privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

சிப்ரோபிளாக்சசின்

-

“ஐயா! ஐயா! டாக்டர் ஐயா!”

உரத்த சப்த்ததுடன் யாரோ வாசல் கதவைப் பிடித்து உலுக்குவது கேட்டது. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பதினொரு மணிக்குத் தான் மருத்துவ ஆலோசனை அறை வேலைகளை முடித்துவிட்டு, இரவுச் சாப்பாட்டிற்குப் பின் ஏதோ ஒரு புத்தகத்தினைப் படிக்க ஆரம்பித்தேன். இரவு படுப்பதற்கு தாமதமாக செல்வது எனக்கு வழக்கமாகிவிட்டது. மார்கழி குளிர் காரணமாக பாப்பாவிற்கு ஏற்பட்டுள்ள ஆஸ்துமா, அவளின் தூக்கமின்மையே மனைவியையும் விழிப்புடன் வைத்திருக்கச் செய்த்து. எனவே வாசல் குரலுக்கு எந்த எதிர்ச் செயலுமின்றி புத்தகத்தினுள் ஆழ்ந்திருந்த என்னை என் மனைவி உசுப்பினாள்.

கிளாக்ஸோ லாபவேட்டை
பன்னாட்டு மருந்து நிறுவன இலாபம் ! – (கிளாக்ஸோ நிறுவனம் இப்போது கிளாக்ஸோ ஸ்மித் கிளைன் – GSK என்று அறியப்படுகிறது.)

“வாசல்ல யாரோ கத்துறாங்க கேக்குதுல்ல போய்ப் பாருங்க. இந்தச் சனியன் வேற இருமிகிட்டே இருக்கு, முழிச்சிக்கப் போவுது.”

“இரு இரு, புத்தகத்துல அடையாளம் வைக்கிற அட்டைய காணோம். இந்த பக்கத்த முடிச்சிட்டுப் போறேன்” என்றவாறு அந்தப் பக்கத்தை முடிக்காமலே புத்தகத்தை மூடினேன்.

கதவைத் திறந்து விளக்கைப் போட்டவாறு வாசல் நோக்கி முன்னேறினேன். வெளி விளக்கை எரியவிட்டவுடன் “யாரது?” என்றேன். “ஐயா, ஆம்பட்டங்க, காலைல ஆசுபத்திரிக்கு வந்தோங்க. இப்ப சுரம் தாங்கலங்க, அதான் அழைச்சிகிட்டு வந்தேன்” என ஒரு பெண்ணின் குரல் கேட்டது.

நான் கதவைத் திறந்து அவர்களை உள்ளே அழைத்தேன். ஆணும் பெணமணுமாய் நன்றாகத் தெரிந்த முகங்கள். ஆனால் பெயர் ஞாபகம் இல்லை. அழுக்கான சேலை குளிருக்காக அதையே முக்காடாய் தலைக்கு சுற்றி போர்த்திருந்தாள். அவளது கணவன், முகம் மட்டும் தெரியும் வண்ணம் ஒன்றோ, இரண்டோ அழுக்குப் போர்வைகளைச் சுற்றிக் கொண்டிருந்தார். அதையும் மீறி குளிராலும், காய்ச்சலாலும் அவர் பற்கள் கிட்டித்துக் கொண்டிருப்பதையும் உணரமுடிந்தது.

உட்காரச் சொன்னேன். முடியாமல் வாசல் பெஞ்சிலேயே படுத்துவிட்டார்.

“காலைலதானம்மா ஆஸ்பத்திரியில பார்த்து மருந்து எழுதிக் கொடுத்தேன். அதுக்குள்ள என்ன?” என்றேன், சற்று எரிச்சலுடன். கிராமத்து மக்களுக்கு இப்படித்தான். காய்ச்சலோ வாந்தியோ, வயிற்றுப் போக்கோ அப்படியே மருந்து கொடுத்தவுடன் மாறிவிட வேண்டும். இதனால்தான் டாக்டர்களைவிட பூசாரிகள் எளிதில் ஏமாற்றித் திரிகிறார்கள்.

“இல்லைய்யா, ஆசுபத்திரி மாத்திரல கேக்கலய்யா, சுரம் தாங்கல”

“எத்தனை நாளா சுரம் இருக்கு?”

“நேத்திலேருந்து தாங்க.”

“நேத்திலேருந்துதான். கவலைப்படாதீங்க” என்றவாறு வெப்பமானியை வைத்து உடல் வெப்பத்தைப் பரிசோதித்தேன். காய்ச்சல் 104 இருந்தது. “ஒரு நாள் சுரத்திற்கு ரொம்ப பயப்பட வேண்டாம். இந்த பனியில வைரஸ் கிருமியால் கூட ஃபுளு ஜுரம் வரும். அதனால காய்ச்சல் மாத்திரையை மட்டும் விடாம குடுங்க.” என்றேன்.

“ஆசுபத்திரி மாத்திர வேண்டாங்க. நீங்க வேற குடுங்க” அந்தப் பெண்ணின் வாதம் எனக்கு வேடிக்கையாக இருந்தது. அப்போதுதான் உற்றுப் பார்த்தேன். “எந்த ஊரு, ஆம்பட்டமா, உங்க பேரு என்ன பஞ்சவர்ணமா?” என்றதும் அந்தப் பெண் மிகுந்த மகிழ்ச்சியுடன் “ஆமாய்யா… போன மாசம் மார்ல சீழ்வச்சி நீங்கதானே ஆபரேசன் பண்ணி விட்டீங்க. எம் புருஷனையும் எப்படியாவது காப்பாத்துங்க”என்றாள்.

இப்போதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள ஒரு விவசாய குடும்பம். தாய்ப்பால் கொடுக்கும் இப்பெண், குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு வயலுக்கு களை எடுக்க செல்வதும், அவசர அவசரமாக திரும்பியவுடன், அழுக்கையும், வியர்வையையும் பொருட்படுத்தாமல் ஏணையில் ஒண்ணுக்கு ஈரத்துடன் கிடக்கும் பிள்ளையை மாரோடு அணைத்துக் கொண்டதன் காரணமாகவோ என்னவோ வலது மார்பகத்தில் சீழ்கட்டி ஏற்பட்டிருந்தது. மார்பகத்திற்கு பிரத்தியேகமான கவனிப்பு தேவை என்பதாலும், கூச்சம் காரணமாகவும் வேறு மருத்துவரிடம் போகுமாறு பரிந்துரைத்தேன்.

“நன்னிலத்துக்கும், திருவாரூருக்கும் போனோம். ஆனா முன்னூறு, நானூறு ஆவுங்கிறாங்க. அதனால திரும்பிட்டோங்க” என்றாவது மறுநாளே என்னிடம் வந்தார்கள். நானே சிகிச்சை அளிக்க நேர்ந்தது. கிட்டதட்ட அரைலிட்டருக்கும் மேல் சீழ் எடுக்கப்பட்டது. சுகாதார நிலையத்திலேயே தொடர் சிகிச்சையளித்து நலமானது.

“அதுசரி! இந்த குளிர்லயும், பனியிலயும், இருட்டுல ஆமபட்டத்துலருந்து வயலுக்குள்ள நடந்து வந்துக்கிறீங்களே. விளக்கு ஒன்னும் எடுத்துக்கிட்டு வரலயா? இரணடும் சின்ன குழந்தைகளாச்சே யார்கிட்ட விட்டுட்டு வந்தீங்க?” என்றவாறு ஊசிக் குழாயில் மருந்தினை எடுத்து நோயாளியை நோக்கி நகரந்தேன். பாவம் அவர் நோயினால் பேச இயலாதவாறு இருந்தார்.

சட்டென்று அந்தப் பெண்ணின் குரல் கரகரப்பானது. கமறும் குரலில் “நல்லா இருக்கனுங்க நீங்க. உங்க கை பட்டதுமே நல்லாயிடும். வீட்டுல பிள்ளைங்கள பார்த்துக்க யாரும்இல்ல. ரெண்டையும் தூங்கப்போட்டுட்டு ஓடியாந்துட்டேன். சீக்கிரம் போனுங்க.” என்றதும் எனக்கு மனது உடைந்து போனது.

ஏனெனில், அது அந்த பெண்ணின் ஒன்றைக் குரலாய் எனக்குத் தெரியவில்லை. ஓராயிரம் ஏழை விவசாயத் தொழிலாளிகளின் குரலாலத்தான் ஒலித்தது. நள்ளிரவில் நண்டும் சிண்டுமாய் இரண்டு குழந்தைகள், ஆதரவற்ற நிலையில், எவர் உதவியுமின்றி, வயலுக்கு நடுவிலுள்ள ஒரு குடிசையில் விட்டு விட்டு, இருட்டில் நினைவு தப்பிய கணவனை சிகிச்சைக்கு அழைந்து வரும் நிலைமையை நினைத்துப் பார்ப்பவர்களுக்குத்தான் அந்தக் கொடிய நிலை புரியும். நான் ஏதும் பேசாமல் ஊசி போட்ட பின் மருந்துச்சீட்டை எழுதிக் கையில் கொடுத்தேன்.

“மாத்திரைக்கு என்ன பண்ணுவீங்க? புத்தகரம் போயில்ல மாத்திரை வாங்கணும்?” என்றேன். புத்தகரம் என் வீட்டிலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் இருக்கும்.

அதற்குள் அந்தப் பெண் தட்டுத் தடுமாறி முந்தானையின் முடிச்சை அவிழ்த்து அதற்குள்ளிருந்து கசங்கிய ஒர ஐந்து ரூபாய் நோட்டை எடுத்து என்னிடம் நீட்டியவாறு சற்று கூச்சத்துடன் “இதாங்க ஐயா இருக்க வைச்சுக்குங்க, மாத்திரை காலைல வாங்கிக்கிறோம். கையில பணமில்லீங்க. அறுப்பு கிறுப்பு ஆரம்பிச்சாத்தான் கைல காசு இருக்கும். காலைல ஆருகிட்டயாச்சும் கடன் வாங்கி மாத்திரை வாங்கி குடுத்துர்றேங்க.”

மார்கழி மாதத்தில் குளிர் மட்டுமல்ல, வறுமையும் சேர்ந்தல்லவா இவர்களை வாட்டுகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதில் விவசாயிகளின் வாழ்க்கையும் ஒளிந்துள்ளதோ என்றவாறு மேசையிலிருந்து பாராசிடமால் மாத்திரை சிலவற்றை எடுத்து அவரிடம் கொடுத்து, “காச அப்புறம் வாங்கிக்கிறேன். இந்த பணத்தை வைச்சு காலைல முதல்ல மருந்து வாங்கிக் கொடுங்க” என்றேன்.

குளிராலும், நன்றியுணர்வாலும் நடுங்கும் கைகளை இருவரும் கூப்பினர். கணவரைத் தாங்கியவாறு அப்பெண் நடக்க ஆரம்பித்தாள். இதற்குள் என் மனைவி பொறுமை இழந்து வாசல்வரை வந்து விட்டாள். “நடுராத்திரியில் என்ன அங்க ஒரே பேச்சு? சட்டுபுட்டுன்னு பார்த்து அனுப்பிவிட்டு வரக் கூடாதா?” என லேசாகச் சீறினாள்.

“நீ பாட்டுக்கு லைட்ட அணைச்சிட்டு தூங்க வேண்டியது தானே!” என்றேன். “எவ்வளவு நேரம்? எனக்கு பயமா இருக்குல்ல. லைட்ட போட்டா பாப்பா முழிச்சிக்குறா,” என்றவாறு என் மனைவி முன்னால் நடந்தாள். என்ன பயம் இவளுக்கு? இவளுடைய பயமும், அந்தப் பெண்ணின் பயமின்மையும்….

அடுத்த சில தினங்களுக்கு வாழ்க்கை வழக்கம்போல் கழிந்தது. அந்தப் பெண்ணையும் அவள் கணவனையும் மறந்து போனேன்.

ஒரு வாரம் சென்றிருக்கலாம். ஒரு நாள் நான் மருந்துவமனையில் பணியில் இருந்தபோது ஒரு கட்டை வண்டியில் இருந்து அதே நோயாளியை இறக்கினர். மெதுவாக கைத்தாங்கலாகக் கொண்டுவந்து மருத்துவமனை முன் உள்ளிருந்த பெஞ்சில் படுக்க வைத்தனர். அதற்குள் மருத்துவ ஊழியர்கள் பதறிக் கொண்டு வந்தனர். “ஏப்பா அப்படி வெராந்தாவுல படுக்க வைக்க வேண்டியதுதான” என்றார் கம்பவுண்டர்.

“வாந்தி வயித்தால கேசுகளை உள்ள கொண்டு வந்து போட்டா யாரு கழுவுறது” என முணுமுணுத்தார் துப்புரவாளர்.

இதற்குள் அந்தப் பெண் இடுப்பிலிருந்த குழந்தையை அணைத்தவாறு, “சார் நீங்கதான் அவர காப்பாத்தணும். ரொம்ப புண்ணியமா போவும் உங்களுக்கு” என்று தரையில் விழுந்து கும்பிட எத்தனித்தாள்.

நான் தடுத்தவாறு “இருங்கம்மா அவசரப்படாதீங்க பார்ப்போம்” என்றேன். அதற்குள் வண்டியோட்டி மாடுகளை அவிழ்த்துக் கட்டிவிட்டு உள்ளே வந்தவர் “இந்த…. நீ போ வெளில, ஐயா இருக்காங்கல்ல, எல்லாம் பாத்துக்குவாங்க” என்றார்.

நான் அவரிடம், “இவரு பேரு என்னாங்க?” என்றேன், “பளனிச்சாமிங்க” என்றார். “பழனிச்சாமி நாக்க நீட்டுங்க” என்றேன் நோயாளியிடம், மிகவும் பலவீனமாக நாக்கை நிட்டினார். நாக்கு உலர்ந்து வெள்ளை படிந்திருந்தது.

உடலைத் தொட்டேன். உடல் கொதித்தது. “ஜூரம்தானா, வேற ஏதும் இருக்கா?” என்றேன். குழந்தையுடன் மீண்டும் அப்பெண் உள்ளே நுழைந்தாள். கண்களிலிருந்து வழிந்து கொண்டிருந்த நீரை பழைய வெளுத்த நைலக்ஸ் புடவைத் தலைப்பில் துடைக்க முனைந்தாள். நைலக்ஸ் அவளது கணீரை உள்வாங்க மறுத்தது.

“நீங்க ஊசி போட்டு ரெண்டு நாளைக்கு நல்லா இருந்ததுங்க. அப்புறம் சுரம் வந்து உடல் செரிக்கல ஒரே வாந்தி. சீதம் சீதமா வயித்தால வேற போவுதுங்க” என்றார்.

நான் வயிற்றில் கை வைத்துப் பாரிசோதித்தேன். கல்லீரலும், மண்ணீரலும் வீங்கிப் பெருந்திருந்தது. டைபாய்டு காய்ச்சலாக இருக்கவேண்டும் எனினும் பலரைப் போல் நான் வழக்கமா டைபாய்டு நோய்க்கு என உள்ள குளோரோம்பினிகால் மருந்தினை பரிந்துரைப்பதில்லை. எதற்கும் டைபாய்டு நோய் என தீர்மானிக்கும் ‘வைடால்’ இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். நோயாளியின் பொருளாதாரம் அதற்கு இடம் கொடுக்க வேண்டுமே, எனவே குளோரோம்பினிகால் மருந்தினை கொடுக்க தீர்மானித்து, வார்டில் படுக்கச் செய்து சிரைவழி நீர்மம் மருந்துகளும் அளித்தேன்.

வசதியற்ற மருந்துவமனையிலும் அந்த மருந்துவம் அவர்களுக்கு மகத்தானதாக பட்டிருக்க வேண்டும். ஆயினும் நோயாளிக்கு காய்ச்சல் குறையவே இல்லை. காய்ச்சல் ஏறி ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. எனவே ‘வைடால்’ பரிசோதனை செய்ய தீர்மானித்தேன்.

துணைக்கு யாருமற்று அனாதரவாக நிற்கும் பெண்ணிடம் இதைக் கூறுவதற்கே எனக்கு கஷ்டமாக இருந்தது.

“இதப்பாரும்மா டைபாய்டு காய்ச்சல் மாதிரி தெரியுது. ஆனா அதுக்கு மருந்து கொடுத்தும் கேட்க மாட்டேங்குது. இரத்தம் எல்லாம் டெஸ்ட் பண்ணித்தான் பார்க்கணும். நீங்க ஏதாவது பெரிய ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டு போங்க அல்லது ஒரு ஐம்பது ரூபாய் ஆகும். ஒரு ரத்த டெஸ்ட் மட்டுமாவது பண்ணுங்க” என்றேன். அப்பெண்ணின் குழந்தைகள் இருவரும் அங்குள்ள வேப்ப மரத்தடியில் ஒளிந்து பிடித்து விளையாடிக் கொண்டிருந்தன.

கண்களில் நீர்மல்க “கொஞ்சம் இருக்க வர்றேன்” என்றவாறு வேப்பமரத்திற்குப் போய் சின்னவனைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு பெரியவனுக்கு முதுகில் ஒரு அடி கொடுத்து இழுத்துக் கொண்டு நகர்ந்தாள். சற்று நேரத்திற்கெல்லாம் பணத்துடன் வந்தாள் அப்பெண். அந்தக் ‘கதையைக்’ கேட்பதற்கு என் மனம் இணங்க வில்லை. இரத்தம் எடுத்துக் கொடுத்தனுப்பிப் பரிசோதனை செய்தேன்.

சோதனை ‘டைபாய்டு நோய்’ என்பதை உறுதி செய்த்து. எனக்குள் குழப்பம், பின்னர் ஏன் குளோரோம்பினிகால் வேலை செய்யவில்லை? மருந்து எதிர்ப்பு குணம் ஏற்பட்டிருக்குமோ? கவலையுடன் புத்தகங்களை ஆராய்ந்தேன். சமீபத்திய மருந்துவ ஆய்வு இதழ் ஒன்று சிக்கியது. இதழ் விவாதத்திலிருந்த முக்கிய விஷயம் – Drug resistant typhoid – Danger in india – “இந்தியாவில் அபாயம் – மருந்து எதிர்ப்பு டைபாய்டு நோய்”

வழக்கமான மருந்துகளுக்கு பதிலாக கிளாக்சோ நிறுவனம் இவ்வகை நோய்களுக்கு புது மருந்தினைக் கண்டு பிடித்துள்ளது. ‘சிப்ரோபிளாக்கசின்’: இது ஒருவகை குயினோலின் வகை மருந்து என விளக்கங்கள் நீண்டன. உதவிக்காக திருவாரூரில் எம்.டி. படித்த மருத்துவரைத் தொடர்பு கொண்டேன். அவர் இதனை உறுதிப்படுத்தினார்.

“இந்த மருந்து லேட்டஸ்டா இப்பத்தான் வந்திருக்கு சிவா. இத கிளாக்சோ அறிமுகப்படுத்தியிருக்காங்க. ஆஸ்பத்திரியில கிடைக்கிறதில்லை. மாத்திரை ஒன்று 28, முப்பது ரூபாய் வரும். நீங்க சொல்ற நிலைமையில இருக்கிற பேஷண்டுக்கு ஐ.வி.யாத்தான் கொடுக்கிறது நல்லது. ஐ.வி. மருந்து 125 ரூபாய் ஆகும்.” என்றார்.

எனக்குத் தலை சுற்றியது. குழந்தைகளுக்கும் தனக்கும் தலைக்கு எண்ணெய் தேய்க்கக்கூட வழியில்லாத அந்தப் பெண்ணிடம் எப்படிக் கூறுவது?

வேறு வழியில்லாமல் அந்தப் பெண்ணை அழைத்து விவரமாக விளக்கம் கூறினேன். “குறைந்தது மருந்துக்கே 1000 ரூபாய் ஆகும். உங்க கஷ்டம் எனக்குத் தெரியும். நம்ம ஊரு கவர்மெண்டு ஆஸ்பத்திரிலயெல்லாம் இன்னும் அந்த மருந்து வரலயாம். அதனால நீங்க எதுக்கும் காரைக்கால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போங்க. அங்க இருக்கலாம். என்னால முடிஞ்சத எல்லாம் நான் செஞ்சுட்டேன்” என்றவுடன் அந்தப் பெண் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்.

நான் அந்தப் பெண்ணை ஏறிட்டு நோக்க அஞ்சி வண்டியோட்டியிடம் “எப்படி கொண்டு போகப் போறீங்க; காரைக்கால் தானே?” என்றேன்.

“இல்லைங்க சார் அந்த பெண்ணு ஒரு ரெண்டாங்கெட்டான். சொந்தபந்தமும் யாருமில்லை, நீங்களே முடியாதுன்ன பிறகு என்ன செய்யுறது. வீட்டுக்குத்தான் கொண்டு போறோம்.”

மறுநாள் காலை வண்டி கட்டிக் கொண்டு அதே ஆள் வந்தான். நான் அந்தப் பெண்ணை ஏறிட்டு நோக்க அஞ்சி வண்டியோட்டியிடம் “எப்படி கொண்டு போகப் போறீங்க; காரைக்கால் தானே?” என்றேன்.

“இல்லைங்க சார் அந்த பெண்ணு ஒரு ரெண்டாங்கெட்டான். சொந்தபந்தமும் யாருமில்லை, நீங்களே முடியாதுன்ன பிறகு என்ன செய்யுறது. வீட்டுக்குத்தான் கொண்டு போறோம்.”

எனக்குள் மண்டைக்குள் ஏதோ வெடிப்பது போல இருந்தது. எளிதில் குணமாகும் இந்த நோயை இப்படிச் சிக்கலாக்கியது யார்? அவர்கள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? சிக்கலான நோய்க்கு ஏன் ஒரு பன்னாட்டு நிறுவனம் மட்டுமே மருந்து தயாரிக்க வேண்டும்? ஏன் அவர்களே விலையை நிர்ணயிக்க வேண்டும்?

இரண்டு நாட்கள் கழித்து பழனிச்சாமி வீட்டிலேயே இறந்து போன செய்தி வந்தது.

பத்துநாள் கழித்து கருமாதிப் பத்திரிகை கொடுக்க சிலர் வந்தனர். அவர்களில் ஒருவர் என்னிடம் ‘பழனிச்சாமிக்கு என்ன வியாதி சார்’ என்றார்.

நான் அவர் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் விட்டுவிட்டேன்.

பின்குறிப்பு : டைபாய்டு நோய்க்கு மருந்தாகும் ‘குளோரோம்பினிகால்’ எனும் மருந்து ஏனோ பலனளிக்காத நிலையில், ஒரு சில பன்னாட்டு நிறுவனங்கள் மாற்றாக ‘சிப்ரோபிளாக்சசின்’ மருந்தினைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தின. அறிமுகமாகும் முதல் 5 ஆண்டுகளுக்கு (‘காட்’ ஒப்பந்தத்திற்கு முந்திய நிலை) காப்புரிமை உண்டு என்பதால் மிக அதிக விலையில் விற்று கொள்ளை லாபம் அடித்தனர். இச்சம்பவம் நடந்து 10 அல்லது 15 ஆண்டுகள் ஆகியிருக்கும்.(தற்போது 30 ஆண்டுகள்) அப்போது இம்மருந்து வாங்க இயலாமல், அந்நோய்க்குப் பலியான ஏழைக் கூலி விவசாயி ஒருவரின் கதை இது.

– சிவசுப்ரமணிய ஜெயசேகர், மருத்துவர்
________________________________
புதிய கலாச்சாரம், பிப்ரவரி 2000
________________________________

  1. Interesting article. The resistance of a bacteria (like typhoid) to a particular medicine occurs over a period of time. Chloramphenicol was used between 1948 – 1970s. After that bacteria become resistant to that medicine. In 1980s Fluoroquinolones were acting against MDR(Multi Drug Resistant) typhoid. Now third-generation cephalosporins are being used.

    Using this resistant nature of bacteria to a particular drug over a period of time, medical companies get profit by introducing new drugs and selling them at high costs. The story pictures that fact.

    Any way out?

  2. இந்த பதிப்பு ஏன் மருந்து நிறுவனங்களை இங்கு குற்றவாளியாக காட்டுகிறது?

    //டைபாய்டு நோய்க்கு மருந்தாகும் ‘குளோரோம்பினிகால்’ எனும் மருந்து ஏனோ பலனளிக்காத நிலையில், ஒரு சில பன்னாட்டு நிறுவனங்கள் மாற்றாக ‘சிப்ரோபிளாக்சசின்’ மருந்தினைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தின.//

    இங்கு இந்த பித்தலாட்டம் ஏன்? முன்பு இருந்த மருந்து ஏனோ பயனளிக்காமல் போனது என்ற கண் பூசு வார்த்தை ஏன்? மருந்துகள் உபயோகம் பரவ, பரவ கிருமிகள் அதை எதிர்த்து சமாளிக்கும் விதத்தில் மாற்றம் அடைவது இயற்கை தானே? பெனிசிலின் கண்டு பிடித்த காலத்துக்கு முன்பே ஒரு சில பக்டீரியா கிருமிகள் பெனிசில்லின் மருந்துக்கு எதிர்ப்பு தன்மை கொண்டிருந்தன. கிருமிகள் மாறும் போது அவற்றை எதிர்க்க புதிய புதிய மருந்துகள் கண்டுபிடிக்க ஆராய்ச்சி செய்து மருந்துகள் கண்டுபிடிப்பது தானே நடைமுறை. இப்போதுள்ள கிருமி கொல்லிகள் ஒரு வழி தாக்கு மட்டும் இருந்தால் வீரியம் போதவில்லை என்று பல முனை தாக்குதல் உள்ள மருந்துகள் வரை வந்து விட்டோம். இவை எல்லாம் ஒரு அறுபது ஆண்டுகளில் நடந்தவை. முதலில் இயற்கையாக இருந்த கொல்லிகள் அவற்றின் மாற்றம் உபயோகித்து வந்த நாம் இன்று செயற்கை முறை கொல்லிகள் மட்டுமே வேலை செய்யும் அளவுக்கு இருக்கிறோம். இவை எல்லாவற்றுக்கும் காரணம் என்ன மருந்து நிறுவனங்களா? அவை தான் இந்த கிருமிகள் இவ்வளவு வேகமாக மாறுதல் அடைய காரணம் பாருங்கள். broad spectrum antibiotic மருந்துகளை ஒரு சிறு காய்ச்சல், இருமலுக்கு கூட பரிந்துரை செய்து மொத்த பக்டீரியா குடும்பங்கள் அவற்றுக்கு எதிர்ப்பு தன்மை வர செய்ததில் மருத்துவர்களுக்கு சிறு பங்களிப்பு கூட இல்லை பாருங்கள். எல்லாம் இந்த பன்னாட்டு மருந்து கம்பெனியின் சதி.

    //அறிமுகமாகும் முதல் 5 ஆண்டுகளுக்கு (‘காட்’ ஒப்பந்தத்திற்கு முந்திய நிலை) காப்புரிமை உண்டு என்பதால் மிக அதிக விலையில் விற்று கொள்ளை லாபம் அடித்தனர். இச்சம்பவம் நடந்து 10 அல்லது 15 ஆண்டுகள் ஆகியிருக்கும்.(தற்போது 30 ஆண்டுகள்) //

    இதற்க்கு வேறு வழியே இல்லை பாருங்கள். தன் நிறுவன பணத்தில் பில்லியன் கணக்கில் செலவு செய்து மருந்து தயாரித்து விற்பவன் எல்லாம் கொள்ளை அடிக்க மட்டுமே செய்கிறான். இதில் அவனுக்கு காப்புரிமை இருந்தது அந்த மாத்திரை/IV தயாரிக்கும் விதத்துக்கு மட்டுமே அந்த மருந்தில் இருக்கும் பொருள்களுக்கோ, ரசாயனதுக்கோ இல்லை என்பதை இங்கு நாம் வசதியாக மறைத்து விடலாம். அந்த மருந்தில் என்ன இருக்கிறது என்று பதுக்கி கொண்டு அவன் கொள்ளை விலைக்கு விற்பதை போல நாம் பிம்பமும் உருவாக்கலாம். ஏனென்றால் பல வருட உழைப்பு, உலகில் இருக்கும் மிக முக்கிய நோய்க்கு தீர்வு கண்டுபிடித்தது ஆகியவற்றை சுலபமாக மறந்து, அவன் தன் கண்டுபிடிப்புக்கு விலை நிர்ணயம் செய்கிறான் என்ற ஒரே காரணத்துக்காக அவன் தான் குற்றவாளி.

    அந்த மூல பொருள் தயாரிக்கும் முறை தெரிந்து விட்டால் யார் வேண்டுமானாலும் அதை தயாரிக்கலாம்(அரசாங்கம் உட்பட) என்பது இங்கு நமக்கு தேவை இல்லை; அந்த மூல கூறுகளை பல வருடம், மிக பெரும் தொகை செய்து அவன் கண்டுபிடித்ததை வேலையே செய்யாமல் reverse engineering செய்து நாம் கண்டுபிடித்து விடலாம். முறை கொஞ்சம் மாறுபட்டால் போதும். அவனுடைய ஆராய்ச்சி முதலீடு, வருடக்கணக்கில் உழைப்பு, பல தோற்ற வழிமுறைகளால் சோர்வடையாமல் அந்த மருந்தை பல கட்ட பரிசோதனை செய்து, பக்க விளைவுகள் ஆய்வு செய்து, அதன் பயனை நிரூபித்து உலகுக்கு கொண்டு வந்தது போன்ற எந்த தொல்லையும் இல்லாமல் வெறும் manufacturing cost மட்டும் நாம் முதலீடு செய்து நாம் தயாரித்து கொள்ளலாம். தவரே இல்லை. அதற்க்கு அந்த நிறுவனத்துக்கு அவன் ஆராய்ச்சி செய்த பணத்தில் ஒரு பங்கை கூட நாம் திருப்பி தர வேண்டியது இல்லை. ஆனால் இது எல்லாம் நடப்பதற்கு முன்பு அவன் போட்ட பணத்தை எடுத்து விட வேண்டும் என்று அவன் விலை நிர்ணயம் செய்தால், உலக குற்றவாளி அவன்.

    ஒரு நிறுவனம் மீது இவ்வளவு குற்றம் கூறும் நீங்கள் ஏன் அரசாங்கம் இதற்க்கு எதுவும் செய்யாதது பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை? மருந்தை subsidized விலையில் இந்தியாவில் விற்க சொல்லலாம், வேறு ஒரு நிறுவனத்துக்கு டெக்னாலஜி transfer செய்ய சொல்லி ஒப்பந்தம் செய்யலாம், இல்லையா சிறந்த ஆராய்ச்சி நிறுவனங்களை உருவாக்கலாம் அல்லது அவற்றில் முதலீடு செய்யலாம். வழியா இல்லை? இதை எல்லாம் விட்டு விட்டு தீர்வை கண்டுபிடித்த நிறுவனத்தை குற்றவாளி என கூறுவது ஏன்?

    • Ganesh,

      //அரசாங்கம் இதற்க்கு எதுவும் செய்யாதது பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை?//

      நாங்கள் அரசாங்கம் தான் இதை செய்ய வேண்டும் என்கிறோம். அதாவது இந்த ஆராய்ச்சி etc எல்லாம் பொதுவில் நடக்க வேண்டும் என்கிறோம். இது புரிவது கடினம் தான். முயற்சியுங்கள். நானும் உதவ முயற்சிக்கிறேன்.

      பொதுவில் நடந்தால் ஒரே மருந்தை பல கம்பெனிகள் கண்டுபிடிக்க முயன்று முயற்சி வீணாக்கப்படுவது தவிர்க்க்ப்படுமில்லையா.

      • //பொதுவில் நடந்தால் ஒரே மருந்தை பல கம்பெனிகள் கண்டுபிடிக்க முயன்று முயற்சி வீணாக்கப்படுவது தவிர்க்க்ப்படுமில்லையா.//

        ஒரே மருந்து என்றால் எதன் அடிப்படையில் அய்யா? ஒரு நோய்க்கு பல மருந்துகள் இருக்க காரணம் பல உண்டு. antibiotic மருந்துகள் என்று எடுத்து கொண்டாலும் எத்தனை வகை இருக்கிறது தெரியுமா? அந்த மருந்து செய்ய வேண்டிய வேலை (Narrow/broad spectrum), bacterial resistance, targeting, area of infection, number of infection being treated என பல பிரிவு உள்ளது. ஒரு மருந்தை வைத்து கொண்டு எல்லா bacetria நோய்க்கும் தீர்வு தர முடியாது. ஒரே நோயாக இருந்தாலும் அந்த கிருமி எந்த வகை எதிர்ப்பை பெற்றுள்ளது என்பதை பொருத்து மருந்துகள் மாறும். ஒரே ரசாயனம் இருந்தாலும் அந்த molecule எவ்வாறு இருக்கிறது என்பதை பொருத்து மருந்தின் தன்மை மாறும். பலவகை பக்டீரியா பல வகையில் மருந்தை எதிர்க்கும் சக்தி பெரும்.

        இதே சிப்ரோ மருந்து கடந்த இருபது ஆண்டுகளாக MDR Typhoid நோய்க்கு பயன்படுத்தபடும் மருந்து. வயிற்று போக்கு வந்தால் இன்றும் முதலில் பரிந்துரைக்கப்படும் மருந்தில் ஒன்றாக இருக்கிறது. இது வேலை செய்வது DNA பிரிவை தடுபதன் மூலம். இன்று இது வேலை செய்யாமல் போனால் Typhoid மருந்தாக தர படுவது Azithromycin. இந்த மருந்து முதலில் எதற்கு கண்டுபிடிக்க பட்டது தெரியுமா? கண் நோய்களை மருத்துவம் செய்ய. இது செயல்படும் முறை அந்த பக்டீரியா ப்ரோடீன் தயாரிப்பதை தடுபதன் மூலம். இதே முறையில் தான் முதல் மருந்தான Chloramphenicol வேலை செய்தது. இரண்டும் ஒரே முறையில் வேலை செய்தாலும் அதில் உள்ள ரசாயனம் முற்றிலும் வேறு. அதற்க்கு எதிர்ப்பு தன்மை வந்ததால் தான் cipro மருந்துக்கே வந்தோம். கண் நோயை குணபடுத்தும் மருந்தின் புதிய Chemical Structure, Targetting, Mode of Action ஆகியவற்றை எப்படி தாங்கள் மருந்துகளில் புகுத்தலாம் என்று முயன்று தான் முன்பு எதிர்ப்பு தன்மை கொண்ட வேலை செய்யும் முறை இப்போது பலன் அளிக்கிறது.

        பல மருந்துகள், பல ஆராய்ச்சிகள் இருப்பதன் மிக பெரிய பலன் இது. புதிய மருந்து அல்லது புதிய மருந்து செயல்படும் முறை போன்றவை வரும்போது இருக்கும் மருந்துகள் மாற்றம் செய்யப்பட்டு வேறு நோய்களுக்கும் எதிராக பலன் தரும் வகையில் மாறுதல் அடையும். இங்கு ஒரே மருந்தை பல கம்பனிகள் கண்டுபிடிக்க முயல்வது நடக்கும் விஷயம் தான். ஆனால் அவை எல்லா விதத்திலும் ஒன்றாக இருப்பது இல்லை. இடத்துக்கு இடம் கிருமிகளும், மனிதரும் மாறுபடும் போது ஒரே நோயை தீர்க்க பல விதங்களில் வேலை செய்யும் மருந்துகள் நமக்கு தேவை. There is no one medicine that can cure a disease irrespective of person, location or time. இது போர் விமானம் தயாரிப்பு போல அல்ல. Specs கொடுத்துவிட்டு Product கேட்பதற்கு.

        • Ganesh,

          நான் சொன்னது ஒரு மருந்துக்கு மட்டுமல்ல, எல்லா மருந்துகளுக்கும் பொருந்தும்.

  3. Yes, I agree with the previous post. If inventing medicine was so easy, why communist russia or china did not do it and had not given it free to all? Because it is difficult, it needs lot of effort and energy, which can only be driven by lucrative profits. If the lucrative profits were not there, then these medicines won’t be there in first place.

    • You are wrong. Most of the true innovation (including what is known in scientific circles as fundamental research) happens in public funded universities and institutions, the private players merely usurp the benefits by contracts, relationships and collaborations. This is true not just for medical research but all research (including technology). After gaining access to the innovation, the companies merely perform incremental additions and then ring fence their rights through patents and exclusivities. They also extend these by ever-greening. Not only that, they spend a lot of money on propagating ideas that “lucrative” profits are needed for the medicines to be there, and apparently they’ve been very successful.

      • சம்பவம் நடந்தப்போ சோவியத் யூனியன் உயிரோட இருந்துச்சு இல்ல சார் ? அந்த தனியார் பண்ணினிய வேலைய பண்ணி அனைவருக்கும் இலவசமாக கொடுத்து இருக்கலாமே

        • மருத்துவத்தை பொதுவில் வை என்பது ஒரு நலன்புரி அரசுக்குண்டான கடப்பாடு. அதன் மீது சிறுநீர் கழித்துவிட்டு, பன்னாட்டு கம்பெனியை சோவியத்துடன் ஒப்பிடுவதன் மூலமாக இராமன் அவர்கள் தனது எச்சகலைத் தனத்தை இங்கும் வடிக்கிறார். ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு முதலாளித்துவ நாடுகள், பன்னாட்டு கம்பெனிகளின் மருத்துவக் கொள்கைக்கு எதிராக பல்வேறு தீர்மானங்களைப் போட்டு ஒப்பாரி வைத்து அழுகின்ற பொழுது இராமன் அங்குபோய் ஏதாவது பொறுக்க முடியுமா என்று யோசிப்பதுதான் சாலச் சிறந்தது. அதைவிடுத்து ஒரு சோசலிச நாடு மருத்துவத்திற்கு என்ன செய்தது என்பதை விவாதிக்க விரும்புவாரேயானால் குறைந்தபட்சம் ஒரு முதலாளித்துவ அரசின் பிரதிநிதிக்குண்டான கவலையாவது இராமனுக்கு இருக்கவேண்டும். அதைவிடுத்து பன்னாட்டு கம்பெனிக்கு கால்கழுவுவது காறித்துப்பவும் தகுதியில்லாத இழிநிலை என்பதை இராமன் அவர்கள் உணர வேண்டும். காலனிய மைண்செட்டில் இப்படியும் ஓர் அற்பஜீவி பிழைத்திருப்பதும் நீடித்திருப்பதும் அவலமான ஒன்று!

          • Thendral,

            First you learn to write using decent / civilized language. Then you read how medical research is conducted and new drugs are invented. You are a disgrace to the blogging community.
            I don’t know how Vinavu continues to allow such language; if it doesn’t intervene it will lose its decent readers.

            • உமா சங்கர் அவர்களே!

              முதலில் தாங்கள் சிப்ரோபிளாக்சினுக்கு பின்னால் உள்ள ஆய்வுமுறையை அறிந்துகொள்ளுங்கள். ஒட்டுமொத்த சிவில் சமூகம் சார்பாக கார்ப்பேரட் அரசுகள் பொறுக்கித் தின்ற கொடூரம் புரியும். நலன்புரி அரசுகளின் இறையாண்மை மீது சிறுநீர் கழித்ததையும் அதன் சட்டங்களை மலம் துடைக்கும் காகிதங்களாக பயன்படுத்திய பன்னாட்டு கம்பெனிகளின் வரலாற்றையும் மறைத்துவிட்டு தனிநபர் நுகர்வு ஒன்றே டீசன்சி என்றும் சிவிலைசேசன் என்றும் ஐந்தறிவு சீவன் போல் வாழ்க்கையை மேற்கொள்ளும் அற்பர்கள் டீசன்சியைப் பற்றி வகுப்பெடுப்பது கடைந்தெடுத்த கருங்காலித்தனமில்லையா?

              • தென்றல் அவர்களே,

                தவறாக எடுத்து கொள்ள மாட்டீர்கள் என்றால் ஒன்றை கேட்கிறேன்.
                ஒவ்வொரு பதிவிலும் மலம், சிறுநீர் என்று அள்ளி அள்ளி வீசுகிறீர்களே, தெரியாமல் தான் கேட்கிறேன், நீங்கள் கழிவறைக்குள் உட்கார்ந்து கொண்டு தான் எல்லா பதில்களையும் அளிப்பீர்களா? 🙂 எப்போதும் அந்த சிந்தனையுடனே இருக்கிறீர்கள். கொஞ்சம் வெளியே வந்து நல்ல காற்றை சுவாசிக்க பழகுங்கள். உங்களுடன் உரையாடும் நண்பர்கள் அனைவருக்கும் அது பயனுள்ளதாக இருக்கும்.

                • என்ன செய்வது கற்றது கையளவு அவர்களே! தொழிலாளர்களின் கூலி உழைப்பின் நிணத்திலும் ஊணிலும் வீச்சத்தை மணக்கிற பல குள்ள நரிகள் வாழ்கிற காலம் இது! அந்த வாசனையையே மரிக்கொழுந்து திரவியமாக சட்டையில் பூசிக்கொள்பவர்கள், முதலாளித்துவ பிரச்சாரங்களை வேள்வி கேட்பாரின்றி வாந்தியாக வழித்து உண்பவர்கள் என்று பலதரப்பட்ட தூய ஆத்துமாக்கள் வாழ்கிற இச்சமூகத்தில் சிறுநீர், மலம் போன்ற வார்த்தைகளையெல்லாம் கழிவறை சிந்தனை என்று கோமான்கள் மூக்கைப்பிடித்துக்கொண்டு எடுத்துக்காட்டத்தான் செய்வார்கள்!

                  நாம் தான் அவர்களுக்கு சுவாசிக்க கற்றுக்கொடுக்க வேண்டியிருக்கிறது! அது ஒரு புறம் இருக்கட்டும். கழிவறையில் இருந்து கொண்டு எழுதுவதுதான் உங்களுக்கு பிரச்சனையா? தொழிலாளர்களின் இரத்தக்கவுச்சி உங்களைச் சுற்றி ஒருபோதும் அடிப்பதில்லையோ?

                  நல்ல காற்றை சுவாசிப்பதன் பொருட்டு, வெளியே வர எங்களுக்கும் அவா உண்டு. அது உங்களைப்போன்ற வர்க்கத்தின் மூச்சை நிறுத்துவதில் அல்லவா இருக்கிறது?!

                  பின்குறிப்பு: நான் உரையாடுகிற அனைவரயும் நண்பராக கருதுவதில்லை.

                  • தென்றல் அவர்களே,

                    இனிய உளவாக இன்னாத கூறல் கனி இருப்ப காய் கவர்ந்தற்று.
                    சொல்ல வந்த கருத்தை நரகல் வார்த்தைகளால் அபிஷேகம் செய்த பின் தான் வாயில் இருந்து வர வேண்டிய அவசியம் இல்லை. நேரடியாக கருத்தை பகிருங்கள். உங்கள் கருத்துக்கு எதிர் கருத்து யாருக்கும் இருக்க கூடாது என்று எண்ணுவது உங்கள் முதிர்ச்சியின்மையையே காட்டுகிறது.

                    இதே வினவில் என்னோடு சேர்ந்தும் எதிர்த்தும் எத்தனையோ நண்பர்களிடம் நான் விவாதித்திருக்கிறேன். ஆனால் இதுவரை யாரையும் தரம் கெட்ட வார்த்தைகளால் பூஜித்ததில்லை.

                    நீங்கள் உரையாடுகிற அனைவரையும் நண்பராக கருதுவதில்லை. அது பரவாயில்லை.
                    ஆனால் உங்கள் கருத்தை ஏற்காத எல்லோரையும் உங்கள் விரோதியாக கருத வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் சொல்வதை தான் அடுத்தவர் ஆமாம் சாமி போட வேண்டும், மாற்று கருத்து உள்ளவர்களின் மூச்சை நிறுத்த வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கும் ஜெயலலிதாவுக்கும் ஒன்றும் வித்தியாசம் இருக்காது.

                    இடிப்பாரிலா ஏமரா மன்னான் கெடுப்பாரிலானும் கெடுவான்.
                    உங்கள் கருத்துக்கு எதிர் கருத்து உள்ளவர்கள் அனைவரின் மூச்சையும் நிறுத்தி விட்டால் அப்போது தான் நீங்கள் முழுமையாக தோற்று விட்டீர்கள் என்று அர்த்தம். உங்களை சுற்றி உள்ள சிங் சாக் ஜால்ரா கூட்டங்கள் உங்களை புகழ மட்டும் தான் செய்வார்கள். நீங்கள் செய்யும் தவறுகளை உங்களுக்கு சுட்டிக்காட்ட மாட்டார்கள்.

                    உங்கள் வார்த்தைகளில் இருக்கும் நரகலை தவிருங்கள் என்று தான் உணர்த்துகிறேன். உங்கள் கருத்துக்கு கடிவாளம் போடவில்லை.

