லகிற்கே அறத்தைக் கற்பித்த திருக்குறளானது தமிழ் உலகின் இணையில்லாப் படைப்பாகும். இத்தகைய பெருமை மிகு குறளினை மறைக்கும் / எதிர்க்கும் முயற்சியினைப்  பார்ப்பனியமானது காலகாலமாக மேற்கொண்டுவருகின்றது.  `கடவுள்`  என்ற சொல்லே இல்லாத திருக்குறளினை `கடவுள் வாழ்த்து` என அதிகாரம் அமைத்து தொடங்குவதிலிருந்து இந்த அரசியல் தொடங்குகின்றது (அதிகாரங்கள் எல்லாம் பின்நாளில் வகுக்கப்பட்டதே).  வள்ளுவன் குறிப்பிடுவது எல்லாம் இறைவன், தெய்வம் ஆகிய இரு சொற்களே.  இங்கு `இறைவன்`  என்பது இறை (வரி) அறவிடும் தலைவனை / அரசனையே குறிக்கின்றது (மக்களை இறுக்குவதால் இறை) .  தெய்வம் என்பது ஒரு பாலறியாக் கிளவி. இங்கு இயற்கையோடு ஒன்றிய மூத்தோர் வழிபாடு, இயற்கை போன்றவற்றையே தெய்வம் என்பது குறிக்கும்.

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.” – (குறள்50)

இங்கு மூத்தோர் வழிபாடே ஒரு வகையில் தெய்வமாகக் காட்டப்படுகின்றது. இத்தகைய இயற்கையோடு ஒன்றிய இறைவன், தெய்வம் என்பவற்றைப் பின்நாளில் கடவுள் வாழ்த்தாக்கியதே முதல் புரட்டு ஆகும்.

பரிமேலழகரின் உரைப்பாயிர அரசியல்:

திருக்குறள் குறிப்பிடும் அறத்துப்பாலில் அறம் என்ற சொல் முதன்மையானது. அறம் என்ற சொல்லானது அறுத்தல் என்ற வினைச்சொல்லினை அடிப்படையாகக்கொண்ட ஒரு சொல்லாகும் (அறு+அம்=அறம்). எவற்றை அறுக்க (விட்டொழிக்க) வேண்டும். இதோ வள்ளுவனே கூறுகின்றார்.

“அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.” – (குறள்:35)

அதாவது அழுக்காறு (பொறாமை), அவா (பேராசை), வெகுளி (சினம்), இன்னாச்சொல் (கடுஞ்சொல்) ஆகிய நான்கையும் அறுப்பதே அறம் எனப்படும் என்கின்றார் வள்ளுவர்.

இன்னொரு இடத்தில் வள்ளுவன் “மனத்தின்கண் குற்றம் இல்லாது இருத்தலே அறவழியில் செல்லுதலாகும்” என்கின்றார். இதனையே பின்வரும் குறள் காட்டுகின்றது.

“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.” – (குறள்:34)

மணிமேகலையும் அறத்திற்கு விளக்கம் கொடுக்கின்றார்.

“அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இதுகேள்! மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் இல்லது கண்டதில்”.

இந்த `அறம்` என்ற சொல்லிற்கு ஓரளவிற்கு சரிநிகரான சொல்லாக கிரேக்கச் சொல்லான `Ethics` காணப்படுகின்றது. `தர்மம்` என்ற வடசொல்லிற்கு நிகராக அறத்தை கருதுவது தவறு, ஏனெனில் தர்மம் ஆட்களிற்கேற்ப வேறுபடும். அதாவது ஒரு வழக்கறிஞர் தனது கட்சிக்காரரிற்காகப் பொய் சொல்லுவது தொழில் தர்மம் என்பார்கள். ஆனால், அது அறமாகாது. அறம் எப்பொழுதும் பொது நன்மை கருதியே காணப்படும். எமக்கு எது தேவையோ அதுவே தர்மமாகும் எனக் கூறுவதுபோல அறத்தை வளைக்க முடியாது. அதனால்தான் மனு சுமிர்தியினை (Manusmriti ) மனுதர்மம், மனுநீதி என்றெல்லாம் அழைப்பார்கள். ஆனால் `மனு அறம்` என அழைக்க அவர்களிற்கே நா கூசும் (அதேபோன்றே சனாதன தர்மமும்).

