தோழர் லெனின் 151-வது ஆண்டு பிறந்தநாள் விழா !

சென்னை

சேத்துப்பட்டு வாழ் உழைக்கும் மக்கள் மத்தியில் தோழர்களின் கம்பீரமான முழக்கங்களுடன் நிகழ்ச்சி தொடங்கியது.

“ஜாரின் கொடூர ஆட்சியையும், ஏகாதிபத்தியத்தையும் ரஷ்ய பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் இதர வர்க்கங்களை அணித்திரட்டி புரட்சியை நடத்தி உழைக்கும் மக்களுக்கான ஆட்சி அதிகாரத்தை நிலைநாட்டியவர்தான் தோழர் லெனின்.

நமது நாட்டில் காவி பாசிச கும்பல், கார்ப்பரேட் நலனுக்காக மக்களின் வளங்களை சூரையாடுகிறார்கள். மக்கள் மீது வரிகளையும் போட்டு ஈவிரக்கமின்றி சுரண்டுகிறார்கள். இலவச தரமான கல்வி இல்லை, மருத்துவம் இல்லை, வேலை இல்லை, சுகாதாரம் இல்லை, வீடு இல்லை, மக்கள் பசி – பட்டினியால் சாகிறார்கள்.  இத்தனை “இல்லை”களையும் தீர்ப்பதற்கான வழியைத்தான் தோழர் லெனின் காட்டுகிறார்.

சொந்த நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டிய கொரோனா தடுப்பு மருந்தினை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து சொந்த நாட்டு மக்களை சாகடிக்கிறது மோடி அரசு.” மோடி அரசின் இந்த அயோக்கியத்தனத்தையும், பாசிச நடவடிக்கைகளையும் அம்பலப்படுத்தி தோழர்கள் உரையாற்றினார்கள்.

This slideshow requires JavaScript.

இந்நிகழ்ச்சிக்கு மக்கள் அதிகாரம் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் அமிர்தா தலைமை தாங்கி உரையாற்றினார். ஆசான் லெனின் பிறந்த நாளை மக்கள் அதிகாரம் சேத்துப்பட்டு பகுதி தோழர் வாசு வாழ்த்துரை வழங்கினார். புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் துணைவேந்தன் “இன்றைய காலக் கட்டத்தில் ஏன் லெனின் தேவை?” என்கின்ற தலைப்பில் உரையாற்றினார்.

ஆசான் லெனினின் உருவப் படத்திற்கு தோழர்களும் பகுதி மக்களும் மலர்தூவி மறியாதை செய்தனர். சுற்றியிருந்த உழைக்கும் மக்களுக்கும், ஆட்டோ தொழிலாளர்களுக்கும், தோழர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
மக்கள் அதிகாரம், சென்னை.

***

திருவள்ளூர்

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி – டி.ஐ.மெட்டல் ஃபார்மிங் தொழிலாளர்கள் சங்கம் சார்பாக தோழர் லெனின் சிந்தனைகளை உயர்த்திப் பிடிப்போம் என்ற தலைப்பில் ஆலைவாயில் கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ச.மகேஷ்குமார் தலைமை வைகித்தார். சங்கத்தின் சிறப்புத் தலைவர் தோழர் ப.விஜயக்குமார் சங்கத்தின் கொடியேற்றி ஆசான் லெனின் படத்திற்கு மாலை அணிவித்து சிறப்புரையாற்றினார்.

This slideshow requires JavaScript.

சிறப்புரையில், ”கொரோனா பெருந்தொற்று முதல் அனைத்து பெருந்தொற்றுக்கும், பேரழிவிற்கும் காரணம் முதலாளித்துவ பெருந்தொற்று. இந்த முதலாளித்துவ பெருந்தொற்றை வீழ்த்தாமல் மக்களுக்கு விடிவில்லை என்பதையும், அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கும் காவி – கார்ப்பரேட் பாசிச அரசையும் தோழர் லெனின் வழியில் வீழ்த்தாமல் விடப்போவதில்லை வாருங்கள் தோழர்களே” என்று பேசினார்.

சங்கத்தின் தொழிலாளர்கள் திரளாக கலந்துக் கொண்டு முழக்கமிட்டனர். இறுதியாக சங்கத்தின் இணைச் செயலாளர் தோழர் சேதுராமன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

***

தருமபுரி

ஏப்ரல் 22 : பாட்டாளி வர்க்க தோழர் லெனின் 151-வது பிறந்த நாளில் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாவட்ட அமைப்பாளர் தோழர் சத்தியநாதன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

This slideshow requires JavaScript.

மக்கள் அதிகாரம் அமைப்பின் பென்னாகரம் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் சிவா உரையாற்றினார். இறுதியாக மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தருமபுரி மாவட்டம்
செல் : 6384569228.

***

விருதை

பாசிசத்தை வீழுத்துவோம் சோசலிசத்தை படைப்போம் என்பதை விளக்கி கடலூர் மண்டலம் விருத்தாச்சலம் வட்டாரம் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் வட்டார செயலாளர் தோழர் அசோக்குமார் தலைமையில் விஜயமாநகரத்தில் உறுதி மொழி ஏற்கப்பட்டது.

This slideshow requires JavaScript.

பாசிசத்தின் அபாயத்தைப் பற்றி மக்களிடையே விளக்கிப் பேசி இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் வட்டார மற்றும் கிளை தோழர்கள் கலந்து கொண்டனர்.

***

உளுத்தூர்பேட்டை

மக்கள் விழாவாக லெனின் பிறந்த நாள்! ; காவி கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்க அறைகூவல்! என்ற தலைப்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டத்தில் உள்ள பாலி என்ற கிராமத்தில் லெனின் பிறந்தநாள் நிகழ்ச்சி மக்கள் அதிகாரம் தோழர்களால் நடத்தப்பட்டது.

This slideshow requires JavaScript.

***

நெல்லை

மக்கள் அதிகாரம் திருநெல்வேலி மாவட்ட தோழர் அன்பு, லெனின் பிறந்த நாளையொட்டி உரை வீடியோவை வெளியிட்டுள்ளார்.

***

மதுரை

மக்கள் அதிகாரம் மதுரை மண்டலம் தோழர் குருசாமி அவர்கள் ”காவி கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்க ஒன்றிணைவோம்!! தோழர் லெனின் 151 வது பிறந்த நாளில் சூளுரைப்போம்!” என்ற தலைப்பில் உரை வீடியோ வெளியிட்டுள்ளார்.

தொகுப்பு : வினவு செய்தியாளர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க