ஷாங்காய் நகரின் பணக்காரர்களுக்கான அலுவலக வளாகங்கள் மற்றும் ஆடம்பர குடியிருப்புகளைக் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள சீன குடியேறி தொழிலாளர்கள் தாங்கள் அங்கம் வகிக்கும் திட்டங்கள் குறித்த விளம்பர பதாகைகள் முன் நிற்பதை படமாக்கியிருக்கிறார் புகைப்படக்காரர் ஜோனதன் பிரவுனிங்.

ஷாங்காயின் மிக வளமான ஷாப்பிங் மற்றும் பொழுதுபோக்கு பகுதியான ஷின்சியான்டி-ல் ஒரு ஆடம்பரக் குடியிருப்பு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஒரு தொழிலாளி, வெளியே வைக்கப்பட்டிருக்கும் விளம்பரப் பலகை அருகே மதிய உணவை உண்கிறார்.

அன்குய்-யிலிருந்து குடியேறிய ஸு தபெங், லிஃப்ட் இன்ஜினியராகப் பணியாற்றுகிறார். ஒப்பீட்டளவில் நல்ல ஊதியமாக இந்திய மதிப்பில் மாதம் ரூ. 50,000 (¥5,000) பெறும் இவர், வான்கே ஸுகுய் வளர்ச்சி மையத்தின் சுவரொட்டி முன் நிற்கிறார்.

ஜியாங்சி-யிலிருந்து வந்திருக்கும் இவர் சங்ஃபெங் வளர்ச்சி மையத்தில் பெயிண்டராக பணியாற்றுகிறார். நாள் ஒன்றுக்கு 200 யுவான் சம்பாதிக்கிறார்.

தான் பணியாற்றும் இடத்தில் இருக்கும் ஆடம்பர விளம்பரப் பதாகையின் பின்னணியில், தள்ளுவண்டியில் கட்டுமானப் பொருட்களை இழுத்துச் செல்கிறார் இந்தத் தொழிலாளி.

கீழ் தள வெப்ப நிறுவியாகப் பணியாற்றும் இவர், அன்குய் மாகாணத்திலிருந்து வந்து சென்ஃபெங் வளர்ச்சி மையத்தில் பணியாற்றுகிறார். ஆண்டுக்கு ¥50,000 வருமானம் ஈட்டுகிறார் இவர்.

‘கச்சிதமான வாழ்க்கைக்கு சியர்ஸ் சொல்லுங்கள்’ என்கிற ஷின்சியான்டி ஆடம்பர குடியிருப்பு வளாகத்தில் வைக்கப்பட்டிருக்கும் இந்த விளம்பரம். அங்கு பணியாற்றும் இந்தத் தொழிலாளி ஒரு இடைவேளையின்போது சிகரெட் புகைக்கிறார்.

ஹெனான் மாகாணத்திலிருந்து வந்திருக்கும் திரு. வாங், பொது தொழிலாளியாகவும் தூய்மைப் பணியாளராகவும் உள்ளார். சின்சுவா ரெட்ஸ்டார் லேண்ட்மார்க் என்ற கட்டுமான நிறுவனத்தில் நாள் ஒன்றுக்கு ¥150 சம்பளம் பெறுகிறார் இவர்.

அன்ஹுய்-யிலிருந்து வந்திருக்கும் இந்தத் தொழிலாளி, தோட்ட வடிவமைப்பு மற்றும் புதிய மரங்களை நடும் பணி செய்கிறார். நாள் ஒன்றுக்கு இவருடைய ஊதியம் ¥100.


கலைமதி
நன்றி : த கார்டியன்