார்ப்பரேட்டுகள் டெம்ளேட் வகை மெயில்களைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

    வேண்டுமானால் உங்களது கம்யுனிகேசன் ஸ்கில்சை வைத்து “Insurance is the subject matter of market risk. Read the offer document carefully before investing” என்பதை யாருக்கும் புரியாமல் வேகமாக ஒப்பிக்கலாம். இது தேவையா?

    • தோழர் தென்றல்,

      உங்கள் பதில்கள் அருமை.

      பள்ளிக்கல்வி தாய் மொழியில் கற்பதே சிறந்தது. 6 வதிலுருந்து கூடவே கலைச்சொற்களை ஆங்கிலத்திலும் கற்பித்துவிட்டால் பலரின் குறைகானலுக்கு தகுந்த பதிலாக அமையும்.

      கல்லூரிகளில் தாய் மொழியிலோ ஆங்கிலத்திலோ கற்கலாம். கலைச்சொற்களை ஆங்கிலத்திலும் கற்பிப்பது அவசியம்.

    • /எத்துனை முறை உங்களது HRக்கு பத்திபத்தியாக மின்னஞ்சல் அனுப்பினீர்கள்? //

      Yes sir. My English knowledge is useful only to send letters to HR sir.
      You found out it sir. You are great sir.

      Thanking you sir,
      Raman

      • இராமன் அவர்களுக்கு,

        இப்படி சடாரென்று கோபித்துக்கொள்வதால் என்ன பயன்? சரி உங்களால் ஆங்கிலத்தில் பலவிசயங்களைச் செய்ய முடிகிறது.

        உண்மையிலேயே உங்களது ஹெச் ஆருக்கும் டீம் லீடருக்கும் என்ன தெரியும்? அவர்களுடைய ஆங்கிலப்புலமை யாருக்கு எந்த விதத்தில் பயன்படுகிறது? வீட்டுக்கடன் கட்டுவதற்கு அப்ளிகேசன் போடத் தெரியும். வேற என்ன தெரியும்? Resignation Letter கூட இப்பொழுதெல்லாம் அனுப்பவதில்லையாமே! கழுத்தில் மாட்டியிருக்கிற ஐடிகார்டை கழற்றி வைத்துவிட்டு போ என்கிறார்களே.

        கோடிங், டெஸ்டிங்கிற்கு ஆங்கிலம் தேவையில்லை. அது மூளை சம்பந்தப்பட்ட விசயம். பிறகு கார்ப்பரேட் துறையில் உங்களைப்போன்ற ஊழியர்களைத் தவிர பிற மேலதிகாரிகளும் சீஇஒ க்களும் என்னதான் செய்கிறார்கள். அவர்களுக்கு ஆங்கிலம் எப்படி பயன்படுகிறது என்று எழுதுங்களேன். தெரிந்து கொள்கிறோம்.

  15. பொறியியல்,விஞ்ஞானம் ,தொழினநுட்ப சார்ந்த நூல்களை எளிமையாக புரியும் படி தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் தொழர் தென்றல் மத்திய தொழில் பயிலகம் என்று சென்னை கிண்டியில் உள்ளது இவர்கள் ஐடிஐ பாட நூல்களை தமிழ் படித்தி இருக்கிறார்கள் அனால் அதை படிக்க மீண்டும் ஆங்கில நூலகளை ரெபர் பண்ணனும் அப்பதாம் புரியும் பேசி புரிஞ்சுகிற தமிழ்க்கும் படிக்கிற தமிழ்க்கும் ஏகப்பட்ட வித்தியாசம் தமிழை அந்த அளவுக்கு ஆங்கிலம் கலந்து பேசுறோம் இத குறச்சு சுத்தமான் தமிழ் எல்லாறுக்கும் தெரியனும் அப்பதான் தமிழ்ல எது படிச்சாலும் புரியும் நான் கூட தமிழதான் படிச்சேன் ஆனா ஆங்கிலம் புரியிற மாரி தமிழ் புரியல மின் மாற்றி மின் ஆக்கி அலைதிருத்தி எலக்ட்ரான் மின் சுமைனு படிக்கிறத விட மோட்டார் ஜெனரேட்டர் ரெக்டிபயர் அப்பிடினு படிக்கிறதுதான் புரியுது என்ன பண்ணலாம் எப்பிடி படிக்குறவன் புறிஞ்சுபான் கொஞ்சம் நடைமுறையில யொசிச்சு எங்க தப்பு நடக்குதுனு தெரிஞ்சு அதுக்கு சால்வ் என்னனு சொல்லுங்க தென்றல்

  16. இதே மனநிலையில் தான் கல்லுநெஞ்சு தற்போது பேசிகொண்டு உள்ளார் !

    //பார்ப்பன மேலாண்மையினை மனமுவந்து ஏற்றுக்கொண்ட சற்சூத்திர தமிழர்கள், ஒடுக்கப்பட்ட மக்களான பறையர்களைத் தமிழர்களாகக் கூட ஏற்க மறுக்கும் சாதிவெறியில்தான் இருந்தனர். //

  17. கல்நெஞ்சம்,

    நீங்கள் கொடுத்த லிங்க் மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது !

    https://archive.org/details/comparativegramm00caldrich

    ராபர்ட் கால்டுவெல் அவர்களீன் புத்தகம் முழுமையாக கிடைக்கின்றது.பக்கம் 540 முதல் 554 வரை உள்ள APPENDIX முழுமையாக படிக்கவும் !

    தலைப்பு:

    ARE THE PAEIARS (PAREIYAS) OF SOUTHERN INDIA
    DRAVIDIANS ?

    படித்த பின்பு இவ் விவாதத்தை நீங்கள் வெட்கி, தலை குணிந்து வினவுக்கு ம்ண்னிப்பு கூறி முடித்து கொள்வீர்கள் அல்லவா ?

  18. தென்றல்,RED,கல்நெஞ்சம்,

    [1]ஆதாரம் கீழ் உள்ள என் blag ல் உள்ளது.

    [2]ராபர்ட் கால்டுவெல் அவர்களீன் புத்தகம் முழுமையாக கிடைக்கின்றது.பக்கம் 540 முதல் 554 வரை உள்ள APPENDIX ஐ என் blog ல் கொடுத்து உள்ளேன்

    Note:
    —————-

    கல்நெஞ்சம் ,If you do not believe my blog then you download the book from your own recommended web site and read the pages from 540 to 554 under the topic appendix :
    ARE THE PAEIARS (PAREIYAS) OF SOUTHERN INDIA
    DRAVIDIANS ?

    • பறையர்கள் என்ற வார்த்தை தேடிபிடித்து ARE THE PAEIARS (PAREIYAS) OF SOUTHERN INDIA DRAVIDANS படித்த நீங்கள் அதற்கு அடுத்த பகுதியான are the neilgherry tudas dravidians?? படிக்க மறந்துவிட்டீர்கள் என நினைக்கிறேன்..

      எனவே are the neilgherry tudas dravidians?? என்பதையும் சேர்த்து படித்தால் நலமாய் இருக்கும்.

      அதன் பின் வெட்கி தலைகுனிந்து ………… டையலாக் விடலாம்…

      • கல்நெஞ்சம்,

        உம் கேள்வி என்ன ?

        ”பறையர்களே பூர்வீகத் தமிழர்கள்” என்பதற்கு ஆதாரம் தானே கேட்டிர்கள் !

        Here is the evidence:

        The Pareiyas constitute a well-defined, distinct, “ancient caste”, independent of every other; and the Pareiya caste has subdivisions of its own, its own peculiar usages, its own traditions, and its own jealousy of the encroachments of the castes which are above
        it and below it.They constitute, perhaps, the most numerous caste in the “Tamil country”.

        Dictionary meaning for :
        ——————————————

        [1]ancient —>பூர்வீகம்
        [2]Tamil country—>தமிழ் நாடு

        Logical Meaning for the above paragraph:
        ——————————————————–
        ####The Pareiyas constitute ancient caste and most numerous caste in the Tamil country.

        ####When we translate this in to Tamil then We can understand that what vinavu said is CORRECT. YES WE GET…….

        ####பறையர்கள் பூர்வீக சாதி மற்றும் தமிழ் நாட்டின் பெரும்பான்மை ஜாதி ஆவார்கள்.
        எனவே
        ”——————-பறையர்களே பூர்வீகத் தமிழர்கள்——————-”

        Note:
        ——————

        See I gave evidence for what you ask! Do not try to deviate the matter!

        vinavu://ஆனால், கால்டுவெல்லின் ஆய்வு ”பறையர்களே பூர்வீகத் தமிழர்கள்” என்பதை நிறுவியது.//

        கல்நெஞ்சம்//அவர் எப்ப அப்படி சொன்னார் வினவு அவர்களே.. இதுதான் கேப்பில் கப்பல் விடுவதா.. இது உண்மையெனில் ஆதாரங்கள் தேவை தோழரே//

        கல்நெஞ்சம்://வினவு கட்டுரையில் கூறப்பட்டது.
        // பறையர்களே பூர்வீகத் தமிழர்கள் //அப்படி அவருடைய புத்தகத்தில் எந்த பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளார். அந்த பக்க எண் அல்லது மேற்கோள்களை அவருடையை ஆராய்ச்சி கட்டுரையில் அதாவது லன்டனில் ஆங்கிலக் கட்டுரையில் எங்கே உள்ளது. அந்த பக்கத்தை மட்டும் மேற்கோள் காட்டவும். வேறு எந்த blog லிங்குகளை எனக்கு காட்ட வேண்டாம். உடனே தமிழ் மொழியில் அந்த புத்தகம் மொழி பெயர்க்கப்பட்டது. அதில்தான் பிழை என வாதாட வேண்டாம். அவருடைய எழுதிய ஆராய்ச்சிக்கட்டுரை ஆங்கிலத்தில் மட்டும் தான் உள்ளது. //

      • கல்நெஞ்சம்,

        [1]இப்போதே நீங்கள் உங்கள் அறியாமைக்காக வினவு தளத்தில் வெட்கி தலை குனிந்து கொண்டு தான் உள்ளீர்கள்.

        [2]நீங்கள் கேட்ட “பறையர்களே பூர்வீகத் தமிழர்கள்” என்பதற்கு ஆதாரம் எம்மால் தெளிவாக கொடுக்கபட்டு உள்ள போது ஏன் தேவை அற்ற புலம்பல் உங்களீடம் கல்நெஞ்சம்!. 🙂

        //அதன் பின் வெட்கி தலைகுனிந்து ………… டையலாக் விடலாம்…//

      • கல்நெஞ்சம்,

        [1]தேடி எல்லாம் படிக்கவீல்லை கல்நெஞ்சம்!

        [2]நீங்கள் யாருடைய கட்டுரையை உதார் கட்டுரை என்று கூறினிர்களோ [திரு வ.கீதா வின் “நீக்கப்பட்ட பகுதிகள் – ஒரு ஆய்வு”] அக் கட்டுரையீல் நூலில் பிற்சேர்க்கைகளாக இணைக்கப்பட்ட- ‘பறையர்கள் திராவிடர்களா?’ ‘நீலகிரித் தோடர்கள் திராவிடர் களா?’ என்று தலைப்பிடப்பட்ட இரு கட்டுரைகளும் – நீக்கப் பட்டுள்ளன என்ற தகவல் மிக தெளிவாக கூறபட்டு உள்ளது.

        [3]எனவே யாரையும் மிக மலிவாக நினைக்கவேண்டாம் கல்நெஞ்சம்!

        [4]மேலும் நீங்கள் கேட்ட ஆதாரங்களை நீங்கள் சொன்ன தளத்தில் இருந்து தான் பெற்றேன் என்பதையும் மேலும் நீங்கள் கேட்ட ஆதாரங்களை நீங்கள் சொன்ன தளத்தில் இருந்து தான் பெற்றேன் என்பதையும் கூறிகொள்கின்றேன். நன்றி கல்நெஞ்சம்!

        [5]சரி சரி கல்நெஞ்சம், சரி சரி வேறு ஏதேனும் ஆதாரம் தேவையா கல்நெஞ்சம்!!. 🙂

        //பறையர்கள் என்ற வார்த்தை தேடிபிடித்து ARE THE PAEIARS (PAREIYAS) OF SOUTHERN INDIA DRAVIDANS படித்த நீங்கள் அதற்கு அடுத்த பகுதியான are the neilgherry tudas dravidians?? படிக்க மறந்துவிட்டீர்கள் என நினைக்கிறேன்..//

  19. திரு.வியாசன்…

    நீங்கள் கூறுவதை போன்று தமிழ் உணர்வுள்ள கிறித்துவர்கள் இலங்கையில் இருக்கலாம். ஆனால் இங்கு தமிழ்நாட்டில் மிக அரிது.

    // இலங்கையில் தமிழர்களுக்கிடையே இந்து-கிறித்தவ என்ற பிளவு கிடையாது. எல்லோருமே தமிழர்கள் தான். தமிழ்நாட்டில் கூட என்னுடைய அனுபவத்தில் கிறித்தவர்கள் தம்மைத் தமிழர்களாகத் தான் உணர்கிறார்கள். //

    இங்குள்ள கிறித்துவர்கள் தங்களை தமிழர்களாக உணர்கிறார்கள் என்பதை எதன் அடிப்படையில் கூறுகிறீர்கள். வீட்டில் தமிழ்மொழியை பேசுவதாலா. இதை வைத்து ஒருவரை தமிழ் உணர்வுள்ளவர் என்று எப்படி கூற முடியும். வெறுமனே, சர்ச்சுகளில் ஆராதனையின் போதும் , மன்றாட்டின் போதும் தமிழில் பாடுவதால் மட்டும் தமிழ் உணர்வுள்ளவர்கள் என்று கூறி விட முடியுமா. அவர்களுக்கு தெரிந்த மொழி தமிழ் அதனால் அவர்கள் தமிழில் பாடுகிறார்கள் அவ்வளவுதான் . இதே,அவர்கள் இந்நேரம் மலையாளிகளாக இருந்திருந்தால் இந்நேரம் அவர்கள் மலையாளத்தில் பாடி இருப்பார்கள். இதனாலெல்லாம் இவர்களை தமிழ் உணர்வு கொண்டவர்கள் என்று நினைத்து விட வேண்டாம். தமிழ் உணர்வு உள்ளவர்கள்,தமிழ் மொழியின் ஒவ்வொரு அம்சத்தையும் நேசிக்க வேண்டும். மதம் கடந்து தமிழ் மொழியின் ஒவ்வொரு இலக்கியத்தையும் அரவணைக்க வேண்டும்.

    இன்று தமிழகத்தில் இருக்கும் எத்தனை கிறித்துவர்களின் வீடுகளில் தேவாரம், திருவாசகம் இருக்கிறது. எத்தனை பேர் தமிழ் மொழியில் உள்ள இலக்கியங்களை விரும்பி படிக்கிறார்கள். அது பக்தி இலக்கியமாகட்டும் அல்லது சங்க இலக்கியமாகட்டும்.

    கத்தோலிக்கர்களாவது பரவாயில்லை, திருக்குறள் வரையாவது ஏற்று கொள்கிறார்கள். ஆனால், இங்கிருக்கும் C.S.I மற்றும் பெந்தகொஸ்தே பிரிவை சேர்ந்த கிருத்துவர்கள் தங்களின் புனித வேதாகமத்தை தவிர பிற மத(அவர்களின் பாணியில்) இலக்கியங்களான திருவாசகத்தை,தேவாரத்தை சாத்தானிடம் இருந்து வந்தவை என்றும். இவைகளை எல்லாம் படித்தாலே பெரும் பாவம் என்றும் நினைக்கிறார்கள். இது போன்ற முட்டாள் தனமான கருத்திற்கு இங்கிருக்கும் பாதிரிகளும், மதபோதகர்களும் நன்றாக தூபம் போடுகிறார்கள். அவர்களை பொறுத்த வரையில் அவர்கள் ஏற்றுக்கொள்ள கூடிய ஒரே தமிழ் நூல் “பரிசுத்த வேதாகமம்” மட்டும் தான். இப்படி பட்ட மனநிலையில் தான் தமிழ் நாட்டில் இருக்கும் 99 விழுக்காடு கிறித்துவர்கள் இருக்கிறார்கள்.

    தமிழர்களில் கிறித்துவர்கள் மட்டும் தான் என்றில்லை அனைவருமே ஏதாவது ஒரு கருத்தாக்கத்திற்கு அடிமையாக தான் இருக்கிறார்கள். இந்துக்கள் ஆரிய சிந்தனைகளுக்கும்; இசுலாமியர்கள் அராபிய சிந்தனைகளுக்கும்; கிறித்துவர்கள் அய்ரோப்பிய சிந்தனைகளுக்கும் அடிமைகளாகத்தான் இருக்கிறார்கள். அடிப்படையில் இவர்கள் அனைவரும் தமிழர்கள் என்பதை மறந்து எவ்வளவோ காலங்கல் ஆகி விட்டது

    முதலில் இவர்களின் பிள்ளைகளை ஆங்கில பள்ளிகளை தவிர்த்து விட்டு தமிழ் வழி கல்வியில் படிக்க வைக்கட்டும் பிறகு பார்த்து கொள்ளலாம். அதை விட்டு மேரி மாதாவின் சிலைக்கு முன்பு நின்று “அருள் நிறைந்த மரியே வாழ்க;கர்த்தர் உம்முடனே, பெண்களுள் ஆசீர்வதிக்க பட்டவள் நீரே” என்று தமிழில் மன்றாட்டு பாடுவதால் மட்டும் அவர்கள் தமிழர்கள் என்றால். தில்லையில் உள்ள தீட்சிதர்களும் தமிழர்களே!!! ஏனென்றால் அவர்களும் வீட்டில் தமிழ் தான் பேசுகிறார்களாம்.

    • திரு(மதி).ரெபேக்கா மேரி,

      என்னுடைய ‘அனுபவத்தில்’ தமிழ்நாட்டிலுள்ள கிறித்தவர்களும் தமிழுணர்வுள்ளவர்கள் என்று கூறினேனே தவிர, தமிழ்நாட்டுத் தமிழ்க் கிறித்தவர்கள் அனைவரும் தமிழுணர்வுள்ளவர்கள் என்று கூறவில்லை. உங்களின் கருத்துப் படி பார்த்தால், தமிழ்நாட்டிலுள்ள இந்துக்கள் மட்டுமல்ல, எல்லோருமே தமிழுணர்வற்றவர்கள் என்றும் வாதாடலாம். கிறித்தவர்களாவது தமது தாய்மொழி தமிழில் வழிபாட்டை நடத்துகிறார்கள். ஆனால் இந்துக்களும், முஸ்லீம்களும் அந்நிய, தெரியாத மொழியில் வழிபாட்டை நடத்துகின்றனர்.

      எனக்குத் தெரிந்த தமிழ் கிறித்தவர்கள் பலர், தமிழிலக்கியங்களில் புலமை வாய்ந்தவர்கள். தேவாரம் திருவாசகங்களைக் கூட அதில் தமிழின் இனிமைக்காக ரசிக்க, அதனூடாக தமிழின் அழகை அனுபவிக்கத் தெரிந்தவர்கள். ஒரு சிலர் சங்கீதத்திலும் வல்லமை பெற்றவர்கள். ஐரோப்பிய மோகம் கொண்ட கிறித்தவர்கள் பலர் இருந்தாலும், ஜோ டி குரூஸ் போன்ற, தனது முன்னோர்களின் தெய்வங்களாகிய குமரித்தாயையும், முத்தாரம்மனையும் மதிக்கத் தெரிந்த, போற்றத் தெரிந்த, தமது பரம்பரையின் தமிழ் வேரைப் பெருமையுடன் தடவிப் பார்க்கும் லட்சக்கணக்கான தமிழ் கிறித்தவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். உதாரணமாக, ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டத்தில், தமிழ்நாட்டு இந்துக்குருமார்களை விட, கிறித்தவப் பாதிரிமார்கள் தமது தமிழுணர்வை காட்டியிருக்கிறார்கள். ஈழத்தமிழர்களின் அழிவுக்கு எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்கள். அவர்களுக்கு தமிழுணர்வு இல்லாது விட்டால் எனக்கென்ன போச்சென்று இருந்திருப்பார்கள். தமிழுணர்வென்றால் தேவாரம், திருவாசகம் படிப்பதும், தமிழ் இலக்கியங்களை விரும்பிப் படிப்பதும் அல்ல, அப்படிப் பார்த்தால் பெரும்பான்மையான (நான் உட்பட) தமிழர்கள் தமிழுணர்வற்றவர்கள் என்றாகி விடும். என்னைத் தமிழுணர்வுள்ளவனாகத் தான் நான் கருதுகிறேன். எனக்கும் தேவாரம், திருவாசகம், தமிழிலக்கியங்களில் ஒரு இழவும் தெரியாது. 🙂

      • ரெபேக்கா மேரி,

        [1]திரு வியாசன் அவர்களீன் கருத்துகளை நாம் ஆழ்ந்து யோசித்து பார்க்க வேண்டும். தேவாரம், திருவாசகம் ஆகியவை சைவம் சார் சமய தமிழ் இலக்கியங்களாக இருக்கும் போது ,சைவ மதம் சார்ந்த, சிவன் மீது பெரிதும் அன்பு கொண்ட திரு வியாசனே அவற்றை முழுமையாக கற்காத போது, கிறித்துவர்களை தேவாரம், திருவாசகம் படிக்கச் சொல்வது எங்கணம் பொருத்தம் உள்ளதாக இருக்கும.

        [2]நம் திருக்குரல் நம் தமிழர் நீதி நூலாக உள்ள போது, அதை உலகமும் சமய சார்பு அற்ற நீதி நூலாக ஏற்று கொண்டு உள்ள போது ,அதை தமிழர் அனைவரும் மத,அரசியல் சார்பு இன்றி கற்கும் போது கிறித்துவர்களை தேவாரம், திருவாசகம் போன்ற சைவ மதம் சார்ந்த பக்தி இலக்கியங்களை கற்க சொலவது எப்படி பொறுத்தமுடையதாக இருக்கும் ?மதம் சாராத திருக்குரல் ஒன்றே அனைத்து மத தமிழர்களுக்கும் போதுமே !

        viyasan//தமிழுணர்வென்றால் தேவாரம், திருவாசகம் படிப்பதும், தமிழ் இலக்கியங்களை விரும்பிப் படிப்பதும் அல்ல, அப்படிப் பார்த்தால் பெரும்பான்மையான (நான் உட்பட) தமிழர்கள் தமிழுணர்வற்றவர்கள் என்றாகி விடும். என்னைத் தமிழுணர்வுள்ளவனாகத் தான் நான் கருதுகிறேன். எனக்கும் தேவாரம், திருவாசகம், தமிழிலக்கியங்களில் ஒரு இழவும் தெரியாது//

        ரெபேக்கா மேரி://இன்று தமிழகத்தில் இருக்கும் எத்தனை கிறித்துவர்களின் வீடுகளில் தேவாரம், திருவாசகம் இருக்கிறது. எத்தனை பேர் தமிழ் மொழியில் உள்ள இலக்கியங்களை விரும்பி படிக்கிறார்கள். அது பக்தி இலக்கியமாகட்டும் அல்லது சங்க இலக்கியமாகட்டும். //

    • //மாதாவின் சிலைக்கு முன்பு நின்று “அருள் நிறைந்த மரியே வாழ்க;கர்த்தர் உம்முடனே, பெண்களுள் ஆசீர்வதிக்க பட்டவள் நீரே” என்று தமிழில் மன்றாட்டு பாடுவதால் மட்டும் அவர்கள் தமிழர்கள் என்றால். தில்லையில் உள்ள தீட்சிதர்களும் தமிழர்களே!!! ஏனென்றால் அவர்களும் வீட்டில் தமிழ் தான் பேசுகிறார்களாம்.///

      1. தமிழ்க் கிறித்தவ்ரக்ளையும் தீட்சிதர்களையும் ஒப்பிடுவது வெறும் அபத்தம். தீட்சிதர்கள் தாம் வெளியிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்ததாக ஒப்புக் கொள்வது மட்டுமல்ல, அதைப் பெருமையாகவும், அதனால் அவர்கள் தமிழர்களை விட உயர்ந்தவர்களாகவும் நினைத்துக் கொள்கின்றனர். ஆனால் தமிழ்க் கிறித்தவர்கள் தமிழ்மண்ணுக்கு வெளியிலிருந்து வந்தவர்கள் அல்ல.

      2. தமிழ்க் கிறித்தவர்கள் ‘அருள் நிறைந்த மரியாயே வாழ்க’ என்று அவர்களின் கோயில்களின் கருவறை மேடையில் நின்று பெருமையுடன் கூச்சலிடுகிறார்கள். ஒரு சில தமிழரல்லாதவர்களின் முன்னிலையிலேயே தமிழில் பேச வெட்கப்படுவார்கள் பெரும்பான்மைத் தமிழர்கள் ஆனால், கிறித்தவ தமிழர்களோ மேலைநாடுகளில் கூட, தமிழில் ஆராதனை செய்ய வேண்டுமென்று தமது திருச்சபையைக் கட்டாயப்படுத்தி அந்த உரிமையைப் பெற்றுக் கொள்கின்றனர். அவர்களுக்கு அந்தந்த நாட்டின் மொழியும் தெரியும், அவர்களின் குழந்தைகளும் அங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள். அவர்களின் தமிழுணர்வு தான் அவர்களைத் தமிழில் பூசை, ஆராதனைகளைச் செய்ய தூண்டுகிறது.

      3. தீட்சிதர்கள் தமிழை வீட்டில் பேசினாலும் கருவறையில் தமிழ் ஒலிப்பதை எதிர்க்கிறார்கள். தமிழில் தேவாரம் பாடிய ஆறுமுகசுவாமியை, அவரது தள்ளாத வயதிலும், தீட்சிதர் இளைஞர்கள் எப்படி வெறியுடன் கீழே தள்ளினார்கள் என்பதை எப்பவோ காணொளியில் பார்த்தது இப்பவும் எனது கண்ணுக்குள் நிற்கிறது. அப்படி தமிழெதிர்ப்பு வெறி பிடித்தவர்கள் அல்ல தமிழ்க் கிறித்தவர்கள்.

      4. தமிழர்களின் கோயிலில் தமிழில் தமிழர்கள் பாடுவதைத் தடுக்க, தமிழெதிரிகளுடன் கூட்டுச் சேர்ந்து கடைசியில் வெற்றியும் கண்டவர்கள் தீட்சிதர்கள், என்னைப் பொறுத்தவரையில் அவர்கள் தமிழைப் பேசினாலும் தமிழுணர்வுள்ளவர்கள் அல்ல. , அவர்களை தமிழ்நாட்டுக் கிறித்தவர்களுடன் ஒப்பிட்டது வெறும் அபத்தம், அதற்காக நீங்கள் ஆயிரத்தெட்டு முறை “அருள் நிறைந்த மரியாயே வாழ்க (Hail Mary) ” கூற வேண்டுமென்று நான் நினைக்கிறேன்.

      5. நான் தமிழ் கிறித்தவர்கள் என்று குறிப்பிட்டது இந்த நவீன சுவிசேஷ குழுவினரை (Evangelical groups) அல்ல. அவர்களுக்கும் தீவிரவாத வஹாபிஸ்டுகளுக்கும் பெரிய வேறுபாடு கிடையாது. இவர்களைத் தான் ‘ஒரு சில new converts தான் தங்களைப் பாப்பாண்டவரை விடக் கூடுதலான கிறித்தவர்கள் போல் காட்டிக் கொள்ள, ஐரோப்பிய மோகம் கொண்டலைகிறார்கள்’ என்று முன்பே குறிப்பிட்டேன்.

      தமிழ்ப்பரதவர்கள் கிறித்தவர்களானது செஞ்சோற்றுக் கடன் தீர்க்கவா??

      http://viyaasan.blogspot.ca/2014/01/blog-post.html

    • / எத்தனை கிறித்துவர்களின் வீடுகளில் தேவாரம், திருவாசகம் இருக்கிறது. /
      ‘ரெபேக்கா மேரி’ அவசரத்தில் கொண்டைய மறந்துட்டீங்க..

    • ரெபேக்கா மேரி,

      [1]சிறு வயதில் கம்யூனிஸ்ட்கள் மீது கொண்ட ஈர்ப்பு காரணமாக ,மார்க்ஸ்ஐ ஆழமாக படித்து , தன் தத்துவ இயல் மேற்படிப்பில் மார்க்ஸ்-ஹெகெல் இருவரின் பொருள் முதல்வாத இயக்கியலை ஒப்பீடு செய்து பேராசிரியர்களீன் பாராட்டுகளை பெற்ற தமிழ் நாட்டை சேர்ந்த அருட்தந்தை[rev father] பற்றி உங்களுக்கு தெரியுமா ?

      [2]சிம்பொனியில் திருவாசகத்துக்கு இளையராசா இசை அமைத்த போது அதற்கு முதல் [capital ] தேடி கிடைக்காமல் ,கடன் பட்டும் அவ் வேலையை முடித்து வெளியீட்ட அருட்தந்தை[rev father] பற்றி உங்களுக்கு தெரியுமா ?

      [3]தமிழர் என்ற உணர்வு உடன் இருதி ஈழ போரை நிறுத்த தம்மால் ஆனா அரசியல் முன் முயர்சீகளை எடுத்த அருட்தந்தை[rev father] பற்றி உங்களுக்கு தெரியுமா ?

      [4]பிலிப்பெய்ஸ் நாட்டின் வேரிடாஸ் வானொலி மூலம் எம் ஈழ உறவுகளுக்கு பாலம் அமைத்து கொடுத்த அருட்தந்தை[rev father] பற்றி உங்களுக்கு தெரியுமா ?

