மிழக ஊடகவியலாளர்கள் மீது அவதூறு பரப்பி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிர்பந்தித்து, பின்வாசல் வழியாக சங்கிகளை புகுத்த முயல்கிறது காவி கும்பல். அதற்கு மாரிதாஸ் போன்ற கழிசடைகளை களமிறக்கி வேலைபார்க்கிறது. இதனைக் கண்டித்து ஃபேஸ்புக்கில் பலரும் தங்களது கண்டனங்களை முன்வைத்துள்ளனர். அதன் தொகுப்பு இங்கே…

***

ஆழி செந்தில்நாதன்

கட்சிகளும் இயக்கங்களும் மனித உரிமையாளர்களும் மிகவும் சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டிய சம்பவம்தான் நியூஸ்18 தமிழ் நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது.

சனாதன இழிபிறவிகள் கொக்கரித்துக்கொண்டிருக்கின்றன.

வீரபாண்டியனை சன் டிவி வெளியே அனுப்பியபோதே திருப்பி அடித்திருந்தால் இன்று இந்த அளவுக்கு நிலைமை முற்றி இருக்காது. இதழியல் அறம் என பீற்றிக்கொள்ளும் இந்து பத்திரிகை சித்தார்த் வரதராஜனை வெளியேற்றியபோது, இந்திய ஊடகத் துறையின் பலம்தான் என்னவென்று தெரிந்து போனதே! இதைப் போல எத்தனையோ வெளியேற்றங்களை இந்தியா முழுக்கப் பார்த்துவிட்டோம்.

மீதி இருந்தது தமிழ்நாடு. இப்போது இங்கேயும் பாசிஸ்ட் கும்பல் தன் வேலையைக் காட்டுகிறது.

வரப் போகும் சட்டப்பேரவைத் தேர்தலின்போது எந்த சானலிலும் அதிமுக அரசுக்கும் பாஜக அரசுக்கும் எதிராக எந்தக் குரலும் ஒலிக்கக்கூடாது என்பதுதான் அவர்களின் உடனடி தேவை.

அவர்கள் எரிச்சலாவது இரவு நேர விவாதங்களைக் கண்டுதான். இத்தனைக்கும், ஒரு விவாதம் என்று வந்தால், இந்த ஊடகவியலாளர்கள் நான்கில் இரண்டு அல்லது மூன்று இடங்களை சங்கிகளுக்கே தருவார்கள். எங்களைப் போன்றவர்கள் அவர்கள் போடுகிற பந்துகளைத் தடுத்தாடும் வேலையைத்தான் பெரும்பாலும் செய்து வந்திருக்கிறோம். ஆனால் , பாஜகவின் எல்லா பொய்களையும் நாங்கள் அங்கே அம்பலப்படுத்துகிறோம் என்பதுதான் அவர்களுக்குக் கடுப்பு. தாங்க முடியாத எரிச்சல்.

எனவே உண்மைச் செய்திகளும் வரக்கூடாது, விரிவான விவாதங்களும் நடக்கக்கூடாது என்று அவர்கள் நினைத்தார்கள். திட்டம் போட்டுக் காரியத்தை முடித்திருக்கிறார்கள்.

அவர்களால் இதைச் செய்ய முடிகிறது என்பது ஆச்சரியமி்ல்லை. ஆயிரம் இருந்தாலும் அது அம்பானி டி.வி தானே!. மற்ற சானல்களில் இது நடந்தாலும் ஆச்சரியமில்லை. பாதிக்கப்படும் ஊடகவியலர்களுக்காகப் பெரிய கட்சிகளும் செயல் தீவிரமுள்ள இயக்கங்களும் செய்யப் போவது என்ன? – இது தான் முக்கியமான கேள்வி.

ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நமது ஊடகவியலாளர்களை இப்படி எல்லாம் வெளியேற்ற முடியும் என்றால் உண்மையில் அவர்களுக்கு அது பெரிய நஷ்டமில்லை. அவர்கள் திறமையான புரபஷனல்கள். கொஞ்ச நாளில் வேறு வேலையைத் தேடிக்கொள்வார்கள். இவ்வளவு நாட்களாகத் தங்கள் சொந்த வேலைக்கு ஏற்படக்கூடிய ஆபத்தையும் பொருட்படுத்தாமல் அவர்கள் முடிந்தவரை உண்மையின் பக்கம் நின்றார்கள், அதற்காக அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். இப்போது நடப்பது அவர்களுக்குத் தோல்வியில்லை.
தோல்வியும் அவமானமும் நமக்கு மட்டுமே.

