“தமிழகத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கட்சியாக திமுக உள்ளது. அக்கட்சியினர் டீ கடை, பிரியாணி கடை என்று தாக்குதல் நடத்தினர்கள். இதற்கு நேரில் சென்று மு.க.ஸ்டாலினே மன்னிப்பு கோரினார். தற்போது, நாகர்கோயிலில் திமுக கட்சியைச் சேர்ந்த கடைக்காரரிடம் மாவு குறித்து கேட்டபோது, எழுத்தாளர் ஜெயமோகன் மீது கடைக்காரர் தாக்கியுள்ளார். ஆகவே, திமுக தமிழகத்திலிருந்து அகற்றப்பட வேண்டும்.” இது ஒரு நேர்காணலில் எச்.ராஜா கூறியது.

நாகர்கோவில் பார்வதிபுரம் கடை ஒன்றில் எழுத்தாளர் ஜெயமோகன் இட்லி தோசை மாவு வாங்கிய கதை பலருக்கும் தெரிந்திருக்கும். வீட்டிற்குச் சென்ற ஜெயமோகன் மாவு புளித்திருந்ததை கண்டுபிடித்து விட்டார். உலக உத்தம எழுத்தாளரான தன்னிடமே இவ்வளவு அலட்சியமா என்று அந்தக் கடைக்குச் சென்று குழாயடிச் சண்டையில் ஈடுபட்டுள்ளார்.

மருத்துவமனையில் ‘படுகாயத்துடன்’ ஜெயமோகன்.

கடையில் இருந்த பெண்மணியும், “ஐயா நீங்கள் வாங்கும்போதே இது முந்தைய தினத்து மாவு” என்று கூறியதை நினைவுபடுத்தியுள்ளார். இருப்பினும் எழுத்தாளர் கோபம் குறையாமல் மாவு பாக்கெட்டுகளை அந்த பெண் முன்னே வீசியுள்ளார். எரிச்சலைடைந்த அந்த பெண்ணின் கணவர் தட்டிக் கேட்க சிறு அளவு கைகலப்பு நடந்துள்ளது.

உடனே ஜெயமோகனது செல்வாக்கால் இது ஊடகங்களில் பரபரப்பான செய்தியானது. சொல்லிக் கொள்ளும்படி அடியே இல்லாமல் அரசு மருத்துவமனைக்குச் சென்று தங்கியவாறு போலீசில் புகார் கொடுக்கிறார் ஜெயமோகன். போலீசும் அந்தப் பெண்ணின் கணவரை கைது செய்து சிறையில் அடைத்தது. கைது செய்யப்பட்டவர் தி.மு.க என்பதால் ஸ்டேசனில் தி.மு.க உள்ளூர் தலைவர்கள் வந்து பிறகு இது ஜெயமோகன் என்பதால் விட்டுக் கொடுத்து சென்றுவிட்டனர்.

தற்போது எச்.ராஜா வரைக்கும் ஜெயமோகனுக்கு ஆதரவு அள்ளிக் கொட்டப்படுகிறது.

இன்றைய கேள்வி:

ஜெயமோகனின் புளிச்ச மாவு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யார்?

♣ ஜெயமோகன்
♣ கடைக்காரர்கள்
♣ தி.மு.க.
♣ செய்தியை பரபரபாக்கிய ஊடகங்கள்

*****

டிவிட்டரில் வாக்களிக்க :

யூ-டியூபில் வாக்களிக்க :

ஜெயமோகனின் புளிச்ச மாவு விவகாரத்தில் தவறு செய்தது யார் ?