      [5]ஈழம் போர் முடிந்ததும் , அம் வதைபடும் ஈழ தமிழர்களுக்கு எதேனும் பொருளாதார உதவி அளீக்க முடியுமா என்று “நாம்” என்னும் தன்னார்வ அமைப்பு மூலம் முயன்ற, அதற்காக வினவால்,ம க இ க வால் கடுமையாக ஆனால் தர்கபூர்வமாக, நேர்மையாக விமர்சனம் செய்யபட்ட அருட்தந்தை[rev father] பற்றி உங்களுக்கு தெரியுமா ?

      https://www.vinavu.com/2010/06/07/agent-jegath-caper/
      https://www.vinavu.com/2009/11/16/father-jegath-gaspar-raj-milks-blood/
      https://www.vinavu.com/2010/10/18/kp/

      Yes He is

      Rev Father Jegath Gaspar Raj

      //ஆனால், இங்கிருக்கும் C.S.I மற்றும் பெந்தகொஸ்தே பிரிவை சேர்ந்த கிருத்துவர்கள் தங்களின் புனித வேதாகமத்தை தவிர பிற மத(அவர்களின் பாணியில்) இலக்கியங்களான திருவாசகத்தை,தேவாரத்தை சாத்தானிடம் இருந்து வந்தவை என்றும். இவைகளை எல்லாம் படித்தாலே பெரும் பாவம் என்றும் நினைக்கிறார்கள். இது போன்ற முட்டாள் தனமான கருத்திற்கு இங்கிருக்கும் பாதிரிகளும், மதபோதகர்களும் நன்றாக தூபம் போடுகிறார்கள். அவர்களை பொறுத்த வரையில் அவர்கள் ஏற்றுக்கொள்ள கூடிய ஒரே தமிழ் நூல் “பரிசுத்த வேதாகமம்” மட்டும் தான். இப்படி பட்ட மனநிலையில் தான் தமிழ் நாட்டில் இருக்கும் 99 விழுக்காடு கிறித்துவர்கள் இருக்கிறார்கள்.//

  20. பறையர்கள் தமிழர்கள் தான் : Proof :
    ————————————————

    [1]The Pareiyas constitute a well-defined, distinct, ancient caste, independent of every other; and the Pareiya caste has subdivisions of its own, its own peculiar usages, its own traditions, and its own jealousy of the encroachments of the castes which are above
    it and below it.

    [2]They constitute, perhaps, the most numerous caste in the Tamil country.

    Note:

    #### From page no 545 paragraph 2 from A COMPARATIVE GRAMMAR OF THE DRAVIDIAN OR SOUTH-INDIAN FAMILY OF LANGUAGES.

    ####Resorce:
    https://archive.org/details/comparativegramm00caldrich

    vinavu Said://பார்ப்பன மேலாண்மையினை மனமுவந்து ஏற்றுக்கொண்ட சற்சூத்திர தமிழர்கள், ஒடுக்கப்பட்ட மக்களான பறையர்களைத் தமிழர்களாகக் கூட ஏற்க மறுக்கும் சாதிவெறியில்தான் இருந்தனர். //

    கல்நெஞ்சம் ask for evidence://அவர் எப்ப அப்படி சொன்னார் வினவு அவர்களே.. இதுதான் கேப்பில் கப்பல் விடுவதா.. இது உண்மையெனில் ஆதாரங்கள் தேவை தோழரே//

  21. vinavu,

    [1]வினவுக்கு , வினவு வாசகர்கள் தரும் பின்னூட்டங்களை update செய்யும் அளவுக்கு வேகம் இல்லை [போதாது]

    [2]சரியான தூங்கு மூஞ்சி வினவு 🙂

  22. எதையும் ஆரம்பிக்க வேண்டும். ஆங்கிலத்தில் கூட இருக்கின் அறிவியல் கலைச் சொற்ககள், ஆதி யந்தமாக இல்லை. சில அறிவியலாளர்கள்தான் அதனை உண்டாக்கினார்கள். தமிழிலும் படிக்க ஆரம்பித்தால், கண்டிப்பாக எந்த துறையானாலும் கலைச் சொற்களை உருவாக்கலாம். ஏன் கூகிளில் நீங்கள் படிக்கின்ற எந்த அறிவியல் கட்டுரையையும் தமிழில் மொழி பெயர்க்கலாம். எல்லோரும் இதனை செய்கின்ற போது, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நிறைய தமிழ் கலைச் சொற்கள் கிடைக்கும்.

    தமிழன்னைக்கு ஊர் கூடி தேர் இழுப்போம்

  23. தாய் மொழி ஒன்றே பாமர மக்களனைவரையும் சென்றடையும் ஊடகம்! பாமர மக்கள் சிந்திக்கவும், கருத்து பரிமாறவும், காசு கொடுக்காமல் சமூக கல்வி பெற கிடைத்த வசதி! துரதிர்ஸ்ட வசமாக, ஆதிக்க அரசுகளும், அடக்குமுறைகளும், இயற்கையான தமிழ்வழி சிந்தனைகளை அழித்துவிட்டன ! மீண்டும் தமிழ் வலிமை பெற, இந்துத்வ-சாதிய சிந்தனை ஏற்படுத்திய புண் ஆற, அத்தகைய சிந்தனைகள் அற்ற ஆஙகிலம் போன்ற, கருத்து பரிமாற்ற தளமாக மாற வேண்டும்! மொழிபெயர்ப்பு சொற்களுடன், மூல கலைச்சொற்களையும் பயன்படுத்தவேண்டும்! இருந்தாலும், பரவலான மக்கள் நாகரிகம் வளர்ந்தாலே மொழி வளப்படும் எனநினைக்கிறேன்! எனது பழைய விஞ்ஞான புத்தகம் பெரும்பாலும் சம்ஸ்கிருத சொற்களையே கொண்டிருந்தது! இருந்தாலும், பின்னர் ஆஙகிலத்தில் படிக்கும்போது தலைசுற்றியது! காரணம், அறிவியல் சிந்தனையற்று புழங்கிய கலைச்சொற்களை, அறிவியல் அளவீடு, பரிணாமம், மூலம் பற்றிய செய்திகளை அழித்துவிடுகிறது!நிதானமாக சிந்தித்து உருவான சில கலைச்சொற்கள்,நன்றாக பொருந்தியிருந்தாலும், மக்கள் வழக்கில் வருவதில்லை!

    உதாரணம்: ‘தியாகராயர்னகர் செல்லும் பேருந்து சென்றுவிட்டதா?’ என்று வினவ் அதிகநேரமாகிறது, அதற்கு பதிலாக, ‘டிநகர் பஸ் போயிடிச்சா?’ என்றுதான் வினவுகிறார்கள்! யார் தவறு?

    வாழும் மொழிகள் என்றுமே இலக்கணத்திற்கு கட்டுபட்டு, தன் வளர்ச்சியை இழக்கலாகாது!

    இயல்பான் மொழிக்கு முதல் இலக்கணம் தோன்றுவதே அன்னியர்களால்தான்! இலக்கணங்கள்தான் வழக்கொழிந்தன, ஆனால் மக்கள் வாழ்வுடன் இணைந்த மொழி அழியவில்லையே!

  24. ராமன் அவர்களுக்கு,

    \\அதனால் பொன்னான நேரத்தை வீணாக்காமல் ஆங்கிலத்திலே படித்துவிடுவது நல்லது . கிணற்றிலேயே இருக்கும் வரை தவளை பாசை போதும் . மொழி வெறியினால் ஏழை மாணவர்களை முடமாக்காதீர்கள் \\

    இங்கு நாம் ஆங்கிலத்தில் படிப்பதைப் பற்றி பேசவில்லை. தாய்மொழியில் சிந்திப்பதைப் பற்றி விவாதித்துக்கொண்டிருக்கிறோம். உங்களது சகதோரிகளிடத்திலோ, தாயிடத்திலோ, ஏன் காதலியிடத்திலோ எல்லா உணர்ச்சிகளையும் எந்த மொழியில் உறவாடுகிறீர்கள்? பிழைப்பதற்கு என்று ஒரு மொழி தெரிந்திருக்க வேண்டும் என்று சொல்வதும் அதைத்தான் அறிவு என்று சொல்வதும் மோசடியானது. இதை நீங்கள் பரிசீலிக்க வேண்டும்.

    காலுக்கு ஏற்ற செருப்பு கொடு என்று கேட்டால் செருப்பை கொடுத்துவிட்டு காலை அதற்கேற்றார்போல் வெட்டிக்கொள் என்று சொல்கிறது ஆங்கில வழிக்கல்வி. இது எந்த வகையில் நியாயம்?

    தாய்மொழியில் பயின்றவர்கள் ஆங்கிலத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. இதைக் கற்றுக்கொள்வதும் கடினமான விடயமல்ல. பேசுவதற்கும் சிரிப்பதற்கும் எழுதுவதற்கும் ஓய்விற்கும் ஒரு சூழ்நிலையே இல்லாத கார்ப்பரேட் காரர்கள் தான் கம்யுனிசகேசன் ஸ்கில்ஸ் என்று கதறுகிறீர்கள்.

    போராடுகிற நமக்கு சர்வதேசியப் பார்வை உண்டு. யாரை விடவும் ஆங்கிலத்தை நமது தோழர்கள் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்பதை நினைவில் கொள்க. நீங்களும் பயன்படுத்தினால் வரவேற்கவே செய்வோம்.

    உங்களால் ஆங்கிலத்தைப் பயன்படுத்தி ஒரு தொழிற்சங்கத்தைக் கட்ட முடியுமா? கட்டுரைகளை மொழிபெயர்த்து தரமுடியுமா? உங்களது சகபாடிகள் சார்பாக உங்களது நிர்வாகத்திற்கு எதிராக நறுக்குத்தெறித்தார் போல் நாலுவரி கம்யுனிகேட் செய்ய முடியுமா? இதெல்லாம் செய்யமுடியாவிட்டால் யார் கிணற்றுத்தவளைகள்? உண்மையில் யார் யாரை முடமாக்குவது?

    மேயற மாட்டை நக்குற மாடு பத்துவது போல் இருக்கிறது இன்றைய மெட்ரிக் பள்ளிகளின் சூழ்நிலை. இதைப் பரிசீலியுங்கள்.

  25. ராமன் அவர்களுக்கு,

    \\ இலத்தீன் அறிவியல் மொழியாக இருந்தது . அதனால் இலத்தீனில் இருக்கிறது அது ஆங்கிலத்தில் இல்லை . தமிழ் இலக்கிய மொழியாக மட்டும் இருக்கிறது . அதை அறிவியல் மொழியாக மாற்றுகிறேன் பேர்வழி எனபது வீண் வேலை\\

    தமிழ் மொழியில் மிகைவேட்புத்தனம் (Exaggeration) இருப்பதற்கு காரணம் இங்குள்ள அரசும் ஆளும் வர்க்கமும். இதை நம்மால் எளிமைப்படுத்தி அனைவருக்கும் பொதுவாக்க முடியும். சீன மொழியின் கடினத்தன்மையை புரட்சிக்கு பிறகுதான் நீக்கினார்கள். மொழியைச் செம்மைப்படுத்தி எழுத்துவடிவத்தை மேம்படுத்தினார்கள். ஆனால் சோசலிசம் இல்லாத ஹாங்காங்கில் இன்னும் சீன மொழி செம்மைப்படுத்தப்படவில்லை. பேசுவதற்கும் எழுதவற்கும் ஹாங்காங் சீனமொழி கடினமானது. எழுத்துக்கள் இன்னும் தூரிகையை வைத்து தீட்டுவதுபோல் எழுதுகிறார்கள்.

    மாங்காயை மேங்கோ என்று கூப்பிடும் இங்கிலிபீசு உங்களுக்கு ஒசத்தியாகத் தெரிகிறது. Spectrum என்ற வார்த்தை என்ன மூலத்திலிருந்தே வந்தது என்று புரிந்துகொள்ள முடியாமல் இருக்கிற பொழுது அலைக்கற்றை என்றோ நிறமாலை என்று புரியும்படி சொல்வது உங்களுக்கு இழிவாகத் தெரிகிறது.

    ஆனால் ஒன்றை நீங்கள் பரிசீலிக்க வேண்டும். தமிழையும் ஆங்கிலத்தையும் கசடறக் கற்கும் வாய்ப்பு தாய்மொழிவழிக்கல்விக்கும் அதை உறுதிப்படுத்துவது சோசலிச அரசிற்கும் தான் உண்டு. விவாதத்தை இந்த திசையில் நகர்த்துங்கள். இது நம் இழிநிலையை விமர்சிப்பதற்கும் வேலைத்திட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் உதவும்.

  26. வினவு ,

    [1]வினவு updatesகாக காத்து இருந்தே வாழ் நாள் கழீயும் போல் உள்ளது. வினவு இணைய updates அய் நேரம் சார்ந்து முறை படுத்தினால் என்ன ?

    [2]9am ,1pm ,4pm, 7pm ,9.55pm என்று updates செய்யும் நேரத்தை முறை படுத்தினால் என்ன வினவு ?

    [3]இப்படி முறைபடுத்துதல் வினவு வாசர்களீன் நேரத்தையும் சேமிக்கும் அல்லவா ?

    [4]வினவு பதில் அளிக்குமா ?

  27. @சிவப்பு @தென்றல் மற்றும் வக்காலத்து வாங்கும் மற்ற பிளாக்கர்களுக்கு..

    இந்த கருத்துக்கு பதில் சொல்லும் முன்னர் ஒர் சின்ன கேள்வி அதற்கு பின் உங்கள் வாதங்களை நான் ஏற்றுக் கொள்ளுகிறேன். இது வாதங்களை முன் வைக்கும் அத்தனை யோக்கியர்களுக்கும் பொருந்தும்.

    தாங்களில் எத்தனை பேர் கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஓப்பிலக்கணம் எனற ஆராய்ச்சி கட்டுரையை படித்து முடித்து உள்ளனர். இது ஆங்கில மொழியில் உள்ளது. நான் படித்த புத்தகம் கால்டுவெல் ஆங்கில மொழியில் எழுதிய பதிப்பு. இங்கிலாந்து பதிப்பகத்தார் முதலில் இதை ஆங்கிலத்தில்தான் வெளியிட்டனர். மேலும் இந்த இங்கிலாந்து பதிப்பகம் தான் லன்டனில் வெளியீட்டனர்.

    எனது கேள்வி.

    வினவு கட்டுரையில் கூறப்பட்டது.
    // பறையர்களே பூர்வீகத் தமிழர்கள் //

    அப்படி அவருடைய புத்தகத்தில் எந்த பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளார். அந்த பக்க எண் அல்லது மேற்கோள்களை அவருடையை ஆராய்ச்சி கட்டுரையில் அதாவது லன்டனில் ஆங்கிலக் கட்டுரையில் எங்கே உள்ளது. அந்த பக்கத்தை மட்டும் மேற்கோள் காட்டவும். வேறு எந்த blog லிங்குகளை எனக்கு காட்ட வேண்டாம். உடனே தமிழ் மொழியில் அந்த புத்தகம் மொழி பெயர்க்கப்பட்டது. அதில்தான் பிழை என வாதாட வேண்டாம். அவருடைய எழுதிய ஆராய்ச்சிக்கட்டுரை ஆங்கிலத்தில் மட்டும் தான் உள்ளது.

    @தென்றல்
    நீங்கள் கூறிய பதில் அந்த புத்தகத்தில் மூன்றாம் பகுதியில் இதற்கான மேற்கோள் உள்ளது

    1.Sounds
    2.ROOTS
    3.The Nouns
    1. Genders and Numbers
    2. Formations of cases
    3. Adjectives
    4.The Numerals
    5.
    6.
    etc,etc

    நீங்கள் மேற்கோள் காட்டிய Third Part ல் 1. Genders and Numbers 2. Formations of cases 3. Adjectives இதில் எந்த பகுதியில் பறையர்களே பூர்வீகத் தமிழர்கள் என்பதை சுட்டிக்காட்டவும். நீங்கள் படித்தது தமிழ் மொழி பெயர்ப்பு என்றால் எந்த பகுதியில் இந்த வாசம் உள்ளது என கூறினால் கூட போதும். நான் ஆங்கிலத்திலே பார்த்து கொள்ளுகிறேன்.

    @சிவப்பு.
    நீங்கள் google search ல் வல்லவர் என்பது எனக்கு தெரிகிறது. புத்தகத்தின் பெயரை ஆங்கிலத்தில் டைப் செய்தால் அங்கே google book காட்டலாம். அதிலே பறையர் என்பதை ஆங்கிலத்தில் மட்டும் டைப் செய்து அந்த லிங்கை hybermarks கூட எனக்கு காட்டினீர்கள். மிக்க நன்றி.ஆனால் நீங்கள் பறையர்களே பூர்வீகத் தமிழர்கள் என்ற பகுதியை மட்டும் எனக்கு மேற்கோள் காட்டினால் போதுமானது. உடனே நீங்கள் பறையர்கள் என்ற வார்த்தையே இல்லை என்று கூறீனீர்கள் அதற்குதான் பதில் அளித்தேன் என பல்டி அடிக்க வேண்டாம். “”பறையர்களே பூர்வீகத் தமிழர்கள்”” என்பதன் இணையான ஆங்கில வார்த்தையை google book ல் காட்டினால் புண்ணியமாக போகும்.

    இது பொதுவானது.
    நான் சாதி வெறிபிடித்தவன் அல்லது மோசமானவன் என எப்படி வேணுமானாலும் திட்டுங்கள். ஆதரங்களை காட்டத் தெரியாதவன் பொதுவாக இது போல் பேசி திசை திருப்புவார்கள். இதில் கவலை பட்டு பயனில்லை. ஆனால் கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஓப்பிலக்கணம் எனற ஆராய்ச்சி கட்டுரையை படித்தவர்கள் மட்டும் என்னூடன் விவாத்திற்கு வந்தால் நலமாயிருக்கும்.

    • கல்நெஞ்சம்,

      எத்துனை முறை தான் ஆதரங்களை உங்களுக்கு கொடுப்பது ?
      சரி மீண்டும் கொடுக்கின்றேன் !

      பறையர்கள் தமிழர்கள் தான் : Proof :
      ——————————————————————————-

      [1]The Pareiyas constitute a well-defined, distinct, ancient caste, independent of every other; and the Pareiya caste has subdivisions of its own, its own peculiar usages, its own traditions, and its own jealousy of the encroachments of the castes which are above
      it and below it.

      [2]They constitute, perhaps, the most numerous caste in the Tamil country.

      Note:

      #### From page no 545 paragraph 2 from A COMPARATIVE GRAMMAR OF THE DRAVIDIAN OR SOUTH-INDIAN FAMILY OF LANGUAGES.

      ####Resorce:
      https://archive.org/details/comparativegramm00caldrich

      vinavu Said://பார்ப்பன மேலாண்மையினை மனமுவந்து ஏற்றுக்கொண்ட சற்சூத்திர தமிழர்கள், ஒடுக்கப்பட்ட மக்களான பறையர்களைத் தமிழர்களாகக் கூட ஏற்க மறுக்கும் சாதிவெறியில்தான் இருந்தனர்.ஆனால், கால்டுவெல்லின் ஆய்வு ”பறையர்களே பூர்வீகத் தமிழர்கள்” என்பதை நிறுவியது. //

      கல்நெஞ்சம் ask for evidence://அவர் எப்ப அப்படி சொன்னார் வினவு அவர்களே.. இதுதான் கேப்பில் கப்பல் விடுவதா.. இது உண்மையெனில் ஆதாரங்கள் தேவை தோழரே//

    • தென்றல்,RED,கல்நெஞ்சம்,

      [1]ஆதாரம் கீழ் உள்ள என் blag ல் உள்ளது.
      http://vansunsen.blogspot.in/2014/06/are-paeiars-pareiyas-of-southern-india.html

      [2]ராபர்ட் கால்டுவெல் அவர்களீன் புத்தகம் முழுமையாக கிடைக்கின்றது.பக்கம் 540 முதல் 554 வரை உள்ள APPENDIX ஐ என் blog ல் கொடுத்து உள்ளேன்

      Note:
      —————-

      கல்நெஞ்சம் ,If you do not believe my blog then you download the book from your own recommended web site and read the pages from 540 to 554 under the topic appendix :
      ARE THE PAEIARS (PAREIYAS) OF SOUTHERN INDIA
      DRAVIDIANS ?

    • கல்நெஞ்சம்,

      ராபர்ட் கால்டுவெல் அவர்கள் கூறும் செய்தி என்ன ?

      [1]The Pareiyas constitute a well-defined, distinct, ancient caste, independent of every other

      [2]They constitute, perhaps, the most numerous caste in the Tamil country.

      What is the logical meaning of these two sentences ?

      ####The Pareiyas constitute ancient caste and most numerous caste in the Tamil country.

      ####When we translate this in to Tamil then We can understand that what vinavu said is CORRECT. YES WE GET…….

      ####பறையர்கள் பண்டைய சாதி மற்றும் தமிழ் நாட்டின் பெரும்பான்மை ஜாதி ஆவார்கள்.
      எனவே
      ”——————-பறையர்களே பூர்வீகத் தமிழர்கள்——————-”

    • கல்நெஞ்சம்,

      YES YES YES…You are a cast minded person

      கல்நெஞ்சம்://நான் சாதி வெறிபிடித்தவன் அல்லது மோசமானவன் என எப்படி வேணுமானாலும் திட்டுங்கள். ஆதரங்களை காட்டத் தெரியாதவன் பொதுவாக இது போல் பேசி திசை திருப்புவார்கள். இதில் கவலை பட்டு பயனில்லை. ஆனால் கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஓப்பிலக்கணம் எனற ஆராய்ச்சி கட்டுரையை படித்தவர்கள் மட்டும் என்னூடன் விவாத்திற்கு வந்தால் நலமாயிருக்கும்.//

      SEE your comments:
      கல்நெஞ்சம்://மற்ற சாதிகளை திட்டி எழுதும் வினவு தன் பறையர் சாதியை மட்டும் கேப்பிலே கப்பல் விட்டதை தான் வன்மையாக கண்டிக்கிறேன். சாதியே இல்லை பார்ப்பான் ஓழிக என கத்தும் வினவு. தன் சாதி மானத்தை மட்டும் காத்துக்கொள்ளுகிறது..//

      கல்நெஞ்சம்://இது கலிபோர்னியா பல்கலைகழகத்தின் மின் நூலகம். எவர் வோண்டுமானாலும் படிக்கலம். பறையர் இனத்தவரும் கூட படிக்கலாம்.//

    • கல்நெஞ்சம்,

      நீங்கள் கொடுத்த இணைய தள முகவரியில் இருந்து அப் புத்தகத்தை download செய்து [nearly 60 MB] பக்கம் 540 முதல் 554 வரை உள்ள APPENDIX ஐ[ ARE THE PAEIARS (PAREIYAS) OF SOUTHERN INDIA] படித்து அதில் நீங்கள் கவனிக்காத பக்கங்களில் இருந்து [From page no 545 paragraph 2 from A COMPARATIVE GRAMMAR OF THE DRAVIDIAN OR SOUTH-INDIAN FAMILY OF LANGUAGES] ஆதரங்களை எடுத்து காட்டியும் உமக்கு புரியவீல்லை என்றால் யாம் என்ன செய்வது ?

      //தாங்களில் எத்தனை பேர் கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஓப்பிலக்கணம் எனற ஆராய்ச்சி கட்டுரையை படித்து முடித்து உள்ளனர். இது ஆங்கில மொழியில் உள்ளது. நான் படித்த புத்தகம் கால்டுவெல் ஆங்கில மொழியில் எழுதிய பதிப்பு. இங்கிலாந்து பதிப்பகத்தார் முதலில் இதை ஆங்கிலத்தில்தான் வெளியிட்டனர். மேலும் இந்த இங்கிலாந்து பதிப்பகம் தான் லன்டனில் வெளியீட்டனர்.//

    • கல்நெஞ்சம்,

      Evidence has been SHOWN for the past 18 hrs in the feedback session of vinavu.

      But You seems to be a blind man or act as a blind man

      For your acting and its consequence WE[Thendral,RED,Saravanan,or vinavu] Can not take responsibility! 🙂

      //அப்படி அவருடைய புத்தகத்தில் எந்த பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளார். அந்த பக்க எண் அல்லது மேற்கோள்களை அவருடையை ஆராய்ச்சி கட்டுரையில் அதாவது லன்டனில் ஆங்கிலக் கட்டுரையில் எங்கே உள்ளது. அந்த பக்கத்தை மட்டும் மேற்கோள் காட்டவும். வேறு எந்த blog லிங்குகளை எனக்கு காட்ட வேண்டாம். உடனே தமிழ் மொழியில் அந்த புத்தகம் மொழி பெயர்க்கப்பட்டது. அதில்தான் பிழை என வாதாட வேண்டாம். அவருடைய எழுதிய ஆராய்ச்சிக்கட்டுரை ஆங்கிலத்தில் மட்டும் தான் உள்ளது. //

    • இணையத்தில் இருந்து எடுத்த கால்டுவெல்லின் ஒப்பிலக்கணத்தில் இருந்து பறையர்களைக் குறித்த பொருளடக்கத்தினை, பக்கங்கள்வாரியாக கொடுத்துள்ளேன்..படித்துப் பாருங்கள், கல்நெஞ்சம் அவர்களே..

      IV. ARE THE PARIARS (PAREIYAS) OF SOUTHERN INDIA DRAVIDIANS? page 540 – 554

      Supposition that the lower classes of Southern India are not Hindus, 540. ‘Hindu’ has become a term of religion, 541. Discrepancies in use of this term; University use; Mr Beames, 542. Are Shanars not Hindus? Supposition of Europeans respecting origin of Pareiyas, 543. Origin of ‘mixed castes’ fictious; children of dancing – girls, 544. Pareiyas have a caste of their own; numbers, 545. Are Pareiyas Dravidians? Theory that they are pre-Dravidians, 546. Arguments in support of this theory, 547. Special privileges enjoyed by lower castes; Mr Walhouse, 548. MEaning of name Pareiya, 549. Meaning of corresponding Telugu, Mala, and Malayalam Puleiya, 550. Still stronger arguments adducible against this theory, 551, 552. Effect of caste differences, 553. Essential unity of all Dravidian dialects argues unity of race, 554.

