சட்டக்கல்வியில் சாமானியர்கள் வந்தது எப்படி | அருள்மொழி உரை

சென்னை - அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைப்பில், சென்னைபார்கவுன்சில் அரங்கத்தில் நடைபெற்ற ''சட்டக்கல்வியின் இன்றைய நிலை'' கருத்தரங்கில், திராவிடர் கழகத்தைச் சேர்ந்த, வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள் ஆற்றிய உரையின் வீடியோ.

சென்னை – அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைப்பில், கடந்த ஜூலை 27 அன்று, சென்னை உயர்நீதிமன்ற பார்கவுன்சில் அரங்கத்தில் ”சட்டக்கல்வியின் இன்றைய நிலை” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில், திராவிடர் கழகத்தைச் சேர்ந்த, வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள் ஆற்றிய உரை.

* உலகத்தில் எல்லா நாட்டிலும் கல்வி என்பது எல்லோரும் படிப்பதற்கு. ஆனா, நம்ம நாட்டுல கல்வி என்பது எல்லோரும் படிக்கக் கூடாது என்பதற்கு.

* எல்லோரும் படிச்சிட்டா யாருக்குதான் சார் வேலை பார்க்கிறது? யாரு சார் இன்னின்ன வேலைகளை செய்யிறது? அந்த வேலையை செய்றதுக்காக சில பேர் படிக்கவே கூடாது. அல்லது சிலபேர்தான் படிக்க வேண்டும். கல்வி கற்ற சிலபேர் மற்றவர்கள் அந்த கல்வி எல்லைக்குள்ளே வரவிடாத கருப்புசாமிகளாகவே நின்று கொண்டிருந்தார்கள்.

* யாருக்கு கல்வி கற்றுக்கொடுக்க வேண்டுமென பழந்தமிழ் இலக்கியமான நன்னூலில் ஒரு விளக்கம் சொல்லப்படுகிறது. ஒரு ஆசிரியர் யாருக்கு கல்வி கற்று கொடுக்கனுமுன்னா தன்மகன், தன் ஆசான் மகன், மன்னனுடைய மகன், நிறைய பணம் கொடுப்பவன்… அப்படியே இன்றைய புதிய கல்விகொள்கைக்கு அடக்கம்.

* வழக்கறிஞர் கல்வி என்பது ஆங்கிலேயர்களால இந்தியர்களுக்கு ஒரு சமமான நீதி வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது. நாட்டிலுள்ள அனைவருக்கும் ஒரு குற்றத்திற்கு ஒரு தண்டனை என்ற அடிப்படையில் முக்கியமாக பிறப்பின் அடிப்படையில் இந்த தண்டனை மாறக்கூடாது என்பதற்காகக் கொண்டுவரப்பட்டதுதான் நம்முடைய ஐ.பி.சி., கிரிமினல் நடைமுறைச் சட்டமெல்லாம்.

* சொத்தை எப்படி பிரிப்பது? பஞ்சாயத்துல சொம்பை வச்சிகிட்டு பிரிக்கக்கூடாது. அதுக்கு சிவில் உரிமைச் சட்டம்னு ஒன்னு கொண்டுவர்றோம். மக்களுக்கு உரிமையாக இருந்தாலும் சரி குற்றத்துக்கான தண்டனையாக இருந்தாலும் சரி ஒரே மாதிரி இருக்கனும்… என்பதற்காக உருவாக்கப்பட்ட நீதிமன்றங்கள்.

* இந்த நீதிமன்றங்கள் உருவாவதற்கு முன்னால் நாட்டில் மிகப்பெரிய நீதிமுறை இருந்ததாக சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், அந்த நீதிமுறையின் தடயத்தை நாம் பார்த்ததில்லை.

* இந்த நீதித்துறைக்கான அணுகுமுறை சட்டக்கல்வியை இந்தியாவிலேயே மிகச்சில கல்லூரிகளில்தான் கொடுக்க ஆரம்பித்தார்கள். அதில் வந்த சில இந்தியர்கள் இன்றைக்கு சிலைகளாக இருக்கிறார்கள்.

* ஆங்கிலேயர்களுக்கே புரியாத கிரேக்க மொழியில் சட்ட சொற்களைக் கொண்ட அந்தக் கல்வியை ஆங்கிலமும் இலத்தீனும் கிரேக்கமும் கலந்த அந்தக் கல்வியை தாய்மொழியில் படித்து வருவதற்கு ஒரு கரும்பலகை கூட இல்லாத ஒரு பள்ளியில் படித்த மாணவன் இவ்வளவு தூரம் சென்று நீ படிக்க வேண்டாமென்று அப்பா அம்மா மறுத்தபோதும் போராடி பள்ளி சென்று படித்த மாணவன் இந்தக் கல்வியை படிக்க வரும்பொழுது அவர்களை எப்படி மிரட்டியிருக்கும்?

* வாய்தா வாங்குவதற்காக மட்டும்தான் வாயைத் திறக்க வேண்டும். வழக்கில் வாதாடக்கூடாது என்றெல்லாம் போடப்பட்டிருந்த கட்டுப்பாடுகளைக் கடந்துதான் அன்றைக்கு 5 பெண் வழக்கறிஞர்கள் பணியாற்றினர். இன்று, அதே சென்னை உயர்நீதிமன்றத்தில் 10 பெண் நீதிபதிகள் அமர்ந்திருக்கிறார்கள்.

* இன்றைக்கு வைத்திருக்கும் வடிகட்டும் தேர்வு முறைகள், நெகட்டிவ் மார்க்குகளை கொண்ட தேர்வு முறைகளெல்லாம் அன்றைக்கு இருந்திருந்தால், நாமெல்லாம் வழக்கறிஞர்களாக வந்திருக்க முடியாது.

* தற்பொழுது, மீண்டும் அதே… சக்கரம் திரும்பச்சுற்றுகிறது. எல்லோரும் படிக்கக்கூடாது. சட்டக்கல்லூரிக்கு எதுக்கு நெகட்டிவ் மார்க் தேர்வெல்லாம்?

பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க