புதிய தாராளவாத ஆட்சியின் கீழ் இந்திய விவசாயிகள் !

சந்தத்தின் இடிமுழக்கமாக எழுந்த நக்சல்பாரி எழ்ச்சி உள்ளிட்டு, 1960 -ஆம் ஆண்டுகளின் இறுதியில் நடந்த எண்ணற்ற விவசாயிகள் எழுச்சிகள், இந்தியாவின் அரசியல், பொருளாதார, சமூகக் கட்டமைவில் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தின.

பல்வேறு காரணங்களால் இந்த எழுச்சிகள் முன்னேற முடியாமற் போனாலும், இந்திய விவசாயிகளை விலங்கிட்டுள்ள அரை நிலப்பிரபுத்துவ உறவுகள் குறித்து இந்த எழுச்சிகள் எழுப்பிய கேள்விகள் இன்னமுன் தீர்க்கப்படாமலேயே நீடிக்கின்றன.

அதன் பிறகு, ஆட்சியாளர்கள் பின்பற்றிய பல்வேறு கொள்கைகளும் குறிப்பாக, கடந்த 25 ஆண்டுகளாகத் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய தாராளவாதக் கொள்கையும் விவசாயப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாமல் தோற்றுப் போய்விட்டன.

50 ஆண்டுகளுக்கு முன்பு, தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினையாக விவசாய எழுச்சிகள் எதைச் சுட்டிக்காட்டியதோ, அந்த அரை நிலப்பிரபுத்துவ உறவுகள் எனும் பிரச்சினையானது, இன்று மேலும் தீவிரமடைந்து, நாட்டின் மிக முக்கியப் பிரச்சினையாக வளர்ந்துள்ளது.

இப்பிரச்சினையின் சில கூறுகளையும், புதிய தாராளவாதக் கொள்கையின் தோல்வியையும், விவசாயிகளை ஏய்க்கும் ஆட்சியாளர்களின் மோசடிகளையும், தீர்வுக்கான வழிகளையும் புள்ளிவிவர ஆதாரங்களுடன் இந்நூல் தொகுத்தளிக்கிறது.

நூல் கிடைக்குமிடம்…

கீழைக்காற்று
சென்னை – 02
044- 28412367.

வெளியீடு
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு.

பக்கம் : 208
விலை : 120/- ரூ


விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க