பரிமேலழகர் இத்தகைய சிறப்புவாய்ந்த சொல்லான அறம் என்பதற்குப் பொருந்தா விளக்கம் கொடுக்கின்றார். பரிமேலழகர் தனது உரைப்பாயிரத்தில் “அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கின ஒழித்தலும் ஆகும்” என்கின்றார். அதாவது மனுதர்மத்தில் கூறப்பட்டவையே அறம் என வேண்டுமென்றே பொய் சொல்லுகின்றார். திருக்குறள் மனுதர்மத்திற்கு காலத்தால் முற்பட்டது என்பது ஒரு புறமிருக்க; மறுபுறத்தே மனுதர்மத்திற்கும், குறள் விளக்கும் அறத்திற்குமிடையே மலைக்கும் மடுவிற்குமுள்ள வேறுபாடுகள் உண்டு. பிறப்பினடிப்படையிலான வர்ணாச்சிரம சாதிக் கோட்பாட்டினை வலியுறுத்தும் மனுநீதி எங்கே? பிறப்பொக்கும் எனப் பாடி பிறப்பிலடிப்படையிலான வேறுபாடுகளை அறவே களையும் குறள் எங்கே?

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.” – (குறள் :972)

அதுமட்டுமல்ல, கொல்லாமையினை வலியுறுத்தும் குறள் எங்கே?

“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்”. – (குறள் :260)

பார்ப்பனர்களை பசுக்களை கொன்று உண்ணுமாறு கூறும் மனுநீதி எங்கே?

“சிராத்தத்தில் வரிக்கப்பட்ட பார்ப்பனன், புலால் உண்ண மறுத்தால், 21 பிறவிகள் பசுவாய்ப் பிறப்பான்”. – (மனுநீதி சுலோகம்:35).

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்”. – (குறள் : 1039)

என வேளாண்மையினைப் (கமத்தினை) புகழும் குறள் எங்கே? பயிர் செய்தலைப் பாவகரமாகப் பார்க்கும் மனுநீதி எங்கே?

இவ்வாறு திருக்குறள் குறிப்பிடும் அறத்திற்கு முற்றிலும் முரணாக மனுநீதி காணப்பட, எவ்வாறு மனுநீதி முதலிய நூல்கள் விதித்ததுதான் அறம் என பரிமேலழகர் கூறுகின்றார்? வேறு ஒன்றுமில்லை, அவருடைய  பார்ப்பனச்சாதிப் பற்றே அவ்வாறு பச்சைப்பொய் சொல்லவைத்தது. இந்த பரிமேலழகர் கக்கிய நஞ்சின் நீட்சியே இன்றைய நாகசாமியின் ` Tirukkural – An Abridgement of Shaastras ` என்ற புத்தகம் ஆகும்.

திருக்குறளை திரிக்க முயலும் ஒரு ஆங்கில நூல் –
` Tirukkural – An Abridgement of Shaastras`

நாகசாமி என்பவர் Tirukkural – An Abridgement of Shaastras என்றொரு (புத்தகத்தினை) புரட்டினை எழுதியுள்ளார். அதில் மனுதர்மம் முதலிய சமசுகிரத நூல்களின் பிழிவிலிருந்தே (சாரம்சம்) திருக்குறள் தோன்றியதாக வழமையான பார்ப்பன புரட்டினை கூறியுள்ளார். மனுதர்மம் காலத்தால் திருக்குறளிற்குப் பிற்பட்டது என்று ஏற்கனவே அறிஞர்களால் சான்றுபடுத்தப்பட்டதனை அவர் கவனத்திற்கொள்ளவில்லை. நூலின் தலைப்பிலும், நூல் முழுவதுமே திருக்குறள் வடமொழி சாத்திரங்களின் வழிவந்ததே என அழுத்திக் கூறும் இவர், ஓரிடத்தில் மட்டும் இது எதிர்கால ஆய்விற்குரியது என்கின்றார்.

திருக்குறள் மீது பார்ப்பனர்களின் ஒவ்வாமை வரலாறு அறிந்ததே. “தீக் குறளை சென்று ஓதோம்” (கோள் சொல்லுதல் கூடாது) என்ற ஆண்டாள் பாடலிற்கு “திருக்குறளை ஓதவேண்டாம்” என வலியப் பொய் சொன்ன மூத்த சங்கரச்சாரியார் முதல் “முதல் பத்து குறள்களை மட்டுமே பயன்படுத்தலாம்” என்று சொன்ன செயேந்திர சங்கரச்சாரியார் ஈடாக இன்றைய நாகசாமியின் இப் புத்தகம் வரை இந்த தமிழ் வெறுப்பினைக் காணலாம். இப் புத்தகத்தின் பொய்மையினை உடைக்க சங்கரச்சாரியார் விரும்பும் முதல் பத்து குறள்களிலேயே சில குறள்களை முதலில் நாமும் அவர் விருப்பப்படி எடுத்துக்கொள்வோம்.