    • Are the Pariars of Southern India Dravidians?
      IT is commonly supposed by Anglo-Indians, that certain tribes and castes inhabiting Southern India, especially the Pariars and similar low-caste tribes, belong to a different race from the mass of the inhabitants. The higher castes are styled ‘Hindus,’ or else ‘Tamilians,’ ‘Malayalis,’ &c., according to their language and nation; but those names are withheld from some of the ruder and more primitive tribes, and from the Pariars and other agricultural slaves. As this supposition, and the use of words to which it has given rise, are frequently met with both in conversation and in books, it seems desirable to enquire whether, and to what extent, this opinion may be regarded as correct.
      The term ‘Hindu’ as used by some, is one which pertains to religious nomenclature. When they speak of certain classes as ‘Hindus,’ they mean that they are followers of the Brahmanical religion, or the religion of the Puranas; and according to this use of words (which is open to serious objection, inasmuch as it is the use, not of a theological, but of a geographical term, to denote one out of several religions which prevail within the region to which the term applies), the tribes and classes whose religion differs from that of the Brahmans are not ‘Hindus.’ In this sense it is true, that the Tudas and the Gonds are not Hindus, and that the majority of the predatory, wandering tribes, and of the lower castes are not Hindus, or at least are not ‘orthodox Hindus;’ though, geographically, it is certain, that they have as much right to the name of Hindus as the Brahmans themselves.
      Some, again, use the term ‘Hindu’ as synonymous with ‘Aryan.’ They call the Brahmans and the higher castes of Northern India ‘Hindus,’ but withhold the name from the aboriginal races. This seems a still more improper use of words, inasmuch as it denationalizes not only the low-caste inhabitants of the northern provinces, but also the whole of the Dravidian inhabitants of the Dekhan and the Peninsula; notwithstanding the proofs that exist that they crossed the Sind, Hind, or Ind-us, and occupied the ‘Sapta Sindhu,’ or ‘country of the seven rivers,’—the Vedic name of India—before the arrival of the Aryans, and that they have, therefore, a better claim to be called ‘Hind-us’ than the Aryans themselves. To deprive the Dravidians and other aboriginal races of the name of ‘ Hindu,’ is as unjust as it would be to deprive all persons of Anglo-Saxon descent of the name of ‘ Englishman,’ and to restrict that name to the descendants of Norman families.
      There are some, again, who with the error now mentioned, conjoin an additional one. They suppose the higher castes of the Tamil, Telugu, and other Dravidian peoples, to be identical in origin with the Aryan races of Northern India, and the lower castes alone to have a Non-Aryan origin. Hence they call the high-crjste Dravidians ‘Hindus,’ and withhold that name from the Pariars, &c, not on geographical, but on ethnological grounds. I apprehend, however, that the Non-Aryan origin both of the higher and of the lower castes of Dravidians, has been proved when the Non-Aryan structure of the Dravidian languages has been established; and, therefore, this use of words may be passed by without further remark, as arising simply from misapprehension.
      The Pariars (called in Telugu Malars) are not the only caste or class of people in the Dravidian parts of India, who are commonly regarded as outcasts, nor are they the lowest or most degraded of those classes; but partly because they are the most numerous servile tribe (their numbers amounting on an average to at least a tenth of the entire population), and partly because they are more frequently brought into contact with Europeans than any similar class, in consequence of the majority of the domestic servants of Europeans throughout the Madras Presidency being Pariars, they have come to be regarded by some persons as the low-caste race of Southern India. Hence, besides the above-mentioned errors in the application of the name ‘Hindu,’ there are various popular errors afloat respecting the origin of the Pariars and their position in the caste scale, which require to be noticed before entering on the question now to be discussed, ‘are the Pariars Dravidians V
      Europeans were generally led to suppose, on their arrival in India several generations ago, that the Pariars were either the illegitimate offspring of adulterous intercourse, or were persons who had been excluded from caste for their crimes. This notion was invented and propagated by the Brahmans and the higher castes, and originated, in part, in their wish to justify their exclusive, unsocial behaviour towards the Pariars, on principles which they supposed that Europeans would approve. In part, also, it originated in an error arising from the uncritical habit of the Hindu mind; viz., the error of transferring to Southern India and to the Dravidian tribes, the fictions which were devised in Northern India to account for the origin of the new castes or, so called, ‘mixed classes,’ of the North. Those northern castes or classes came into being through the operation of two causes; first, from the sub-division of the original castes of Vaisyas and servile or Sudra Aryans, in accordance with the progressive sub-division of labour; and secondly, from the introduction of one tribe after another within the pale of Aryan civilization, as the religion and civil polity of the Sanscrit-speaking race spread throughout the country, and the aborigines were transformed from Mlechchas into Sudras. In Manu and the Shastras, no mention is made of either of these causes; but the new or mixed castes are attributed exclusively to fictitious mixtures of the older castes. The more respectable of the new castes are attributed to the legal intermarriage of persons belonging to different castes of recognized” respectability. Another and inferior set of castes are attributed to the adulterous intercourse of persons of equal respectability, but of different caste, or of high-caste men with low-caste women; whilst the lowest castes of all are represented to have sprung from the adulterous intercourse of high-caste women with low-caste men, and are said also to constitute the receptacle of persons who had been socially excommunicated for offences against their caste.
      Whatever amount of truth maybe contained in this representation of the origin of the castes of Northern India (and I think it most probably a fiction throughout), it may confidently be affirmed that the Dravidian castes had no such origin. The only ‘ mixed caste’ known in Southern India, is that which consists of the children of the dancing girls attached to the temples. Of this class the female children are brought up in the profession of their mothers, the males as temple florists and musicians. In all ordinary cases, when children are born in adultery, if there is no great disparity in rank or caste between the parents, the rule is that the caste of the child of adulterous intercourse is that of the less honourable of the two castes to which its parents belong. Where considerable disparity exists, and where the dereliction of rank is on the woman’s side—as for example, where a highcaste woman, or even a woman belonging to the middling castes, has formed an intimacy with a Pariar man (and in the course of a residence amongst the Hindu people for seventeen years, I have heard of several such cases), neither the caste of the father nor any other caste has any chance of being recruited or polluted by the addition of the woman’s illegitimate offspring. The child never sees the light; the mother either procures an abortion or commits suicide.
      To suppose, therefore, as Europeans have sometimes been led to suppose, that the entire caste of Pariars (including its subdivisions, and the ‘left hand’ castes corresponding to it) has come into existence in the surreptitious manner described above, or that it is composed of persons who have been excluded from caste for their crimes, is a baseless dream, which is too preposterous for serious refutation. Though it is probable that it was from the statements of natives that the Anglo-Indian community originally derived this notion, yet I never met with any natives, learned or unlearned, by whom the notion appeared to be entertained; and the Pariars themselves, who regard their lowly caste with feelings of prido and affection, which are very different from what might be expected of them, would resent this representation of their origin, if they had ever heard of it, with indignation.
      Anglo-Indians who are not acquainted with the vernacular languages, often designate Pariars as ‘outcasts,’ as persons who are ‘without caste,’ or as persons who have ‘no caste to lose.’ It is true that the Pariar servants of Europeans will sometimes vaunt that they belong to ‘master’s caste;’ and many masters know to their cost that their Pariar servants practise no scrupulous, superstitious distinctions respecting meats and drinks. Notwithstanding this, to suppose that the Pariars have literally ‘no caste,’ is undoubtedly a mistake. The Pariars constitute a well defined, distinct, ancient caste, independent of every other; and the Pariar caste has subdivisions of its own, its .own peculiar usages, its own traditions, and its own jealousy of the encroachments of the castes which are above it and below it. The Pariars, though, perhaps, the most numerous caste in the country, belong to the lowest division of castes, and are not fabled to have sprung from even the least noble part of Brahma; nevertheless, they are not the lowest of the castes which are comprised in this lowest division. I am acquainted with ten castes in various parts of the Tamil country, which are certainly lower than the Pariars in the social scale; and in this enumeration I do not include the Pallars, a caste between whom and the Pariars there is an unsettled dispute respecting precedence. The treatment which the Pariars receive from the castes above them, is doubtless unjust and indefensible; but it is not generally known by those Europeans who sympathize in the wrongs of the Pariars, that, whenever they have an opportunity, the Pariars deal out the very same treatment to the members of castes which are inferior to their own, e.g., the caste of shoemakers, and the low-caste washermen; that they are, equally with the higher castes, filled with that compound of pride of birth, exclusiveness, and jealousy which is called ‘caste feeling;’ and that there is no contest for precedence amongst the higher castes of longer standing, or of a more eager character, than that which is carried on between the Pariars and the Pallars. In the insane dispute about pre-eminence, which is always being carried on in Southern India, between the ‘right hand’ and the ‘left hand’ castes, the Pariars range themselves on the right hand, the Pallars on the left; and it is chiefly by these two castes that the fighting part of the controversy is transacted.
      Now that Europeans are better acquainted with Indian affairs, the theory of the illegitimate origin of the Pariars is more rarely found to be entertained; and, as the study of the native languages extends, the supposition that they are ‘ outcasts,’ or that they have ‘ no caste,’ will soon disappear likewise.
      The question which is really before us having been cleared of popular errors and extraneous matter, we now come to the consideration of that question itself. ‘Are the Pariars Dravidians V Are the forest tribes, the lower castes, and the so-called ‘out casts,’ that speak the Dravidian languages, especially the Tamil Pariars and Telugu Malars (who may be taken as the representatives of the class), of the same origin and of the same race as the Dravidians of the higher castes? Whilst both classes have a right to be called ‘Hindus,’ are the higher castes alone Dravidians, Tamilians, Malayalis, &c.? and are the Pariars and people of similar castes to be regarded as belonging to a different race 1
      On the whole I think it more probable that the Pariars are Dravidians; nevertheless, the supposition that they belong to a different race, that they are descended from the true aborigines of the country —a race older than the Dravidians themselves—and that they were reduced by the first Dravidians to servitude, is not destitute of plausibility.
      It may be conceived that as the Aryans were preceded by the Dravidians, so the Dravidians were preceded by an older, ruder race, of whom the Doms and other ‘Chandalas,’ of Northern India, and the Pariars and other low tribes of the Peninsula, are the surviving representatives. If this primitive race existed prior to the arrival of the Dravidians, it would naturally happen that some of them would take refuge from the intruders in mountain fastnesses and pestilential jungles —like the Raps or Doms of the Himalayas, the Weddas of Ceylon, and the Mala-(y)-arasers of the Southern Ghauts; whilst others, probably the majority of the race, would be reduced to perpetual servitude, like the Pariars, Puliara, and Pallars.

  28. இராமன் அவர்களுக்கு,

    \\சேம் சைடு கோல் போட்டுடீங்கள ? ஆற்றல் பட்டை படிகங்களில் எதிர்மறை ஒளிவிலகல் என்று தமிழில் சொன்னால் கூட யாருக்கும் புரியாது என்று ஒப்பு கொள்கிறீர்கள் அதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள தமிழ் மாணவனால் கூகுளை பயன் படுத்த முடியாது . கிணற்று தவளையாக இருக்க வேண்டியது தான் .அடுத்து அதை மீண்டும் ஒருமுறை ஆங்கிலத்தில் படித்து ஆற்றல் பட்டை தான் hotonic bandgap Crystals என்று தெரிந்து கொள்ள வேண்டும் .\\ \\ அவன் ஆங்கிலத்தில் கற்று கொள்ளும் வரை அவனால் ஆற்றல் பட்டை என்பதை ஆங்கிலத்தில் சொல்ல தெரிந்து கொள்ளும் வரை அவனால் வினவு தலத்தில் கூட என்ன செய்து கொண்டு இருக்கிறேன் என்று சக தமிழனுக்கு சொல்லி புரிய வைக்க முடியாது .”\\

    இது சேம் சைடு கோல் அல்ல. ஆங்கிலத்தில் சொன்னாலும் தமிழில் சொன்னாலும் புரிவதற்கு கடினம் தான். இது குறித்த கலைச்சொற்கள் இன்னும் ஆங்கிலத்திலும் உருவாகிவிடவில்லை. நாம் எழுதிய ஆராய்ச்சி கட்டுரைகளுக்கு நாம் தான் பிறருக்கு புரியும்படி விளக்க வேண்டும். அது நம் கடமை. வர்த்தக மதிப்பு இல்லாதவரை கூகுள் இதெல்லாம் உங்களுக்குச் செய்யாது. புரிந்துகொள்ளுங்கள்.

    நாம் விரும்புகிற தாய்மொழி என்பது நக்கீரன் எவ்வாறு நெடுநல்வாடையில் கோப்பெருந்தேவியின் நலம் புனைந்துரைத்தான் என்பதை அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தப்பாவில் கவிபாடினான் என்பது குறித்து ஆசுவாசப்படுவதல்ல.

    தமிழ்மொழிக்கு வர்த்தக மதிப்பு உண்டு என்று கூகுளே பலவழிகளில் சந்தையைப் பிடிக்க பாடாய்படுகிறது. Transcription, Transliteration and Translation துறைகளில் தனது ஆக்டோபஸ் கரங்களால் விழுங்கப்பார்க்கிறது. மேலும் Linguistics துறை சார்ந்து மொழியை வர்த்தக நோக்கில் வளர்த்தெடுக்கவும் ஆளாய்பாய்கிறார்கள்.

    உளவியல் துறையில் வட்டார வழக்குகள், மானுடவியல், தொல்லியல் போன்ற துறைகளும் மொழியோடு சேர்ந்து வளர வாய்ப்புள்ள மூலதனத் துறைகள். இதுபோக மல்டிமீடியாவிலும் சொந்தமொழியை புகுத்தினால் தான் காசு சம்பாரிக்க முடியும் என்பதை தெரிந்துவைத்திருக்கிறார்கள்.

    கல்லா பெட்டியை நிரப்புறவனுக்கே இவ்வளவு ரோசனையெல்லாம் வருதே நமக்கு ரோசனையை விடுங்க; கொஞ்சமாவது ரோசம் வரக்கூடாதா?

  29. இராமன் அவர்களுக்கு

    \\நாடு தழுவிய கருத்தரங்கில் கலந்து கொள்ள முடியாது .\\

    இன்றைய அறிவியல் கருத்தரங்குகள் மானக்கேடானவை. பிணத்தை வைத்து கூட காசுபார்க்க முடியுமா என்று பார்க்கிறார்கள். ஒன்னுக்கு இருக்கக்கூட கருத்தரங்க அரங்குகளில் காசு கொடுக்க வேண்டும். ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்ள தேசிய அளவில் 10ஆயிரமும் (டூர் போக பயன்படுத்துகிறோம். ஏதாவது ஒரு நானோ பவுடரை எடுத்து வைத்துக்கொண்டு அது தொடர்பான ஒரு போஸ்டர் அல்லது பத்து சிலைடு கொண்ட கண்ணைப் பறிக்கும் பவர்பாயிண்ட் கொண்டுபோய் ஜமாய்க்க வேண்டியது தான்).

    வெளிநாடாக இருந்தால் 1.50 இலட்சம் செலவாகும். ஐஐடி 1.25இலட்சம் ஸ்பான்சர் செய்கிறது. இந்தப் பணத்தை மாணவர்களின் சொந்த செலவிற்கு கொடுத்தாலாவது இன்னும் ஆராய்ச்சியில் சிறப்பாக கவனம் செலுத்த முடியும். வேண்டுமானால் வெளிநாட்டு டூர் போகலாம். அதுவும் என்னைப்போன்ற ஆட்கள், கூட 25ஆயிரம் கைகாசு போட வேண்டுமென்பது கனவிலும் முடியாத காரியம்.

    அதற்கு நாமே கருத்தரங்குகளை வாசகர் வட்டங்களை நடத்தலாம்.

    வர்த்தக நோக்கு இல்லாமல் புரட்சிகர அமைப்புகள் நடத்திய கருத்தரங்குகள் சிறப்பானவை. கலிபோர்னியா கான்பரசிற்கு Banquetக்காக 100 டாலர் கட்ட வேண்டும் என்பது கட்டாயம் என்கிற பொழுது, கல்வியில் தனியார்மயத்தை ஒழித்திடுவோம் என்று சொன்ன புரட்சிகர அமைப்புகள் மதிய உணவிற்கு தக்காளி சாதமும் தேநீர் வேளைக்கு பன்னும் கருப்பு டீயும் கொடுத்தது நெகிழ்வான விடயம். கைகாசு போட்டால் கூட சாதரணம் தான்; கடன்பட்டு போடுகிறார்கள் என்றால் தாய்மொழிவழிக்கல்வி கொண்டுவரப்பட வேண்டும் என்பதிலும் தனியார்மயம் ஒழிய வேண்டுமென்பதிலும் எவ்வளவு அழுத்தமாக இருக்கிறார்கள் என்பதை பரிசீலியுங்கள். நீங்களும் இந்தப் போராட்டத்தில் இணையுங்கள்.

  30. பலர் இருந்தாலும், ஜோ டி குரூஸ் போன்ற, தனது முன்னோர்களின் தெய்வங்களாகிய குமரித்தாயையும், முத்தாரம்மனையும் மதிக்கத் தெரிந்த, போற்றத் தெரிந்த, தமது பரம்பரையின் தமிழ் வேரைப் பெருமையுடன் தடவிப் பார்க்கும் லட்சக்கணக்கான தமிழ் கிறித்தவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.பச்சைப் பொய். நான் தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கின்றேன்.அப்படி ஒரு கிறிஸ்தவரை நான் இதுவரைக் கண்டதில்லை.பொட்டு வைக்கும் விசயத்தில் கூடு என்ன வெறுப்பு இவர்களுக்கு. வளைய வளைய பட்டுச் சேலை கட்டிக் கொள்வார்கள்.கழுத்து கனக்கு நகை அணிந்து கொள்வார்கள். அரை இஞ்சுக்கு வாசனைப் பொடி போட்டுக் கொள்வார்கள்.சுடி மடி ஸ்காட் ரோகிப் திறந்த முதுகு என்று ரக ரகமாக தன்னை அழகு படுத்திக் கொள்ளும் ஒரு கிறிஸ்தவ பெண் தனது நெற்றிக்கு பொட்டு மட்டும் வைப்பதை ஏற்றுக் கொள்ள மாட்டாள்.கத்தோலிக்க பெண்கள் பொட்டு வைக்கின்றனர். பிற சபை பெண்கள் வைப்பதில்லை இந்திய வெறுப்புதான். திருக்குறள் எழுதப்பட்ட சர்ச் சுவரைக் கண்டதுண்டா ?

    • Dr.A.Anburaj,

      [1]நீங்க கல்லூரி பேராசிரியர் எனில் ஒழுங்கா பாடம் நடத்தும் வேலையை பட்டும் பார்க்கவும்.

      [2]ஒருவேளை மருத்துவர் எனில் consulting ஐ மட்டும் ஒழுங்கா பார்க்கவும்.

      [3]அதை விடுத்து பெண்கள் என்ன உடை அணிகின்றனர்; பொட்டு வைக்கின்றன்ரா இல்லையா ? என்பதை எல்லாம் பார்ப்பது உங்கள் வேலை இல்லை !

      [4]ஏன் நம் வீட்டு தமிழ் பெண்கள் வட நாட்டு சுடிதார், மேல் நாட்டு ஜீன்ஸ் ,tshirt அணிவது இல்லையா ?ஹலோ Dr ஜீன்ஸ் ,tshirt அணியும் நம் வீட்டு தமிழ் பெண் அத்துடன் பொட்டு ,வளையல் அணிவார்களா ?

      Note:
      ——–
      I am relay sorry say to ladies for making this unavoidable discussion about women’s dress and style.

      //பொட்டு வைக்கும் விசயத்தில் கூடு என்ன வெறுப்பு இவர்களுக்கு. வளைய வளைய பட்டுச் சேலை கட்டிக் கொள்வார்கள்.கழுத்து கனக்கு நகை அணிந்து கொள்வார்கள். அரை இஞ்சுக்கு வாசனைப் பொடி போட்டுக் கொள்வார்கள்.சுடி மடி ஸ்காட் ரோகிப் திறந்த முதுகு என்று ரக ரகமாக தன்னை அழகு படுத்திக் கொள்ளும் ஒரு கிறிஸ்தவ பெண் தனது நெற்றிக்கு பொட்டு மட்டும் வைப்பதை ஏற்றுக் கொள்ள மாட்டாள்.கத்தோலிக்க பெண்கள் பொட்டு வைக்கின்றனர். பிற சபை பெண்கள் வைப்பதில்லை இந்திய வெறுப்புதான். திருக்குறள் எழுதப்பட்ட சர்ச் சுவரைக் கண்டதுண்டா ?//

    • அலோ அன்புராஜ் இது மத வெறி தளம் இல்லை கிறிஸ்தவ மத பரப்புரை தளங்களில் போய் இது போல கேளுங்கள் அப்புறம் திருக்குறள் எழுதப்பட்ட முத்தாலம்மன் கோவில் சுவரை காட்டுங்கள் அப்புறம் மத்த மதத பேசலாம் டாக்கடுருக்கு படிச்சுட்டு இது கூட தெரியலயே

    • தமிழ்நாட்டில் கிறித்தவப் பெண்கள் பொட்டு வைப்பதை தவிர்ப்பதை நானும் அவதானித்திருக்கிறேன். அது அந்தந்த ஊர்களிலுள்ள பாதிரிமாரின் தவறு, அவர்கள் பொட்டு என்பது இந்துமதத்தின் அடையாளமல்ல தமிழர்களின் அடையாளம் என்பதை விளக்கவில்லை அல்லது இந்தியாவில் தமிழர்கள் மட்டுமன்றி ஏனைய இந்துக்களும் பொட்டணிவதால், பொட்டு வைப்பது இந்து மதத்தின் அடையாளம் என்ற கருத்து கிறித்தவ தமிழர்கள் மத்தியில் நிலவலாம். இலங்கையில் நிலைமை வேறு. அங்கு பொட்டு தமிழர்களின் அடையாளம் மட்டுமே. சிங்களவர்களும் முஸ்லீமகளும் பொட்டணிவதில்லை, அதனால் இலங்கையில் தமிழ்கிறித்தவ பெண்களும் பொட்டணிவதுடன், பாதிரிமார் கூட சந்தனப் பொட்டணிந்திருப்பர். எத்தனையோ கிறித்தவ தேவாலயங்கள் தைப்பொங்கலையும் கொண்டாடுவதுண்டு, தமிழ்நாட்டில் கூட சில தேவாலயங்களில் தைப்பொங்கலைக் கொண்டாடுகின்றனர் என்பதை youtube இல் காணலாம்.
      தமிழ்நாட்டில் பல புதிய கிறித்தவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள். மதம் மாறினால் சாதி மறைந்து விடும் அல்லது மதம் மாறுவது இந்துமதத்துக்கு தாம் காட்டும் எதிர்ப்பாக நினைந்து மதம் மாறியவர்கள். அதனால் பொட்டணிவது இந்துமத சம்பிரதாயமாக நினைத்து அதை ஒதுக்கலாம். ஆனால் மதம் மாறுவதால் உண்மையில் சாதி ஒழிகிறதா என்பது வேறு விடயம். 🙂

      • அன்புராஜ் , வியாசன்,

        போட்டு வைப்பது தமிழருடைய தனித்துவமான அடையாளமா? வேறேன்னெல்லாம் தமிழரின் அடையாளம்? வாழ்வதற்கே வழியில்லாத சூழலில் அடையாளத்தைப் பற்றி பேசி என்ன பயன்? போட்டு வைக்காததை என்னவோ கொலைக் குற்றம் செய்தததை போலவே பேசுறீங்களே. நாகரீக வளர்ச்சியில் தேங்கிப் பொய் இருப்பவர்களே இது போல பேசிகிட்டு இருக்க முடியும்.

        இன்றைய சமூகச் சூழலில், இத்தகையத் தனித்துவமான அடையாளங்களால் என்ன பயன்? மூணு வேலை நல்ல வக்கணயாச் சோறு திங்கறவங்க தான் இப்படி இணப் பெருமை, சாதிப் பெருமை, மொழிப் பெருமை கலாச்சாரப் பெருமைப பேசிகிட்டு திரியறாங்க.

  31. சாலமோன் டானியேல் என்று பெயர் வைக்கும் கிறிஸ்தவர்கள் தங்களின் குழந்தைகளுக்கு முருகன் அரச்சந்திரன் அபிமன்யு மாணிக்க வாசகன் என்ற தமிழ் பெயர்களை வைக்க மறுப்பது
    ஏன். தமிழ பற்றை ஆங்கில அடிமைத்தனமா ? பைிளில் வரும் கிறிஸ்தவர்கள் அல்லாத யுத மக்களின் பெயர்களை வைக்கும் கிறிஸ்தவர்கள் தமிழ பெயர் வைப்பது இல்லை ஏன் ஏன் ஏன்

    • மருத்துவர் அன்புராஜ் ,
      தங்களோட பெயரே முழுதும் தமிழ் இல்லை என்பதை தாழ்மையுடன் அறிவித்துக் கொள்கிறேன்.
      அரச்சந்திரன் அபிமன்யு அப்படிங்கற பெயரெல்லாம் தமிழென்றால் ஜோசப்,முஹம்மத் எல்லாமே தமிழ் பேரு தான் 🙂

    • பொயரில் என்ன இருக்கு Dr.A.Anburaj?

      [1]Vladimir Ilyich Lenin (Russian: Владимир Ильич Ленин) ,Joseph Stalin or Iosif Vissarionovich Stalin (Russian: Ио́сиф Виссарио́нович Ста́лин) இப் பெயர்கள் எல்லாம் தூய கிருஸ்துவ பெயர்கள் தான். இவர்கள் என்ன கிருஸ்துவர்களாக தான் வாழ்ந்தர்களா ? தம் மதத்தை புறக்கணித்து கம்யூனிஸ்ட்களாக வாழவில்லையா ?

      [2]ஐயங்கார் வீட்டு பிள்ளைக்கு ஸ்ரீநிவாசன் என்று தமிழ் நீக்கம் செய்யபட்ட வட மொழீயீல் பெயர் வைப்பது இல்லையா ?ஐயர் வீட்டு குழந்தைக்கு கிருஷ்ணஸ்வாமி என்று வட மொழீயீல் பெயர் வைப்பது இல்லையா ?

      [3]P. Jeevanandham,கம்யூனிஸ்ட் [Birth 21 August] அன்று பிறந்த என் குழந்தைக்கு ஜீவா என்று நான் பெயர் வைக்க ஆசை பட்டும், திரு வியாசன்[vinavu reader] அவர்கள் போன்றே சிவ பக்தரான என் மாமனார் “சிவ குரு” என்று பெயர் வைக்க விறுப்பியதும் , முருக பக்தரான என் மனைவி கார்த்திகேயன் என்று ஆசை பட்டதும் , பின்பு நான் மாமாவுக்கும் , மனைவிக்கும் இடையே சமரசம் செய்து சிவகார்த்திகேயன் என்று இருதியாக பெயர் ஈட்டதும் தமிழ் நாடு முழுதும் உள்ள நடைமுறை தானே !

      [4]அடுத்து பிறக்கும் குழந்தையும் ஆண் என்றால் எங்கள் ஊரில் சிறப்பாக கல்வி அளித்த இரு கிருஸ்துவ ஆசிரியர்களின் [ஜேம்ஸ் அல்லது கமல்ராஜ்] பெயர்களில் எதோ ஒன்றை பெயர் இட உள்ளேன். ஹிந்து குழந்தைக்கு கிருஸ்துவ பெயர் வைப்பதால் என்ன ஆகிவிடும் DR ?

      [5]ஒரு வேலை உங்கள் குழந்தைக்கு சவரிராஜன் ,சவரிமுத்து என்ற கிருஸ்துவ பெயர்கள் வைத்து இருப்பின் நீங்கள் உரிமையுடன் உங்கள் கிருஸ்துவ நண்பர்களீன் குழந்தைகளுக்கு ஹிந்து பெயர்கள் வைக்க கோரலாம் ! 🙂

      [6]திரு பிரபாகரன் அவர்கள் தம் முதல் குழந்தைக்கு சார்லஸ் என்று கிருஸ்துவ பெயர் வைத்ததாக நினைவு. அவர் என்ன தமிழ் மொழி ,இன பற்றாளர் இல்லையா ?

      //சாலமோன் டானியேல் என்று பெயர் வைக்கும் கிறிஸ்தவர்கள் தங்களின் குழந்தைகளுக்கு முருகன் அரச்சந்திரன் அபிமன்யு மாணிக்க வாசகன் என்ற தமிழ் பெயர்களை வைக்க மறுப்பது
      ஏன்//

      • Dear Brother,
        You say that name is is not important.
        You are correct that feelings,Attitude and characters alone are important.
        Then why you are very much worried about sanskrit words(vadasol,disaisol) being used in tamil nadu.
        How a language which is claimed as dead by british govt, can be a threat to tamizh?
        Regards,
        Ganesh

  32. திரு. வியாசன்..

    தங்களின் விரிவான பதிகளுக்கு என் நன்றிகள்…

    கிறித்துவர்கள் தமிழுக்கு செய்த தொண்டை அவ்வளவு எளிதில் யாரும் நிராகரித்து விட முடியாது. இன்று தமிழ் தமிழாக இருப்பதற்கு முதன்மை காரணமே கால்டுவெல், ஜி.யு.போப், கான்ஸ்டன்டைன் சோசப்பு பெச்கி என்னும் வீரமா முனிவர் போன்றவர்களால் தான். இல்லையேல், தமிழை ஆரியம் என்றோ உட்செரித்து இருக்கும். வடமொழியில் இருந்து தான் தமிழ் தோன்றியது என்று மக்களை நம்ப வைத்து கொண்டிருந்த காலத்தில் அப்படி பட்ட கருத்தை தமது ஆய்வுகளின் மூலமாக உடைத்து எரிந்து தமிழ் தனித்தன்மை மிக்க மொழி என்பதை உலகுக்கு உணர்த்தியவர்கள் கிறித்துவர்களே.

    விசயம் இப்போது அதுவல்ல, இன்றைய நாளில் இருக்கும் கிறித்துவர்களில் எத்துனை பேருக்கு தமிழ் உணர்வு இருக்கிறது என்பது தான். கால்டுவெல் போன்று எத்தனை பாதிரியார்கள், மத குருமார்கள் உணர்வோடு தங்களை தமிழ் பணிக்கு அர்ப்பணித்து இருக்கிறார்கள் என்பது தான்.

    //கிறித்தவர்களாவது தமது தாய்மொழி தமிழில் வழிபாட்டை நடத்துகிறார்கள். ஆனால் இந்துக்களும், முஸ்லீம்களும் அந்நிய, தெரியாத மொழியில் வழிபாட்டை நடத்துகின்றனர்.//

    தமிழ்நாட்டு கிறித்துவ மக்களின் தாய் மொழி தமிழ் அதனால் அவர்கள் தமிழில் வழிப்பாட்டை நடத்துகிறார்கள். இதற்க்கு நாம் பாராட்ட வேண்டியது கிறித்துவ சமயத்தை இங்கு பரப்பியவர்களை. இந்து மத குருமார்களை போன்று ஒரு தேவ பாஷையோடு தங்களின் மதத்தை இங்கு பிரசாரம் செய்யவில்லை. இயேசு கிறிஸ்து பேசிய எபிரேய மொழியில் தான் அணைத்து வழிப்பாடுகளையும், சடங்குகளையும் நடத்த வேண்டும். அதுவே புனிதமான மொழி என்று கூறி கொண்டு இங்கு சமயப்பணி செய்யவில்லை. எந்த நாட்டிற்க்கு தாங்கள் சென்றார்களோ அந்த நாட்டின் மொழியோடு இயைந்து சென்று தங்களின் மத வழிப்பாட்டை மேற்கொண்டார்கள். ஆகையால் தன் அந்த அந்த நாட்டை சேர்ந்தவர்கள், அவர்களின் மொழிலேயே வழிப்பாடுகளை செய்கிறார்கள்.

