டலூர், மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகே புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பாக கடந்த 22.04.2019 அன்று, உலக பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் அவர்களின் 150 -வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கார்ப்பரேட் – காவி கும்பலுக்கு எதிராகவும், லெனின் பாதையில் புதிய ஜனநாயக புரட்சிக்கு அணிதிரள்வோம் என முழக்கங்களும் எழுப்பப்பட்டது.

லெனின் அவர்களின் சாதனைகளை விரிவாகப் பேசியும், இந்திய அரசின் தோல்வியையும், தேர்தல் ஆணையம் மோடி – அமித்ஷா கும்பலுக்கு ஆதரவாக செயல்படுவதையும், மீண்டும் கார்ப்பரேட் – காவி கும்பல் மோடி பிஜேபி பாசிஸ்டுகளை ஆட்சியில் அமர்த்த துடிப்பதையும் விலக்கி தோழர் வெங்கடேஸ்வரன் உரையாற்றினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

புமாஇமு மாவட்ட செயலாளர் தோழர் மா.மணியரசன் அவர்களும் இந்திய அரசு வரி என்ற பெயரில் மக்களை ஒட்டச் சுரண்டுவதையும், சிறுபான்மை இஸ்லாமியர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களைத் தாக்குவதையும், இந்த அரசு கட்டமைப்பு முழுவதும் கார்ப்பரேட் – காவிகளுக்காகவும் செயல்படுவதை விளக்கி உரையாற்றினார்.

இந்த நிகழ்வில் மாணவர்கள், பெண்கள் உழைக்கும் மக்கள் கலந்துகொண்டனர். அருகாமையில் இருந்த உழைக்கும் மக்களுக்கும், வணிகர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கடலூர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க