மனுநீதி முதலான பார்ப்பனிய சாத்திரங்கள் எல்லாவற்றுக்கும் அடிப்படை வர்ணாச்சிரம கோட்பாடே ஆகும். ரிக்வேத புருச சூத்திரத்தின் 10 வது சுலோகமான பிரம்மனின் படைப்புக் கோட்பாடே  சாத்திரங்களின் அடிப்படை. இதன்படி சூத்திரன் காலிலிருந்தே பிறந்தவர்கள் எனக் கூறி தமிழர்களை இழிவுபடுத்துகின்றது ரிக்வேதம். இக் கருத்து தமிழ் மண்ணையும் வந்துசேர்ந்த காலத்திலேயே திருக்குறள் எழுதப்படுகின்றது. இப்போது முதல் பத்து குறள்களில் (பின்நாளில் கடவுள் வாழ்த்தாக்கப்பட்ட) குறள்களில் 7 குறள்களை எடுத்து, அதற்கு முனைவர் மறைமலை இலக்குவனார் கொடுத்த விளக்கங்களையே துணையாகக் கொள்ளப்போகின்றேன். இங்கு நீங்கள் கவனிக்கவேண்டிய விடயம் பின்வரும் 7 குறள்களிலும் காலின் பெருமையினைப் பேசியே வள்ளுவன் ரிக்வேத புருச சூத்திரத்திற்குப் பதிலடி கொடுக்கின்றார்.

“கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅ ரெனின்” – (குறள் 2)

{தூய அறிவுடைய ஆசிரியரின் தாளை – (காலை) வணங்காவிட்டால் கற்றதனால் பயன் ஒன்றும் இல்லை என்கிறார்.}

“மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்” (குறள் 3)

{திருவள்ளுவர். மாண்பு உடையவர்களின் – சிறப்பு உடையவர்களின் – அடிகளைப் பொருந்தி வாழ்பவர்களே நீடு வாழ்பவர்களாம் எனவே தலையில் பிறந்ததாக ஆணவம் கொள்ளாமல் காலை வணங்க வேண்டும்}

“வேண்டுதல் வேண்டாமை யில்லா னடிசேர்ந்தார்க் கு
யாண்டு மிடும்பை மில” (குறள் 4)

{துன்பம் இல்லாது வாழ என்ன செய்ய வேண்டும் என்கிறார்? விருப்பு வெறுப்புடன் எதையும் – யாரையும் பார்க்காத – அணுகாத கண்ணோட்டம் உடைய விருப்பு வெறுப்பு அற்றவர்களின் அடியை ( பாதம்)வணங்க வேண்டும்}

“தனக்குவமை யில்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்ற லரிது”. (குறள் 7)

{மனத்துன்பத்தை யாரால் போக்க முடியும்? ஒப்பு நோக்குவதற்கு இணையற்ற ஆற்றோர்  திருவடிகளைப் பற்றினால் அன்றி மனக்கவலைகளை மாற்ற இயலாது எனத் திருவள்ளுவர்}

“அறவாழி யந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லாற்
பிறவாழி நீந்த லரிது” (குறள் (8)

{பொருட்கடலிலும் இன்பக்கடலிலும் திளைக்க வேண்டும் என்றால் அழகிய பண்புநலன்கள் உடைய அறவோர்களின் தாள் ( கால் ) பணிதல் வேண்டும் என்கிறார்} (அந்தணர் = அறவோர், பார்ப்பனரல்ல)

தலையில் பிறந்ததால் உயர்வு என்போரை அடிசாய்க்கும் வகையில் திருவள்ளுவர் மற்றொரு கருத்தைக் கூறுகிறார். என்னவென்று?

“கோளில் பொறியிற் குணமிலவே யெண்குணத்தான்
தாளை வணங்காத் தலை”. (குறள் 9)

{எண்ணிப் போற்றும் குணம் உடையவனின் தாளை வணங்காத தலை பயன் அற்றது }

“பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தார்
இறைவ னடிசேரா தார்”. (குறள் 10)

{நல்ல பண்புகளை உறைவிடமாகக் கொண்டவர்கள் – கல்விச் செல்வம் தங்கியிருப்பவர்கள் – அதிகார ஆளுமை தங்கியிருப்பவர்கள் ஆகிய இறைமையாளர்களின் அல்லது இறைவனின் அடி  சேர்ந்தவர்களால் மட்டும் அவர்கள் வழிகாட்டுதலில் துன்பக்கடலைக் கடக்கமுடியும்}.

நாகசாமி .

