மிழக பாஜக சார்பில் தமிழிசை, பொன் இராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி. இராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருக்கின்றனர். மோடியின் இந்த ஐந்து ஆண்டுகளில் இந்த வேட்பாளர்கள் அனைவரும் பல்வேறு தருணங்களில் தமிழக மக்களால் வெறுக்கப்பட்டிருக்கின்றனர்.

ஆண்டாள் விவகாரத்தின் போது நயினார் நாகேந்திரன், “இந்துக்களை இழிவுபடுத்துபவர்களை கொலை செய்ய வேண்டும்” என்ற அளவுக்கு பேசினார். கொடுத்த காசுக்கு மேல் கூவும் இந்த முன்னாள் அதிமுக அடிமையை விட்டு விடுவோம். மற்ற நால்வரையும் எடுத்துக் கொள்வோம்.

பொன் இராதாகிருஷ்ணன் அப்பட்டமாக ஒரு பண்ணையார் போல நடந்து கொள்வார். அதுவும் அவர் அமைச்சராக உலா வந்த இந்த வருடங்களில் முகத்தை டைட்டாக வைத்து விட்டு அப்பாவி மக்களை விரட்டும் போலீசு அதிகாரி போல பேசுவார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை ஒழிக்க இவர் ஆடிய சதிராட்டங்கள் பல.

அதே தூத்துக்குடியில் சோபியா எனும் இளம்பெண்ணை கைது செய்யச் சொல்லி ஆட்டம் போட்டவர் தமிழிசை. சிலர் கருதுவது போல இவர் ‘சூத்திரர்’ என்பதால் பாஜகவில் ஓரங்கட்டப்படுவதில்லை. அப்படிப் பார்த்தால் மோடி கூட பார்ப்பனரல்லாதோர் பிரிவில்தான் வருகிறார். பார்ப்பனியத்தை பின்பற்றுபவர்களில், சங்கிகளில் வெள்ளை, கருப்பு என்ற பேதமில்லை. அனைத்தும் காவிதான்.

சி.பி.இராதாகிருஷ்ணனைப் பொறுத்த வரை தொலைக்காட்சி விவாதங்களில் பேசுவதே அந்த சானலின் முதலாளி போல உரிமையுடன் பேசுவார், அதட்டுவார், மிரட்டுவார். எச். ராஜா பற்றி தனியாகச் சொல்லத் தேவையில்லை. தமிழக இணைய வாசிகளால் எச்ச என்று அழைக்கப்படும் அளவுக்கு அவர் மீதான வெறுப்பு இங்கே அதிகம்.

எனில் இன்றைய கேள்வி:
தமிழக மக்களால் அதிகம் வெறுக்கப்படும் பாஜக வேட்பாளர் யார்?

♠ பொன். இராதாகிருஷ்ணன்
♠ சி.பி.இராதாகிருஷ்ணன்
♠ தமிழிசை
♠ எச். ராஜா

(இரண்டு பதில்களை தெரிவு செய்யலாம்)

பின் குறிப்பு : வெற்றி பெறும் வேட்பாளருக்கு தேர்தல் முடியும் முன் பரிசுகள், விருதுகள் வழங்கப்படும்.

வாக்களியுங்கள், வாக்களிக்காமல் இருந்து விடாதீர்கள், ஜனநாயகக் கடமையை ஆற்றுங்கள்!

டிவிட்டரில் வாக்களிக்க

வினவு யூ-டியூப் சேனல் :

வாக்களிக்க…


இதையும் பாருங்க …

அக்கா வீட்டு வாசலில் தாமரை மலர்ந்தே தீரும் | பாடல் டீசர் | Kovan | Official Teaser

மோடி எடப்பாடியை காட்டுக்கு அனுப்புவோம் :