                    கம்மியுநிசத்தை விமர்சிப்பவர்கள் முதலாளித்துவவாதிகளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் கருத்தை ஏற்காதவர்கள் உங்கள் எதிரியாக தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

                    நீங்கள் என்னை நண்பராக கருதாவிட்டால் நான் உங்கள் நண்பராக இல்லாமல் இருக்கப்போவதும் இல்லை. 🙂

                    • கற்றது கையளவு அவர்களே!

                      தங்களது பின்னூட்டம் வெறும் பாசாங்கு மட்டும! சில வர்க்கங்களின் வாழ்க்கையே நரகல் என்று சொல்லியாற்று! இதில் உள்ளவர்கள் நரகல் வார்த்தைகளைச்சுட்டிக்காட்டுவது என்பது எத்தரத்திலானது என்பதை அறியத்தாருங்கள்!

                      நான் இன்னும் சின்னமருதுவின் விடுதலை வீரமரபு அளவிற்கு போராட்டங்களையெல்லாம் நிகழ்த்திவிடவில்லை. இருந்தாலும் சின்னமருதுவின் வாசகத்தையே முன்வைக்கிறேன் “வெள்ளைக்காரனுக்காக துடிக்கிற மீசை என் அடிமயித்துக்குச் சமம்” என்றானே சின்னமருது!

                      பன்னாட்டுக்கம்பெனிக்கு சிங்குஜா அடிக்கிறவர்கள் இப்படிப்பட்டவர்கள் தான் என்றொரு விமர்சனம் வைக்கிற பொழுது அதை திட்டமிட்டு மறைப்பது ஏன்? இன்னும் காத்திரமாக உரைக்கவில்லை என்கிற அளவிற்கு வார்த்தைகள் நரகல்கள் என்கிற அளவிற்கு மட்டும் சுருக்கினால் நரகல் என்று கருதப்படுகிற வார்த்தைகளை கழற்றிவிடமுடியும். ஆனால் உங்களைப்போன்றவர்களின் அசிங்கமான நிலைப்பாட்டிற்கு என்ன பதில்?

                      இதுவரையும் யாரையும் தரங்கெட்ட வார்த்தைகளால் பூசித்ததில்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். சோசலிச உற்பத்தியில் பங்கெடுக்கிற உழைக்கிற வர்க்கத்தை கூசாமல் சோம்பறி என்றோ எங்கோ கழிந்து வைத்த நரகலை கருத்துரிமை என்ற பெயரில் அறிவு நாணயமின்றி இங்கு அப்புகிற பொழுது தெரியவில்லையா? எது நரகல் என்று!

                      கம்யுனிசத்தைத் தாங்கள் விமர்சித்ததாக சொல்லிக்கொள்கிறீர்கள். ஆனால் வைத்திருப்பவை அனைத்தும் அவதூறுகள் மட்டுமே என்பதை எடுத்துக்காட்டியிருக்கிறேன். இப்பொழுதும் கூட முயற்சித்துதான் பாருங்களேன்.

                      கம்யுனிசத்தை விமர்சிப்பவர்கள் முதலாளித்துவவாதிகளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்கிற தங்களது திருவாய், ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் பொழுது மட்டும் மூடிக்கொண்டு இருப்பது ஏன்?

                      ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பவர்கள் எல்லாம் கம்யுனிஸ்டுகள் மட்டும் தானா? அம்பலப்பட்டுபோவதில் தான் உங்களுக்கு எத்துணை களிப்பு! அதில் குறள்கள் வேறு!

                      சரி என் தரப்பிற்கு ஒன்று:

                      கண்ணிற்கு அணிகலன் கண்ணோட்டம் அஃதின்றேல்
                      புண்ணென்று கருதப் படும்.

                      இருக்கிறதா உங்களுக்கு கண்ணோட்டம் (Compassion)? இருப்பின் அது எத்தகையது? பதிவை ஒட்டி விளக்குங்களேன்.

                    • தென்றல் அவர்களின் பின்னூட்டம் 5.1.1.1.1.1.1.1.1.1 க்கு எனது பதில்:

                      தென்றல் அவர்களே,

                      தாடி வைத்தவர் எல்லாம் பெரியார் ஆகி விட முடியாது.
                      அடிமையித்துக்கு சமம் என்று கூறுவதாலேயே நீங்கள் சின்னமருது ஆகி விட மாட்டீர்கள்.

                      நேரடியாக கருத்து ரீதியாக விவாதம் செய்ய முடியாமல் நரகல் வார்த்தைகளை உபயோகிப்பதால் என்ன நன்மை கண்டீர்கள். அவ்வாறு பேசுவதால் மற்றவர்கள் விவாதத்தை தொடர மாட்டார்கள் என்ற நப்பாசை தானே. மீண்டும் சொல்கிறேன், நரகல் வார்த்தைகளையும் தனிநபர் தாக்குதலையும் நடத்த நடத்த உங்கள் வாதம் வலுவிழந்து கொண்டே போகிறது. உங்களுக்கு அது விளங்குமா, தெரியவில்லை.

                      //சோசலிச உற்பத்தியில் பங்கெடுக்கிற உழைக்கிற வர்க்கத்தை கூசாமல் சோம்பறி //
                      இது பச்சையான அவதூறு. ஐயா, உழைப்பவர்களை எப்படி சோம்பேறி என்று விமர்சிக்க முடியும்? உழைக்காமல் கார்டு அடித்து விட்டு வீட்டில் உட்கார்ந்துக்கொண்டு அரசு செலவில் ஊதியம் வாங்கி கொண்டு வெளியில் சைடு பிசினஸ் செய்து கொண்டும், கந்து வட்டி கொடுத்து கொண்டும் இருக்கும் சில அரசு ஊழியர்களை தான் அப்படி சொன்னேன். உழைக்காமல் சம்பளம் வாங்கும் எவரும் சோம்பேறிகள் தான்.
                      இதில் உழைப்பு என்று சொல்வது உடல் உழைப்பு மட்டுமல்ல. மூளை உழைப்பும் சேர்த்து தான்.

                      இன்று வரை நான் சாப்பிடுகிற உணவு என்னுடைய உழைப்பில் சம்பாதித்த காசு கொண்டு தான் சாப்பிடுகிறேன். அடுத்தவன் சம்பாதித்த காசை “நன்கொடை தாருங்கள்” என்ற எந்த வலைப்பூவையும் நம்பாமல் எமது சொந்த உழைப்பில் சம்பாதித்து சாப்பிடும் நாங்கள் எவ்வளவோ மேல்.

                      //கம்யுனிசத்தைத் தாங்கள் விமர்சித்ததாக சொல்லிக்கொள்கிறீர்கள். ஆனால் வைத்திருப்பவை அனைத்தும் அவதூறுகள் மட்டுமே என்பதை எடுத்துக்காட்டியிருக்கிறேன். //
                      உங்களுக்கும் மதகுருமார்களுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.
                      மதவாதிகள் அவர்களது மத நூல்களில் சொல்லாதவை அனைத்தும் பாவம். மத நூல்களில் உள்ளவை மட்டும் தான் உண்மை (அது எவ்வளவு அபத்தமாக இருந்தாலும்) என்று பரப்புவார்கள். நீங்களும் அப்படித்தான். உங்கள் சித்தாந்தத்தின் எல்லைக்குள் இருப்பவர்கள் அனைவரும் அப்பாவிகள். உங்கள் சித்தாந்தத்தை கேள்வி கேட்கும் அனைவரும் மகா பாவிகள். நடத்துங்கள்…

                    • சாத்தான் வேதம் ஊ[ஓ]திக்கொண்டு உள்ளது .

                      கற்றது கையளவு:
                      //சொல்ல வந்த கருத்தை நரகல் வார்த்தைகளால் அபிஷேகம் செய்த பின் தான் வாயில் இருந்து வர வேண்டிய அவசியம் இல்லை. நேரடியாக கருத்தை பகிருங்கள்.//

                      கற்றது கையளவு:
                      //
                      ஊரிலுள்ள எல்லோர் சட்டையிலும் உள்ள கறையை சுட்டிக்காட்ட தெரிந்த ஒருவருக்கு அவர் நரகலை மிதித்துக்கொண்டிருப்பது தெரியவில்லையாம். அது போல இருக்கிறது நீங்கள் சொல்வது. நீங்கள் மிதித்துகொண்டிருக்கும் நரகலை முதலில் கழுவுங்கள் என்று நான் சுட்டிக்காட்டினால் உங்களுக்கு அது தவறாக தெரிகிறது.
                      //

                    • உப்புமா,

                      வேதங்களென்பதே சில பல தன்னல மக்களின் பிதற்றல்கள் தான். அவற்றை சாத்தான் ஒதினால் என்ன பாத்தான் ஒதினால் என்ன. இந்த பழமொழியை முற்றிலும் தவிர்க்கவேண்டும்.

                    • எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாக ‘தாடி வைத்தவர் எல்லாம் பெரியார் ஆகிவிட முடியாது’ ‘அடிமையித்து சமம் என்று கூறுவதாலேயே ஒருவர் சின்னமருது ஆகிவிடமுடியாது என்கிறார் கற்றது கையளவு. சின்னமருது மற்றும் தந்தை பெரியாரின் போராட்ட குணங்களை கற்றுக்கொள்ளும் பொருட்டு க.கையின் இக்கருத்தை ஏற்றுக்கொள்வோம். அப்படியானால் சின்னமருது சொல்கிற படி இராமனும், கற்றது கையளவும், உமா சங்கரும் வெள்ளையனுக்காக துடிக்கிற அடிமயிரைத்தானே பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். இப்பொழுதுதாவது காலினியபுத்தியைக் கொண்டிருக்கிற ஏகாதிபத்தியத்தை அடிவருடுகிற நரகல் வர்க்கங்களின் வாழ்க்கைப் பிடிபடுகிறதா க.கை? பிறகு எதன் அடிப்படையில் நரகல் கருத்துக்கள் என்று உங்களைப்போன்றவர்கள் பாசாங்கு காட்ட வேண்டும்? சின்னமருதுவின் கலகக் குரலை இராமனுக்கு புரிய வையுங்கள். தாங்களும் புரிந்துகொள்ளுங்கள்.

                • க கை,

                  இந்த நாடே நாறிக்கிடக்கிறது. வீதிகளில் உள்ள கால்வாய்களில் எல்லாவித கழிவுகளைக் கொட்டி அவை அழுகி நாற்றமெடுக்கிறது. வீதிகளின், குப்பைத்தொட்டிகளின் கூவம்களின், நிலை சொல்லவே வேண்டாமென்றாலும் உங்களிடம் சொல்லியே வைக்கிறேன். நாற்றம் எல்லா எல்லையையும் மிஞ்சிவிட்டிருக்கிறது.

                  சிறிது மழை பெய்தாலும் தொடர்வண்டிகளில் பேருந்துகளில் கண்ணாடியால் அடைக்கப்பட்ட பெட்டிகளைத்தவிர மற்றவற்றில் பயணம் செய்யும் போது இந்த நாடு எப்படி நாறுகிறது என்பதை முகரும் திறனை இன்னும் சிறிதேனும் வைத்திருப்பவர்கள் அறிவார்கள். எந்த ஊரையும் அனுகும் போதும் விலகும் போது வரவேற்பது விடைகொடுப்பது சாலையோரங்களில் மூட்டைமூட்டையாக கொட்டப்பட்ட இறைச்சிக் கழிவுகளின் நாற்றம்தான்.

                  இவ்வளவு நாற்றத்திலிருந்தும் சிறிது நேரம் விடுதலை பெறுவது நான் கழிப்பிடத்தில் இருக்கும் போதுதான்.

                  • சரி pk, அங்கேயே நாட்கணக்கில் உள்ளே இருங்கள்.
                    மறக்காமல் அந்த ஜால்ராவையும் கூட எடுத்து செல்லுங்கள்.

                  • pk,

                    இது தான் உங்கள் விருப்பம் என்றால் நாங்கள் யாரும் அதற்கு தடையாக இருக்க மாட்டோம்.

                    மறக்காமல் அந்த ஜால்ராவையும் கையோடு எடுத்து செல்லுங்கள். உங்களுக்கு உதவும்.

                    • உப்புமா அவர்களின் பின்னூட்டம் 5.1.1.1.1.1.1.1.1.3 க்கு பதில்:

                      உப்புமா,

                      அதே கட்டுரை பக்கத்தில் பின்னூட்டம் 17.1.1 இல் தாங்கள் சொன்ன கீழ்கண்ட கருத்துக்கான பதில் அது.

                      //உங்கள் சட்டையில் காக்காய் பீ பேண்டுவிட்டது என்ற உண்மையை நான் சுட்டிகாட்டினால் உடனே நீங்கள் என் சட்டையிலும் காக்கை பீ இருக்கின்றதா என்று தேடுவீர்களா என்ன ? //

                      நீங்களே ஆரம்பித்து இப்போது ஒன்றும் தெரியாத பாப்பாவாக எவ்வளவு அப்பாவியாக நடிக்கிறீர்கள். 🙂

                      தென்றலுக்கு ஜால்ரா தட்டுவதில் univerbuddy/pk வை விட மிஞ்சி விட்டீர்கள். யார் கண்டது, நீங்களும் pk வும் ஒரே நபராகவும் இருக்கலாம். வினவில் ஒரே நபர் பல பெயர்களில் பின்னூட்டம் அளிப்பது ஒன்றும் புதிதல்ல. செந்தில்குமரன் சார், நீங்கள் ஆரம்பித்து வைத்தது, இப்போது அளாளுக்கு செயல்படுத்துகிறார்கள்.

                      மீண்டும் மீண்டும் மூக்குடைபட்டும் உப்புமா திருந்த மாட்டாரப்பா.

                    • என்ன க[க்]கை ,

                      அடுத்தவரை பார்த்து நரகலாக பேசாதிங்க என்று அறிவுரை கூறும் போது அது அந்த அறிவுரை உமக்கும் பொருந்துமா பொருந்தாதா ?காக்கா சட்டையில் பீ பேளுவது எல்லாம் எல்லாருக்கும் நிகழ்வது தான். எனவே அதனை சிங்கபூர் அவலங்களுக்கு உதாரணமாக காட்டினேன். உடனே நீங்க நரகலை பற்றி பேச தொடங்கிட்டு தென்றலுக்கு மட்டும் அந்த வாய்ப்பை, அப்படி பேசுவதை தவறு என்று கூறி சாத்தான் போன்று வேதம் ஊதுவது ஏன் ? நீங்கள் உபதேசிக்கும் கனி-காய் அறிவுரையெல்லாம் உங்களுக்கு பொருந்தாதாதாதாதாதா ?

                    • உப்புமா அவர்களின் பின்னூட்டம் 5.1.1.1.1.1.1.2.2.2 க்கு பதில்:

                      உப்புமா அவர்களே,

                      காக்காய் பற்றி பேசியதே நீங்கள் தானே.
                      உங்கள் கருத்தை உங்களுக்கே சொல்லக்கூடாதா?
                      நரகலை சட்டையில் இருப்பதாக நீங்கள் கூறுனீர்கள்.
                      அதையே காலில் மிதித்து விட்டதாக நான் கூறினேன்.
                      என்ன வித்தியாசம் கண்டீர்?

                      காலில் மிதித்து விட்டீர்கள், சுத்தப்படுத்தி கொள்ளுங்கள் என்று தானே சொன்னேன். இதில் என்ன அசிங்கத்தை கண்டு விட்டீர்கள்?

                      அவ்வளவு அசிங்கம் பார்ப்பவர் என்றால் நீங்கள் முதலில் நண்பர் தென்றலிடம் அல்லவா இதை பற்றி பேசி இருக்க வேண்டும்? அங்கு வாய் திறக்க மாட்டீர்கள்.

                    • க கை,

                      நான் சுட்டிக்காட்டிய நாற்றத்தைப் பற்றி உங்களுக்கு கூறுவதற்கு ஒன்றும் இல்லை என்பதில் எனக்கு ஆச்சரியமில்லை. நீங்கள் இந்நாட்டின் நாற்றத்திற்குப் பழகிவிட்டவர்களில் ஒருவர். ஆனால் என்னால் இதை சகிக்கவே முடியவில்லை. இது இப்படியே விட்டுவிடப்படாமல் சரிசெய்யப்படவேண்டும். இதற்கு முன் நிபந்தனையாக எளிய மக்களுக்கு அடிப்படை வாழ்க்கைத்தேவைகள் உறுதிப்படுத்தப் படவேண்டும், அவர்களின் மீது நடத்தப்படும் அத்துமீறல்கள் தடுக்கப்படவேண்டும் மற்றும் சுரண்டும் வர்க்கத்தின் சுரண்டல்களுக்கும், ஆடம்பரங்களுக்கும், வீண்விரயங்களுக்கும் வாய்ப்பில்லாமல் செய்யப்படவேண்டும்.

                      அதனால் தான் நான் களத்தில் இறங்கி நாற்றத்தில் வேலைசெய்கிறேன்.

                      தென்றல், சிவப்பு, தமிழ், UB, போன்றவர்கள் உங்களுக்கு கடந்த ஒரு வருடமாக சொன்னவற்றை இருபது வருடத்திற்கு முன்பு எனக்கு யாரேனும் சொல்லியிருந்தால் அப்போதே எனக்குப் புரிந்திருக்கும், களத்தில் குதித்திருப்பேன்.

                    • க கை,

                      வினவில் புரட்சிக்காக குரல் கொடுக்கும் தென்றல் சிவப்பு UB pk உப்புமா அருள் எல்லோரும் ஒரே ஆள் தான். எனக்கு இது தான் முழுநேரவேலை. இப்போது சந்தோசமா.

                      ஆனால் அதியமான், ராமன், க கை, U S, போன்றவர்கள் வேறு வேறு நபர்கள் என்பது உறுதிதானே?.

                    • என்ன க[க்]கை ,

                      என் கேள்வியென்னவென்றால் நரகலை பற்றி பேசாதீர் என்றும் , கானியிருப்ப காயெதர்க்கு என்றும் அறிவுரை கூறி எங்களை எல்லாம் ஆற்றுபடுத்திய கா க மு க நரகல் சித்தர் அவர்களாகிய தாங்கள் மட்டும் நரகலை பற்றி சுவாரசியமாக என்னுடன் “உங்கள் சுய அறிவுரைகளை” மறந்து ,மதியாது ,மிதித்து பேசுவது ஏன் ? நாங்கள் அதாவது நரகலை பற்றி பேசும் தென்றல் ,உப்புமா ,ஆகியவர்கலாவது தொழிலாள தற்குறிகள் அதனால் முதலாளிகளின் அழும்புகளை ,அட்டுழியங்களை ஒப்புமை படுத்த நரகலை பற்றி பேசிவிட்டோம். ஆனால் நரகலை பற்றி பேசாதீர் என்று நீங்கள் கூறிக்கொண்டே அதனை பற்றி ரசிது பேசலாமா கா க மு க நரகல் சித்தர் கற்றது கையளவு அவர்களே ?

              • மருத்துவத்தை பொதுவில் வைக்கும் வரை ஜிஎஸ்கே தயாரிப்பான ஆர்லிக்ஸையும் பூஸ்டையும் பருகுவதில்லை யாரவது ஒருவரை மருத்துவமனையில் பார்க்க போனால் ஆர்லிக்ஸ் கொண்டு போய் குடுப்பதை ஆதரிக்க கூடாது என்றெல்லாம் கமூனிஸ்டுகள் செய்வார்களா இல்லை காலையில் ஆர்லிக்ஸ் குடித்து விட்டு ஜிஎஸ்கே கம்பெனியை ஆதரிப்பார்களா தென்றல் அண்ணன்…

                • பி ஜோ,

                  நீங்கள் குறிப்பிட்டருக்கும் பாணங்கள் சில பல தானியமாவுகளைக்கலந்து சிறுது வாசனை, இனிப்பு, வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்ட ஏமாற்று வேலைகள்தான். இவற்றின் பரவல் விளம்பரத்தின் மூலமும் அற்பமக்களிடமிருக்கும் அதிக பொருள் கொடுத்து பருக முடிகின்ற பெருமையின் மூலமும் சாத்தியமாகியிருக்கிறது.

                  எளிய உணவே ஆரோக்கியத்தின் முதலும் கடைசியுமான தேவை. இதைப் புரிந்து கொண்டவர்கள் மட்டுமே கம்யூனிஸ்ட்டுகளாக பரிணாமமடைய முடியும் என்பது எனது துணிபு. எனவே இது போன்ற பாணங்களை பருகுவதோ அல்லது நோயாளிகளுக்கு வாங்கிக் கொடுப்பதோ கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஏற்புடையதல்ல.

                • யோசேப்பு

                  ஒரு போராட்டம் நடக்குதே! நாமளும் கலந்துக்குவோம்; வர்க்க உணர்வ வளத்துக்குவோமுன்னு இல்லாம இந்தப்பயபுள்ள பச்சபுள்ளயாட்டம் பால் பவுடருக்கு அழுகுது! அங்க புமாஇமு போராடக் கூப்புட்டு ஒரு மாமாங்கம் ஆகுதுன்னு கேள்விபட்டேன்! அங்க என்னப்பா பண்ணிக்கிட்டு இருக்க?

                  ஹார்லிக்ஸ் வளத்த கட்டும்டே! அதாவது வெளிக்கி ஒழுங்கா போகாது! பிகே சொன்னமாதிரி ஹார்லிக்சுக்குள்ள நம்ம நாட்டுல விளையற தானியங்கள், சர்க்கரை, உலகிலேயே ஒன்னாம் நம்பர் பால் உற்பத்தின்னு எல்லாமே லோக்கல் சமாச்சாரம் தான் இருக்கு!

                  இவ்வளவு இருக்கிறப்ப, ஒரு மக்கள் நல அரசு, கேவலம் தன் மக்களுக்கு பால் பவுடர் கூட கொடுக்கமாட்டியாடான்னு சட்டையப் புடுச்சி கேட்குறத விட்டுபுட்டு கம்யுனிஸ்டுகள் அலோ பண்ணுவாகாளா? மாட்டாகளான்னா? என்னப்பா அர்த்தம்?

                  அதென்ன கம்பெனி! கிளாக்சோ ஸ்மித் கிளைன் தானே! அது அடிச்சுவிரட்டி எல்லா டின்னையும் பீரியா சீக்கிரம் சப்ளை பண்ணனும்பா! இதுதான் என்னோட பதில்!

            • U S,

              தென்றல் is the PRIDE of our working community. I think you need to get accustomed to his ‘language’ soon and try to decipher his message.

              Otherwise, we would be more than happy to loose ‘decent’ readers like you, Raman, etc.

                  • அந்த ஜிங்கு சக்கா சவுண்டு கொள்கையை வைத்து வருவது என்று புரிகிறது. ஆனால் நீங்க இப்ப க.கை. க்கு போடற ஜிங்கு சக்கா சவுண்டு எதை வச்சு???

                  • அந்த ஜிங்கு சக்கா சவுண்டு கொள்கையை சார்ந்து இருப்பது. அனால் இப்போ இந்த நீங்க க.கை.க்கு அடிக்கிற ஜிங்கு சக்கா சவுண்டு எதை சார்ந்து? 🙂

                • உனிவர் புட்டி தான் பிகே வாக அவதாரம் எடுத்து இருக்கிறார நம்பவே கஸ்டமா இருக்குது திப்பு ,மன்னாறு போன்ற இசுலாமிய மதவாதிகளின் மாற்று மதத்தினரின் வெறுப்புணர்வு பேச்சுகளை அப்படியே வெளியிட்ட வினவு தளத்தார் மற்றவர்களின் கருத்தை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்ததயும் தென்றல் என்ற உன்னத கம்மூனிஸ்டு இசுலாமிய மத வாதிகளான சிலர்( திப்பு மன்னாறு) போன்றவர்களை ஆதரித்தி உளரியதயும் மறந்து விட்டு தென்றலுக்கு சீடராக மாறிப்போனார் என்று சொல்லுவது நம்புவத்ற்க்கு கடினமாக உள்ளது பொது சிவில் சட்டம் வேண்டுமா என்ற விவாதத்துல இசுலாமிய தனி நபர் சட்டங்கள் தான் சிறந்தது அதை நாங்கள் கடைபிடிபதில் என்ன தவறு என்று வாதாடிய இசுலாமிய மத மொக்கைக்ளுக்கு ஆதர்வாக தென்றலும் உனிவர் புட்டியும் எதிரெதி அணியில் இருந்து பேசியது எல்லாம் பொய்யா ஒன்னும் பிரியல அண்ணன் காகை …

                  • யோசேப்பு,

                    நண்பர் திப்பு மிகச்சிறந்த பண்பாளர்! அம்பி மற்றும் அதியமானிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். தோழர் மன்னார் அவர்கள் விசயங்களை மிக எளிமையாக விளக்கக் கூடியவர். சான்றாக நமது நண்பர் வெங்கடேசன் அவர்களுக்கு எழுதிய மறுமொழிகளை வாசிக்கலாம். இவர் பெந்தேகொஸ்தே மதவெறியை விமர்சித்து எழுதியதை தங்களிடம் கோபமாக நடந்துகொண்டதையும் ஒரு சாக்காக வைக்கிறீர்கள். அதற்கு நேரிடையாக அவரை விமர்சியுங்கள். பதில் அளிப்பார்! இசுலாமிய தனி நபர் சட்டங்கள் தான் சிறந்தது என்று வாதாடுகிறவர்களை ஆதரிப்பதல்ல நோக்கம்! மதத்தை அரசியலிருந்து பிரித்துவிட வேண்டும் என்பதில் ஒன்றிணைகிறவர்கள் இந்து வெறியர்களின் பிரச்சாரத்திற்கு ஏன் பலியாக வேண்டும்? என்பது கேள்வி. இதைத்தான் இசுலாமிய தனிநபர் சட்டங்களை ஆதரிப்பவர்களை ஆதரிக்கிறார்கள் என்று புரிந்துகொள்கிறீர்கள் என்றால் உங்களுக்குத் தோதான ஒரு முட்டுச்சந்தை உருவாக்கி கொள்கிறீர்கள் என்று கருதுகிறேன்! இதை பரிசீலியுங்கள்.

                    • //நண்பர் திப்பு மிகச்சிறந்த பண்பாளர்//ஆப்ப மற்றவர்கள் எல்லாம் ரவுடிகளா என் மதம்தான் சிறந்தது என்று சொல்லும் ஒருவரை பண்பாளர் என்று சொல்லுவது நகைப்பிற்க்குறியது அப்பிடி சொன்னீக என்றால் மோடியும் பண்பாளர்தான்…

                  • பி ஜோ,

                    இஸ்லாமியத்திற்கு எதிராக இருந்தால் கம்யூனிசத்திற்கும் எதிராக இருக்கவேண்டுமா. இது புதிதாக இருக்கிறதே. நான் என்றென்றும் தென்றல் அவர்களில் ஜால்ராவகத்தான் இருந்திருக்கிறேன். இருப்பேன்.

  4. Initially like many I also had this opinion: all the Pharmaceutical Multinational Companies are blood sucking monsters…

    Later I was engaged in a Pharma MNC (Merck) for a project; a huge team was working to develop a drug for Multiple Sclerosis. They already spent $8 billion towards development as it involved multiple approvals from different Govt agencies. May be they spent $10 billion (Rs.62,000 crores) in total.

    Now take an unbiased look at this situation. How would this company survive if they don’t get their return on their investment in 8-10 years? They also have employees just like us.

    In India, we don’t spend / invest in R&D; we also don’t have great capability, capable ones have already left (or leaving) the country. We can brag all day about our intelligence / brilliance. But end of the day, it’s a sad fact that we lack innovation.

    As per this article, India has strict laws and US companies are struggling.
    http://www.ncpa.org/pub/ib145

  5. Mr.Uma shankar,If u want to market ur pharma products in china, u need to deposit a sum of around 1 crore as Label/literature insurance….with government
    incase if anything goes wrong,after usage…the consumer get some relief from the amount the company deposited
    …in India,there is no such regulation..
    ..Delhi Dharbaar.
    …will insist that medical shop should have minimum 300 sft space…In Reality, No beggar in delhi/Haryana abide this Rule,,
    ,,hilarious comedy,Drug inspectors in other states stictly follow it…

  6. I agree Ramadoss…….

    We have worse things….

    We have doctors taking % commission on drug sales
    We have doctors working as salesmen for hospitals/labs

    No respect for prescriptions; anyone can get any medicine…

    The Govt hospitals are worse. Once I visited a Govt clinic; there were 2 lines of patients. One line was for fever, cold, soar throat. The other is for body pain. Same medicine for every patient in that line distributed by the Compounder and the doctor was missing.

    When NDTV caught a doctor for taking commission form a Pharma company, he got arrested.
    Guess why? He was a fake doctor…

    Recently PMK Vice President Shanmugasundari proved it’s not difficult to get a doctor certificate.

  7. இது போல் பல பதிவுகளை பார்க்கும் போது எனக்கு தோன்றும் ஒரே எண்ணம், இதை எழுதியவர் ஒரு 1000 ரூபாய் கொடுத்து அந்த மனிதரை காப்பாற்றி இருக்க கூடாதா?

  8. We have millions like them…….how can one man save all?
    We need to define the issue, find the root-cause, identify the challenges and find a solution. It may take 15-20 years if we start now.

  9. //மருத்துவத்தை பொதுவில் வை என்பது ஒரு நலன்புரி அரசுக்குண்டான கடப்பாடு. அதன் மீது சிறுநீர் கழித்துவிட்டு, பன்னாட்டு கம்பெனியை சோவியத்துடன் ஒப்பிடுவதன் மூலமாக இராமன் அவர்கள் தனது எச்சகலைத் தனத்தை இங்கும் வடிக்கிறார்
    பன்னாட்டு கம்பெனிக்கு கால்கழுவுவது காறித்துப்பவும் தகுதியில்லாத இழிநிலை என்பதை இராமன் அவர்கள் உணர வேண்டும். காலனிய மைண்செட்டில் இப்படியும் ஓர் அற்பஜீவி பிழைத்திருப்பதும் நீடித்திருப்பதும் அவலமான ஒன்று!//

    அருமை தென்றல் ,நாகரீகமான மொழி ! மக்களைக் காக்க கோபம் தவிர வேறு உணர்வே கிடையாது போல..

    .மறுமொழிகள் குறித்து வினவின் கொள்கை:

    •கருத்து மாறுபட்டை ஆணித்தரமாகவோ, ஏன் கோபமாகக் கூட சொல்லலாம். ஆனால் எல்லா விவாதத்திலும் கருத்தற்ற தனிநபர் தாக்குதல், வசைச்சொற்கள், அநாகரீக மொழிகளை தவிர்க்க வேண்டும்.

    வினவு தளத்தில்நகைச்சுவை இல்லை என்று இனி யாரும் சொல்ல முடியாது

  10. கற்றது கையளவு அவர்களே!

    \\இன்று வரை நான் சாப்பிடுகிற உணவு என்னுடைய உழைப்பில் சம்பாதித்த காசு கொண்டு தான் சாப்பிடுகிறேன். அடுத்தவன் சம்பாதித்த காசை “நன்கொடை தாருங்கள்” என்ற எந்த வலைப்பூவையும் நம்பாமல் எமது சொந்த உழைப்பில் சம்பாதித்து சாப்பிடும் நாங்கள் எவ்வளவோ மேல்.\\

    நீங்கள் வினவைத்தான் சுட்டுகிறீர்களா என்று தெளிவாகத் தெரியவில்லை! இருந்தாலும் இங்கு உங்களின் மனவக்கிரத்தின் பரிமாணம் வெளிப்படவேண்டிய அவசியம் இருக்கிறது. மக்கள் நல அரசில் மருத்துவத்தை இலபாத்தின் பொருட்டு தனியாருக்கு கூட்டிக்கொடுத்துவிட்டு பெசிலிட்டி என்று வியந்தோதும் இராமன் மற்றும் உங்களைப்போன்ற உழைப்பாளிகள் வாழும் இந்த சமூகத்தில் தான், இதய அறுவைச் சிகிச்சைக்கும் சிறு நீரக மாற்று அறுவைசிகிச்சைக்கும் நன்கொடை தாருங்கள் என்று உங்கள் பார்வையில் எத்தனையோ உழைத்து வாழாத சோம்பேறிகள்!!! வலைப்பூவில் விளம்பரம் தருவதையும் அறிகிறோம். இதில் புரட்சிகர இயக்கங்கள் இதற்குக் காரணமாக இருக்கும் இச்சமூகத்திற்கு அறுவைச் சிகிச்சை செய்யும் பொருட்டு நன்கொடை தாருங்கள் என்று வலைப்பூவை வைத்திருக்கிறார்கள். தனிநபர் நுகர்வுதான் வாழ்க்கை என்று கருதிவிட்ட பிழைப்புவாதிகள் இச்சமூகத்தின் ஆகக் கேடான துன்பத்திற்கு காரணமாக இருந்துவிட்டு இதய அறுவைச் சிகிச்சையாக இருந்தாலும் சமூக அறுவைச் சிகிச்சையாக இருந்தாலும் நன்கொடை தாருங்கள் என்று கேட்பவர்களை இப்படி வர்க்கசொகுசு காரணமாக தங்களின் நரகலைக் காண்பிக்கத்தான் செய்வார்கள். இப்பொழுது தெரிகிறதா அசிங்கம் யார் பக்கம் என்று? உங்களிடம் பேசினால் இன்னும் அதிகம் வரும். கங்காணிகளின் உலகம் இத்தகைய டீசன்சியைத்தான் கொண்டிருக்கிறது. அவர்கள் காட்டும் Compassion என்பது இத்தகையதுதான்!

    • கற்றது கையளவு அவர்களே

      \\இது பச்சையான அவதூறு. ஐயா, உழைப்பவர்களை எப்படி சோம்பேறி என்று விமர்சிக்க முடியும்? உழைக்காமல் கார்டு அடித்து விட்டு வீட்டில் உட்கார்ந்துக்கொண்டு அரசு செலவில் ஊதியம் வாங்கி கொண்டு வெளியில் சைடு பிசினஸ் செய்து கொண்டும், கந்து வட்டி கொடுத்து கொண்டும் இருக்கும் சில அரசு ஊழியர்களை தான் அப்படி சொன்னேன். உழைக்காமல் சம்பளம் வாங்கும் எவரும் சோம்பேறிகள் தான். இதில் உழைப்பு என்று சொல்வது உடல் உழைப்பு மட்டுமல்ல. மூளை உழைப்பும் சேர்த்து தான்.\\

      ஐயா இது அவதூறு அல்ல. தாங்கள் சுட்டிக்காட்டுவது ஐசிஎப் தொழிலாளிகள் குறித்த தங்களது சுண்ணாம்புப்பார்வை. சுண்ணாம்புப் பார்வை என்றால் தனியார்மயத்தில் முதலாளிகளின் சுரண்டலை மறைத்துவிட்டு அவர்கள் கண்ணுக்கு வெண்ணெயிட்டுவிட்டு அரசு கம்பெனி என்றாலே இப்படித்தான் என்று அவர்கள் கண்ணுக்கு சுண்ணாம்பு வைக்கிற கன்னக்கோல் வேலை. நிற்க. சோசலிச உற்பத்தி முறையில் தொழிலாளிகளை சோம்பேறிகள் என்று தாங்கள் கூறிய அவதூறு வருடம் முழுவதும் தாங்கள் எழுதிய அனைத்து மறுமொழிகளிலும் உண்டு. மிகச்சமீபத்தில் சோசலிசம் குறித்து தாங்கள் முன் வைத்த மூன்று அவதூறுகளைக்கூட தாங்கள் படிக்கலாம்.

      • ஐசிஎப் பற்றி நீங்கள் இணைய தளங்களில், பத்திரிக்கைகளில், நண்பர்கள் வாயிலாக கேள்விப்பட்டிருப்பீர்கள். ஐயா, நான் அந்த பகுதியிலேயே வாழ்ந்திருக்கிறேன். கார்டு அடித்து விட்டு வந்து வீட்டிற்கு வந்து வீட்டிற்கு வெளியே கடையை வைத்து சைடு பிசினஸ் செய்வதையும், உழைக்காமல் தாங்கள் சம்பாதித்த காசை மேலும் பெருக்க வட்டிக்கு பணம் கொடுத்து காசு சம்பாதிப்பதையும் நேரில் அருகில் இருந்து பார்த்தவன் நான். இத்தகைய போலி தொழிலாளர்களால் உண்மையான தொழிலாளர்களுக்கு தலை குனிவே.

        மீண்டும் சொல்கிறேன், உழைக்கும் தொழிலாளர்களை இன்றும் என்றும் போற்றுகிறேன்.
        இதே ஐசிஎப் தொழிற்சாலையிலும் நேர்மையாக உழைப்பவர்களை நான் எப்போதும் குறை சொல்வதில்லை.

        ஐசிஎப் யூனியன் கண்ணையா பற்றி தங்களது கருத்து என்ன என்று நான் தெரிந்து கொள்ளலாமா?
        அவர் பார்க்கும் வேலைக்கு அவருக்கு பென்ஸ் கார் எப்படி வந்தது?
        எப்போதும் காலையில் வாக்கிங் போக துணைக்கு ஒரு பாடிகார்டு.
        இதெல்லாம் யார் அப்பன் வீட்டு காசு?
        அப்பாவி தொழிலாளர்களிடம் இருந்து உறிஞ்சிய காசு.

        வெளியே தொழிலாளர்களுக்காக போராடுவதாக சொல்லிக்கொள்வோர் பங்களா மாதிரி வீட்டில் பென்ஸ் காரில் பவனி வந்து கொண்டு, பாடிகார்டோடு சுற்றி வருவதை கண்டு உங்களுக்கெல்லாம் இரத்தம் கொதிக்கவில்லையோ? இந்த காச்செல்லாம் அவர் உழைத்து வாங்கிய காசா?

        • தென்றல் அவர்களே,

          ரயில்வே SRMU கண்ணையா பற்றிய தங்களது கருத்து என்ன?
          ஒருவன் சாதாரணமாக ஒரு சிறிய கார் வாங்குவதற்கு பலவருட உழைப்பு தேவைப்படுகிறது.
          ரயில்வே யூனியன் தலைவராக பொறுப்பேற்ற உடன் பென்ஸ் கார் வாங்கும் வசதி அவருக்கு எப்படி வந்தது? பங்களா போன்ற வீடு, எப்போதும் துணைக்கு ஒரு பாடிகார்டு. இதெல்லாம் யாருடைய காசு? இத்தனை சுகங்களை ரயில்வேயில் வேலை செய்யும் மற்ற தொழிலாளர்கள் பெற முடியுமா? எப்படி மற்ற தொழிலாளிகளின் வாழ்க்கை தரத்தை விட ஒரு யூனியன் லீடரின் வாழ்க்கை தரம் இத்தனை உயர்வாக இருக்கிறது?

          சிந்தியுங்கள்.

          வயிறு வளர்ப்பது யார் என்று உங்களுக்கு தெரியும்.
          உழைக்காமல் காசு சம்பாதித்தால் அவர்களை சோம்பேறி என்று தான் சொல்ல முடியும்.
          அதனால் எல்லோரையும் ஒரே தராசில் வைத்து பார்க்க கூடாது.
          உண்மையாக உழைப்பவர்களுக்கு உயர்ந்த மரியாதை கொடுப்போம்.

          • அண்ணன் கக கண்ணையாவும் உங்கல மாறியான போலி போராளியா இருக்கலாம் இங்க கண்ணையாவ புகழ்ந்து கட்டுரை எதும் வந்ததா தெரியல வர வர உங்க உளரல் தாங்க முடியல அவர கம்மூனிஸ்டுனு இங்கன தென்றல் சொல்லவே இல்லயே

            • ஜோசப்,

              கண்ணையா போன்ற போலி யூனியன் தலைவர்களால் தொழிலாளர் யூனியன் என்பதே கொள்ளையடிப்பதற்கு ஒரு வழி என்று ஆகி விடுகிறது.

              பெயருக்கு தொழிலாளர்கள் நலன், முதலாளித்துவ எதிர்ப்பு என்று ஐசிஎப் பகுதிகளில் ஒவ்வொரு சுவரிலும் ஒவ்வொரு மரத்திலும் தட்டிகள் அமைத்து தற்புகழ்ச்சியால் அந்த ஏரியாவையே நாறடிக்கும் இந்த யூனியன் தலைவர்கள் வீட்டில் பென்ஸ் கார், பங்களா வீடு என்று வாழ்ந்து கொண்டு உண்மையில் தொழிலாளர்களின் விரோதியாக திகழ்கிறார்கள்.

              ஐசிஎப் பகுதிக்கு சென்றால் உங்களுக்கு தெரியும், இவர்களது விளம்பரம் எந்த அளவுக்கு இருக்கிறதென்று. இத்தகைய போலி போராளிகளை அடையாளம் காட்டினாலும் வினவில் அது குறித்து எந்த பதிலும் வரவில்லை. அவரை பற்றி நண்பர் தென்றலின் கருத்து என்ன என்று கேட்டேன். அதற்கு தென்றலும் மவுனம் காக்கிறார்.

              தென்றலார் என்னை ஒட்டுமொத்த தொழிலாளிகளை சோம்பேறிகள் என்று கூறியதாக அவதூறு பரப்புகிறார். உழைக்கும் தொழிலாளர்களுக்கு நான் என்றுமே விரோதி இல்லை.
              ஆனால் தொழிலாளர்களின் ஒற்றுமையை வேறு விதமாக பயன்படுத்தி வயிற்றை வளர்க்கும் கண்ணையா போன்றவர்களையும், கார்டு அடித்து விட்டு வீட்டில் சைடு பிசினஸ் செய்பவர்களையும் சோம்பேறிகள் என்று சொல்வதில் தவறே இல்லை.

              நாம் யாருக்கு வக்காலத்து வாங்குகிறோம் என்பது முக்கியம்.
              தென்றலாரின் கருத்துப்படி ஒட்டுமொத்த முதலாளிகளும் அயோக்கியர்கள்.
              ஒட்டுமொத்த தொழிலாளிகளும் அப்பாவிகள். இது தான் அவரது கருத்து.
              ஆனால் உண்மையில் தொழிலாளிகளின் நலன் மேல் அக்கறை கொண்டுள்ள முதலாளிகளும் உள்ளனர், தொழிலாளிகளின் தோழன் என்று வெளியே சொல்லிக்கொண்டு அவர்களிடமிருந்தே கொள்ளையடிக்கும் கூட்டமும் உண்டு. இதனை தென்றல் அவர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்.

              • \\நாம் யாருக்கு வக்காலத்து வாங்குகிறோம் என்பது முக்கியம்.
                தென்றலாரின் கருத்துப்படி ஒட்டுமொத்த முதலாளிகளும் அயோக்கியர்கள்.
                ஒட்டுமொத்த தொழிலாளிகளும் அப்பாவிகள். இது தான் அவரது கருத்து.
                ஆனால் உண்மையில் தொழிலாளிகளின் நலன் மேல் அக்கறை கொண்டுள்ள முதலாளிகளும் உள்ளனர், தொழிலாளிகளின் தோழன் என்று வெளியே சொல்லிக்கொண்டு அவர்களிடமிருந்தே கொள்ளையடிக்கும் கூட்டமும் உண்டு. இதனை தென்றல் அவர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்.\\

                ஒரு நல்ல மனிதன் முதலாளியாக இருக்க முடியாது. ஒரு முதலாளி நல்லவனாக இருக்க முடியாது. இதைக் கூறியவர் கம்யுனிஸ்டு அல்ல. அண்ணல் அம்பேத்கர் அவர்கள்.

                இப்பொழுது க.கையின் விசயத்திற்கு வருவோம். தொழிலாளிகளின் நலன் மேல் அக்கறை கொண்டுள்ள முதலாளிகளும் உள்ளனர் என்று சொல்கின்ற இவர், ராபர் ஓவனை எப்படி மதிப்பிட்டார்? அவரிடம் இருப்பது ஒருவகையில் மாமனார் வீட்டுச் சொத்து; அதைச் செலவழிப்பதில் அவருக்கென்ன வந்துவிடப்போகிறது என்ற பாணியில் தானே இருந்தது? தொழிலாளி மேல் அக்கறை கொண்டிருந்த முதலாளியின் மீதான அக்கறை க.கைக்கு இப்படி இருந்தால் தொழிலாளிகளின் நலன் மேல் அக்கறை கொண்டுள்ள முதலாளிகளும் இருக்கின்றனர் என்பது எத்துணை பாசாங்கு?

                மஸ்தூர் யுனியன் இந்துத்துவ காலிகள் நிரம்பியிருக்கிற இடம்! காலையில் தினந்தோறும் தொழிலாளிகளை பிரேயர் பண்ணச்சொல்லி வாட்டிவதைப்பில் இருந்து தெரியவில்லையா? கண்ணையா யாரென்று? icfஇல் பாதி க.கை ஆதரிக்கிற தனியாருக்குத் தாரை வார்த்ததில் க.கை மகிழ்ந்திருக்க வேண்டுமில்லையா? தனியாருக்கு வழிவகுத்த கண்ணையாவைக் கண்டு உண்மையில் மனம் மகிழ்கிற இவர் எதன் அடிப்படையில் கண்ணையாவைத் திட்டுகிறார் என்று தெரியவில்லையே?

