பொருளாதார நெருக்கடி, கொரோனா பெருந்தொற்று இவற்றுடன் சேர்த்து பாசிச அபாயத்தையும் இந்தியா எதிர் கொண்டுள்ளது. ஆம் ! இங்கு அறிவிக்கப்படாத ஒரு அவசரநிலை ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்திரா காந்தியின் அன்றைய அவசரநிலை ஆட்சியை எதிர்கொண்டதைப் போல பாஜக அரசின் இன்றைய அவசரநிலை ஆட்சியை எதிர்கொள்ள முடியாது. ஏனெனில் இங்கு பாஜக -வைப் பின்னிருந்து இயக்குகிறது ஆர்.எஸ்.எஸ்.. மேலும், அதிகார மட்டங்களிலும் அடியாட்படை பலத்திலும் வலுவாக உள்ளது இக்கும்பல்.

தற்போதைய கொரோனா பெருந்தொற்றுச் சூழலை தனக்கு  சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா துவங்கி, சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா, புதிய கல்விக் கொள்கை வரை தொடர்ச்சியாக தனது காவி – கார்ப்பரேட் திட்டங்களை அமல்படுத்தத் துடிக்கிறது மோடி அரசு.

இந்த பாசிச சூழலை எதிர்க்க, நாம் அனைவரும் ஒருங்கிணைய வேண்டிய அவசியம் உள்ளது. குறிப்பாக கம்யூனிஸ்டுகள், பெரியாரிய – அம்பேத்கரிய சிந்தனையாளர்கள், ஜனநாயக சக்திகள் மற்றும் நாட்டின் மீது அக்கறை உள்ள அனைவரும் பாசிசத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய அவசியத்தை இக்காணொலியில் விரிவாக விளக்குகிறார் வழக்கறிஞர் வாஞ்சிநாதன். பாருங்கள்… பகிருங்கள்…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க