திராமங்கலம், நெடுவாசல் தொடங்கி ’பசுமை’ வழிச்சாலை வரை, மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து வருகிறது மோடி அரசு. எதிர்த்துக் கேட்பவர்களின் குரல்வளையை இறுகப் பிடிக்கிறது அடிமை எடப்பாடி அரசு. இனி என்ன செய்யப் போகிறோம்? எதிர்வரும் தேர்தல் களத்தினை வைத்து இப்பிரச்சினைகளை முடிவு செய்ய முடியமா? இல்லை, போராட்டக் களத்தில்தான் தீர்வு கிடைக்கும் என்பதை உரக்கச் சொல்கிறது இப்பாடல்.

1998-ம் ஆண்டில் மக்கள் கலை இலக்கியக் கழகம் வெளியிட்ட “ஓட்டு போடாதே புரட்சி செய்” என்ற பாடல் தொகுப்பில் இடம்பெற்ற பாடல் இது.

பாடல் வரிகள்

காலங்கள் மாறும் ! கரங்கள் ஒன்று சேரும் !
மழை காளான்கள் போல் தேர்தல் மாயங்கள் சாகும் !
இது போராட்டக்காலம் .. புரட்சி வெற்றி கொள்ளும் !!

நாணல்கள் போலே வளைந்த நாட்கள் போதும் !
ஓநாய்கள் பின்னே நடந்து என்ன இலாபம் ?
தேர்தல்கள் போகும் .. ஏமாற்றம் நெஞ்சில் தேங்கும் ..
வேறென்ன மார்க்கம் ? வினாக்கள் நெஞ்சை தாக்கும் ..
உடல் நோகாமல் சாகாமல் வாராது மாற்றம் ..
இது போராட்டக்காலம் .. புரட்சி வெற்றி கொள்ளும் !!

அதிகாரம் இன்று இல்லை !
அடையாமல் வாழ்க்கை இல்லை !
புதுவாழ்க்கை, நீதி, பண்பாடு ..
வாக்கு சீட்டாலே மாற்றம் வராது !
மணல் கோபுரம் போல் பணநாயகம் வீழும் !
இது போராட்டக்காலம் .. புரட்சி வெற்றி கொள்ளும்​ !!

பாருங்கள் ! பகிருங்கள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க