இன்றைய நிலையில் எதிர்க் கட்சிகளும் இயக்கங்களுக்கும்தான் இந்த விஷயத்தைக் கணக்கில் எடுத்து எதிர்வினை ஆற்ற வேண்டும். அதற்கான வழிமுறைகள் வேறானவை.

மாற்றுக் கருத்துகளை மறுக்கும் ஊடகங்களை மக்கள் புறக்கணிப்பார்கள் என்று அசட்டையாக
இருககக்கூடாது.

ஊடக வெளி யுத்தம் சூட்சுமமானது.

மனுஷ்யபுத்திரன்

பாசிசத்தின் முதன்மையான குணம் சுதந்திரமான உரையாடல்களைக்கொல்வதுதான். இப்போது தமிழக ஊடகங்களில் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது.
ஊடக விவாதங்களில் இனி பங்கேற்கவேண்டுமா என ஜனநாயக சக்திகள் அனைவரும் கூட்டாக முடிவு செய்ய வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. மாரிதாஸ்கள் வெறும் கையாள்கள். தேர்தலுக்கு முன் தங்களுக்கு சாதகமாக ஊடகங்களை ‘ சுத்திகரிக்கும்’ பணி பா.ஜ.கவால் தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது என்று நம்புகிறேன். ஊடக நிறுவனங்கள் அழுத்தங்களுக்குப் பயந்து முதன்மையான ஊடகவியலாளர்களை தொடர்ந்து பலியிட்டால் பார்வையாளர்களும் பங்கேற்பாளர்களும் முற்றாக செய்திச்சேனல்களை புறக்கணிப்பதைத்தவிர வேறு வழியில்லை.

எமெர்ஜென்சியையே எதிர்த்து நின்ற ராம்நாத் கோயங்காக்களும் இந்த மண்ணில்தான் இருந்தார்கள் என்பதை நினைக்க அதெல்லாம் ஒரு கனவுபோல இருக்கிறது.

செய்திச் சேனல் இருந்தால்தான் அரசியல் பண்ண முடியுமா? தெருமுனையில் இருந்து நோட்டீஸ் கொடுப்பேன். கூட்டம் போட்டு கத்துவேன்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நேரத்தில் இந்தப்பிரச்ச்சினை ஏற்படுத்தும் மன உளைச்சல் மிகக்கடுமையாக இருக்கிறது.

உருப்படியாக, வலிமையாக நாம் ஏதாவது செய்ய வேண்டும்.

Ilyas Muhammed Raffiudeen

விகடன் குழுமத்தில் செய்தியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்துப் போராட்டம் நடத்தியதற்காகப் பணியில் இருந்து விலக வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார் நியூஸ் 18 தமிழ்நாடு செய்தியாளர் ஹசீப். அதே வேளையில், உச்சபட்சப் பொறுப்பில் இருந்த குணசேகரன் இனி விவாத நிகழ்ச்சிக்கு மட்டும் நெறியாளராகப் பணியாற்றுவார் எனக் கூறப்பட்டிருக்கிறது. விவாதங்களின் தலைப்பைக் கூட இனி அவரால் முடிவு செய்ய முடியாது என்பதே இந்தப் பணிக் குறைப்பின் சாரம்.

மேலும், மாரிதாஸ் வெளியிட்ட லிஸ்ட்டில் இருந்த பத்திரிகையாளர்களில் மேலும் சிலர் கடந்த வாரத்தில் பணி நீக்கம் செய்ய நிர்பந்திக்கப்பட்டு, பணியில் இருந்தும் விலகியிருக்கின்றனர். குணசேகரனைப் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாய் இருக்கின்றன தமிழ் ஊடகத் துறையில் ஊடுருவியிருக்கும் ஆர்.எஸ்.எஸ் சக்திகள்.

தோழர் ஹசீப் தமிழக ஊடகங்களில் பணி நீக்கம் செய்யப்பட்ட பல்வேறு செய்தியாளர்களுக்காக முன் வந்து போராடியிருக்கிறார். தமிழ் ஊடகத்துறையில் பத்திரிகையாளர்களின் உரிமைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தவும், குரல் கொடுக்கவும் தொழிற்சங்கம் அமைக்கும் முயற்சியில் கடந்த ஆண்டுகளில் ஈடுபட்டிருக்கிறார். அவர் முன்னின்று பணியாற்றிய ‘மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மையம்’ கடந்த ஆண்டுகளில் புதிய தலைமுறை, வேந்தர் டிவி, காவேரி டிவி, கேப்டன் டிவி முதலான நிறுவனங்களில் பணியாற்றி, பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்காகப் போராடி, நஷ்ட ஈடுகளைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் முதலான மதவாத சக்திகள், தோழர் ஹசீப்பின் பெயரால் மத அடிப்படையிலான மோதல்களுக்குத் திட்டமிடுகிறது. தோழர் ஹசீப்பின் பணி நீக்கம் என்பது கருத்துச் சுதந்திரம் மீதான அடக்குமுறை மட்டுமல்ல; தொழிலாளர் உரிமைகளுக்காகப் பத்திரிகையாளர்கள் ஒன்று சேர்வதைத் தடுக்கும் நடவடிக்கையும் கூட.

