மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் !
அயோத்தி – காஷ்மீர் – சபரிமலை – தேசிய குடிமக்கள் பதிவேடு
பறிக்கப்படும் மனித உரிமைகள் – தகர்க்கப்படும் அரசியல் சட்டம்.
நாள் : 22.12.2019, ஞாயிறு, காலை 10.30 மணி.
இடம் : நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் அரங்கம்.
(சோகோ அறக்கட்டளை), கே.கே. நகர், மதுரை.
தலைமை :
பேராசிரியர் அ. சீநிவாசன்,
தலைவர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரைக் கிளை.
கருத்தாளர்கள் :
வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன்,
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.
திரு ஆளூர் ஷாநவாஸ்,
மாநில துணைப் பொதுச்செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி.
தோழர் தியாகு,
பொதுச் செயலாளர், தமிழ் தேசிய விடுதலை இயக்கம்.
நன்றியுரை :
திரு ம. லயனல் அந்தோணி ராஜ்,
செயலாளர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை.
நூலரங்கம் :
கீழைக்காற்று வெளியீட்டகம், சென்னை.
♦♦♦
மாற்றுக் கருத்து சொல்லும் அறிவுத்துறையினர், போராடும் மக்கள், அரசியல் சட்டத்தின் ஆட்சி கோருவோரை, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில், தேசிய புலனாய்வு முகமை மூலம் பல ஆண்டுகள் சிறையில் அடைக்கிறது மோடி – அமித்ஷா அரசு. பார்ப்பனியத்தை எதிர்த்தால் கவுரி லங்கேஷ், கல்புர்கி போல சுட்டுத் தள்ளுகிறது. பேச்சுரிமை, கருத்துரிமை முற்றிலும் மறுக்கப்படுகிறது. பாஜக-வின் பாசிசம் ஒட்டு மொத்த சமூகத்தையும் இருள் போல் சூழ்கிறது.
எனினும், வீழ்த்த முடியாத சக்தி அல்ல பாஜக. வரலாறு மாபெரும் சர்வாதிகாரிகளை குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்துள்ளது.
சனாதனத்தை வீழ்த்தி, சட்டத்தின் ஆட்சியை உருவாக்கும் சமரை பெரியாரின் சமத்துவ மண்ணான தமிழகத்தில் இருந்து தொடங்குவோம்! சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், மத நல்லிணக்கம், மதச்சார்பின்மை காப்போம்!
தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரை மாவட்டக் கிளை.
தொடர்புக்கு : 73393 26807.