மூணாறு பெட்டி முடி நிலச்சரிவினால் ஏற்பட்ட மரணங்கள், இயற்கைப் பேரழிவு அல்ல, டாடா நிர்வாகம் மற்றும் கேரள அரசின் அலட்சியத்தால் நிகழ்ந்த படுகொலை!” என்ற முழக்கத்தின் அடிப்படையில் உயிரிழந்த தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு நீதி கேட்டு, 12.08.2020 அன்று நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பாக மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

  • பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒவ்வொரு உயிர்களுக்கும் தலா 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.
  • உயிரிழந்த, படுகாயமடைந்த, பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் வாழ்நாள் முழுவதற்குமான வாழ்வாதார பாதுகாப்பிற்கு உத்திரவாதம் செய்ய வேண்டும்.
  • மாஞ்சோலை, மூணாறு, வால்பாறை, நீலகிரி – என அனைத்துப் பகுதி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கை, அனைத்து உரிமைகளையும் உத்திரவாதப்படுத்த வேண்டும்.
  • தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பை அட்டை போல் உறிஞ்சி, அலட்சியத்தால் மரணத்திற்கு தள்ளிய கார்ப்பரேட் முதலாளிகள் டாட்டா போன்றோரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.
  • தேயிலைத் தோட்டங்கள் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் உடைமையாக்கப்பட்டு நிர்வகிக்கப்பட வேண்டும்.
  • இக்கோரிக்கைகளுக்காக அனைத்து தரப்பு உழைக்கும் மக்களும் இணைந்து போராட வேண்டும்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருநெல்வேலி – தூத்துக்குடி.
தொடர்புக்கு : 9385353605.