    //எனக்குத் தெரிந்த தமிழ் கிறித்தவர்கள் பலர், தமிழிலக்கியங்களில் புலமை வாய்ந்தவர்கள். தேவாரம் திருவாசகங்களைக் கூட அதில் தமிழின் இனிமைக்காக ரசிக்க, அதனூடாக தமிழின் அழகை அனுபவிக்கத் தெரிந்தவர்கள். ஒரு சிலர் சங்கீதத்திலும் வல்லமை பெற்றவர்கள். ஐரோப்பிய மோகம் கொண்ட கிறித்தவர்கள் பலர் இருந்தாலும், ஜோ டி குரூஸ் போன்ற………..//

    ஆம் இதை நான் ஏற்று கொள்கிறேன்.. இல்லை என்று கூறவில்லை, ஜோ.டி.க்ருஸ், தேவ நேய பாவாணர், சாலமன் பாப்பையா போன்று சிலர் இருக்க தான் செய்கிறார்கள். ஆனால் சமுதயத்தில் மிக பெரும்பான்மை யார் என்பது தான் இங்கு முக்கியம்

    //தமிழுணர்வென்றால் தேவாரம், திருவாசகம் படிப்பதும், தமிழ் இலக்கியங்களை விரும்பிப் படிப்பதும் அல்ல, அப்படிப் பார்த்தால் பெரும்பான்மையான (நான் உட்பட) தமிழர்கள் தமிழுணர்வற்றவர்கள் என்றாகி விடும். என்னைத் தமிழுணர்வுள்ளவனாகத் தான் நான் கருதுகிறேன். எனக்கும் தேவாரம், திருவாசகம், தமிழிலக்கியங்களில் ஒரு இழவும் தெரியாது.//

    மன்னிக்க வேண்டும் நான் தேவாரம்,திருவாசகம் இவைகளை படிக்க வில்லை என்பதற்காக தமிழ் உணர்வட்ட்ரவர்கள் என்று கூறவில்லை. தெரியவில்லை என்பது வேறு, ஏற்று கொள்ளவில்லை என்பது வேறு. அனால், பிற மத தெய்வங்களை போற்றி புகழ்வதாலேயே பெரும்பான்மையான கிறித்துவர்கள் தேவாரம்,திருவாசகம் ஆகிய இலக்கியங்களை ஏற்று கொள்ள தயாராக இல்லை. கேட்டால் இவைகள் எல்லாம் சாத்தானிடம் இருந்து வந்தவை. இந்த இலக்கியங்களை படிப்பதே பெரும் பாவம் என்று கருதுகிறார்கள்.. குறிப்பாக இந்த போக்கு CSI , Pentecost பிரிவு கிறித்துவர்களிடம் மிக அதிகமாக இருக்கிறது.

    நான் கத்தோலிக்க பிரிவை சேர்ந்தவள். நான் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் திருபலி முடித்து தேவாலாயத்தை விட்டு வரும் பொழுது தேவலாயதிற்கு வருவோரிடம் இதை பற்றி கேட்பதுண்டு. அதற்க்கு அவர்கள், அது பிற தெய்வங்களை பற்றிய இலக்கியம் தமிழில் இருக்கிறது என்பதால் நாம் ஏன் அதனை படிக்க வேண்டும் என்று நாகரிகமாக முடித்து கொள்கிறார்கள். இதில் 3 தலைமுறைக்கு முன்பே மதம் மாறியவர்களும் அடக்கம்.

    வியாசன் அவர்களே, தமிழ்நாட்டில் எத்துனை கிறித்தவர்கள் தமிழ் புத்தாண்டை கொண்டாடுகிறார்கள் என்பதாவது தெரியுமா. நான் கிருத்துவர்களை குறை கூறவில்லை. இந்த மனபோக்கு மாற வேண்டும். அதற்க்கான எந்த ஒரு முயற்சியையும் இது வரை எந்த பாதிரியாரும் முன் எடுத்ததில்லை. இது என் வாழ்வில் நான் கண்ட அனுபவம்.

    //. தமிழர்களின் கோயிலில் தமிழில் தமிழர்கள் பாடுவதைத் தடுக்க, தமிழெதிரிகளுடன் கூட்டுச் சேர்ந்து கடைசியில் வெற்றியும் கண்டவர்கள் தீட்சிதர்கள், என்னைப் பொறுத்தவரையில் அவர்கள் தமிழைப் பேசினாலும் தமிழுணர்வுள்ளவர்கள் அல்ல. , அவர்களை தமிழ்நாட்டுக் கிறித்தவர்களுடன் ஒப்பிட்டது வெறும் அபத்தம், அதற்காக நீங்கள் ஆயிரத்தெட்டு முறை “அருள் நிறைந்த மரியாயே வாழ்க (Hail Mary) ” கூற வேண்டுமென்று நான் நினைக்கிறேன்.//

    தீட்சிதர்களுடன் தமிழ் கிறித்துவ மக்களை ஒப்பிட்டு பேசியதை திரும்ப பெற்று கொள்கிறேன். உணர்ச்சி மிகுதியால் கூறிய வார்த்தைக்கு மன்னிக்கவும்..

    • செல்வி. ரெபேக்கா மேரி,

      உங்களின் பதிலுக்கும் நன்றி,

      //ஆம் இதை நான் ஏற்று கொள்கிறேன்.. இல்லை என்று கூறவில்லை, ஜோ.டி.க்ருஸ், தேவ நேய பாவாணர், சாலமன் பாப்பையா போன்று சிலர் இருக்க தான் செய்கிறார்கள். ஆனால் சமுதயத்தில் மிக பெரும்பான்மை யார் என்பது தான் இங்கு முக்கியம்///

      தமிழ்நாட்டில் பெரும்பான்மை கிறித்தவ தமிழர்களுக்கு தேவாரம், திருவாசகம் என்பவற்றில் ஈடுபாடு அல்லது ஏற்றுக் கொள்ளும் சகிப்புத் தன்மை இல்லாதிருப்பதற்குக் காரணம், அவர்களல்ல. இதில் அவர்களைக் குறை கூறுவது தவறு. இது தமிழ்நாட்டு திராவிட, பகுத்தறிவு வாதிகள் தமிழ்நாட்டு தமிழுக்கும் தமிழர்களுக்கும் செய்த கொடுமைகளில் இதுவுமொன்று. இது தமிழ்நாட்டின் பாடத்திட்டத்திலுள்ள குறைபாடு.

      இலங்கையில் இனப்பிரச்சனை இருந்தாலும் பல விடயங்களில் தமிழ்நாடு இலங்கையிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

      1. முதலில் தமிழ்நாட்டில் +2 வரை தமிழை எல்லோருக்கும் கட்டாயப் பாடமாக்க வேண்டும். அவர்கள் ஆங்கில மூலம் ஏனைய பாடங்களைக் கற்றாலும் தமிழைக் கட்டாய பாடமாக்கி, தமிழில் சித்தி பெறாவிட்டால் +2 சித்தி பெற்ற சான்றிதழ் கொடுக்கப்படக் கூடாது. இலங்கையில் தாய்மொழியும், கணிதமும் இல்லாது விட்டால் எந்தச் சான்றிதழும் முழுமையானதல்ல.

      2. இலங்கையைப் போன்றே கட்டாய பாடமாகிய தமிழ்ப் பாடத்திட்டத்தில் நான்கு மதங்களைப் பற்றியும், அவற்றின் வளர்ச்சி, தமிழில், தமிழர்களில், தமிழ்நாட்டில் அதன் தாக்கம், மாற்றம் என்பவற்றைக் கற்பிப்பதுடன், ஒரு சில பாடங்கள் அந்தந்த மத இலக்கியங்களிலிருந்தும் இடம் பெற வேண்டும்.

      3. பக்தியின் மொழியாகிய தமிழில் எல்லாமத நூல்களும் அதாவது பெளத்த, சைவ, வைணவ, கிறித்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள் உண்டு.

      4. இலங்கையில் ஒரு வகுப்பிலுள்ள கிறித்தவ, இந்து, இஸ்லாமிய மாணவர்கள் அனைவரும், மத வேறுபாடின்றி, அங்குள்ள பாடத்திட்டத்தின் படி இந்து மத அறிஞர்கள் பற்றி மட்டுமல்ல, வீரமாமுனிவர், உமறுப்புலவர் போன்றவர்களின் வரலாற்றையும் இளவயதிலேயே அறிகிறார்கள்.

      5. உதாரணமாக இலங்கையில் பதினோனொரு, பன்னிரண்டாவது வகுப்பில் தமிழிலக்கியத்தை ஒரு பாடமாக எடுத்த எனது தாயார் தேவாரம், திருவாசகம் மட்டுமல்ல, வீரமாமுனிவரின் தேம்பாவணி, உமறுப்புலவரின் சீறாப்புராணம், முகம்மது நபிகள் பிள்ளைத் தமிழ் போன்ற இலக்கியங்களைக் கூட +2 (G.C.E (Advance Level) இல் கற்றிருக்கிறார்.

      6. திராவிட பகுத்தறிவின் அடிப்படையில் மதங்களைப் பற்றிய விடயங்களைப் பாடத்திட்டத்திலிருந்து முற்றாக அகற்றாமல் மாணவர்கள் எல்லோருக்கும், தமிழர்களின் அனைத்து மத இலக்கியங்களிலும் குறைந்த பட்சம் அடிப்படை அறிவையாவது கொடுத்தால், மாணவர்களுக்கு அவற்றை ஏற்றுக் கொள்ளும் அல்லது தமிழின் அருமை, பெருமைகளை, மத வேறுபாடின்றி இரசிக்கும் பக்குவமாவது ஏற்படும்.

      7. உதாரணமாக, இலங்கையிலுள்ள இந்து மாணவர்கள் மூன்றாம் வகுப்பிலேயே தமிழ்நாட்டுக் கோயில்களைப் பற்றியும், நாயன்மார்களைப் பற்றியும் கற்பதால், தமிழ்நாட்டுக் கோயில்களின் வரலாறு, அருமை, பெருமை, அவற்றையும், அவற்றின் புனித்தத்துவத்தையும் காக்க வேண்டிய கடமையையும் உணர்கிறார்கள். ஆனால் அந்தளவு விழிப்புணர்வு தமிழ்நாட்டு இளம் தலைமுறையினரிடம் கிடையாது. பலருக்கு அவர்களின் சொந்த ஊர்க் கோயில்களின் வரலாறு கூட அவர்களுக்குத் தெரியாது.

      8. அத்தகைய விழிப்புணர்வும், தமிழர்களின் வரலாற்றில் பிரிக்க முடியாத அங்கங்களாகிய தமிழ்நாட்டுக் கோயில்களின் முக்கியத்தையும் இளவயதிலேயே அவர்களுக்குக் கற்பித்திருந்தால், இன்றைக்கு தமிழ்நாட்டுக் கோயில்கள் பார்ப்பனர்களில் ஆட்சியில் இருப்பதற்குப் பதிலாக தமிழர்களின் ஆளுமையின் கீழிருந்திருக்கும்.

      9. இலங்கையில் எத்தனையோ இஸ்லாமிய ஆசிரியர்கள் தமிழில், தமிழ் இலக்கியங்களில், தேவார திருவாசகங்களில் கூடப் புலமை பெற்றவர்கள். ஏனென்றால் மத வேறுபாடின்றி தமிழிலக்கியங்களை கற்று, இரசித்து அனுபவிக்கும் பக்குவத்தை அவர்களின் மாணவர் காலத்தில் இலங்கையின் பாடத்திட்டம் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறது.

      10. இலங்கையிலும் வஹாபியிசம் வேகமாகப் பரவி வருவதால் அடுத்த தலைமுறை முஸ்லீம்கள் தமிழ் புத்தகங்களையே கொளுத்தலாம், அது வேறு விடயம். 🙂

  33. வியாசன் வைத்த தீர்மானங்கள் மீது ஒரு பார்வை

    திருப்பலியில் ஏன் சாம்பராணி போடுகிறார்கள் என்பதை வாசகர்கள் வியாசனின் அவர்களின் கருத்தைப் படித்து புரிந்து கொள்ள வேண்டும். ஜோசப் போன்ற தோழர்கள் இசுலாமிய மதவெறியை கண்டிக்க முனைப்பாக இருக்கிற பொழுது சைவ வெறியையும் கத்தோலிக்க பார்ப்பனீயத்தையும் கண்டிக்க முன் வர வேண்டும். பெந்தேகொஸ்தேவை வியாசனும் மேரி அவர்களும் பிளந்துகட்டுகிறார்கள் ஜோசப். கவனியுங்கள்.

    ஏற்கனவே பின்னூட்டப் பெட்டி மன்றாட்டு திருப்பலி நடத்துகிற இடமாகவும் சாம்பிராணி புகையாகவும் மணக்கிறது! இதில் வியாசன் இங்கு உட்கார்ந்து அபத்தமான தீர்மானங்களை நிறைவேற்றுகிறார். அந்த தீர்மானங்களில் சில கருத்துக்களை வைப்போம்.
    —————————————————————————————

    \\இது தமிழ்நாட்டு திராவிட, பகுத்தறிவு வாதிகள் தமிழ்நாட்டு தமிழுக்கும் தமிழர்களுக்கும் செய்த கொடுமைகளில் இதுவுமொன்று. இது தமிழ்நாட்டின் பாடத்திட்டத்திலுள்ள குறைபாடு.\\

    தேவாரம் திருவாசகம் பாடவாங்கப்பா என்றால் ஒருபய வரலை. இதில் கொடுமைபற்றி பேசுவது விந்தையானது. சிவபெருமானை தீட்சிதர்களுக்கு காட்டிக்கொடுத்தவர்கள் சைவவெறியர்கள். கிராமத்தில் ஒரு சொலவடை உண்டு. “குழந்தை பால்குடிக்கும் பொழுது குறுக்கே புகுந்து முலை அறுத்தவர்கள்”. அப்படிப்பட்டவர்கள் தான் உமையவளிடம் முலைப்பால் அருந்திய இந்த சம்பந்தன் வகையறாக்கள். போராட்டத்தைக் காயடித்துவிட்டு பார்ப்பானை மட்டும் கைகாட்டுவதற்குப் பெயர் வெள்ளாளியம். வெர்டிக்கல் லைனாக இருந்தாலும் “அஷ்டாட்ஷரம் ஏற்கும் நெஞ்சு பஞ்சாட்ஷரம் பார்க்காது” என்று கூறும் கமலஹாசனும் (ஹரி)சாண்டால் கூட்டணியின் தலைவன் தான். வெறிக்கு வெறிக்கு! பாம்கா பத்லா பாம் என்று ஹிந்தியில் கூறுவார்கள்.

    ————————————————————————————-

    \\இலங்கையில் இனப்பிரச்சனை இருந்தாலும் பல விடயங்களில் தமிழ்நாடு இலங்கையிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.\\

    ஆறுமுக நாவலர் எப்படி சாதித்தீண்டாமையை கடைப்பிடித்தார் என்பதையும் சேர்த்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்!
    ———————————————————————–

    \\இலங்கையைப் போன்றே கட்டாய பாடமாகிய தமிழ்ப் பாடத்திட்டத்தில் நான்கு மதங்களைப் பற்றியும், அவற்றின் வளர்ச்சி, தமிழில், தமிழர்களில், தமிழ்நாட்டில் அதன் தாக்கம், மாற்றம் என்பவற்றைக் கற்பிப்பதுடன், ஒரு சில பாடங்கள் அந்தந்த மத இலக்கியங்களிலிருந்தும் இடம் பெற வேண்டும்.\\

    நான்கு மதங்களும் பக்தனுக்கும் இறைநம்பிக்கைக்கும் இடையில் தரகனாக இருப்பதைச் சொல்ல வேண்டும். வழிபாடு என்பது பக்தனுக்கு வழங்கப்பட்ட ‘உரிமை’ அல்ல ஆளும் வர்க்கத்தால் வழங்கப்பட்ட ‘கடமை’ என்பதை வீட்டுப்பாடமாக தரவேண்டும்.
    ————————————————————————————–

    \\பக்தியின் மொழியாகிய தமிழில் எல்லாமத நூல்களும் அதாவது பெளத்த, சைவ, வைணவ, கிறித்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள் உண்டு.\\

    பக்தியின் மொழி தமிழாம்! பாரதிதாசன் சொல்வார் இப்படி “நீவிர் கிளிபோல சொல்வதன்றி தமிழ்நூற்கள் ஆராய்ந்து கிழித்திட்டீரோ!”
    —————————————————————————————–

    \\திராவிட பகுத்தறிவின் அடிப்படையில் மதங்களைப் பற்றிய விடயங்களைப் பாடத்திட்டத்திலிருந்து முற்றாக அகற்றாமல் மாணவர்கள் எல்லோருக்கும், தமிழர்களின் அனைத்து மத இலக்கியங்களிலும் குறைந்த பட்சம் அடிப்படை அறிவையாவது கொடுத்தால், மாணவர்களுக்கு அவற்றை ஏற்றுக் கொள்ளும் அல்லது தமிழின் அருமை, பெருமைகளை, மத வேறுபாடின்றி இரசிக்கும் பக்குவமாவது ஏற்படும்.\\

    மதவேறுபாடின்றி இரசிப்பது என்பதன் பொருள் ஈயும் பீயுமாக இருப்பது.

    —————————————————————————————
    \\உதாரணமாக, இலங்கையிலுள்ள இந்து மாணவர்கள் மூன்றாம் வகுப்பிலேயே தமிழ்நாட்டுக் கோயில்களைப் பற்றியும், நாயன்மார்களைப் பற்றியும் கற்பதால், தமிழ்நாட்டுக் கோயில்களின் வரலாறு, அருமை, பெருமை, அவற்றையும், அவற்றின் புனித்தத்துவத்தையும் காக்க வேண்டிய கடமையையும் உணர்கிறார்கள். ஆனால் அந்தளவு விழிப்புணர்வு தமிழ்நாட்டு இளம் தலைமுறையினரிடம் கிடையாது. பலருக்கு அவர்களின் சொந்த ஊர்க் கோயில்களின் வரலாறு கூட அவர்களுக்குத் தெரியாது.\\

    யாருக்கும் தொ.பரமசிவன் எடுத்துகாட்டும் தொல்லியல் ஆய்வுகள் தெரியாமல் போனது வருத்தமான விடயம்! சைவப்புலிகள் காஷ்மீர் பார்ப்பனர்களின் (பிருகச் சரணம் என்பார்கள்; இராசந்தேரனின் அவையை அலங்கரித்தவர்கள்) காலை நக்கிப் பிழைத்தவர்கள் என்ற வரலாறும் மாணவர்களுக்குத் தெரியாது! வியாசனுக்கும் தெரியாது!

    திருத்துறைப் பூண்டி கல்வெட்டில் உள்ள குகையிடிக்கலகத்தை பக்தர்கள் தெரிந்திருந்தால் இன்றைக்கு காஞ்சி சங்காரச்சாரி வாழை இலையில் பேழமுடியுமா? ஆதினத்திற்கு சிவபெருமான்தான் கனவில் வந்திருப்பானா?

    —————————————————————————————

    \\அத்தகைய விழிப்புணர்வும், தமிழர்களின் வரலாற்றில் பிரிக்க முடியாத அங்கங்களாகிய தமிழ்நாட்டுக் கோயில்களின் முக்கியத்தையும் இளவயதிலேயே அவர்களுக்குக் கற்பித்திருந்தால், இன்றைக்கு தமிழ்நாட்டுக் கோயில்கள் பார்ப்பனர்களில் ஆட்சியில் இருப்பதற்குப் பதிலாக தமிழர்களின் ஆளுமையின் கீழிருந்திருக்கும்.\\

    தமிழர்களின் ஆளுமை என்று மட்டையடியாக அடிக்கிறார் வியாசன். பார்ப்பனர்களுக்குப் பதிலாக பால்சொதி திங்கும் பிள்ளைகள் வந்திருப்பார்கள். வெயிலுக்குப் பதிலாக வெள்ளாவியில் விழுந்திருப்போம். அதுதான் நிதர்சனம் கூட. இந்துமதம் பார்ப்பனீய மதம் என்கிற பொழுது அதில் பார்ப்பான் மட்டும்தான் இருக்கிறானா என்ன? சைவப் பூனைகளுக்கு யார் மணி கட்டுவது?

    ————————————————————————————-

    \\ இலங்கையிலும் வஹாபியிசம் வேகமாகப் பரவி வருவதால் அடுத்த தலைமுறை முஸ்லீம்கள் தமிழ் புத்தகங்களையே கொளுத்தலாம், அது வேறு விடயம்.\\

    ‘வஹாபிசம்’ என்று சொல்லிவிட்டு ‘அடுத்த தலைமுறை முசுலீம்கள்’ என்று ஒரே போடாக போடுகீறீர்களே! இதுதான் வியாசபிஹம்.

    உங்களால் ஒரு அஞ்சு நிமிடம் கூட நடிக்க முடியவில்லை. உங்களது 9வது பாயிண்டை பாருங்களேன் “இலங்கையில் எத்தனையோ இஸ்லாமிய ஆசிரியர்கள் தமிழில், தமிழ் இலக்கியங்களில், தேவார திருவாசகங்களில் கூடப் புலமை பெற்றவர்கள். ஏனென்றால் மத வேறுபாடின்றி தமிழிலக்கியங்களை கற்று, இரசித்து அனுபவிக்கும் பக்குவத்தை அவர்களின் மாணவர் காலத்தில் இலங்கையின் பாடத்திட்டம் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறது.”

    உங்களது கருத்துப்படி ஆர் எஸ் எஸ் கர்ப்பிணி பெண்ணை குறுக்காக பிளந்து சிசுவை எரிக்கிற பொழுது அடுத்த தலைமுறை இந்துக்கள் அதே போன்று குறுக்காக பிளப்பார்களா வியாசன்?

    ——————————————————————————————

  34. வினவிற்குப் பாராட்டுகள்

    வழக்கம் போல் கான்ட்ரவர்சியான ஒரு பதிவைப் போட்டுவிட்டு, சாதி, மொழிச் சண்டையாக மாற்றியுள்ளீர்கள்.

    இங்கே வந்து தமிழ் படித்த பாதிரிகள் எல்லாம் மொழியினால் ஈர்க்கப் பட்டு படிக்கவில்லை. கிற்ஸ்துவத்தைப் பரப்புவதற்காகவே செய்தார்கள்.துப்பாக்கி மூலம் அரசியல் அதிகாரத்தையும், மதத்தைப் பரப்புவதன் மூலம் கலச்சார ஊடுருவலையும் நிகழ்த்தினார்கள் இன்றைய பாதிரிகள் இந்து மதத்தில் உள்ள அனைத்து அம்சங்களையும் கையில் எடுத்து(தேரொட்டம், திருவிழா, கால் ஊன்றுவது, தாலி அணிவது… ) அந்தப் பாதையில் தொடர்ந்து பயணித்து வருகிறார்கள்.

    இதைப் புரிந்து கொண்டால் எல்லாம் அதது அததன் இடத்தில் போய் கரெக்டாக ஃபிட் ஆகும்.

  35. நடுவில் இவர்கள் திருக்குறளையே கிறிஸ்தவ இலக்கியம் என்று கொள்ளையடிக்கப் பார்த்தார்கள்.

  36. எல்லாப் பெரியாரிஸ்டுக்களையும் போலவே தலைவர் தென்றலும் இக்காலப் பிரச்சனைக்கு ஆயிரமாண்டுகளுக்குமதிகம் பின்னோக்கிப் போய் சம்பந்தரையும், இராஜேந்திர சோழனையும், நூற்றைம்பதாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த ஆறுமுகநாவலரையும் துணைக்கழைக்கிறார். தமிழ்நாட்டில் இன்றைக்கு தமிழர்களின் தில்லைக் கோயிலைத் தமிழர்கள் தீட்சிதரிடம் கோட்டை விட்டதற்கும், தனது சொந்த ஊர்க்கோயிலின் வரலாறே தெரியாமல், பெரியார் வழிவந்த தமிழ்நாட்டு திராவிடச் செல்வங்கள் எல்லாம் ரஜினி காந்த் கட்டவுட்டுக்கு பாலாபிசேகம் செய்து கொண்டிருப்பதற்கும் ஞானசம்பந்தரும், ராஜேந்திர சோழனும் எப்படிக் காரணமானார்கள் என்பது தென்றலுக்குத் தான் வெளிச்சம், அவர் தான் அதை விளக்க வேண்டும். 🙂

    1. ஆறுமுகநாவலர் மண்ணில் பாப்பாபட்டியும், கீரிப்பட்டியும், இரட்டைக்குவளையும், செருப்பு போட்டால் மலம் தீற்றுவதும் இருபத்தொராம் நூற்றாண்ட்டிலும் நடக்கவில்லை, பெரியார் பிறந்த மண்ணில் தான் நடக்கிறது. அதைப்பற்றிப் பேசுவதற்குப் பதிலாக, அப்படி எதுவுமே நடக்காத இலங்கையையும், ஆறுமுகநாவலரையும் இழுப்பது வெறும் அபத்தம்.

    2. பெரியாரிசம் தமிழ்நாட்டில் வேரூன்றியது போல் ஆறுமுகநாவலரின் சாதித்தீண்டாமை ஈழத் தமிழர்களிடம் வேரூன்றவில்லை. ஆனால் பெரியாரிசம் வேரூன்றிய மண்ணில் தான் சாதிவெறி தலையை விரித்துப் போட்டு ஆடுகிறது, ஆறுமுகநாவலரை நாங்கள் போற்றுவதற்குக் காரணம் அவர் சைவத்தையும், தமிழையும் அழியாமல் காத்தார் என்பதற்காகத் தானே தவிர, அவரது சாதிக் கொள்கைக்காக அல்ல.

    3. திருப்பலியில் ஏன் சாம்பிராணி போடுகிறார்கள் என்பதற்கும் இந்துமதம் தான் காரணம் என்று தான் தலைவர் நினைத்துக் கொண்டிருக்கிறாரோ என்னவோ எனக்குத் தெரியாது. அந்தளவுக்கு உலகம் தெரியாதவராக அவர் இருப்பாரென்று நான் நம்பவில்லை. சாம்பிராணியின் பிறப்பிடமே மத்திய கிழக்கு தான். ஏசுநாதர் பிறந்த போது மூவரசர்கள் (Three Wiseman) பரிசாக எடுத்துச் சென்றதே ஒருவகை சாம்பிராணி (Myrrh) தான். அதை நினைவுபடுத்தத் தான் திருப்பலியில் சாம்பிராணி போடுகிறார்கள்.

    4. காலங்காலமாக சைவர்களாகிய பெரும்பான்மைச் தமிழர்களை பெரியாரிச பாணியில் தேவையில்லாமல் வம்புக்கிழுத்து, தேவார திருவாசகங்களை இழிவு படுத்தி, நாயன்மார்களை நக்கலடித்து, அவர்களின் மதவுணர்வைப் புண்படுத்தி, தமிழினத்தை பிளவு படுத்தி விட்டு, தில்லையைக் காப்போம், தீட்சிதர்களை எதிர்ப்போம் என்று முற்போக்குகள் கூச்சலிட்ட போது அவர்களை நம்ப பெரும்பான்மைத் தமிழர்கள் தயாராகவில்லை, அதனால் தான் தில்லைப் போராட்டம் பிசு பிசுத்துப் போய், இன்று முழுத்தமிழினமும் சில நூறு தீட்சிதர்களின் முன்னால் மூக்குடைபட்டுப் போய் நிற்கிறது.

    5. இந்த அனுபவத்தின் மூலமாவது பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அதாவது இஸ்லாமியர்களின் மதவுணர்வு மட்டுமல்ல, இந்துக்களின் மதவுணர்வையும் புண்படுத்தக் கூடாது. ஏனென்றால் இன்றும் இந்துமதம் பெரும்பான்மை தமிழர்களின் மதம், அவர்களை இழிவு படுத்தி விட்டு, தமிழர்களின் நலன்களுக்காக ஒன்றுப்டுங்கள் என்றாலும், எல்லோரும் நம்ப மாட்டார்கள், சந்தேகத்துடன் தான் பார்ப்பார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

    6. மாணவர்களுக்கு வரலாற்றைக் கற்பிக்கும் போது வரலாறுடன் பெரியாரிசத்தையும், பகுத்தறிவையும் கலக்கக் கூடாது. உழைக்கும் வர்க்கம், ஆளும் வர்க்கம், உரிமை, கடமை, பெரியாரிசம், கம்யூனிசம் எதுவும் வரலாற்றுடன் கலக்கப்படக் கூடாது. எதையும் கலந்தால் அது உண்மையான வரலாறல்ல. வரலாற்றை அபப்டியே மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டுமென்கிறேன். தலைவர் தென்றல் என்னடா வென்றால் வர்க்கப் போராட்டம் பற்றி பேசுகிறார் போலிருக்கிறது.

    7. பக்தியின் மொழி தமிழ் என்றது நானல்ல, தமிழ்த்தூது வண. பிதா தனிநாயகம் அடிகளார். பாரதிதாசன் விரும்பியது போலவே அவர் தமிழ்நூற்களை ஆராய்ந்து கிழித்தது மட்டுமல்ல. தமிழை ஆராய்ச்சி செய்வதற்காக உலகத் தமிழராய்ச்சி மாநாட்டுக்கும் வித்திட்டவர். அதனால் அந்த ஈழத்தமிழன் தனிநாயகம் அடிகளாரிடம் மானசீகமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுவார் என நம்புகிறேன்.

    “If Latin is the Language of Law and of Medicine
    French the Language of the Diplomacy
    German the Language of Science
    And English the Language of Commerce
    Then Tamil is the Language of Bhakti
    The devotion to the sacred and the holy.”

    -Rev. Fr. Thaninayakam –

    • தொடர்ச்சி:….

      8. //மதவேறுபாடின்றி இரசிப்பது என்பதன் பொருள் ஈயும் பீயுமாக இருப்பது///

      ஒவ்வொருவரும் அவரவருக்கு விரும்பியவாறு உதாரணங்களைக் கூறிக் கொள்ளலாம், எப்படியானாலும் பொருளைப் புரிந்து கொண்டால் சரி.

      9. வேலிக்கு ஓணான் சாட்சி மாதிரி, தென்றல் அவர்கள் எதற்கேடுத்தாலும் தொ.பரமசிவனை மேற்கோள் காட்டுவது எனக்குச் சரியாகப் படவில்லை. அவரே ஒரு பெரியாரிஸ்ட். அவரிடம் போய் கோயில்களைப் பற்றிக் கேட்டால் அவரும் நிச்சயமாக பார்ப்பனீயத்தை எப்படியும் கோர்த்து விடுவார் என்பது எல்லோருக்கும் தெரியும். இன்மேலாவது யாராவது நடுநிலையான ஆராய்ச்சியாளர்களை மேற்கோள் காட்டினால் மற்றவர்களும் ஏற்றுக் கொள்வார்கள்.