                • தென்றல் அவர்களே,

                  ராபர்ட் ஓவன் பற்றி எனக்கு பெருமதிப்பு உண்டு. அதே கட்டுரையில் எனது பின்னூட்டங்கள் அனைத்தையும் படித்தால் அது தங்களுக்கு விளங்கும். நான் ஏன் அவரது வருவாயின் மூலத்தை பற்றி கேட்டேன் என்று புரிந்து கொள்ளுங்கள். அவரது நோக்கம் உயரியது. அதற்கு அவர் மாமனாரின் சொத்தை பயன்படுத்தி ஒரு மாடல் கம்மியுனிச அமைப்பை நிறுவ முயற்சித்தார். அதுவும் தவறில்லை. நோக்கம் சரியாக இருக்கும் பட்சத்தில் மாமனாரின் சொத்தை அவர் மூலதனமாக போட்டு அந்த கம்மியுனிச மாடல் அமைப்பை தொடங்கியதில் தவறில்லை. என்னுடைய கேள்வி ஏன் அவரது முயற்சி தொடர்ந்து வெற்றிகரமாக நடக்கவில்லை. மீண்டும் எனது பின்னூட்டங்களை படித்து பாருங்கள். Sustainability மிகவும் முக்கியம். எரியும் விளக்கு என்பது தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தால் அது அனைவருக்கும் பயன் தரும். ஏற்றிய சில நிமிடங்களில் விளக்கு அணையும் பட்சத்தில் அந்த விளக்கு அணையாமல் இருக்க என்ன வழி என்று யோசிக்க வேண்டும். சதி, சூழ்ச்சி என்ற ஒற்றை பரிணாம வரியில் இந்த முயற்சியின் தோல்வியை அடக்க முடியாது தென்றல். அப்படி சூழ்ச்சி தான் ரசியாவில், சீனாவில் கம்மியுநிசத்தின் தோல்விக்கு காரணம் என்றால் பொதுமக்கள் இந்நேரம் தெருவுக்கு திரண்டு வந்து போராடி, அவர்களின் வாழ்வை சிறக்க வைக்கும் கம்மியுனிசம் மீண்டும் நிறுவப்பட வேண்டும் என்று குவிந்திருப்பார்களே? சற்று உங்களது ஈகோவை இறக்கி வைத்து விட்டு பொறுமையாக, நேர்மையாக யோசியுங்கள். ஏன் ரசியாவில் சாமானிய மக்களுக்கு, அங்கிருக்கும் உழைக்கும் தொழிலாளிகளுக்கு இன்றைய காலகட்டத்தில் புரட்சியின் மேல் ஈடுபாடு தோன்றவில்லை?

                  தென்றல் அவர்களே, நீங்கள் அந்த விளக்கு முதலாளிகளின் சூழ்ச்சி/சதியால் ஊதி அணைக்கப்பட்டது என்று சொல்கிறீர்கள். ஆனால் உண்மையில், எண்ணை தீர்ந்து போனதால் விளக்கு அணைந்தது. இது என் வாதம். தவறிருந்தால் திருத்துங்கள். ஆக்கபூர்வமான விவாதத்தில் பங்கு கொள்வதில் எனக்கு தயக்கம் இல்லை. தனிநபர் தாக்குதல், தேவையற்ற அசிங்கமான உவமானங்களை தவிர்த்து விவாதித்தால் படிக்கும் அனைவருக்கும் நன்றாக இருக்கும். புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

                  கண்ணையாவை கண்டு நான் ஏன் மகிழ வேண்டும். உழைக்கும் தொழிலாளிகளின் ஒற்றுமையை தன் தனியொருவனது வயிறு வளர்ப்பதற்கும் பென்ஸ் கார் வாங்குவதற்கும் பயன்படுத்திய ஒரு மனிதனை பற்றி நான் ஏன் மகிழ வேண்டும்?

          • அட அறிவிலியே , SRMU கன்னையா என்ன , புரச்சிகர இயக்கத்தை சேர்ந்தவரா ? பிஜேபி ,காங்கிரஸ் தொழில்சங்கங்கள் போன்று அவரும் தனித்து இயங்குகின்றார் . புரச்சிகர இயக்கத்தை சார்ந்த தொழில் சங்கங்கள் மீது குற்றசாட்டுகளை வைக்க இயலாத அறிவிலி, வினவு வாசகர் கவனத்தை திசைதிருப்ப பிழைப்புவாதி கன்னையா அழைத்து வந்து சிந்து பாடுவதேன் ?

    • கற்றது கையளவு அவர்களே!

      எனது முந்தைய பின்னூட்டத்தில் உள்ள இருகேள்விகளுக்கு கள்ள மவுனம் சாதிக்கிறீர்கள். இந்த இரண்டு கேள்விகளுக்கு பதிலிருப்பதன் மூலமாக மவுனத்தைக் கலைத்து குதிருக்குள் இருந்து வெளியே வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

      1. கம்யுனிசத்தை விமர்சிப்பவர்கள் முதலாளித்துவவாதிகளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்கிற தங்களது திருவாய், ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் பொழுது மட்டும் மூடிக்கொண்டு இருப்பது ஏன்?

      2. ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பவர்கள் எல்லாம் கம்யுனிஸ்டுகள் மட்டும் தானா?

      மறுகாலனியாக்க கொள்கைகளை அமல்படுத்தியன் வாயிலாக நாடு நரகலாகிப்போனதன் அம்சங்களை சிப்ரோபிளாக்சின் எடுத்துக்காட்டுகிறது. இந்த கேள்விகளுக்கு பதில் அளிப்பதன் மூலமாக பல்வேறு வர்க்கங்களின் முகவரியை அடையாளம் காணலாம். முயற்சி செய்யவும்.

      • மக்களை சுரண்டும் ஏகாதிபத்தியத்திற்கு நான் என்றுமே எதிரி தான்.
        என் பின்னூட்டங்களை நிதானமாக படித்திருந்தீர்கள் என்றால் பல இடங்களில் அரசு செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி கொண்டு தான் இருக்கிறேன் என்று புரியும்.

        ஆனால் நீங்கள் தான் கம்மியுநிசத்தை விமர்சிப்பவர்கள் முழுமுதல் முதலாளித்துவவாதிகளாக தான் இருக்க வேண்டும் என்ற தவறான அனுமானத்தில் இருக்கிறீர்கள்.

        ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பவர்கள் கம்மியுநிஸ்ட்களாக மட்டும் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எங்களை போன்ற பொதுமக்களாகவும் இருக்கலாம்.

    • தென்றல்,

      இதய அறுவை சிகிச்சைக்கும் சிறுநீரக மாற்று சிகிச்சைக்கும் அளிக்கும் காசும் வினவுக்கு அளிக்கும் நன்கொடையும் ஒன்றா?

      அது போன்ற நற்செயல்களால் உயிர்கள் காப்ப்பாற்றப்படுள்ளன.
      உங்களுக்கு கொடுக்கும் நன்கொடையால் உங்கள் தனிப்பட்டவர்கள் வயிறு வளர்த்ததை தவிர வேறு பயன் கண்டதாக நான் அறியவில்லை.

      சும்மா புரட்சி புரட்சி என்று போலி கோஷங்களை கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றுகின்றீர்கள் தென்றல். உங்கள் புரட்சி எப்போது வரும், எப்படி வரும் என்று பலமுறை கேட்டும் அதற்கு பதிலை காணோம். உங்களுக்கு மக்கள் வருடம் முழுதும் நன்கொடை அளித்து கொண்டே இருக்க வேண்டும். அதில் நீங்கள் வயிறு வளர்த்து கொண்டு அதே மக்களை எமாற்றிக்கொண்டிருப்பீர்கள். உண்மையானவராக இருந்தீர்களானால் மக்களின் நன்கொடையில் வாங்கிய பணத்தில் மக்களுக்கு ஏதாவது ஒரு நன்மை செய்திருக்க வேண்டும். வெறும் போராட்டம் அல்ல, உண்மையிலேயே மக்களுக்கு நேரடி நன்மை பயக்கும் ஏதாவது ஒரு காரியத்தை செய்திருக்க வேண்டும்.

      புரட்சி வெடிக்கும், கம்மியுனிசம் மலரும் என்று நம்பிய ஆயிரக்கணக்கான அப்பாவிகளின் தினசரி வருமானத்திலிருந்து வருகிற காசு தான் உங்களுக்கு கிடைக்கும் நன்கொடை.
      அதற்கு நீங்கள் பதிலுக்கு அந்த உழைக்கும் தோழர்களுக்கு என்ன கொடுத்து விட்டீர்கள்?
      வெறும் கோஷங்கள், எதிர்காலத்தில் புரட்சி வெடிக்கும் என்ற போலி உத்திரவாதம்.
      அதை தாண்டி இது வரை என்ன செய்து விட்டீர்கள்?

      • கற்றது கையளவு,

        சொல்லி வைத்த மாதிரியே உங்களது மனவக்கிரம் வெளியே வந்துவிட்டது பார்த்தீர்களா? புரட்சிகர இயக்கங்கள் நன்கொடை வசூலித்து வயிறு வளர்க்கிறார்கள் என்று சொல்வதும் போஸ்ட் மரத்தைக் கண்டவுடன் காலைத் தூக்கி உச்சா போகும் _____ஒன்றுதான் என்பதால் தான் உங்களது மறுமொழி அழகாக பிரசுரம் செய்யப்பட்டுள்ளது என்று கருதுகிறேன். இதில் இன்னொரு பரிமாணமும் வெளியே வரவேண்டியிருக்கிறது.

        ஆற்று மணல் கொள்ளையில் மக்கள் கமிட்டிகளை அமைப்பது சரிதான் என்று சொன்ன தாங்கள் இப்பொழுது நன்கொடை வாங்கி வயிறு வளர்க்கிறார்கள் என்று சொல்வதால் உங்களைப்போன்ற ஈனப்புத்தி கொண்டவர்கள் இழிவுபடுத்துவது புரட்சிகர இயக்கங்களையா? அல்லது போராடும் மக்களையா?

        புரட்சி எப்படி வரும் என்று கேட்கிற உங்களைப்போன்ற ஒட்டுண்ணிகள், அடிமட்டத்தில் மக்களைத் திரட்டி மணல்கொள்ளையில் இருந்து கல்வி, மருத்துவம் என்று சகல கொள்ளைகளுக்கும் எதிராக போராடுவதை போலிப்புரட்சி என்றும் வெற்றுக்கோசம் என்று கூறிவிட்டு மறுபக்கம் நன்கொடையால் வயிறு வளர்ப்பவர்கள் என்று ஒரு சேர சொன்னால் இதில் உண்மையில் வயிறு வளர்த்து திரிபவர்கள் யார் என்று உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரியும் அல்லவா?

        ஆண்மையற்றவன் கட்டியவளை சந்தேகப்படுவதும் போராட்டத்திற்கு ஒரு துரும்பையே கிள்ளிப்போடாதவன் புரட்சி என்பதும் பகல் வேசம் என்று அவதூறு செய்வதும் ஒன்று தான். முன்னவன் கட்டியவளை தேவடியாள் என்பான் பின்னவன் போராடுபவர்களை வயிறுவளர்ப்பவர்கள் என்பான்.

        உங்களைப்போன்றவர்களை _________ போதாது என்பது எமது நிலைப்பாடு. ஆனால் அது _________ அவமானம்! மேலும் தாங்கள் சொல்வதைப் போன்று இதுபோன்ற பின்னூட்டங்கள் மட்டுமே தங்களின் வேசைத்தன்மையை நிறுத்திவிடாது என்பதை அறிவோம்.

        ஆனால் இங்கு கிடைக்கிற திட்டமான அரசியல் பலன் என்னவென்றால் எங்களைப்போன்றவர்களிடம் இருக்கிற கொஞ்ச நஞ்ச ஊசலாட்டத்தையும் களைந்துகொண்டு மக்கள் திரளை மேலும் அரசியல் அரங்கிற்குக்கொண்டுவருகிற காப்புறுதியை தங்களின் அவதூறுகள் வழங்குகிறது என்பதே!

        முதலாளித்துவம் தனக்கு சவக்குழி தூண்டுவோரையே மேலாக உற்பத்தி செய்கிறது என்று மார்க்சிய ஆசான்கள் சொல்லிவிட்ட பிறகு உங்களைப்போன்ற கைக்கூலிகளுக்கும் ஈனப்பதர்களுக்கும் வேறு முகாந்திரம் ஏதாவது இருக்கிறதா என்ன?

        • தென்றல்,
          முதலை கண்ணீர் விடுபவர்களை அவர்களே அம்பலப்படுத்திக் கொள்வார்கள். ஆகையால் தாங்கள் காத்திரமான வார்த்தைகளை தவிர்க்கலாம் என்று நினைக்கிறேன்.

        • கற்றது கையளவு அண்ணன் //உங்கள் புரட்சி எப்போது வரும்// எனக்கென்னமோ புரச்சிக்கான முகாந்திரங்கள் அதிகமாகிட்டே வருதோனு தோனுது ஏனென்றால் மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகள் மக்களை எரிச்சலூட்டுவதாக இருக்கிறது,ம க இ க அமைப்பு புரட்சி எல்லாம் எடுத்து செய்யுர அளவுக்கு வலிமையான அமைப்பெல்லாம் இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம் உழைக்கும் மக்களை உண்மையாய் தெரிந்து கொண்ட யாரும் கம்மூனிஸ்டுகளை பிழைப்பு வாதிகள் என்று சொல்ல மாட்டார்கள் (வயிரு வளர்ப்பவர்கள்) இது கொஞ்சம் ஓவரான வசவா தெரியுது //ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பவர்கள் கம்மியுநிஸ்ட்களாக மட்டும் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எங்களை போன்ற பொதுமக்களாகவும் இருக்கலாம்.//கம்மூனிஸ்டுகளோடு இணைந்து ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதில் என்னண்னே கஸ்டம் உங்களுக்கு என்னை பொருத்தவரை இசுலாமிய சார்பு நிலைப்பாடு மட்டும் பிடிக்காது கமூனிஸ்டுகள்ட மத்த படி ஏச்சி பிழைக்கிறாகனு சொல்லுறது எல்லாம் அபாண்டமான் குற்றச்சாட்டு…

        • தென்றல், நீங்கள் குறிப்பிட்டது போல புரட்சிகர இயக்கங்கள் – இங்கே வினவு – மக்களிடையே நிதி உதவி கோரிப் பெறுவதையே திரு. கற்றது கையளவு அவர்கள் வக்கிரமாக எள்ளி நகையாடுகிறார் என்பதாலேயே இங்கே வெளியிட்டோம். இதன் நோக்கம் திருவாளர் கற்றது கையளவை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே. வினவு காசு வாங்கி பிழைப்பதாக “இந்தியன்” போன்றோரும், “நட்ராயன்” போன்ற ஆர்எஸ்எஸ் காரர்களும் கூறிவருகிறார்கள். அதையும் சிரித்துக் கொண்டே வெளியிடுகிறோம். அந்த வகையில் திருவாளர் கற்றது கையளவு எந்த பட்டியலில் சேருகிறார் என்பது அவருக்கே தெரியுமா தெரியாது.

          திருவாளர் கற்றது கையளவு அவர்கள் கொண்டிருக்கும் கம்யூனிச வெறுப்பு என்பது ஒரிஜனல் அல்ல. அதாவது அவர் சொந்தமாக கம்யூனிசத்தை அறிந்து கொண்டு ( அப்படி அறிய முயன்றால் அவர் கம்யூனிஸ்ட்டாகத்தான் ஆக முடியும்) விமரிசனம் செய்யவில்லை.

          அப்துல் கலாம் டைப்பில் பொதுவான நியாயங்கள் சொல்லும் போக்கில் – அதாவது ரோட்டில் எச்சில் துப்பக் கூடாது, உழைத்து முன்னேறி அம்பானியாக ஆக வேண்டும் – தோழர்களுடன் விவாதம் வந்து வேறு வழியின்றி கம்யூனிசத்தை எதிர்க்கும்படியாக அதுவும் கூகிள் லிங்குகள் துணை கொண்டு (இதில் அதியமான், ராமன் போன்றவர்கள் முன்னோர்கள்)செய்யும் படியாக ஆகிவிடுகிறது.

          கற்றது கையளவிடம் இருக்கும் இந்தப் பொதுப்புத்தி சார்ந்த அறியாமைகள், மூட நம்பிக்கைகள், ஏட்டிக்கு போட்டியாக விவாதிக்கும் நடுத்தர வர்க்க ஈகோ – இதுதான் முதன்மையானது – போன்றவையே அவரை அப்படி பேச வைக்கின்றன. ருசிக்கு அலைபவர்கள் பசிக்கு உழைப்பதை எள்ளி நகையாடவே செய்வார்கள். தற்போதைய நிலவரப்படி ஒரு சிறு நிறுவனம் வைத்து எதிர்காலத்தில் ஒரு பெரும் தொழிற் சாம்ராஜ்ஜியத்தை நடத்தும் கனவையும் அதற்கான ஏதோ கொஞ்சம் திட்டத்தையும் திருவாளர் கற்றது கையளவு வைத்திருக்கிறார் என்று தெரிகிறது.

          முதலாளித்துவ வர்க்கத்தை விடவும் சிறு முதலாளிகளின் முதலாளித்துவ பக்தி தீவிரமானது. இது அதியமானுக்கும் பொருந்தும். இவையெல்லாம் சேர்ந்துதான் அவரது செயற்கையான ஒரிஜினலற்ற கம்யூனிச வெறுப்பில் வெளிப்படுகிறது. இதை அப்படியே எடுத்துக் கொண்டு அவரோடு தீவிரமாக வாதிடுவது அல்லது கொஞ்சம் கடுமையான வார்த்தைகளை வெளிப்படுத்துவது பயன் தராது.

          சுருங்கச் சொன்னால் கம்யூனிசம் மற்றும் முதலாளித்துவம் குறித்து அ..னா ஆவான்னா கூட தெரியா கோயிந்துகளை அதுவும் நடுத்தர வர்க்கமாக இருந்து கொண்டு முதலாளிகளாக மாற நினைக்கும் ‘இலட்சிய’ வாதிகளை வடிவேலு அல்லது கவுண்ட மணி போலவே டீல் செய்தால் போதுமானது. அல்லது அவருக்கு நேர்மறையில் எடுத்துரைக்க வேண்டுமென்றால் முதலாளித்துவம், கம்யூனிசம் இரண்டின் நடைமுறைகள் மற்றும் விளைவுகளை சிறு சிறு கேள்விகளாக கேட்டு கற்பிக்க முயலலாம்.

          சாரமாகச் சொன்னால் திருவாளர் கற்றது கையளவுக்கு கம்யூனிசத்தை எதிர்க்க வேண்டும். ஆனால் அது குறித்து எதுவும் அவருக்கு தெரியவில்லை. மேலும் முதலாளித்துவத்துவம் குறித்தும் அவர் அறிந்திருக்கவில்லை. மேலாக இவ்விரண்டும் தனக்கு தெரியவில்லை என்பதையும் அவர் அறிந்திருக்கவில்லை.

          அந்த வகையில் கம்யூனிசம், முதலாளித்துவம் இரண்டையும் விளக்கும் நோக்கில் அவரோடு உரையாடலாம். அதற்கு அவர் முரண்டு பிடித்தால் அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை என்பதை எடுத்துரைத்து லாடம் அடிக்கலாம். இதன் போக்கில் திருவாளர் கற்றது கையளவு உண்மையிலேயே நாம் கற்றது கையளவு கல்லாதது கம்யூனிசமளவு என்று தெளிந்து முக்தி அடைவார்.

          தோழர் தென்றல் புரிந்து கொள்வார் என்று நம்புகிறோம்.

          • வினவு மற்றும் எல்லா நண்பர்களுக்கும்,

            1. முதலில் சில கடுமையான குற்றச்சாட்டுகளை சாட்டினேன். அதனால் யாருக்கேனும் மனவருத்தம் ஏற்பட்டிருந்தால் மனம் திறந்து மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். சாதாரணமாக நான் உணர்ச்சி வசப்பட்டு எழுத மாட்டேன். என் மேல் அபாண்டமாக ஒருவர் பழி சொன்னால் அதனை புன்னகையோடு ஏற்கும் பக்குவம் எனக்கு இன்னும் வரவில்லை. என்னை கடுமையாக பேச வைத்தது தென்றல் அவர்களின் கேவலமான வார்த்தை பிரயோகங்கள் தான். ஒரு சாதாரண சாமானியன், பொதுமக்களில் ஒருவன் என்ற அளவில் கம்மியுநிசத்தை பற்றிய சந்தேகங்களை நான் கேட்டதற்கு என்னை ஒரேயடியாக மிகவும் கேவலமான வார்த்தைகளால் அர்ச்சித்தால் நானும் அவரை சீண்ட வேண்டியதாயிற்று. நான் அவரோடு நிறுத்தி இருக்க வேண்டும், வினவை இதில் இழுத்திருக்க கூடாது.

            2. வினவில் பின்னூட்டமிடும்போது எனது பெயரிலேயே கற்றது கையளவு என்று வைத்திருக்கிறேன். கல்லாதது உலகளவு இருப்பது எனக்கும் தெரியும். நாம் ஒரு கருத்தை சொல்லும்போது அதற்கு மாற்று கருத்து சொல்பவர்களும் இருக்க தான் செய்வார்கள். என் கருத்துக்கு எதிர்மறையான கருத்து கொண்டவர்களுடன் பல நேரம் விவாதித்திருக்கிறேன். அதே சமயம் அவர்களின் கருத்து என்ன, ஏன் அவர்கள் அப்படி சொல்கிறார்கள் என்று யோசித்து அவர்களின் பக்க நியாயங்களையும் தீர ஆலோசித்தே முடிவெடுக்கிறேன். ஆனால் தென்றலார் அவர் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்ற ரீதியில் மற்ற எல்லோர் கருத்தையும் புறக்கணித்து மற்றவர்களை எல்லாம் ஏகாதிபத்திய கைகூலிகள், இழி பிறவிகள், இன்னும் என்னென்னவோ சொல்கிறார். இன்னும் வினவு கோடிட்டு அழித்த பகுதிகளில் என்னென்ன சொல்லி இருப்பாரோ தெரியாது. அடுத்தவர் கருத்தை பொறுமையாக கேட்கும் முதிர்ச்சி இல்லாமல் அவர் அவதூறான வார்த்தைகளை பிரயோகிப்பது எந்த வகையில் நியாயம்.
            எனக்கு எல்லாம் தெரியும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் எனக்கு எதுவுமே தெரியாது என்று சொல்வது சரியா? உங்களுக்கு தெரிந்த எல்லாமும் எனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதே சமயம் எனக்கு தெரிந்த எல்லாமும் உங்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

            கம்மியுனிசம் பற்றி, முதலாளித்துவம் பற்றி எனக்கு ஆனா, ஆவன்னா கூட தெரியாது என்று வினவு கூறுகிறது. ஏதோ என் வேலை நிமித்தமாக உலகம் முழுக்க செல்லும் நிலையில் உள்ளதால் உக்ரைன், கசகிஸ்தான் ரசிய, சீன நாட்டு நண்பர்களுடன் பேசி பழகும் வாய்ப்பு கிட்டியது. ஆனால் நான் கூறுவது அனைத்தும் அவதூறு என்று மண்ணுக்குள் தலையை புதைத்திருக்கும் நண்பர்களை கண்டால் தான் எனக்கு வருத்தமாக இருக்கிறது.

            3. எந்த ஒரு பணியை தொடங்கினாலும் அதற்கு ஒரு முதல் படி குறிக்கோள், இடைநிலை குறிக்கோள், இறுதி குறிக்கோள் என்றும் இருக்க வேண்டும். இந்தந்த காலத்துக்குள் இந்தந்த பணிகள் முடித்திருக்க வேண்டும் என்ற சுய கட்டுப்பாடு நமக்கு இருக்க வேண்டும். பெரிய மாற்றங்களை ஒரேயடியாக மாற்ற முடியவில்லை என்றாலும் படிப்படியாக மாற்றத்தை கொண்டு வர இயலும். மேற்கண்ட எந்த வித குறிக்கோளும் இல்லாமல் சகட்டு மேனிக்கு உலகில் உள்ள எல்லோரையும் குறை கூறிக்கொண்டிருந்தால் பின் எப்படி முன்னேற முடியும், குறிக்கோளை அடைய முடியும்? மக்களிடமிருந்து நன்கொடை எதற்கு பெறுகிறீர்கள்? நாட்டில் ஒரு நல்ல மாற்றம் ஏற்பட வேண்டும் என்று எண்ணி தானே மக்கள் நன்கொடை அளிக்கிறார்கள்? அவர்கள் கொடுக்கும் நன்கொடைக்கு பதில் அவர்களுக்கு இதுவரை கிடைத்தது என்ன? அங்கும் இங்கும் சில போராட்டங்கள். அதற்கு மேல்?? மாற்றம் என்பது சில போராட்டங்களின் மூலமே கிடைத்து விடுமா? மக்களின் பேராதரவு இல்லாமல் மாற்றங்கள் நிகழ்ந்து விடுமா? மக்களுக்கு உங்களின் மேல் கவனத்தி திருப்ப போராட்டத்தை தாண்டி, மக்களுக்கு தீர்வுகள் கிடைக்கும் நாளில் தான் மக்கள் உங்களை திரும்பி பார்ப்பார்கள்.
            மதவாதிகள் கடவுள் அவதரிக்க போகிறார் என்று கூறி காலம் கடத்துவார்கள்.
            தெருவித்தை காட்டுபவர் கீரிக்கும் பாம்புக்கும் சண்டை வரும் என்று சொல்லிக்கொண்டே காலம் கடத்துவார்.
            அது போல கம்மியுநிஸ்ட் நண்பர்களும் புரட்சி வரும் மாற்றம் வரும் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அந்த புரட்சி என்பது வருவதாக தெரியவே இல்லை.
            புரட்சி வந்து ஆட்சி அமைப்பை கம்மியுநிஸ்ட்களிடம் கொடுத்தால் அவர்களால் நல்லாட்சியை நீண்ட நாள் கொடுக்க இயலுமா. தெரியாது. ஆட்சி வந்த பின் பதவியின் மமதையில், போதையில் சர்வாதிகாரம் தலையெடுத்தால் அதனை தடுக்க என்ன வழி, தெரியாது.
            இந்த இரண்டு கேள்விகள் இருக்கும் வரை கம்மியுநிசத்தின் மேல் மக்களுக்கு நம்பிக்கை வராது.

            இதனால் தான் சொல்கிறேன். சோசலிசத்தை ஜனநாயக வழியிலும் மலர செய்யலாம். தற்போது பதவியில் உள்ள பாசிச,ஊழல் அரசியல்வாதிகளை ஜனநாயக வழியிலும் வீழ்த்த முடியும், மக்கள் ஆதரவு இருந்தால்.

            அரவிந்த் கேஜ்ரிவால் நிரூபித்தது என்ன? மக்கள் பேராதரவு இருந்தால் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு பெரும் ஊழல் பாசிச கட்சிகளை எதிர்த்தும் வெற்றி காண முடியும். அனால் ஆட்சிக்கு வந்த பின்னர் அதிக பொறுப்புடன் வேலை செய்தால் மக்கள் பேராதரவு நீடித்திருக்கும். ஆனால் கேஜ்ரிவால் அதில் பின்தங்கி விட்டார். ஆர்ப்பாட்டம் இருக்கும் அளவுக்கு அவரிடம் ஆட்சியை நடத்தும் திறன் இல்லாதது அவரது தோல்விக்கு வழி வகுக்கும். ஆனால் அதுவும் நமக்கு ஒரு பாடம் தான். மக்களின் பேராதரவை கொண்டு ஆட்சி அமைக்கும் அனைவரும் அதனை எப்படி தொடர்ந்து தக்க வைத்து கொள்ள வேண்டும் என்பது மிக முக்கியம்.

            எப்பேற்பட்ட அறிவாளியும் தவறு செய்வார், அவரது தவறிலிருந்து என்ன செய்ய கூடாது, எப்படி செய்யக்கூடாது என்று கற்றுக்கொள்ளலாம். சாதாரண மக்களிடமிருந்தும் நல்ல விடயங்களை கற்றுக்கொள்ளலாம்.

            இது அவரவரின் கற்றுகொள்ளும் ஆர்வம், முதிர்ச்சியை பொறுத்து உள்ளது.
            இதனால் ஒருவருக்கு ஆனா ஆவன்னா கூட தெரியாது என்று எள்ளி நகையாடாமல் விவாதம் செய்தால் நலம்.

            • தென்றல் அவர்களின் வார்த்தை பிரயோகம் அவர் சார்ந்திருக்கும் சித்தாந்தத்தை மறைத்து விடுகிறது ,அவர் கோவமான வார்த்தை பிரயோகத்தை தவிர்ப்பது நல்லது அண்ணன் தென்றல் அவர்களுக்கு நான் ஒரு விசய்த்தை சொல்ல விரும்புகிறென் எனது நண்பர் எலிமன்ரி ஸ்கூல் வாத்தியார இருக்காரு அவரு சொல்லுவாரு “அய்யய்யோ இந்த பிள்ளைகளுக்கு அனா ஆவன்னா எழுத கத்துக்குடுக்குறதுக்குள்ள என் தாலியே அந்துரும் போல இருக்குதுபா ” அப்பிடிம்பார் ஆனாலு எல்லா பிள்ளைகளும் எழுத படிக்க கற்றுக்கொள்ள வேண்டும் அதனால் எனக்கு பொருமை மிகவும் அவசியம் ,அதைப்போலத்தான் கம்மூனிஸ சித்தாந்ததை பற்றி அதிகம் தெரிந்து கொண்ட நீங்கள் அதை ஒரு ஆசிரியரின் பொருமையோடு விளக்குவதுதான் சரியானது அதை விடுத்து கேள்விகள் கேப்பதற்க்காவே கோவம் கொள்வது என்பது உங்களின் நிலையை தவறாக மற்றவர்கள் புரிந்து கொள்ளும் படி ஆகி விடிம் சிந்தியுங்கள் தென்றல் அண்னன்

              • யோசேப்பு, வினவு, நந்தன்

                தங்களின் பதில்களை வாசித்தேன். தாங்கள் சொல்கிற கருத்துக்களை கவனத்தில் கொள்கிறேன். நன்றி. இன்னும் கற்றது கையளவு அவர்களுக்கு முந்தைய நாள் சம்பவம் குறித்து பதில் எழுத முடியவில்லை. சீக்கிரம் இது குறித்து எழுதுகிறேன்.

                அதற்கு முன் யோசப்பின் வாதத்திற்கு சில பதில்கள்.

                1. என்னுடைய வார்த்தைப் பிரோயகம் சித்தாந்தத்தை மறைக்கிறது என்பதை பகுதியளவு ஏற்கிற அதே சமயம் என் பார்வையில் அது எப்படி என்று விவாதிக்க விரும்புகிறேன். ஒரு வேளை நான் முன் வைக்கிற கடுமையான வார்த்தைகளை கண்டு இன்றைக்கு அவதூறு வைக்கிற நடுத்தர வர்க்கம் தன்னை மாய்த்துக்கொள்கிறது என்று வைப்போம். ஆளும் வர்க்கம் அத்தகையவர்களைக் கொண்டு பிண அரசியல் நடத்தும். முத்துக்குமாரன் தீக்குளித்த பொழுது என் உடலையே ஆயுதமாகக் கொண்டு போராடுங்கள் என்று சொன்ன பொழுது ஆளும் வர்க்கமும் அதனைச் சார்ந்த கைக்கூலி அரசியல்வாதிகளும் திட்டமிட்டு காயடித்தனர். ஆனால் அதே சமயம் சட்டீஸ்கரில் பச்சை வேட்டை நடத்திக்கொண்டே பல்லாயிரக்கணக்கான மக்களைக்கொன்றழிக்கிற அரசு, இன்றைக்கு பத்திரிக்கைகளுக்கு அல்லது பத்திரிக்கைகள் எழுதுகிற செய்தி என்ன? போலீஸ் கான்ஸ்டபிள் கொடூர மாவோயிஸ்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரின் மனைவியும் குழந்தைகளும் கண்ணீர் பேட்டி என்று 24 மணிநேரமும் ஒளிபரப்புகிறார்கள்! இது எத்தகையது? இதுபோன்று இங்கு நடக்கிறது என்று வைப்போம்; புரட்சிகர அரசியல் பேசுகிறவர்கள் ஏதுமறியா அப்பாவியை ஒரு நடுனிலை வாசகனையே கொன்றுவிட்டார்கள் என்று காலச்சுவடில் ஒரு சிறப்புப்பகுதி, பிழைப்புவாதி ஜெயமோகன் ஒரு ஹாட் பேட்டி! ஆர் எஸ் எஸ் அரை டவுசர் நீலகண்டனின் மனம் திறந்த பேட்டி, தினமணி வைத்தியின் தலையங்கம், கம்யுனிஸ்டுகள் என்றால் இப்படித்தான் என்று அனைத்து மக்கள் விரோதச் சக்திகளும் கும்மி கொட்டி பாட்டாளிவர்க்க விடுதலைக்கு எதிராக நிற்கும்! எந்த நடுத்தரவர்க்கத்தை தனிநபராக, விழுமியங்கள் அற்று ஏவளாளியாக இந்த ஆளும் வர்க்கம் வைத்திருக்கிறதோ அதில் உள்ள நபர்களை பலிகொடுத்தே தன்னை தக்கவைத்துக்கொள்கிற வாய்ப்பு மிக அதிகம். இந்தவிதத்தில் நடுத்தரவர்க்கம், ஆளும் வர்க்கத்திற்கு ஒரு கொழுத்த இரையாக இருக்கக்கூடும். இந்தவிதத்தில் எமது வார்த்தைகள் ஒரு மக்கள் திரள் சக்திக்கு பின்னடவை கொண்டு வரலாம் என்பது தான் இங்கு பார்வை. இதுதான் என்னை யோசிக்க வைக்கிறதே தவிர இங்கு விவாதிப்பவரை புண்படுத்திவிட்டேன் கடுமையான வார்த்தைகளைப் பயன்ப்படுத்திவிட்டேன் நரகல் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறேன் என்ற வாதம் அல்ல! அப்படி கவலையுறுவதற்கு நான் தனிநபரும் அல்லன். அதற்கான இடமும் இதுவன்று! இப்படி யோசித்தது சரியா என்று சொல்லுங்கள்.

                2. கம்யுனிச சிந்தாந்தத்தை அறிந்தவர்கள் அதை ஆசிரியரின் பெருமையோடு விளக்க வேண்டும் என்ற வாசகம் மிக அருமையான ஒன்று. மார்க்சிய ஆசான்கள் கம்யுனிசத்தை மக்களிடையே சென்று கற்றுக்கொள்ளுங்கள் என்று அறைந்து கூறுகிறார்கள். இதன் மூலமாக கம்யுனிச சிந்தாந்தத்தைக் கசடறக் கற்கலாம்; கற்றதை உராய்ந்தும் கொள்ளலாம். இந்த விதத்தில் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது. என்னோடு நீங்களும் வாருங்கள். தங்களின் பின்னூட்ட பதிலுக்கு பாராட்டாக ஐந்து ஆவணங்களை உங்கள் கவனத்திற்கு வைக்கிறேன். கண்டிப்பாக படிக்கவும். 1. புரட்சியில் இளைஞர்கள் 2. படித்து முடித்த பின் (ஒலிப்பேழை) 3. இளமையின் கீதம் 4. ஐந்து அரங்குகளில் தேர்வை எதிர்கொள்வோம். 5. தூக்கு மேடைக் குறிப்புகள்.

                நன்றி.

                • தென்றல் அவர்களே,
                  //இந்தவிதத்தில் நடுத்தரவர்க்கம், ஆளும் வர்க்கத்திற்கு ஒரு கொழுத்த இரையாக இருக்கக்கூடும். இந்தவிதத்தில் எமது வார்த்தைகள் ஒரு மக்கள் திரள் சக்திக்கு பின்னடவை கொண்டு வரலாம் என்பது தான் இங்கு பார்வை.//

                  ஆம், இந்த பார்வை தான் முக்கியம்.

                • ஒரு தலை பட்சமாக மட்டும் கருத்துகளை அறிந்து கொள்ளாமல் , மாற்று கருத்து என்ன உள்ளது என்பதை தெரிந்து கொள்ள கீழ் கண்ட புத்தகத்தையும் சேர்த்து படிக்கவும் . நாணயத்தின் இரு பக்கங்களையும் தெரிந்து முடிவு எடுக்க வேண்டும்

                  6.பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம்
                  – அரவிந்தன் நீலகண்டன்

                  ( இந்த நீலகண்டனும் நீங்கள் திட்டும் நீலகண்டனும் ஒருவரா ? )

                  நன்றி

              • பி ஜோ,

                க கை தொடக்கத்திலிருந்தே பொதுவுடமைக்கு எதிரான நிலைப்பாட்டில் தான் இருக்கிறார். அவர் கற்றுக்கொள்ளும் மாணவனாக எதையும் இங்கே கேட்கவில்லை. கவனித்தவர்களுக்குத் தெரியும்.

          • ///சுருங்கச் சொன்னால் கம்யூனிசம் மற்றும் முதலாளித்துவம் குறித்து அ..னா ஆவான்னா கூட தெரியா கோயிந்துகளை ///

            Thanks for your compliments Comrade Vinavu !! 🙂

            உங்களுக்கு (அதாவது உங்க குழுமத்திற்க்கு) எல்லாம் தெரியும், எம்மை போன்றவர்கள் ‘அரைகுறைகள்’ என்ற ஒப்பற்ற உண்மையை அவ்வப்போது எடுத்தியம்பும் பாங்கு அருமை !!

            இங்கு நான் அவ்வப்போது பின்னூட்டம் இடுவது உங்களிடம் அல்லது உங்களின் சீடர்களிடம் ‘விவதிக்க’ அல்ல. இதை பல ஆயிரம் நடுத்ர வர்க ’கோயிந்துகள்’ (மற்றும் முக்கால்வாசி
            படைபாளிகள், செயல்பாட்டாளர்கள், ஊடக துறையினர்) சைலண்டாக தினமும் படித்து வருகின்றனர். அவர்களிடம் ‘உரையாட’ உங்க தளத்தை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொள்கிறேன். மேலும் உங்களின் பிரச்சார பரப்புரையை ’முறியடிக்க’ உங்களின் தளத்தையே களமாக பயன் படுத்தும் ஒரு போர் தந்திரம் இது. 🙂

            மற்றபடி யாருக்கு என்ன தெரியும் / தெரியாது, யார் அரைவெக்காடு, யார் வெறும் கூகுள் சுட்டிகளை மட்டும் வைத்து பேசுபவர்கள், etc, etc என்பதை வாசகர்கள் முடிவு செய்து கொள்வார்கள். உமது மேலான ’அறிவுரை’ அவர்களுக்கு தேவைபடாது. You are under-estimating (in the usual manner of dogmatic communists) the discerning ability and intelligence of the average reader here !!

            • வினவு,

              ///சுருங்கச் சொன்னால் கம்யூனிசம் மற்றும் முதலாளித்துவம் குறித்து அ..னா ஆவான்னா கூட தெரியா கோயிந்துகளை ///

              கம்யுனிச சித்தாந்தம் குறித்து எமக்கு முழுசா தெரியாது தான். டாஸ் கேபிடலை படிக்க முயற்சித்திருக்கிறேன். ஆனால் அதன் அடிப்படைகளை ஓரளவு இதர நூல்களில் இருந்து தெரிந்து வைத்திருக்கிறேன்.

              ஆனால் ‘முதலாளியம்’ என்ற பொது சொல்லுக்கு கீழ் பல் வகை முரண்படும் கருத்துகொள்கள் உண்டு. உதாரணமாக Keynesian,Austrian school, Monetarism, Neo-classical economics என்று பொதுவாக வகைபடுத்தலாம். நான் மில்டன் ஃபிரீட்மேன் முன்மொழிந்த monetarismதை தான் ஏற்று வழிமொழிகிறென். சரி, இதை பற்றி எல்லாம் ஆன்னா, ஆவன்னா தெரியுமா உமக்கு ? Hayek என்ற மாமேதை பற்றி ஏதாவது தெரியுமா ? எதையும் படித்ததில்லை. ஆர்வமும் இல்லை. ஆனால் எல்லாம் தெரிஞ்ச மாதிரி சும்மா உதார் உட வெட்கமா இல்லையா ? எமக்கு முதலாளியம் பற்றி ஒன்னும் தெரியாது என்று தொடர்ந்து நீங்க உளருவதால் இந்த ‘விளக்கம்’ !! மற்றபடி continue your rants as usual and keep repeating your stupid and arrogant assertions. Readers will judge for themselves.

              • அதியமானின் இனைய தளத்தை [ பார்த்து பயந்து ] கண்டோடியவ்ர்கள் , வினவுக்கு வருகின்றார்கள் என்பது நிசம். இப்போது எங்கள் உடகவியலாலர்களின் எழுத்துகளை படிக்கும் போது அவற்றில் வினவின் தாக்கம் ஓரளவிற்கு தெரிகின்றது . நன்றி வினவு .
                //இங்கு நான் அவ்வப்போது பின்னூட்டம் இடுவது உங்களிடம் அல்லது உங்களின் சீடர்களிடம் ‘விவதிக்க’ அல்ல. இதை பல ஆயிரம் நடுத்ர வர்க ’கோயிந்துகள்’ (மற்றும் முக்கால்வாசி
                படைபாளிகள், செயல்பாட்டாளர்கள், ஊடக துறையினர்) சைலண்டாக தினமும் படித்து வருகின்றனர். அவர்களிடம் ‘உரையாட’ உங்க தளத்தை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொள்கிறேன். //

              • சில்லுண்டி அதியமான் அவர்களின் பின்னூட்டத்தை வாசித்தேன். பரந்துபட்ட வாசகர் தரப்பு ஏன் இப்படி சில்லுண்டி, கைக்கூலி என்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள் என்பதை உவத்தல் காய்த்தலின்றி அறியுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

                ஒரு பக்கம் மூக்கொழுகிக் கொண்டே, ஆரஞ்சு கலர் ஜவ்வரிசி அரிசி ஐஸ்ஸை சப்பிக்கொண்டு அடுத்த வீட்டு பிள்ளைகளிடம் எங்க ஐயாவு மெட்ராசுல புல்டவுசுரு ஓட்டுறாக தெரியுமா? என்பது போன்று பீரிட்மேன் முன்மொழிந்த Monetarism என்பதை நான் வழிமொழிகிறேன்; அதைப்பற்றி ஆன்னா உவுனா தெரியுமா என்கிறார் அதியமான் அவர்கள்.
                முதல் தரப்பில் கேப்பிட்டலிசம் என்று சொல்பவர்களே பீரிட்மேனை அனாதையாக விட்டு பல வருடங்கள் ஆகிறது. சான்றாக Ha-Joon Changஇன் Things They Don’t tell you about capitalism என்ற புத்தகத்தை மாமேதை படித்திருப்பார் என்று நம்புவோமாக! இதில் Ha-Joon Chang உலகத்தரப்பில் இன்னொரு சில்லுண்டி என்பதை மறந்துவிடக்கூடாது! அப்படி இருந்துமே பீரி மார்கெட்டா ச்சீ தூ என்கிறார்! ஒரு முறை அவர் துப்புவதை பார்க்கவும்!
                பீரிட் மேனுக்கு சோசலிசம் சார்பில் உரித்து தொங்கவிடப்பட்ட புத்தகம் வேண்டுமெனில் கேரி லீச்சின் Structural genocide of capitalism என்பதன் அட்டைப் படத்தையாவது நுகர்ந்து பார்க்க முயற்சி செய்யலாம்.

                அதுஇல்லாவிட்டால் கோவலின் Drug war Capitalism அல்லது ஜேம்ஸ் பெட்ராஸின் வலைத்தளங்கள் அல்லது எகிப்து மார்க்சிய ஆய்வாளர் சலீம் அமீனின் கட்டுரையாவது வாசிக்கலாம்.

                சரி போய்த்தொலைகிறது கற்றாரை கற்றோரே காமுறுவர் என்ற குறளையாவது வாசிக்கலாம் இல்லையா?

                அதைவிடுங்கள் ஹிந்து வாசகர்களுக்கு அதாங்க நரசுஸ் காப்பி குடிக்கிறவாளுக்குன்னு பிரதேயகமா பால் குரூக்மேனோட கீன்சை வைத்து அழுகுணி ஆட்டம் போட்ட நாடகம் கூட அறிய தந்திருக்கிறார்கள். அதைக்கூட அன்னார் படித்திருக்கவில்லை போலும். இது ஒன்று.