பார்ப்பனியத்தால் குறி வைக்கப்படும் தோழர்களுக்குத் துணை நிற்போம்.

Villavan Ramadoss

நியூஸ் 18 விவகாரம், நமது பொறுப்பு என்ன?

நியூஸ் 18 தமிழ்நாடு சேனலின் பார்ப்பன விசுவாசம் இதற்கு முன்பே வெளிப்பட்டதுண்டு. எஸ்.வி சேகர் வீட்டில் கல்லெறிந்த விவகாரத்தில் அந்த சேனல் ஆட்கள் இலக்கு வைக்கப்பட்டார்கள். சேனல் விசாரணை நடத்தியது. அப்போது மக்கள் எதிர்ப்பை எண்ணி அமைதி காத்தார்கள்.

இம்முறை அதன் தலைமை செய்தி ஆசிரியர் உள்ளிட்ட பலரை குறி வைத்திருக்கிறார்கள். சிலரிடம் ராஜினாமா கடிதம் பெறப்பட்டிருக்கிறது. மாரிதாஸ், கிஷோர் வகையறாக்கள் ஆலோசனை எடுபடும் எனில் இனி இந்த டிவி இன்னொரு பாண்டே கையில்தான் சிக்கப்போகிறது (மகாலிங்கம் பொன்னுசாமி இப்போது பொறுப்பு ஏற்றிருப்பதாக தகவல்). அல்லது பொறுப்பு ஏற்றவரே பாண்டேயாகலாம்.

அடுத்து இவர்கள் ஏனைய சேனல்களை குறி வைப்பார்கள். ஏற்கனவே கிஷோர் கார்த்திகை செல்வனை குறி வைத்திருக்கிறான்.

இது ஒரு அப்பட்டமான ஊடக சுத்திகரிப்பு நடவடிக்கை. அது நிறைவேறும்போது நாம் அர்னாப், பாண்டேக்களால் சூழப்பட்டிருப்போம். அனிதா போல பலர் உயிரை இழக்கலாம், ஒக்கி, டீமானிடைசேஷன் போன்ற பேரழிவுகள் நேரலாம். அப்போதெல்லாம் உங்கள் கண்ணீர் ஊடகத்தின் பார்வையில் படாது. ஜெய் ஸ்ரீராமும், பாரத் மாதாக்கீ ஜே கோஷமும் உங்கள் செவிகளை கிழிக்கும்.

இது குணா, அசீப், கார்த்திகை செல்வன் போன்ற தனிநபர்களுக்கான சிக்கலும் அல்ல. நம் எல்லோர் மீதான தாக்குதலுக்கான முன்னோட்டம்.

அவர்கள் துவங்கிய இடத்தில்தான் நாமும் ஆரம்பிக்க வேண்டும்.

S P Udayakumaran

நேற்று சன் டிவியில் இருந்து திரு. வீரபாண்டியன் வெளியேற்றப்பட்டிருக்கிறார். இன்று நியூஸ்18 தொலைக்காட்சியிலிருந்து திரு. ஹசீப் முகமது வெளியேற்றப்பட்டிருக்கிறார்; திரு. குணா (குணசேகரன்) பதவியிறக்கம். செய்யப்பட்டிருக்கிறார்.

நிலைமை இன்னும் மோசமாகும்.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால், பல காட்சி ஊடகங்களும் விவாத நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைப்பதை நிறுத்திக் கொண்டார்கள். அப்போது ஒரு முக்கியமான ஊடகத்தின் ஆசிரியரிடம், “என்னை அழைக்கக்கூடாது என்று உத்தரவு வந்திருக்கிறதாமே, தோழர்? உண்மையா?” என்று கேட்டேன். “உங்களுக்குத் தெரியாததா, தோழர்?’ என்று அவர் பதில் கேள்வி கேட்டவாறே சிரித்தார்.