      10. திருத்துறைப் பூண்டி கல்வெட்டில் உள்ள குகையிடிக்கலகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லை. அதைப் பற்றி முதலில் கூறுங்கள், காஞ்சி சங்கராச்சாரி வாழை இலையில் பேழமுடியுமா? என்பதை பின்பு பார்ப்போம். காஞ்சி சங்கராச்சாரியை பெரும்பான்மை சைவர்களின் தலைவராக நீங்கள் கருதுகிறீர்களோ என்னவோ எனக்குத் தெரியாது. ஆனால் நாங்கள் (ஈழத்தமிழர்கள்) அப்படிக் கருதவில்லை, அதனால் அவர் வாழையிலையில் பேண்டாலென்ன, பேழாமல் இருந்தாலென்ன, எங்களுக்கு எல்லாம் ஒன்று தான்.

      11. //பார்ப்பனர்களுக்குப் பதிலாக **பால்சொதி திங்கும் பிள்ளைகள் வந்திருப்பார்கள்///

      இது தான் தமிழ்நாட்டில் பெரியாரிஸ்டுகளின் பிரச்சனையே அவர்களைப் பொறுத்தவரையில் பார்ப்பானின் ஆதிக்கத்தைப் பொறுத்தாலும் சக-தமிழ்ச்சூத்திரர்களின் ஆளுமையைப் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். அடிமைகள் எல்லோருக்கும் இது பொதுவான குணம். உதாரணமாக அமெரிக்காவில் அடிமை முறை இத்தனை நூற்றாண்டுகளுக்கு எதிர்ப்புமில்லாமல், நடைபெற்றதற்கு இது தான் காரணம். கறுப்பு அடிமைகளால் ஒன்று பட்டு விடுதலைக்காக போராட்டம் நடத்த முடியவில்லை. அவரக்ளுக்கிடையே பல பிரிவுகள். வீட்டு அடிமைகள் (House Niggers), தோட்ட அடிமைகளை (Garden Niggers) விட தாங்கள் உயர்ந்தவர்களாக நினைத்துக் கொண்டார்கள். அதனால் ஆளுக்காள் பொறாமை. அவர்கள் இன்னொரு கறுப்பரின் தலைமையை விட வெள்ளையர்களின் தலைமையை ஏற்றுக் கொள்ள தயாராக இருந்தார்கள்.

      **(பால்சொதி யாழ்ப்பாணத் தமிழர்களின் உணவென்று இவ்வளவு நாளும் நினைத்திருந்தேன்) 🙂

      12. //‘வஹாபிசம்’ என்று சொல்லிவிட்டு ‘அடுத்த தலைமுறை முசுலீம்கள்’ என்று ஒரே போடாக போடுகீறீர்களே!///

      வஹாபிஸ்டுகளும் முஸ்லீம்கள் தான், அதாவது அவர்கள் வஹாபி முஸ்லீம்கள். நான் கூறியதன் கருத்து என்னவென்றால் இலங்கையில் வஹாபியிசம் வேகமாக வளர்ந்து வருகிறது, அதனால் அடுத்த தலைமுறை முஸ்லீம்கள் வஹாபிகளாக இருப்பார்கள் என்பது தான்.

    • வியாசன் அவர்களின் முதல் இரு அவதூறுகள்

      \\1. ஆறுமுகநாவலர் மண்ணில் பாப்பாபட்டியும், கீரிப்பட்டியும், இரட்டைக்குவளையும், செருப்பு போட்டால் மலம் தீற்றுவதும் இருபத்தொராம் நூற்றாண்ட்டிலும் நடக்கவில்லை, பெரியார் பிறந்த மண்ணில் தான் நடக்கிறது. அதைப்பற்றிப் பேசுவதற்குப் பதிலாக, அப்படி எதுவுமே நடக்காத இலங்கையையும், ஆறுமுகநாவலரையும் இழுப்பது வெறும் அபத்தம்.

      2. பெரியாரிசம் தமிழ்நாட்டில் வேரூன்றியது போல் ஆறுமுகநாவலரின் சாதித்தீண்டாமை ஈழத் தமிழர்களிடம் வேரூன்றவில்லை. ஆனால் பெரியாரிசம் வேரூன்றிய மண்ணில் தான் சாதிவெறி தலையை விரித்துப் போட்டு ஆடுகிறது, ஆறுமுகநாவலரை நாங்கள் போற்றுவதற்குக் காரணம் அவர் சைவத்தையும், தமிழையும் அழியாமல் காத்தார் என்பதற்காகத் தானே தவிர, அவரது சாதிக் கொள்கைக்காக அல்ல.\\

      சாதியத்தை காப்பாற்றும் யாழ்ப்பாணக் கோயில்கள்
      http://kalaiy.blogspot.com/2011/08/blog-post_19.html

      இலங்கை அரசியலில் “வெள்ளாள-கொவிகம” ஆதிக்கம்
      http://kalaiy.blogspot.com/2010/12/blog-post_04.html

      சைவ- வேளாள அடிப்படைவாதி நாவலரை கௌரவிக்கும் சிங்களப் பேரினவாதம்
      http://kalaiy.blogspot.com/2014/04/blog-post_29.html

      இலங்கை இனத்துவ அரசியலின் தொடக்கங்கள்
      http://kalaiy.blogspot.com/2009/05/blog-post_03.html

      மேலே இருப்பவை கலை அவர்களின் பதிவுகள்.
      கலை ஒரு கம்யுனிஸ்ட் என்பதால் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று வியாசன் அவர்கள் கதறக் கூடும். இருந்தாலும் என்ன செய்ய? சைவ-வெறியர்கள் இலங்கைச் சூழலிலும் சாதிவெறியர்கள் தான் என்பதை அம்பலப்படுவதுதானே முக்கியம்.

      • யாழ்ப்பாணத்தில் நடந்த சாதிக்கொடுமைகள் என இவர் ஊதிப்பெருக்கும் எந்த சம்பவமும் அண்மையில் நடந்தவை அல்ல. எல்லாமே குறைந்தது முப்பது தொடக்கம் நாற்பது வருடங்களுக்கு முந்தியவை. இலங்கையிலுள்ள “சாதிக்கொடுமைகள்” எதையுமே தமிழ்நாட்டில் நடைபெறும் சாதிக் கொடுமைகளுடன் ஒப்பிட முடியாது அபப்டி ஒப்பிடுவதும் வெறும் அபத்தம். தமிழ்நாட்டில் இன்றும் பல கிராமங்களில் செருப்பு போட்டு நடந்தாலே மலம் தீற்றுவார்களாம் ஆதிக்க சாதியினர்.

        //.கலை ஒரு கம்யுனிஸ்ட் என்பதால் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று///

        இப்படி இல்லாத ஒன்றைப் பெரிதாகி எழுதனால் தான், உங்களைப் போன்றவர்கள் நண்பனாக ஏற்றுக் கொள்வீர்கள் என்பது காரணமாக இருக்கலாம். இப்படி ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கிறவர், நிச்சயமாக ஒரு கம்யூனிஸ்டாகத் தானிருப்பார்ர் என்று நினைத்தேன், அது சரியாகப் போய் விட்டது. 🙂

  37. வினவு ,

    [1]வினவு updatesகாக காத்து இருந்தே வாழ் நாள் கழீயும் போல் உள்ளது. வினவு இணைய updates அய் நேரம் சார்ந்து முறை படுத்தினால் என்ன ? 9am ,1pm ,4pm, 7pm ,9.55pm என்று updates செய்யும் நேரத்தை முறை படுத்தினால் என்ன வினவு ?இப்படி முறைபடுத்துதல் வினவு வாசர்களீன் நேரத்தையும் சேமிக்கும் அல்லவா ?

    [2]மணி 9.53am ஆகியும் feedback update செய்யாமைக்கு காரணம் என்ன? வினவுக்கு ஞாயிற்றுக்கிழமை என்றால் எவ் வேலையும் செய்யக்கூடாது என்ற எண்ணமா ? யூதர்களீன் பழைய ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை எவ் வேலையும் செய்யக்கூடாது என்று கூறி உள்ளது போல வினவுக்கும் ஏதேனும் கொள்கை உள்ளதா ?

    [3]வினவு பதில் அளிக்குமா ?

  38. வியாசன் அவர்களுக்கு,

    \\வஹாபிஸ்டுகளும் முஸ்லீம்கள் தான், அதாவது அவர்கள் வஹாபி முஸ்லீம்கள். நான் கூறியதன் கருத்து என்னவென்றால் இலங்கையில் வஹாபியிசம் வேகமாக வளர்ந்து வருகிறது, அதனால் அடுத்த தலைமுறை முஸ்லீம்கள் வஹாபிகளாக இருப்பார்கள் என்பது தான்.\\

    உங்களது வாதப்படி, ஆர்எஸ்எஸ் காலிகளும் இந்துக்கள் தான். ஆர்எஸ்எஸ் கோலோச்சுகிறது என்பதற்காக அடுத்த தலைமுறை இந்துக்களும், ஆர்எஸ்எஸ் காலிளாக இருப்பார்களா?

    • ஆர் எஸ் எஸ் இல் ஈடுபாடு கொண்ட இந்துக்களின் அடுத்த தலைமுறையினரும் ஆர் எஸ், எஸ் ஆக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

  39. வியாசன் அவர்களுக்கு,

    ‘நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலுபுட்பம் சாத்தியே
    சுற்றி வந்து மொண மொணவென்று சொல்லும் மந்திரம் ஏதடா!’

    என்று சிவவாக்கியச் சித்தர்பாடிய நாத்திகத்தைத் தெரியாத பக்தன் எல்லாம் திருவாசகத்தில் உருகி, கல்லிற்கு அதே பாலால் அபிசேகம் செய்கிற பொழுது ரஜினி ரசிகன் ரஜினியின் கட்டவுட்டிற்கு பாலேபிசேகம் செய்யக்கூடாதா? இருவருமே விசிலடிச்சான் குஞ்சுகள் தான் என்கிற பொழுது அது என்ன தனியாக சைவர்கள் என்ற அடைமொழி?

    \\ஞானசம்பந்தரும், ராஜேந்திர சோழனும் எப்படிக் காரணமானார்கள் என்பது தென்றலுக்குத் தான் வெளிச்சம், அவர் தான் அதை விளக்க வேண்டும்.\\

    கூனியின் மனைவி மானி மறைவாக மார்பிலே திருநீறைப் பூசி சிவனை வழிபட்டாளாம். அந்தளவிற்கு சமணர்களின் கொடுமை தமிழகத்தில் தலைவிரித்தாடியதாம். அப்பொழுதுதான் சம்பந்தன் தமிழக மக்களை சமணத்தின் கோரப்பிடியில் இருந்துவிடுவித்தானாம். அர்ஜீன் சம்பந்த், சம்பந்தனுக்கு இப்படித்தான் இன்ட்ரோ கொடுக்கிறார் வியாசன். இந்த சம்பந்தமே சம்பந்தனுக்கு போதுமானது. ஆர் எஸ் எஸ்ஸின் அறிமுகமே அமர்க்களமாக இருக்கிற பொழுது நான் வேறு தனியாக சம்பந்தனை சம்பந்தப்படுத்துவது கற்றறிந்தோர் சபையில் அவ்வளவு உசிதமானதல்ல!

    ஆனால் இங்கு தெரிய வேண்டியது பார்ப்பன கொடுங்கோன்மையை தமிழ் நாட்டில் தலைமை தாங்கி நடத்துகிறவர்களில் பார்ப்பனர்களுக்கு ஈடாக சைவர்கள் தான் முதன்மையில் இருக்கிறார்கள் என்பது.

    ———————————————–

    ராஜராஜ சோழன் கம்மாளச் சுடுகாடு என்றும் பறச்சுடுகாடு என்றும் இருவேறு சுடுகாடுகளை நியமித்திருப்பதை கல்வெட்டு கூறுகிறது. கல்வெட்டும் ஒரு பெரியாரிஸ்டு என்று சொல்லப் போகீறீர்களா வியாசன்?

    ————————————

    \\ சாம்பிராணியின் பிறப்பிடமே மத்திய கிழக்கு தான். ஏசுநாதர் பிறந்த போது மூவரசர்கள் (Three Wiseman) பரிசாக எடுத்துச் சென்றதே ஒருவகை சாம்பிராணி (Myrrh) தான். அதை நினைவுபடுத்தத் தான் திருப்பலியில் சாம்பிராணி போடுகிறார்கள்.\\

    சரிதான் வியாசன். கத்தோலிக்கத்தை பிள்ளைமார்கள் சுவீகரிக்கிறார்கள் என்றால் அதற்கு இதுபோன்ற வஸ்துக்கள் எல்லாம் சங்கமிக்க வேண்டும். அதனால் தான் பொட்டுவைக்காத பிற கிறித்துவ சகோதரிகளை கலாச்சாரத்தின் எதிரிகளாகப் பார்ப்பதும் செந்துர்க்கம் வைப்பதுதான் செந்தமிழச்சிகளின் வாழ்வியல் விழுமியங்கள் என்றும் வியந்தோதுகீறிர்கள்.

    ———————–

    \\இந்த அனுபவத்தின் மூலமாவது பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அதாவது இஸ்லாமியர்களின் மதவுணர்வு மட்டுமல்ல, இந்துக்களின் மதவுணர்வையும் புண்படுத்தக் கூடாது. ஏனென்றால் இன்றும் இந்துமதம் பெரும்பான்மை தமிழர்களின் மதம், அவர்களை இழிவு படுத்தி விட்டு, தமிழர்களின் நலன்களுக்காக ஒன்றுப்டுங்கள் என்றாலும், எல்லோரும் நம்ப மாட்டார்கள், சந்தேகத்துடன் தான் பார்ப்பார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.\\

    உங்களது இசுலாமிய மத உணர்வை பார்த்தோம். பக்கத்து பதிவில் பாமரன் தீர்க்கதரிசனமாய் குறிப்பிட்டிருக்கிறார். கழிவறையில் ஆரம்பித்து துலுக்கர்கள் வரை உங்களது மத நல்லிணக்கம் கனஜோர்.

    இந்துமத உணர்வில் தெரிவது சைவ வெறி. கிறித்துவம் என்று வருகிற பொழுது பொட்டில் ஆரம்பித்து நிக்கரில் முடித்திருக்கிறீர்கள். ஆக எங்களை சந்தேகத்துடன் பார்ப்பதற்கு முன்னர் உங்களை நாங்கள் சரியாகவே பார்க்கிறோம் என்பதை தெரிந்துகொள்ளுங்கள் வியாசன்.

    ————————–

  40. வியாசன் அவர்களுக்கு

    \\ காலங்காலமாக சைவர்களாகிய பெரும்பான்மைச் தமிழர்களை பெரியாரிச பாணியில் தேவையில்லாமல் வம்புக்கிழுத்து, தேவார திருவாசகங்களை இழிவு படுத்தி, நாயன்மார்களை நக்கலடித்து, அவர்களின் மதவுணர்வைப் புண்படுத்தி, தமிழினத்தை பிளவு படுத்தி விட்டு, தில்லையைக் காப்போம், தீட்சிதர்களை எதிர்ப்போம் என்று முற்போக்குகள் கூச்சலிட்ட போது அவர்களை நம்ப பெரும்பான்மைத் தமிழர்கள் தயாராகவில்லை, அதனால் தான் தில்லைப் போராட்டம் பிசு பிசுத்துப் போய், இன்று முழுத்தமிழினமும் சில நூறு தீட்சிதர்களின் முன்னால் மூக்குடைபட்டுப் போய் நிற்கிறது.\\

    முழுத்தமினமும் மூக்குடைப்பட்டு போய் நிற்பதில் தான் உங்களுக்கு எத்துணைப்பிரியம்? எதிரிகளுக்கு வரலாற்றில் இடம் உண்டு வியாசன். ஆனால் துரோகிகளுக்கு என்ன இடம் உண்டு?

    உங்களது முதல் திரிபே சைவர்களாகிய “பெரும்பான்மைத் தமிழர்கள்”.

    எவனுக்கு தன் காலுக்கு கீழே சொந்தமாக நிலமும் தலைக்கு மேலே கூரையும் வயிறு முட்ட மூன்று வேளை பால்சொதியும் தின்ன நேரமும் கிடைத்ததோ அவனுக்குத்தான் இங்கு கலாச்சாரம், பண்பாடு, விதவிதமான உணவுகள் பால்சொதி உட்பட. அவர்கள் தான் இங்கு முப்பது முக்கோடி தேவர்களையும் அறுப்பத்துமூன்று நாயன்மார்களை வைத்து முட்டுகொடுக்கின்றனர்.

    ஷஜ்ஜமம் என்பதும் தைவதம் என்பதும் பஞ்சப்பரம்பரம்பரைக்கு அப்புறந்தான் என்பது சைவர்களுக்கும் தெரியாது திருவாசகத்திற்கும் சேர்த்து சிம்பொனி அமைத்த இளையராஜாவும் மறந்துவிட்டார்.

    பக்தியும் சரி பாடல்களும் சரி வெறும் கல்லுக்காக அல்ல; கல்ட்டுக்காக என்பது தான் ஆளும் வர்க்கம் விதித்த ருத்ர தாண்டவம். இதில் வியாசன் போன்றவர்கள் அம்பலத்தில் அம்மணமாக ஆடத்தான் செய்வார்கள். பிட்டுக்கு மண் சுமந்த ஈசனை சாட்டையால் விளாசினாலே அந்தக் கிழவி; அவள் தான் தற்பொழுதைய தேவை. ஈசனை விளாசினால் தான் சைவர்களின் முதுகுத்தோல் எந்திரிக்கும் என்பது உழைக்கும் மக்களின் திருவிளையாடற்புராணம். நிகழ்த்திக் காட்டுவோம். காத்திருங்கள்.

    \\இந்த அனுபவத்தின் மூலமாவது பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அதாவது இஸ்லாமியர்களின் மதவுணர்வு மட்டுமல்ல, இந்துக்களின் மதவுணர்வையும் புண்படுத்தக் கூடாது. ஏனென்றால் இன்றும் இந்துமதம் பெரும்பான்மை தமிழர்களின் மதம், அவர்களை இழிவு படுத்தி விட்டு, தமிழர்களின் நலன்களுக்காக ஒன்றுப்டுங்கள் என்றாலும், எல்லோரும் நம்ப மாட்டார்கள், சந்தேகத்துடன் தான் பார்ப்பார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.\\

    உங்களது இசுலாமிய மத உணர்வை பார்த்தோம். பக்கத்து பதிவில் பாமரன் தீர்க்கதரிசனமாய் குறிப்பிட்டிருக்கிறார். கழிவறையில் ஆரம்பித்து துலுக்கர்கள் வரை உங்களது மத நல்லிணக்கம் கனஜோர்.

    இந்துமத உணர்வில் தெரிவது சைவ வெறி. கிறித்துவம் என்று வருகிற பொழுது பொட்டில் ஆரம்பித்து நிக்கரில் முடித்திருக்கிறீர்கள். ஆக எங்களை சந்தேகத்துடன் பார்ப்பதற்கு முன்னர் உங்களை நாங்கள் சரியாகவே பார்க்கிறோம் என்பதை தெரிந்துகொள்ளுங்கள் வியாசன்.

    —-

    பக்தியின் மொழி தமிழ் என்று தனிநாயகம் அடிகள் சொல்வதை குறிப்பிட்டிருக்கீறிர்கள். முழுப்பொய்களைக் காட்டிலும் ஆபத்தானவை அரை உண்மைகள் என்பார்கள். இந்தப் பதிவின் வரலாற்று ஆளுமை கால்டுவெல் அவர்கள் தமிழ் இலக்கியச் சூழலின் மிகைவேட்புத்தனத்தை கடுமையாகச் சாடியிருக்கிறார்.

    கால்டுவெல் அவர்கள் தனது ஆராய்ச்சிக்கு துணையாகக் கொண்டது எந்த தமிழ் இலக்கியங்களையும் அல்ல. கால்டுவெல்லுக்கு ஆதாரமாக இருந்தது உழைக்கும் மக்களின் வழக்காடு மொழி. உங்களது பக்தி இலக்கியங்கள் முழுவதும் பார்ப்பனீயத்தின் தாக்கம் தான் இருக்கிறது. உமை என்பதே தமிழ் வேர்சொல் அல்ல என்கிற பொழுது பக்தியின் மொழி தமிழ் என்பது சைவர்களின் பார்ப்பனீய பாசத்தை மறைப்பதற்கு வேண்டுமானால் பயன்படலாம்.

    திருக்குறளே தெளிவாகச் சொல்கிறது இப்படி;

    நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
    மண்மாண் புனைபாவை யற்று.

    போப் இதை மொழிபெயர்க்கிற பொழுது;

    Handsome man with untrained mind
    Has a beauty of mud-doll. என்பார்

    மேலைத்தேயம் தமிழ் இலக்கியங்களை இப்படி நறுக்குத்தெறித்தார் போல் சொல்கிறது பொழுது தமிழ் என்பது சைவர்களுக்கு களிமண் பொம்மையைப் போன்றதே.

  41. வியாசன் அவர்களுக்கு

    \\**(பால்சொதி யாழ்ப்பாணத் தமிழர்களின் உணவென்று இவ்வளவு நாளும் நினைத்திருந்தேன்)\\

    ஆனால் பாருங்கள் வியாசன்; பால்சொதி யாழ்ப்பாண வேளாளர்களின் உணவாகத்தான் இன்றுவரை இருக்கிறது. ஒடுக்கப்பட்ட சாதிகள் தவுணையும் பனங்கிழங்கையும் சுட்டுத்தான் பசியாறுகிறார்கள். இன்றைக்கு அவர்களே சுடப்பட்டிருக்கிறார்கள். புலம் பெயர்ந்தவர்கள் இமை துஞ்சாமல் கொத்துக்கொண்டுகளின் கோரத்தை நினைத்து துயில் கொள்ளாமால் இருக்கிற பொழுது நுண்ணலை ஓவன்களில் சொதிவைத்து தின்று சைவத்தைப் பற்றி கதைக்கிற வளமையான வர்க்கம் மேல் எழும்பிவருகிறது.

    \\ இது தான் தமிழ்நாட்டில் பெரியாரிஸ்டுகளின் பிரச்சனையே அவர்களைப் பொறுத்தவரையில் பார்ப்பானின் ஆதிக்கத்தைப் பொறுத்தாலும் சக-தமிழ்ச்சூத்திரர்களின் ஆளுமையைப் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். அடிமைகள் எல்லோருக்கும் இது பொதுவான குணம்.\\

    ஆண்டைகள் வியாசன் போன்றவர்கள் சொன்னால் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான். உண்மைதான். நிக்கர் (அடிமை), துலுக்கன், அடுத்த தலைமுறை முசுலீம்கள், நீங்கள் பாசத்தோடு அழைக்கும் வெட்டியான்கள், பறையர்கள் மற்றும் வழிபாடு என் நம்பிக்கை என்று சொல்கிற பிற உழைக்கும் வர்க்கம் இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தால் தான் வியாசன் போன்ற ஆண்டைகளின் ஆணவப்போக்கிற்கு முடிவுகட்ட முடியும்.

    \\ வேலிக்கு ஓணான் சாட்சி மாதிரி, தென்றல் அவர்கள் எதற்கேடுத்தாலும் தொ.பரமசிவனை மேற்கோள் காட்டுவது எனக்குச் சரியாகப் படவில்லை. அவரே ஒரு பெரியாரிஸ்ட். அவரிடம் போய் கோயில்களைப் பற்றிக் கேட்டால் அவரும் நிச்சயமாக பார்ப்பனீயத்தை எப்படியும் கோர்த்து விடுவார் என்பது எல்லோருக்கும் தெரியும். இன்மேலாவது யாராவது நடுநிலையான ஆராய்ச்சியாளர்களை மேற்கோள் காட்டினால் மற்றவர்களும் ஏற்றுக் கொள்வார்கள்.\\

    ஏற்கனவே இதைச் சொல்லியிருக்கிறேன். தொ. பரமசிவன் ஒரு தொல்லியல் ஆய்வாளர். தன் ஆய்வுக்கு சான்றாக கல்வெட்டுக்களைத்தான் குறிப்பிடுகிறார். கல்வெட்டும் பெரியாரிஸ்டா? ஏன் தேவையில்லாமல் வேலியில் போகிற ஓணானை வேட்டிக்குள் போட்டுக்கொள்கீறீர்கள்?

    \\ ஆர் எஸ் எஸ் இல் ஈடுபாடு கொண்ட இந்துக்களின் அடுத்த தலைமுறையினரும் ஆர் எஸ், எஸ் ஆக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.\\

    இந்துக்கள் என்று வருகிற பொழுது வாய்ப்புகள் என்று Probability பற்றி பேசுகிறீர்கள். ஆனால் முசுலீம்கள் என்கிற பொழுது அடித்துச் சத்தியம் செய்கிறீர்கள். அது மட்டும் உறுதியான நிகழ்வாக இருக்கிறது.என்ன இருந்தாலும் சைவர்களும் ஆன்சஸ்டரி ஆர்எஸ்எஸ்காரர்கள் தானே?

    \\ மாணவர்களுக்கு வரலாற்றைக் கற்பிக்கும் போது வரலாறுடன் பெரியாரிசத்தையும், பகுத்தறிவையும் கலக்கக் கூடாது. உழைக்கும் வர்க்கம், ஆளும் வர்க்கம், உரிமை, கடமை, பெரியாரிசம், கம்யூனிசம் எதுவும் வரலாற்றுடன் கலக்கப்படக் கூடாது. எதையும் கலந்தால் அது உண்மையான வரலாறல்ல. வரலாற்றை அபப்டியே மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டுமென்கிறேன்.\\

    பகுத்தறிவை கலக்கக்கூடாது. சரி இந்து மதத்தின் வரலாறு அப்படித்தான் இருக்கிறது. ஆனால் “எதையும் கலந்தால் அது உண்மையான வரலாறு அல்ல” என்று சொல்வது இந்துமதத்திற்கே ஆபத்தானது. ஆலகால விசத்தையே தன் தொண்டையில் இறக்கி இந்துதர்மத்தைக் காத்தவன் நீலகண்டன். விசம் என்றவுடன் விஷ்ணு என் தொழில் காத்தல் தான் என்று நைச்சியமாக சாதியைக் காட்டி விலகிவிட்டான். இறப்பே இல்லாத பிரம்மன் கூட வாங்கிக்குடித்திருக்கிலாம். ஆனால் அவன் தொழில் படைத்தல்! சிவனுக்கு புளூ கலர் கலக்கவில்லை என்றால் ராமனின் உடம்பில் பச்சைத்துரோகத்தின் கலரை கலக்கவில்லையென்றால் இந்துமதமே நிலைத்திருக்காது. அதன் இருப்பையே கேலிக்குள்ளாக்குகிறீர்கள். கலப்பது குறித்த உங்களது வரலாற்றுப் பார்வையை பரிசீலியுங்கள் வியாசன்.

    • 2. //ராஜராஜ சோழன் கம்மாளச் சுடுகாடு என்றும் பறச்சுடுகாடு என்றும் இருவேறு சுடுகாடுகளை நியமித்திருப்பதை கல்வெட்டு கூறுகிறது. கல்வெட்டும் ஒரு பெரியாரிஸ்டு என்று சொல்லப் போகீறீர்களா வியாசன்?///

      ஐயா, நிகழ்காலத்துக்கு வாருங்கள், சாதிப்பாகுபாட்டுக்கு ஆதாரம் காட்ட எதற்காக ஆயிரம் வருடங்கள் பின்னோக்கிப் போகிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. தங்களைச் சாதியை எதிர்க்கும் முற்போக்கு பகுத்தறிவு வாதிகள் என்று காட்டிக் கொள்ள விரும்புகிறவர்கள் அனைவரும் ராஜ ராஜ சோழனின் செலவில் சொறிந்து கொள்வது அண்மைக்காலமாக ஒரு Fashion ஆகவே வந்து விட்டது. 🙂

      ராஜராஜ சோழன் காலத்திலாவது இறந்த பின்பு தான் வெவ்வேறு சுடுகாடுகள் இருந்தன(வாம்) ஆனால் இன்றும் தமிழ்நாட்டில் வாழும் போதே தடுப்புச்சுவர் கட்டுகின்றனர், மலம் தீற்றுகினறனர் ஆதிக்க சாதியினர். தலித் சிறுமிகளைக் கற்பழித்தவர்கள் அடுத்த நாளே ஜாமீனில் வந்து மிடுக்காக அலைகின்றனர். ஊரில் குறிப்பிட்ட எல்லையை அடைந்ததும் தலித்துகள் சைக்கிளிலிருந்து இறங்கி. செருப்பைக் கையில் தூக்கிக் கொண்டு நடந்து போகிறார்கள். தடுப்புச்சுவர் கட்டும் போது தடுத்தால் அல்லது எதிர்த்துப் பேசினால் ஓட்ட நறுக்கி விடுவார்கள் ஆதிக்க சாதியினர் என்ற பயத்தால், அவர்களை எதிர்க்கவும், பேசவும்தயங்கும் சாதியொழிப்பு பகுத்தறிவு வீரர்கள், ராஜராஜசோழனைப் பற்றி மட்டும் ஏதோ நேரிலிருந்து பார்த்தவர்கள் மாதிரி வக்கணையாக, கதை விடும் வேடிக்கையை பல இணையத்தளங்களில் நான் பார்த்திருக்கிறேன். ஏனென்றால் ராஜராஜசோழன் அரிவாளைத் தூக்கிக் கொண்டு ஓடி வரமாட்டான் என்ற தைரியம் தான். தலைவர் தென்றலும் அவர்களில் ஒருவர் போல் தானிருக்கிறது.