பார்த்தீர்களா! வள்ளுவன் எவ்வாறு முதல் அதிகாரத்திலேயே ரிக்வேத புருச சூத்திர படைப்புக் கோட்பாட்டினை காலின் பெருமை பேசி தகர்த்து எறிந்துள்ளார். இங்கு வள்ளுவன் காலின் பெருமைகளைப் பேசி சூத்திரர்களை உயர்ந்தவராகக் காட்டமுயல்கின்றார் என்பதல்ல, மாறாக முள்ளை முள்ளால் எடுப்பதுபோல கால்களின் பெருமையினை உவமையாகக் கையாண்டு புருச சூத்திர படைப்புக் கோட்பாட்டினைத் தகர்த்து எறிகின்றார். இவை எல்லாவற்றிற்றிற்கும் முத்தாய்ப்பாக அமைந்த குறள் வருமாறு

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்”. (குறள் 972)

மேற்கூறிய குறளில் `எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே` என மேற்குறித்த குறளில் வர்ணாச்சிரமக் கோட்பாட்டினையே தகர்த்து எறிகின்றார்.

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று” (குறள் 259)

என்ற குறளின் மூலம் பார்ப்பனச் சடங்கான வேள்வியினையே (யாகம்) ஏளனம் செய்கின்றார் வள்ளுவன்.

“மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்
பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்” (குறள் 134)

என்ற குறள் வேறு  பார்ப்பனர் என்ற சொல்லையே பயன்படுத்திச் சாடுகின்றார் வள்ளுவர்.

படிக்க:
திருக்குறளும் எளிமையான தமிழ் இலக்கணமும் | பொ வேல்சாமி
இராஜராஜ சோழன் ஆட்சி! பார்ப்பனியத்தின் மீட்சி!!

இவ்வாறு குறள்களை அடுக்கிக்கொண்டே போகலாம், விரிவஞ்சி நிறுத்துகின்றேன். இத்தகைய முழுவதும் பார்ப்பன – ஆரிய எதிர்ப்பாக அமைந்த திருக்குறளை `ஆரிய சாத்திரங்களின் சாரம்` என நூல் எழுதுபவர்களை என்ன சொல்லுவது!

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”. (குறள் : 423)

வி.இ. குகநாதன்

34 மறுமொழிகள்

  1. அருமையான ஒரு கட்டுரை.
    திருக்குறளில் மட்டுமல்ல, பல சங்க இலக்கியங்களிலும் `கடவுள் வாழ்த்து` என்ற இடைச்செருகல் உண்டு. இவற்றை தோலுரித்துக் காட்டவேண்டியது தமிழரின் தலையாய பணி.

  2. கிறிஸ்துவ மதமாற்றிகள் இந்த மாதிரி திருக்குறளை பற்றி தவறான அர்த்தங்களை சொல்லி கடைசியில் பெரும் தோல்வி அடைந்து இருக்கிறார்கள். எத்தனை முறை தோற்றாலும் மீண்டும் மீண்டும் அதே தவறுகளை கிறிஸ்துவ மதமாற்றிகள் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

  3. // இதன்படி சூத்திரன் காலிலிருந்தே பிறந்தவர்கள் எனக் கூறி தமிழர்களை இழிவுபடுத்துகின்றது ரிக்வேதம் //

    தமிழ் இனம் தான் தனி இனமாயிற்றே. வேதங்களும், ‘வருணாசிரமும்’ தமிழர்களுக்கு எப்படி பொருந்தும் ?

    அதெப்படி ‘ரிக் வேதம்’ (அல்லது) ‘மனு தர்மம்’ எழுதப்பட்ட காலத்திலேயே தமிழ்நாடு இருந்ததா ? யார் சூத்திரன் என்பதை அம்பேத்கரே விளக்கியுள்ளார்

    ஏற்கனவே ‘வீரமாமுனி கோஷ்டி’ திருக்குறளை மாற்றி அமைத்து பின்பு அனைத்து ‘தவறான பிரதிகளும்’ எரிக்கப்பட்ட வரலாறு உண்டு

    • #இக் கருத்து தமிழ் மண்ணையும் வந்துசேர்ந்த காலத்திலேயே திருக்குறள் எழுதப்படுகின்றது.#
      என்றே கட்டுரை கூறுகின்றது (தமிழ்நாடு என்றல்ல) , தமிழர்கள் வாழ்ந்த காலம் முதற்கொண்டே தமிழ் மண் உண்டு.

  4. திருட்டு வினவு இழிபிறவிகளே, அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு பற்றி வாயே தொறக்கல? உனக்கு வசதியானத மட்டும் சூஸ் பண்ணிக்கிறியாக்கும்.

    • ஆதிபகவன் சமணர்களின் முதற்கடவுள் அவர்தான் எண்ணையும் எழுத்தையும் உருவாக்கினார் என்பதர் அதையேதான்வந்து அகரம்ள்ளுவும் ஆதிுதல்தான் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்று கூறுகிறார்

    • வெறுப்புணர்வு கொண்டு, சரியான புரிதல் இல்லாமல் எழுதப்பட்டது இது. விஷமமான பொறுப்பற்ற பதிவு.