                ——————————

                இனி இரண்டாவது பிராது இப்படி.

                ஏம்ப்பா வினவு தோழர்களே! ஹயாக் ஒரு மாமேதை என்று தெரியாமல் அதியமானுக்கு ஒன்றும் தெரியாது என்று ஓட்டி எடுக்கலாமா? எனக்குள்ள ஒரு சந்தேகம் என்னவென்றால் அங்க அம்பானி பல்லுக்கொத்திக்கொண்டே நோட்ட எண்ணிக்கொண்டிருக்கிற பொழுது ஹயாக் ஒரு மாமேதை என்பது அம்பானிக்கு தெரியும் என்று நினைக்கிறீர்கள்? இப்படி சுற்றி வளைத்து அம்பானி சரி என்று சொல்வதிற்குப்பதில் ஹயாக்கிற்கு பதிலாக கைக்கூலி அதியமான் அவர்களை ஏன் மாமேதை என்று அழைக்கக்கூடாது? தயவு செய்து பரிசீலியுங்கள்.

              • Vinavu readers have already judged Adhiyaman when he ran away without answering queries raised by me under the blog-ADHIYAMAN-BADRI-KUTRAVAALI KOONDIL.Where were his answers for the replies given by me for his insinuations against nationalized banks and other matters?He is asking others whether they have sense of shame.Ridiculous.

                • Sooriyan,

                  You are the one who has so far dodged the real issue / solution to conquer kandhu vatti. so far you have NOT given a concrete solutution nor had refuted the role played by MFIs. And why the hell couldn’t your nationalised banks solve this problem all these decades ? and people like Tamil keel advocated this as the only solution and you keep dodging this core issue but kept yapping about banks. Hence i ‘ran away’ from those who refuse to argue to the point. I don’t understand how a person of your age and experience keeps company of indecent guys hiding under pseudo names and abusing all. Shame on you. Would you care write in your original name here ? and let the world know that a retired bank manager endoreses people like Tamil and Thendral ?

                  and let readers judge for themselves. they are more intelligent than you imagine.

                  • Adhiyaman,again you have exposed your ignorance and lack of understanding.I have given facts and figures about the role played by nationalized banks in financing the Self Help Groups mostly formed by rural women.When you blamed nationalized banks for improper credit appraisals,I have narrated the rise and fall of a private bank.I have not eluded in replying.MFIs are not the only source for micro financing.In fact they are the worst exploiters of rural poverty.
                    Do not expect me to toe your line of thinking.Without knowing ground reality and the yeoman role of nationalized banks in nation building,you were blaming some of their shortcomings.Simply because Thendral and Tamil are having opinion contrary to your line of thinking,you try to degrade them.In the process,you are degrading yourself.I respect the intelligence of Vinavu readers.They will not be carried away by half boiled crook like you.

                  • வினவில் முழுவதும் அம்பலபட்டு [அம்மனபட்டு] போனபிறகும் எதற்கு கோமணத்தை தேடுகின்றிர்கள் அதியமான் ?

                    //and let readers judge for themselves. they are more intelligent than you imagine.//

                  • பதில் சொல்ல முடியாமல் ஒஒடிய ஓடுகாலி நீர் தானே அதியமான். பின்பு எதற்கு பிறரை குறை சொல்லிகொண்டு இருகின்றிர்கள். MFI யீன் வட்டிவிகிதமான 30% முதல் 40% அளவில் என்ன தொழில் செய்யமுடியும் என்ற என் கேள்விகளுக்கு பதில் கூற வக்கு இன்றி மண்டையில் மசாலா இன்றி ஓடிய அதியமானுக்கு வினவில் விவாதிக்கவே எந்த அருகதையும் இல்லை

                    //I don’t understand how a person of your age and experience keeps company of indecent guys hiding under pseudo names and abusing all. Shame on you. Would you care write in your original name here ? and let the world know that a retired bank manager endoreses people like Tamil and Thendral ?//

          • கற்றது கையளவு ஏதோ ஒரு சாரார் கூறும் கருத்தை மட்டும் ஏற்று முடிவு செய்துவிடவில்லை .
            அவர் கம்யூன்சிச நல்லது என்று ஒரு தலை பட்சமாக முடிவு செய்யாமல் , கம்யூனிச நாடுகளில் எப்படி பட்ட பிரச்சினையை எதிர்கொண்டார்கள் . அந்த குறைகள் எவ்வாறு களையப்படும் என்று வினவுகிறார் .

            1.சர்வாதிகார ஆட்சி
            2. தனி நபரின் திறமை ஊக்கம் அதற்கான ரிவார்ட்
            3. அனைவரும் மெச்சும்படி ஒரு சோதனை தொழிற்சாலை (POC )

            போன்றவற்றை சார்ந்து கேள்வி கேட்கிறார் . அவருடைய பனி சார்ந்த பயணங்கள் மூலம் கம்யூனிசத்தை நேரடியாக அனுபவித்தவர்கள் மூலம் கம்யூன்சியதை புரிந்து கொள்ள முயற்சித்து உள்ளார்

            எங்க மதத்தையே கேள்வி கேட்கிறியா ? எங்க சாமிய பத்தி உனக்கு என்ன தெரியும் ? எங்க சாமியார் சொன்ன மாதிரி நடந்தா உலகமே சுகப்படும் . இதக்கு முன்னாடி இருந்த சாமியாருங்க எல்லாம் போலி ஆனா இப்ப நாங்க சொல்ற சாமியார் நூறு சதம் சரியானவர் . புரிந்து கொள்ளும் அறிவு இல்லை என்று நீங்கள் ஏகடியம் செய்கிறீர்கள்

            கற்றது கையளவு நன்மை தீமை இரண்டையும் சீர் தூக்கி பார்க்க விழைகிறார். நீங்களோ நாணயத்தின் ஒரு பக்கத்தை மற்றும் காட்டி அவரை புரிந்துகொள்ளவில்லை என்று சொல்கிறீர்கள்

            //‘இலட்சிய’ வாதிகளை வடிவேலு அல்லது கவுண்ட மணி போலவே டீல் செய்தால் போதுமானது//

            அறிவினால் ஏற்பட்ட ஞான செருக்கு என்று படவில்லை , அதீத நம்பிக்கை ( மூட நம்பிக்கை ) என்னும் அளவில் தான் இந்த வசனத்தை பார்கிறேன்

        • வாசகர்களுக்கு,

          இயற்கை வளமான ஆற்று மணலை நீரை பாதுகாக்க சில மக்கள் போராடுகிறார்கள். ஒரு யோக்கியன் என்ன செய்யவேண்டும் போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். முடிந்த வரை முடிந்த விதத்தில் போராட்டத்தில் பங்கு பெறவேண்டும்.

          மணலில்லாத கட்டுமான முறைகள் இருக்கிறது என்றால் அதைப்பற்றி யாரிடம் போய் சொல்லவேண்டும்? கட்டுமான முதலாளிகளிடம் மற்றும் பொறியாளர்களிடம் அல்லவா போய் சொல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு போராடும் மக்கள் இயக்கத்திடம் வந்து google ஐ பாருங்கள் அந்த construction இருக்கிறது இந்த construction இருக்கிறது என்றால் எப்படி இருக்கிறது. இந்தளவுக்குக்கூட பொதுஉணர்வில்லாமல் எப்படி இருப்பது. எடுக்கப்படும் மணல் எல்லாவற்றையும் சுற்று வட்டார மக்களா பயன்படுத்துகிறார்கள். பெரும்பகுதி நகரங்களுக்கல்லவா கொள்ளையடித்துச் செல்லப்படுகிறது.

          இவர் சொல்லும் கட்டுமான முறைக்காக தேவையான இரும்பு போன்ற உலோகங்களுக்காக கூடுதலான மலைகளை காடுகளை அல்லவா அழிக்க வேண்டி வரும். அதைப் பற்றி யோசித்தாரா இவர். இவருக்கு மலைவாழ் மக்களின் வாழிடம் பாழடைந்தால் பரவாயில்லையா.

          Reducing the use, Reusing and Recycling are the sustainable and acceptable solution.

          • pk,

            தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள்.
            நான் சொன்னது LIGHT GAUGE STEEL. இந்த தொழில்நுட்பத்தில் வீடு கட்டினால் தற்போது கம்பிகளை வைத்து கட்டும் வீட்டுக்கு தேவையான இரும்பை விட குறைந்த அளவே ஸ்டீல் தேவைப்படும். ஒரு கான்கிரீட் வீட்டுக்கு தேவைப்படும் இரும்பை விட ஒரு 2௦ சதம் அல்லது 3௦ சதம் குறைந்த இரும்பே தேவைப்படும். கூகிளில் தேடிப்பாருங்கள்.

            இந்தியாவில் இத்தகைய கட்டிடங்கள் டெல்லி, மும்பாய் குஜராத் ராஜஸ்தான் போன்ற இடங்களில் பிரபலமாகி வருகிறது. ஆனால் இன்னும் தமிழகத்தில் பிரபலமாகவில்லை. வருங்காலத்தில் கட்டிடக்கலையில் இத்தகைய LGS ஸ்டீல் கட்டிடங்களே முதல் தேர்வாக இருக்கும்.

            நீங்கள் இத்தகைய தொழில்நுட்பம் முதலாளிகளுக்கு மட்டும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறுவதால் தான் அப்படியில்லை, சாதாரண பொதுமக்களுக்கும் இது பயனளிக்கும் என்று விளக்கினேன்.

            ஒரு இருபது முப்பது வருடங்கள் கழித்து இத்தகைய வீடுகளை இடிக்கும் போது இதில் இருக்கும் ஸ்டீல் திரும்பி மறுசுழற்சி செய்யப்பட்டு இன்னொரு வீடு கட்டவும் பயன்படும்.
            எளிதில் கட்டலாம், எளிதில் கழட்டலாம்.

            இந்த தொழில்நுட்பம் குறித்து மக்கள் அறிய வேண்டிய காலம் உள்ளது. மக்கள் தேவைக்கு ஏற்ப கட்டிடம் கட்டுபவர்களும் பொறியாளர்களும் மாறித்தான் ஆக வேண்டும். வீடு கட்டும் செலவு குறைந்தால் அவர்களின் இலாபம் குறையும் என்பதால் நம் ஊரில் கட்டுமான தொழில் கம்பெனிகள் இந்த தொழில்நுட்பத்தை வரவேற்க தயங்குகிறார்கள். பொதுமக்களுக்கு இத்தகைய கட்டிடங்கள் குறித்த அறிவு கிடைத்த பின் அவர்கள் வேறு வழியில்லாமல் இத்தொழில்நுட்பத்தில் வீடு கட்ட ஆரம்பித்து விடுவார்கள்.

            • கட்டிடம் கட்ட ஆற்று மனல் எடுக்க தேவை இல்லை என்ற நிலையில் ஏன் ஆற்று மணலை தேடி ஓட போகிறார்கள்?

              நீங்கள் ஆற்று மணல் எடுப்பவர்களை எதிர்த்து போராடுவதை நான் இகழவில்லை. உங்கள் போராட்டத்திற்கு என் ஆதரவு நிச்சயம் உண்டு.

              மணல் கொள்ளைக்கு எதிரான தங்களது போராட்டம் என்பது ஒரு கத்தி போன்ற ஆயுதம் என்றால் நான் சொன்ன முறை என்பது அதே மணலை கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்றும் கேடயம். கேடயத்தையும் பயன்படுத்துங்கள் என்று சொல்வதால் கத்தி பயன்படுத்துவதை இகழ்வதாக அர்த்தம் இல்லை.

              எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும், அப்பொருள்
              மெய்ப்பொருள் காண்ப தறிவு

              pk அவர்களே, கருத்தை யார் சொல்கிறார் என்பதை கொண்டு அதற்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்று தீர்மாணிக்காதீர்கள். என்ன கருத்தை சொல்கிறார்கள் என்று முதலில் நன்கு படித்து தெளிந்து பின் அதற்கேற்றாற்போல் பதிலளியுங்கள்.

      • திரு. கற்றது கையளவு ……….

        //உங்களுக்கு மக்கள் வருடம் முழுதும் நன்கொடை அளித்து கொண்டே இருக்க வேண்டும். அதில் நீங்கள் வயிறு வளர்த்து கொண்டு அதே மக்களை எமாற்றிக்கொண்டிருப்பீர்கள்……..//

        அப்படி நாம் சொல்லி விட முடியாது, நீங்கள் அவர்கள் நடத்தும் புதிய ஜனநாயகம் போன்ற பத்திரிக்கைகளை பாருங்கள் அதில் எந்த விதமான விளம்பரமும் இருப்பதை நீங்கள் பார்க்க முடியாது. எந்த நிறுவனத்திடம் இருந்தும், எந்த ஒரு முதலாளியிடம் இருந்தும் பணம் வாங்காமல் ஒரு மாத பத்திரிக்கை நடத்துகிறார்கள் என்றால் எப்படி முடிகிறது. பேப்பர் செலவு, printing Cost, கணிபொறி வடிவமைப்பு போன்று எவ்வளவோ செலவுகள் இருக்கின்றன. இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வரும். நீங்கள் கூறுவதுப் போல் மக்களிடம் இருந்து வாங்கிய நன்கொடை பணம் தான் அதற்க்கு உதவியாக இருப்பது. அதே போல் போராட்டத்திற்கு போஸ்டர் அடிப்பது, துண்டு பிரசுரங்கள் அச்சிடுவது போன்ற அனைத்து செலவுகளையும் எப்படி சமாளிப்பது. அபோல்லோ ரெட்டியிடமும், சரவணா ஸ்டோர்ஸ் முதலாளியிடமும் போய் பணத்திற்காக நிற்க முடியுமா. எந்த மக்களின், சமுகத்தின் முன்னேற்றத்திற்க்காக உழைக்கிறார்களோ அதே மக்களிடம் இருந்து தங்கள் போராட்டத்திற்கான பணத்தை நன்கொடையாக பெறுகிறார்கள். இதில் தவறொன்றும் இல்லையே. இதை நீங்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.

        • ரெபெக்கா மேரி அவர்களே,

          பொதுமக்களிடமிருந்து ஒரு நல்ல காரியத்தின் பெயரை சொல்லி நன்கொடை வசூலிப்பவர்கள் அந்த நல்ல காரியத்தை செயல்முறை படுத்தாமல் இருந்தால் அது நிச்சயம் தவறு தான்.
          எத்தனை ஆண்டுகள் மக்கள் தீர்வு என்று எதுவும் கிடைக்காமல் நன்கொடை கொடுத்து கொண்டே இருப்பார்கள்? Accountability இல்லாது மக்களிடமிருந்து பெறப்படும் நன்கொடைக்கும் பொய் வாக்குறுதி அளித்து மக்களின் ஓட்டுக்களை வாங்கும் அரசியல்வாதிகளின் செயலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. மக்கள் பணத்தை நன்கொடையாக வாங்குபவர்கள் அந்த மக்களுக்கு கடமைப்பட்டுள்ளனர்.

          மக்களிடமிருந்து பெறப்பட்ட பணத்தை வைத்து அந்த மக்களுக்கு பயனுள்ளதாக சிலவற்றை செய்யலாம்.

          ஒரு மாடல் கம்மியுனிச/சோஷலிச தொழிற்சாலையை நிறுவலாம். அங்கு வேலை செய்யும் அனைவருக்கும் சோஷலிச பாணியில் சம்பளம்/இலாபத்தில் பங்கு, என்று வழங்கி, அந்த தொழிற்சாலையை இலாபகரமாக நடத்தி காட்டலாம். கம்மியுனிச/சோஷலிச வழியில் ஒரு நிறுவனத்தை தொடர்ந்து நட்டமடையாமல் நடத்த முடியும் என்று நிரூபித்தால் பின் நாட்டில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் நேர்மையான தொழில் முனைவோரும் உங்கள் பக்கம் இருப்பார்கள். (தொழில் முனைவோர் அனைவரும் கொடூரர்கள் அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்).

          பெப்சி, கோக் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையாக உள்நாட்டு உணவுகள், பானங்கள், பொருட்கள், தயாரிக்கலாம். பெப்சி, கோக் போன்ற உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் பொருட்களை விட உடலுக்கு நன்மை பயக்கும் பொருட்களை குறைந்த விலையில் மக்களுக்கு அளித்து அவர்களை கவரலாம். ஒரு தனிப்பட்ட முதலாளியாக பெரும் முதலீடு தேவை. ஆனால் கூட்டுறவு முறையில் செயல்பட்டால் சிறிய முதலீட்டில் அனைவருக்கும் பயன் கிடைக்கும்.

          ஒரு பொருள் விலை ஏன் அதிகமாக இருக்கிறது? விவசாயி அடிமட்ட விலையில் விற்கும் ஒரு பொருள் பொதுமக்களை வந்தடையும்போது வானுயரத்திற்கு விலை ஏறுவது ஏன்?
          இடைத்தரகர்களின் பேராசை இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. முன்னர் திமுக ஆட்சியில் உழவர் சந்தை கொண்டு வந்ததை போன்று விவசாயிகள் ஒன்றிணைந்து அரசை நம்பாமல் அவர்களாகவே உழவர் சந்தை போன்ற அமைப்பை உருவாக்கி அந்தந்த ஊர் பொதுமக்களுக்கு பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்க வழி செய்யலாம். இடைத்தரகர்கள் இல்லை என்றால் விவசாயிகளுக்கும் அதிக வருமானம் கிடைக்குமே.

          பத்து பேர் சேர்ந்து கோஷம் போட்டு போராடுவதை விட பத்தாயிரம் பேர் சேர்ந்து கோஷம் போடாமலேயே அரசின் கவனத்தை கவரலாம். மக்கள் பிரச்சினைகளை தீர்க்கலாம்.
          வைகுண்டராஜன் போன்ற மணல் கொள்ளையர்களை ஒரு சிறு குழுவை கொண்டு எதிர்ப்பதை விட, இலட்சக்கணக்கில் மக்களை திரட்டி அவர்களை ஓட ஓட விரட்டலாம். அதனால் தான் தங்களது முயற்சிக்கு மக்களின் பேராதரவு மிக மிக மிக மிக முக்கியம் என்று பல முறை கூறி வருகிறேன். தனி மரம் தோப்பாகாது. ஒட்டு மொத்த மக்களை உங்கள் பக்கம் திருப்ப என்ன வழி என்று யோசியுங்கள்.

          • கற்றது கையளவு ,

            புரட்சிகர இயக்கங்கள் மக்களிடம் இருந்து பெறும் நன்கொடைக்கு Accountability இல்லை என்று பச்சையாக பொய்கூறி உங்கள் மனதை சாந்தம் அடைய செய்கின்றிகள். இதற்கு பதில் டாஸ்மாக்கில் குவாட்டர் அடித்துவிட்டு குடிபோதையில் சர்விஸ் ரோட்டில் மல்லாந்து படுத்துக்கொண்டு போதையில் உளறலாம். கடந்த பாராளுமன்ற பன்றித்தொழுவ தேர்தல் நேரத்தில் திருச்சியில் நடைபெற்ற ம க இ க இந்து மதவாத மோடி மதவாத எதிர்ப்பு பொதுக்கூட்டத்தை சென்னையில் இருந்து சென்று கண்டேன். ஆமாம் மக்கள் குறிப்பாக பொதுகூட்டத்துக்கு வந்து இருந்த தோழர்களிடம் துண்டேந்டி நன்கொடை வசூல் செய்தாரர்கள். அடுத்த அரை நிமிடத்தில் வசூலிக்கபட்ட தொகையை உடனே அறிவித்தார்கள். இதற்கு பெயர் Accountability இல்லையா ? அன்றைய மோடி மதவாத எதிர்ப்பு பொதுக்கூட்டம் என்பது காலத்தின் கட்டாயம். மக்களிடம் நன்கொடை வசூல் செய்த காசில் தான் அன்றைய பொது கூட்டமே நடந்தது. இங்கு விவாதத்துக்கு உரியது நன்கொடை கிடையாது. நன்கொடை அளிப்பதன் மூலம் மக்கள் மதவாதத்துக்கு எதிராக இருகின்றார்கள் என்ற செய்தி தான் முக்கியமானது .

            //Accountability இல்லாது மக்களிடமிருந்து பெறப்படும் நன்கொடைக்கும் பொய் வாக்குறுதி அளித்து மக்களின் ஓட்டுக்களை வாங்கும் அரசியல்வாதிகளின் செயலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. மக்கள் பணத்தை நன்கொடையாக வாங்குபவர்கள் அந்த மக்களுக்கு கடமைப்பட்டுள்ளனர்.//

            • தமிழ்,

              Accountability என்பது வாங்குகிற காசு இத்தனை என்று அறிவிப்பதில் மட்டுமில்லை. அது எவ்வாறு செலவழிக்கப்படுகிறது. அதனால் என்ன பயன் அந்த மக்களுக்கு கிடைத்தது, இதெல்லாம் முக்கியம்.

              நீங்கள் மக்கள் மதவாதத்திற்கு எதிராக இருக்கிறார்கள் என்கிறீர்கள். ஆனால் வோட்டை யாருக்கு போட்டார்கள்? ஜெயலலிதா என்ன மதசார்பற்றவரா? மக்களுக்கு திமுக ஆட்சியின் மேல் அளவு கடந்த அதிருப்தி இருந்ததினால் அவர்கள் அதிமுகவிற்கு வாக்களித்தார்கள். மற்றபடி காங்கிரஸ், பாஜக இரண்டுக்கும் தமிழக அளவில் பெரிதாக எந்த ஆதரவும் எப்போதும் இருந்ததில்லை. உங்கள் கூட்டத்தினால் தான் தமிழக மக்கள் பாஜகவிற்கு ஒட்டு போடவில்லை என்று சொல்வது கொஞ்சம் அதிகம் தான்.

              • Accountability என்பது நாம் எடுத்த காரியத்தை இந்த நேரத்துக்குள் முடிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்க வேண்டும். இது மிக முக்கியம். குறிக்கோள் இல்லையென்றால் இப்போதிருக்கும் நிலை மாறாது, காலத்துக்கும் அப்படியே தான் இருக்கும்.

                ம.க.இ.க வின் குறிக்கோளை எடுத்து கொள்ளுங்கள். புரட்சி என்பது குறிக்கோள் என்றால் அதற்கான வெறித்தனமான முயற்சி இருந்தால் தான் அது நடக்கும். Target, Goal இல்லாமல் முன்னேற்றம் கிடைக்காது. அப்படியே தேங்கிக்கொண்டு தான் இருப்போம்.
                3௦ வருடம் ம.க.இ.க. புரட்சிக்காக போராடுவதாக தோழர்கள் சொல்கிறார்கள். இந்த நேரத்தில் இந்த வேலையை முடித்திருக்க வேண்டும் என்ற காலக்குறிக்கோள் இல்லை என்றால் 3௦ வருடம் என்பது 3௦௦ வருடமாகவும் ஆகலாம். அதுவரை பொறுத்திருந்தால் நட்டம் யாருக்கு?

                பொதுமக்களிடமிருந்து பெறப்படும் நன்கொடை அந்த பொதுமக்களுக்கு பயனுள்ள வழியில் செலவழிக்கப்பட வேண்டும், அதே சமயம் தீர்வுகள் கிடைக்க வேண்டும். எட்டு சுரக்காய் கறிக்குதவாது. அதனால் மீண்டும் மீண்டும் புரட்சி வரும் என்ற கனவினிலே இருக்காமல் செயல்முறையில் காட்ட வேண்டும். முதல் கட்டமாக இடைநிலை குறிக்கோள் ஒன்றை அறிவியுங்கள். தொழிலாளர்களுக்கு ஊதிய நிர்ணயம் சரியில்லை எனில் அவர்களுக்கு குறைந்த பட்ச சம்பளம் இவ்வளவு இருக்க வேண்டும் என்று அரசை நிர்பந்திப்பது எப்படி என்று யோசியுங்கள்.

                • கார்புரெட் ஆபிசர் போன்ற தோரனையுடன் புரட்சிக்கு டார்கட் எல்லாம் கொடுத்து பேசும் உங்கள் பேச்சு ஏட்டுக்கல்வி போன்ற நிலையில் தானே உள்ளது. புரட்சிக்கான அக புற சூழல்களை எல்லாம் கானாமல் வெற்று கூச்சல் எதற்க்கு?

                • Accountability குறித்து கற்றது கையளவின் பின்னூட்டங்கள் அனைத்தும் பச்சையான அவதூறு அரங்கேற்றங்களே! இதைச் சுட்டிகாட்டுவதற்கு இரண்டு சான்றுகளையும் இரு தீர்வுகளையும் முன்வைக்க விரும்புகிறேன்.

                  1. ஒரு நபர் கட்டுகிற சொத்து வரியில் பத்துசதவீதம், நூலகங்கள் அமைப்பதற்காக செலவிடப்படவேண்டும் என்பது அரசு விதி. கற்றது கையளவு போன்ற மேட்டுக்குடிகள் என்றைக்காவது அரசிடம் இது குறித்து accountability பற்றி வாய் திறந்திருக்கிறார்களா? மாட்டார்கள். இவர்களுக்கு பிரச்சனை அரசு அல்ல. அந்த அரசை எதிர்க்கிற புரட்சிகர இயக்கங்கள் தான். இதுதான் இவர்களுக்கு கசப்புவிடமாக தாங்கமுடியாத அரிப்பாக இருக்கிறது. இதைத்தான் ஆளும் வர்க்க கைக்கூலித்தனம் என்கிறோம்.

                  2. தமிழ்நாட்டில் ஆதிதிராவிட பள்ளிகளுக்காக இன்னும் செலவிடப்படாமல் இருக்கிற தொகை 4000 கோடிகளுக்கும் மேல். இங்கேயும் கற்றது கையளவு போன்றவர்கள் அக்கவுண்டபிலிட்டி குறித்து கிஞ்சித்தும் வாய்திறக்க மறுப்பது ஏன்?

                  இந்த இரண்டு விடயங்களுக்காக கற்றது கையளவு வாய்திறக்க விரும்புவாரெனில்

                  1. வீதிதோறும் மக்களைத்திரட்டி பஞ்சாயத்து அலுவலகம், தாசில்தார் அலுவலகம், கலக்டெர் அலுவலகத்தில் கண்டன ஆர்பாட்டம் என நடத்த முன்வருவாரா? சிறுகச் சிறுக செல்லவேண்டும் என்பது க,கையின் உபதேசம் அல்லவா? ஆகையால் இந்த மூன்று அரசு உறுப்புகளையாவது கேள்வி கேட்டு, மக்களைத் திரட்ட முன்வரவேண்டும்.

                  2. அப்படி நடத்துவதற்கு தேவையான டார்கெட், இலட்சியம், குறுகிய கால இலட்சியம் போன்றவற்றை வாசகர்கள் முன்வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

                  3. அதே போன்று பள்ளிகளில் தொகை ஒழுங்காக செலவிடப்பட்டிருக்கிறதா என்பதை அறியவும் கற்றது கையளவின் தலைமையில் ஒரு கமிட்டி அமைவதை உறுதிப்படுத்த வேண்டும்.

                  4. இக்கமிட்டி, புரட்சிகர இயக்கங்களின் செயல்பாடுகளைப்போல, பேருந்து பிரச்சாரம், ரயில் பிரச்சாரம், தெருமுனைப்பிரச்சாரம் போன்றவற்றை முன்னெடுக்க வேண்டும். இதற்குத்தேவையான நிதியை மக்களிடம் இருந்து திரட்டுவதோடு, தான் சாப்பிடுகிற உணவிற்கு புரட்சிகர இயக்கங்களைப்போல ஒவ்வொரு மக்களிடம் சென்று அவர்கள் மனம்விரும்பி வழங்கும் உணவையே உண்ணவேண்டும். இதற்கு பிரச்சார நிதியைப் பயன்படுத்துவது கூடாது.

                  மேற்கூறிய நான்கையும் கற்றது கையளவு செயல்படுத்துவதற்குத் தேவையான புளூபிரிண்டுடன் டார்கெட்டுடன் சீக்கிரம் அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்.
                  அதைவிடுத்து தன் வீட்டுப்பெண்களையே விபச்சாரத்தில் தள்ளிவிட்டு கற்பு குறித்து வகுப்பெடுப்பது கடைந்தெடுத்த கருங்காலித்தனம் என்பதை அவர் அறிவார் என்று நம்புகிறேன். அப்படிப்பட்டவர்களை இனங்கண்டு அம்பலப்படுத்தப்படுவதற்கு கற்றது கையளவும் உதவ வேண்டும்.

              • உங்கலுடைய பின்னுட்டட்தின் சாரம்சம் என்ன? பிஜ்பிக்கு தமிழ்நாட்டில் ஏதும் பெரியதான ஆதரவு இல்லை. அதனால் அவ்ர்கலுக்கு எதிராக ம க இ க பொதுகூட்டம் நடதினால் எதும் பயன் இல்லை என்ப்து தானே? இதில் உங்கல் ம்தசர்பின்மையும் ப்ல் இலிக்கின்ரதே !

                மதவாதிகலுக்கு எடிராக ஜனனாயக ரீதி யில் குரல் கொடுப்பது கூட வேன்டா செய்ல் என்ரால் உங்கல் அரிவில் ஏதொ குரை இருகின்ரதே!

                அந்த கூட்டட்தில் பெரபட்ட நன் கொடையெ அந்த கூட்டட்துக்கான செலவு என் கின்ர போது அக்கொயுன்டப்ட்டியில் என்ன பிரச்சனை க கை க்கு?

          • K.K says that all entrepreneurs are not sadists.But today”s post of Vinavu carries a news report about Syntel,an IT firm started and run by Non-Resident Indians doing business from USA.This company,in spite of earning $3 crore more profit during FY 2014 than the previous year(profit earned during FY 2014-$24.97 crore)is implementing lay-off in India right now.It proposes to send 3000 people from job in India out of 24000 employees world-wide.The employees are called to the cabin of the HR Manager,compelled to sign resignation letters and asked to pack off within 15 minutes.If NRIs,who were educated with Indian tax-payers” money behave like this,where K.K will find reasonable if not compassionate employers?

            • Sooriyan,

              As per your statements earlier, You are the CEO of a company and you mentioned that all your employees are getting good remunerations, Bonus, Job Security, Health and Safety measures, Medical Insurance, Performance Bonus, Promotions, recognition and also there is a proper worker’s union in your office. So, What I said is true – “All Entrepreneurs are not Bad”
              There are compassionate employers available.

              Now about Syntel, If one company treats its employees badly, does it mean that all the entrepreuners (Including the owner of your company) are bad?

              Epporul yaar yaar vaai ketpinum,
              Apporul meipporul kaanbadhu arivu!

            • Sooriyan,

              I dont drink Pepsi and Coke. But sometimes, if little children ask for aerated cool drinks, I buy Bovento for them.

          • திரு. கற்றது கையளவு…

            தங்களின் கருத்து மிக சிறப்பான ஒன்று. கை தட்டி வரவேற்கிறேன். கம்யுனிசம் தான் அனைத்திற்குமான தீர்வு என்பதை நானும் மறுக்கிறேன். தாங்கள் மிகச் சிறந்த தொழில் முனைவோராக உருவாவதற்கு என் வாழ்த்துக்கள்.

      • கற்றது கையளவு,

        சரி வாங்குன காசுக்கு ஏதாச்சும் தருமகாரியம் பண்ணியிருக்கணும் என்று தாங்களே கூறுவதால் எனக்குத் தெரிந்து சில தகவல்கள்,

        1. சமசீர் கல்விக்கான போராட்டங்கள்
        2. தில்லை கோவில் தமிழ் பாடும் உரிமைக்கான போராட்டம்,
        3. அர்ச்சகர் போராட்டம்,
        4. ஏழை எளிய குழந்தைகள் படிக்க அரசுப் பள்ளிகள் வேண்டி போராட்டம்.
        5. மணல் கொல்லைக்கு எதிராக போராட்டம் ,
        6. தாது மணல் கொல்லைக்கு எதிராக போராட்டம் ,
        7. வைகுண்டராஜனுக்கு எதிராக போராட்டங்கள்…. இன்னும் பிற.

        சரி காசு குடுத்தாச்சு. சிகிச்சை பலனளிக்காமல் போய் விட்டால்?

        ஒரு நோயாளிக்கு சிகிச்சைக்கு நன்கொடை கொடுப்பதை விட கோடிக்கணக்கான ஏழை எளிய மக்கள்
        குறைந்த செலவில் சிகிச்சை பெற அரசு மருத்துவமனைகள் தான் வேண்டும். காசுக்கு தான் சிகிச்சை என்ற நிலைமையில் எத்துணைப் பேருக்கு நன்கொடை கிடைத்து விடும். கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களுக்கு யார் நன்கொடை கொடுப்பார்கள்? எங்கே மருத்துவம் என்று அரசின் மென்னியைப் பிடித்து கேட்பதை விடுத்து மக்களை பிச்சை எடுக்க சொல்கின்றீர்கள்.

        ஒரு ஏழை மாணவனின் கல்விக்கு நன்கொடை கொடுப்பதை விட அரசுப் பள்ளிகள் வேண்டும் என்ற போராட்டம் தான் கோடிக்கணக்கான ஏழை எளிய மாணவர்களுக்கு பயன் தரும்.சூர்யா ஒருமுறை சொன்னார் “நான் உழைச்சு சாப்புடுறேன்”. உழைச்சு சாப்புடற எல்லாதையும் செருப்ப கழட்டி அடிச்ச மாதிரி. கோடிக்கணக்கில் சினிமாவில் சம்பளம் வாங்கி அதில் சில ஆயிரங்களை தூக்கி ஒரு ஏழைக்கு படிக்க உதவி செய்வதை விட, அந்த ஏழைகள் படிக்க அரசுப் பள்ளிகள் தான் வேண்டும், அது தான் சரியானது என்று தமது சொந்த வாழ்க்கையை முழுவதையும் இதற்காக அர்பணிக்கிறார்கள் தோழர்கள். அவர்களுக்கு நன்கொடை அளிப்பது தான் சரியானது.

        ஒருவரின் தாகத்துக்கு தண்ணீர் கொடுப்பதை விட கோடான கோடி மக்களின் தாகம் தணிக்கும் ஆறுகளை காப்பதற்காக நடக்கும் போராட்டங்களுக்கு நன்கொடை தருவது தான் சிறந்தது. மணலுக்கு பதிலாக தொழினுட்பத்தை மக்களுக்கு கற்றுத் தரலாம் என்று பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகூண்டில் ஏற்றும் கற்றது கையளவு இப்பொழுது தோழர்கள் மக்களுக்கு என்ன செய்துள்ளார்கள் என்று கேட்கிறார்.

        தமிழர்கெல்லாம் பெரிழிவாம் “தமிழ் இன்னும் கோயில் நுழையாமல் இருப்பது”. கோவில் உண்டியலில் காசு போடுவதை விட , தமிழ் பாடும் உரிமைக்காக போராடும் தோழர்களுக்கு நன்கொடை கொடுத்தால் தமிழர் மானம் தப்பும். காசு பணத்தை விட மானம் தான் பெரிது. கேவலம், தமிழரின் தாய் மண்ணில், அவர்களது தாய்மொழி கோவிலுக்குள் நுழைய கூட தீட்டு. இந்த நிலையில் ஏழைகளுக்கு காசி ராமேஸ்வரம் என்று இலவசமாக டூர் கூட்டிகிட்டு போறார்களாம். என்ன கொடுமைடா இது.

        ஏழை மக்கள் கொடுக்கும் நன்கொடை இப்படிஎல்லா வழிகளிலும் அவர்களுக்காகத் திருப்பபடுகிறது. உங்களை போன்றவர்கள் திருப்பதி உண்டியல்களில் போடுவதையும், பிச்சைகாரர்களுக்கு சில நாணயங்களை சுண்டி விடுவதையும், அனாதை விடுதிகளுக்கு நன்கொடை தருவதையும், குருதி தானம் செய்வதையும், கடற்கரையை சுத்தம் செய்வதையுமே பெரிய செயலாக கருதுகிறார்கள்.

        இப்படி எல்லாப் போராட்டத்தின் உழைப்பும் உங்களை போன்ற கைக்கூலிகளுக்கும் சேர்த்து தான் செலவாகிறது என்பது தான் சோகத்தின் உச்சகட்டம்.

        • சிவப்பு,
          இரண்டுவிதமான செயல்பாடுகளும் தேவை என்று நான் நினைக்கிறேன். கல்வியும், மருத்துவமும் அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகள் மூலம் எல்லாருக்கும் சிறப்பாக கிடைத்தால் இவை தொடர்பான தான தருமங்களுக்கு தேவை இல்லாமல் போய்விடும் என்பது சரிதான். அதுவே முழுமையான தீர்வாக இருக்க முடியும். எனினும், அது வரும் வரை என்ன செய்வது? இதய வலி என சொல்பவனிடம் சித்தாந்தமா பேச முடியும்? உடனடி பலன் தரும் செயல்களும் தேவைதான். இதுபோன்ற சேவைகளில் ஈடுபடுவோரையும், அதற்கு நிதி, இன்னபிற வகைகளில் உதவுவோரையும் இளக்காரமாக பார்ப்பதை ஏற்க முடியாது.

          சூழ்விசும்பணிமுகில் தூரியம் முழக்க வைகுந்தம் புக வேண்டும் என்ற குறிக்கோள் உயர்ந்ததுதான். ஆனால், அதற்காக, உடனடியாக செய்ய முடிவதான பக்கத்து தெரு பெருமாள் கோவிலுக்கு செல்வதை விட முடியுமா என்ன?

          • வெங்கடேசன்,

            தங்களது கருத்துக்களில் எனக்கு ஓரளவிற்கு உடன்பாடு உண்டு. ஆனால் இங்கே யார் யாரை இளக்காரமாக பார்க்கிறார்கள் என்பதில் தான் சிக்கல். தாங்கள் அப்படி ஏழைகளின் இதய வலிக்கு விக்ஸ் தேச்சி விடுவதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் இதய வலிக்கு விக்ஸ் தேச்சி விடுவதையே பெரிய சாதனையாக கூறினால் எப்படி?

            எது நிரந்தர தீர்வோ அல்லது ஏற்றத் தாழ்வை ஒழிக்க வல்லதோ அதை நோக்கி தான் நமது குறிக்கோள் இருக்க வேண்டும். உண்மையில் இந்த தான தரும காரியங்கள் அந்த நிரந்தர தீர்வுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதை தாங்கள் அவதானிக்கவில்லையா.

            சமுதாயப் பிரச்சினைகளுக்கு தனிநபர்களுக்கான தீர்வை எப்படிப் பொருத்த முடியும்?

            நீங்க என்ன பேரம் பேத்தி எடுத்த கிழடா? 🙂 இல்ல வைகுந்தம் போகுனும்னு ஆசைப்படறேலே அதான்….. சும்மா தான் சொன்னேன். கொவிச்சுக்கதீங்க.

          • வெங்கடேசனின் கருத்தயே நானும் வரவேற்க்கிறேன் இதே கருத்தயே நானும் தெரேசா பற்றிய கட்டுரையில் சொல்ல முனைந்தேன் ஆனால் இதை தமிழ் தாகம் என்பவர் டரேக் மாத்தி விட்டுட்டாரு

        • சிவப்பு அவர்களே,

          அனைத்து மக்களுக்கும் இலவச கல்வி, இலவச சிகிச்சை, எல்லாம் கேட்க நன்றாக தான் இருக்கிறது. அவற்றை நடைமுறை படுத்த என்ன முயற்சி எடுத்தீர்கள்? உங்கள் உதாரனப்படியே நீங்கள் இதய நோய்க்கு விக்ஸ் தடவலாமா என்று கேட்கிறீர்கள்? விக்ஸ் தடவினால் இதய கோளாறு சரியாகாது. உண்மை. ஆனால் நீங்கள் கூறுகிற புரட்சி என்ற சிகிச்சை என்பது ராம்தேவ் யோகா செய்தால் கான்சர், எய்ட்ஸ், இதயநோய் அனைத்தையும் மருந்தின்றியே குணப்படுத்தலாம் என்று கூறுவது போலல்லாவா இருக்கிறது. இந்த புரட்சி சிகிச்சையின் மூலம் தற்போது உலகில் உள்ள 247 நாடுகளில் எத்தனை நாடுகளில் இந்த சிகிச்சை முறை பலனளித்தது என்று பார்த்தால் இப்போதைக்கு அதற்கான பதில் ‘௦’. பின் எப்படி எங்களை போன்ற பொதுமக்களுக்கு உங்களின் சிகிச்சையின் மேல் நம்பிக்கை வரும்? நிகழ்காலத்தில் உங்கள் சிகிச்சை முறை வெற்றிகரமாக ஒன்றிரண்டு நோயாளிகளை (நாடுகளை) குணப்படுத்தினால் தானாக எல்லா நோயாளிகளும் நிச்சயம் தங்களது சிகிச்சை முறைக்கு மாறி விடுவார்கள்.
          இந்த சிகிச்சை முறை முன்பு பயன்படுத்தப்பட்ட ரசியா, சீனாவில் இப்போது அந்த சிகிச்சை முறையினர் மக்கள் கைவிட்டனர். பின் எதை நம்பி உங்களது சிகிச்சையை நாங்கள் நம்புவது?

          ஏழை மக்களுக்கு நன்கொடை வழங்கினாலும், அனாதை விடுதிகளுக்கு நன்கொடை தருவதாலும், கடற்கரையை சுத்தம் செய்வதாலும் கண்ணுக்கு தெரிந்து சில நல்ல மாற்றங்களை நம்மால் காண முடிகிறதே, முப்பது வருடமாக (கணக்கு சரிதானா?) புரட்சி வரும், புரட்சி வரும் என்று பொதுமக்கள், உழைப்பாளிகள், தொழிலாளிகள் கொடுத்த பணத்திற்கு என்ன பலன் கிடைத்தது? இதை குற்றச்சாட்டாக எண்ண வேண்டாம். நீங்கள் பணத்தை ஊழல் செய்வதாக சொல்வதாக கருத வேண்டாம். அந்த பணத்தை பொதுமக்களின் நலனுக்கு பயன்பட்டதா, இல்லை வீணாக போனதா என்பதே என் ஐயப்பாடு. பொதுமக்களுக்கு எந்த நன்மையையும் பயக்காத ஒன்றுக்கு என்னிடம் இருந்து நன்கொடை வராது. அதனால் தான் கோவில்களுக்கு நான் நன்கொடை அளிப்பதில்லை.

          நீங்கள் வாங்கும் நன்கொடை மக்களுக்கு எந்த வகையில் பயனுள்ளதாக விளங்கியது, எத்தனை மக்களின் வாழ்க்கையை முன்னேற்றியது, எத்தனை குடும்பங்கள் பயனடைந்தன என்று நீங்கள் சற்று யோசித்து பார்த்தீர்கள் என்றால் தற்போது உள்ள வேகத்தை விட அதிகமான உத்வேகத்தோடு மக்களுக்கு பயனளிக்க முயற்சிக்கலாம், இல்லை தங்களது வியுகத்தை மாற்றி பார்க்கலாம். Law of Diminishing Returns என்று சொல்வார்களே, தங்களது முயற்சிக்கான பலன் மிகவும் காலதாமதமாகும் போதும், முயற்சிக்கான பலன் நாளுக்கு நாள் குறைந்து வரும் வேளையிலும் அந்த முயற்சியின் வீரியத்தை அதிகரிக்க வேண்டும், இல்லை மாற்று வழியில் முயற்சிக்க வேண்டும்.

          பொதுமக்களிடமிருந்து ஒரு நல்ல காரியத்துக்காக நன்கொடை வசூலிப்பவர்கள் அந்த பொதுமக்களுக்கு அந்த நல்ல காரியத்தை விரைவில் செயல்படுத்த கடமைப்பட்டுள்ளார்கள்.

          உடனே முதலாளித்துவ அடிவருடி, கைக்கூலி, கால்கூலி, என்று வழக்கம் போல ஒரே பல்லவியை பாடாமல், உங்களிடம் செயல்படுத்தும் வகையில் என்ன தீர்வு இருக்கிறது என்று யோசித்து பதில் அளியுங்கள்.

