உலகமயத்தின் புதிய சாதனை – 2018-ம் ஆண்டில் அகதிகளின் எண்ணிக்கை 7.8 கோடி மக்கள்

லகம் முழுவதிலும் 2018-ம் ஆண்டில் தங்களது வாழிடங்களை விட்டு 7.8 கோடி மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அவையின் ஆணையம் (UNHCR) கூறியுள்ளது. 2017-ம் ஆண்டை விட இது 20 இலட்சம் அதிகம். அகதிகளின் எண்ணிக்கை என்ற அடிப்படையில் பார்த்தால் உலகின் 20-வது பெரிய மக்கள் தொகை கொண்ட நாடாக இது இருக்கும்.

ரோஹிங்கிய அகதி முகாம் ஒன்றில் சிறுமி.

இடம்பெயர்ந்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் உள்நாட்டு அகதிகள் என்று ஆணையம் கூறுகிறது. பெர்லினில் இதற்கான அறிக்கையை வெளியிட்ட போது இந்த போக்கு கவலையளிப்பதாக ஆணையத்தின் தலைவர் ஃபிலிப்போ கிராண்டி கூறியிருக்கிறார்.

புலம் பெயர்ந்த 2.59 கோடி அகதிகளில் பாலஸ்தீன மக்கள் கிட்டதட்ட 20 விழுக்காடாக இருக்கின்றனர். இவர்கள் தற்போது ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பில் உள்ளனர். 2018-ம் ஆண்டில் மட்டும் 1.36 கோடி மக்கள் இடம் பெயர்ந்துள்ளதாகவும், அவர்களில் 28 இலட்சம் மக்கள் வேறு நாடுகளுக்கும் 1.08 கோடி மக்கள் உள்நாட்டிலும் இடம்பெயர்ந்துள்ளதாக ஆணையம் கூறுகிறது.

மத்திய ஆப்பிரிக்க குடியரசின் (Central African Republic) ஜைக் (Zike) கிராமத்திலிருந்து தப்பி வந்துள்ள அகதிகளை பாதுகாக்கும் கேமரூன் அமைதிப்படை வீரர்கள். மத்திய ஆப்பிரிக்க குடியரசில் தொடர்ந்து நடக்கும் உள்நாட்டு வன்முறையிலிருந்து தப்பி வெளியேறியவர்களின் எண்ணிக்கை உலக அளவில் எட்டாவது பெரியதாகும்.

காங்கோ மக்கள் குடியரசிலிருந்து வெளியேறிய மக்கள் உள்நாட்டு அகதிகள் முகாமொன்றில் ஆடைகளை வாங்குவதற்காகக் காத்திருக்கின்றனர்.

அஃப்கானிஸ்தான் காபூலிலுள்ள உள்நாட்டு அகதிகள் முகாமொன்றில் சுற்றித்திரியும் சிறுவர்கள். 2018-ம் ஆண்டின் இறுதிவாக்கில் 21 இலட்சம் மக்கள் உள்நாட்டு அகதிகள் முகாம்களில் வாழ்கின்றனர்.

லெபனானிலுள்ள ஒரு முறைசாரா முகாமில் உள்ள சிரிய அகதிகள். அரசாங்க மதிப்பீடுகளின்படி, 2018-ம் ஆண்டின் இறுதியில் சுமார் 15 இலட்சம் அகதிகள் அங்கே வாழ்கின்றனர். போரில் இருந்து தப்பிச் செல்லும் சிரியர்களுக்கு முதன்மையான நாடு இதுவாகும்.

தெற்கு சூடான் தலைநகரின் புறநகர் பகுதியில் உள்நாட்டு மேங்கடீன் அகதிகள் முகாமில் தண்ணீர் சேகரிக்க வரிசையில் நிற்கும் உள்நாட்டு அகதிகள். சென்ற ஆண்டின் கணக்குப்படி சுமார் 19 இலட்சம் உள்நாட்டு அகதிகள் இங்கே இருந்தனர்.

எரித்திரியா மற்றும் பங்களாதேசைச் சேர்ந்த அகதிகள் மற்றும் புலம் பெயர்ந்தவர்கள். ஐரோப்பா செல்வதற்காக லிபியாவிலிருந்து கிளம்பிய நெரிசல் மிகுந்த ஒரு மரப்படகில் இருந்து மீட்கப்படுவதற்காக காத்திருக்கிறார்கள்.

கொலம்பியாவில் பாம்ப்லொனாவில் (Pamplona) உள்ள ஒரு பெட்ரோலிய நிலையத்தில் ரொட்டி மற்றும் காஃபிக்காக காத்திருக்கும் வெனிசுலா அகதிகள். 2018-ம் ஆண்டின் இறுதிவரை 30 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் அங்கிருந்து அகதிகளாக வெளியேறியுள்ளனர்.


– சுகுமார்
நன்றி : அல்ஜசீரா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க