  5. There is one more point. Why should Thiruvalluvar suggest kneeling down before the feet of some body? Is it acceptable to the author? [I admire Thirukural. What I have stated is that the author should explain the points raised by me].

  6. ‘ஹவிஸை’ அக்னியில் ஆஹுதி செய்து ஆயிரம் யாகம் செய்வதைவிட, ஒரு பிராணியையும் வதைத்து உண்ணாமலிருப்பது சிரேஷ்டம்’ என்று இதன் அர்த்தம். இதைப் படித்த பின்னும்கூட என் அபிப்பிராயமோ திருவள்ளுவர் வைதிக அநுஷ்டானங்கள் அனைத்திலும் பூரண நம்பிக்கை கொண்டவர் என்பதே. காவிரியின் பெருமையைச் சொல்ல வந்த ஒருவர். ‘ஆயிரம் கங்கையைவிட ஒரு காவிரி உயர்ந்தது’ என்று சொன்னால், ‘கங்கையும் உயர்ந்தது’ என்றே அர்த்தமாகும். காவிரியைச் சிலாகித்துப் பேச விரும்புகிற ஒருவர், ஆயிரம் சாக்கடையைவிட ஒரு காவிரி உயர்ந்தது என்று சொல்வாரா? அப்படியே திருவள்ளுவர் அஹிம்ஸையைச் சிலாகித்துப் பேசும்போது, ‘ஆயிரம் யாகத்தைவிட அஹிம்ஸை உயர்ந்தது’ என்றால், யாகமும் உயர்ந்தது என்றே அர்த்தமாகும். ரொம்ப உயர்ந்த ஒன்றைச் சொல்லி அதைவிட இது ரொம்ப ரொம்ப உசத்தி என்றுதானே சொல்வது வழக்கம்!

    இந்தக் குறள் இல்லற இயலில் சொல்லப்படவில்லை; துறவற இயலிலேயே சொல்லப்பட்டிருக்கிறது. துறவிக்கு யாகத்தில் அதிகாரம் இல்லை; அவனுக்கு மட்டுமே வைதிக மதம் பூரண அஹிம்ஸையை விதிக்கிறது. அதையே வள்ளுவரும் வலியுறுத்துகிறார்.

    • “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
      செய்தொழில் வேற்றுமை யான்.” – (குறள் :972) இது முழுக்க முழுக்க வைதீக எதிர்ப்பு செறிந்த குறள்.
      திருக்குறள் அடிப்படையிலேயே வைதீக மதத்திற்கு எதிரானது

    • அன்றைய வேள்வியே ( யாகமே) பார்ப்பனர்களால் உயிர்ப்பலியுடனேயே நடாத்தப்பட்டது. இதனை தெய்வத்தின் குரல் புத்தகத்தில் சங்கராச்சாரியரே ஏற்றுள்ளார்.

  7. திருமால் வாமனராக அவதரித்து, தேவர் தம் துயர் தீர்க்க, மகாபலியிடம் சென்று, மூவடி மண் யாசித்தார். அம்மன்னன், சுக்கிராசாரியார் தடுக்கவும், மறுத்து, தானம் செய்தான். மண்ணும் விண்ணும் அளந்து மூன்றாம் அடியை அம்மன்னன் சிரசின் மீது வைத்து அருளினார் பெருமாள். இதனை வள்ளுவர்.

    ‘மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
    தாஅயது எல்லாம் ஒருங்கு’

    காமத்துப்பாலில்

    ‘தாம் வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
    தாமரைக் கண்ணான் உலகு’

    என்னும் குறளில், தாமரைக் கண்ணான் என்பது கண்ணனைக் குறிக்கும்.

    திருமகளை பற்றி விருந்தோம்பல் அதிகாரத்தில் வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

    ‘அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
    நல்விருந்து ஓம்புவான் இல்’

    • 1. சோம்பல் இல்லாதவர் அடையும் பயன், சோர்வில்லாத ஒரு மன்னன், அவன் சென்ற இடமனைத்தையும் தனது காலடி எல்லைக்குள் கொண்டு வந்ததைப் போன்றதாகும்.
      (திருமால் என்பது பரிமேலழகர் விட்ட புருடா). அவ்வாறே ஏனையவையும்

      • உங்களை போன்ற கிறிஸ்துவர்களுக்கு தமிழின் அர்த்தங்களும் ஒழுங்காக தெரியாது திருக்குறளின் அர்த்தமும் தெரியாது… அர்த்தம் தெரியாமல் புருடா விட வேண்டியது.

