தமிழக அரசே! அண்ணா பல்கலைக்கழகமே!
உரிமை கோரும் தொழிற்சங்க முன்னணியாளர்களை
கொல்லும் உரிமையை சத்யபாமா நிர்வாகத்திற்கு வழங்கு!
 

* வருடாந்திர ஊதிய உயர்வை உயர்த்திக் கேட்டதற்காக முன்னணித் தொழிலாளர்கள் 10 பேருக்கு பணியிட மாற்றம் என்ற பெயரில் வேலைபறிப்பு!

* துப்புறவாளர், உதவியாளர் என கடைநிலைத் தொழிலாளிக்கு வடமாநில அசாம், வாரணாசிக்கு பணிமாற்ற உத்தரவு!

* இதே நடைமுறை மூலம் கடந்த 10 ஆண்டுகளில் 20 முன்னணியாளர்கள் வேலைபறிப்பு! தீர்வற்ற தொழிலாளர் துறையிடம் 3 வருடங்கள் அலைந்து நொந்ததுதான் மிச்சம்!

* நீதிமன்றத்திடம் வழக்கு நடத்தி நீதியை வாங்கும் பணபலம் எங்களுக்கு இல்லை!

* பொய்க்குற்றச்சாட்டு மூலம் கூட வேலையை பறிக்க முடியாத அடிமைகளைக் கொல்லும் உரிமை சத்யபாமா நிர்வாகத்திற்கு இருந்தால் வேலைபறிப்பால் நாங்கள் நடைபிணமாக அலைய வேண்டியது இல்லை!

புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள், டெக்னீஷியன்கள் மற்றும் ஊழியர்கள் சங்கம்

( இணைப்பு : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி )

தொடர்புக்கு: 94871 51165

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க