பாஜக-காரர்கள் பட்டியல் தயாரித்துக் கொடுக்கிறார்கள். யார் யாரை அழைக்க வேண்டும், யார் யாரை அழைக்கக்கூடாது என்பதையெல்லாம் ஊடகங்களின் ஆசிரியர்கள் தீர்மானிக்கவில்லை. அது மேலிடத்தில் நிச்சயிக்கப்படுகிறது.

நிலைமை இன்னும் மோசமாகும்.

ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னால், பிரதமர் மோடி தமிழக ஊடக ஆசிரியர்களை தில்லிக்கு அழைத்து, சாப்பாடு போட்டு, சிரித்துப் பேசி, எல்லோருமாக சேர்ந்து ‘குரூப் போட்டோ’ எடுத்துக்கொண்டார்களே, அன்றைக்கே இந்த அழிவு துவங்கிவிட்டது.

நிலைமை இன்னும் மோசமாகும்.

முசோலினி இதே வேலையைச் செய்தார். அவரே ஊடகங்களின் ஆசிரியர்களை நியமித்தார். ஹிட்லர் இதே வேலையைச் செய்தார். ஊடகங்கள் ஒத்து ஊதினார்கள். ஊடகத்தை நடத்த முடியாத நிலையை உருவாக்கிவிடுவார்கள் இந்தக் கொடுங்கோலர்கள் என்றஞ்சி உடன்பட்டார்கள். விளைவுகளை உலகறியும். இந்தியாவிலும்

நிலைமை இன்னும் மோசமாகும்.

என்ன செய்யப் போகிறோம்? அரசியல் கட்சிகளை நம்புவதில் பயனில்லை. எடப்பாடி போய் ஸ்டாலின் வந்தாலும், இங்கே புரட்சி எதுவும் நடக்காது. மடியில் அதிக கனம்கொண்ட திமுகவினர் மோடியிடம் அடக்கியே வாசிப்பார்கள். வேறு பல கட்சிகள் ஒரு சீட், இரண்டு சீட்டுக்கு சமரசம் ஆகிவிடுவார்கள். அறிக்கைகளில் மட்டும் அனல் (லேசாகப்) பறக்கும். பாம்பும் சாகாமல், கோலும் முறியாமல் அற்புத அரசியல் செய்வார்கள்.

நிலைமை இன்னும் மோசமாகும்.

கம்யூனிஸ்ட் கட்சிகள், இசுலாமியக் கட்சிகள், தலித் கட்சிகள், சனநாயக முற்போக்கு இயக்கங்கள் யாரும் ஒன்றுசேர மாட்டார்கள். சகதிக்குள் புதைந்துகொண்டிருப்பவர்கள் தப்பிக்கும் உபாயத்தை அடுத்தவருக்கு போதித்துக்கொண்டே ஆழத்தில் புதைந்து சாவது போல, நாம் புதைந்து கொண்டிருக்கிறோம், செத்துக் கொண்டிருக்கிறோம்.

நிலைமை இன்னும் மோசமாகும்.

சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஊடகர்கள் மீது (அவர்கள் வேலைபார்க்கும் கார்ப்பரேட் ஊடகங்கள் மீதல்ல) ஒரு நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கையை மிகுந்த சிரமத்துக்கிடையே தக்கவைத்துக்கொள்ள முயன்றவர்களின் தலைகள்தான் இப்போது உருள்கின்றன.

நிலைமை இன்னும் மோசமாகும்.

இன்றைய (July 19, 2020) The New Sunday Express நாளிதழில் TJS George எழுதியிருக்கும் கட்டுரையைப் படியுங்கள். “Take it [authority in Delhi] lying down because you have no choice” என்று முடிக்கிறார்.

நிலைமை இன்னும் மோசமாகும்.
வணக்கம்.

சுப. உதயகுமாரன்
தலைவர்
பச்சைத் தமிழகம் கட்சி
யூலை 19, 2020

Kanagaraj Karuppaiah

முதலாளிகளின் விருப்பம்தான் சட்டமா? மூளையை கழட்டி முழுமையாக ஒப்படைக்க முடியுமா?

நியூஸ்18 தமிழ்நாடு News18 Tamil Nadu தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு இளைஞர் ஐந்து நாட்களுக்கு முன்பு வேலையில் இருந்து திடீரென நீக்கப்பட்டிருக்கிறார்.

அதற்காக சொல்லப்பட்ட காரணம் அவர் தனது டுவிட்டர் அக்கவுண்ட் முகப்பில் பெரியார் படத்தை வைத்திருந்தாராம். அதைவிட பெரிய தவறாக அவர் செய்தது, ஏறத்தாழ ஓர் ஆண்டுக்கு முன்பு நீலச்சட்டை பேரணி நடந்தது பற்றிய ஒரு தகவலை பகிர்வு செய்தது ஆகும்.