          • கற்றது கையளவு,மக்கள் நல அரசு என்ற கோட்பாடே கம்யுனிஸ்டுகள் உலகுக்கு சொல்லிகொடுத்த பாடம் தான். 247 நாடுகளில் எங்கே மக்கள் நல அரசு என்ற கோட்பாடு நடைமுறையில் உள்ளது ? என்று ஏகத்தாளமாக கேட்கின்றிர்கள் . என்னுடைய கேள்வி என்னவென்றால் மக்கள் நலனுக்கான அரசை அமைக்க முடியவில்லை என்றால் பின்பு என்ன மயிருக்கு ஜனநாயக நாடு என்ற பீற்றல். ? கம்யுனிஸ்டு ரசியாவின் மக்கள் நல அரசு கொடுத்த சாட்டையடிகள் தான் மேற்கு ஐரோபிய நாடுகளை திசை திருப்பி சமுக பாதுகாப்பு திடங்களை மேற்கு ஐரோபிய நாடுகள் தம் மக்களுக்கு நடைமுறை படுத்தியது. கோயம்பேடு மூட்டை தூக்கும் தொழிலாளியையும் ,வெளிநாட்டு திரும்பி கற்றதையும் ஒரே தராசில் நிறுத்தி வைத்து அவர்கள் இருவருடைய பொருளாதாரத்தை எடைபோடமுடியுமா ? வெளிநாட்டு திரும்பி கற்றது எதனையும் காசுகொடுத்து வாங்க முடியும். கோயம்பேடு மூட்டை தூக்கும் தொழிலாளி அவர் குழந்தையின் கல்வி , மற்றும் மருத்துவத்துக்கு இந்த சமுகத்தை சார்ந்து தான் இருப்பார்.

          • Mr K.K,You have left a challenge stating that no country (among 247 countries) is offering welfare measures for its people.I would request you to read an article by Mrs V.Vasanthi Devi,Former VC,Annai Theresa University in “Tamil Hindu”dt 21-10-2014.The title of the article is “BOLIVIYAAVAI PAARUNGAL MODI”I am giving the gist of that article.
            This Latin American Country was run by a puppet Govt of America until 2005.Evo Moralis,won in the Presidential elections and became the first President from the tribal community.
            Evo Moralis brought an end to Dark era.People were struggling for water and gas which were under private control.Moralis brought a New Constitution in 2009 giving lead role for State”s control over industries.Focus was given for poverty elimination.Top industries in telecommunication,tin,zinc which were in the hands of Italian corporates were nationalized.
            Gigantic welfare measures were undertaken.Medical facilities for pregnant women,higher allocation for education,more educational facilities with the help of Venezuela and Cuba were provided.Decent pensions were given to the elderly.There was four fold increase in issue of pattas for small farmers.
            Women empowerment led to women representation in Parliament at 28%,47% in Senate and 50% in the Cabinet.There are 10 women ministers out of whom 3 are from tribal community.
            UNESCO has praised Bolivia for bringing an end to illiteracy.Bolivia has provided total employment through its Public Sector.
            “Evo Moralis has dramatically changed the control of national wealth in the hands of 20% of the top rung of the population to the bottom 20% of the population”-UNDP
            GDP doubled between 2006 and 2012.In the past 9 years(2005-2014),with the focus on poverty alleviation,Bolivia has succeeded in establishing growth and democracy.Among the Latin American countries,Bolivia is the only country with low inflation rate and high savings.Natural gas was gradually nationalized and the growth was doubled.
            In the recent Presidential elections held in the second week of Oct,2014,Moralis won with 60% votes (for the third time) and defeated his rival propped up by American corporates.
            “Bolivia ,by its excellent example,has become a threat to the Universal Capitalism”-Noam Samsky,Leading Political Thinker.
            Moralis says that he was inspired by Fidel Castro,Hugo Chavez and Che Quvera.He strives for the cooperation among his fellow Latin American Countries.

            • Basically Socialism will work if you have oil wealth.
              When Tamilnadu doesnot have oil, it sells liqor

              Saudi Arabia also has those things.

              If Moralis was given Japan like country with nothing no natural resource to sell, do you think he would have pulled it off?

              • Tamilnadu does not have oil.OK.But,it had lot of minerals in sand.Who looted them with whose help?There was an article in yesterday”s Dinamani.with a title,”MARANGALAI VETTUBAVARGALAA PAZHANGUDIGAL”written by Monica Maran.If you read it,you would come to know how the forest wealth in Javaadhu Hills and Kolli Hills were looted?Tamilnadu means not just liquor sales.

                • @Sooriyan

                  //Tamilnadu does not have oil.OK.But,it had lot of minerals in sand.//

                  Does that mean you agree “wealth distribution will work only if wealth generation is by selling natural resources”

                  //
                  Sand issue
                  how the forest wealth in Javaadhu Hills and Kolli Hills were looted//

                  It is law and order issue and has no link to ideology of countries.

                  • @Raman,I do not agree with you.Natural resources should not be allowed to be looted and they have to be utilized for the common good without hampering the environment.It is not simply a law and order issue.With the connivance of the rulers or concerned officials of the concerned departments only those natural resources were looted.Have you heard about the New High power committee on environment and their recommendations.It cannot be called environment protection committee but one stop projects clearance committee.Now tell me whether protection of environment and forest resources are linked with the ideology of the country or not.

            • Sooriyan,

              Boliviya was subjected to extreme capitalism before and hence suffered. Now they are trying to pull back. I am not advocating for that kind of extreme capitalism where water rates were tripled. What Evo Moralis had brought is a revolution there in Boliviya, No Doubt. The Reforms are good for them. But we should also consider that Boliviya is blessed with plenty of natural resources – Gas, Tin, Lithium. They have the second largest gas resource in all of south america and Lithium is one of the most sought materials due to the growth of the electronics industry. So if their economy is properly managed, without corruption, they will prosper and should prosper. I have nothing against Evo Moralis. If you have read my earlier comments, I never advocated extreme capitalism and corporatism.

              To be frank, I have not read too much about Boliviya and hence I cannot comment on the social, political situation there. If you compare, there are lot of democratic countries in this world where the government does take care of its people. Take the case of the Scandinavian countries. So, we can understand that whether democratic or socialistic or communistic, as long as the government is taking care of the people, as long as there is no corruption, as long as there is a genuine concern towards the poor and the downtrodden, then the country will prosper, irrespective of the type of governance, even if it is ruled by a kingdom.

              So, the type of government is not important as long as the governance is proper.

              • I differ with you Mr K.K.Type of govt is important.The ruling party should have some ideology.For example,Modi has an ideology and he is implementing his plans to achieve his goal.He may succeed or may give up at least some of his plans due to stiff opposition.You were talking about Kejriwal in your different comment.Kejriwal succeeded by promising to solve every day problems of Delhi people.Just by solving every day problems of Delhites,he can not succeed in the long run.He has no fixed ideology.When he was with Hazare,he was fighting against corruption in govt offices.But the Hazare”s movement was financed by whom?The corporates,who were the very source of corruption.They were financing Hazare”s movement just to replace ManmohanSingh”s govt.The concessions given by the previous govt were not enough for the greedy corporates.They wanted more faithful servant for them.You would have read the speech of Sonia in the Lok Sabha.She was not opposing concessions to corporates but only concessions sought to be given to selected corporates.Unless the ruling party has some ideology,it cannot bring suitable legislations to implement the ideology.Moralis is following socialism as the ideology and nationalized the the national wealth.By managing those wealth well,he could bring several welfare measures for his people.

        • Sivappu,Super reply to K.K.As I already stated this man is pretending to be sleeping.He will not wake up.Instead of wasting our energy on this type of people,let us do our constructive work.

      • பின்னுட்ட பதிவுகளில் பொய்கள்

        அவதூருகள் , மனவக்கிரங்கள்

        விளக்கினாலும் மீண்டும் மீண்டு எழும்

        நீலிக்கண்ணிர் முதலை பெருமூச்சுகள்

        என்று தம்மை அடையாளம் காட்டிகொள்ளும்

        கற்றதுகள் !

        • உப்புமா,

          உங்களை போல சொந்த கருத்தென்று எதுவும் இல்லாமல் அடுத்தவர் கருத்துக்கு ஜால்ராவாக போடுபவராக இருப்பதை விட நேருக்கு நேர் கேள்வி கேட்கும் நான் பரவாயில்லை. மற்றவர்களிடமிருந்தாவது சில சமயம் தீர்வுக்கான வழிகள் கிடைக்கிறது. ஆனால் உங்கள் பின்னூட்டத்தில் எப்போதும் அடுத்தவர் கருத்தை வழிமொழிவது, இல்லை என்றால் சகட்டு மேனிக்கு தாக்குவது, இதை தாண்டி உங்களிடமிருந்து எதுவும் நான் காணவில்லை.

      • என்ன கற்றது , இப்படி __________ நாரதனத்துடன் புரச்சிகர இயக்கங்கங்கள் மீது உங்கள் அவதூறு நரகல்களை கழிந்து வைகின்றிர்கள்.? ஒரு பக்கம் SRMU கன்னையாவை உதாரணம் காட்டி அதனுடாக புரச்சிகர இயக்கங்கங்களை சிறுமை படுத்துவது ,மறுபுறம் புரச்சிகர இயக்கங்கங்கள் ஏழை எளிய தொழிலாளர்களிடம் இருந்து பெரும் போராட்டத்துக்கான நன்கொடைகளை பற்றிய கீழ் தரமான அவதூறுகள் . ஹும் இப்படியே பேசிக்கொண்டு இருந்திர்கள் என்றால் உங்களின் வக்கிர உண்மை முகம் முழுமையாக வெளிப்படும். இந்தியாவில் ஏற்பட்டுகொண்டு இருக்கும் புதிய சனநாயக புரச்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்ய யாரிடம் இருந்து எவ்வளவு காசு பெற்றிர்கள் கற்றது ?

        • தமிழ்,

          அந்த SRMU கன்னையாவும் நீங்கள் சொல்வதையே தானே சொல்கிறார். தொழிலாளிகள் ஒற்றுமை ஓங்குக, கம்மியுனிசம் ஓங்குக என்று சிவப்பு கொடியோடு தான் அவர்களும் ஐசிஎப் முழுதும் போஸ்டர் ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர் போவது பென்ஸ் காரில். தொழிலாளிகளின் ஆதரவை வைத்து, யூனியன் என்ற பெயரில் வயிறு வளர்த்து பணக்காரராக இருக்கும் அவரை பற்றிய தங்களது கருத்து என்ன?

          • காங்கிரஸ் ,பிஜேபி போன்ற ஓட்டு பொறுக்கிகள் , கண்ணையா போன்ற பிழைப்புவாதிகளை உங்களால் அடையாளம் காண இயலவில்லை என்றால் பின்பு நாம் கற்பதன் பயன் ஏது ? புரிகின்றதா கற்றது ? புரியவில்லை என்றால் விளக்குவதற்கு தயாராகவே உள்ளேன்.

            தமிழ் நாட்டில் புரட்சியாளர்கள் தம் தொழிலாளர்களை புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி என்ற தொழில் சங்கத்தின் கீழ் அணிதிரட்டிக்கொண்டு இருக்கும் நிகழ்வு வினவு கட்டுரைகள் மூலம் நாம் தினமும் காண முடிகின்றது. அதனை பற்றி உங்கள் கருத்துகளை எடுத்து வைப்பது தான், தென்றலுக்கு கொடுக்கும் நியாயமான பதிலாக இருக்கும் . நியாயமான பதில் கறதுவிடம் இருந்து கிடைக்குமா ?

  11. தென்றல்,

    மீண்டும் அதே புலம்பல், தாக்குதல். அசிங்கமான உவமானங்கள். இதற்கு மேல் உங்களிடம் ஒன்றும் எதிர்பார்ப்பது என் தவறு தான்.

    புரட்சியை கொண்டு வருவேன் என்று மக்களிடம் வாக்குறுதி கூறி நன்கொடை பெற்றுக்கொண்டே அந்த புரட்சிக்கான செயல்முறையில் இறங்காமல் வெறும் வேற்று முழக்கங்களில் ஈடுபட்டால் அது பயன் தருமா?

    உங்கள் மார்க்சிய ஆசான்களின் குறிக்கோள்களை நீங்கள் சரியாக செயல்படுத்தி இருந்தால் குறைந்த பட்சம் ஒரு நகரத்தில் உங்களுடைய தாக்கத்தை மக்களிடம் ஏற்படுத்தி இருப்பீர்கள். புரட்சி வரும் என்ற நமிபிக்கையில் உங்களுக்கு நன்கொடை கொடுத்தவர்களுக்கு உங்கள் பதில் என்ன?
    பிம்பிளிக்கி பிளாப்பி தானே?

    தங்களது குறிக்கோளுக்கு ஒரு தெளிவான வரைபடம் இல்லை, தெளிவான பாதை இல்லை, இடைநிலை குறிக்கோள் இல்லை, எப்போது என்ன செய்வீர்கள் என்ற கால வரையறை இல்லை, கம்மியுனிசம் குறித்து பொதுமக்களிடம் இருக்கும் சந்தேகங்களுக்கு நேரடியான நேர்மையான பதில்கள் இல்லை, குறைந்த அளவில் ஒரு முன்மாதிரி அமைப்பை செயல்படுத்துங்கள் என்றாலும் அதற்கும் மழுப்பல் பதில்கள். இது எதுவுமே இல்லாமல் ஒட்டுமொத்த 7 கோடி தமிழக மக்களும் உங்களை நம்பி புரட்சிக்காக ஆட்சி பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்ற பேராசை மட்டும் உள்ளது. ஒரு ஒட்டுமொத்த நாட்டின் ஆட்சியமைப்பை மாற்றுவது அவ்வளவு எளிதான காரியமா? அதற்கு எத்தனை உழைப்பு வேண்டும், எத்தனை மக்களிடம் உங்கள் கருத்து சென்றடைய வேண்டும்? ம.க.இ.க ஆரம்பித்து ஒரு 3௦ ஆண்டுகள் ஆகி இருக்குமா? இதுவரை உங்களால் எத்தனை பேரை உங்கள் சித்தாந்தத்துக்கு ஆதரவாக மாற்ற முடிந்தது? ஒட்டுமொத்த மக்களின் பேராதரவு இல்லாமல் நீங்கள் ஆட்சியை மாற்ற முடியுமா?

    கம்மியுனிச சித்தாந்தம் உயர்ந்தது தான். ஆனால் அதனை செயல்படுத்தும் அளவுக்கு நீங்கள் பொறுப்புள்ளவர்களாக நடக்கவில்லை. அவ்வளவு பொறுப்பானவர்களாக நீங்கள் இருந்திருந்தீர்கள் என்றால் இந்நேரம் மாநில அளவில் இல்லாவிட்டாலும் ஒரு நகர அளவில், ஒரு கிராம அளவில் மாற்றத்தை உருவாக்கி இருப்பீர்கள்.

    எப்போது பார்த்தாலும் அடுத்தவனின் தவறை சுட்டிக்காட்ட தெரிந்த உங்களுக்கு உங்களுடைய தவறை ஒருவன் சுட்டிக்காட்டினால் அது தாங்க வில்லை. உடனே அசிங்கமான வார்த்தை பிரயோகங்கள், அவதூறுகள். கேட்கும் கேள்விக்கு நேர்மையாக பதில் அளிக்கும் நேர்மை உங்களிடம் இல்லை. பின் எப்படி மக்கள் உங்களை நம்பி புரட்சி ஆட்சியை ஒப்படைப்பார்கள்.

    நானும் ஆரம்பத்தில் மக்கள் பிரச்சினைகளுக்கு உங்களிடம் ஒரு தீர்வு உள்ளதென்று நம்பி தான் வினவில் தொடர்ந்து கேள்விகள் கேட்ட வண்ணம் இருந்தேன். இப்போது சம்பளத்திற்கு வேலை செய்யும் ஒரு தொழிலாளியாக இருந்தாலும் வருங்காலத்தில் சிறுக சிறுக சேர்த்து ஒரு நிறுவனம் நடத்த விரும்புவதால், அந்த நிறுவனத்தினை எப்படி மாடல் நிறுவனமாக, தொழிலாளிகளின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கொடுத்து, மக்களுக்கு தரமான பொருட்களை அளித்து, அதே சமயம் அந்நிறுவனத்தை இலாபகரமாகவும் நடத்தி செல்ல தெளிவான ஒரு வழி கிடைக்க உங்களிடம் பலமுறை ஒரு மாடல் தொழிற்சாலை எப்படி அமைவது என்று கேட்டேன். உங்களிடமிருந்து தெளிவான ஒரு பதிலை, ஒரு நியாயமான வழியை எதிர்ப்பார்த்தேன். ஆனால் பெரும் ஏமாற்றமே எனக்கு மிஞ்சியது. கேள்வி கேட்பவரை அவமானப்படுத்துவதில் உள்ள கவனத்தை நீங்கள் கேள்வியை புரிந்து கொள்வதில் செலுத்தவில்லை.

    இடிபாரிலா ஏமரா மன்னான் கெடுப்பாரிலானும் கெடுவான்.

    நீங்கள் செய்யும் தவறுகளை இடித்துரைக்க எங்களை போன்ற சிலர் இருந்தால் தான் உங்களுடைய தவறுகளை திருத்தி கொள்ள முடியும். இல்லை என்றால் உங்கள் சுற்றி உள்ள ஜால்ரா கூட்டத்தின் சத்தத்தில் பொதுமக்களின் விமர்சனங்கள் உங்கள் காதில் விழவே விழாது.

  12. தென்றல்,

    கம்மியுநிசத்தை கேள்வி கேட்பவர்கள் விமர்சனம் செய்பவர்கள் அனைவரும் ஈனப்பிறவிகள், இழிஜென்மங்கள், வாழத்தகுதியில்லாதவர்கள் என்றால் உங்கள் கருத்துப்படி நாட்டில் 99 சதவீதம் மக்களை கொன்று விட்டு நீங்கள் உங்கள் புரட்சியை கொண்டு வரலாம். ஏன் என்றால் சாமானிய பொதுமக்கள் எவருக்கும் கம்மியுனிசம் மேல் நம்பிக்கை இல்லை. அதுவும் உங்களை போன்ற நபர்களால் இருக்கும் ஒன்றிரண்டு நபர்களும் விலகிச்சென்று விடுவார்கள்.

    விமர்சனத்தை தாங்கக்கூடிய சக்தி இல்லாதவர் மக்களை வழி நடத்தும் திறன் இல்லதவராவார்.
    மக்கள் சக்தியின் பேராதரவு கிடைக்க வேண்டும் என்றால் முதலில் நமக்கு எதிராக பேசுபவர்கள், விமர்சனம் செய்பவர்களின் கருத்து என்ன என்று செவிமடுக்க வேண்டும். இல்லை என்றால் அது உங்களுக்கு படுதோல்வியை கொடுக்கும். இத்தனை வருட அனுபவத்தில் உங்களிடம் குறைகளை கேட்டுக்கொள்ளும் முதிர்ச்சி இல்லாதது வருந்தத்தக்கது.

  13. அன்புள்ள வினவு,
    [It is strange that your comment and many others I read in the mail are not present here in this post.]
    க கை ஆம்பிஷன் உள்ளவர்களை மற்றவர்களுடன் கட்டிப்போட முடியாது என்றும் உழைக்காமல் சோம்பேறியாக இருப்பவர்களுக்கும் சமமாக சம்பளம் கொடுப்பது எப்படியென்றும் கம்யூனிசம் சர்வாதிகாரம் என்றும் கம்யூனிசத்தைப் புரிந்து வைத்திருக்கிறார். எனவே அதற்கு எதிராக தீவிரமாக எழுதி வருகிறார். மக்கள் அதை விரும்பவில்லை என்று கூறிவருகிறார். அவர் புரிதலில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டும் விதத்தில் சில கேள்விகளைக் கேட்டால் அதற்கு பதில் சொல்லாமல் தவிர்க்கிறார்.
    கடந்த 2 வருடங்களாக கிட்டத்தட்ட வினவின் எல்லா பதிவுகளையும் படிக்கும் இவருக்கு வினவும் தோழமை இயக்கங்களும் செய்யும் போராட்டங்களை எதையும் கருத்தில் கொள்ளாமல் நன்கொடை வாங்கி வயிறு வளர்க்கிறார்கள் என்றும் இவர்கள் மக்களுக்காக ஒன்றுமே செய்யவில்லை என்றும் எப்படி பேசமுடிகிறது. போராட்டங்களைப் பற்றியெல்லாம் நினைவில் நிறுத்திக் கொள்ளும் அளவுக்கு இவருக்கு நிலைத்த நினைவில்லையா. புரட்சிகர இயக்கங்களின் போராட்டங்கள் இல்லாவிட்டால் தொழிலாளர்களின் நிலை இன்னும் மோசமாக இருக்கும் என்பதை இவரால் யூகிக்கமுடியவில்லையா இல்லை இவற்றைப்பற்றியெல்லாம் யோசிக்கும் அளவுக்கு ஒரு பரந்த பார்வையில்லையா. அரசுகளும் மத நிறுவனங்களும் நன்கொடையை வாங்கிக்தான் நெய்யாகவே தின்று தொந்தி தள்ளுகிறார்கள். இதை ஆயுதங்களுடன் அதிகாரத்துடன் செய்வதால் கொடை என்று கூறாமல் வரி என்று கூறுகிறார்கள். இந்த வித்தியாசம் இவருக்கு கண்ணில் படுவதில்லையா.
    அதியமான்களும் ராமன்களும் க கை யின் அளவுக்கு பேசுவதில்லை. இடையிடையே நாங்களும் இருக்கிறோம் என்று காட்டும் விதத்தில் மட்டும் சில சமயம் தலையை காட்டிவிட்டு முக்கியமான கேள்விகளுக்கு பதில் தராமல் காணாமல் போகிறார்கள். க கையும் முக்கிய கேள்விகளை தவிர்த்தாலும் பதிலுக்கு ஏதோ பேசி அவரின் கண்ணோட்டத்தைப் பற்றி நமக்குப் போதுமான அளவிற்கு அறியத்தருகிறார். இந்த வகையில் க கையிடம் இருக்கும் நேர்மையை மெச்சலாம் அல்லது Imbecility க்காக பரிதாபப் படலாம்.

  14. அன்புள்ள தென்றல்,

    நீங்கள் க கை க்கு இடும் பின்னூட்டங்களில் உள்ள கருத்துகளின் வார்த்தைகளின் காத்திரத்திற்கு முழுமையாக உடன்படுகிறேன். எனது ஜால்ரா வேலையை சரியாக செய்ய வேண்டாமா 🙂 வேசைத்தனம் என்ற வார்த்தையை மட்டும் தவிர்த்திருக்கலாம். விபச்சாரம் என்ற வார்த்தையை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைக்கலாம். ஆனால் வேசைத்தனம் என்ற வார்த்தைக்கு இந்த பொதுமைத்தன்மை இல்லாதது போல் எனக்குத் தோன்றுகிறது.

  15. இந்த சிங் சாக் கொசுத்தொல்லை இருக்கே, அப்ப்பப்பா….

  16. முதலில் தென்றலை கடிந்து கொள்ள வினவு முன்வந்ததை வரவேற்கிறேன்.பூனைக்கு யார் தான் மணிகட்ட முடியும்.வளர்ப்பவர்கள் தான் என்கிற முறையில் இது இயல்பானது தான். திரு க க அவரே ஒப்புக் கொள்வதைப்போல அனைத்தும் அறிந்தவர் அல்ல.ஒருவகையில் யாருமே அப்படி இருக்க முடியாது.வினவு அவரது அறிவு அல்லது அறியாமை பற்றியும் எல்லோரையும் போல பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் அறியாமைகள், மூட நம்பிக்கைகள், ஏட்டிக்கு போட்டியாக விவாதிக்கும் நடுத்தர வர்க்க ஈகோ எல்லாமே சரியானதும் கூட.

    இங்கே வினவு தளம் அல்லது பு ஜ, பு க போன்ற பத்திரிகைகள் இயங்குவதற்கான தேவை என்பது இத்தகைய உறைந்திருக்கும் மக்களை விழிப்புற செய்வதாகவே இருக்க வேண்டும் .ஏனென்றால் 60 மற்றும் 70 களின் மக்களின் பொதுபுத்தியை இன்றைக்கு முற்றிலும் மாறான எதிர் துருவத்தில் நிறுத்தியதில் முதலாளித்துவ ஊடகங்கள்,அறிவு ஜீவிகள் கணிசமான வெற்றி ஈட்டி இருக்கிறார்கள்.ஒரு சாதாரண நடிகனை ‘புரட்சி’ நடிகராக (பின்னாளில் புரட்சி தலைவராக) மக்கள் புரிந்து கொள்வதற்கு அவரது அரைகுறை சோஷலிச உழைக்கும் மக்கள் நண்பனான அவரது கதாபாத்திர வடிவமைப்பு உதவியது.ஆனால் இன்றைக்கோ நிலைமை தலைகீழ் என்பது விளக்கத் தேவையில்லை. இத்தகைய நிலையில் உங்களது ஊடகப்பணி என்பது வறண்ட பூமியில் நடவு செய்வது தான்.

    திரு ஜோசப் சொல்வது போல ”கம்மூனிஸ சித்தாந்ததை பற்றி அதிகம் தெரிந்து கொண்ட நீங்கள் அதை ஒரு ஆசிரியரின் பொருமையோடு விளக்குவதுதான் சரியானது”.அதனை செய்வதற்கே உங்களது கடப்பாடாக இருக்க முடியும்.மாறாக இங்கே உங்கள் கட்டுரைகள் பலவும் வருகின்றன.பலரும் அதனை விமர்சிக்கிறார்கள்.நிறைய பேருக்கு பொதுபுத்தியில் உறைந்திருக்கும் நேர்மை திறமை மதிப்பிடுகளால் மட்டுமே அதனை புரிந்து உள்வாங்க இயலாமல் அந்தந்த பிரச்சினை அடிப்படையில் கேள்விகள் கேட்கின்றனர்.அத்தகைய கேள்விகள் வினவின் தென்றல் போன்ற முற்று முழுதான ஆதரவளர்களிடம் ஒரு பொறுமையின்மை மற்றும் எரிச்சலை தோற்றுவிக்கிறது.அவர்களிடம் தான் ஓரளவு தத்துவார்த்த பின்னணியை விளங்கி கொண்டவன் என்கிற மமதையுடன் கேள்வி கேட்கும் மாணவனை உட்கார சொல்லும் ஆசிரியரின் ஒரு எதேச்சதிகாரம் தொற்றிக் கொண்டுள்ளது.

    இணைய விவாத முறை என்பது தன்னுடைய முகத்தை மறைத்துக் கொள்ளும் ஒரு சுதந்திரத்தை வழங்கியிருக்கிறது.அதனை கேடாக பயன்படுத்தும் பலரையும் போலவே நண்பர் தென்றல் முகத்திற்கு நேராக பேசத்தயங்கும் பல வார்த்தைகளை எவ்வித முகாந்திரமுமின்றி கொட்டுகிறார்.இந்தவிதமான பின்னணியில் தான் க கை அவர்கள் ஒரு நேரெதிரான நிலைக்கு நெட்டித் தள்ளப்படுகிறார்.அவரே சொல்வது “ஒரு சாதாரண சாமானியன், பொதுமக்களில் ஒருவன் என்ற அளவில் கம்மியுநிசத்தை பற்றிய சந்தேகங்களை நான் கேட்டதற்கு என்னை ஒரேயடியாக மிகவும் கேவலமான வார்த்தைகளால் அர்ச்சித்தால் நானும் அவரை சீண்ட வேண்டியதாயிற்று. நான் அவரோடு நிறுத்தி இருக்க வேண்டும், வினவை இதில் இழுத்திருக்க கூடாது”.இது புரிந்து கொள்ளக்கூடிய நிலை தான்.

    ஆக தென்றல் போன்ற ”முழு கம்யுனிஸ்டுகள்” ஒரு மாணவனை அணுகும் முறையை நன்குணர வேண்டும்.அது வினவின் நோக்கத்தை நோக்கிய நகர்த்தலாக இருக்க முடியும்.அவரது வார்த்தைகளில் சற்று நாகரீகமான அணுகுமுறை தேவை.அப்படியிருந்தால் மட்டுமே அவரது முழு கருத்தும் வினவில் வெளிவர முடியும் என்பது அவருக்கான அழுத்தமாக அவர் உணர வேண்டும். அவரது வார்த்தைகளை வினவு நீக்கியிருக்கும் முறை அந்த உணர்வை அவருக்கு வழங்கும் என நம்புவோம்.

    மற்றபடி ப்க் போன்றவர்கள் “தென்றல் is the PRIDE of our working community என்று உசுப்பேத்தி விட்டு எல்லோரையும் விரட்டியடிப்பது சரியல்ல.(PK என்பது தென்றலின் இன்னொரு கை என்கிற ஐயமும் வராமல் இல்லை) உழைப்பவர்களின் மொழி கரடுமுரடானது என்கிற யதார்த்தம் கரடுமுரடானது தான் உழைப்பவர் மொழி என்கிற வரையறையாக மாற வேண்டாமே.அதே போல நாகரீக வார்த்தை எதிர்பார்ப்பவர்களெல்லாம் மேட்டுக்குடியினர் என்று வெறுத்து ஒதுக்குவது என்றென்றைக்கும் அதே படுகுழியில் உழைப்போரை வைத்திருப்பதாகவும் ஆகிறது.இந்தியன் என்கிறவரின் தரம் விளங்குவதற்காக நான்கைந்து கோடுகள் வரும் போது மகிழ்வோம்.அதே தன்னை கம்யுனிஸ்டாக தன்னை அறிவித்துக் கொள்கிற தென்றலின் கருத்துகளில் அந்த கோடுகள் வருகின்றபோது …..?

    நண்பர் க கை அவர்களுக்கு: கன்னையாவின் செயல்களுக்கு வினவிடமிருந்து விளக்கம் கேட்கின்ற உங்களின் பெயரை இன்னும் தன்னடக்கத்துடன் ‘கற்றது விரலளவு’ என்று வைத்து கொள்ளலாமா?

    வினவிற்கு:” இப்போது சம்பளத்திற்கு வேலை செய்யும் ஒரு தொழிலாளியாக இருந்தாலும் வருங்காலத்தில் சிறுக சிறுக சேர்த்து ஒரு நிறுவனம் நடத்த விரும்புவதால்…..”இப்படி எழுதுகிற மனிதனை சாம்ராஜ்யம் அமைக்க கனவு காண்பதாக பிரித்து பொருள் காண்பது நேர்மையா?ஒரு உழைப்பாளி அந்த நிலையிலிருந்து ஒரு மாற்றம் வேண்டி சிறு தொழில் முனைவோராக மாற விரும்பினால் அதில் என்ன தவறு இருக்கமுடியும்? அதுசரி சிறு தொழில் முனைவோர் அல்லது நடுத்தர தொழில் முனைவோர் பற்றிய வினவின் பார்வை என்ன?

    • மானுடன்,

      நடுத்தர வர்க்கமே யதார்த்தத்தில் தொழிலாளிகளின் வாழ்க்கைத் தரத்தையும், சிந்தனையில் முதலாளிகளின் நிலையையும் கனவாக கொண்டு சமூகத்தில் வாழ்கிறது.இது சிறு வணிகர்கள், சிறு தொழில் முனைவோர் அனைவருக்கும் பொருந்தும். மார்க்சிய மொழியில் “குட்டி முதலாளிகள்” என்று அழைக்கப்படும் இம்மக்கள், உழைக்கும் மக்கள் என்று கம்யூனிஸ்ட்டுகள் அழைக்கும் பிரிவில்தான், கண்டிப்பாக வருகிறார்கள்தான். ஆனால் சிந்தனை மற்றும் அரசியல் நோக்கில் இவர்கள் பொதுவில் முதலாளித்துவத்தின் நலனை இயல்பாகவே பேசுவார்கள். அதே நேரம் வாழ்வோ பாட்டாளிகளை நோக்கி இழுப்பதால் இறுதியில் இந்த மாய உலகிலிருந்து அவர்கள் வெளியேறியே தீர வேண்டும்.

      இது ஒரு புறமிருக்க முதலாளித்துவத்தின் தோற்றம் வளர்ச்சி வரலாற்றிலேயே இத்தகைய சிறு முதலாளிகள் கண்டிப்பாக ஈவிரக்கமின்றி அழிக்கப்படுவார்கள். அதாவது ஒரு ஊரில் பத்து சிறு முதலாளிகள் இருந்தால் அதில் ஒன்பது பேர் அழிந்து ஒருவர் மட்டுமே அடுத்த நிலையில் பெரிய முதலாளியாக வருவார். இதுவே தொழிலில் ஏகபோகம், காலனி, ஏகாதிபத்தியம் என்று விரிந்து செல்கிறது.

      நீங்கள் குறிப்பிட்டிருக்கும் “பொதுப்புத்தியில்” முக்கியமான ஒன்று இத்தகைய தொழில் முனைவு குறித்த மூட நம்பிக்கை. அதாவது ஒரு மனிதன் நேர்மையாகவும், கடுமுழைப்போடும் உழைத்தால் அவன் ஒரு நேர்மையான மற்றும் பெரிய முதலாளியாக வருவான் என்று பலரும் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கையின் பின்னே ஒவ்வொருவரும் வாழ்வில் ஓடி வெற்றி பெற வேண்டிய நிர்ப்பந்தமும் இருக்கிறது.

      அடுத்து இன்றைய அரசியல் சூழ்நிலையில் சிறு முதலாளிகள் மற்றும் தொழில் முனைவு என்று ஆரம்பிக்கும் அத்தனை பேரையும் உலகமயமாக்கம் ஈவிரக்கமின்றி அழித்து வருகிறது. சென்னையின் அம்பத்தூர், கிண்டி, திருப்பூர், கோவை என்று தமிழகத்திலேயே இலட்சக்கணக்கான சிறு முதலாளிகள் தூக்கி எறியப்பட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் எடுத்துரைத்தால் ஒழுங்காக தொழில் செய்தால் வெற்றி பெற முடியும் என்று அந்த அப்பாவிகள் நினைக்கிறார்கள்.

      தொழிலாளிகள்தான் தமது வேலைகளை பிரித்துக் கொண்டு செய்ய முடியுமே அன்றி முதலாளிகள் அனைவரும் ஒரு சந்தையை சரிக்கு சமமாக பிரித்துக் கொண்டு அமைதியாக, திருப்தியாக தொழில் செய்ய முடியாது. மற்ற முதலாளிகளின் அழிவே ஒரு பெரிய முதலாளியைக் கொண்டு வர முடியும். இன்றைக்கு இந்தியாவில் சிறு தொழில் செய்யும் அனைவரும் தமது எதிர்கால உழைப்பு மற்றும் வருமானம், சேமிப்பு அனைத்தையும் ஓரிரு பத்தாண்டுகளில் தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு முதலாளிகளின் காலில் சமர்ப்பித்து விட்டு வாழ்வு முடியும் போது ஞானோதயம் பெறுகிறார்கள்.

      திருப்பெரும்புதூரில் இருக்கும் ஹூண்டாயின் துணை தொழில் நிறுவனங்கள் பல இப்படி ஆரம்பித்து மூடி கை மாறி தொடர்ந்த வண்ணம் இருக்கின்றனது. ஒரு சிறு முதலாளி ஓரிரு கோடிகளை இழந்து வெளியேறும் போது புதிதாக ஒருவர் அவர் திருவாளர் கற்றது கையளவோ போல நம்பிக்கையுடன் வங்கி கடன், சொத்து விற்பனை மூலம் முதல் போட்டு தொழில் ஆரம்பிக்கிறார்கள். அப்படி ஆரம்பிக்கும் தொழிலின் இயந்திரங்கள், சிறு கட்டிடங்கள் அனைத்தும் முந்தைய சிறு முதலாளியிடம்தான் வாங்குகிறார்கள். என்ன செய்வது, இயந்திரங்களை வாங்கியவர்கள் தோற்றுப் போன அந்த முதலாளியிடம் ஏன் தோற்றீர்கள் என்று கேட்பதில்லை. அதுதான் முதலாளித்துவம் உருவாக்கியிருக்கும் “நம்பிக்கை”. எனினும் அந்த நம்பிக்கையின் தலைநகரங்களிலேயே இன்று “முதலாளித்துவம்” ஒழிக என்று முழக்கங்களை கேட்கிறோம்.

      ஆகவே ஒரு மனிதன் சிறு தொழில் அமைத்து சாம்ராஜ்ஜியம் அமைப்பது சரியா தவறா என்று பார்ப்பதை விட அது தற்கொலை அல்லது முதலாளித்துவம் உருவாக்கியிருக்கும் வலை என்பதை மட்டும் சொல்கிறோம். இப்போது சொல்லுங்கள் எங்களது விளக்கத்தில் ஏதும் நேர்மைக்குறைவு இருக்கிறதா? இல்லை கற்றது கையளவு தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என்ற அக்கறை இருக்கிறதா?

      • வினவு,

        //அடுத்து இன்றைய அரசியல் சூழ்நிலையில் சிறு முதலாளிகள் மற்றும் தொழில் முனைவு என்று ஆரம்பிக்கும் அத்தனை பேரையும் உலகமயமாக்கம் ஈவிரக்கமின்றி அழித்து வருகிறது.///

        உங்களுடன் கருத்து முரண்பாடு எமக்கு இருக்கலாம். பிரச்சனை இல்லை. ஆனால் தகவல்கள், தரவுகளில் ‘முரண்பாடு’ என்று வந்தால் பிறகு பேசவே முடியாது. We can differ violently on our interpretations of facts,data but if there is difference in these very same facts,data then it is untenable.

        தாரளமயமாக்கலுக்கு பின் சிறு மற்றும் குறுந்தொழில்கள் பல்கி பெருகி வளர்ந்தே வருகின்றன. சில அழிந்துவிட்டன. ஆனால் எல்லா காலங்களிலும் சில நிறுவனங்கள் (mis management மற்றும் இதர காரணிகளால்) அழிவது, புதியன தோன்றுவதும் இயல்பு. நீங்க sweeping ஆ சொல்ற மாதிரி இப்படி அழிவு ஏற்பட்டிருந்தால், இன்னேரம் சிறு தொழில் முனைவோர் சங்கங்கள் பெருத்த குரல் கொடுத்திருக்கும். SSI, SME Assocations are strong and plently. So far no such protests. மின்சார தட்டுபாடு போன்ற காரணிகளை தான் பேசுகிறார்கள். இணைத்தில் ஏராளமாக தரவுகள் கொட்டி கிடக்கின்றன. அல்லது கிண்டியுள்ள தொழில்முனைவோர் அமைப்புகளில் விசார்க்கவும். கிண்டு, அம்பத்தூர் தொழில்பேட்டைகளின் நில விலை பல மடங்கு உயர்ந்துவிட்டதால் (சிறு நிறுவனங்களில் முதலீட்டை விட) பலரும் நல்ல விலைக்கு வித்துவிட்டு புற நகர்களுக்கு சென்று விட்டனர். Never before has the SSI sector been so resuregent.

        ///ஒரு மனிதன் நேர்மையாகவும், கடுமுழைப்போடும் உழைத்தால் அவன் ஒரு நேர்மையான மற்றும் பெரிய முதலாளியாக வருவான் என்று பலரும் நம்புகிறார்கள்///

        ஆம். ஆனால் எல்ல சிறு முதலாளிகளும் பெரிய முதலாளிகலாக முடியாது என்பதையும் உணர்ந்தே இருகிறார்கள். ஆனால் இன்று பெரும் முதலாளிகள் எனப்படுபவர்கள் அனைவரும் (விதிவில்லக்கில்லாமல்) ஒரு காலத்தில் சிறு தொழில் முனைவோர்களாக துவங்கியவர்கள், அல்லது அவர்களின் வாரிசுகள் தான். பிர்லா முதல் ஹெச் சி எல் சிவ நாடார் வரை அனைவரும் தான். இதை பற்றி ஆங்கிலத்தில் நான் எழுதிய பதிவில் இருந்து :

        Any worker turned entrepreneur (there are many) would vouch for the
        fact that it is the entrepreneurial ability that makes the vital
        difference in the performance of the firm. All these worker turned
        entrepreneurs had started their lives as workers, working along
        millions of similarly placed workers. But some of them managed to save
        and / or get into partnerships with co-workers to start small firms
        which ultimately grew into giants. All the corporate giants in this
        world were once tiny start ups fired by the sheer enthusiasm and
        determination of those pioneers. Can anyone name any company which is
        continuously existing in its present size and form for many centuries
        ? Petrochemical giants, pharma majors, automobile majors, IT majors,
        companies like Walmart, CNN, Dell, Sony, Apple, Virgin Atlantic, etc :
        all were founded by pioneering individuals with nothing but their bare
        hands. Their legal heirs had expanded these companies into giants over
        the decades.

        There are of course, criminal elements among capitalists and corporate
        who misuse the loopholes in the rule of law, especially in the
        developing nations which have high levels of corruption and cronyism.
        But these are exception rather than the rule. Generally in nations
        where the rule of law is upheld systematically and where the ethics
        remain high, (like in Scandinavian nations, etc) the misuse by
        companies are rare. But Marxists usually cherry pick these exception
        to paint a distorted picture while glossing over the terrible crimes
        caused by their socialistic alternative to the system.

        It is always the risk taking, hard working and pioneering effort of
        the entrepreneur that makes the difference. Nothing else ; neither
        government ‘help’ nor ‘looting’ from the public nor wars. These
        pioneers are heroes and not the villains (who exploit the workers)
        that they are portrayed to be by the Marxists. I salute them all.
        All the nations which had allowed full freedom for these innovators
        and pioneers to get along their vision, without blocking their
        entrepreneurship in any manner had prospered over the centuries, while
        all those nations which did the opposite stagnated and remained
        impoverished. Indian and Japanese experience since 1947 are the
        prime examples for this basic difference.

        • “SSI unit holders in Ambattur Industrial Estate and Guindy have sold their units and went since there was increase in real estate prices”Adhiyaman,again I have to counter your statement.I have served as SSI Branch Manager of our bank at Ambattur Industrial Estate from 1994 to 1997.I have assisted many Micro and SSI units.These units started closing their business not because of increased real estate prices.As usual you are making sweeping statement.In the wake of liberalization,big industries like TVS,TI Cycles etc were getting ISO `certificates and insist their component suppliers also to get ISO certificates.If there were about 10 component suppliers for TVS for a particular component,only one or two such suppliers could obtain ISO certificates.Micro units with less investment could not spend for ISO certification.The big unit”s plan of reducing the no.of vendors succeeded.I,as Bank Manager,knew well how these small units were harassed by big units in the matter of bill settlements.The big units,on paper,will state the bill settlement due date as 90 days but never pay even after 120 days.The ancillary industries could not force the big units for timely settlement of bills.If they fight,next order will not be given to them.Actually,liberalization killed small units. Actually,there is a Govt order insisting timely settlement of bills of small units by big units.But,it is seldom made use of for obvious reasons.

          • அதியமான் அவர்கள் சிறுதொழில் புரிவோரெல்லாம் தங்களது இடங்களை ரியல் எஸ்டேட் காரணமாக நல்ல விலைக்கு விற்று விட்டு ஓடிவிட்டனர் என்று பச்சையாக கூறுகிற வாதத்தை நண்பர் சூரியன் அவர்கள் சிறப்பாக அம்பலப்படுத்தியிருக்கிறார். ஆங்கிலத்தில் இருந்தாலும் சூரியனின் பதிலை கண்டிப்பாக அனைவரும் வாசிக்க வேண்டும்.