        • முதலில் `அர்த்தம்` என்ற சொல்லே தமிழல்ல. அது உங்களுடைய செத்த மொழி. தமிழில் `பொருள்`.
          முதலில் தமிழ் படியுங்கள்.

          • பொருள் என்பது பணம், சொத்து போன்றவற்றை கூட குறிக்கும்… உங்களை போன்ற கிறிஸ்துவர்களுக்கு தமிழ் வார்த்தைகளின் அர்த்தங்கள் முழுமையாக தெரியாது… உங்களுக்கு தெரிந்தது எல்லாம் பூர்விக கலாச்சாரம் மற்றும் மதத்தை பற்றி அவதூறு மற்றும் பொய்களை பரப்பி மதமாற்றம் செய்வது மட்டுமே… கிறிஸ்துவத்தில் ஒரு திருக்குறளை உருவாக்க முடியாது என்ற காரணத்தினால் திருக்குறள் ஹிந்து மதத்திற்கு எதிரானது என்று சொல்லி கொண்டு இருக்கிறீர்கள். இன்னும் சில இளிச்சவாயர்களிடம் (இந்தியாவிற்கே வராத) செயின்ட் தாமஸ் திருவள்ளுவரை மதம் மாற்றினார் அதனால் திருக்குறள் கிறிஸ்துவ நூல் என்ற கடைந்தெடுத்த அயோக்கியத்தனமான பொய்களை சொல்லி கொண்டு திரிகிறீர்கள்.

            • ஒரு சொல்லிற்கு வேறு பொருள் இருப்பது வழமை. அது பயன்படுத்தப்படும் முறையில் கருத்துப்பெறும். அதற்காக `அர்த்தம்,பூர்வீகம்,கலாச்சாரம்` போன்ற வடமொழிச் சொற்கள் தமிழ் ஆகாது. மற்றையது கிறித்தவத்திற்கு முதலில் இந்தியாவில் (கேரளா) மாறியதே பார்ப்பனர்கள்தான்.இன்றும் பிறப்பினடிப்படையிலான முன்னுரிமையும், தலைமுறை வழியான பாதிரியார் தொழிலும் பார்ப்பனர்களிற்கே எனச் சட்டமியற்றினால், யேசு சாமிக்கும் சேர்த்துப் பூசை செய்ய பூணூல் குழு தயாராகவே உள்ளது. ஒன்றை மறந்துவிட்டேன்- தட்சணை, அது முதன்மை.பார்ப்பனர்களிற்கு கடவுளை மாற்றுவது ஒன்றும் புதிமையல்லவே.ஏற்கனவே இந்திரன்,அக்னி,சோமன் ஆகிய ரிக்வேத முதனமைக் கடவுள்களை தட்சணைக்காக கைவிட்டவர்கள் தானே.இறுதியாக கிறித்தவமும் ஒரு மூடநம்பிக்கைதான்.

  8. திருக்குறளை திரிக்க நினைக்கும் பார்பனியத்திக்கு சரியான அடி இந்த கட்டுரை

  9. எவனும் ஓழுக்கம் தவறக்கூடாது என்று கூறாமல், அதென்ன பார்ப்பானுக்கு ஒழுக்கம் மிக முக்கியம், தவறினால், பிறப்பு கெடும் என்று எழுதியிருக்கிறாரே, அதற்கென்ன பொருள்? பார்ப்பான் கற்ற வேதத்தை மறந்தால் என்ன, ஒழுக்கம் தவறினால் என்ன? மற்றவர்கள் ஒழுக்கம் தவறினால் பரவாயில்லையா? இதிலிருந்து என்ன தெரிகிறது? திருவள்ளுவரும் ஒரு ஊத்தவாய் பார்ப்பான்தான். அவருக்கு பரிமேலழகரே மேல். ‘பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்’ என்று கூறிய இந்த திருவள்ளுவர், மேற்பிறந்தார், கீழ்பிறந்தார், புலையர் என்றெல்லாம் குறிப்பிடுகிறாரே, யாரை?
    ‘பிறப்பொக்கும்’ என்றால், ஆண் விதைக்க, பெண் சுமக்க எல்லா உயிரினங்களும் இந்த உலகில் பிறக்கின்றன என்ற ஒரு சாதாரண பொருள்தான். தலையில் வைத்துக்கொண்டாட ஒன்றுமில்லை.

    பார்ப்பானுக்கு ஒழுக்கம் மிக இன்றியமையாதது என்று கூறியதின் மூலம், பார்ப்பனர் அல்லதவர்களை இழிவுபடுத்துகிறார் இந்தத் திருவள்ளுவர். 1973-ல் வெளி வந்த நய வஞ்சக பார்ப்பான் கே பாலசந்தரின் ‘அரங்கேற்றம்’ திரைப்படத்தில் ‘பிறாமண குடும்பத்தில் பிறந்த நீ விபசாரத்தொழில் செய்கிறாயே’ என்று உரையாடல் வரும். இது பிறாமணர் அல்லதவரை மிகவும் இழிவுபடுத்துவதாகும் என்று அப்போது போராட்டம் வெடித்தது, அந்த பாலசந்தருக்கும் திருவள்ளுவருக்கும் வேறுபாடில்லை.