இது இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு செயலா? அப்படியென்றால் திடீர் நீக்கம் செய்வது எதற்காக?

எந்த ஒரு நிறுவனத்திலும் பணிபுரியக்கூடிய ஒரு நபர் அங்குள்ள அந்த நிறுவனத்தின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. ஆனால் ஒரு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துவிட்ட காரணத்தினாலேயே மூளையை கழட்டி முழுமையாக ஒப்படைக்க முடியுமா?

அந்த நிறுவன முதலாளியின் விருப்பங்களை மட்டும் நிறைவேற்றிக்கொண்டு, அவர் கொடுக்கும் குப்பைகளைச் சுமந்து திரிய வேண்டுமா? வாழ்க்கைத் தேவைக்காகவே ஒருவர் பணிக்குச் சேருகிறார். செய்கிற பணிக்கு சம்பளம் கொடுக்கிறார்கள். சமூகவலைத்தளத்தில் இயங்குவதும், நிறுவனத்துக்கு வெளியே ஒரு இடத்தில் பேசுவதும், ஒரு பிரச்சினை குறித்து சொந்த கருத்து கொண்டிருப்பதும், விவாதிப்பதும் எப்படி தவறாகிட முடியும்?

பெருமுதலாளிகளின் விருப்பம் மட்டுமே சட்டமாக இங்கு கோலோச்சுகிறது என்பதைத்தான் நிகழ்வுகள் காட்டுகின்றன. எந்த சட்ட நியதிகளுக்கும் உட்படாத அராஜகம் தலை தூக்குகிறது.

சட்டம் என்பதே வெறும் பம்மாத்து ஆகிப்போனதென்றால், மக்களுக்காகக் கூட நடிக்கும் தேவை இல்லையென்று ஆகிவிட்டதென்றால் வல்லான் வகுத்ததே வாய்க்காலாகும்.

தமிழகத்தில் பல ஊடகவியலாளர்கள் பல்வேறு நிறுவனங்களிலும் ஆட்குறைப்பு செய்யப்பட்டார்கள். சம்பள குறைப்பு நடந்தது. ஆனால் சக ஊடகங்களில் அமைதியே நிலவியது. சமூக ஊடகத்தில் பெரியார் படம் வைக்க கூடாது என இப்போது அராஜகம் தலையெடுக்கிறது. அடுத்து என்ன நிறுவனத்தின் முதலாளி போட்டோவை வைக்க வேண்டும் என்பீர்களா?

இப்போது அதே நியூஸ்18 தமிழ்நாடு நிறுவனத்தில் ஹசீப் என்ற ஊடகவியலாளரை ராஜினாமா செய்ய நிர்ப்பந்திப்பதாக செய்திகள் உலவுகின்றன.

இப்போதைக்கு இந்த நடவடிக்கைகள் சில ஊடகவியலாளர்களை மட்டும் பாதிப்பதாக இருக்கலாம், ஆனால் வரும் நாட்களில் இது ஊடகத்தின் தன்மையை பாதிக்கும். மக்களின் அறிந்துகொள்ளும் உரிமையை பறித்து, ஊடகங்கள் வழியே மக்களின் சிந்தனையைத் தீர்மானிக்கும் எல்லைக்கு போகும்.

எனவே இந்தப் பிரச்சனை ஊடகவியலாளர்களின் தனிப்பட்ட பிரச்சனை அல்ல. ஒட்டுமொத்த ஊடகவியலாளர்களும், கருத்து சுதந்திரத்தில் அக்கறை கொண்டவர்களும் இணைந்து குரல் எழுப்ப வேண்டிய பிரச்சனை.

இந்த சூழலில் அமைதி நிலவினால் அது வரும் நாட்களில் இன்னும் பல உரிமைகள் பறிக்கப்பட கொடுக்கும் அனுமதியாகவே முடியும்.

எனவே பொதுவான உரிமைகளுக்கு குரல் கொடுப்பதன் மூலம் தனிநபரின் உரிமைகளை உத்தரவாதப்படுத்த போகிறீர்களா அல்லது பொதுவான உரிமைகளை விட்டுக் கொடுப்பதன் மூலம், தங்களின் உரிமைக்கும், வரும் தலைமுறையினரின் உரிமைக்கும் சேர்த்தே வேட்டு வைத்துக் கொள்ளப் போகிறீர்களா?

