த்திய மோடி அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லியில் போராடும் விவசாயிகள் மீதான ஒடுக்குமுறையை நிறுத்தவும், கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவும் வலியுறுத்தும் வகையில் கடண்டஹ் 03-12-2020 அன்று காலை 11 மணியளவில் சாஸ்திரி பவன் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது !

இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்த் தேச மக்கள் முன்னணி, மக்கள் அதிகாரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாலெ) – செந்தாரகை, மக்கள் ஜனநாயக குடியரசுக் கட்சி ஆகிய அமைப்புகள் கலந்து கொண்டன.

“கார்ப்பரேட்களுக்கு ஆதரவான, உழவர்களுக்கும் மக்களுக்கும் எதிரான புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெறு !

தில்லியில் போராடும் உழவர்கள் மீதான ஒடுக்குமுறையை நிறுத்திடு !” ஆகிய  முழக்கங்களின் கீழ் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

படங்கள் :

தகவல் : மக்கள் அதிகாரம், சென்னை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க