அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 4 | பாகம் – 03

பள்ளி முழுவதும் பாராட்டுகிறது.

“இதிலுள்ள எல்லாவற்றையும் நான் மீண்டும் படிப்பேன்” என்று எலேனா தன் அருகில் உள்ளவனிடம் கூறுகிறாள்.

அச்சமயம் கதவைத் தட்டும் சத்தம் கேட்கிறது. நான் இதற்காகத்தான் காத்திருந்தேன். தாத்தோ கதவைத் திறக்க, பள்ளி இயக்குநர் உள்ளே வருகிறார். குழந்தைகள் எழுந்து நின்று வரவேற்கின்றனர்:

“வணக்கம்!” பரிபூரண நிசப்தம். பள்ளி இயக்குநர் அன்பான புன்னகையுடன் ஒவ்வொரு குழந்தையையும் பார்க்கின்றார்.

“மன்னியுங்கள், நான் ஒருவேளை உங்களுக்கு இடையூறு விளைவித்திருக்கக் கூடும். நீங்கள் இன்று அரிச்சுவடியை முடித்துள்ளதை அறிந்தேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சி, எனவே, உங்களுக்குப் பாராட்டுதல்களைத் தெரிவிக்க வந்துள்ளேன்…”

அவர் மீண்டும் தன் பார்வையை ஒவ்வொருவர் மீதும் செலுத்துகிறார். குழந்தைகள் கவனமாகப் பார்க்கின்றனர்.

நீ பலவீனமானவன், மூளை வளர்ச்சி குன்றியவன் என்று சொல்லப் போவதில்லை, இச்சொற்கள் எனக்குப் பிடிக்காதவை. உன் விஷயத்தில் சரியானபடி செயல்படாத என் முறையை பலவீனமானது என்று கூறுவது தான் தகும். நான் இதை மாற்றுவேன், உனக்கு உதவும் மற்ற முறைகளைத் தேடுவேன்.

“உட்காருங்கள்!” என்கிறார் அவர்.

“படிக்க கற்றுக் கொண்டு விட்டீர்களா?”

ஒரே குரலில்: “ஆமாம்!”

“சபாஷ்! உங்களுக்குப் பாராட்டுகள்!…”

அவர் மெதுவாக வரிசைகளின் ஊடாக நடந்து வந்து ஒரு குழந்தைக்குத் தன் கரத்தை நீட்டுகிறார். அவன் இடத்தை விட்டு எழுந்து நிற்கிறான். அவர் அச்சிறுவனின் கண்களையே பார்க்கிறார்.

“உன் பெயரென்ன?.. வாழ்த்துகள், பாராட்டுகள்!”

அவர் உண்மையாக, நன்றாக, கருத்தாழத்தோடு அவன் கையைப் பற்றிக் குலுக்குகிறார்.

இவ்வாறு பள்ளி இயக்குநர் ஒவ்வொருவரையும் தனித் தனியே அணுகுகிறார். குழந்தைகள் அவரையே பார்த்துக் கொண்டிருக்கின்றனர்….

“நீங்கள் எல்லா எழுத்துகளையும் கற்று முடித்ததற்குப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் தங்கள் பாராட்டுகளைத் தெரிவிக்கும்படி என்னைக் கேட்டுக் கொண்டனர்.”

ஒரே குரலில்: “நன்றி!”

“புதிய வெற்றிகள் உங்களை வந்தடையட்டும்!”

ஒரே குரலில்: “நன்றி!”

“போய் வருகிறேன்!” குழந்தைகள் எழுந்து நிற்கின்றனர்.

ஒரே குரலில்: “போய் வாருங்கள்!”

படிக்க:
நல்லா தூங்கனும் ! அதுதான் ரொம்ப நாள் ஆசை | OLA ஓட்டுனர்
மூடப்படும் அரசுப் பள்ளிகள் – யார் காரணம் ?

