உங்கள் கையில் தந்தைப் பெரியார் சிந்தனைகள் 3 தொகுதிகள் 2200 பக்கங்கள் pdf வடிவில்.
நண்பர்களே…

1973 வரை பதிவான தந்தைப் பெரியாரின் பேச்சுக்களை ஆனைமுத்து ஐயா அவர்கள் சுமார் 2,200 பக்கங்களில் 3 தொகுதிகளாக 1974-ல் வெளியிட்டதை நாம் அறிவோம். அந்த 3 தொகுதிகளையும் பலரும் pdf வடிவில் வைத்திருக்கக்கூடும்.
அப்படியில்லாத நண்பர்களும் இந்நுாலை உங்கள் கணிணியில் வாசிப்பதற்கு உதவியாக இந்த 3 நூல்களின் இணைப்பை இங்கே கொடுத்துள்ளேன். இதில் இரண்டாம் தொகுதியில் மட்டும் பக்.952-லிருந்து 1085 வரை விடுபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது, அந்தப் பக்கங்களுடன் கூடிய இரண்டாம் தொகுதியை வைத்துள்ள தோழர்கள் அந்நூலை pdf வடிவில் கொடுக்கும்படிக் கொள்கிறேன்.
பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் – தொகுதி 1
பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் – தொகுதி 2
பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் – தொகுதி 3
( பிடிஎஃப் டவுண்லோடு செய்ய )
பொ.வேல்சாமி : தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:
- பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
- கோவில் நிலம் சாதி
- பொய்யும் வழுவும்
திருக்குறளை தங்க தட்டில் வாய்த்த மலம் என்று பெரியார் கூறிதாக ஒருவர் என்னிடம் வாதாடினர் நான் அதை ஏற்க வில்லை, அது சரியா ? தயவு செய்து விளக்கவும்
தங்களின் பெரியாரின் சிந்தனைகளை அனைவரும் அறிய தாங்கள் எடுத்துள்ள முயற்சிக்கு வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா.
தமிழ் மொழி பற்றிய ஈவேராவின் ‘சிந்தனைகள்’ இரண்டாம் தொகுதியில் பக்கம் 959-1000 காணோமே! ஏன் “விடுபட்டுள்ளது? காரணம் என்ன?
சரியோ தவறோ பக்கங்கள் காணாமல் போவது பச்சைத் திரேவிடியாத்தனம் என்று ‘வினவ’லாமே?