பா. ஜீவ சுந்தரி

#Shame_on_you_News18_administration!
#uprootbrahmanisminmedia
#Stand_With_Guna_and_Haseef

ந்து சமூகத்தின் தலைமைப் பீடமாகத் தங்களை அறிவித்துக் கொண்டிருக்கும் பார்ப்பன சமூகம்தான், தற்போது நியூஸ்18 மூத்த பத்திரிகையாளர், ஆசிரியர் குணசேகரனை பதவி இறக்கம் செய்திருக்கிறது. செய்தியாளர் ஆசிஃப் கானை பணியை விட்டு விலக நிர்பந்திக்கிறது.

எஸ்.வி.சேகர் போன்ற காமெடியன்கள் மிக பயங்கரமானவர்கள். அவர்களைப் போலவே இன்னும் பலரும். கிஷோர் கே.ஸ்வாமி, மாரிதாஸ், மதன் போன்ற குப்பைகள் வெளியிடும் குப்பைகளால் என்னவெல்லாம் சாதிக்க முடிகிறது பாருங்கள். ஊடகத் தலைமையைத் தங்கள் கரங்களுக்கு மாற்றுவதில் குறியாக இருக்கிறார்கள் இவர்கள்.

விவாத நிகழ்ச்சிகளில் கருத்தாளர்களாக மட்டும் நாராயணன், ராமசுப்பிரமணியன், கரு.நாகராஜன் போன்ற புல்லுருவிகள் நுழையவில்லை. அதிகார பீடத்தை வலு மிக்கதாக்கவே நுழைகிறார்கள். இனி, வரவிருக்கும் தமிழகத் தேர்தல் களத்துக்கு முன் காட்சிகள் பலவும் மாறலாம். நேர்மையான ஊடகவியலளர்கள், பத்திரிகையாளர்களுக்குப் புள்ளி வைத்து விட்டார்கள். எச்சரிக்கையும் கவனமும் தேவைப்படும் நேரமாக இருக்கிறது இப்போது.

நியூஸ்18 செய்தி சானல் நிறுவனத்துக்குக் கடும் கண்டனங்கள்

Barathi Thambi

Media becomes ‘Modi’a.

திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட எல்லா எதிர்க்கட்சிகள் மற்றும் பாஜக, அதிமுக ஆதரவு நிலையில் இல்லாத எல்லா அமைப்புக்களிடமும் வேண்டிக்கொள்வது,

பாஜகவின் உத்தரவை ஏற்று பணியாளர்களை நீக்கும் அல்லது அவமானப்படுத்தும் நியூஸ் 18 அல்லது வேறு சேனல்கள் எதுவானாலும் அதன் விவாதங்களில் பங்கேற்காதீர்கள்.

இதனை வெறுமனே நியாய உணர்வு சார்ந்து மட்டுமே செய்ய சொல்லவில்லை. இன்று துரத்தப்படும் ஆட்கள் இடத்தில் மாரிதாஸ், மதன் போன்றவர்கள் உட்காருவார்கள்.

இவர்கள் உங்கள் அமைப்புக்களை எத்தனை தூரம் இழிவுபடுத்தியவர்கள் என்பதை யோசித்துப் பாருங்கள்.

பாண்டே எப்படி நடத்தினார் என்பதையும் இந்த வெறித்தனமான அதிகாரம் சிக்கினால் அவர்கள் என்னவெல்லாம் செய்வர்கள் என்று சிந்தியுங்கள்.

#ShameOnYouNews18
#BoycottNews18TN
#StandWithGunaAndHaseef

Chinthan Ep

#BoycottNEWS18 #BrahmanicFascism #ShameOnYouNews18
மாரிதாஸ் எல்லாம் ஒரு ஆளா, அவன் ஒரு சில்றப்பய என்று பலரும் சர்வசாதாரணமாக இருந்துவிட்டதன் விளைவைப் பார்த்தீர்களா…
மாரிதாஸ் ஒரு சில்றப்பயலா இருக்கலாம். ஆனால் அவனுக்குப் பின்னால் இருந்து அவனை இயக்கும் கூட்டம் சாதாரணக் கூட்டமல்ல. அது மிகப்பெரிய சதிவலைகளை விரித்து ஒட்டுமொத்த தேசத்தையும் நாசம் செய்யும் கூட்டம்.

எல்லையற்ற அதிகாரத்தை தன்னகத்தே வைத்திருக்கிற கூட்டம்.
காலங்காலமாக சாதி என்கிற பெயரால் மனித குலத்தை பல துண்டுகளாகப் பிரித்துவைத்து, ஓரிரு சதவிகித அயோக்கியர்கள் மட்டுமே அனைத்தையும் ஆட்டையைப் போட்டு சொகுசாக வாழும் கூட்டம்….

