நாடு முழுவதும் தலைவிரித்தாடுகிறது வறட்சி. முழு பொறுப்பையும் பருவநிலை மாற்றத்தின் மீது சுமத்தி விட முடியாது; ஆட்சியாளர்களுக்கு நீர் மேலாண்மையில் தொலைநோக்குப் பார்வையில்லாததே நாம் எதிர்கொண்டுள்ள தண்ணீர் பிரச்சினைக்கு முக்கியமான காரணம்.

கையில் குடங்களோடு தண்ணீருக்காக அலைவது அன்றாடம் காணும் காட்சியாகிவிட்டது. மகாராஷ்டிராவின் விதர்பா, மராத்வாடா, கந்தேஷ் பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. பருவமழை பொய்த்துப்போன நிலையில், மக்கள் தண்ணீருக்காக அல்லாடுகிறார்கள். அதை ஆவணப்படுத்தியிருக்கின்றன இந்தப் படங்கள்…

ஒரு பழங்குடியின பெண், பல்கார் மாவட்டத்தில் தண்ணீரைத் தேடி அலைந்துகொண்டிருக்கிறார்.

நாசிக் மாவட்டத்தில் இகாட்பூரி மாவட்டத்தில் உள்ள ஒரு வனத்தில் அமைந்துள்ள குளத்தில் தண்ணீர் சேகரிக்கும் பழங்குடிகள்…

டெண்டேல் கிராமத்தில் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைக்கிறார் இவர். இந்த ஊரில் லாரிகள் மூலம் விநியோகிக்கும் தண்ணீர் வாரம் ஒரு முறை மட்டுமே கிடைக்கும்.

பால்கர் மாவட்டத்தில் கோசாலி கிராமத்தின் அருகே, பெரிய பிளாஸ்டிக் கூடையில் தண்ணீரை சுமக்கிறார் இந்தப் பெண்.

நாசிக் அருகே, கால்நடைகளுக்காக வறண்ட நிலையில் உள்ள ஒரு கிணற்றில் இருக்கும் நீரை சுறண்டிக் கொண்டிருக்கிறார்கள் சோனாலி கரூட் (24), புஷ்பா கரூட் (49) இருவரும்.

நாசிக்கில் டேங்கர் லாரிகளுக்காக காத்திருக்கும் பெண்கள்…

வறட்சியால் துவண்டு போன மாடுகள் நிழலில் இளைப்பாறுகின்றன.

தங்கள் கிராமத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தள்ளியுள்ள ஆழ்துளை குழாயில் தண்ணீர் பிடித்துவரும் இணையர்…


படங்கள் : Apoorva Salkade
கலைமதி
நன்றி : அவுட்லுக் இந்தியா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க