      • (என்னுடைய முந்தய கருத்தினை பாங்குற பத்தியமைத்து வெளியிட்டமைக்கு நன்றி)
        மறுபடியும் குறுக்கிட விரும்புகிறேன்…….”அதே நேரம் வாழ்வோ பாட்டாளிகளை நோக்கி இழுப்பதால் இறுதியில் இந்த மாய உலகிலிருந்து அவர்கள் வெளியேறியே தீர வேண்டும்….” நீங்கள் எல்லா பிரச்சினைகளையும் தத்துவார்த்த நோக்கில் ‘மட்டுமே’ அணுகுகிறீர்கள் யதார்த்த நோக்கில் அல்ல என்பதை இங்கு சுட்ட விரும்புகிறேன்.வர்க்கங்கள் அதன் நிலையில் அடைய போகிற வளர்ச்சி நிலையை (நீங்கள் அதை சரியாகவே கணிக்கிறீர்கள் என்று கொண்டாலும் கூட) இன்றைக்கே அந்த நிலையை பொருத்திப் பார்த்து தீர்வு சொல்வது சரிதானா?இன்றைய நிலையில் சிறு மற்றும் குறு நிறுவனங்கள் -குட்டிமுதலாளிகள்- தான் மொத்த வேலை வாய்ப்பின் 3ல் 2பங்கை வழங்குகிறார்கள்.இந்த நிலையை ஒரேயடியாக மாற்றுவது தற்கொலைக்கொப்பான முடிவாகும் எனும் போது என்ன செய்யலாம்?சிறு குறு தொழில்களை ஒழிக்கின்ற வகையில் மோடி அரசின் பார்வையை விமர்சிக்கின்ற போது,அந்த 3ல்2 தொழிலாளர்களை உயிர் வாழவேனும் வாய்ப்பளிக்கிற அந்த குறு முதலாளிகளை வேறு வார்த்தைகளில் எதிராக பார்க்கிற மனப்பாங்கு சரிதானா? மாறாக அரசுகள் அந்த சிறு முதலாளிகளை “வாழ” அனுமதிக்க பரிவுடன் குரல் கொடுப்பது தானே சரியாக இருக்கும்.
        ”இப்போது சொல்லுங்கள் எங்களது விளக்கத்தில் ஏதும் நேர்மைக்குறைவு இருக்கிறதா?” நான் சொன்ன நேர்மை என்பது அவர் சாம்ராஜ்யம் அமைக்க விரும்புவதாக விரித்து பொருள் கூறியதைத் தான்.வெகு சிலரே டாட்டா, அம்பானி அல்லது அதியமான் ஏற்றி போற்றி சொல்வது போல பிர்லா, சிவநாடார் உதாரனங்களை நம்பி கீழே விழுகிறார்கள்.யதார்த்தத்தில் பெரும்பாலும் பாதுகாப்பான நீடித்த வருவாய் எதிர்பார்த்தே செயல்படுகிறார்கள், வரம்புகளை அறிந்திருக்கிறார்கள்.அவரவர் எல்லைகள் தெரிந்தே கனவு காண்கின்றனர் எனும் போது உங்களது பார்வை மிகை மதிப்பீடு என்பதே என் கருத்து
        நீங்கள் உங்கள் வசதிக்கான உதாரணமாக ஹுண்டாய் நோக்கியா போன்ற பெரும் தொழிலகங்களின் துணை நிறுவனங்களை எடுக்கிறீர்கள் என நினைக்கிறேன்.அது சரியல்ல.உண்மையில் உலகமயமாக்கலின் விளைவாக பாதிக்கப் படாத பல்வேறு தொழில்கள் அல்லது போராடக்கூடிய தொழில்கள் இன்னமும் நம் நாட்டில் நிலவவே செய்கின்றன.நண்பர் க கை எத்தகைய தொழில் முனைவோராக போகிறார் என்பது அறியாமல் அவரை தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்ற முனைவதாக சொல்வது “சாரி கொஞ்சம் ஓவர்”

        • தமிழ்,

          மக்கள் நலனில் மேல் அக்கறை உள்ள அரசுகள் கம்மியுனிசம் தோன்றுவதற்கு முன்னரும் இருந்து உள்ளனர். கம்மியுனிசம் ரசியாவில் மக்கள் நலனில் அக்கறை இல்லாத சார் மன்னர்களிடமிருந்து மக்களை மீட்டது. இல்லை என்று சொல்லவில்லை. அதனால் கம்மியுனிசம் தோன்றியதற்கு முன்னர் உலகில் எந்த மூலையிலும் எந்த நாட்டிலும், எந்த காலத்திலும் மக்கள் நல அரசுகள் ஆட்சி புரியவே இல்லை என்று கூற இயலாது.

          கோயம்பேடு மூட்டை தூக்கும் தொழிலாளியின் நிலையை அப்படியே வைத்திருப்பதில் உங்களுக்கும் சரி, எனக்கும் சரி விருப்பமில்லை. இன்னும் சொல்லப்போனால் வருங்காலத்தில் மூட்டை தூக்க மனிதரை பயன்படுத்துவதை தவிர்த்து போர்க்லிப்ட் எந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என்பது இலக்காக இருக்க வேண்டும். உடனே மூட்டை தூக்கும் தொழிலாளிகளை ஓரம் கட்டுகிறான் என்று எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நினைக்காதீர்கள். காலம் மாற மாற மனிதர்கள் மென்மேலும் தொழில்நுட்ப வளர்ச்சியின் துணை கொண்டு நல்ல வாழ்வுதனை அனுபவிக்க வேண்டும் என்று தான் கூறுகிறேன்.

          மனிதரை மனிதர் இழுக்கும் அவலம், மிதிவண்டி ரிக்சா வந்ததால் தீர்ந்தது. பின்னர் மோட்டார் வைத்த ரிக்சாக்கள் வந்தன, பின் ஆட்டோ வந்தது. அது போல மனிதரை மனிதராக நடத்த வேண்டும், சுமை தூக்கும் பொதி மாடுகளாக இருப்பதை விட, அவர்களுக்கு போர்க்லிப்ட் இயந்திரங்களை பயன்படுத்த கற்று தர வேண்டும்.

          மனித சாக்கடையை மனிதர்களே அகற்றும் பணி எத்தனை கொடுமையானது.
          அதற்கு பதில் இயந்திரங்களை முழுவதுமாக பயன்படுத்துவதை போல தொழில்நுட்பத்தின் உதவி கொண்டு அனைத்து மனிதர்களையும் சகதோழனாக பாவிக்க வேண்டும்.

          உழைக்கும் தொழிலாளிகளுக்கு அவர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் சரியாக வழங்கப்பட வேண்டும் என்பதில் உங்களுக்கும் சரி, எனக்கும் சரி, எந்த வேறுபாடும் இல்லை. அதை புரட்சி வடிவில் ஆட்சியமைப்பை மாற்றிய பின் வழங்க வேண்டும் என்பது தங்களின் வாதம். அதனை ஜனநாயக வழியிலேயே தற்போதுள்ள அரசை அதற்கான சட்டத்தை கொண்டு வந்து மாற்றத்தை செய்ய முயற்சிக்க வேண்டும் என்பது எனது வாதம். ஒட்டு மொத்த புரட்சி என்பது எப்போது நடக்கும் என்று நமக்கு தெரியாததால் தற்போதுள்ள நிலையில் இது எப்படி சாத்தியம் என்று யோசித்து பாருங்கள் என்று கூறுகிறேன்.

    • மானுடன் அவர்களே!

      உங்களுக்கு வந்திருக்கிற நெருடல்கள் எனக்கும் உண்டு. அதை உங்கள் பார்வைக்கு முன் வைக்க விரும்புகிறேன்.

      1. முதலில் வினவு தளம் எனது மறுமொழியில் இருந்து நீக்கியது முற்றிலும் தனிநபர் தாக்குதலுக்குண்டான வார்த்தைகள். இது போன்ற வார்த்தைகள் எவர் எழுதினாலும் மட்டுறுத்தப்படும். இதை நான் ஏற்கிறேன். திருத்திக்கொள்கிறேன். ஆனால் விவாதம் இதைத்தாண்டிய ஒன்று என்பதை அறிவீர்கள் என்று கருதுகிறேன். அங்கும் வார்த்தைகள் தான் பிரச்சனை! இது ஏன்?

      2. மட்டுறுத்தப்படாத மொழியின் காரணமாகத்தான் கற்றது கையளவு அவர்கள் தனக்கு எதுவுமே தெரியாது என்றும் தெரிந்து கொள்ள வந்தவனை சகட்டு மேனிக்கு ஏசுகிறார்கள் என்றும் கூறுகிறார். அப்படியானால் சபை நாகரிகம் என்ற ஒன்று இங்குள்ளவர்களின் கருத்துப்படி எனது மறுமொழியில் இல்லை என்றாகிறது. நேரில் பேசத் தயங்குகிற வார்த்தைகளை இணையம் வழங்கும் சுதந்திரம் காரணமாக பேசுகிறார் என்று சொல்கிறீர்கள் இல்லையா? இது தவறான பார்வை. ‘புரட்சிகர இயக்கங்கள் நன்கொடை வாங்கி வயிறு வளர்க்கிறார்கள்’ என்று சொல்பவரை நேரில் பார்த்தால் என்ன செய்வேனோ அது எனது மறுமொழியில் மட்டுறுத்தப்பட்டிருக்கிறது. மற்றபடி புதிய சனநாயகம் பத்திரிக்கை அறிமுகப்படுத்தப்போகிற பொழுது எத்துணையோ சாதி வெறியர்களை சொகுசு வர்க்கங்களை இதே மறுமொழி பாணியில் தான் நேரிலேயும் விமர்சித்திருக்கிறேன். இதுதவிர இணைய சுதந்திரம் என்பது அடிப்படையில் ஒரு சுதந்திரம் அல்ல. அது இன்று வரைக்கும் மேட்டுக்குடிவர்க்கங்களின் பொழுதுபோக்காகவும் வர்க்க உடமையாகவும் இருக்கிறது! இங்கு வந்தும் இவர்களைச் சாடுவதை ஒரு போதும் அவர்கள் சகியமாட்டார்கள் என்பதே எனது புரிதல்!

      3. வினவின் எத்துணையோ கட்டுரைகள் தொழிலாளி வர்க்கத்திற்கு சென்று சேரவேண்டிய நிலையில் ஒரு நொடி கிளிக்கில் அமர்ந்து அனைத்தையும் படிக்கிற ஒரு வர்க்கத்திற்குத்தான் மணல் போராட்டம் என்றால் அறிவியல் தொழில்நுட்பத்தை நாடுவதற்கு பதிலாக வெட்டியாக கோசம் போடுகிறார்கள் என்று சொல்வதற்கு நேரமும் வசதியும் இருக்கிறது. கோகோ கோலா என்பது வரப்பிரசாதம் சும்மா தண்ணீர் தண்ணீர் என்று கத்தாதே என்று சொல்கிற தெள்ளவாரிகளும் இங்குதான் இருக்கிறார்கள். முதலாளிகள் கெட்டவர்கள் அல்லர் என்று சொல்வதற்கும் ஓர் உக்ரைன் விவசாயிக்கு எதிராக உக்ரைனிய குலாக்குகளுக்கு ஆதரவாக இந்திய குலாக்குகளான கற்றது கையளவு, இராமன், அதியமான் போன்றோருக்கு லிங்கை அப்புகிற அளவிற்கு நேரமும் வசதியும் இருக்கிறது. இதன் படி தாங்கள் சொல்வதைப் பார்த்தால் இணையத்தில் இந்த முதலுக்கு சேதாரம் இல்லாமல் அதற்குரிய ‘கண்ணியத்தோடு’ விவாதிக்க வேண்டும் என்பதை நான் துளியும் ஏற்கவில்லை!

      4. அதே சமயம் வர்க்க அரசியலில் ஈடுபடுகிறவர் ஆசிரியராக அதற்கே உரிய பெருமிதத்தோடு மக்களை அணுக வேண்டும் என்று வாசகர்கள் முன் வைக்கிற கருத்தை தன்னை கம்யுனிஸ்டாக புடம் போட்டுக்கொள்ள விரும்புகிறவர் புறக்கணித்துவிடமாட்டார். இங்கு நான் இதைக் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்.

      5. வினவின் செயல் தாங்கள் நினைப்பதைப்போல பூனைக்கு மணி கட்டுகிற செயல் அல்ல. விவாதத்தின் மூலமாக ஒரு போராட்டத்தை நிகழ்த்துகிற பொழுது அங்கு அனைத்து பூனையும் வெளியே வந்துதான் ஆக வேண்டும். வர்க்க அரசியலில் ஈடுபடுகிறவருக்கு விமர்சனம், சுயவிமர்சனம் என்ற பேச்சுரிமையின் இருபக்கங்கள் உண்டு. தாங்கள் நினைப்பது போல தான் வளர்க்கிற பூனைக்கு மணி கட்டுவது மட்டும் அல்ல இது. அப்படியிருந்தால் உங்களுக்குத்தான் முதலில் கட்ட வேண்டும். ஏனெனில் வினவு வளர்த்தெடுக்கிறவர்களில் தாங்கள் இல்லையா என்ன?

      6. மக்களைத் திரட்டி புரட்சிக்காக போராடு என்பது கடப்பாடாக இருக்கிற பொழுது சமூகத்தின் எந்த சிறு சனநாயக சக்திகளையும் தனிமைப்பட புரட்சிக்காரர்கள் அனுமதிப்பதில்லை என்பது அடிப்படை. இதில் ஒருவர் தெரிந்திருக்கிறார்; ஒருவர் தெரியவில்லை; எனவே தெரியாதவரை கும்மாங்குத்து குத்து என்பதல்ல நிலைப்பாடு. சான்றாக நண்பர் இராசனுடன் சமீபத்தில் ஒரு முரண்பாடு (முரண்பாட்டை பாட்டாளிவர்க்கத்திற்கு சாதகமாக்குவது தோழர் மாவோ முன்வைக்கிற செயல் தந்திரம்). அவர் பார்ப்பனீயம், இந்துத்துவ வெறியர்கள், சனநாயகத்திற்கான போராட்டம் என அனைத்திலும் பங்கெடுப்பவர். சமீபத்தில் சிங்கப்பூர் மற்றும் சகாயம் விசயத்தில் அவரது கருத்து வேறு நிலையில் இருந்தது. இது குறித்த எனது மறுமொழியும் கடுமையாகத்தான் இருந்தது. இதனால் அவர் புண்பட்டு ஒதுங்குவாரெனில் அது இழப்புதான்.

      7. ஆனால் அப்படியொரு வருத்தம் கற்றது கையளவின் விசயத்தில் எனக்கு ஏதும் கிடையாது. அளவுங்கடந்த அவதூறுகளை அசால்ட்டாக அள்ளித் தெளிப்பார். சோசலிசம் சோம்பறிகளை உருவாக்குகிறது என்பதற்கு அவர் கொண்டு வந்து நிறுத்துகிற சாட்சியங்களும் உக்ரைனிய சீன நண்பர்களும் அவர் நினைப்பதைப்போல “ஒரு சாதாரண சாமானியன், பொதுமக்களில் ஒருவன் என்ற அளவில் கம்மியுநிசத்தை பற்றிய சந்தேகங்களை நான் கேட்டதற்கு என்னை ஒரேயடியாக மிகவும் கேவலமான வார்த்தைகளால் அர்ச்சித்தால் நானும் அவரை சீண்ட வேண்டியதாயிற்று. நான் அவரோடு நிறுத்தி இருக்க வேண்டும், வினவை இதில் இழுத்திருக்க கூடாது” என்ற வகையிலானவை அல்ல. அதற்கு உங்களைப்போன்றவர்கள் அவருடன் ஒரு இரண்டு வருடம் வாழ்ந்த அனுபவம் வேண்டும். அது எனக்கு உண்டு! ஆனால் தாங்களோ செயலலிதாவின் 64கோடி மோசடி திமுகவின் 2ஜி ஊழலை விட குறைவானது அது புரிந்துகொள்ளக்கூடியது தான் என்ற பாணியில் எழுதுகிறீர்கள். இதைத்தான் கடுமையான வார்த்தைகள் உருவாக்கக் கூடிய எதிர்மறை விளைவுகள் என்று புரிந்துகொள்கிறேன்.

      • தென்றல் அவர்களே,

        தங்களது மறுமொழிகளை கண்டு புண்பட்டு ஒதுங்க மாட்டேன், ஓடவும் மாட்டேன். நின்று பதில் சொல்கிறேன்.

        இன்னும் நீங்கள் மணல் கொள்ளையை பற்றி எனது கருத்தை புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ள எந்த ஒரு முயற்சியும் எடுக்க மாட்டீர்கள். உங்களது ஈகோ உங்களை தடுக்கிறது.

        இரண்டு வருடம் என்னுடன் விவாதித்திருக்கிரீர்கள் என்று நீங்களே சொல்கிறீர்கள். ஆனாலும் என்னை பற்றி புரிந்து கொண்டது இவ்வளவு தானா?

        • தென்றல் அவர்களே,

          கருத்தியல் ரீதியில் உங்களுடன் விவாதம் புரிவதில் எனக்கு விருப்பமே.
          அதே சமயம் சொல்ல வந்த கருத்தை சுருக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும். (இது எனக்கும் பொருந்தும், சில நேரம் உணர்ச்சிவசப்படும்போது நீண்ட பதில்களை நானும் அளித்ததுண்டு). படிப்பவர்களுக்கு நீண்ட பதில்கள் சற்று சிரமமாக இருக்கும்.

          Brevity is the Soul of Wit!

        • தமிழகத்தில் (இந்தியாம் மற்றும் உலகம் பூராவும் தான்) நடக்கும் மிகக்கொடூரமான ஆற்றுமணல் கொள்ளைக்கு, நிலத்தடி நீரை உறிஞ்சி உண்டு கொழுக்கும் கார்ப்பரேட் கொள்ளைக்கு தீர்வாக கற்றது கையளவு வைத்த தத்துவம் எரிகிறகொள்ளியை பிடுங்கினால் கொதிப்பது அடங்கும் என்பதாகும். அதாவது அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மணலுக்குரிய டிமாண்டையே நீக்கிவிட்டால் மணல் கொள்ளை என்பது இருக்காது என்கிறார். இதற்குப்பின்னால் இருக்கும் அயோக்கித்தனங்கள் மொத்தம் நான்கு.

          1. இதுவரை நடந்த ஒட்டுமொத்த சுரண்டலுக்கும் நியாயம் என்னவென்பதை பற்றியும் மொட்டையாக மலடாக நிற்கும் ஆறுகளையும் மலைகளையும் சுரண்டியதற்கு பதில் என்னவென்பதைப் பற்றியும் பேசாமல் நீதிபதி கர்ணன் கனிமவளக்கொள்ளையன் வைகுண்டராசனுக்கு முன் ஜாமீன் வழங்கியதைப்போல போராடுகிற மக்கள், போராட்டத்தோடு சேர்த்து அறிவியல் தொழில்நுட்பத்தை பற்றியும் சிந்திக்கவேண்டும் என்கிறார். இது முதலாளிகளுக்கு முந்திக்கொண்டு வழங்குகிற முன்ஜாமீன். ஈவு இரக்கமற்ற வாதம். எந்த சாமானியனும் இப்படி இயம்பியதில்லை. இது முகமூடி ஒன்று.

          2. அறிவியல் தொழில்நுட்பம் வருகிறது என்று வைப்போம். க,கையின் தீர்வு என்ன சொல்கிறது? முதலாளிகளுக்கு அறிவியல் தொழில்நுட்பம் வழங்கிவிட்டால் அவர்கள் எதற்கு ஆற்றையும் மலையையும் சுரண்டப்போகிறார்கள் என்று சொல்லவருகிறது அப்படித்தானே? இதன்படி முதலாளிகள் முதலில் மகிழ்வாக இருந்தால் தான் மக்களால் வாழமுடியும் என்றாகிறது. இது இரண்டு. இது முதலாளித்துவ பாசமா? அல்லது அடிவருடித்தனமா என்பதை க.கை விளக்க வேண்டும்.

          3. முதலாளித்துவம் உயிர் காக்கும் மருந்துகளுக்கான ஆய்வு முறைக்கே செலவழித்தது கிடையாது என்பது வரலாறு. மார்கெட்டிங்கிற்காக செலவழிக்கப்படுகிற தொகை ஏணிவைத்தாலும் எட்ட இயலாது. மேலும் இன்றுவரை வழுக்கை, முடி உதிர்தல், ஆண்மைப்பிரச்சனை, விந்து முந்துதல் போன்ற live style drugs மருந்துகளுக்காக செலவிடப்பட்ட தொகைதான் உயிர்காக்கும் மருந்துகளை (livesaving drugs) விட மிகமிக அதிகம். மருத்துவத்தின் மார்கெட்டிங்கே அந்தரங்கம் என்று இருக்கிறபொழுது மண்ணிற்கு அறிவியல் தொழில்நுட்பம் கோரி அதன்மூலம் இயற்கையையும் பாதுகாத்து முதலாளித்துவத்தின் வயிற்றையும் வளர்க்க வேண்டும் என்றால் அந்த மனநிலை எத்துணை வக்கிரமானது? இது மூன்று.

          4. இயற்கைச் சமநிலை கெடுவதற்கு முதலாளித்துவம் தான் முழுமுதற் காரணம். சந்தையை விரிவுபடுத்துவதற்கும் மூலதன பரவலுக்கும் இயற்கை வளங்களைச்சுரண்டினால் தீர்வு என்று அம்பலப்படுத்துகிறார் வந்தனா சிவா. இவர் கம்யுனிஸ்டு அல்ல. நாட்டு வளங்களை காப்பாற்ற வேண்டுமென்றால் ஏகாதிபத்தியத்தை எதிர்க்க வேண்டும் என்று தனது பலகட்டுரைகளில் எழுதுகிறார். ஒரு சனநாயகவாதி அடிப்படையில் மக்களை நேசிக்கிறவர் இதையெல்லாம் எதிர்க்கும் பொருட்டு கண்டிப்பாக தூங்க இயலாது. மாறாக, அடிப்படை கடப்பாடுகளையும் அறவிழுமியங்களையும் தொலைத்தவர்கள் தான் இயற்கைவள சுரண்டலுக்கு அறிவியல் தொழில்நுட்பம் என்பார்கள். இது நான்கு.

        • கற்றது கையளவு அவர்களின் சிந்தனை போக்கு மக்கள் நலனுக்கு எதிரானதாக [புரட்சிகர இயக்கங்களை விடுங்கள்] உள்ளது. பாசிச இந்துத்துவா கொள்கைகளுக்கு எதிராக கூட பேசக்கூடாது என்கின்றார். கோயம்பேடு தொழிலாளர்களும் ,கற்றது கையளவும் பொருளாதார ரீதியில் ஒன்று அல்ல என்று கூறி கோயம்பேடு தொழிலாளர்களுக்கும் அவர்கள் குடும்பத்துக்கும் கண்டிப்பாக கல்வி மற்றும் மருத்துவ வசதிகள் இலவசமாக கிடைக்கவேண்டும் என்றால் விவாதிக்கும் பொருளை திசைதிருப்பி கோயம்பேடு தொழிலாளர்களை பயன்படுத்துவதற்க்கு பதிலாக மூட்டை தூக்கும் இயந்திரத்தை பயனபடுத்தலாம் என்கின்றார். என்ன கொடுமை இது. ஏன் இந்த மாற்று வக்கிர சிந்தனை வருகின்றது கற்றது இடம் இருந்து ? காரணம் மிக எளிதானது

          இப்போது தானே ஒவொரு பூனைகுட்டியாக அவரின் சிந்தனையில் இருந்து உயிர்பெருகின்றது . முதலில் புரட்சிகர இயக்கங்கள் மீதான அவதூறு என்னும் பூனைகுட்டி அவரிடம் இருந்து வெளிவந்தது. அடுத்தது கோயம்பேடு தொழிலாளர்களை அப்புற படுத்தி அவர்களுக்கு பதிலாக மூட்டை தூக்கும் இயந்திரங்கள் வரவேண்டும் என்ற இரண்டாவது பூனை குட்டி . மக்கள் ஆற்று மணல் கொள்ளைக்கு எதிராக போராடினால் எதற்கு போராட்டம் வீடு கட்ட நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தலாமே என்று எதார்த்த மணல் கொள்ளை பிரச்சனையை திசை திருப்பும் மூன்ராவது பூனைகுட்டி வெளிவருகின்றது. மேலும் இருக்கின்ற சட்டங்கள் மூலம் நல்லது செய்ய முயலுகின்றராம். அட வெக்கம் கேட்ட மனிதரே கற்றது இருகின்ற சட்டங்களும் , அரசு கட்டுமானங்களும் செல்லரித்து புழு பூத்து போய் சந்தி சிரித்துகொண்டு உள்ளது கூடவா உமக்கு தெரியவில்லை.

          அனைத்து பிரச்சனையிலும் மக்கள் தன்னேழுச்சியாக போராடுவது கூட இவருக்கு தவறாக தானே தெரியும். இவரை போன்ற உதிரிகள் ,மக்கள் பிரச்சனைகளை தினம் தோறும் பாத்தாலும் அவற்றை கண்டும் காணாமல் செல்லும் கற்றதுகளைவிட , புரட்சியாளர்களை அவமரியாதை செய்யும் இந்த கற்றதுகளை விட டிராபிக் இராமசாமிகள் எத்துனை மடங்கு வேண்டுமானாலும் சிறந்தவர்கள்.

    • மானுடன்,

      உங்கள் பின்னூட்டங்களை படிக்கும் போது நீங்கள் க கையின் இன்னொரு கையா என்கிற ஐயம் எனக்கு வந்தாலும் அது விவாதத்திற்குத் தேவையற்றது. எனக்கும் தேவையற்றது. விசயத்திற்கு செல்வோம்.

      தென்றலை blogging community யின் disgrace என்று ஒருவர் சொன்னாரென்றால் அதற்கு பதில் கூறவேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம். மேலும் ‘decent’ வாசகர்களை நான் விரட்டியடித்துவிட்டேன் என்று வினவு கவலைப்படவில்லை என்பதை கவனியுங்கள். நீங்களும் அதைப்பற்றிக் கவலை கொள்வது தேவையற்றது.

      உங்கள் கருத்துக்களுக்கு தென்றல் அவர்கள் கொடுத்த பதில்களுக்கும் கூடுதலாக சிலவற்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

      க கை தன்னை பாதிக்கப்பட்டவனைப் போலக் காட்டிக்கொள்கிறார். நீங்களும் அப்படியே எழுதுகிறீர்கள். ஆனால் தென்றல் நான் சிவப்பு போன்றவர்கள் க கையுடன் இரண்டு வருடங்களாக விவாதம் செய்து கொண்டிருக்கிறோம். தென்றல் அவர்களின் எதிர்வினைகள் இந்த நீண்ட விவாதத்தின் தொடர்ச்சியே. கடந்த கால விவாதத்தின் தொடர்ச்சியைப் பற்றிய குறிப்புகள் இந்த பதிவின் விவாதத்திலும் இருக்கின்றன. புரட்சிகர இயக்கங்களின் பணி /உறைந்திருக்கும் மக்களை விழிப்புற செய்வதாகவே இருக்க வேண்டும்/ என்று கூறுகிறீர்கள். அதைத்தான் தென்றல் செய்து கொண்டிருக்கிறார். க கை உறைந்திருக்கும் மனிதனல்ல என்பது தெளிவு. அவர் எதிர்நிலையில் இருப்பவர் என்பதும் தெளிவு. க கை இங்கே தொடர்ச்சியாக பின்னூட்டமிடுவது அதியமான் சொன்ன நோக்கத்திற்காகத்தான். அப்படியில்லை என்று நிரூபிக்க அவருக்கு பல வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. ஒன்றைக்கூட அவர் சீண்டவில்லை. இவ்வளவையும் மறைத்துவிட்டுத்தான் /கம்மியுநிசத்தை கேள்வி கேட்பவர்கள் விமர்சனம் செய்பவர்கள்/ அனைவரையும் திட்டிவிட்டார்கள் என்று தந்திரமாக எழுதுகிறார். /சாமானிய பொதுமக்கள் எவருக்கும் கம்மியுனிசம் மேல் நம்பிக்கை இல்லை. / என்று தொடர்ந்து சாதிக்கிறார். அவரிடம் ஆரம்பத்தில் கொஞ்சிக் கொஞ்சி தான் பேசினோம். இப்போதும் அதே போன்று பேச முடியுமா என்றால் முடியாது என்பதுதான் தென்றலின் எதிர்வினை.

      //உழைப்பவர்களின் மொழி கரடுமுரடானது// //என்கிற யதார்த்தம்//

      இந்த கூற்றுகளைக் கடுமையாக கண்டிக்கிறேன். உழைப்பவர்களின் மொழியை கரடுமுரடானது என்பது எந்த அடிப்படையில்? இதிலேயே உங்கள் பார்வையில் உள்ள குறைபாட்டைப் புரிந்து கொள்ளமுடிகிறது. இங்கே தான் ஒருவரின் வர்க்கம் வருகிறது. தென்றல் தனது எதிர்வினைகளை பதில்களை ஒளிவுமறைவின்றி தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். க கை அவற்றிற்கு பதில் தராமல் சுற்றிச்சுற்றி வந்து ஏதேதோ பிதற்றுவதும் சொன்னவற்றையே திரும்பத்திரும்ப சலிக்காமல் சொல்லி வருவதும்தான் அருவருப்பானது அநாகரீரகமானது. புரட்சிக்கு காலக்கெடு கேட்பதில் தொடங்கி, இப்போது நன்கொடையில் வயிறு வளர்ப்பது என்ற கருத்துவரை பலவற்றைக் கூறலாம். நாங்கள் வார்த்தைகளை பார்க்கவில்லை கருத்துக்களைத்தான் பார்க்கிறோம். அவற்றிலிருந்துதான் ஒருவனின் வர்க்கமும் தெரிகிறது.

  17. தென்றலின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் கற்றது அவர்கள் அவர் பின்னுட்டங்கள் 13,14 ல் சுய கதை எழுதி வசனம் பேசிக்கொண்டு உள்ளார் .

    தென்றலின் கேள்விகள் :

    [1]ஆற்று மணல் கொள்ளையில் மக்கள் கமிட்டிகளை அமைப்பது சரிதான் என்று சொன்ன தாங்கள் இப்பொழுது நன்கொடை வாங்கி வயிறு வளர்க்கிறார்கள் என்று சொல்வதால் உங்களைப்போன்ற ஈனப்புத்தி கொண்டவர்கள் இழிவுபடுத்துவது புரட்சிகர இயக்கங்களையா? அல்லது போராடும் மக்களையா?

    [2]புரட்சி எப்படி வரும் என்று கேட்கிற உங்களைப்போன்ற ஒட்டுண்ணிகள், அடிமட்டத்தில் மக்களைத் திரட்டி மணல்கொள்ளையில் இருந்து கல்வி, மருத்துவம் என்று சகல கொள்ளைகளுக்கும் எதிராக போராடுவதை போலிப்புரட்சி என்றும் வெற்றுக்கோசம் என்று கூறிவிட்டு மறுபக்கம் நன்கொடையால் வயிறு வளர்ப்பவர்கள் என்று ஒரு சேர சொன்னால் இதில் உண்மையில் வயிறு வளர்த்து திரிபவர்கள் யார் என்று உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரியும் அல்லவா?

    • தமிழ்,

      உழைக்கும் மக்களிடம் வாங்கும் ஒவ்வொரு காசும் வீணான செலவாக கூடாது.
      வயிறு வளர்ப்பவர்கள் என்று நான் சொன்னது தென்றலார் மீண்டும் மீண்டும் அசிங்கமான உவமானங்கள், அவதூறுகளை வீசியதால் அவரை அவ்வாறு சீண்டினேன். அதில் வினவை இழுத்திருக்க கூடாது என்று பின்னர் வருந்தி பதிவிட்டதை நீங்கள் பார்க்கவில்லை போலும். ஒருவன் கம்மியுனிசம், சோஷலிசம் குறித்து கேள்விகள் கேட்கிறான் என்றால் அவன் முதலாளித்துவத்தின், ஏகாதிபத்தியத்தின் அடிவருடியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு சாதாரண சாமானியனாக கூட இருக்கலாம். இந்த ஜனநாயக உலகில் கேள்வி கேட்க கூடிய உரிமை எனக்கு உண்டு. அதற்கு பதில் இருந்தால் சொல்லுங்கள், பதில் சொல்ல விருப்பம் இல்லை என்றாலும் பரவாயில்லை, அதில் தவறொன்றும் இல்லை. ஆனால் கேள்வி கேட்டவரை எதிரியாக நினைத்து பொங்குவதால் எந்த பயனும் இல்லை.

      வயிறு வளர்க்கிறார்கள் என்பது நான் கோபத்தில் இருந்தபோது வந்த வார்த்தை வெளிப்பாடு. அது என்னுடைய தவறு தான் என்று முன்பே கூறி இருக்கிறேன். சாதாரணமாக எனக்கு கோபம் வராது. ஆனால் சில நேரம் நம்முடைய கருத்தை தவறாக புரிந்து கொண்டு நம்மை எதிரியாக நினைத்துக்கொண்டு அவதூறாக பேசும்போது பதிலுக்கு பேச வேண்டிய நிலையில் இருந்தேன். அவ்வாறு பேசும்படி தென்றலாரின் அவதூறுகள் இருந்தாலும், அவ்வாறு பேசியது தவறு தான் என்று முன்பே கூறியுள்ளேன். நான் தவறாக ஒரு செயலை புரிந்தால் அதனை உணர்ந்து மன்னிப்பு கேட்கும் அளவுக்கு எனக்கு பக்குவம், முதிர்ச்சி உள்ளது. ஆனால் மற்றோருக்கு???

      எப்போதும் நாம் சொல்வது மட்டும் தான் சரி என்று நினைத்தால் பின் நம்மால் அதிகம் கற்றுக்கொள்ள முடியாது. தவறுகள் இழைப்பது இயல்பு. அதனை திருத்திக்கொண்டு முன்னேறுவதும், அடுத்தவர் கருத்து என்னவென்று நிதானமாக கேட்டு ஒரு முடிவுக்கு வருவதும் ஒரு முதிர்ச்சியுள்ள மனிதர் செய்யும் காரியம்.

      புரட்சி எப்படி வரும், எப்போது வரும் என்ற என்னுடைய கேள்வி நியாயமானதே. அதற்கு நேரடியாக நேர்மையாக பதில் சொல்வதை விட்டு ஈனபுத்தி கொண்டவர்கள், ஒட்டுண்ணிகள் என்று பேசுவதால் ஒரு பலனும் இல்லை.

      • தென்றலுடன் விவாதிக்கும் போது வினவையோ அல்லது புரட்சிகர இயக்கங்களையோ அவதூரு செய்யும் தேவை எங்கு இருந்து க்ர்ரதுவிர்ற்கு ஏற்பட்டது ? இதுவரை உம்மிடம் மனமாற்றம் ஏற்பட்டதாக எந்த சான்றுகளும் கிடைக்கவில்லை. இன்னும் புரட்சிகர இயக்கங்களில் accountability இல்லை என்ற பாட்டையே பாடிக்கொண்டு தானே இருகின்றிகள். மோடி மதவாத திருச்சி பொதுகூட்டத்துக்கான செலவுகள் அனைத்துமே மக்களின் நன்கொடை மூலமாகவெ செய்யபட்டது என்கின்றபோதிலும் அதற்கும் உம்முடைய பதில் என்னவாக இருந்தது ? சிந்தியும் ! மானக்கேடாக இல்லை உமக்கு மாற்றிமாற்றி பேசிக்கொண்டு இருப்பத்ர்ற்கு ?

        • Change: @மோடி மதவாத திருச்சி பொதுகூட்டத்துக்கான செலவுகள் ->ம க இ க வின் மோடி பாசிச மதவாத எதிர்ப்பு திருச்சி பொதுகூட்டத்துக்கான செலவுகள்

  18. அரசு செலவழிக்கும் சொத்துவரி, நூலகம் அமைப்பதற்கான வரவு செலவுகள் மற்றும் இதுவரை செலவிடப்படாமல் இருக்கும் பள்ளிக்கல்விக்கான தொகை குறித்த Accountabilitக்கு கற்றது கையளவு அவர்களிடம் எழுப்பட்ட கேள்விக்கு தற்பொழுது வரை பதில் வரவில்லை.

    எப்பொழுது போராடப்போகிறார்?
    குழு அமைப்பதற்கான திட்டம்,
    புளு பிரிண்ட்,
    குறுகிய கால நோக்கம் குறித்த எதற்கும் இவர் இன்னும் வாய் திறக்கவில்லை. மானுடன் போன்ற வாசகர்கள் தலையிட்டு ஓர் உன்னதமான இலட்சியத்திற்கு வழிவகுத்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    பின் குறிப்பு: கற்றது கையளவிற்கு எழுதிய பல நூறு பின்னூட்டங்களுக்கு இதுபோன்று எஸ்கேப் ஆகியிருக்கிறார். இம்முறை கண்ணியத்தைக் காக்குமாறு தாழ்மையுடன் கோருகிறேன்.

    • தென்றல் அவர்களே,

      என் தனி ஒருவனால் மாற்றம் கொண்டு வர இயலாது.
      எனக்கு பின் ஒருவரும் இல்லை. ஆனால் உங்களுக்கு பின் ஆயிரக்கணக்கானவர்கள் உள்ளனர்.

      நெஞ்சை தொட்டு சொல்லுங்கள். முப்பது வருடங்களுக்கு முன் எத்தனை கம்மியுநிஸ்ட்கள் இருந்தார்கள். இப்போது எத்தனை பேர் கம்மியுநிசத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். இது தான் தாங்கள் சொல்லும் வளர்ச்சியா?

      முயற்சி என்று ஒன்று இருந்தால் அதற்கான பலன் குறைந்த பட்சம் ஒரு சதவீதமாகவேனும் இருக்க வேண்டும். ஆனால் தேய்மானம் ஆகிறபோது முயற்சியில் ஏதோ தவறுள்ளது எனத்தான் பொருள் கொள்ள வேண்டும்.

      நாட்டு மக்கள் நன்றாக இருக்க வேண்டும். மக்களுக்கு ஊழலற்ற திறமையான, மக்கள் நலன் மேல் அக்கறை உள்ள ஒரு அரசு உருவாக வேண்டும் என்பதில் நம் இருவருக்கும் இருவேறு கருத்து இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால் தாங்கள் எடுக்கும் முயற்சியில் எந்த வித பலனும் இல்லை என்றால் தங்களது செய்முறையில் எங்கோ தவறிருப்பது தங்களுக்கு தெரியவில்லையா?

      உங்கள் கேள்விக்கு பதில் அளிக்காமல் இல்லை. ஆனால் நான் சொல்லும் பதில் உங்களுக்கு பிடிக்கவில்லை. அதை ஒத்துக்கொள்ளுங்கள்.

      நான் சொல்கிற வழி என்பது மக்களை உங்களுடன் இணைப்பது. தனி ஒரு குழுவாக ஒரு நாட்டின் தலையெழுத்தை மாற்றுவதை விட, ஒட்டு மொத்த மக்களின் மனதில் ஒரு எழுச்சியை ஏற்படுத்துங்கள் என்று தான் சொல்கிறேன். அது உங்களுக்கு புரியவில்லை.

      தேர்தல் பாதை திருடர் பாதை என்கிறீர்கள். அங்கிருக்கும் திருடர்களை அகற்ற வேண்டுமானால் நீங்களும் அந்த பாதையில் பயணித்தால் தான் அவர்களை அவர்கள் வழியிலேயே எதிர்த்து ஜெய்க்க முடியும்.

      பல பின்னூட்டங்களில் எனக்கு தெரிந்த தீர்வை உங்களுடன் பகிர்ந்திருக்கிறேன், ஆனால் நீங்கள் அதற்கு நேரடியாக பதிலளிக்காமல் அருவருக்க தக்க வார்த்தைகளை பயன்படுத்தி விடுகிறீர்கள். அது பதில் அல்ல.

      மக்களுக்கு உங்கள் அமைப்பின் மேல் முதலில் நம்பிக்கை வர வேண்டும். அதற்கு என்ன முயற்சி எடுத்தீர்கள்? மக்கள் பிரச்சினைகளில் போராடினால் மட்டும் போதாது, அவர்களை பொறுத்தவரை தீர்வுகளை பெற்று தர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். கோஷங்களை தாண்டி தீர்வுகளை நோக்கி எப்போது பயனிக்கிரீர்களோ அப்போது தான் மக்கள் உங்களை திரும்பி பார்ப்பார்கள்.

      மீண்டும் சொல்கிறேன். முதல் கட்டமாக ம.க.இ.க குழுவினர் ஒவ்வொரு வார்டாக சென்று அங்கிருக்கும் மக்கள் பிரச்சினைகள் என்ன என்று கணக்கில் எடுத்து, அவற்றை ஒவ்வொன்றாக உங்கள் ஆள் பலம், குழுவின் செல்வாக்கின் மூலம் மக்கள் பிரச்சினைகளை தீர்த்துக்காட்டுங்கள்.
      அடுத்த கட்டமாக அந்தந்த வார்டுகளில் நடக்கும் உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிடுங்கள். உங்களால் மக்களுக்கு ஒரு நன்மை கிடைக்கும் என்றால் நிச்சயம் அவர்கள் உங்களை நம்பி ஒட்டு போடுவார்கள். அரவிந்த் கேஜ்ரிவால் போன்றவர்களுக்கே மக்கள் ஒட்டு போட்டு முதலமைச்சராக்கி விட்டார்கள். ஆனால் முப்பது வருடம் நீங்கள் போராட்டம் நடத்தி என்ன பலனை கண்டீர்கள்? ஒரு பேச்சுக்கு சொல்கிறேன். நீங்கள் அரவிந்த் கேஜ்ரிவாலை போல மக்கள் மனதில் ஒரு மாற்றத்தை உண்டாக்கி உங்கள் குழுவை ஆட்சி பீடத்தில் ஏற்றினால் அப்போது நீங்கள் நினைத்திருக்கும் சீரமைப்பு வேலைகளை சட்டமாகவே கொண்டு வரலாமே?

      ஏன் நீங்கள் அந்த முயற்சியை பற்றி யோசிக்க கூடாது?

      • மிஸ்டர் கற்றது, ஏன் சார் இவ்ளோ பணிவு? ம.க.இ.கவுக்கே எப்புடி புர்ச்சி நடத்தணும்ணு அட்வைசு கொடுக்கிற நீங்க இது வரைக்கும் தமிழ்நாட்டுல ஒரு Issueவுக்கு கூட போராலங்கிறத கேட்டா யாராச்சும் உங்க உபதேசத்தை மதிப்பாங்களா சார்? ஏன் சார் உங்க ஊர்ல ஒரு ஐஞ்சு பேரைக் சேத்துகிட்டு ஒரு போலிஸ் ஸ்டேசன் போய் தப்பு பண்ண போலிசுகாரரை தட்டிக் கேக்கலேண்ணா இம்புட்டு வார்த்தைங்கள்ள அட்வசை பண்றதுல இன்னா பயன் பாடு சார்?

        பெறவு ஏன் புர்ச்சி வரலே, கம்யூனிசம் ஆளலைன்னு கேக்குறீங்களே, இப்போ இவ்வளோ நாயம் பேசுற கையளவு சாரே ம.க.இ.கவுல சேரலை. ஏன் சேரலைன்னு கேட்டா அது உங்க பிரைவேட் ஃப்ரீடம்னு சொல்லுவேள் இல்லையா! அப்பால உங்கள துப்பாக்கி வச்சு பயமுறுத்தி கட்சியில சேருன்னா சேருவீங்க! ஏன்னா கன்னுதான் இந்த உலகத்துலேயே நல்லா சொல்லிக்கொடுக்குற ஆசான்.

        இப்போ புரியுதா சார்! கையளவு மட்டுமில்ல, இந்த ஊருல இருக்குற நிறைய கோயிந்துகளையும் அப்புடி கம்பல் பண்ணி சேர்க்க முடியாது! அப்புடி சேர்க்குறதா இருந்தா நீங்கள் இன்னாபா புர்ச்சி ஆஃபர் போட்டு இவ்வோ நாளாச்சு என்னாச்சுன்னு சரவணா ஸ்டோர் கஸ்ட்மர் மாறி முறைச்சுக்கிணு கேக்கலாம்! கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க!

        • வெற்றிவேல்,

          மிக மிக தவறான பாதையை நோக்கி பயணிக்கிறீர்கள். துப்பாக்கி தான் உங்கள் பதில் என்றால் அதற்கு ஈடாக தாங்கள் கொடுக்கும் விலை மிக அதிகம்.

          மக்கள் நல அரசு வருவதற்கு மக்கள் நலன் மேல் உண்மையான அக்கறை இருப்பவர்கள் ஆட்சியில் இருக்க வேண்டியது அவசியம். நீங்கள் அத்தகையதொரு ஆட்சி புரட்சி, அதிலும் உங்களை கேட்க வேண்டுமென்றால் ஆயுத புரட்சி வந்து தான் கிடைக்கும் என்பது உங்கள் நம்பிக்கை. ஆயுதம் இல்லாமலேயே மக்கள் சக்தியை ஓன்று திரட்டி ஆட்சியை பிடிக்க முடியும் என்பது என் நம்பிக்கை. உடனே நீ ஏன் அதை செய்யவில்லை என்று கேட்பீர்கள். நான் தனி ஒருவன், எனக்கு பின் ஒருவரும் இல்லை. ஆனால் ம.க.இ.க வுக்கு பின் ஒரு பெரும் இளைஞர் படை உள்ளது. என்னை பொதுமக்களில் ஒருவனாக கருதுங்கள். உங்கள் மேல் எங்களை போன்ற பொதுமக்களுக்கு நம்பிக்கை வந்தால் தானாக உங்களை ஆதரிப்போம்.

          • அய்யா, துப்பாக்கிதான் என்னோட பதில்னு எங்கய்யா சொன்னேன! ம.க.இ.க ஆட்சி பிடிச்சு உங்களுக்கு பணிவிடை பாக்றது இருக்கட்டும். நீங்க இந்த நாட்டுக்கு, மக்களுக்கு என்னா பண்ணியிருக்கீங்க, பண்ணப் போறீங்க? எதுவும் செய்ய மாட்டேன்னு ஒத்தக்கால்ல நின்னுகிட்டு ஊருலு உள்ள அல்லா பயலுகளும் புர்ச்சி பண்ணனும்னு கேட்டா அப்பால புரட்சிக்கு என்னய்யா மதிப்பு?

            திரும்பவும் துப்பாக்கிதான் என்னோட பதில்னு எழுனீங்கன்னா………… வேணா அழுதுருவேன்!