    எல்லா தமிழ் இலக்கியங்களும், முக்கியமாக சங்க இலக்கியங்களும் பார்ப்பனர்களைத் தூக்கிப்பிடிக்கும் குப்பைதான். கொளுத்தப்பட வேண்டியவை. பெரியார் இந்தக்கருத்துடையவர்தான். அனால், பிறகு கொஞ்சம் சமரசம் செய்து கொண்டார், வற்புறுத்துலின் பேரில்.

  10. அக் காலத்தில் பிறப்பிலடிப்படையிலான ஏற்றத்தாழ்வினைக் கொண்டு வந்தது பார்ப்பனரே. எனவேதான் அவர்களைக் குறித்து அக் காலத்தில் குறிப்பாகச் சொல்கின்றார் வள்ளுவர்.

    • நீங்கள் என் கேள்வியையே புரிந்து கொள்ளவில்லை. பிறப்பு எல்லா உயிர்க்கும் ஒக்கும் என்று அஃறிணையில் கூறிய வள்ளுவர், மனிதர்கள் என்று வரும்போது, மேற்பிறந்தார், கீழ்பிறந்தார் என்று பிறப்பின் அடிப்படையில் பிரிக்கும்போது அந்தப் பிரிவுகளை ஆமோதிக்கிறார். ‘புலையர்’ என்று ஒரு பிரிவினரை கீழ்த்தரமாகக் குறிப்பிடுகிறார். ஏன்? மனத்தளவில் அவரும் ஒரு ஆரியப் பார்ப்பான்தான்.

      கே பாலசந்தர் திரைப்படத்தில் வரும் உரையாடலுக்கும் வள்ளுவர் எழுதியதற்கும் வேறுபாடே இல்லை. இருவரும் பார்ப்பனர்கள உயர்த்திப் பிடித்து, மற்றவர்களை இழிவுபடுத்துகிறார்கள். ‘வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் கீழ்ப்பால் ஒருவின் கற்பின் மேற்பாலொருவனும் அவன்கட்படுமே’ என்ற புறநானூற்று வரிகள் நம்மை அசிங்கப்படுத்தவில்லையா? இன்னும் அரசாங்க அலுவலகங்களில் ‘அதோ ஒரு ஐயர் இருக்கிறார், அவரைக்கேளுங்கள், சரியாகச் சொல்லுவார்’ என்று நம்மவர்களே கூறுகிறார்களே, அதைவிட இழிவு வேண்டுமா?

      பார்ப்பானை உயர்த்திச் சொல்லி நம்மை கேவலப்படுத்தாத பழந்தமிழ் இலக்கியம் எதுவும் இல்லை. நாம்தான் தமிழ் தமிழ் என்று ஏமாறிக்கொண்டிருக்கிறோம்.எல்லாம் கொளுத்தப்பட வேண்டியவையே.

      • முதலில் நீங்கள் யார் ? பெரியாரை திட்ட வேண்டும் அவர் மீது வெறுப்பினை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே ஒரு சில பார்ப்பன அல்லது பார்ப்பன அடிவருடிகளும் உங்களை போன்றே பேசுவார்கள்.. உங்கள் பேச்சையும் பார்த்தால் அப்படி தான் தெரிகிறது … ஆகவே உங்கள் உண்மையான அடையாளத்தோடு பேசவும் …

        • பெரியாரை மட்டுமல்ல, தமிழ் இலக்கியங்களையம் திட்ட வேண்டும் என்பது தான் சில விஷமிகளின் நோக்கமாக உள்ளது.

  11. வினவு ஆசிரியர் மற்றும் உரிமையாளர் அவர்களே….இனி அடுத்ததாக பாரதியார் பாடல்களை வைத்து ஒரு சர்ச்சை கிளப்புங்க…. உங்க பொழப்பு…ஓடனும் அல்ல…

  12. ‘ஈனப்பறையரேனும்’ என்று எழுதியவர்தானே பாரதியார். சாதிகள் இல்லையடி பாப்பா என்று எழுதியது ஒரு மேற்பூச்சு. சண்டாளர்கள் கூட சரணடைந்தால் அவர்களுக்கும் மோக்ஷம் அளிப்பேன் என்று கண்ணன் கீதையில் கூறியதைப்போன்றுதான் இவையெல்லாம்.

