தலையில் குண்டடி பட்டு மூளைச்சிதைவு அடைந்த நிலையில் மருத்துவ மனையில் இருந்த மக்கள் அதிகாரத்தின் தோழர் ஜெயராமன், சில மணித்துளிகள் முன் மரணமடைந்துள்ளார். சுமார் 100 இளைஞர்களை சட்டவிரோதமாக பிடித்து வைத்திருந்த போலீசுக்கு எதிராக வழக்கு தொடுத்து அவர்களை கண்டு பிடித்திருக்கிறார்கள் தூத்துக்குடி வழக்கறிஞர்கள். இன்னும் பல்வேறு அதிர்ச்சிகரமான விசயங்களை விளக்குகிறார், வாஞ்சிநாதன்.