          • வெற்றிவேல்,

            //அப்பால உங்கள துப்பாக்கி வச்சு பயமுறுத்தி கட்சியில சேருன்னா சேருவீங்க! ஏன்னா கன்னுதான் இந்த உலகத்துலேயே நல்லா சொல்லிக்கொடுக்குற ஆசான்.//

            இது தங்கள் பின்னூட்டத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

      • கற்றது கையளவு,

        நான் கேட்ட கேள்விக்கு தாங்கள் பதில் அளிக்கவில்லை. Accountability என்ற வாதத்தில் இருந்து தேர்தல் பாதைக்கு சென்றுவிட்டீர்கள். இப்படி தொடர்ந்து நாடகம் ஆட முடியாது என்பதை நினைவில் வைக்க வேண்டும். இங்கு நாம் விவாதிப்பது தேர்தல் குறித்த அல்ல. இதற்கு தனியொரு விவாதத்தைக் கோருவீர்களானால் நாம் அங்கிருந்து தொடங்கலாம். Coming Back to the point

        தனியொருவனால் சாதிக்க முடியாது என்று தாங்கள் சொல்வதற்காகத்தான் உங்களை குழுவாக இணைக்கக் கோருகிறேன். Accountabilityஐ அம்பலப்படுத்துவதற்கு

        உங்களுக்கு எத்துணை பேர் வேண்டும்?
        இதற்கான கால அளவு என்ன?

        ஏனென்றால் என்னைப்போன்றவர்கள் புரட்சிகர அரசியலை ஏற்றுக்கொண்டு புரட்சிக்காக மக்களை அணிதிரட்டுகிறோம். அது ஒத்து வராது என்று தாங்கள் கூறுகிறீர்கள் அல்லவா?

        நான் கேட்பது என்னவென்றால் அரசு நூலகங்களுக்காக செலவிடுகிற தொகையை செலவிடவில்லை.

        இங்கு சனநாயக அமைப்புகள் தங்கள் பார்வைப்படி உள்ளன. உள்ளாட்சி, உள்ளாட்சிக்கு மனுகொடுப்பது. கலெக்டரை சந்திப்பது, எம் எல் ஏவை சந்திப்பது, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரம், மேடை பேச்சு, கண்டன ஆர்ப்பாட்டம் என அனைத்தையும் பயன்ப்படுத்தவேண்டும். இதே தான் கல்வியில் அரசு செலவிடாத தொகையும். இதற்கு தாங்கள் எப்பொழ்து வருகிறீர்கள்?

        வரமுடியாவிட்டால் (வாசகர்கள் அறிந்துகொள்வார்கள்)எனக்கு இன்னொரு கோரிக்கை.

        1. உத்தேசமாக அரசு நூலங்களுக்கு செலவிடுகிற தொகையை உறுதிப்படுத்ததற்கு எவ்வளவு நாள் ஆகும்? மக்களை எப்படி திரட்டப்போகிறீர்கள். எனக்கு வார்டுவார்டாக சென்று சில அனுபவங்கள் உள்ளன. கோர்ட் வழக்கு என்று வந்தால் மக்கள் உரிமைப்பாதுக்காப்பு மையத்திடம் ஆலோசனைகள் கேட்போம்.

        2. அரசு பள்ளிகளில் செலவிடுகிற தொகையை உறுதிப்படுத்துவதற்கு எவ்வளவு நாள் ஆகும்? இதற்கான புளூபிரிண்ட் என்ன? முதற்கட்டமாக வீட்டிலிருந்த படியே துண்டுப்பிரசுரமும் அனைத்துப் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்புகிற பணியைச் செய்யலாம். இதற்கு ஆகிற தொகையை மக்களிடம் கேட்போம்.

        தங்களது முடிவிற்காக காத்திருக்கிறேன்.

  19. வினவு என்பது ஒரு மாற்று ஊடகம்.எல்லோரையும் நடுநிலையாக சரியாக விமர்சிக்கின்றனர்.அந்த பார்வை வழக்கமான ஜூவி,நக்கீரன் தரத்தில் இல்லாமல் அடிப்படை செய்திகளை வேறு கோணத்தில் அலசுகிறது இப்படி பல்வேறு காரணங்களினால் தான் வினவை படிக்க பலரும் வருகின்றனர்.இப்படி வருகின்ற பலரில் வெகு சிலர் தவிர பெரும்பாலோர் கருத்துரைப்பதோ விவாதங்களில் பங்கு பெறுவதோ இல்லை என்பது யதார்த்தம்.நேரமின்மை தமிழ் தட்டச்சு செய்வதில் தேர்ச்சி இல்லாமை போல பல காரணங்கள் இதற்கு பின் உள்ளது.

    அதே சமயத்தில் இங்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு கோணத்தில் செய்திகளை படிக்ககூடிய வாசகர்கள் தமக்கு கற்பிக்கப் பட்ட பொதுபுத்தியிலிருந்து விலகி இருக்கும் இந்த கோணத்தில் நிறைய ஐயம் கொள்கின்றனர்.அவர்களின் கேள்விகளை தொடுக்க இயலாத பலரும் நாடுகின்ற பகுதிதான் இந்த ”மறுமொழிகள்”.நமது சந்தேகங்களை வேறு எவராவது கேட்டுள்ளார்களா என்பது தொடங்கி வேறு என்னென்ன கோணங்கள் இதில் உள்ளன என்பதை இங்கு வந்து அறிய விரும்புகின்றனர்.ஆக இது ஒருவகையில் பாராளுமன்றம் அல்லது சட்டமன்றத்தில் உள்ள பார்வையாளர் மாடம் என சொல்லலாம் (முழுமையான பொருளில் அல்ல ).

    ‘ஜனநாயகத்தை’ போற்றுகிறவர்கள் மேற்படி சபைகளின் கண்ணியம் ‘காக்க’ விரும்புவதற்கு என்ன நோக்கமிருக்க முடியுமோ அதே நோக்கம் இங்கே பாட்டளிகளின் சபையிலும் ஒரு கண்ணியம் இருக்க வேண்டும் என்கிற நோக்கம் தேவை.அது புதிதாக இங்கு விவாதிக்க விரும்புவர்களை விவாதங்களில் பங்கு பெற ஊக்குவிக்கும் என்பது எனது எதிர்பார்ப்பு.

    இது ஒருபுறமிருக்க இங்கு வந்து கேள்வி கேட்கவும் விவாதத்தில் பங்கு பெறவும் வருகின்ற சிலருக்கும் வெவ்வேறு நோக்கங்கள் தெரிவுகள் இருக்கின்றன என்பது வெளிப்படை.ஒருபதிவில் பத்ரியையும் அதியமானையும் சரியாகவே ஒப்பிட்டீர்கள்.அது போன்ற ஒரு பார்வையையும் அதற்கேற்ற அணுகுமுறையும் விவாதிக்கும் போது தேவை தான்.நான் க கை விசயத்தில் அவர் தாமாகவே மன்னிப்பு கேட்டு அதே சமயத்தில் தன்னை அந்தளவிற்கு நெருக்கியது எது என்பதை சுட்டிய விசயத்தில் அது ‘புரிந்து’ கொள்கிற அளவில் இருந்தது என்று நான் நினைக்கிறேன் .அதை அங்கீகரிக்க வில்லை.அது போக அவரது விவாதமுறை ஒரு அசட்டுத்தனமான அறியாமை நிரம்பியது.தமிழிலே அறிவினா, அறியாவினா என்று வினாக்களை பிரிப்பதை அறிவோம்.

    இணைய விவாதத்தில் இப்படிப்பட்ட அசட்டுத்தனமான அறியாமையுடன் “நேர்மை+ உழைப்பு= உயர்வு” என்கிற சமன்பாட்டை பொதுப்புத்தியில் சுமந்து திரிகிற க கை போன்றவர்கள் ‘அறியா’வினாவை ‘அறி’வினாவாக தன்னகங்காரத்தோடு வாதப்போர் நிகழ்த்துகின்றனர்.இந்த எனது கருத்து வினவின் கணிப்போடு ஒத்துபோகிறது. //”கற்றது கையளவிடம் இருக்கும் இந்தப் பொதுப்புத்தி சார்ந்த அறியாமைகள், மூட நம்பிக்கைகள், ஏட்டிக்கு போட்டியாக விவாதிக்கும் நடுத்தர வர்க்க ஈகோ – இதுதான் முதன்மையானது – போன்றவையே அவரை அப்படி பேச வைக்கின்றன”//

    ஆனால் தென்றலோ PK அவர்களோ இதனை திடமாக மறுக்கின்றனர்.அவர் அப்புராணி வேடம் போடுகிறார் என்கின்றனர் .// “அதற்கு உங்களைப்போன்றவர்கள் அவருடன் ஒரு இரண்டு வருடம் வாழ்ந்த அனுபவம் வேண்டும். அது எனக்கு உண்டு”// இருக்கலாம் தான். இந்த வழக்கின் இரண்டு வருட வரலாறு தெரியாமல் நான் இதற்கு மேல் க கை பற்றி அனுமானம் செய்ய விரும்பவில்லை.ஆனால் அதே இரண்டு வருட அனுபவத்தை க கை யுடன் கொண்டிருக்கிற வினவும் எனது கருத்தோடு ஒத்துப்போகிறதே?

    அவர் அசடு தான் என்கிற எனது நினைப்பை உறுதி படுத்துகிற மற்றொரு சந்தர்ப்பம் இப்போது வாய்த்தது.பவர் ஸ்டார் மோடி பதிவில் க கை இப்படி ஒரு கருத்தை எழுதுகிறார். // எல்லாம் சரி, ஆனால் ஒட்டுமொத்த இராணுவத்தை திண்ணிமடம் என்று அநியாயமாக பழிபோடுவதை தவிர்த்திருக்கலாம். இராணுவ வீரர்கள் வெயிலிலும் பணியிலும் மலைகளில் காத்து நிற்பதை இவ்வளவு கேவலமாக விமர்சனம் செய்திருக்க கூடாது”// இன்றைக்கு 100க்கு 70-75 சதம் மக்கள் கருத்து இதுதான் என்பதை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்.

    இந்த ராணுவத்தால் பாதிக்கப்பட்ட காசுமீர் பள்ளத்தாக்கு,வடகிழக்கு மாகாணங்களின் மக்கள் தமது சொந்த அனுபவங்கள் மூலம் அறிந்தும் உணர்ந்தும் கொண்டவைகள் நாட்டின் பிற பகுதி மக்களுக்கு உறைக்கவில்லை .”தேசபக்தி” கொண்ட ஊடகங்கள் அறிவு ஜீவிகள் ராணுவத்தை புனிதம் ஏற்றி கொண்டாடும் முறை மூலம் விளைந்த பொதுப்புத்தியை கொண்ட இந்த 70-75 சதம் மக்கள் ராணுவத்தை க கை போலவே மதிக்கின்றனர்.இந்த பார்வையை விமர்சிக்கும் மற்றொரு நண்பரான தமிழ் ……//” மக்கள் விரோத மனவக்கிர பூனைகுட்டி வெளியே வருகின்றதே”// என்று எழுதுகிறார், சரி தான்.அதற்கடுத்த வரியில் துர்பாக்கியமாக தமிழின் மனவக்கிர பூனைக்குட்டி இப்படி வருகிறது .//”ஆடு திருடி ,கோழி திருடி அம்மக்களின் பெண்களின் உடலையும் திருடி ருசிக்கும் இந்திய இராணுவ துனைபடைகளுக்கு கற்றது அவர்கள் அவர் வீட்டில் வலிய அத்தகைய “விருந்துகளை” [ஆ ,கோ , பெ ] கொடுப்பதில் எமக்கு ஒன்றும் பிரச்சனையில்லை”// .

    இது என்ன மாதிரியான வக்கிரமான தாக்குதல் என்பதை க கை கவனிக்கவில்லை. இந்த வார்த்தை எந்த தாக்கத்தையும் அவரிடம் ஏற்படுத்தியதாக தெரியவில்லை.அவர் அதை கடந்து போகிறதைப் பார்த்தால் அவர் அசடாக தான் இருக்க வேண்டும்.இந்த இடத்தில் அவர் பெருந்தன்மையால் அல்லது வாதத்தில் கவனம் சிதறாமல் இப்படி நடந்து கொள்வதாக கருத இயலவில்லை.வினவை இந்த இடத்தில் ஒன்று கேட்க விரும்புகிறேன்.வார்த்தைகளில் எல்லை கொடு போடுகின்ற உங்கள் மட்டறுத்தல் முறை அதன் பொருளுக்கு இல்லையா? பெண்கள் மீதான இந்த பார்வை பதிப்பிக்க தகுந்தது தானா?குறுக்கு எழுத்தாலும் விருந்து என்கிற பூடகமான குறியீட்டால் அருவருக்கத்தக்க கருத்தை பெண்களின் பால் கொண்டிருக்கிற தமிழ் என்கிற ‘புரட்சியாளர்’ தன்னை சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டும்.

    நண்பர் PK அவர்களுக்கு ://”உழைப்பவர்களின் மொழி கரடுமுரடானது என்கிற யதார்த்தம் கரடுமுரடானது தான் உழைப்பவர் மொழி என்கிற வரையறையாக மாற வேண்டாமே”//.இது என் வேண்டுகோள் ….//”இதிலேயே உங்கள் பார்வையில் உள்ள குறைபாட்டைப் புரிந்து கொள்ளமுடிகிறது”// அது என்ன குறைபாடு என்று சொல்லுங்கள்.மாற்றிக் கொள்கிறேன் . //”இங்கே தான் ஒருவரின் வர்க்கம் வருகிறது”//.அது என்ன வர்க்கம்? நான் தொழிலாளி தான் என்று ஆதாரத்துடன் வந்து நின்றாலும் நம்பமாட்டிர்கள்.அப்போதும் சாராம்சத்தில் நான் வேறாக இருப்பதாக குற்றம்சாட்டி ரெடிமேடாக கைவசமிருக்கிற வார்த்தைகளில் ஒன்றை போட்டு நிரப்புவீர்கள். உங்களுடன் முரண் படும் எல்லோருக்கும் ஒரு வார்த்தை போட்டு (branding) தாக்குவீர்கள் என்றால் உங்கள் நிழலுக்கும் இதே ஆபத்து வந்து விடும்.

    நண்பர் க கை அவர்களுக்கு: 2020ல் வல்லரசு என்கிற கலாம் பாணி முழக்கம் கேட்டு பரவசமுறுகின்ற பள்ளி மாணவரா நீங்கள்? புரட்சி எப்போது பிறக்கும் என்று செயல்திட்டம் கேட்கிறீர்களே, உலகின் எந்த நாட்டின் புரட்சி போராட்ட வரலாறோ அல்லது சுதந்திரத்திற்கான போராட்ட வரலாறோ படித்திருக்கிரீர்களா? அப்படி படித்திருந்தாலும் ஒரு நாவலுக்குரிய அம்சங்களை தாண்டி எதுவும் உங்கள் சிந்தனையில் படியவில்லை என்பது தெளிவாகிறது.இரண்டு வருடங்களாக ஒரு தளத்தில் எல்லா பதிவுகளுக்கும் பின்னூட்டம் இடுகின்ற உங்களுக்கு உங்களது போதாமை விளங்கவில்லையா? அறிய விரும்பும் ஆர்வலர் என்று காட்டிக் கொள்ளும் நீங்கள் அதற்குரிய தொனியில் கேள்விகளை எழுப்ப வேண்டுமல்லவா? அதியமான் போன்றவர்கள் முதலாளித்துவ ஜனநாயகம் சார்பாக ஒரு நிலையெடுத்து பேசுவதற்கும் நீங்கள் ஒரு ஆர்வலராக கேள்வி கேட்பதையே முழு நேரப் பணியாக வைத்திருப்பதற்கும் பாரிய வேறுபாடு இருப்பது புரிகிறதா? இதெல்லாம் உங்களுக்கு புரிந்தால் அதை சரி செய்ய முயலுங்கள். அதுவரை விவாதங்களை குறைத்துக் கொண்டு கற்றலை தொடங்குங்கள் உங்கள் பெயருக்கு அப்போது தான் ஒரு பொருத்தம் இருக்க முடியும்.

    இறுதியாக வேண்டுகோளாக வினவிற்கு சில வரிகள் எழுத வேண்டியுள்ளது .பொதுஉடைமை தத்துவம் காலாவதியாகி விட்டது என்பதில் ஆரம்பித்து லெனின் தவறான நடத்தையுள்ளவர், கம்யுனிஸ்டுகள் சர்வதிகாரிகள் என்றெல்லாம் பேசி ஸ்டாலினிய ஆட்சியின் மர்மங்கள் அழித்தல் நடவடிக்கைகள் வரை இன்றைக்கு எல்லாமே எதிரான பிரச்சாரமாக நடந்து கொண்டிருக்கும் காலத்தில் இங்கு நடைபெறும் விவாதங்களில் வினவின் சார்பாக எழும்புகின்ற குரல்களில் கண்ணியம் இருப்பது தேவை என்பது எனது கருத்தாக இருக்கிறது.

    இங்கு விவாதங்களில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு கட்டுரையாளர் பதில் சொல்வதோ தள நிர்வாகி என்கிற முறையில் வினவு அல்லது வினவின் சார்பாக ஓரிருவர் பதில் சொல்வதோ என்கிற முறையில் இந்த மறுமொழி பகுதியை வடிவமைப்பது நல்லது என்பது எனது கருத்தாக முன்வைக்கிறேன்.யார் வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும் விவாதிக்கலாம்,ஏசலாம், ஒருமையில் பேசலாம் ஓடிபோயிடு என்று முழங்கலாம் என்று இதனை இப்படியே விட்டால் தேநீர்கடை அரட்டை மற்றும் சச்சரவிற்கும் இதற்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும் .

    • மானுடன் அவர்களே ,

      இந்திய இராணுவம் எதற்காக ஜம்மு காஷ்மிர் ,வடகிழக்கு மாநிலங்கள் ,தெலுங்கான ,ஈழம் என்று செல்லவேண்டும் என்ற வினவு வாசகர்களின் முதனமையான கேள்விக்கு பதில் சொல்லாமல் காலத்தை கடத்தும் கற்றது கையளவை பார்த்து நீங்கள் அசடர் என்கின்றிர்கள். அதில் உங்கள் அசட்டு பெரிய மனிதத்தனம் மட்டுமே வெளிப்படுகின்றது. மேலும் கற்றது கையளவு குறிபிடுவது போன்று “சரியான கல்வி, வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்து விட்டு பின் அடுத்த கட்டத்திற்கு சென்று இருக்க வேண்டும்.” என்ற கருத்தாக்கத்தில் மிஞ்சுகின்ற திருட்டு புத்தியை பார்த்தும் கூடவா அவரை அசடன் என்கின்றிர்கள் ? அடுத்த கட்டத்துக்கு சென்று பெருமுதலாளிகளை கனிம வளங்களை கொள்ளை அடியுங்கள் என்று பொருள் பட பேசும் கற்றது கையளவு உங்களுக்கு அசடராக தெரிகின்றார் என்றால் உங்கள் கணிப்பில் உங்களின் அசட்டு தனம் மட்டுமே மிஞ்சுகின்றது.

      தமிழ் எழுதியததில் ஏதும் தவறு இல்லை. மக்களை வதைக்கும் இந்திய இராணுவத்தை பார்த்தது அதனை ஆராதிக்கும் கற்றது கையளவிற்கு சரியான பதிலை தான் கொடுத்து உள்ளார் தமிழ்.

    • மானுடன் அவர்களே,

      விவாதம் என்பது நாகரீகமாக இருக்க வேண்டும் என்று தாங்கள் சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

      நான் எப்போதும் அனைத்தும் அறிந்தவன் என்று கூறவே இல்லை. எனக்குள் இருக்கும் கேள்விகளுக்கு விடை தேடுகிறேன். அவ்வளவு தான்.

      தமிழ் அவர்கள் சொன்ன கருத்தை முதலில் நான் கவனிக்கவில்லை. ஏன் என்றால் பல இடங்களில் நண்பர்கள் கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பதால் ஒரு சில பின்னூட்டங்களை படிக்க முடியாமல் போய் விடுகிறது.

      அவரின் தராதரம் இது தான் இன்று தெரிந்து விட்ட நிலையில் அவரது நிலைக்கு நானும் தாழ்ந்து லாவணி பாட விரும்பவில்லை. விவாதத்தில் தோற்கின்ற ஒருவர் தான் தனி நபர் தாக்குதலில் ஈடுபடுவார். அப்போதாவது எதிரில் விவாதிப்பவர் பயந்து ஓட மாட்டாரா என்ற நப்பாசை தான்.

      வினவின் பல பின்னூட்டங்களில் ஆக்கபூர்வமாக விவாதியுங்கள் என்று தான் நண்பர்களிடம் எடுத்துரைக்கிறேன். நீங்கள் பழைய விவாதங்களில் பார்த்தீர்கள் என்றால் அது புரிந்திருக்கும். கடுமையான விவாதத்தில் கூட தரம் தாழ்ந்து விமர்சித்தது இல்லை. முதல் முதலாக நான் சமீபத்தில் நன்கொடை விடயத்தில் எல்லை மீறி பேசினேன். அது தவறு என்று உணர்ந்து உடனுக்குடன் மன்னிப்பும் நானாக கேட்டேன்.

      தமிழ் அவர்களுடன் வினவில் பல்வேறு விவாதங்களில், அவரது பல்வேறு அவதாரங்களோடு விவாதித்திருக்கிறேன். சில சமயம் அவருடன் இனைந்து மற்றவருடன் அவருக்காகவும் பேசி இருக்கிறேன். கோபப்படுவது எல்லோருக்கும் இருக்கும் குணம். அதனால் அவரது பேச்சை, கோபத்தில் எல்லை மீறினார் என்று எடுத்து கொண்டு இத்துடன் விட்டு விடுகிறேன். அவரது பேச்சை மறந்து விடுகிறேன்.

    • மானுடன்,

      இங்கே வினவு கூறுகின்ற கொள்கைகளை ஆதரிப்போர் சிலர் விவாதிக்கின்றனர். அவர்கள் நீங்கள் கூறுவது போல “வினவு சார்பாக எழும்புகின்ற” குரல் அல்லர். அப்படி ஆதரிப்போரும் எல்லாவற்றையும் எப்போதும் ஆதரிப்போர் கிடையாது. முக்கியமாக இவர்கள் எமது இயக்கம் சார்ந்த தோழர்களும் அல்ல. ஒரு சிலர் வேறு பிரச்சினைகளில் கடுமையாகவும் எதிர்த்திருக்கின்றனர். ஒரு சிலர் அவர்களது அநாகரிகமான மொழி காரணமாக சில காலம் தடையே செய்யப்பட்டிருக்கின்றனர். ஒரு சிலர் முன்பு கடுமையாக எதிர்த்தவர்கள் தற்போது கொஞ்சம் மாறியிருக்கின்றனர்.

      கருத்துக்கள் கண்ணியமாகவும் கருப்பொருள் சார்ந்தும் விவாதிக்கப்படவேண்டும் என்பது எங்கள் கையில் இல்லை. இதில் ஓரளவு தலையிட்டு நெறிப்படுத்துகிறோம். ஓரிரண்டு விடுபடலாம். இருப்பினும் தற்போதைய தரம் முன்பைக் காட்டிலும் பரவாயில்லை என்றும் கூறலாம். பொதுவில் விவாதிப்பது அதிகம் நடக்க வேண்டும். அப்படி நடக்கும் போது உள்ளடக்கம் சார்ந்து விரிந்து பரந்து வாதிட வேண்டும். இரண்டுக்கும் எப்போதும் ஒரு முரண்பாடு இருக்கவே செய்கிறது.

      அனைத்து கருத்துகளுக்கும் வினவு சார்பாக கருத்து சொல்வது சரியுமில்லை, சாத்தியமுமில்லை. நன்றி!

    • நண்பர் மானுடன்,

      உங்கள் நீண்ட பதிவுக்கு நன்றி. எனது மொழிபற்றிய கருத்துக்கு எதிர்வினையாற்றியிருக்கிறீர்கள். மகிழ்ச்சி.

      //என்ன குறைபாடு என்று சொல்லுங்கள்.மாற்றிக் கொள்கிறேன்//

      வசதியானவர்கள் தங்கள் வீடுகளிலும் தெருக்களிலும் பேசிக்கொள்வதைப் போல வசதியற்றவர்கள் தங்கள் வீடுகளிலும் தெருக்களிலும் பேசிக்கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பது குறைபாடுள்ள பார்வையாகும். வசதியற்றவர்கள் அவர்கள் எதிர்கொள்ளும் முதலாளிகளால், அதிகாரிகளால், வசதியுள்ளவர்களால் அவமரியாதையாக பார்க்கப்படுவதும் விழிக்கப்படுவதும் சுரண்டப்படுவதும் அழைக்கழிக்கப்படுவதும் நாளும் பொழுதும் நடக்கக்கூடிய நிகழ்வு. வசதியுள்ளவர்கள் தங்களுக்காக வேலைசெய்யும் டிரைவர், செக்யூரிட்டி போன்ற வசதிகுறைந்த மக்களை ஒருமையில் அழைப்பதை தரக்குறைவாக நடத்தப்படுவதை விட கொடூரமான மொழி ஏதேனும் இருக்க முடியுமா. வசதியற்றவர்கள் அடுத்த வேலை சாப்பாட்டிற்கான சிக்கலில் இருக்கும் நிலையில்தான் இவ்வளவு அவமரியாதைக்கும் ஆளாகின்றனர். அவர்களுக்கு இருக்கும் கோபம் போன்ற உணர்வுகள் சரியான விதத்தில் இடத்தில் வெளிக்காட்ட முடியாத நிலையில் தங்கள் குடும்பத்திலும் அண்டை மனிதர்களிடம் காட்டிக்கொள்கிறார்கள்.

      கூடுதலாக, ரோட்டில் விற்றுக்கொண்டு வரும் அல்லது பெட்டிக்கடையில் இருக்கும் தீனி கேட்டு பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளை என்ன செய்ய முடியும். திட்டாமலும் அடிக்காமலும் இருக்க முடியுமா. அந்த குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை பதிலுக்கு மனதிற்குள் திட்டிக்கொள்ள வாய்ப்பிருக்கிறதில்லையா. இவர்களின் குடும்பங்களில் பத்தும் பத்தாத உணவை பகிர்ந்து கொள்வதில் கூட தகராறு வந்து விடும் தெரியுமா. பொருளாதாரத்தில் ஒரளவுக்கு நிறைவு பெற்ற குடும்பங்களில் இது போன்று நடக்குமா. சிறு அறைகளே குடிசைகளே வீடுகளாக அருகருகே வசித்துக்கொண்டு தெருவிலேயே சமைத்து சாப்பிட்டு தூங்கி கழிப்பறைகளை தண்ணீர் குழாய்களை பகிரந்து கொண்டு வாழும் போது அவர்களுக்குள் வாக்குவாதங்கள் இல்லாமல் இருக்க முடியுமா. தங்கள் உணர்வுகளை அதிருப்தியை ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படையாக நேர்மையாக அங்கே அவர்கள் பரஸ்பரம் பகிரந்து கொள்கிறார்கள்.

      //அது என்ன வர்க்கம்? நான் தொழிலாளி தான்//

      கோயிலில் மணியாட்டுபவர் கூட நான் தொழிலாளி தான் என்பார். சமூகத்தில் அவர் நடத்தப்படுவதற்கும் மற்ற தொழிலாளர்கள் நடத்தப்படுவதற்கும் வேறுபாடு ஏராளம். தொழிலாளிகளிலேயே எத்தனை வேறுபாடுகள் இருக்கின்றன என்பதை கவனிக்க வேண்டும். நாளுக்கு ஒய்வில்லா 12-16 மணி நேர வேலை, வசதியில்லா 3-4 மணிநேர பயணம், வாரம் 6-7 நாட்கள் வேலை, அடிப்படைத்தேவைகளுக்குக்கூட பத்தாத ஊதியம் வாங்குகிறவர்களும் இருக்கிறார்கள். 8 மணி நேர வேலை, வசதியான பயணம், 5 நாட்கள் வேலை 50% மேலான ஊதியத்தை சேமிப்பு முதலீடு செய்யமுடிந்த தொழிலாளர்களும் இருக்கிறார்கள். இதற்கிடையிலும் பல வகை இருக்கிறார்கள். நீங்கள் எந்த வகை என்பது உங்களுக்குத் தெரியுமில்லையா. வாழ்க்கைச்சூழல் வசதிகள் எல்லாமே வர்க்கத்தால் வருகிறது எனும் போது பேச்சு மட்டும் வர்க்கத்தைத்தாண்டி பொதுவாக இருக்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்ப்பது. குறுகிய தெருக்களைக் கொண்ட சேரிகளில் பயன்படுத்தும் வார்த்தைகள் அகல தெருக்களைக் கொண்ட சேரிகளில் மிமிக்ரி செய்வதற்காக அல்லாமல் பொதுவில் பயன்படுத்தப் படமாட்டாது என்பதை கவனித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். மக்கள் சுரண்டப்படுவது அத்துமீறல்களுக்கு ஆட்படுவது தடுக்கப்படும் போது பேச்சு உன்மையான ஜனநாயகப்படும்.

      இன்றைய நிலையில் தொழிலாளர்களின் பேச்சை கரடுமுரடாக இருக்கிறதென்று கூறினால் அதில் ஏதேனும் பொருள் இருக்கிறதா அல்லது வர்க்க வேறுபாடு இருக்கிறதா என்று இப்போது கூறுங்கள்.

      தொடரும்…

    • நண்பர் மானுடன்,

      வினவின் பின்னூட்ட விவாதமேடையை பாராளுமன்றம் அல்லது சட்டமன்றத்தோடு ஒப்பிடுகிறீர்கள். மேற்படி சபைகளின் ‘கண்ணியம்’ என்கிறீர்கள். கண்ணியம் ‘காக்க’ப்படவேண்டும் என்கிறீர்கள். நீங்கள் வினவிற்கு மற்றும் புரட்சிகர கருத்துக்களுக்கு புதியவர் போலிருக்கிறது. நல்வரவு. அந்த சபைகளை நாங்கள் பன்றித்தொழுவம் என்கிறோம். ஏன் என்பதை தெரிந்து கொள்ள முயலுங்கள். உதவுகிறோம்.

      வினவின் சபை பாட்டளிகளின் சபைதான் என்றாலும் அதில் அதற்கெதிரானவர்கள்தான் அதிகம் கலந்து கொள்கிறார்கள். அதனால் விவாதம் சூடாகத்தான் இருக்கும். பல ஆயிரவருட அநீதிகளுக்கு எதிரான உணர்ச்சிகள் தென்றாலாக இருக்காது சூறாவளியாகத்தான் இருக்கும். பெருமளவிலான பாட்டளிகளுக்கு இணைய சபைக்கு வர முடியும் அளவுக்கு ஒய்வோ வசதியோ இல்லை என்பதையும் கவனிக்கவேண்டும்.

      க கை பற்றிய அனுமானத்தில் வினவும் உங்களது கருத்தோடு ஒத்துப்போகிறாரே என்கிறீர்கள். நல்லதுதான். வினவு தனக்கு வரும் எல்லா பின்னூட்டங்களையும் கருத்தூன்றி படிக்க முடிந்தால் அது நல்லது தான். ஆனால் அது சாத்தியமா என்றால் சந்தேகம்தான். சில நேரங்களில் சில பகுதிகளை மேம்போக்காக படித்து மட்டுறுத்த ஒன்றுமில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு வெளியிடமட்டுமே அவரால் முடியும் என்று நினைக்கிறேன். ஆனால் எனக்கு இங்கே விவாதிப்பது குறிப்பாக க கையுடன் விவாதிப்பது ஒரு முக்கிய வேலை. எல்லா நேரத்திலும் இதே நினைப்பாக இதைச் செய்கிறேன். வினவினுடைய அனுமானத்திற்கு நான் எதிர்வினையைக் கொடுத்திருக்கிறேன் பாருங்கள். எப்படியோ, எனது யூகம் தவறாகப் போகவேண்டும் என்பது தான் எனது ஆசையும் கூட.

      வினவின் சார்பாக எழும்புகின்ற குரல்களில் கண்ணியம் இருப்பது தேவை என்ற கருத்துக்கு முந்தைய பின்னூட்டத்திலேயே பதில் இருக்கிறது. தேவைப்பட்டால் மேலும் விளக்கலாம்.

      மறுமொழி பகுதியை பற்றிய உங்களது ஜடியாவிற்கு வினவு அழகாக பதிலளித்திருக்கிறார்.

      • PK:ஒரு மூன்று மார்க் கேள்விக்கு 1/2 பக்க கட்டுரை எழுதுகிறீர்களே நியாயமா?

        //”உழைப்பவர்களின் மொழி கரடுமுரடானது என்கிற யதார்த்தம் கரடுமுரடானது தான் உழைப்பவர் மொழி என்கிற வரையறையாக மாற வேண்டாமே”//.இது என் வேண்டுகோள்.இதனை முதல் ஒரு வரியை மட்டும் பிரித்து போட்டு ….//”இதிலேயே உங்கள் பார்வையில் உள்ள குறைபாட்டைப் புரிந்து கொள்ளமுடிகிறது”// என ஒற்றை வரி எழுதியிருந்தீர்கள். உண்மையிலேயே அது என்ன குறைப்பாடாக இருக்க முடியும் என்று யோசித்து ,முடிவுக்கு வர இயலாமல் தான் //”அது என்ன குறைபாடு என்று சொல்லுங்கள்.மாற்றிக் கொள்கிறேன்”// என்று கேட்டிருந்தேன்.உங்களது பதிலில் அந்த மொழி கரடுமுரடானது அல்ல செவ்வியல் மொழிதான் என்று வாதிடப் போகிறீர்கள் என்று நினைத்தேன்.ஆனால் அது ஏன் அப்படி நிலவுகிறது என்று காரணங்களை விவரித்து எழுதுகிறீர்கள்.நான் அந்த மொழியை பழித்து எழுதியிருந்தால் தானே இத்தகைய நியாயங்களை எனக்கு உரைக்க வேண்டும்? புரிகிறதல்லவா?

        ஒவ்வொரு வார்த்தையிலும் ஒரு வர்க்கத்தின் சாயல்,நலன் ஒளிந்திருக்கிறது என்பதை நானறிவேன்.அது நீங்கள் குற்றம் கொள்கிற அளவில் என்னிடம் இருக்க வில்லை என்பதை மட்டும் என்னால் சொல்ல முடியும்

        //” வினவின் பின்னூட்ட விவாதமேடையை பாராளுமன்றம் அல்லது சட்டமன்றத்தோடு ஒப்பிடுகிறீர்கள்”// அந்த பத்தியை முழுமையாக ஊன்றி – நிறுத்தற்குறிகள் அடைப்பு குறிகள் எல்லாவற்றையும்-படியுங்கள் .புரியும் !!

        //”அந்த சபைகளை நாங்கள் பன்றித்தொழுவம் என்கிறோம்” // நாங்கள் என்றால் யார் யார் ? தென்றல், தமிழ் போல உள்ள கூட்டணியா? உங்களை மகஇக அமைப்பில் இல்லாதவர்கள் என்று முகத்திற்கு நேராக வினவு சொல்லியதை கவனிக்கவில்லையா? மார்க்சிய ஆசான்கள் சொன்னதை நீங்களே கண்டுணர்ந்தது போல என்ன ஒரு ஆர்ப்பரிப்பு?

        ”// நீங்கள் வினவிற்கு மற்றும் புரட்சிகர கருத்துக்களுக்கு புதியவர் போலிருக்கிறது”//
        “//ஏன் என்பதை தெரிந்து கொள்ள முயலுங்கள். உதவுகிறோம்”// “NO COMMENTS”

        • மானுடன்,

          // அந்த மொழி கரடுமுரடானது அல்ல செவ்வியல் மொழிதான்//

          கரடுமுரடானது என்ற வார்த்தைக்கு எதிராக ஒரு புதிய சொல்லை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறீர்கள். தற்போதைய நிலையில் இந்த சொல்லுக்கு எந்த பொருளும் இல்லை என்பது எனது உறுதியான அறிவிப்பு/ஆர்ப்பரிப்பு.

          சுரண்டுபவர்கள் பேசும் மொழி கொடூரமானது என்று சொல்லியிருக்கிறேன். சுரண்டல் அமைப்பில் சுரண்டலில் நேரடியாக ஈடுபடாமல் ஆனால் அப்படிப்பட்டவர்களை அண்டிப்பிழைப்பவர்கள் அல்லது முந்தைய தலைமுறைகளில் சுரண்டலால் பெற்ற பொருளைக் கொண்டு பிழைப்பவர்கள் போன்றோரின் மொழியும் கூட இதற்கீடானதே.

          சுரண்டப்படுபவர்கள் தங்கள் அடிமைத்தளைகளை தகர்த்தெறிந்து தங்கள் மற்றும் மற்றவர்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்திக்கொள்ளும் போது அவர்கள் பேசும் மொழிக்கு வேண்டுமானால் இந்த பெயரை வைக்கலாம். இந்த போராட்டத்தில் சுரண்டப்படுபவர்களுக்கு உதவியாக நின்று புதிய அமைப்பை சாத்தியப் படுத்துபவர்களின் மொழிக்கும் இந்த பெயரை வைக்கலாம்.

          // உங்களை மகஇக அமைப்பில் இல்லாதவர்கள் என்று முகத்திற்கு நேராக வினவு சொல்லியதை கவனிக்கவில்லையா?//

          வினவு எனது முகத்திற்கு நேராக நாங்கள் என்று எழுதாதீர்கள் என்று சொல்லியிருக்கிறதா என்று பாருங்கள். வினவினால் அப்படி சொல்ல முடியுமா என்பதையும் யோசித்துப் பாருங்கள். மகஇக வில் இருந்தால் தான் ‘நாங்கள்’ என்று சொல்லவேண்டும் என்பதில்லை. கம்யூனிஸ்ட்டாக இருந்தாலே போதும்.

  20. பக்கம் பக்கமாக எழுதி பஞ்சாயத்து செய்யும் மானுடத்துக்கு விவாதங்களில் கலந்து கொள்ள முடியாமல் போனதன் காரணம் என்னவோ ?

    “ஆடு திருடி ,கோழி திருடி அம்மக்களின் பெண்களின் உடலையும் திருடி ருசிக்கும் இந்திய இராணுவ துனைபடைகளுக்கு கற்றது அவர்கள் அவர் வீட்டில் வலிய அத்தகைய “விருந்துகளை” [ஆ ,கோ , பெ ] கொடுப்பதில் எமக்கு ஒன்றும் பிரச்சனையில்லை. மக்கள் விரோத அரசு படைகளை இந்த அடிவருடிகள் இந்தளவுக்கு ஆராதிக்காவிட்டால் அப்புறம் எப்படி ?”

    மேல் உள்ள என்கருத்தில் மானுடனின் பஞ்சாயத்தில் சுட்டுவது போல பூடகமான குறியீட்டால் ஏதும் இல்லை.நேரடியாகவே தான் கேட்கின்றேன் ,கூறுகின்றேன் :

    தண்டகாருண்யாவில் , வடகிழகில் , தெலுங்க்க்கனவில் , ஈழத்தில் எமது மக்களை கொன்று குவித்து , பெண்களை நாசம் செய்து ,அவர்கள் வாழ்வை ,வாழ்வாதாரத்தை நாசம் செய்யும் இந்திய கொலைகார இராணுவத்தை ஆராதனை செய்யும் அடிவருடி கற்றது போன்றவர்கள் அத்தகைய விருந்துகளை [ஆடு ,கோழி , தம் வீட்டு பெண் ஆகியவற்றை ] கொடுப்பதில் எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை.

    • தமிழ்,க கை அசடனல்ல என்றே கொள்வோம் அவர் கொண்டிருக்கிற கருத்தை தான் இன்றைய இந்தியாவின் 70 சதவிகித மக்கள் கொண்டிருக்கின்றனர் எனும் போது உங்களது சினம் அல்லது சாபம் க கை எனும் உங்களோடு வாதிக்கும் விசமகாரருக்கு மட்டுமா அல்லது ராணுவத்தை ஆராதிக்கும் எல்லோருக்குமா? ராணுவத்துக்கு மேற்சொன்ன வடகிழக்கிலோ காஷ்மீரிலோ யாருமே பலியாக கொடுத்த தரவுகள் தான் இருக்கிறதே அன்றி நீங்கள் சொல்லுகின்ற மாதிரி தம் வீட்டு பெண்ணை யாருமே வலிய விருந்துக்கு அனுப்பியதில்லை எனும் போது க கை உங்களோடு வாதிக்கின்றவர் என்கிற வன்மம் காரணமாக வலிய விருந்தாக்க பரிந்துரைப்பது ”புரட்சியாளர்” என்று கருதிக் கொள்ளும் உங்களுக்கு பொருத்தமானதா?

      க கை போன்ற ஒருவர் ராணுவத்தின் ”அடிவருடி”(என்னுடைய உதாரணத்தில் வேறொருவர் என கொள்கிறேன்) ஒரு விசமக்காரர் என்பதற்காக அவர் வீட்டு பெண்களை அப்படி விருந்து படைப்பதற்கு அவருக்கு உரிமையுள்ளது என்று இங்கு யாராவது சொல்ல முடியுமா? அவர் வீட்டு பெண்களென்ன அவருடைய சொத்தா? இது தான் நீங்கள் கற்ற மார்க்சியமா?

      • மானுடன்,

        பராசரன் உச்ச நீதிமன்றத்தில் பார்ப்பனியத்திற்கு ஆதரவாக “தமிழ்நாட்டில் மக்கள் தீட்சிதர்களை எதிர்க்கவில்லை எனும் பொழுது தீட்சிதர்களுக்கு எதிராக புரட்சிகர இயக்கங்கள் வழக்கு தொடுப்பது சமூக விரோதிகள் நாட்டைப் பிரிக்கும் செயலே” என்று சொல்வதைப்போல் இருக்கிறது உங்களது வாதம். இராணுவத்தை ஆதரிக்கிற எந்த மக்களுக்கும் தன்வீட்டுப்பெண்ணை கூட்டிக்கொடுக்காத பொழுது கற்றது கையளவை மட்டும் அப்படி வக்கிரத்துடன் கேட்கலாமா என்று கேட்கிறீர்கள். இப்படி ஒரு Loop தமிழின் வாதத்திலிருக்கிறது என்றே வைத்துக்கொள்வோம்;

        ஆனால் தமிழின் வாதம் எதிர்மறையில் நேர்மறையாக இராணுவத்தை ஆதரிக்கிற வாசகரின் திட்டமிட்ட இருட்டடிப்பை அதாவது மணிப்பூரிலும் அசாமிலும் கூட்டுவண்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட பெண்களை மறைத்துவிட்டு இராணுவத்தினரை ஆதரிப்பவரை வெளிச்சத்திற்கு கொண்டுவருகிறதா இல்லையா?

        எழுத்தாளர் பெருமாள் முருகனை இப்படித்தான் மடக்கினார்கள். தேவடியாள் தெருவில் இருக்கிற தேவடியாள்கள் (கதையின்படி) இன்றைக்கு ஒருத்தனும் நம்மளத் தேடிவரமாட்டான் என்று பதின்மூன்றாம் திருவிழாவை முன்னிட்டு கூறுகிற ஒரு வாசகம் திட்டமிட்டு நன்கு பயன்ப்படுத்தப்பட்டது. எப்படியென்றால் பொதுப்புத்தியில் எல்லா கவுண்டனும் அப்படின்னா தேவடியாள் கிட்ட போகிறான் என்று அர்த்தமா என்று பெருமாள் முருகனை மண்டியிட வைத்தார்கள். நீங்கள் துணைக்கு தமிழ் இன்னும் கற்காத மார்க்சியத்தையும் மிகச்சரியான வாதத்தை ஒரு தவறுக்கு கச்சிதமாக கோர்த்துவிடுகிறீர்கள். இதைப் பரிசீலியுங்கள்.

        தமிழ் வாசகர்களை மட்டம் தட்டுகிறார் என்ற தங்களது விமர்சனம் பொதுப்புத்தி என்ற திரையைப் பயன்படுத்துகிறது. தமிழின் வாதத்தை நிலுவையில் வைப்போம். ஆனால் எது பொதுபுத்தி என்பதற்குகும் அதிலிருந்து கற்றது கையளவு எப்படி வேறுபடுகிறார் என்பதற்கும் ஒரு உதாரணம் ஒன்றை தரவிழைகிறேன்.