இப்போது பாருங்கள்… நம் மாநிலத்து முற்போக்கு முன்னோர்களுடைய இத்தனை ஆண்டுகால உழைப்பின் பலனாக நாம் மெல்லமெல்ல கட்டியெழுப்பிக்கொண்டிருக்கிற முற்போக்குக் கோட்டைக்குள் நுழைந்து, இங்கே யார் பத்திரிக்கையாளர்களாக இருக்க வேண்டும் என்பதுவரையிலும் தீர்மானிக்கிற சக்தியாக உருவெடுத்திருக்கிறார்கள்…

இனியேனும் விழித்துக்கொள்ளவில்லை என்றால், ஹெச்.ராஜாவெல்லாம் நமக்கு முதல்வராகவே வந்துவிடும் வாய்ப்பு வெகுதூரத்தில் இல்லை….

பார்ப்பனிய பாசிசம் என்பது ஹிட்லர் பாசிசத்தை விடவும், முசோலினி பாசிசத்தை விடவும் பலமடங்கு கொடூரமானது என்பதை உணர்வோம் தோழர்களே.

Elamathi Sai Ram

ண்ணன் எப்படா சாவான்,
திண்ணை எப்ப காலியாகும்ன்ற மாதிரி..
அடுத்ததாக தமிழ் ஊடகங்களின் உச்சிக்குடுமியை ஆட்டத் தொடங்கியுள்ளன சங்கிப்படைகள்…

நடுநிலை வேண்டுமென நீண்ட கடிதம் எழுதிய மாரிதாஸ்..

நியூஸ் 18 மற்றும் புதிய தலைமுறை தலைமைகளின் மீது அவதூறுகளை அள்ளித்தெளிக்கும் கிஷோர் கே ஸ்வாமி..

மதன் ரவிச்சந்திரன்..

மக்களுக்கு யாரென்றே தெரியாத இவர்கள்தான் அவர்களின் ஆயுதங்கள்.

கறுப்பர்க்கூட்டம் சர்ச்சையில் சம்பந்தமேயில்லாத நியூஸ்18 ஹசீஃப் முகமதை இழுத்துவிட்டு, பின்னர் தலைமைகளின் மேல் குறிவைக்கிறார்கள்.

தலைமைகளை நீக்கிவிட்டு யார் வருவார்கள்… ?

இந்த நேரத்தில்..

“பிராமணர்களை விமர்சித்தால் உங்களின் ஜட்டி, பிரா” முதற்கொண்டு கிழிக்கப்படும் என்று ஒரு இன்சென்சிட்டிவான ட்வீட்டை போட்டு அதை நீக்கிய சார் எஸ்.வி.சேகரின் ட்வீட்ற்கும், இதற்கும் சம்பந்தமே கிடையாதா….?

மக்களுக்கு யாரென்றே தெரியாத இவர்கள், ஒரு மாநிலத்தின் செய்திச்சேனல்களை குறி வைத்துத் தாக்குகிறார்கள்.. நோக்கமென்ன ?

மக்களிடம் இவர்களை, இவர்களின் நோக்கங்களை அம்பலப்படுத்துவதைத் தவிர வேறேதுவும் செய்ய முடியாதா.. ?

வயிறெரிகிறது… !
#UprootBrahminisminMedia

Thiru Yo :

சங்கிகள் திட்டம்:

1. முதலில் இப்போதுள்ள ஊடகவியலாளர்கள் பலர் மீது கல்லெறிந்து வெளியேற்றுவது.

2. சங்கிகளை ஊடகவியலாளர்களாக நியமித்து ஊடகங்களைக் கைப்பற்றி நாக்பூர் கும்பலின் சனாதன ஆதிக்க அரசியலை பரப்புவது.

3. வாய்ப்பிருந்தால் தமிழ் மக்கள் விரோத நிலைபாடுகள் எடுத்துள்ள ரஜினியை தேர்தலில் ஏதாவது ஒரு வகையில் நுழைப்பது.

4. இல்லாமல் போனால் பாஜக கிளை அதிமுக கும்பலுக்கு ஆதரவாக பரப்புரை, பொய்களை உற்பத்தி செய்வது.

5. பார்ப்பனீய கும்பலுக்கு ராஜாஜி காலத்தில் பிடிக்க முடியாமல் விட்ட ஆட்சியை எப்படியாவது இந்த முறையாவது பிடிக்க வேண்டுமென்கிற ஆதிக்க வெறி. இது பார்ப்பனீயம் நடத்துகிற வேட்டை.