  42. தென்றல் அவர்களுக்கு,

    1. ///‘நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலுபுட்பம் சாத்தியே
    சுற்றி வந்து மொண மொணவென்று சொல்லும் மந்திரம் ஏதடா!’
    என்று சிவவாக்கியச் சித்தர்பாடிய நாத்திகத்தைத் தெரியாத பக்தன் எல்லாம் திருவாசகத்தில் உருகி, ///

    சிவவாக்கியரையும் பெரியாரிஸ்டாக்கியாச்சா? அதாவது அவரும் நாத்திகரா? உண்மையில் இப்படி ஒரு பதிலை உங்களிடம் நான் எதிர்பார்க்கவில்லை. சிவவாக்கியர் நாத்திகனும் அல்ல அவர் நாத்திகம் பேசவுமில்லை. அவர் கூறுவதெல்லாம், இந்த சடங்குகள் சம்பிரதாயங்கள் எல்லாம் தேவை இல்லை சிவன் ஒவ்வொருவருக்கும் உள்ளே (உள்ளத்தில்) இருக்கிறான் என்பது தான்.

    “கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்
    கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே
    பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்
    பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.”

    என்று ஆனைமுகனைத் தொழுது தனது பாடல்களைத் தொடங்கும் சிவவாக்கியர் எப்படி நாத்திகன் ஆனார் என்பது தலைவர் தென்றல் அவர்களுக்கு மட்டும் தான் வெளிச்சம். 🙂

    சிவவாக்கியர் சொல்கிற படி பார்த்தாலும் கூட, “பெரியார் பிறந்த பகுத்தறிவு மண்ணிலே” தமிழ்நாட்டு திராவிட திலகங்கள், ரஜினியை தமது உள்ளத்தில் காண வேண்டுமே தவிர, அவரது கட்டவுட்டுக்கெல்லாம் பாலாபிசேகம் எல்லாம் பண்ணக் கூடாது. ஆனால் இதில் ஞானசம்பந்தருக்கு என்ன தொடர்பு என்பதை நீங்கள் இன்னும் விளக்கவில்லை.

    ஞானசம்பந்தன் மட்டுமல்ல ஆரம்ப காலக் கிறித்தவர்கள் கூட தமது மதத்தை ரோம ராச்சியத்தில் பரப்ப எவ்வளவோ பாடுபட்டார்கள். அது எல்லா மதத்துக்கும் பொருந்தும். இஸ்லாம் கூட வாள்முனையில் தான் பரவியது. உதாரணமாக, திப்பு சுல்தான் இந்துக்களை வலுக்கட்டாயமாக சுன்னத்து செய்து முஸ்லீம்களாக்கினான். அவற்றுடன் ஒப்பிடும் போது ஏழாம் நூற்றாண்டில் கூட சமபந்தர், நற்பண்புடன் சமணர்களை வாதிட்டுத் தான் வென்றார். இக்காலத்தில் கூட சுவிசேஷ போதகர்களும், வஹாபிகளும் தமது மதத்தைப் பரப்ப என்னவெல்லாமோ செய்கிறார்கள். ஆனால் பெரியாரிஸ்டுகள் ஞானசம்பந்தரையும் சைவர்களையும் மட்டும் வசைபாடும் சூக்குமத்தைத் தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

    • திரு. தென்றல் அவர்களுக்கு…..

      3. //சரிதான் வியாசன். கத்தோலிக்கத்தை பிள்ளைமார்கள் சுவீகரிக்கிறார்கள் என்றால் அதற்கு இதுபோன்ற வஸ்துக்கள் எல்லாம் சங்கமிக்க வேண்டும். ///

      பிள்ளைமார்கள் கத்தோலிக்கத்தை ஏற்றுக் கொண்டதற்கும் திருப்பலியில் சாம்பிராணி தூபம் காட்டுவதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்பது உங்களுக்குப் புரிந்திருக்கமென நம்புகிறேன். இத்தாலியில் வத்திக்கானின் St. Paul பேராலயத்தில் பாப்பாண்டவர் கூடத் தான் சாம்பிராணி காட்டுகிறார். பாப்பாண்டவர் பிள்ளைமார் சாதி அல்ல, இத்தாலியிலும் பிள்ளைமார் சாதியினர் கிடையாது.

      4. //அதனால் தான் பொட்டுவைக்காத பிற கிறித்துவ சகோதரிகளை கலாச்சாரத்தின் எதிரிகளாகப் பார்ப்பதும்.///

      கிறித்தவ சகோதரிகளை கலாச்சார எதிரிகளாக யாரும் கருதுவதில்லை. பொட்டு தமிழ்ப்பெண்களின் கலாச்சார புற அடையாளங்களில் ஒன்று. தம்மைத் தமிழர்களாகக் கருதும் தமிழ்க்கிறித்தவ பெண்கள் ஒருமித்து, எல்லோருமே போட்டு வைக்காமல் தவிர்க்கிறார்கள் என்றால், அவர்கள் பொட்டைத் தமிழ்க் கலாச்சாரத்தின் அடையாளமாகக் கருதவில்லை அல்லது அவர்கள் தம்மை தமிழர்களாகக் கருதவில்லை, அல்லது கிறித்தவ பாதிரிமார்கள் அவர்களைத் தடுத்திருக்கிறார்கள் என்பது தான் கருத்தாகும்.

      5.//உங்களது இசுலாமிய மத உணர்வை பார்த்தோம். கழிவறையில் ஆரம்பித்து துலுக்கர்கள் வரை உங்களது மத நல்லிணக்கம் கனஜோர். ஆக எங்களை சந்தேகத்துடன் பார்ப்பதற்கு முன்னர் உங்களை நாங்கள் சரியாகவே பார்க்கிறோம் ///

      நான் இஸ்லாமியர் அல்ல, அதனால் என்னிடம் இஸ்லாமிய மதவுணர்வு கிடையாது. இங்கே என்னுடைய பதில்களை மட்டும் பார்த்து நான் முஸ்லீம்களுக்கு எதிரானவன் என்று யாராவது தீர்ப்பளித்தால் அதைப் போன்ற முட்டாள்தனம் வேறேதும் கிடையாது. எனக்கு மட்டுமல்ல, பல ஈழத்தமிழர்களுக்கு, இலங்கையில் தமிழைப் பேசிக் கொண்டே, தமிழர்களின் முதுகில் குத்திய/குத்துகின்ற இலங்கை முஸ்லீம்களின் மீது கசப்புணர்வுண்டு, ஆனால் அவர்களின் மீது வெறுப்போ, துவேசமோ இல்லை. (புலிகளின் முடிவுகள் எல்லாம் சரியானவையுமல்ல, ஆனால் இலங்கையில் தமிழ்-முஸ்லீம் பிளவு புலிகளுக்கு முற்பட்டது).

      ஆபிரகாமிய மதங்களில் ஒன்றாகிய கிறித்தவதை, அதன் வளர்ச்சியை எதிர்க்காத நான் எதற்காக இஸ்லாத்தையோ அல்லது முஸ்லீம்களையோ எதிர்க்க வேண்டும்? வஹாபிய இஸ்லாத்தின் தீவிர அரபுமயமாக்கலும், தனித்துவமான மதம் சார்ந்த அடையாளத்துக்கு அளிக்கப்படும் முன்னுரிமையும், இலங்கையில் எப்படி தமிழ்ப் பேசும் முஸ்லீம்கள் தமிழர்களிடமிருந்து பிரிந்தார்களோ, அதே போன்று, தமிழ்நாட்டிலும் ஏற்படலாம் என நான் பயப்படுகின்றேன், அதனால் தான் வகாபியிசத்தினால் தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு ஏற்படக் கூடிய ஆபத்தை நான் இடைக்கிடையே எனது பதிலில் காட்டுகிறேன். எனக்கும் நல்ல, நீண்டகால முஸ்லீம் நண்பர்கள் தமிழ்நாட்டில் உண்டு. அவர்களுக்கும் எனக்குமிடையில் ஒரு நிரந்தர இடைவெளி ஏற்படுவதை நான் விரும்பவில்லை.

      • திரு. தென்றல் அவர்களுக்கு…..

        6. //முழுத்தமினமும் மூக்குடைப்பட்டு போய் நிற்பதில் தான் உங்களுக்கு எத்துணைப்பிரியம்? எதிரிகளுக்கு வரலாற்றில் இடம் உண்டு வியாசன். ஆனால் துரோகிகளுக்கு என்ன இடம் உண்டு?///

        நீங்கள் பதிவுலகிற்குப் புதியவரா? தில்லைக்கோயில் பிரச்சனையில் தமிழன் என்ற முறையில் என்னுடைய நிலைப்பாட்டை இங்கும் எனது வலைப்பதிவிலும் நான் எந்தவித தயக்கமுமின்றி தெளிவாகத் தெரிவித்துள்ளேன். தில்லைக் கோயிலில் தீட்சிதர்களுக்கு எந்தவித உரிமையுமில்லை, தமிழர்களின் தில்லை தீட்சிதர்களிடமிருந்து மீட்கப்பட வேண்டும். அங்கு தமிழ் ஒலிக்க எந்த தடையும் இருக்கக் கூடாது என்பது தான் எப்பொழுதும் என்னுடைய கருத்து, அந்தக் கருத்திலிருந்து நான் ஒரு போதும் விலகியதில்லை, விலகவும் மாட்டேன், முழுத்தமிழினமும் மூக்குடைபட்டு நிற்கிறது என்று நான் கூறியது, என்னையும் சேர்த்துத் தான். அதனால் விவரம் தெரியாமல், உங்களைப் போல், நான் உங்களை இப்படி இழிவாகப் பேசியிருந்தால், மன்னிப்புக் கேட்கும் பண்பு எனக்குண்டு. உங்களிடம் அந்தப் பண்பு இருக்கிறதா என்பது எனக்குத் தெரியாது.

        7. //எவனுக்கு தன் காலுக்கு கீழே சொந்தமாக நிலமும் தலைக்கு மேலே கூரையும் வயிறு முட்ட மூன்று வேளை பால்சொதியும் தின்ன நேரமும் கிடைத்ததோ அவனுக்குத்தான் இங்கு கலாச்சாரம், பண்பாடு, விதவிதமான உணவுகள் பால்சொதி உட்பட..///

        நீங்கள் என்ன தான் வசனம் பேசினாலும் பெரும்பான்மைத் தமிழர்கள் சைவர்கள்(இந்துக்கள்) தான். தமிழ்நாட்டில் எங்கு போனாலும் தலித்துக்களின் குடியிருப்புகள் உட்பட, அங்கு முருகனும், பிள்ளையாரும், மாரியம்மனும் தான் ஒவ்வொரு மூலையிலும் சிரித்துக் கொண்டு நிற்கிறார்கள். அங்கு வாழும் மக்களுக்குச் சொந்தமாக நிலமும், கூரையும், மூன்று வேளையும் உணவு கிடைக்கிறதோ இல்லையோ அவர்கள் தமது தெய்வங்களைக் கவனித்துக் கொள்கிறார்கள். அந்த நம்பிக்கையை யாராலும் அசைக்க முடியவில்லை. அதற்கும் பார்ப்பனீயத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. பெரியாரிசம், கம்யூனிசம், எல்லாமே அங்கு தோற்றுப் போய் விட்டன என்பது தான் உண்மை. ஐயப்பன் கோயிலுக்கு மாலை போடுகிறவர்களும், பழனியில் மொட்டையடிப்பவர்கள், அலகு குத்துகிறவர்கள், ஒவ்வொரு கோயிலிலும் வரிசையில் நிற்பவர்கள் எல்லோரும் வயிறார பால் சொதியுடன் உணவுண்ணும் பிள்ளைமார் அல்ல அன்றாடங் காய்ச்சித் தமிழர்கள் தான் (எத்தனையோ அன்றாடங்காய்ச்சி பிள்ளைமார்களும் உள்ளனர்). இது எதைக் காட்டுகிறதென்றால் சைவம் சாதிவேறுபாடற்று தமிழர்களின் இரத்தத்தில் கலந்துள்ளது அதை எத்தனை பெரியார் வந்தாலும் மாற்ற முடியாது, அதனால் தமிழின நலன்களைக் கருத்தில் கொள்ளுகிறவர்கள், தமிழர்களின் ஒற்றுமையை வேண்டுகிறவர்கள் அந்த உண்மையை ஏற்றுக் கொண்டு அதற்கேற்றவாறு பெரும்பான்மைத் தமிழர்களின் இந்து (சைவ/மாலிய) மதங்களுக்கு உரிய மரியாதையைக் கொடுத்தால், அவர்களின் மதவுணர்வை புண்படுத்தாமல் நடந்து கொண்டால் மட்டுமே தமிழினத்தை சாதி வேறுபாடின்றி ஒருங்கிணைக்க முடியும்.

        8. //பக்தியின் மொழி தமிழ் என்று தனிநாயகம் அடிகள் சொல்வதை குறிப்பிட்டிருக்கீறிர்கள். முழுப்பொய்களைக் காட்டிலும் ஆபத்தானவை அரை உண்மைகள் என்பார்கள்.///

        வன. பிதா தனிநாயகம் அடிகளார் பக்தியின் மொழி தமிழ் என்று கூறியது தவறு என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்து அடுத்த உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டில் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை சமர்ப்பியுங்கள். அதை உலகத் தமிழறிஞர்கள் ஏற்றுக் கொண்டால், நானும் உங்களின் கருத்தை தயங்காமல் ஏற்றுக் கொள்கிறேன். அதுவரை, ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து, மனிதரைக் கடித்தது போல் என்பார்களே, அது போல், தமிழ்நாட்டு “ முற்போக்கு” பெரியாரிஸ்ட் பகுத்தறிவாளர் ஒருவர் இந்துமதத்தை இழிவு படுத்தியது போதாதென்று தமிழையும் இழிவு படுத்துகிறார் என்று மட்டும் தான் கருத்து கொள்ள முடியும்.

        9. //ஆனால் பாருங்கள் வியாசன்; பால்சொதி யாழ்ப்பாண வேளாளர்களின் உணவாகத்தான் இன்றுவரை இருக்கிறது. ஒடுக்கப்பட்ட சாதிகள் தவுணையும் பனங்கிழங்கையும் சுட்டுத்தான் பசியாறுகிறார்கள்.///

        உணவுக்கு இலங்கையில் பஞ்சமில்லை. பால்சொதி கூடக் கிடைக்காத நிலையில் எந்தச் சாதியினரும் இலங்கையில் இல்லை. பார்க்கப் போனால் தமிழ்நாட்டைப் போல் வறுமைக்கும் சாதிக்கும் இலங்கையில் தொடர்பு மிகக் குறைவு. இலங்கையிலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் தாழ்த்தப்பட்ட சாதியினர் பலர் பெரும் பணக்கார்கள். இதெல்லாம் தமிழ்நாட்டுச் சாதிக் கண்ணாடியினூடாக இலங்கையைப் பார்ப்பதால் அல்லது தமிழ்நாட்டுத் தலித்திய, முற்போக்கு பெரியாரியர்களின் ஆதரவை நட்பை வேண்டி நிற்கும் இலங்கை எழுத்தாளர்களும் வலைப்பதிவர்களும் (சிலர் இலங்கை அரசின் சொம்புதூக்கிகள்) தமது தமிழ்நாட்டு நண்பர்களை திருப்திப்படுத்த, இலங்கையில் பல ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சம்பவங்களை ஊதிப் பெருக்கி, பேனைப் பெருமாளாக்குவதால் வரும் விளைவு. அது சரி, ‘தவுணை’ என்றால் என்ன, கேள்விப்பட்டதேயில்லை.

        10. //தொ. பரமசிவன் ஒரு தொல்லியல் ஆய்வாளர். தன் ஆய்வுக்கு சான்றாக கல்வெட்டுக்களைத்தான் குறிப்பிடுகிறார். கல்வெட்டும் பெரியாரிஸ்டா? ///

        தொ.பரமசிவன் தொல்லியல் ஆய்வாளர் மட்டுமல்ல, அவர் ஒரு பெரியாரிஸ்டும் கூட, அவரது எழுத்தில், அவரது கருத்தில் அந்த அந்த வாடை வருவது தவிர்க்க முடியாதது. அதனால் அவரை விட்டு வேறு யாராவது தொல்லியல் ஆய்வாளரை ஆதாரம் காட்டினால் எல்லோருக்கும் ஏற்றுக் கொள்ளத் தயக்கமிருக்காதென்கிறேன் நான். உதாரணமாக, திராவிட கழகத் தலைவர் திரு. கி. வீரமணி கூட ஒரு வழக்கறிஞர் தானே. அவர் அயோத்தி இராமர் கோயில் விடயத்தில் ஆர். எஸ். எஸ். க்காக நீதிமன்றத்தில் வாதாடினால் முஸ்லீம்கள் ஏற்றுக் கொள்வார்களா. அது போல் தான் இதுவும், என்னுடைய கருத்து இப்பொழுது புரிந்திருக்குமென நம்புகிறேன். 🙂

        11. //இந்துக்கள் என்று வருகிற பொழுது வாய்ப்புகள் என்று Probability பற்றி பேசுகிறீர்கள். ஆனால் முசுலீம்கள் என்கிற பொழுது அடித்துச் சத்தியம் செய்கிறீர்கள். அது மட்டும் உறுதியான நிகழ்வாக இருக்கிறது.///

        ஏனென்றால் இலங்கையில் ஆர் எஸ். எஸ் கிடையாது. ஆனால் இலங்கையில் முஸ்லீம்கள் மத்தியில் வஹாபிகள் உண்டு. அதனால் இலங்கை இந்துக்கள் யாரவது ஆர் எஸ். எஸ் ஈடுபாடு கொண்டால், அவர்களின் அடுத்த தலைமுறையினரும் ஆர் எஸ், எஸ் ஆக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

      • //வஹாபிய இஸ்லாத்தின் தீவிர அரபுமயமாக்கலும், தனித்துவமான மதம் சார்ந்த அடையாளத்துக்கு அளிக்கப்படும் முன்னுரிமையும், இலங்கையில் எப்படி தமிழ்ப் பேசும் முஸ்லீம்கள் தமிழர்களிடமிருந்து பிரிந்தார்களோ, அதே போன்று, தமிழ்நாட்டிலும் ஏற்படலாம் என நான் பயப்படுகின்றேன்,// முற்றிலும் உண்மை வியாசன் எங்கள் ஊரிலேயே இதற்க்கு உதாரணம் உண்டு தாழ்தத்பட்ட மக்கள் வணங்கும் கோவில் அருகே தங்கள் இடுகாட்டை அமைக்க கோரிக்கை வைத்தார்கள் இவர்களை வளர விட்டால் ஆட்டை கடித்து மாட்டை கடித்து பின்பு மனுசனயே கடித்து குதறி விடுவார்கள்

        • ஜோசப் அவர்களுக்கு,

          இதுவும் வியாசன் கூறியதுதான்; “நான் தமிழ் கிறித்தவர்கள் என்று குறிப்பிட்டது இந்த நவீன சுவிசேஷ குழுவினரை (Evangelical groups) அல்ல. அவர்களுக்கும் தீவிரவாத வஹாபிஸ்டுகளுக்கும் பெரிய வேறுபாடு கிடையாது. இவர்களைத் தான் ‘ஒரு சில new converts தான் தங்களைப் பாப்பாண்டவரை விடக் கூடுதலான கிறித்தவர்கள் போல் காட்டிக் கொள்ள, ஐரோப்பிய மோகம் கொண்டலைகிறார்கள்’ என்று முன்பே குறிப்பிட்டேன்.”

          “பொட்டு வைக்கும் விசயத்தில் கூடு என்ன வெறுப்பு இவர்களுக்கு. வளைய வளைய பட்டுச் சேலை கட்டிக் கொள்வார்கள்.கழுத்து கனக்கு நகை அணிந்து கொள்வார்கள். அரை இஞ்சுக்கு வாசனைப் பொடி போட்டுக் கொள்வார்கள்.சுடி மடி ஸ்காட் ரோகிப் திறந்த முதுகு என்று ரக ரகமாக தன்னை அழகு படுத்திக் கொள்ளும் ஒரு கிறிஸ்தவ பெண் தனது நெற்றிக்கு பொட்டு மட்டும் வைப்பதை ஏற்றுக் கொள்ள மாட்டாள்.கத்தோலிக்க பெண்கள் பொட்டு வைக்கின்றனர். பிற சபை பெண்கள் வைப்பதில்லை இந்திய வெறுப்புதான். திருக்குறள் எழுதப்பட்ட சர்ச் சுவரைக் கண்டதுண்டா”

          ஆட்டைக்கடித்து மாட்டைக் கடித்த கதையாக வியாசன் எதைக் கடிக்கிறார் என்று தெரிகிறதா? இதுவும் முற்றிலும் உண்மையா? பெந்தேகொஸ்தேவை நாங்களும் விமர்சனம் செய்திருக்கிறோம். உங்களால் வேறுபடுத்து அறிய முடியுமா ஜோசப்?

          • ///நான் தமிழ் கிறித்தவர்கள் என்று குறிப்பிட்டது இந்த நவீன சுவிசேஷ குழுவினரை (Evangelical groups) அல்ல. அவர்களுக்கும் தீவிரவாத வஹாபிஸ்டுகளுக்கும் பெரிய வேறுபாடு கிடையாது. இவர்களைத் தான் ‘ஒரு சில new converts தான் தங்களைப் பாப்பாண்டவரை விடக் கூடுதலான கிறித்தவர்கள் போல் காட்டிக் கொள்ள, ஐரோப்பிய மோகம் கொண்டலைகிறார்கள்’ //

            இது என்னுடைய கருத்து தான். அந்தக் கருத்தில் எந்த வித மாற்றமுமில்லை.

            //“பொட்டு வைக்கும் விசயத்தில் கூடு என்ன வெறுப்பு இவர்களுக்கு. வளைய வளைய பட்டுச் சேலை கட்டிக் கொள்வார்கள்.கழுத்து கனக்கு நகை அணிந்து கொள்வார்கள். அரை இஞ்சுக்கு வாசனைப் பொடி போட்டுக் கொள்வார்கள்.சுடி மடி ஸ்காட் ரோகிப் திறந்த முதுகு என்று ரக ரகமாக தன்னை அழகு படுத்திக் கொள்ளும் ஒரு கிறிஸ்தவ பெண் தனது நெற்றிக்கு பொட்டு மட்டும் வைப்பதை ஏற்றுக் கொள்ள மாட்டாள்.கத்தோலிக்க பெண்கள் பொட்டு வைக்கின்றனர். பிற சபை பெண்கள் வைப்பதில்லை இந்திய வெறுப்புதான். திருக்குறள் எழுதப்பட்ட சர்ச் சுவரைக் கண்டதுண்டா”///

            இதைக் கூறியது யார் என்பதை திரு. தென்றல் அவர்கள் தனது கண்ணாடியை மாட்டிக் கொண்டு பார்த்தார் என்றால் மிகவும் நல்லது. 🙂

            • தவறுதான் வியாசன்.

              அன்புராஜ் மற்றும் உங்களின் மதவெறிக் கருத்துக்களை தனித்தனியாக புரிந்துகொள்ள தவறவிட்டேன். பிழைக்கு மன்னிக்கவும்.

  43. தொழர் தென்றல் பெந்தெகொஸ்தெவை விமர்சனம் செய்வதில் என்ன தவறு பொட்டு வைக்க கூடாது பூ வைக்க கூடாது என்பது ஏசுவின் போதனை அல்ல என்பதை நான் அறிவேன் இப்ப என்னயே எடுத்துக்குங்க நான் தாழ்த்தப்பட்ட பள்ளர் சாதியை சார்ந்த கிறிஸ்தவ சமயத்தை ஏற்றுக்கொண்ட குடும்பத்தை சார்ந்தவன் நாங்கள் பன்றி மாமிசம் சாப்பிடுவது இல்லை ஆனால் பள்ளர் இணத்தை சார்ந்த மக்கள் பன்றி மாமிசம் சாப்பிடுகிறார்கள் அதற்க்காக் கிறிஸ்த்வம் சொல்லி விட்டது என்பதற்க்காக மாட்டிறைச்சியை நாங்கள் சாப்பிட்டதும் இல்லை ஏனென்றால் மாட்டிறைச்சி ஆதிதிராவிடர்களுக்கான உணவு என்று நாங்கள் நம்பி வந்ததே அதை போன்றதுதான் பொட்டு வைப்பதும் பூ வைப்பதும் மற்ற படி நீங்கள் இரண்டாவது வரியில் சொன்ன குற்றச்சாட்டுகள் அன்புராஜ் என்பவரால் வைக்கப்படு உள்ளது தோழர் தென்றல் அறிய வேண்டியது ஒரு ஊரில் தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிடர்களுக்கும் முஸுலீம்களுக்கும் மதம் சார்ந்த பிரச்சனை ஏற்படுகிறது என்றால் நீங்கள் யாரை ஆதரிப்பீர்கள் முரட்டு முஸுலீம் களையா இல்லை இந்து தாழ்த்தப்பட்ட மக்களையா நேரடியாக சொல்லுங்கள்

    • நேரடியாகவே பதில் நீங்கள் தான் ஜோசப் சொல்லவேண்டும்.

      பெந்தேகொஸ்தேவை விமர்சனம் செய்வது என்ன தவறு என்று நான் விவாதித்த பொழுது உங்களுக்கு சொல்லத் தோணவில்லை. ஏனெனில் உங்களுக்கு நான் சுவனத் தென்றலாக இருக்கக்கூடுமோ என்ற வெறிதான் பிராதனம். ஆனால் கூட்டணிக்கு நீங்கள் ஆள் சேர்த்த பொழுது உங்களிடம் தெரிவது வெறும் அற்பத்தனம் மட்டுமல்ல. மற்றொரு வகை மதவெறி.

      உங்களுக்கு முரட்டு முசுலீம்கள் பிரச்சனை. வியாசனுக்கு முசுலீமும் கிறித்தவனும் குறிப்பாக இந்து மதத்தின் பிற சாதிக்காரனும் பிரச்சனை. மதவெறிக்கு இதுதான் அடிப்படை. மோடி அத்வானி எல்லோரும் இதே லைனில் தான் அலைன் ஆகிறார்கள்.

      நீங்கள் சொல்கிற ஆதிதிராவிடர்களுக்கும் முரட்டு முசுலீம்களுக்கும் சண்டை என்றால் முதலில் நாம் இனங்கண்டு பிரிக்க வேண்டியது அக்கூட்டத்தில் உள்ள வியாசன்களையும் பிஜேக்களையும் முரட்டு முசுலீம்கள் என்று சொல்கிற ஜோசப்புகளையும் தான்.

      மற்றபடி வர்க்கமாக அணிதிரண்டால் அதில் நாய் கூட உள்ளே புகுந்து குரைக்க முடியாது.

      • தோழர் தென்றல்,

        //வர்க்கமாக அணிதிரண்டால் அதில் நாய் கூட உள்ளே புகுந்து குரைக்க முடியாது.//

        இந்த பதிவிலும் மற்ற பதிவுகளிலும் உங்கள் எல்லா பதில்களுக்கும் இது முத்தாய்ப்பான பதில். அருமையோ அருமை.

    • ஜோசப்,

      \\ நாங்கள் பன்றி மாமிசம் சாப்பிடுவது இல்லை ஆனால் பள்ளர் இணத்தை சார்ந்த மக்கள் பன்றி மாமிசம் சாப்பிடுகிறார்கள் அதற்க்காக் கிறிஸ்த்வம் சொல்லி விட்டது என்பதற்க்காக மாட்டிறைச்சியை நாங்கள் சாப்பிட்டதும் இல்லை ஏனென்றால் மாட்டிறைச்சி ஆதிதிராவிடர்களுக்கான உணவு என்று நாங்கள் நம்பி வந்ததே//

      உங்கள் மூளை பார்ப்பனியத்தில் மூழ்கி திளைப்பதை ஒப்புக் கொள்ளும் ஒப்புதல் வாக்குமூலம் இது. நீங்கள் ஏற்றுக் கொண்ட கிருத்துவ மதத்தின்படி தவறு இல்லை என்ற போதும் பன்றி இறைச்சியை, மாட்டிறைச்சியை உண்பதை தவிர்த்து வருகிறீர்கள்.நீங்கள் சைவ உணவு மட்டுமே உண்பவர்கள் அல்லர் என்பது ஆட்டிறைச்சியையும் தவிர்ப்பதாக சொல்லவில்லை என்பதிலிருந்து தெளிவாகிறது.

      அப்படியானால் பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி உண்பதை இழிவாக கருதுகிறீர்கள் என்றாகிறது.அதிலும் மாட்டிறைச்சி உண்ணாததற்கு நீங்கள் சொல்லும் காரணம் அது ஆதிதிராவிடர்களுக்கான உணவு என்ற உங்கள் நம்பிக்கை..நீங்கள் பிறந்த பள்ளர் சாதி ஆதி திராவிடர்கள் அல்லர் என்றும் ஆதி திராவிடர்கள் என்று பறையர்,அருந்ததியர்,பகடை போன்ற சாதிகளை குறிக்கிறீர்கள் என்றும் நினைக்கிறேன்.அதாவது அந்த சாதிகள் எல்லாம் உங்க சாதிய விட தாழ்ந்தது,அவர்களின் உணவு நாம் உண்ண தகுந்தது அல்ல என்ற மேல்சாதி மனப்பாங்கே பன்றி இறைச்சியை, மாட்டிறைச்சியை நாங்கள் உண்பதில்லை என உங்களை பெருமை அடிக்க வைக்கிறது.