        தேர்தல் பிணத்திற்கு பேன் பார்த்து ஆவதென்ன? என்ற கட்டுரையை சில கல்லூரி மாணவர்களிடம் பகிர்ந்திருந்தேன். அன்றைக்கு மோடி அலையில் பல மாணவர்கள் பலியாக்கப்பட்டிருந்தார்கள். அப்படிப்பட்ட மாணவர் ஒருவர், வினவு காங்கிரசிடம் இருந்து காசுவாங்கிக்கொண்டு எழுதுகிறது என்று எழுதினார். அவர் தீவிர தினமலம் வாசகர். இது ஒரு பொதுபுத்தி. இப்படி ஒருவர் எழுதினால் அவரை உடனே யாருமே கைக்கூலி என்று எழுதுவதில்லை. ஏனென்றால் இங்குதான் நாம் சமூகத்தின் பொதுப்புத்தி உருவாக்கியிருப்பதை அவலத்தோடு பார்க்கிறோம்; ஆத்திரத்தோடு அல்ல.

        ஆனால் இன்றைக்கு நிலைமை என்ன? இன்றைக்கு தினமலம் வாசகர்கள் மோடியை காய்ச்சி ஊற்றுவதை பார்க்கிற பொழுது மக்களைப்பொதுபுத்தி என்று ஒரே பட்டிக்குள் அடைத்துவிடுவதில்லை. மக்கள் தொடர்ச்சியாக கற்றுக்கொள்கிறார்கள்; கறாராகச் சொன்னால் கற்றுக்கொடுக்கிறார்கள். அதை இயங்குசக்தியாக மாற்றுவதில் வினவுபோன்ற புரட்சிகர இயக்கங்கள் சளைக்காமல் போரிடுகின்றன. மக்களின் பிழைப்புவாதம் என்றே விமர்சனம் வைத்து இதிலிருந்து மக்களைவிடுவிப்போம் என்று சுயவிமர்சனமும் மேற்கொள்கின்றனர். இதுதான் பொதுப்புத்தி கொண்ட வாசகர்களை நான் புரிந்து வைத்திருக்கிற முறை. இதில் தங்களின் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

        இப்பொழுது கற்றது கையளவின் விசயத்திற்கு வருவோம். இவரிடம் இருப்பது பொதுப்புத்தியன்று.

        1. இவர் அடிப்படையில் ஒரு கங்காணி. இவருக்கு அயர்லாந்தில் தொழிலாளர் சட்டங்கள் நன்றாக செயல்படுவது இவர் நண்பர் சொல்லித் தெரியும். இதை வாதமாக வைத்திருக்கிறார். ஆனால் இந்தியாவில் தொழிலாளர் நலச்சட்டங்கள் குறித்து கேட்டால் உதட்டைபிதுக்கிவிடுவார். ஏனெனில் இது அவரது தொழிலுக்கு பங்கமானது!

        2. இதற்கு எடுத்துக்காட்டு வேண்டுமானால் சூரியனிடம் 360 feedback system இருக்கிறதா என்று கேட்கிறார் க.கை என்பதைக் கவனிக்க வேண்டும். ஒரு அலுவலகத்தில் மேல்மட்டத்தில் இருக்கிற கங்காணி லெவலில் இருப்பவர்களுக்குத்தான் இதன் முறை அத்துப்படி.360 feedback systemத்தின் படி இராமன் போன்றவர்கள் தன்னை மதிப்பிட்டு தனது மேலாளாளிரிடம் வழங்குகிறார் என்றாலும் எனது பார்வையின் படி இராமனுக்கே இது எப்படி இயங்குகிறது என்று தெரியாது. ஆனால் தனது நிறுவனத்தில் கங்காணியாக இருக்கிற க.கை அப்படியல்ல. நியாயமாக பார்த்தால் நமது பாட்டாளி வர்க்கத்திற்கும் இதன் சதி குறித்து தெரியாது. பல்வேறு தொழிற்சங்கங்கள் இதற்குள் சனநாயகம் இருப்பது போல் ஒரேடியாக மண்டையாட்டுவார்கள். ஆனால் இப்படிப்பட்ட முறை ஒரு கம்பெனி ஒரு தொழிலாளர் தொழிலாளர் ஆணையத்தின் முன் வைக்கும் தொழிற்தாவாவில் இருந்து தப்பிக்க வழி செய்கிறது. சங்கம் என்று ஒன்று இருந்தால் இது முடியாது! ஆனால் க.கை போன்றவர்கள் கண்ணையாவைக்காட்டி தொழிற்சங்கத்தை கேவலப்படுத்துவார். கவனித்துப்பாருங்கள். தொழிற்சங்கம் குறித்து வாய்திறக்க மறுப்பதும் கேட்டால் கண்ணையாவை கணக்கு காடுவதும் இங்கு 360முறை இருக்கிறதா என்று அப்புராணியாய் சூரியனிடம் கேட்பதும் என்ன கணக்கு? இவரை விட ஒரு கைதேர்ந்த முதலாளித்துவ மாமாவை நீங்கள் எங்கும் பார்க்க இயலாது.

        நீங்கள் உங்கள் கருத்தை யோசியுங்கள். அதே சமயம் உங்களது பின்னூட்டத்தை ஒரேயடியாக நான் புறக்கணித்துவிடவில்லை. அதில் விவாதிக்க வேண்டிய சாதக அம்சங்களை நேரமிருக்கும் பொழுது எழுதுகிறேன்.

        நன்றி.

        • தென்றல் அவர்களே,

          நீங்கள் தெரியாமல் பேசுகிறீர்களா, அல்லது தெரிந்தும் வேண்டுமென்றே அவதூறு பரப்ப வேண்டும் என்று பேசுகிறீர்களா தெரியவில்லை.

          எக்காரணத்தை கொண்டும் இராணுவ வீரர்களின் அத்து மீறல்களை நான் ஆதரிக்கவில்லை. பெண்களை பாலியல் வன்முறைக்கு ஆளாக்குவது யாராக இருந்தாலும், அது இராணுவத்தினராக இருந்தாலும் நிச்சயம் தண்டனைக்கு உட்படுத்த பட வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை என்று தெள்ளதெளிவாக பல இடங்களில் கூறியும் நீங்கள் பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு நான் ஆதரவு தெரிவிப்பதாக அவதூறு கூறுவதை நான் தீவிரமாக மறுக்கிறேன்.

          தென்றலார் முதலாளித்துவம் உள்ள நாடுகளில் தொழிலாளர் நல சட்டங்கள் மோசமாக உள்ளதாக கூறியதற்கு பதிலாக தான் அயர்லாந்து உதாரணத்தை கூறினேன். எனது அயர்லாந்து நண்பர் கூறிய விவரங்களை தென்றல் அவர்களுடன் பகிர்ந்தேன். நம் நாட்டு தொழலாளர் நல சட்டம் குறித்து எனக்கு முழுவதுமாக தெரியாது என்று ஒத்துக்கொள்கிறேன். ஏன் என்றால் நான் மனிதவளத்துறையில் வேலை செய்யவில்லை. நாட்டில் உள்ள தொண்ணூற்று ஐந்து விழுக்காடு நபர்களும் என்னை போன்றவர்கள் தான். எங்களுக்கு தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக தெரியாது. அதை தெரியாது ஒன்று ஒத்து கொள்ளவும் செய்கிறேன்.

          சூரியன் அவர்களுடன் நான் நடத்திய விவாதம் என்பது ஆக்கபூர்வமானது. நண்பர் சூரியனிடம் கேளுங்கள் அந்த விவாதம் எப்படி போனது என்று. நடுநிலையானவர்கள் யாராக இருந்தாலும் எனக்கும் சூரியனுக்கும் நடந்த 36௦ டிகிரி feedback system விவாதம் எப்படிப்பட்டது என்று மிக எளிதாக அறிவார்கள். எனக்கும் சூரியனுக்கும் நடந்த அந்த விவாதத்தை தவறாக அவதூறாக திசை திருப்பியது நண்பர் தென்றலார் தான்.

          நண்பர் தென்றலுக்கு ஏதோ ஒரு விரோதம் என் மேல் உள்ளது. அது பழைய பின்னூட்ட வினையாக இருக்கலாம். அவர் கருத்துக்கு எதிராக கேள்வி கேட்டால் அவர் என்னை எதிரியாக பார்க்கிறார். நான் அப்படி பார்க்கவில்லை.

          மேலும் தற்போது ஒரு விவாதம் நடக்கையில் வேறொரு கட்டுரையில் உள்ள விவாதங்களையும் இழுத்து திசை திருப்புவது நானா அல்லது நண்பர் தென்றலா?

          • தென்றல் அவர்களே,

            36௦ degree feedback என்றால் நம்மை பற்றி நம் மேலதிகாரிகள் எடை போடுவதை போல நம் மேலதிகாரிகளை பற்றி நாமும் எடை போடலாம். ஒருவழி பாதை அல்ல. தவறாக நடந்து கொல்லும் மேலதிகாரிகளை கட்டுப்படுத்தலாம்.

      • மானுடன் அவர்களே,

        நான் அசடனோ அல்லது விசமக்காரனோ, அது அவரவர் பார்வையை பொருத்தது. என்னை பொறுத்தவரை நான் ஒரு சாமானியனாக பொதுமக்களில் ஒருவனாக தான் கேள்விகளை கேட்கிறேன்.

        தென்றல் அவர்களுக்கு இதே பதிவில் பின்னூட்டம் 20.1 இல் நான் அளித்த பதிவை படித்து பாருங்கள். அந்த வழியில் சற்று யோசித்து பாருங்களேன் என்று தான் நான் தோழர்களிடம் கூறுகிறேன்.

        அரவிந்த் கேஜ்ரிவால் போல ஜோக்கர்களாலேயே ஒரு மாநிலத்தின் ஆட்சியை பிடிக்க முடியும் எனும்போது, மக்கள் நலன் மேல் அக்கறை உள்ளவர்கள் தங்களது கருத்துக்களை மக்களுக்கு சரியான வழியில் அடைய செய்தால் மக்கள் கவனம் உங்கள் மீது திரும்பாதா என்ன? யோசித்து பாருங்கள். முப்பது வருட முயற்சி, விழலுக்கு இழைத்த நீரான போது மாற்று வழியை பற்றி யோசிப்பதில் தவறில்லை.

        புரட்சி வந்து தான் சோசலிசம் மலர வேண்டும் என்றில்லை. ஜனநாயக வழியிலும், தேர்தல் முறையிலும் சோசலிசம் மலர முடியும்.

        அதே சமயம் ஒரு நாட்டின் எதிர்காலத்தை பொலிட்பியுரோ என்ற சிறு குழுவிடம் ஒப்படைப்பதில் எனக்கு சற்று தயக்கம் உள்ளது. ஆட்சிக்கு வந்த பின்னர் சர்வாதிகாரமாக அது தலை தூக்கினால் மக்கள் கதி என்ன? அதனால் தான் கடிவாளம் மக்கள் கையில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். கடிவாளம் என்பது வாக்குச்சீட்டு. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் சரி, அது தற்போதைய அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி, கம்மியுனிச பொலிட்பியுரோ குழுவாக இருந்தாலும் சரி, மக்கள் நினைத்தால் அவர்களை தூக்கிஎறியும் அதிகாரம் மக்களிடமே இருக்க வேண்டும்.

      • மானுடன் அவர்களே,

        சிலர் நம் கருத்துக்களை எப்படி திசை மாற்றுகிறார்கள் என்று உங்களுக்கு காட்டுகிறேன்.

        பவர் ஸ்டார் மோடி கட்டுரையில் எனக்கும் மாதவ் அவர்களுக்கும் விவாதம் இப்படி சென்றது:

        மாதவ் அவர்கள் இவ்வாறு கேள்வி எழுப்பினர்:
        //உனக்கு ஒரு பொருள் வேண்டுமாயின் அதற்கான மிகச்சரியான விலையை கொடுத்தால் மாட்டேன் என்று யாரேனும் கூறுவார்களா?
        இங்கே விலை என்ன?
        வனத்தில் இருப்பவர்களுக்கு சரியான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பது தான்.
        ஆனால் இந்த குறுக்கு புத்தி அரசாங்கம் எல்லோரையம் கொன்றுவிட்டால் விலை கேட்பார் இல்லாத நிலை உருவாகி விடும் என தப்பு கணக்கு போடுகிறது.
        //

        இதற்கு நான் அளித்த பதில்:
        // மாதவ் கூறியது போல வனத்தில் இருப்பவர்களுக்கு சரியான கல்வி, வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்து விட்டு பின் அடுத்த கட்டத்திற்கு சென்று இருக்க வேண்டும். அவர்களும் இந்நாட்டு குடிமகன்கள் தான். நமக்கு கிடைக்கும் அத்தனை வசதிகளும் அவர்களுக்கும் கிடைக்க வேண்டும்.//

        இதில் நான் மாதவ் அவர்கள் கூறிய கருத்துக்கு அளித்த பதிலை முழவதுமாக படித்திருந்தால் அதில் நான் யாருக்காக பேசுகிறேன் என்று புரிந்திருக்கும். ஆனால் நம் நண்பர் தமிழ் அரை குறையாக படித்து விட்டு மாதவ் அவர்களும் நானும் செய்த உரையாடலை வேறு விதமாக திசை திருப்பி நான் இராணுவத்தினரின் அத்தனை செயல்களுக்கும் நான் ஆதரவளிப்பதாகவும், மக்களுக்கு எதிரானவனாகவும் அவதூறு பரப்பி விட்டார். நம் மற்ற நண்பர்களும் தமிழ் அவர்களின் பதிலை படித்து விட்டு தவறான கண்ணோட்டத்துடன் விவாதத்தின் போக்கை மாற்றி விட்டார்கள்.

      • என்னுடைய பின்னுட்டம் வினவால் வெளியிட படவில்லை.ஆனாலும் மீண்டும் முயற்சிக்கின்றேன். இந்திய இராணுவத்தால் வடகிழக்கு மாநிலங்கள் ,ஜம்மு காஷ்மீர் ,தெலுங்கான , ஈழம் என்று அந்த பிரதேச மக்கள் தாகுதல்களுக்கு உள்ளாகும் போது அந்த மக்களின் வலிகளை ,வேதனைகளை பற்றி கவலை படாமல் வினவு கட்டுரை திண்ணிமடம் என்று விமர்சனம் செய்ததுக்கே “இராணுவ வீரர்கள் வெயிலிலும் பணியிலும் மலைகளில் காத்து நிற்பதை இவ்வளவு கேவலமாக விமர்சனம் செய்திருக்க கூடாது” என்று கற்றது கொலைகார இந்திய இராணுவத்துக்கு ஆதரவாக பேசும் போது அவர் இந்திய இராணுவத்தால் பாலியல் கொடுமைக்கு ஆளான இந்திய,ஈழ பெண்களின் வேதனைகளை புறம் தள்ளுகின்றார் அல்லவா ? அத்தகைய கொடுர எண்ணம் கொண்ட கற்றதுக்கு அவர் முறையிலேயே பதில் அளிப்பது மட்டுமே முறையாகும். [கவனத்தில் கொள்ளுங்கள் வர்க எதிரியின் ஆயுதம் தான் நம் ஆயுதத்தையும் தீர்மானிகின்றது ] வன்கொடுமை செயல்பாட்டில் இறங்கியுள்ள இந்திய இராணுவத்தை ஆதரிக்கும் கற்றதுக்கு பாடம் கற்பிக்க , விவாத அளவில் மட்டுமே அவர் சொந்தங்களை சந்திக்கு இழுக்கும் போது அவருக்கு ஏற்படும் வலி உண்மையில் ,எதார்த்தத்தில் இந்திய இராணுவத்தால் பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் பெண்களின் வேதனைகள் ,வலிகளை விட ஒன்றும் பெரியது இல்லை. [பாலியல் வன்முறை ,மக்களை கொல்லுதல் ஆகிய செயல்களில் நாட்டம் கொண்டு உள்ள இந்திய இராணுவத்தை கற்றது ஆதரிப்பதை நினைவில் கொள்ளுங்கள் ] அவரின் வக்கிர இந்திய இராணுவ ஆதரவுக்கு என்னுடைய பதில் பின்னுட்ட எதிர்ப்பு வக்கிரம் என்றால் அதற்காக நான் பெருமை படுகிறேன்.

        • தமிழ் உங்களிடம் மாற்றத்தை இன்னமும் ஏற்படுத்தமுடியும் என்று நம்புகிறேன்.நான் க கை வின் வக்கீலாக எழுதுவது போன்ற தோற்றம் ஏற்படும் என்றாலும் வேறு வழியில்லை இங்கு பிரச்சினை அடிப்படையில் உங்களின் எதிரான கருத்து என்பது க கை க்கு ஆதரவான நோக்கில் எழுதவில்லை என்பதை மட்டும் தெரிவித்துவிட விரும்புகிறேன்.

          நீங்கள் உதாரணம் காட்டியிருக்கிற பதிவு இந்திய ராணுவத்தின் அத்துமீறல்களைப் பற்றியதல்ல. மாறாக அதற்கு செய்யப்படும் விமான கொள்முதல் பற்றியது.அதற்கு தான் க கை இரண்டாவது நபராக இப்படி கருத்தை பதிகிறார் // “எல்லாம் சரி, ஆனால் ஒட்டுமொத்த இராணுவத்தை திண்ணிமடம் என்று அநியாயமாக பழிபோடுவதை தவிர்த்திருக்கலாம். இராணுவ வீரர்கள் வெயிலிலும் பணியிலும் மலைகளில் காத்து நிற்பதை இவ்வளவு கேவலமாக விமர்சனம் செய்திருக்க கூடாது”// ஆக அவர் இந்த கட்டுரையின் கருத்தை ஆமோதிக்கிறார்.அது ராணுவத்தின் அத்துமீறல்களை பற்றி பேசவும் இல்லை அவர் போட்ட கருத்துரைக்கு முன்னர் நீங்களும் ராணுவத்தின் இன்னொரு முகத்தை எடுத்துரைக்கவும் இல்லை.எனவே அவர் நீங்கள் சொல்வது போல //” கற்றது கொலைகார இந்திய இராணுவத்துக்கு ஆதரவாக பேசும் போது அவர் இந்திய இராணுவத்தால் பாலியல் கொடுமைக்கு ஆளான இந்திய,ஈழ பெண்களின் வேதனைகளை புறம் தள்ளுகின்றார் அல்லவா”// என்கிற ஆவேசத்திற்கான காரணம் அந்தநிலையில் கருப்பெறவில்லை .

          உடனடியாக நீங்கள் நான் விமர்சிக்கும் அந்த தவறான கருத்தை பதிகிறீர்கள்.அதற்கு இப்போது ஒரு விளக்கமும் தருகிறீர்கள்……//”அத்தகைய கொடுர எண்ணம் கொண்ட கற்றதுக்கு அவர் முறையிலேயே பதில் அளிப்பது மட்டுமே முறையாகும். [கவனத்தில் கொள்ளுங்கள் வர்க எதிரியின் ஆயுதம் தான் நம் ஆயுதத்தையும் தீர்மானிகின்றது ] ”//.இது ஒரு ஆயுதமே இல்லை நண்பர் தமிழ்.நீங்கள் அடைப்புக்குறிக்குள் எழுதியுள்ள கருத்து இங்கு பயன்படுத்தக் கூடியதல்ல.அது எந்த ஒரு போராளிகளும், ஏன் புலிகள் எனும் பாசிச இயக்கம் கூட எடுக்காத “ஆயுதம்”.இதனை வினவை (பல பதிவுகளில்) ஆதரித்து எழுதுகின்ற உங்களிடம் நான் எதிர்பார்க்கவில்லை.

          அதனைத்தான் நான் கேள்விக்கு உள்ளாக்கி உங்களை சுய விமர்சனம் செய்து கொள்ள சொன்னேன்.ஒரு மார்க்சியர் இப்படி பேச முடியாது என்பது எனது திடமான கருத்து. நண்பர் தென்றல் உங்களை //”தமிழ் இன்னும் கற்காத மார்க்சியத்தை….”// என்று உங்களது தற்கால நிலையை சொல்லுகிறார்.உண்மைதான்.நானும் கூட தென்றல் அளவிற்கு கற்றிருக்கவில்லை.ஆனால் நீங்கள் மார்க்சிய மாணவர் என்றாலும் கூட என் கேள்வியின் தன்மை மாறப்போவதில்லை. ஏனென்றால் அடிப்படையான ஒரு பண்பை தான் நான் கேள்விக்கு உள்ளாக்கினேன். நீங்கள் ஒரு பெரியாரியல் மாணவன் என்றாலும் இதே கேள்விதான்.பெண்களை பார்க்கும் பார்வை என்பது இரண்டு சித்தாந்தத்திலும் முற்போக்கான நிலையில் இருப்பதை எதிரிகளும் ஒப்புக் கொள்வர். ஆகவே //”ஒரு விசமக்காரர் என்பதற்காக அவர் வீட்டு பெண்களை அப்படி விருந்து படைப்பதற்கு அவருக்கு உரிமையுள்ளது என்று இங்கு யாராவது சொல்ல முடியுமா? அவர் வீட்டு பெண்களென்ன அவருடைய சொத்தா?”// என்கிற எனது முந்தைய கேள்வியின் நியாயத்தை உணருங்கள்.

          இங்கு க கை வெளிப்படுத்தும் உணர்வைத்தான் இந்த பதிவை படிக்கிற அரசியலற்ற உங்கள் நண்பர்களும் குடும்ப உறுப்பினர்களும் கூட கொண்டிருப்பார்கள்.அது நீங்கள் சொல்லுகின்ற பாலியல் வன்முறை சம்பவங்களை ஆதரிக்கின்ற நிலை என்று சொல்ல முடியாது.அவர்களைப் பொருத்தவரை அது ஒரு சிலர் செய்யும் தனிப்பட்ட சம்பவம். அதற்காக ஒட்டு மொத்த அமைப்பை குறை காண மாட்டார்கள்.அவ்வளவு தான்.அப்படி அவர்கள் சொல்வதை தான் இன்றைய பொதுகருத்து அல்லது பொதுப்புத்தி என்கிறேன்.தென்றல் சொல்வதைப்போல இது மாறவும் மாற்றவும் கூடியதே.இதனை புரிந்து கொண்டால் உங்களுக்கு சினம் வராது, என்ன செய்யலாம் என்கிற யோசனை வரலாம் .

          • மானுடன்,

            [1]கற்றது என்ன கனவு உலகிலா சமுக தொடர்பின்றி வாழ்ந்து கொண்டு உள்ளார் ? கடந்த 40 ஆண்டுகளில் இந்திய ராணுவம் தனது சொந்த மக்கள் மீதும் அண்டை நாட்டு மக்கள் மீதும் நடத்தும் ஆக்கிரமிப்பு போர்களின் நடைமுறைகளும் ஈவுஇரக்கமில்லாத படுகொலைகளும் ஈழத்திலும், காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும், பஞ்சாபிலும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. தன்னுடைய ஆதிக்கத்தை எதிர்க்கும் அல்லது மறுக்கும் எந்த ஒரு மக்களுக்கும் ஜனநாயக உரிமை அனைத்தையும் மறுக்கும் கொடுங்கோல் அமைப்புதான் இந்திய அரசு. இத்தகைய இந்திய இராணுவத்தின் கொலைகார இயல்புகள் தெரியாமல் தானா கற்றது “”””
            எல்லாம் சரி, ஆனால் ஒட்டுமொத்த இராணுவத்தை திண்ணிமடம் என்று அநியாயமாக பழிபோடுவதை தவிர்த்திருக்கலாம். இராணுவ வீரர்கள் வெயிலிலும் பணியிலும் மலைகளில் காத்து நிற்பதை இவ்வளவு கேவலமாக விமர்சனம் செய்திருக்க கூடாது””” என்று பேசுகின்றார். மற்ற மாநில நிகழ்வுகளை காட்டிலும் தமிழராக கற்றதுவுக்கு ஈழ அமைதி நடத்திய பேரழிவுகள் கூடவா மறந்து போயிருக்கும் ? உங்கள் வாதங்கள் ஆச்சிரியமாக இருக்கின்றதே மானுடன் !

            __________
            __________

            ////”அத்தகைய கொடுர எண்ணம் கொண்ட கற்றதுக்கு அவர் முறையிலேயே பதில் அளிப்பது மட்டுமே முறையாகும். [கவனத்தில் கொள்ளுங்கள் வர்க எதிரியின் ஆயுதம் தான் நம் ஆயுதத்தையும் தீர்மானிகின்றது ] ”//.இது ஒரு ஆயுதமே இல்லை//
            ////”ஒரு விசமக்காரர் என்பதற்காக அவர் வீட்டு பெண்களை அப்படி விருந்து படைப்பதற்கு அவருக்கு உரிமையுள்ளது என்று இங்கு யாராவது சொல்ல முடியுமா? அவர் வீட்டு பெண்களென்ன அவருடைய சொத்தா?”// என்கிற எனது முந்தைய கேள்வியின் நியாயத்தை உணருங்கள்.///

            [3]கற்றது கைக்கு உள்ள இராணுவத்தை பற்றிய உணர்வு தான் 70% மக்களுக்கு இருப்பதாக “யுக கருத்து கணிப்பு!” எடுத்து கூறினிர்கள். இப்பொது கற்பனையில் அரசியலற்ற உங்கள் நண்பர்களும் குடும்ப உறுப்பினர்களும் கூட கொண்டிருப்பார்கள் என்று கூருகின்றிகள்.யாருக்கு எந்த உணர்வு இருக்கிறது என்பது அவர்கள் பேசினால்,எழுதினால் மட்டுமே தெரியும் என்ற உண்மையை உங்களுக்கு அறிவுறுத்த விரும்புகிறேன். மார்சியத்தில் உங்களை போன்று யுகங்கள் அடிப்படையில் விமர்சனம் செய்யும் முறைமை இல்லையே மானுடன் !
            //இங்கு க கை வெளிப்படுத்தும் உணர்வைத்தான் இந்த பதிவை படிக்கிற அரசியலற்ற உங்கள் நண்பர்களும் குடும்ப உறுப்பினர்களும் கூட கொண்டிருப்பார்கள்.அது நீங்கள் சொல்லுகின்ற பாலியல் வன்முறை சம்பவங்களை ஆதரிக்கின்ற நிலை என்று சொல்ல முடியாது.அவர்களைப் பொருத்தவரை அது ஒரு சிலர் செய்யும் தனிப்பட்ட சம்பவம். அதற்காக ஒட்டு மொத்த அமைப்பை குறை காண மாட்டார்கள்.அவ்வளவு தான்.அப்படி அவர்கள் சொல்வதை தான் இன்றைய பொதுகருத்து அல்லது பொதுப்புத்தி என்கிறேன்.தென்றல் சொல்வதைப்போல இது மாறவும் மாற்றவும் கூடியதே.இதனை புரிந்து கொண்டால் உங்களுக்கு சினம் வராது, என்ன செய்யலாம் என்கிற யோசனை வரலாம் .//

            • தமிழ் எனது கேள்வி உங்களுக்கு எழுப்பப் பட்டதை பதில் சொல்லாமல் தவிர்த்து விட்டு கேள்விக்கான நியாயம் தேடிக் கொண்டிருக்கிறீர்கள். மீண்டும் கேட்கிறேன் ஒருவர் அடிவருடி என்கிற வரையறுப்பையும் தாண்டி மோசமான ஆளாக இருக்கட்டுமே.அவர் வீட்டு பெண்களை அப்படி விருந்து படைப்பதற்கு அவருக்கு உரிமையுள்ளது என்று இங்கு யாராவது சொல்ல முடியுமா? அவர் வீட்டு பெண்களென்ன அவருடைய சொத்தா?
              இந்த கேள்விக்கு ”ஆம்” என்று உங்களால் பதில் சொல்ல முடியாது என்பது தோல்வியல்ல.அந்த வக்கிரமான வார்த்தைகள் பேச நேர்ந்ததற்கான காரணம் கற்பிக்கிறீர்கள் பாருங்கள் அது தான் உங்கள் தோல்வி.சுய பரிசோதனைக்கு உங்களை உட்படுத்திக் கொள்ளுங்கள் அது உங்களை தோல்வியிலிருந்து மீட்கும்.

              //”கற்றது கைக்கு உள்ள இராணுவத்தை பற்றிய உணர்வு தான் 70% மக்களுக்கு இருப்பதாக “யுக கருத்து கணிப்பு!” எடுத்து கூறினிர்கள்”// சரி தான்.நான் சொன்னது அறிவியல் பூர்வமான கணிப்பு அல்ல தான்.உத்தேசமானது தான்.பிரச்சினை அதுவல்ல.வேண்டுமானால் பாதிக்கு மேல் என்று சொல்லலாமா? எதற்கு ஊகங்கள்? நீங்களே ஒன்று செய்யலாம்.

              அரசியல் புரிதல் அற்ற (உங்களை விட குறைவாக) உள்ள 10பேரை தேர்ந்தெடுங்கள்.அவர்கள் உங்கள் நண்பர்களாகவும் குடும்ப உறுப்பினராகவும் இருக்கட்டும்.அந்த 10 பேருக்கும் இந்த பதிவை பகிருங்கள்.கருத்து கேளுங்கள். அவர்களின் ஊழல் எதிர்ப்பு கருத்துக்கள் நிச்சயமாக கட்டுரைக்கு 100 சத ஆதரவை வழங்கும்.அவர்களில் பலரும் க கை குறிப்பிட்ட தின்னி மடம் கருத்தை தவறவிட்டிருக்கலாம். அவர்களிடம் அந்த வரிக்கான கருத்தை கோரி பெறுங்கள். அப்போது கிடைக்கின்ற எண்ணிக்கையை கவனமாக குறியுங்கள்.இப்போதும் சொல்கிறேன், இது மாறவும் மாற்றவும் கூடியதே.”தின்னி மடம்” இந்த ஒற்றை வரியை ஒப்பு கொள்ள வைக்க முயலுங்கள். உங்களுக்கு தெரிந்த எல்லா உண்மைகளையும் தரவுகளையும் அவர்களுக்கு வழங்குங்கள்.முக்கியமாக பாலியல் அத்துமீறல்கள் பற்றிய செய்திகளை.அது ஒரு சிலர் செய்யும் தனிப்பட்ட சம்பவம் என்றும் அதற்காக ஒட்டு மொத்த ராணுவ அமைப்பை குறை காண விரும்பாதவர்களாகவே இருப்பதை காண்பீர்கள்.அது எத்தனை சதம் என்பதை நேர்மையாக கணக்கெடுங்கள். இந்த சிறிய ‘sample size’.இங்கு நான் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க சொன்னதற்கு காரணம் உங்களது பொறுமையை நல்ல வார்த்தைகளிலேயே சொல்லக்கூடிய திறனை – மறைமுகமான ஒரு கடப்பாட்டை- அவர்கள் வழங்குவார்கள் என்பதே.

              இங்கே உடனுக்குடன் கருத்து பதிவதை விட இந்த கணக்கெடுப்பை நடத்துவதன் மூலமாக ஒரு பயிற்சியை பெறுகிறீர்கள் என்பதை கவனியுங்கள்.நன்றி

              • மானுடன் ,

                [1]வர்க எதிர்களை விமர்சிக்கும் போது அந்த வர்க எதிரிகளின் ஒட்டுண்ணி குடும்பமும் அந்த விமர்சனத்திலிருந்து தப்ப முடியாது மானுடன். இது தான் மார்சிய பார்வை. இது தான் எனது பொதுமை படுத்தபட்ட விளக்கம். எவர் பெயரையும் குறிப்பிட வில்லை . எனவே முந்தைய எனது இது தொடர்பான இரண்டு அல்லது மூன்ரு பதில்களை தடை செய்தது போன்று இதனையும் தடைசெய்யும் பிரச்சனை வினவுக்கு எழாது என்று நம்புகிறேன்.

                //தமிழ் எனது கேள்வி உங்களுக்கு எழுப்பப் பட்டதை பதில் சொல்லாமல் தவிர்த்து விட்டு கேள்விக்கான நியாயம் தேடிக் கொண்டிருக்கிறீர்கள். மீண்டும் கேட்கிறேன் ஒருவர் அடிவருடி என்கிற வரையறுப்பையும் தாண்டி மோசமான ஆளாக இருக்கட்டுமே.அவர் வீட்டு பெண்களை அப்படி விருந்து படைப்பதற்கு அவருக்கு உரிமையுள்ளது என்று இங்கு யாராவது சொல்ல முடியுமா? அவர் வீட்டு பெண்களென்ன அவருடைய சொத்தா? இந்த கேள்விக்கு ”ஆம்” என்று உங்களால் பதில் சொல்ல முடியாது என்பது தோல்வியல்ல.அந்த வக்கிரமான வார்த்தைகள் பேச நேர்ந்ததற்கான காரணம் கற்பிக்கிறீர்கள் பாருங்கள் அது தான் உங்கள் தோல்வி.சுய பரிசோதனைக்கு உங்களை உட்படுத்திக் கொள்ளுங்கள் அது உங்களை தோல்வியிலிருந்து மீட்கும்.//

                [2]யூகத்தின் அடிப்படையில் பேசிய நீங்கள் தான் இத்தகைய உண்மையான கருத்து நடத்தவேண்டும் நாட்டாமை . வினவில் நான் அளிக்கும் இந்ந்திய இராணுவத்தை பற்றிய பதில்களே என்னுடைய நோக்கத்தை[மக்கள் திரளிடம் என் கருத்துகள் சென்று சேரும் போது ] பூர்த்தி செய்யும் போது தனியான கருத்துக்கணிப்புகளை நான் எடுக்கவேண்டிய அவசியம் எனக்கு ஏற்படவில்லை மேலும் கணக்கெடுப்பை நடத்துவதன் மூலமாக ஒரு பயிற்சியை நீங்கள் பெறுகிறீர்கள் என்றால் அதனால் எனக்கு மகிழ்ச்சியே ! ஜமாயுங்கள் மானுடன் .

                //அரசியல் புரிதல் அற்ற (உங்களை விட குறைவாக) உள்ள 10பேரை தேர்ந்தெடுங்கள்.அவர்கள் உங்கள் நண்பர்களாகவும் ….//

                • தமிழ்,
                  ஒரு பந்தை எதிரும் புதிருமாக மாற்றி மாற்றி எறிந்து கொண்டிருக்கிற விளையாட்டின் சாகசத்திற்கோ வன்மைத்திற்கோ ஆசைப்பட்டு நான் இங்கு விவாதிக்க வரவில்லை.அது எனது நோக்கமில்லை. விமர்சனமோ சுய விமர்சனமோ செய்ய விரும்பக்கூடிய இயல்புடைய தோழமையுடன் இங்கு சில எண்ணங்களை வெளிப்படுத்தினேன். உங்களை அதுமாதிரி செயல்பட வைக்க இயலவில்லை என்பது சற்று ஏமாற்றமே.

                  எனினும் வாதங்களை எடுத்துவைக்கும் போது எல்லைகளை வகுத்துக் கொள்ளும் கடப்பாட்டை உங்களுக்கு வினவு ஏற்படுத்தியிருக்கிறது. அதனை நீங்களும் பின்பற்ற ஆரம்பித்து இருக்கிறீர்கள். அந்த வகையில் இது எனக்கு மன நிறைவை தந்திருக்கிறது
                  //”முந்தைய எனது இது தொடர்பான இரண்டு அல்லது மூன்ரு பதில்களை தடை செய்தது போன்று இதனையும் தடைசெய்யும் பிரச்சனை வினவுக்கு எழாது என்று நம்புகிறேன்”//

                  இந்த விவாதத்தில் நேர்மறையாக அணுகிய விசயத்தில் தென்றல் நம்பிக்கை ஊட்டுகிறார் .ஆகவே நான் இங்கு வந்ததில் மன நிறைவே!!
                  //”நீங்கள் உங்கள் கருத்தை யோசியுங்கள். அதே சமயம் உங்களது பின்னூட்டத்தை ஒரேயடியாக நான் புறக்கணித்துவிடவில்லை”//

                  • வினவு என் கருத்தை தடை செய்தது என்பதற்காக நான் ஒன்றும் கற்றது பற்றிய என் விமர்சத்துக்கு விளக்கம் தராமல் இல்லையே. தடை செய்யபட்ட என் முதல் மூன்று விளக்கங்களை விட பிரசுரிக்க பட்ட இந்த விளக்கம் மிகவும் பொருத்தமாகவும் , பொதுமைபடுத்த பட்டும் இருக்கிறது அல்லா ? என்விளக்கத்தை பற்றி ஏதாவது நீங்கள் பேச நினைத்தால் பேசலாம். மேலும் கற்றது அவர்களை இப்போது எப்படி வகைமை படுத்த போகின்றிர்கள். இன்னும் அவர் உங்கள் பார்வையில் அசடரா அல்லது வர்க எதிரியா ? கேள்வி கேட்க தெரிந்தவருக்கு மற்றவரின் கேள்விகளுக்கு பதில் அளிக்கவேண்டிய கடமையும் உண்டு அல்லவா மானுடன் ?

                    //எனினும் வாதங்களை எடுத்துவைக்கும் போது எல்லைகளை வகுத்துக் கொள்ளும் கடப்பாட்டை உங்களுக்கு வினவு ஏற்படுத்தியிருக்கிறது. //

                    • Hi Tamil,

                      I am little late to respond to your comment in another post as per request. The box is closed.

                      Let me be brief. Your reply was great with appropriate example. I came to know of these historical episodes. Thanks

                  • மானுடன், விவாதத்தை விட்டு விலகிச்செல்வது உங்களை போன்ற பஞ்சாயத்து தலைவர்களுக்கு அழகு அல்லவே மானுடன். நான் வடிவமைத்த மார்சிய துணைக்கோட்பாடான “”வர்க எதிர்களை விமர்சிக்கும் போது அந்த வர்க எதிரிகளின் ஒட்டுண்ணி குடும்பமும் அந்த விமர்சனத்திலிருந்து தப்ப முடியாது”””இதில் என்ன பிரச்சனை என்று உங்கள் கட்சிகாரர் கற்றதுவை மனதில் நிறுத்திக்கொண்டு பதில் கூறுங்கள் மானுடன்

                  • மானுடன் போன்றவர்களிடம் கேள்வி எழுப்புவதன் நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் மீண்டும் ,மீண்டும் என் பின்னுடங்களை தடை செய்கின்றது வினவு. மானுடன் அவர்கள் கற்றதுவுக்கு வழக்குரைனராக செயல்படுவதாக அவரே வாக்கு மூலம் அளிக்கும் போது என்னிடைய கேள்விகளுக்கு கட்டாயமாக மானுடன் பதில் அளிக்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது . என் பின்னுட்டங்கள் இந்த கட்டுரைக்கு பொருள் அற்றது என்றால் ,அப்படி வினவு கருதினால் , மானுடன் உள் நுழைந்து அவர் இந்த கட்டுரைக்கு தொடர்பின்றி கேள்விகளை எழுப்பியபோது வினவு தடை செய்யாமல் வடை ,முறுக்கு ,பஜ்சி சாப்பிட்டுகொண்டு வேடிக்கை பார்த்தது ஏன் ? சரி மீண்டும் மனுடனுடன் விவாதிக்க முயலுகிறேன். மானுடன் என் கேள்விகள் இன்னும் பதில் அளிக்க படாமல் உள்ளது என்பதை கவனத்தில் கொள்விர்கள் என்று நம்புகிறேன்

                    [1]வர்க எதிரிகளை விமர்சிப்பதற்கான எனது வரையறைகளை ஏற்கின்றிர்கலா ?

                    [2] கற்றது உங்கள் பார்வையில்இன்னும் அசடரா அல்லது வர்க்க எதிரியா ?

                    வினவுக்கு , என் கருத்துகள் உங்களுடைய நோக்கத்துக்கும் ,செயல்பாட்டுக்கும் இடையுறாக இருக்கும் என்று ந்ம்புவிர்கள் என்றால் நேரடியாகவே கூறிவிடுங்கள் என் கருத்துகளை வெளியிடுவதை நிருத்திகொள்கின்றேன். அதே தவிர்த்து எவ்வித ஆபாசமும் ,தனிநபர் தாக்குதலும் இல்லாத எனது கருத்துகளை கடந்த ஒரு வாரமாக தடைசெய்கிறிர்கள்.

                    • வினவுக்கு,

                      தமிழ், தென்றல், PK, திப்பு, உப்புமா சங்கர் போன்ற மற்றும் சிலர்தான் இங்கு அவதூறு கிளப்பும் வர்க்க எதிரிகளுக்கு சரியான முறையில் பதிலடி கொடுக்கிறார்கள். வினவே கூறியதுபோல் அனைத்து கேள்விகளுக்கும் வினவால் பதிலிறுக்க முடியாது. ஆகவே இவர்களின் கருத்துக்களில் வினவிற்கு உடன்பாடு இல்லாத நேரங்களில் அதனை திறந்த மனதுடன் இங்கு கூறலாம். அதை திருத்திக் கொள்ளவும் அனைவரும் தயாராகவே இருப்பர். அதை விடுத்து தமிழ் கூறுவது போல் அவருடைய கருத்துக்களை தடை செய்வது வருத்தமளிக்கிறது. மற்றபடி தோழர்கள் கடுஞ்சொற்களை அனைத்து நேரங்களிலும் பயன்படுத்துவதை விடுத்து உணர்ச்சிவசப்படாமல் கருத்துக்களை இடவேண்டும்.

                      அதற்காக ஒரேயடியாக மானுடன் அறுதியிடும் மேனாமினுக்கித்தனமான ஒப்பனையுடன் கூடிய மொழி சகிக்கவில்லை. இங்கு யாரும் இலக்கிய உரையும் ஆற்ற வரவில்லை. இயல்பான காத்திரமான மொழியே தேவை.

  21. கற்றது கையளவின் விவாதங்களை கூர்மையாக கவனிப்பவர்கள் அவரை பார்த்து அவரது விவாதமுறையில் ஒரு அசட்டுத்தனமான அறியாமை நிரம்பியது என்று யாரும் கூறமாட்டார்கள். ஒரு கார்பரேட் முதலாளியின் அத்துனை நெளிவு சுளிவுகளுடன் அவர் விவாதத்தை திசை திருப்பும் முறைகள் ஆலாதியானவை. விவாதிக்க வேண்டிய முதன்மையான கருப்பொருளை வேண்டுமென்றே புறம் தள்ளிவிட்டு தன் மனம் போன போக்கில் பேசிக்கொண்டே இருப்பார். விறுவிறுப்பாக சென்றுகொண்டு இருக்கும் பவர் ஸ்டார் மோடி பாரிசில் வாங்கிய மூட்டை பூச்சி மிஷின் என்ற கட்டுரையில் உள்ள அவர் பதில்களை கொண்டு இதனை நாம் உணரலாம்

  22. ஆதவன்,

    கருத்துக்களை நான் திசை திருப்பவில்லை. இன்னும் சொல்லப்போனால் எல்லோரும் வெவ்வேறு கேள்விகளை கேட்டு என்னிடம் விவாதம் புரியும் போது அவரவர் கேள்விகளை பொறுத்து என் கருத்துக்களை வெளியிடுகிறேன். அதனை அந்தந்த கேள்விகளோடு பொருத்தி பார்த்தால் சரியாக தான் இருக்கும். ஆக, திசை திருப்பவது அந்த குறிப்பிட்ட கேள்விகளை கேட்பவர்கள் தானே ஒழிய அந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் நான் அல்ல.

    உங்களை பொறுத்தவரை ஆதவன் என்ற நீங்கள் கற்றது கையளவு என்ற என்னுடன் தனியாக விவாதிக்கிறீர்கள். ஆனால் என்னை பொறுத்தவரை நான் ஒருவன் தென்றல், pk, தமிழ், சிவப்பு, ஆதவன், உப்புமா சங்கர், மாதவ், shankar, shivappu, சிலந்தி, மானுடன், sooriyan, Nanthan, அருள், இன்னும் எத்தனையோ நண்பர்களுடன் ஒருசேர விவாதம் புரிகிறேன். இதில் சில நேரம் நேரடியாக வினவுடனும் விவாதிக்கிறேன். நான் ஒரு பதிலை சொல்கிறேன் என்றால் அது யாருக்கான பதில் என்று நீங்கள் பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு தெளிவாக விளங்கும். இதில் குழப்பமில்லை. நான் யாருக்கு பதில் அளிக்கிறேன் என்று அவர்கள் பெயர் கூறித்தான் பதில் அளிக்கிறேன். சில நேரம் அதிக நண்பர்கள் ஒரே சமயம் அவர்களது கேள்விகளை கேட்கும் போது ஓரிரு கேள்விகளை கவனிக்காமல் விட்டு விடலாம். ஏதாவது ஒரு கேள்விக்கு உங்களுக்கு நான் பதில் அளிக்காமல் இருந்தாலோ, அல்லது திசை திருப்பினாலோ சொல்லுங்கள், மீண்டும் விவாதிக்கிறேன்.

  23. சில நேரம் நான்கைந்து நண்பர்கள் ஒரே விதமான கேள்வியை கேட்கும் போது அவர்கள் அனைவருக்கும் ஒரே விதமான பதிலை அளிக்கிறேன். இதில் எங்கே திசை திருப்புதல் உள்ளது, எங்கே விசமத்தனம் உள்ளது?

Leave a Reply to Raman பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க