செல்வாக்கில்லாத மாநிலங்களில் தனது அடித்தளத்தை குறுக்கு வழியில் உருவாக்க நினைக்கிறது பாஜக. ஊடகங்களின் ஆதரவு, மாநிலக் கட்சிகளை மிரட்டுவது, அதிகார வர்க்கம் – ஆளுநரைக் கொண்டு குறுக்கீடு செய்வது, நீதிமன்றங்கள் என பல வழிவகைகளில் தமது அடித்தளத்தை உருவாக்க இந்துத்துவ பரிவாரங்கள் முயல்கின்றன. புதுச்சேரியில் இவர்கள் எடுத்த தடி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி.

புதுச்சேரி மாநிலத்தில் நாராயணசாமி தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவை இருந்தாலும் உண்மையில் ஆள்வது கிரண்பேடிதான். தானின்றி சிறு துரும்பும் அசையாது என்பதை ஆரம்பம் முதலே அவர் மேற்கொண்டு வருகிறார். நாராயணசாமியும் பழம் பெருச்சாளி என்றாலும் கிரண்பேடியை சமாளிக்க முடியவில்லை. பல்வேறு திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதும், அவற்றின் பெயரை பாஜக-விற்கு கொண்டு செல்வதுமே கிரண்பேடியின் திட்டம்.

பாண்டிச்சேரி முதல்வர் தர்ணா

பொறுத்துப் பார்த்த நாராயணசாமி கடந்த 13-ம் தேதி முதல் தர்ணா போராட்டத்தை செய்து வருகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தருகின்றனர். கிரண்பேடியோ மோடி அரசின் ஆசீர்வாதம் இருப்பதால் கொழுப்பெடுத்து திமிராக பேசுகிறார். நாராயணசாமியை காக்கை யோகா செய்கிறது என்று டிவிட்டரில் படம் போடுகிறார். வெளியே ஆர்ப்பாட்டம் செய்யும் அமைச்சரவையை கிண்டல் செய்யும் விதமாக மாளிகை வளாகத்தினுள்ளே சைக்கிள் பயிற்சி செய்கிறார். ஆளுநர் மாளிகை முழுவதும் துணை நிலை இராணுவம், போலீசைக் குவித்து மிரட்டுகிறார்.

இந்தியாவின் ஜனநாயகம் ஒரு கேலிக்கூத்து என்பதற்கு கிரண்பேடியின் தர்பாரே ஒரு எடுப்பான சான்று.

இனி கருத்துக் கணிப்பிற்கான கேள்வி :

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்திற்கு காரணம் என்ன?

♠ கிரண்பேடியின் திமிர்
♠ நாராயணசாமியின் தவறு
♠ காங்கிரசின் தேர்தல் நாடகம்
♠ ஆளுநரை ஏவிவிடும் பாஜக

வாக்களியுங்கள் !

(இரண்டு தெரிவுகள் தேர்ந்தெடுக்கலாம்)

டிவிட்டரில் வாக்களிக்க :

யூ-டியூபில் வாக்களிக்க:

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்திற்கு காரணம் என்ன?