      என்ன ஒரு வேடிக்கை.மெய்யுலகில் நீங்கள் பிறந்த பள்ளர் சாதி உள்ளிட்டு தலித் சாதிகளை சேரிகளில் ஒதுக்கித் தள்ளுகிறது பார்ப்பனியம்.நீங்களோ உழக்குல [ஆழாக்கு] கிழக்கு மேற்கு பார்த்த கதையாக தலித் மக்களுக்குள் உயர்வு தாழ்வு தேடிக் கொண்டு இருக்கிறீர்கள்.

      இது உங்களின் கிருத்துவ மத நம்பிக்கைக்கும் ஏற்புடையதாக இல்லை.”உழைக்கும் வர்க்கம் பக்கமே நிற்பேன்” என்ற நியாயவான் வேடத்திற்கும் ஏற்புடையதாக இல்லை.

    • ஜோசப் ,

      நீங்கள் உங்களுக்கு என்று ஒரு கருதுகோள் [hypothesis] வைத்துக்கொண்டு

      [“ஒரு ஊரில் தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிடர்களுக்கும் முஸுலீம்களுக்கும் மதம் சார்ந்த பிரச்சனை ஏற்படுகிறது என்றால்”]

      அதன் அடிப்படையில் கேள்வியும் எழுப்பி

      [“நீங்கள் யாரை ஆதரிப்பீர்கள் முரட்டு முஸுலீம் களையா இல்லை இந்து தாழ்த்தப்பட்ட மக்களையா”]

      போசும் போச்சு RSS இயக்கம் மக்களை மத அடிபடையில் பிளவு படுத்தும் நோக்கத்துக்கு சாதகமாக மட்டுமே உள்ளது !

      உங்கள் கருத்தில் கவனிக்க வேண்டி விடயங்கள் :

      [1]”முரட்டு” முஸுலீம்

      [2]”இந்து” தாழ்த்தப்பட்ட மக்களையா

      ஏன் ஜோ ,தமிழகத்தில் காவல் துறையால் பதிவு செய்ய பட்ட கிரிமினல் வழக்குகளில் “முரட்டு” முஸுலீம் மக்கள் மீது உள்ள வழக்கு எவ்வளவு ?

      தாழ்த்தப்பட்ட மக்களை தமிழர்களாகவே கருதாத கல்நெஞ்சம் போன்றோரும் ,ஆண்ட சாதி மக்களும் இருக்கும் தமிழ் நாட்டில் நிங்கள் சீறி கோபம் கொண்டு துவசம் செய்ய வேண்டியது யாரை ? ஆண்டைகளையா ? இல்லை இஸ்லாமியார்களையா ?

      ஏசு கூறும் கிறிஸ்துவத்தில் சாதியம் உள்ளதா என்ன ? இல்லையே ! பின்பு ஏன் கிறிஸ்துவராகிய நீங்கள் உங்கள் சாதியை குறிப்பிட வேண்டும். தமிழ் நாட்டின் பண்பாடு படி பொட்டு,பூ ஏற்கும் நீங்கள் அதே போல சாதியத்தையும் ஏற்கீன்றீர்களா ?

      //ஒரு ஊரில் தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிடர்களுக்கும் முஸுலீம்களுக்கும் மதம் சார்ந்த பிரச்சனை ஏற்படுகிறது என்றால் நீங்கள் யாரை ஆதரிப்பீர்கள் முரட்டு முஸுலீம் களையா இல்லை இந்து தாழ்த்தப்பட்ட மக்களையா நேரடியாக சொல்லுங்கள்//

  44. அஸ்கர் அலி என்கிற டெல்லி இஞ்ஞினியர் இசுலாமை சீர்திருத்த முடிந்து தோல்வியை தழுவியவர் அவர் சொன்னதை வைத்து இசுலாமை மதிப்பிடுகிறீகள் பரவாயில்லை உங்களிம் கொள்கை உறுதியை வரவேற்கிறென்// வர்க்கமாக அணிதிரண்டால் அதில் நாய் கூட உள்ளே புகுந்து குரைக்க முடியாது.// வர்க்கமாக அணி திரளும் போது குறைப்பது யார் என்று இந்தியாவில் இசுலாமியர்களின் எண்ணிக்கை அதிகமானால் தெரியும் அப்புரம் தாழ்தப்பட்ட மக்களுக்கும் பார்ப்பண மத வேறிக்கும் சம்மந்தம் குறைவு என்றே நான் நினைக்கிறேன் எங்கள் மக்கள் வணங்கும் கடவுள்கள் எல்லாம் சுடலை மாடன் இசக்கி அம்மன் பத்ர காளி வைரவ சாமி அம்மைநாச்சியார் மாரியம்மன் கருப்பசாமி முனியான்டி போன்ற தெய்வங்களே இவைகளை பார்ப்பனர்கள் ஏற்றுக்கொள்வதும் இல்லை பார்பனரை வைத்து இங்கு பூஜைகள் நடப்பதும் இல்லை நேரடியாக சொல்லுகிறேன் அப்படி எதாவது உழைக்கும் மக்களுக்கும் இசுலாமிய மத வெறியர்களுக்கும் இடையே பிரச்சனை என்றான் நான் உழைக்கும் வர்க்கம் பக்கமே அவர்கள் எந்த ஜாதியை சார்ந்தவர்கள் என்று பார்க்க மாட்டேன் புரிகிறதான் தோழர்

    • தோழர் ஜோசப் அவர்களுக்கு,

      நீண்ட பின்னூட்டமாக இருந்தாலும் சற்று பொறுமையாக வாசித்துவிடுங்கள்;

      \\நேரடியாக சொல்லுகிறேன் அப்படி எதாவது உழைக்கும் மக்களுக்கும் இசுலாமிய மத வெறியர்களுக்கும் இடையே பிரச்சனை என்றான் நான் உழைக்கும் வர்க்கம் பக்கமே அவர்கள் எந்த ஜாதியை சார்ந்தவர்கள் என்று பார்க்க மாட்டேன் புரிகிறதான் தோழர்\\

      வியாசன் அவர்களின் சாதியப்பார்வையை நீங்கள் கண்டித்திருக்க வேண்டும் ஜோசப். நீங்கள் அதைச் செய்யவில்லை. சொல்லப் போனால் அவருடைய மதவெறிப்பார்வையுடனும் ஒன்றிணைகிறீர்கள். அதை குறித்து கீழே விவாதித்திருக்கிறேன். பரிசீலியுங்கள்.

      \\“அஸ்கர் அலி என்கிற டெல்லி இஞ்ஞினியர் இசுலாமை சீர்திருத்த முடிந்து தோல்வியை தழுவியவர் அவர் சொன்னதை வைத்து இசுலாமை மதிப்பிடுகிறீகள் பரவாயில்லை”\\

      நடைமுறை யதார்தத்தில் தான் சந்திக்கிற பிரச்சனைகளுக்கு மதம் தீர்வல்ல என்பதை உணர்கிற மத நம்பிக்கையாளர்கள் இங்கு அனேகம் பேர் உண்டு. அதையும் தாண்டி அஸ்கர் அலியிடம் யாரிடம் இல்லாத ஒரு சிறப்பைச் சுட்டிக்காட்ட முடியும் ஜோசப். இசுலாமியர்களுக்கான தீர்வு என்று அவர் பிஜேவைப் போன்று ஏகத்துவத்தைத் சுட்டவில்லை. ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடுவதும் வர்க்கப்போராட்டத்தை முன்னெடுப்பதும் தான் தீர்வு என்பதை வலியுறுத்தியவர். தாவுதீ போரா சமுகத்தில் அவர் வைத்த சீர்திருத்தங்கள் சில தோல்வியைத் தழுவின என்பது சரியே. ஆனால் அவர்கோருவது சமரசமற்ற வர்க்கப் போராட்டம்.

      ஆனால் உங்களுக்கு இருப்பதெல்லாம் வெறும் கோபம் சார்ந்த தனிமனித சொல்லாடல்கள். உங்கள் பிளாக்கில் இதுபோன்று பல தனிமனித வெறுப்புகளைத் தான் கக்கி இருக்கிறீர்கள். ஆனால் அஸ்கர் அலி போன்று இசுலாமிய வெறியர்களை உங்களால் அம்பலப்படுத்த முடியுமா?. அவர் வழி நின்று முயற்சி செய்துபாருங்கள். வஹாபிகள் அஸ்கர் அலிபோன்றவர்களை காபீர் என்றுதான் அழைப்பார்கள். அப்பொழுது நாம் இரட்டை தாக்குதலை சமாளிக்க வேண்டிவரும்; அங்கு இந்துத்துவ வாதிகளும் இசுலாமிய அடிப்படைவாதிகளும் பங்கும் பங்காளிகளாக இருப்பார்கள். இதை உங்களால் முறியடிக்க இயலுமா? என்றைக்காவது முயற்சி செய்திருக்கிறீர்களா?

      இது ஒருபுறமிருக்க, இசுலாமிய அடிப்படைவாதிகள் என்றைக்கும் தண்டிக்கப்பட்டதில்லை. ஏனெனில் இவர்கள் ஆர் எஸ் எஸ்சைப் போன்று மிகவும் கதகதப்பான பாதுகாப்பான சூழலில் தான் இதையெல்லாம் நிகழ்த்துகிறார்கள். கடைசியில் பாதிக்கப்படுவது இஸ்ராத் ஜகான் போன்ற ஆட்கள். அப்படிப்பட்ட சூழலில் உங்களைப் போன்ற ஆட்கள் என்ன செய்ய வேண்டும்? முரட்டு முசுலீம்கள் என்று சொல்ல வருகிற பொழுது அடிப்படைவாதிகள் எல்லா மதங்களிலும் ஒரே மாதிரியான குணங்களைத்தான் கொண்டிருக்கிறார்கள் என்பதை உங்களது ஒருதரப்பு வாதம் பார்க்க மறுக்கிறது.

      இத்துணைக்கும் வியாசன் போன்று உங்களுக்கு நைச்சியமாக தந்திரமாகவெல்லாம் வாதாட தெரியாது. ஒன்றை புரிந்துகொள்ளுங்கள். என் பார்வையில் பாசிஸ்டுகளின் கருத்தைத்தான் வியாசன் போன்றவர்கள் பிரதிபலிக்கிறார்கள். அவர்களுக்கு வெண்சாமரம் வீசத்தான் உங்களது கோபங்கள் உதவும்.

      உங்கள் பின்னாலேயே வந்துகொண்டிருக்க முடியாது ஜோசப். புரிந்தால் புரட்சி வந்துவிடும் என்று நினைப்பவனை முட்டாள் என்கிறது சமூகவிஞ்ஞானம். எனவே நீங்கள் புரிந்து கொள்வதற்காக உங்களுக்கு இதைச் சொல்லவில்லை என்பதை பரிசீலியுங்கள்.

      கறாராக சொல்வதென்றால் உழைக்கும் வர்க்கத்திற்கு நம்மைப்போன்று இண்டெர்னெட்டில் பின்னூட்டம் போடுகிற குட்டிமுதலாளிகள் எல்லாம் தேவையில்லை. அதைச் சார்ந்து பொதுவுடமை இயக்கங்களுக்கும் இயங்குவதில்லை. இதுதான் நிதர்சனம் என்கிற பொழுது நீங்கள் கைகொள்ள வேண்டிய பாதை என்ன? சிந்தியுங்கள்.

      ——————————

      \\உங்களிம் கொள்கை உறுதியை வரவேற்கிறென்// வர்க்கமாக அணிதிரண்டால் அதில் நாய் கூட உள்ளே புகுந்து குரைக்க முடியாது.// வர்க்கமாக அணி திரளும் போது குறைப்பது யார் என்று இந்தியாவில் இசுலாமியர்களின் எண்ணிக்கை அதிகமானால் தெரியும்.\\

      இசுலாமியர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்று கருதுகிறீர்களா? கசாப் 165பேரைக் கொன்றால் மோடி ஆயிரக்கணக்கில் கொல்கிறார். நூறு:ஆயிரம் எப்படி முசுலீம்களின் எண்ணிக்கையைப் பெருக்கும்? வியாசன் மற்றும் மேரி அவர்கள் சொல்வதுபோல உங்களை மற்றும் என்னைப் போன்ற ஆட்களை வலுக்கட்டாயமாக மாட்டுக்கறியை வாயில் திணித்து சுன்னத் செய்தால் தான் நீங்கள் சொல்வது படி இசுலாமியர்களின் எண்ணிக்கை பெருகும். அப்படி எண்ணிக்கை பெருகினாலும் அதற்கு குரைக்கின்ற நாய் காரணமல்ல ஜோசப்.

      முந்தைய பதிவில் நாய் என்று இழிவாக கருதிவிட்டேன். இது நாய்களுக்கு செய்கிற துரோகம். எந்த நாயும் தன்னை இந்து தேசியவாதி என்றோ ஜிகாதி என்றோ அறிவித்துக்கொள்வதில்லை என்பதால் நாய்கள் மனிதர்களை விட மேலானவை ஜோசப். அடுத்தமுறை மனிதர்கள் என்றே விளிப்போம்.

      \\அப்புரம் தாழ்தப்பட்ட மக்களுக்கும் பார்ப்பண மத வேறிக்கும் சம்மந்தம் குறைவு என்றே நான் நினைக்கிறேன் எங்கள் மக்கள் வணங்கும் கடவுள்கள் எல்லாம் சுடலை மாடன் இசக்கி அம்மன் பத்ர காளி வைரவ சாமி அம்மைநாச்சியார் மாரியம்மன் கருப்பசாமி முனியான்டி போன்ற தெய்வங்களே இவைகளை பார்ப்பனர்கள் ஏற்றுக்கொள்வதும் இல்லை பார்பனரை வைத்து இங்கு பூஜைகள் நடப்பதும் இல்லை\\

      ஒடுக்கப்பட்ட சாதிகளில் பார்ப்பனீயம் இல்லை என்று நினைக்கிறீர்களா? பள்ளர்களிலும் பறையர்களிலும் கொள்வினை கொடுப்பினை கிடையாது என்பதற்கும் இந்த இந்து மதம்தான் காரணம். விருத்தாச்சலத்தில் நடந்த கவுரவக் கொலையையும் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். வன்னிய சாதிவெறி போன்றே தேனிமாவட்டத்தில் “பொங்கவைக்கிற” நிகழ்வு உண்டு. சாதிமாறி காதலித்த பெண்ணை உறவினர்களே சேர்ந்து கொல்வதும் உண்டு. ஒன்று தானாகவே தூக்குப் போட்டுக்கொள்ளவேண்டும். அல்லது சோற்றில் விசம் வைப்பார்கள். பிணத்தை எரிக்கிற பொழுது சர்க்கரை சேர்த்து எரிப்பார்கள். போஸ்ட்மார்ட்டத்திற்கு எதுவும் மிஞ்சாது.

      அதுபோக தமிழகத்தில் மிகவும் கீழாக இருக்கிற சாதிகளில் புதர வண்ணார்களும் ஒருவர் . இவர்களிடத்தில் வண்ணார்களின் பிரிவினரும் புழங்கமாட்டார்கள். பார்ப்பனர்களிலயே நூற்றுக்கும் உட்பட்ட உட்சாதிகள் இருக்கிற பொழுது இந்த இந்துமதம் சாதியால் தான் உயிர்வாழ்கிறது ஜோசப். இதற்கிடையில் நீங்கள் சொல்கிற வழிபாடுகளை யார் கண்டுகொள்வார்கள்? வர்க்கப்பார்வையைத் தவிர்த்து வேறேதுவும் இப்பிரச்சனைகளைத் தீர்க்குமா? அந்த வர்க்கப்பார்வையில் இசுலாமியர்கள் உண்டா இல்லையா?

      இசுலாமியர்கள் என்று இங்கு இருக்கிற ஆர் எஸ் எஸ் காலிகள் கூச்சலிடுகிற பொழுது பிள்ளைகளும் நம்பூதிரிகளும் சித்பவன் பார்ப்பனர்களுமா முசுலீமாக இருக்கின்றனர். ஒருகாலத்தில் அவர்களும் ஒடுக்கப்பட்ட சாதிகளாக இருந்தவர்கள் தானே. அப்படிஎனில் மதவாதிகளை நாம் எதிர்க்கிற பொழுது ஒவ்வொரு உதாரணத்திலும் அனைத்து மதக்காலிகளின் கள்ளக்கூட்டினை அலங்கரிப்பவர்கள் யார் என்று அம்பலப்படுத்தினால் தானே தீர்வு நோக்கி நகர முடியும்? ஆனால் இசுலாமியர்களுக்கு மட்டும் தனிஅடைவு கொடுத்தால் ஆர்எஸ்எஸ் காலிகளுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? இன்றைக்கு வந்திருக்கிற சினிமா விமர்சனக் கட்டுரையில் உங்களது கேள்விக்கு மிகச் சிறப்பான பதிலை வைத்திருக்கிறார்கள். திறந்த மனதுடன் பரிசீலியுங்கள்.

    • ஜோசப்,

      உங்கள் நியாயவான் வேடம் அருவருப்பூட்டும் நாடகமாக இருக்கிறது.

      \\ஒரு ஊரில் தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிடர்களுக்கும் முஸுலீம்களுக்கும் மதம் சார்ந்த பிரச்சனை ஏற்படுகிறது என்றால் நீங்கள் யாரை ஆதரிப்பீர்கள் முரட்டு முஸுலீம் களையா இல்லை இந்து தாழ்த்தப்பட்ட மக்களையா //

      முதலில் நீங்கள் எழுப்பிய இந்த கேள்வியிலேயே ஒரு தரப்புக்கு முரடர்கள் என பட்டம் சூட்டி விடுவதே உங்கள் முன்முடிவை காட்டி விடுகிறது.அடுத்து

      \\நேரடியாக சொல்லுகிறேன் அப்படி எதாவது உழைக்கும் மக்களுக்கும் இசுலாமிய மத வெறியர்களுக்கும் இடையே பிரச்சனை என்றான் நான் உழைக்கும் வர்க்கம் பக்கமே அவர்கள் எந்த ஜாதியை சார்ந்தவர்கள் என்று பார்க்க மாட்டேன் //

      முதலில் முசுலிம்கள் என சொல்லிவிட்டு முரட்டு முசுலிம்களாக ஆக்கியது போல இந்த கூற்றில் அவர்களை இசுலாமிய மத வெறியர்களாக ஆக்கி இருக்கிறீர்கள்.

      அய்யா நியாயவானே,எந்த பிரச்னையிலும் நியாயத்தின் பக்கம் நிற்பதுதான் மனிதர்களுக்கு அழகு. உங்கள் மூளையில் இசுலாமிய எதிர்ப்பு மதவெறி பாசி படிந்து கிடப்பதால் இந்த எளிய உண்மை கூட உங்கள் அறிவில் உரைக்கவில்லை.

      உழைக்கும் வர்க்கம் என்பதற்காக அவர்கள் செய்வதெல்லாம் நியாயமானதாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை.நத்தம்,நாயக்கன் கொட்டாய் சேரியில் புகுந்து தலித் வீடுகளை கொள்ளையிட்டு பின் தீயிட்டு கொளுத்திய வன்னிய சாதி வெறியர்களில் ஆகப் பெரும்பான்மையினர் உழைக்கும் வர்க்கத்தினரே.இதற்கு என்ன சொல்கிறீர்கள் நியாயவானே.

      19 முசுலிம்களை கொன்று கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அவர்கள் சொத்துக்களை சூறையாடிய கோவை கலவரத்தில் சங் பரிவார் கும்பல் யாரை அடியாட்படையாக பயன்படுத்திக் கொண்டது தெரியுமா நியாயவானே,அருந்ததியின மக்களைத்தான்.

      முசுலிம்களுக்கும்,தலித்களுக்கும் இடையே பிளவு ஏற்படுத்தும் சங் பரிவார் கும்பலின் முயற்சி நிரந்தர வெற்றி பெற முடியவில்லை.கலவரத்துக்கு பின் இரு சமூக தலைவர்கள்,மூத்தவர்களின் முயற்சியால் மீண்டும் நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்டது.பார்ப்பனியத்தின் வலையில் தலித் மக்கள் தொடர்ந்து சிக்குண்டு கிடக்கவில்லை.அதனால்தான் கலவரத்துக்கு பிந்தைய இந்த 17 ஆண்டுகளில் ஒரு சிறிய மோதல் கூட முசுலிம்களுக்கும்,தலித்களுக்கும் இடையில் நிகழவில்லை.

      சங் பரிவார் கும்பலுடன் ஒப்பிடும்போது நீங்களெல்லாம் ஜுஜுபி.சிரமப்பட்டு ஆணி புடுங்க வேண்டாம்.அது வீண் வேலை.

  45. திரு.வியாசன்…

    தென்றலுக்கு தாங்கள் கொடுத்த பதில்கள் மிக அருமை.. தங்களின் தமிழ் தேசிய சிந்தனை மிகவும் பாரட்டிற்க்குரியது.. இன்னும் எவ்வளவு காலம் தான், வெள்ளாளியம் கத்தோலிக்க பார்ப்பனீயம் என்றி ஜல்லி அடித்து கொண்டிருப்பார்களோ. இதில் சிவவாக்கியரை துணைக்கு அழைக்கும் கொடுமை வேறு. தெரியாத்தனமாக சிவவாக்கியரின் “நட்ட கல்லும் பேசுமோ” என்கிற பாடல் கிடைத்து விட்டது. உடனே, அவருக்கும் கருப்பு சட்டை(அல்லது சிகப்பு சட்டை) அணிவித்து விட்டார்கள்.

    பொட்டு வைப்பது தமிழ் பெண்களின் மிக அழகிய பண்பாடுகளில் ஒன்று. இதை இந்து மதத்துடன் இணைத்து, இந்து கலாச்சராமாக மாற்றியது காலத்தின் கொடுமை. பொட்டு வைத்தலுக்கும் மதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த பிரிவினைகள் எல்லாம் இங்கிருக்கும் பாதிரிகளின், மத போதகர்களின், மற்றும் ஆர்.எஸ்.எஸ் போன்ற அடிப்படை வாத இயக்கங்களின் தவறான பிரச்சாரத்தின் விளைவே இது…

  46. திரு. தென்றல் அவர்களுக்கு நான் அவருக்களித்த பதில்களுக்கு எதிர்க்கருத்து கூறத் தெரியாமலோ என்னவோ எனக்கு மதவெறி, சாதீய வெறி, துரோகி என்றெலாம் உளறுகிறார். அவரை ‘கம்யூனிச முகமூடி அணிந்த இந்து எதிர்ப்பு முகம்மதிய வெறியன்’, என்று அழைக்க எனக்கு எவ்வவளவு நேரம் எடுக்கும். ஆனால் முன்பின் தெரியாதவர்களை, அவர்களுடன் வாதிக்கும் போது அப்படியெல்லாம் அவமதிக்கும் வகையில் ‘Name-calling’ பழக்கம் என்னிடம் கிடையாது.

    நான் என்ன சாதியென்றோ அல்லது என்னுடைய சாதி தான் பெரியது என்றோ நான் இணையத்தில் மட்டுமல்ல எங்குமே கூறியதில்லை. அல்லது யாழ்ப்பாண வெள்ளாளர்கள் செய்தது எல்லாம் சரியென்றோ நான் ஒரு போதும் வாதாடியதில்லை. இந்துக்களாகிய பெரும்பான்மைத் தமிழர்களின் மதவுணர்வுகளும் மதிக்கப்பட வேண்டுமென்கிறவர்கள் எல்லோரும் தலித்துக்களின் எதிரிகள், பார்ப்பன ஆதரவாளர்கள் என்று தமக்குள்ளேயே ஒரு கணக்குப் போட்டு வைத்திருப்பதான் விளைவு தான் இப்படியான உளறல்கள். ஆத்திரக்காரனுக்கு மட்டுமல்ல, ஆத்தாதவனுக்கும் புத்தி மட்டு போல் தான் தெரிகிறது. 🙂

    //வியாசனுக்கு முசுலீமும் கிறித்தவனும் குறிப்பாக இந்து மதத்தின் பிற சாதிக்காரனும் பிரச்சனை. மதவெறிக்கு இதுதான் அடிப்படை. //

    • வியாசன் அவர்களுக்கு,

      நீங்கள் எந்த பதிலையும் வைக்கவில்லை வியாசன். இது ஒருபுறமிருக்க தமிழ் தேசியவாதிகள் அணிந்திருப்பது இந்துத்துவமுகமூடிதான் என்பதை நிறுவியது நானல்ல; தாங்கள் தான்;

      “வியாசனுக்கு முசுலீமும் கிறித்தவனும் குறிப்பாக இந்து மதத்தின் பிற சாதிக்காரனும் பிரச்சனை. மதவெறிக்கு இதுதான் அடிப்படை” என்பதில் மாற்றுக்கருத்தோ பின்வாங்குதலோ இல்லை.

      வெட்டியானில் ஆரம்பித்து துலுக்கன் வரை பார்த்தாயிற்று வியாசன். துலுக்கன் என்பது நேம்-காலிங் பழக்கத்திற்குள் வராதுதான்!. கங்கையை அசுத்தப்படுத்தியற்கு பார்ப்பனீயம் காரணமல்ல; பிணம் எரித்தவர்கள் தான் காரணம் என்று சொன்ன பொழுது உங்கள் மீதிருந்த அபிமானம் முழுதும் போயிற்று. பிறகு நான் பார்த்ததெல்லாம் ‘மானங்கெட்டவனுக்கு காவித்துணி’ என்ற வகையிலான வாதங்கள்.

      நீங்களே நான் ஒரு இந்துதேசிய வாதி என்றும் தமிழ் தேசியவாதி என்று Name-calling க்குள் தலையை கொடுத்த பிறகுதான் பதில் சொல்வதை நிறுத்தியிருக்கிறேன். முழுதாக நனைந்த நீங்கள் கருத்துபரிமாற்றம் நடத்துகிற அளவிற்கு ஒரு கருத்தையும் வைத்துவிடவில்லை. அவதூறுகளுக்கு பதில் மட்டுமே தீர்வல்ல வியாசன். இருந்தாலும் முயற்சி செய்வோம். காத்திருங்கள்.

      • மிக நீண்ட விவாதம் செய்து வியசனிடம் இருந்து

        “viyasan ஒரு இந்துதேசிய வாதி என்றும் தமிழ் தேசியவாதி”

        என்ற வாக்கு மூலதை வாங்கீய திரு தென்றலுக்கு மிக்க நன்றி

        //நீங்களே நான் ஒரு இந்துதேசிய வாதி என்றும் தமிழ் தேசியவாதி என்று Name-calling க்குள் தலையை கொடுத்த பிறகுதான் பதில் சொல்வதை நிறுத்தியிருக்கிறேன். முழுதாக நனைந்த நீங்கள் கருத்துபரிமாற்றம் நடத்துகிற அளவிற்கு ஒரு கருத்தையும் வைத்துவிடவில்லை. //

        • //“viyasan ஒரு இந்துதேசிய வாதி என்றும் தமிழ் தேசியவாதி”//

          நான் ஒரு தமிழ்த்தேசியவாதி என்பதில் பெருமைப்படுகிறேன். தமிழ் அடையாளத்துக்குப் பின்பு தான் மத அடையாளம்.

      • //வெட்டியானில் ஆரம்பித்து துலுக்கன் வரை பார்த்தாயிற்று வியாசன். துலுக்கன் என்பது நேம்-காலிங் பழக்கத்திற்குள் வராதுதான்!//

        வெட்டியானும் துலுக்கனும் வழக்கத்தில் உள்ள பெயர்கள் தான், நான் அதை என்னுடன் பேசுகிறவர்களைக் குறிப்பிடவில்லை. மற்றும் துலுக்கன் என்பது துருக்கி நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்லது அவர்களின் வம்சாவளியினர் என்ற கருத்து தான் எனக்குத் தெரியும்.

        • துருக்கி நாட்டவர்களை துலுக்கன் என்று தமிழ் தேசியவாதி அழைப்பது சரி என்றால் அதே தமிழ் தேசியவாதியை பக்கத்து மாநிலத்து இனவெறியர்கள் பாண்டி என்று அழைப்பதும் சரி தானே! இனவெறியர்கள் எல்லா இடத்திலும் ஈயும் பீயுமாகத்தானே இருக்கிறார்கள்.

        • அகராதியில் இருக்கிறது என்பதற்காக அனைத்து சொற்களையும் பொதுவெளியில் நாகரீக மனிதர்கள் பயன்படுத்துவதில்லை.துலுக்கன் என்ற சொல் இழிவுபடுத்தும் தன்மையிலானதுதான்.[Derogatory in nature].நடைமுறையில் முசுலிம்களை இழிவாக குறிக்கத்தான் அந்த சொல் பயன்படுகிறது. அதனால்தான் பொது இடங்களில் முசுலிம்களை குறிக்க அந்த சொல்லை யாரும் பயன்படுத்துவதில்லை.