உங்கள் குழந்தைகளுக்குக் கல்வி, வேலை, வருமானம், சுயமரியாதை, கண்ணியம் வேண்டுமா? அல்லது பார்ப்பனீயத்தின் கட்டுக்கதை திசைதிருப்பல்கள் வேண்டுமா? இந்த ஐந்தாண்டுகளின் துயரத்தை நிறுத்துவதும் அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு நீடித்து பாஜக (அதிமுக+பாஜக) கும்பல்களிடம் குழந்தைகளின் எதிர்காலத்தை பாழாக்க ஒப்படைப்பதும் உங்கள் கையில்.

ரவி காளிடாஸ்ஸ் :

னது கைபேசியில் இருந்து News 18 ன் செயலியை Uninstall செய்து விட்டேன். சமுக ஊடகங்களில் News 18 -னை பின் தொடர்வதை நிறுத்தி விட்டேன்.

#ShameOnYouNews18

வட இந்தியா வில் இருந்து வந்த இந்த சேனலுக்கு
தமிழ் நாட்டில் ஏன் இத்தனை வரவேற்பு?

ஓகி புயல்,
கஜா புயல்,
சென்னை பெரு வெள்ளம்,
நீட், அதனால் நிகழ்ந்த அணிதாவின் மரணம்,
மீத்தேன் நெடுவாசல்
ஜல்லிக்கட்டு போராட்டம்
என்று
மக்கள் பாதிப்புக்குள்ளான விடையங்களை

அவர்களின் அழு குரலை விவாதமாக மாற்றி அரசின் கவனத்திற்கு கொண்டு போனதுதான், இத்தனை வரவேற்புக்கும் காரணமாக அமைந்தது.

அது குணசேகரன் அவர்களால் தான் சாத்தியாமானது. ஊடகம் பார்ப்பனியத்தின் பிடியில் சிக்கி இருக்கிறது . வன்மையான கண்டனங்கள்.

#ShameOnYouNews18
#StandWithGunaAndHaseef
#UprootBrahmanismInMedia

Villavan Ramadoss :

உடனடியாக நாம் என்ன செய்யலாம்?

டுமையான கண்டனங்களை வாய்ப்புள்ள எல்லா தளங்களிலும் பதிவு செய்யுங்கள்.

சேனல் 18 குழுமத்தை புறக்கணியுங்கள். சமூக ஊடகங்களில் அதனை பின்தொடர்வதை நிறுத்துங்கள். அதனையும் பதிவு செய்யுங்கள்.

நீங்கள் சார்ந்துள்ள இயக்கங்கள் இப்படியான சேனல்களில் விவாதங்களில் பங்கேற்பதை நிறுத்த அழுத்தம் கொடுங்கள்.

மாற்று ஊடகங்களை மற்றும் இதில் ஆட்படாத சேனல்களை ஆதரியுங்கள். அவற்றை பிறருக்கு அறிமுகம் செய்யுங்கள்.

பார்ப்பன பயங்கரவாதத்தின் ஊடக தாக்குதலை முடிந்த அளவுக்கு உங்கள் வட்டாரத்தில் அம்பலப்படுத்துங்கள்.

நினைவில் வையுங்கள், நாம் தோற்பதுகூட பிரச்சினை இல்லை. எதிர்புறம் நிற்பது மதன், மாரிதாஸ், கிஷோர், எஸ்.வி.சேகர் போன்ற அல்பங்கள். அவர்களிடம் சுலபமாக விட்டுக்கொடுத்துப் போவது வேறெதையும்விட அசிங்கமானது..

#மழைக்குருவி :

#News18 ஐ புறக்கணிப்பதால் அம்பானிக்கு பெரிய அளவில் ஒன்றும் ஆகிவிடாதுதான். ஆனால், அம்பானிக்கு நம் குரல் கேட்க வேண்டுமென்றால் #Boycott_Jio தான் ஒரே வழி.

JIO சிம் வைத்திருப்பவர்கள் மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி (MNP) மெசேஜ் பண்ணுங்கள். உடனடியாக JIO கஸ்டமர் கேரிலிருந்து உடனே காரணம் கேட்டு கால் வரும். அவர்களிடம் #News18 குணாவை நீக்கியதற்காக விலகுகிறேன் என்று சொல்லுங்கள்.

சில நூறு கால்கள் போதும் நம் குரல் அம்பானிக்கு கேட்கும்.. கார்ப்ரேட்காரனுக்கு காசுதான் முக்கியம். நம் எதிர்ப்பை பதிவு செய்வோம். ஊடகத்தினால் வரும் வருவாய் பெரிதா, ஜியோ-வினால் வரும் வருமானம் பெரிதா என்று பார்ப்பவன் தான் கார்ப்பரேட்.

disclaimer