  13. பிழைக்க தெரியாத பாப்பான்கள்!இந்தமாதிரி மாற்று மத கருத்துக்களை அழிக்காம விட்டு வச்சிருக்கானுவ!நாங்கலாம் ககமது காலத்திலையே அவரை நோக்கி கேள்வி மேல் கேள்வி கேட்ட இப்னு முஹப்பாவை மேல அனுப்புனதோட(ககமது கிட்ட கோவிச்சிக்கிட்டு வந்தாமாதிரி ஒருத்தன அனுப்பி முடிச்சோம்) அவன் சொன்ன எல்லா கருத்துக்களையும் அழிச்சிட்டோம்.அதான் எங்க கெத்து.அதான் எங்க மார்க்கத்துக்கு இப்ப இரநூறு கோடி பேர் வந்திருக்கான்!

    • “சாதிக் பாஷா ஆவி”

      “அதான் எங்க மார்க்கத்துக்கு இப்ப இரநூறு கோடி பேர் வந்திருக்கான்!”

      I understand your concern. But we are not ready to go with your diversion from the topic.

      • அதான் நல்லது.இலலாட்டி கூசாவோட எல்லா தில்லுமுல்லு டீட்டெயில்களையும் வச்சிருந்த என்ன தொங்க விட்டுட்டு தற்கொலைன்னு சொன்னாமாதிரி ஆகிடும்!

  14. பார்ப்பனர்களின் பித்தலாட்டங்களை புடம் போட்டுக்காட்டிய ஒரு கட்டுரை அதுதான் இப்படி புலம்பிறார்கள்.

  15. ”சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்”- இதற்கு என்ன பொருள்?செய்கின்ற தொழிலுக்கு ஏற்ப சிறப்பு வேறுபடும் என்பதுதானே?அதுதானே மனுதர்மம்?
    நிலத்திற்கிடந்தமை கால் காட்டும் காட்டும்
    குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்(959),
    நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
    குலத்தின் ஐயப் படும்(958),
    குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர்-(954),
    சலம்பற்றிச் சால்பு இல செய்யார் மாசற்ற
    குலம்பற்றி வாழ்தும் என்பார்(956),
    குடிப்பிறந்தார்கண் விளக்கும் குற்றம்…..(957),
    இவற்றுக்கு எல்லாம் என்ன பொருள்? குடி,குலம்-இவற்றிற்கு ‘நல்ல குடும்பம்’ என்று பொருள்கூறுவீரோ? இல்லாவிட்டால் இடைச்செருகல் என்று சொல்லிவிட்டால் பிரச்சினை தீர்ந்தது! நமக்குப் பிடிக்காத எல்லாத்தையும் மாத்திடுவோம்! அப்ப சங்ககாலத்தில் பறையர்களாகிய நாம் உயர்சாதியாக இருந்தோமா?எந்த நூலில் சாதி இல்லை?கீழேதான் கிடந்தோம் ஐயமே இல்லை!ஆனால் முன்னேறிக்கொண்டிருக்கிறோம்.முன்னேறுவோம்.கீழ்மைக்குணங்களையும் கீழ்மைப் பண்புகளையும் விடுவோம். ஒழுக்கம்பேணுவோம் உயர்த்தவும் மதிக்கவும் படுவோம்!,மன்னிக்கவும்!நாம் கீழ்ச்சாதியாகத்தான் இருந்தோம்.இருக்கிறோம்.ஆனால் இனி அல்ல!

    • சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் – செய்கின்ற தொழிலை வைத்து வேற்றுமை பாராட்டுவது சிறப்பில்லை என்று நேரடியாகக் கூறுகிறார் வள்ளுவர். ஆனால் இதற்கு உரை எழுதிய யாரும் அப்படியான நேர்பொருளைக் கூறவில்லை, கலைஞர் உட்பட. இதற்கு என்ன காரணம் என நான் ஆய்வு செய்த போது, பரிமேழலகர் நேரடியாகவே மனு தர்மத்தை நியாயப்படுத்தி உரை எழுதியுள்ளார். இதை மறுக்கத் துணியாது அனைவரும் அதை ஒட்டியே உரை எழுதுகின்றனர். முவா-வும் விதி விலக்கல்ல.

  16. செய்தொழிலில் காட்டும் திறமையின் வேறுபாட்டினால் மக்கள் வேறுபடுவர். ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளி சிறப்பாகக் காலனிகளை செய்பவராகவும் இரு இருதய அறுவை வைத்தியர் செய்யும் அறுவை சிகிச்சைகள் பல நோயாளிகளின் இறப்பில் முடிந்தால் தொழிலாளியே சிறப்புக்கு உரியவன் என்று பொருள்.

Leave a Reply to V.EC. kuganathan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க