          வினவு தளத்தில் கூட எத்தனையோ RSS காரர்கள் பின்னூட்டம் இடுகிறார்கள்.அவர்கள் கூட முசுலிம்களை துலுக்கன் என்று குறிப்பதில்லை.எனது நினைவு சரியாக இருக்குமானால் சோழன் என்ற இந்து மத வெறி கொண்ட ஒருவர் அந்த சொல்லை இங்கு ஓரிரு முறை பயன்படுத்தி இருக்கிறார்.அதற்கடுத்து இப்போது வியாசன் அந்த சொல்லை தாராளமாக பயன்படுத்தி வருகிறார்.இதிலிருந்தே வியாசன் எந்த அளவுக்கு முசுலிம்கள் மீது கடும் வெறுப்பு கொண்டிருக்கிறார் என புரிந்து கொள்ள முடியும்.அதற்கு மொக்கை விளக்கம் வேறு கொடுக்கிறார்.துருக்கிய வம்சாவளி யினரைத்தான் துலுக்கன் என சொல்றாராம்.ஆனால் உண்மை நிலை என்ன.பொதுவாக இந்திய முசுலிம்களை குறிப்பாக தமிழக முசுலிம்களை குறிக்கத்தான் அது பயன்படுகிறது.அதனால்தான் திசை தொழும் துலுக்கர் என்று பாடினான் பாரதி.இவை எதுவுமே தெரியாதது போல் நடிக்கிறார் வியாசன்.

          அது தமிழக முசுலிம்களை குறித்து இழிவு படுத்தும் சொல் அல்ல என வியாசன் கருதினால் அதை பயன்படுத்துவது தவறில்லை என கருதினால் தமிழகத்திற்கு வரும்போது ஒரு பொது இடத்தில் அந்த சொல்லை பயன்படுத்த அவர் தயாரா.

          யாருக்கும் முன்னறிவிப்பு செய்ய வேண்டாம் வியாசன். ”பார்த்த” ஊரின் பெயரை கேட்டதற்கே முகவரி கேட்பதாக பிலாக்கணம் பாடிய தொடை நடுங்கி வீரர் நீங்கள்.இயல்பான ஒரு பேருந்து ,தொடர்வண்டி பயணத்திலோ,உணவகங்களிலோ உங்களுக்கு தைரியம் இருந்தால் ஒரு பத்து பேர் காதுல உழுவுற மாதிரி அந்த சொல்லை பயன்படுத்தி பேசி பாருங்கள்.

          பி.கு.

          பாதுகாப்பான இடத்தில் அடையாளம் காட்டாமல் இருந்து கொண்டு பரமசிவன் கழுத்து பாம்பு போல் வீரம் காட்ட வேண்டாம்.

          பதிலுக்கு நீங்களும் என்னை நோக்கி இந்த கேள்வியை எழுப்பலாம்.வினவில் நான் எழுதும் ஒவ்வொரு சொல்லையும் நீங்கள் சொல்லும் பொது இடத்தில் நீங்கள் சொல்லும் நேரத்தில் உங்கள் முன்னிலையில் பேசுவதற்கு நான் தயார். யாரையும் இழிவு படுத்தி பேசும் இழிகுணம் இல்லாத காரணத்தால் என் மடியில் கனமில்லை. அதனால் மனதில் அச்சமும் இல்லை.

        • அந்த தமிழ் தேசியவாதியை சிங்களவன் ”கள்ளத்தோணி” என்கிறான்.புலம் பெயர் நாடுகளில் புதிய நாஜிக்கள் ”வந்தேறி நாய்” என்கிறான். தமிழகத்தில் சோ தலைமையில் பார்ப்பன கூட்டம் ஈழத்தமிழர்களை ”தீவிரவாதிகள்” ” ”துப்பாக்கி கலாசாரம் ” என தூற்றுகிறது.

          இவற்றையும் ”வழக்கத்தில் உள்ள பெயர்கள் தான்” என ஏற்றுக் கொள்கிறாரா தமிழ் தேசியவாதி.

      • //நீங்கள் எந்த பதிலையும் வைக்கவில்லை வியாசன்.//
        பாவம், புரியவில்லைப் போலிருக்கிறது, பரவாயில்லை. 🙂

    • வியாசன் அவர்களுக்கு,

      \\ நான் என்ன சாதியென்றோ அல்லது என்னுடைய சாதி தான் பெரியது என்றோ நான் இணையத்தில் மட்டுமல்ல எங்குமே கூறியதில்லை.\\

      சாதி வெறியராக இருப்பதற்கு சாதியை வெளிக்காட்ட வேண்டியது எல்லாம் அவசியமில்லை. வியாசன் போன்றவர்கள் காடுவெட்டி குரு போன்று அப்பட்டமாக இருக்க வேண்டியது முன்நிபந்தனை அல்ல. தாங்கள் கோருவது சாதிகளிடையே சமரசம். புராணகால வியாசனும் அதைத்தான் செய்தான். இக்கால வியாசரும் இதைத்தான் செய்கிறார். இரண்டுமே துரோகத்தின் வெளிப்பாடு.

      சாதிகளால் தான் இந்த இந்துமதம் பிழைத்திருக்கிறது. சாதிகள் ஒழிந்தால் இந்து மதமே இருக்காது. ஒவ்வொரு ஏழைகள் வீட்டிலும் முருகனும் ஈசனும் இளித்துகொண்டிருக்கிறார்களாம். சொத்தைக்காக்கிற ஈசன் இளிக்காமல் என்ன செய்வான்?

      ஆதிக்கசாதிகள் ஆதினங்கள் வடிவில் உழைக்கும் மக்களின் நிணத்தை உறிஞ்சுகிற பொழுது நீங்கள் சொல்கிற ஈசன் இளிச்சவாயன் தான். வியாசன் அளவிற்கு ஈசனுக்கு வியாக்கானம் பத்தாது. ஆர்எஸ்எஸ் போட்டுக்கொடுக்கிற ஜதிக்கே நடனம் ஆடமுடியாமல் விழிபிதுங்குகிற ஈசன் வியாசனின் பத்மவீயுகத்தை பாஸ் செய்வானா?

      \\ இந்துக்களாகிய பெரும்பான்மைத் தமிழர்களின் மதவுணர்வுகளும் மதிக்கப்பட வேண்டுமென்கிறவர்கள் எல்லோரும் தலித்துக்களின் எதிரிகள், பார்ப்பன ஆதரவாளர்கள் என்று தமக்குள்ளேயே ஒரு கணக்குப் போட்டு வைத்திருப்பதான் விளைவு தான் இப்படியான உளறல்கள்.\\

      மத உணர்வு என்று எதற்காக மானாங்கணியாக பேசவேண்டும்? காஞ்சா அய்லைய்யாவிற்கு இல்லாத பக்தியா? அவர் கேட்கிற கேள்விக்கு நேரிடையாக பதில் சொல்லுங்கள்; “எங்கள் நிலத்தில் மைசம்மா உழைத்தாள் என்பதற்காகத்தான் அவளுக்கு தெய்வநிலை; சரஸ்வதி படித்தாள் என்பதனால்தான் இந்துமதம் கல்வியின் கடவுள் என்கிறதா?” இது தான் பக்தி; இதுதான் வழிபாடு. இதுதான் உணர்வு;

      சுயமரியாதையும் தன்மானமும் இல்லாமல் ஈசனை வைத்து இந்துமதத்தை தக்காட்டுவதற்கு பெயர் மதஉணர்வு அல்ல. ஆர் எஸ் எஸ்க்காக செய்கிற தரகு வேலை. எட்டப்பர்கள் இப்படித்தான் உருவாகின்றனர். வழிப்பாட்டை அதிகாரமாக்கி ஆர் எஸ் எஸ்களுக்கு அடைவுகொடுப்பதற்கு பெயர் உணர்வு என்றால் அத்தகைய உணர்வை முசிலி-பவர் எக்ஸ்ட்ராவே தரும். ஆதாரத்திற்கு செளந்தர்ய லஹரியை படித்து பரவசப்படவும்.

      • வழக்கம் போல் சம்பந்தமில்லாத உளறல். இந்த வகையில் இந்துமதத்தை மட்டுமல்ல, எந்த மதத்தையும் அவதூறு பேசலாம். மேலேயுள்ள உளறலில் இந்து என்று சொல்லுக்குப் பதிலாக வேறு மதங்களின்ன் பெயர்களை இட்டு சில வரிகளை மாற்றினால் சரி. எந்தமதத்தை இழிவு படுத்தினாலும் அது கண்டிக்கப்ப்ட வேண்டும். இந்துக்களாகிய பெரும்பான்மை தமிழர்களின் எதிரிகள் எல்லாம் கம்யூனிச போர்வையைப் போர்த்துக் கொண்டு, தமது காழ்ப்புணர்வை தமிழர்களின் மீதும், தமிழ்த்தேசியத்தின் மீதும் காட்டுகிறார்கள். மேலேயுள்ள உளறலின் நோக்கம் அது மட்டுமே.

        • உளறல் என்பது ஒருபுறம் இருக்கட்டும் வியாசன். கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள்;

          “எங்கள் நிலத்தில் மைசம்மா உழைத்தாள் என்பதற்காகத்தான் அவளுக்கு தெய்வநிலை; சரஸ்வதி படித்தாள் என்பதனால்தான் இந்துமதம் கல்வியின் கடவுள் என்கிறதா?”

          இது உழைக்கும் மக்களின் வழிபாடு என்பது வேறு; சைவர்களின் அதிகார வெறி வேறு என்பதை ஒரு வேளை தெளிவுபடுத்தலாம் இல்லையா? பார்ப்பனியத்தால் இங்கு இருக்கிற மக்கள் எப்படி வலுக்கட்டாயமாக இந்துக்களாக சித்தரிக்கப்படுகிறார்கள் என்பது தெரியுமில்லையா?

    • தோழர் வியாசன் கங்கைநதியில் பிணங்களை மிதக்க விடுவது வெட்டியான்களே என்கிறீர்கள் கண்டிக்கபட வேண்டிய அபத்தமான கருத்து ஒரு வேளை கங்கை கரையில் நவின மின்சார தகணநிலையங்கள் அமைத்து குடுத்தால் இந்து மத உணர்வு புண்படுகிறது என்று மத வாதிகள் எதிர்ப்பு தெரிவித்தால் அதை வரவேற்பீர்களா இல்லை எதிர்ப்பீர்களா

      • //தோழர் வியாசன் கங்கைநதியில் பிணங்களை மிதக்க விடுவது வெட்டியான்களே என்கிறீர்கள் கண்டிக்கபட வேண்டிய அபத்தமான கருத்து //

        என்னுடைய பதிலை முற்போக்குகள் தமது விருப்பத்துக்கேற்ப அர்த்தம் கற்பித்துக் கொண்டு உளறுகின்றனர். நான் கூறியதேன்னவேன்றால், எரிந்து கொண்டிருந்த பிணம், அரை குறையாக கங்கையில் மிதக்கிறதேன்றால், அதற்கு எப்படி பார்ப்பனர்கள் பொறுப்பாக முடியும் என்பது தான். அதாவது, பிணங்களை எரிப்பதை மேற்பார்வை பார்ப்பதோ அல்லது எரிப்பதோ பார்ப்பனர்களின் வேலை அல்ல. அந்தப் பிணங்கள் முழுமையாக எரியாமல் கங்கையில் விடப்படுவதற்கு காரணம் பார்ப்பனர்களாக இருக்க முடியாது, நான் பார்த்த, கங்கையைப் பற்றிய எந்த விவரணப் படத்திலும், கங்கையில் பிணம் மிதப்பதற்குக் காரணம் பார்ப்பனர்கள் தான் என்று கூறவில்லை,. ஆனால் இங்கு சிலருக்கு மட்டும், பிரச்சனைகள் எல்லாவற்றுக்கும் காரணம் பார்ப்பனர்கள் என்று சொல்வதில் அலாதிப்பிரியம். உதாரணமாக, தமிழ்நாட்டில் செருப்பு போட்டு நடந்த தலித்துக்கு மலம் தீற்றுகிறார்கள் ஆதிக்க சாதியினர், ஆனால் அவர்களை எதிர்த்தால் ஓட்ட நறுக்கி விடுவார்கள் என்ற பயத்தால், சாதியொழிப்பு வீரர்கள் எல்லாம் கூட்டம் போட்டு அதற்கும் பார்ப்பனர்களிடம் வாய் வீரம் காட்டுவார்கள். 🙂

        //ஒரு வேளை கங்கை கரையில் நவின மின்சார தகணநிலையங்கள் அமைத்து குடுத்தால் இந்து மத உணர்வு புண்படுகிறது என்று மத வாதிகள் எதிர்ப்பு தெரிவித்தால் அதை வரவேற்பீர்களா இல்லை எதிர்ப்பீர்களா?///

        அதைக் கூட எதிர்க்குமளவுக்கெல்லாம் இந்து மத உணர்வு எனக்குக் கிடையாது. உண்மையான இந்துமதம் மாற்றங்களை எதிர்ப்பதில்லை. அதனால் தான் இத்தனை படையெடுப்புக்களையும், கட்டாய மதமாற்றங்களையும் தாண்டி இன்றும் அழியாமல் இருக்கிறது. நவீன மின்சார தகன நிலையங்களை அமைப்பது தான் கங்கையைச் சுத்தப்படுத்துவதன் முதல் படியாக இருக்க வேண்டும் என்பது தான் எனது கருத்து, அதை நானும் நிச்சயமாக வரவேற்பேன்.

        • ஜாதிய ஏற்றத்தாழ்வினை செயல் படுத்துவதையோ இல்லை அதை ஆதரிப்பதையோ பார்ப்பணியம் எனலாம் அந்த வகையில் நீங்கள் வெட்டியாஙக்ள் மீது நீங்கள் சொல்லும் குற்ற்ச்சாட்டு ஒரு தொழிலாளியின் மீது வைக்கும் குற்ற்ச்சாட்டு பார்ப்பணியம் மட்டும்மல்ல முதலாளித்துவம் சார்ந்ததே

        • இன்னமும் பிணம் எரித்தவர்கள் தான் காரணம் என்று அள்ளி வீசுகிறீர்கள். தன் சமூகத்தின் ஒரு பகுதி ஏன் பிணம் எரிக்க வேண்டும் என்ற கவலை ஒரு இந்துவுக்கு இல்லை.

          இந்துவின் மனமே இங்கு மாசு அடைந்து இருக்கிற பொழுது கங்கை மாசடைவதற்கு நீங்கள் சொல்வதைப் போல பார்ப்பான் மட்டுமா காரணம்? கட்டுரை பார்ப்பனீயம் என்று சரியாகத்தான் சொல்லியிருக்கிறது.

          கடைசியில் இந்துமதத்தின் கொடூரத்தை அறிவியல் தொழில் நுட்பத்துடன் முறியடிக்கப் போகிறீர்களாக்கும். தலித் பூசாரித் திட்டம், சபரி மேளா போன்ற திட்டம் தானே இதுவும்.

          கழிவறையை கட்டினால் கற்பழிப்பு நடக்காது என்பதைப் போன்றது தான் பிணம் எரிக்கும் மிசின்.
          நெய்பந்தம் பிடிப்பதை சாதி வெறியாக வைத்திருக்கிற இந்துத்துவம் வாழும்வரை கற்பழிப்பும் சரி கங்கை மாசுபடுதலும் நடக்கத்தான் செய்யும்.

        • Viyasan,

          //என்னுடைய பதிலை முற்போக்குகள் தமது விருப்பத்துக்கேற்ப அர்த்தம் கற்பித்து//

          ஒரு பிணத்தை எரிக்கக் கொண்டு வந்த விறகுகளில் இரண்டு, மூன்று பிணத்தை எரித்து விட்டு ஏமாற்றியிருக்கலாம் என்று நீங்கள் கூறியதை நாங்கள் அவதூறு என்றால் அது திரித்தலா?

          எஙகளது பதில்களை கருத்தில் கொள்ளாமலும் (குறிப்பாக 7.3 & 7.3.1.1 in the concerned post) அவைகளுக்கு பதில் ஏதும் தராமலும் சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே? என்ன செய்வது?

    • viyasan,

      [1]நீர் வினவில் ஆத்தும் தேநீரில் தான் இந்து மத வெறியும் தமிழர்களீன் பண்பாடு சீராழீவான சாதீயமும் கலந்து நாற்றம் எடுக்கின்றதே !. 🙂

      [2]நீர் தலித்தியர் மக்களுக்கு எதீரா பேசீய பேச்சை எல்லாம் மறந்துட்டியா?

      [3]தலித்தியர் மக்களுக்கு உதவி செய்தது தவறு என்று நினைக்கின்றேன் ;கங்கைநதியில் பிணங்களை மிதக்க விடுவது வெட்டியார்களே; என்று எல்லாம் சாதி வெறியுடன் பெனாத்தீய —- நீர் தான் அல்லவா ? என்ன ஆதாரம் வேண்டுமா ?

      //இந்துக்களாகிய பெரும்பான்மைத் தமிழர்களின் மதவுணர்வுகளும் மதிக்கப்பட வேண்டுமென்கிறவர்கள் எல்லோரும் தலித்துக்களின் எதிரிகள், பார்ப்பன ஆதரவாளர்கள் என்று தமக்குள்ளேயே ஒரு கணக்குப் போட்டு வைத்திருப்பதான் விளைவு தான் இப்படியான உளறல்கள். ஆத்திரக்காரனுக்கு மட்டுமல்ல, ஆத்தாதவனுக்கும் புத்தி மட்டு போல் தான் தெரிகிறது//

  47. தோழர் தென்றல் ஏன் இவ்வளவு கோபம் எனக்கு கம்மூனிசம் பற்றியோ புரச்சி பற்றியோ வர்க்கமாக அணி திரள்வது பற்றியோ தெரியாது காரல் மார்க்ஸ்,பைடல் காஸ்ட்ரோ ,செகுவேரா பற்றியோ படித்தது இல்லை புரச்சி கூட பள்ளியில் வரலாற்று பாடத்தில் படித்ததே எனவே கொஞ்சம் சலிப்படையாமல் கம்மூனிசம் பற்றியும் வர்க்கமாக திரள்வது பற்றியும் சொல்லுங்கள் நான் எனது ஊரில் நடந்த சிறு நிகழ்வை சுட்டிக்காட்டினேன் மற்றபடி இசுலாமியர்களின் மீது வெறுப்பு இல்லை எந்து வலை பூவில் தனி மனித நிந்தனை செய்யவில்லை நீங்கள் எந்த வலைப்பூவை படித்தீர்களோ தெரியவில்லை தாழ்தப்பட்ட மக்களுக்குள் ஜாதி வெறி இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளுகிறேன் வியாசனின் வெட்டியான் வேலை செய்யும் மக்களால்தான் கங்கை நதி அசுத்தம் அடைகிறது என்பது கண்டனத்துக்குறியது பொட்டு வைப்பது ஆதித்தமிழரின் அடையாளமா என்பது ஆய்வுக்குறியது எனக்கு தெரிந்தவரை விவசாய வேலைக்கு கட்டிட வேலைக்கு கூலி வேலைக்கு போற பெண்கள் பொட்டு பூ எல்லாம் வச்சிட்டு வேலைக்கு போறது இல்லை அவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா மற்றபடி ஆர் எஸ் எஸ் காலிகளைப் போன்ற மத வெறியர்கள் இசுலாமிலும் உண்டு

  48. வியாசன் அவர்களுக்கு,

    சில பதில்கள்.

    \ ஏனென்றால் இலங்கையில் ஆர் எஸ். எஸ் கிடையாது. ஆனால் இலங்கையில் முஸ்லீம்கள் மத்தியில் வஹாபிகள் உண்டு. அதனால் இலங்கை இந்துக்கள் யாரவது ஆர் எஸ். எஸ் ஈடுபாடு கொண்டால், அவர்களின் அடுத்த தலைமுறையினரும் ஆர் எஸ், எஸ் ஆக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.\\

    ஆர் எஸ் எஸ்க்குப் பதிலாகத்தான் சைவர்கள் இருக்கிறார்கள். வேளாள-கொவிகம பாசிஸ்டுகள் ஆர் எஸ் எஸ் வேலையைத்தானே அங்கு செய்துகொண்டிருக்கிறார்கள். அண்டிப்பிழைத்தவனெல்லாம் ஆதிக்க சாதிக்காரன்.

    இலங்கையில் வஹாபிசம் என்று இங்கு இருப்பவனையெல்லாம் முட்டாளாக்க வேண்டாம்.

    ஈரானில் கொமய்னியின் (சியா பிரிவு) இசுலாமிய ஆட்சியை ஆதரித்து அங்கு எத்துணையோ வெளியீடுகள் வந்திருக்கின்றன. அங்குள்ள முசுலீம்கள், சைவ வேளாளர்கள், புத்த பிக்குகள் போன்ற அபாயங்களுக்கு மத்தியில் தான் வாழ்கிறார்கள். பிஜே போன்ற ஆட்கள் எல்லாம் அங்கு இருந்தால் நீங்களும் பிஜேவும் பங்கும் பங்காளிகளாக இருந்திருப்பீர்கள்.

    மேற்கொண்டு நீங்களே அங்கு நிலவுகிற வகாபிசம் பற்றி கதையுங்கள் அல்லது சமரன் குழுவிற்கு பதில் அளிக்கையில் புதிய ஜனநாயக அரசியல் ஏடு இலங்கை சூழ்நிலையை அக்குவேறு ஆணிவேறாக பிரித்திருக்கிறது. துரோகிகள் யார்? அங்கு நிலவுகிற சாதிவெறி உட்பட அனைத்து விசயங்களையும் விரிவாக எழுதியிருக்கிறார்கள். அத்துணை லிங்குகளையும் காப்பி பேஸ்ட் செய்வது தான் பாக்கி. ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. அதுதான் கம்யுனிச பெரியாரிஸ்டு அலர்ஜி.

    \\ தொ.பரமசிவன் தொல்லியல் ஆய்வாளர் மட்டுமல்ல, அவர் ஒரு பெரியாரிஸ்டும் கூட, அவரது எழுத்தில், அவரது கருத்தில் அந்த அந்த வாடை வருவது தவிர்க்க முடியாதது. அதனால் அவரை விட்டு வேறு யாராவது தொல்லியல் ஆய்வாளரை ஆதாரம் காட்டினால் எல்லோருக்கும் ஏற்றுக் கொள்ளத் தயக்கமிருக்காதென்கிறேன் நான். உதாரணமாக, திராவிட கழகத் தலைவர் திரு. கி. வீரமணி கூட ஒரு வழக்கறிஞர் தானே. அவர் அயோத்தி இராமர் கோயில் விடயத்தில் ஆர். எஸ். எஸ். க்காக நீதிமன்றத்தில் வாதாடினால் முஸ்லீம்கள் ஏற்றுக் கொள்வார்களா. அது போல் தான் இதுவும், என்னுடைய கருத்து இப்பொழுது புரிந்திருக்குமென நம்புகிறேன்.\\

    தொ.பரமசிவன் ஒரு பெரியாரிஸ்ட் என்ற காரணத்திற்காகவே நிராகரிக்கிறீர்கள். ஆனால் பெரியார் நாட்டார் வழிபாடுகளை ஆதிகார ஆளும் வர்க்கத்தின் பிண்ணனியில் இருந்து விமர்சிக்கவில்லை. மூடநம்பிக்கை, பகுத்தறிவின் பிண்ணனியில்தான் விமர்சித்திருக்கிறார். ஆனால் இந்த வகையறாவிற்குள் நீங்கள் வருவதில்லை.

    வியாசரை இங்கு பக்தராகவோ அல்லது தமிழ் பற்றாளராகவோ பார்க்கவில்லை. இந்த இரண்டு அம்சமும் உங்களிடம் கிடையாது வியாசன். ஆகையால் பெரியாரை எதிர்ப்பதில் ஹெச் ராசாவிற்கும் உங்களுக்கும் வித்தியாசமில்லை. இருவருமே மத உணர்வை ஒரு போர்வையாகப் பயன்படுத்துகிற அதிகார பீடத்தின் எச்சங்கள் தான்.

    கத்தோலிக்க-வெள்ளாள வெறியை நேர் கொண்டு எதிர்த்தவர் பெரியார். இன்று உங்களுக்கும் மேரி அவர்களுக்கும் இருக்கிற கடுப்பெல்லாம் இதன் மீதுதான். லால்குடியில் தாழ்த்தப்பட்ட கிறித்துவ மாநாடு போடத் தீர்மானித்த பொழுது எதிர்த்தவர்கள் எந்தக் கூட்டம்? கத்தோலிக்க வெள்ளாள வெறியர்களும் பார்ப்பன ஆர் எஸ் எஸ் காரர்களும் வேறுவேறல்ல.

    இனியும் தமிழ் தமிழ் என்று கூவாதீர்கள். உங்களது தமிழ் பாசம் எல்லாம் சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டதல்ல. பெரியாரை எதிர்ப்பதற்கு இதுதான் பிண்ணனியே தவிர; சுடலையை வணங்குகிற உழைக்கும் மக்களின் வழிப்பாட்டிற்கு பெரியார் எதிரியல்ல. தாங்கள் தான் எதிரி.

    உங்களுக்கு நேர்மை இருந்தால் தொ.பரமசிவன் முன்வைக்கிற தமிழ் சைவம் பாசுபதத்தைத்தான் உள்வாங்கியிருக்கிறது என்பதற்கு உங்கள் தரப்பு வாதங்களை வையுங்கள்.

    வீரமணி அவர்களை முசுலீம்கள் மட்டுமல்ல; யாருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    \\ உணவுக்கு இலங்கையில் பஞ்சமில்லை. பால்சொதி கூடக் கிடைக்காத நிலையில் எந்தச் சாதியினரும் இலங்கையில் இல்லை. பார்க்கப் போனால் தமிழ்நாட்டைப் போல் வறுமைக்கும் சாதிக்கும் இலங்கையில் தொடர்பு மிகக் குறைவு. இலங்கையிலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் தாழ்த்தப்பட்ட சாதியினர் பலர் பெரும் பணக்கார்கள். \\

    கருணாவின் கூற்றாகவே இருக்கிறது! அதற்குப் பேசாமல் கருணாவைப் போன்று நேரடியாக இராஜபக்சேவின் காலில் விழுந்துவிடலாம். இலங்கை ஆகா ஓகோ என்று இருப்பதை நவிபிள்ளை போன்றவர்கள் கூட கொஞ்சம் கூச்சத்துடன் தான் ஜநா சபையில் ஒப்பிக்கிறார்கள். இவ்வளவு அப்பட்டமாக இருந்ததில்லை. என்ன செய்ய?

    \\ வன. பிதா தனிநாயகம் அடிகளார் பக்தியின் மொழி தமிழ் என்று கூறியது தவறு என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்து அடுத்த உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டில் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை சமர்ப்பியுங்கள். அதை உலகத் தமிழறிஞர்கள் ஏற்றுக் கொண்டால், நானும் உங்களின் கருத்தை தயங்காமல் ஏற்றுக் கொள்கிறேன்.\\

    தனிநாயகம் அடிகளார் பக்தியின் மொழி தமிழ் என்று சொல்கிற பொழுது கால்டுவெல்லை எப்படி மதிப்பிட? அல்லது கால்டுவெல்லின் ஆராய்ச்சிக்குத்தான் உலக ஆராய்ச்சி மாநாடுகள் செவிமடுத்ததா? கவிதா சரண் சொல்லித்தான் திராவிடம் குறித்த சொல்லாடலில் தாழ்த்தப்பட்டவர்கள் சேர்க்கப்படவில்லை எனும் பொழுது சைவர்களின் பாசாங்கு அடிபடுகிறது இல்லையா?

    அல்லது பக்தியின் மொழி தமிழ் என்று கதைப்பதற்கு சமண இலக்கியங்களுக்கு தாங்கள் இதுவரை அழுத்தம் கொடுத்திருக்கிறீர்களா?

    கலையாவும் மக்களுக்கே என்று சொல்கிற பொழுது தமிழ், விடுதலையின் மொழி; அதனால் தான் “தாழ்ந்தவர்வந்திடில் தன்உயிர்போமெனில் சாமிக்குச் சத்தில்லையோ” என்பதை இசைவடிவமாக கொண்டு வந்திருக்கிறார்கள். தமிழ் என்று சொல்கிற பொழுது எழுத்து, சொல், பொருள், என்பதைத் தாண்டி போராட்டம் என்பதையும் இலக்கணமாக முன்வைக்கிறோம்.

    ஆகையால் மொழியை இயல், இசை, நாடகம் என்பதைத் தாண்டி வாழ்வியல் விழுமியங்களாக முன்வைக்கிறோம் சைவ வெறியாக அல்ல.

  49. “நீங்கள் எந்த பதிலையும் வைக்கவில்லை வியாசன்” என்று கூறி விட்டு, கடைசியில் நான் ‘வைக்காத பதிலுக்கெல்லாம்” பதிலெழுதியிருக்கிறார் தலைவர் தென்றல். ஆனால் அவருக்குப் பதிலெழுத எனக்கு இப்பொழுது நேரமில்லை. வேலைப்பழு அதிகம். இன்னும் இரண்டு நாட்களில் சிந்திப்போம். நன்றி. 🙂

    • இப்பொழுது அதையே தான் சொல்வேன். நீங்கள் வைப்பதெல்லாம் அவதூறுகள். பதில்கள் என்று மனப்பால் குடிக்க வேண்டாம். இரண்டு நாட்கள் கழித்து வந்து ‘பதில்’ சொல்ல முயற்சி செய்யுங்கள்.

  50. ராபர்ட் கால்டுவெல் எழுதிய திருநெல்வேலி சாணார் வரலாறு. நாடார் சாதியின் வரலாறு, வாழ்க்கைமுறை பற்றிய அக்கறையோ அடிப்படை மரியாதையோ இல்லாமல் அவர்கள் மதம் மாறாவிட்டால் மிருகங்களே என்ற தோரணையில் எழுதப்பட்ட அந்நூல் பின்னர் புழக்கத்திலேயே இல்லாமலாகிவிட்டது.[ The Tinnevelly Shanars : a sketch of their religion and their moral condition and characteristics : with special reference to the facilities and hindrances to the progress of Christianity amongst them. London : Clay for the Society for the Propagation of the Gospel, 1850.]

Leave a Reply to Viyasan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க