பள்ளி இயக்குநர் வகுப்பறையை விட்டு வெளியேறுகிறார். கதவு திறந்தபடியே இருக்கின்றது. இடைவேளைக்கான மணி அடித்தாகி விட்டது, பள்ளி வானொலியில் ஏதோ சொல்வது இப்போது வகுப்பறையில் கேட்கிறது. நான் கவனமாகக் கேட்கிறேன், குழந்தைகளும் தம் காதுகளைத் தீட்டிக் கொள்கின்றனர்:

“அன்புள்ள தயாரிப்பு வகுப்பு மாணவ மணிகளே! நீங்கள் எல்லா எழுத்துகளையும் படித்து முடித்ததை இன்று அறிந்தோம். பாராட்டுகள்! நீங்கள் முழு பள்ளி மாணவர்கள், உங்களுக்கு எழுதப் படிக்கத் தெரியும். உங்களோடு சேர்ந்து பள்ளியில் உள்ள அனைவரும் எல்லா ஆசிரியர்களும் கம்சமோல் உறுப்பினர்களும் பயனீர்களும் மகிழ்ச்சியடைகின்றனர். இன்றைய கதாநாயகர்களின் பெயர்களைப் பள்ளி முழுவதும் அறியட்டும். இதோ அவர்களுடைய பெயர்கள்…”

ஒவ்வொருவர் பெயரையும் படிக்கும் போது நான் அம்முகத்தைப் பார்க்கிறேன். ”உங்களுள் என்ன நடக்கிறது?” என்று நான் மனதில் பேசிக் கொள்கிறேன். “நீங்கள் ஒவ்வொருவரும் கண் முன் வளருவது தெரிகிறது! இது எதனால்? கல்வியில் நீங்கள் முதல் படியைத் தாண்டிவிட்டதாலா? இல்லை, அனேகமாக பள்ளி இயக்குநரின் வாழ்த்தும், உங்களுடைய பெயர்களை வானொலியில் வாசித்ததும் உங்களுடைய தன்னம்பிக்கையைப் பலப்படுத்தியிருக்கும், பெரியவர்களாக வேண்டும், சமுதாய ரீதியாகப் பயனுள்ளவர்களாக வேண்டும் என்ற நாட்டத்தை உறுதிப்படுத்தியிருக்கும்.

சிறுவனே, நீ ஏன் சோகமாய் இருக்கிறாய்! உனது கண்கள் ஏன் சுருங்கி விட்டன? உன் பெயரை வானொலியில் சொல்ல மாட்டார்களே என்று யோசிக்கின்றாயா? பயப்படாதே, நீயும் எழுதப் படிக்கக் கற்றுக் கொள்வாயென நிச்சயமாக நம்புகிறேன். எல்லோரையும் போல் உன்னால் செய்ய முடியாமல் போனதற்கு காரணம் நீயல்லவே. நீ பலவீனமானவன், மூளை வளர்ச்சி குன்றியவன் என்று சொல்லப் போவதில்லை, இச்சொற்கள் எனக்குப் பிடிக்காதவை. உன் விஷயத்தில் சரியானபடி செயல்படாத என் முறையை பலவீனமானது என்று கூறுவதுதான் தகும். நான் இதை மாற்றுவேன், உனக்கு உதவும் மற்ற முறைகளைத் தேடுவேன். எங்கே சிறுவனே, சிரி பார்க்கலாம், இதோ உன் பெயரையும் வானொலியில் சொல்லி விட்டார்கள். இன்றில்லாவிடிலும் நாளை உன்னுள்ளும் அதிசயம் நிகழும்!…”

“இரண்டாவது பாடவேளையில் எழுத்துகளை எழுதுவோம்!… இப்போது ஓய்வெடுங்கள்! சிறுவர்களே, நீங்கள் ஆண் பிள்ளைகள் என்பது நினைவில் இருக்கட்டும்!”

மாயா நாற்காலியில் அசையாமல் உட்கார்ந்திருக்கிறாள். அவளுக்கு உடல் நிலை சரியில்லையா என்ன?

“மாயா, உனக்கு என்னவாயிற்று?”

அவள் மெளனமாக, கல்லைப் போல் உட்கார்ந்திருக்கிறாள், கண்களைக் கூட இமைக்கவில்லை.

“மாயா, பதில் சொல்!”

அவள் உதடுகளை மிகச் சிறிதளவே திறந்து முணுமுணுத்தாள்:

“தாக்குப்பிடிக்கும் திறனைப் பயிற்சி செய்து பார்க்கிறேன்.”

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க