காவிரி, தென்பெண்ணை ஆற்று நீரை தடுத்து அணை கட்டி தமிழகத்தை பாலைவனமாக்கும் கர்நாடக அரசு – பாஜக – கார்ப்பரேட் கூட்டு சதியை முறியடிப்போம்” என்ற தலைப்பின் கீழ் மக்கள் அதிகாரம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 8.7.2021 காலை 11 மணிக்கு பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.

தமிழ்நாட்டு எல்லை பகுதியில் அமைந்துள்ள மேக்கேதாட்டு பகுதியில் மிகப் பெரிய தடுப்பணையை கட்ட முயற்சித்து வருகிறது கர்நாடகம். இந்த கட்டுமானப் பணிக்கு தமிழ்நாட்டில் இருந்து மணல் உள்ளிட்ட பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறது.

ஒன்றிய அரசுக்கு எதிரான போராட்டத்தை தமிழ்நாட்டில் முன்னெடுப்பதும், பாஜக போன்ற கார்ப்பேரேட் சேவை செய்யும் துரோகிகளை தமிழ்நாட்டிலிருந்து விரட்டியடிப்பதும் நமது கடமையாகும்.

இந்தக் கடமைகளை நிறைவேற்ற தமிழ்நாட்டு மக்களுக்கு அறைகூவல் விடுக்கும் வகையில், இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் சிவா தலைைமை தாங்கினார்.

இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு தோழர் மாதையன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி செயலாளர் தோழர் கருப்பண்ணன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட செயலாளர் தோழர் சந்தோஷ்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் கோவிந்தராஜ், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் தோழர் சத்தியநாதன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் முத்துக்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

This slideshow requires JavaScript.

மக்கள் அதிகாரம் அமைப்பின் வட்டார ஒருங்கிணைப்புக் குழு தோழர் வெங்கடேசன் நன்றியுரை ஆற்றினார்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தருமபுரி மண்டலம்,
97901 38614.

000

மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்டுவதன் மூலம் காவிரியில் தமிழகத்தின் உரிமையைப் பறித்து தமிழகத்தை பாலைவனமாக்கி, காவிரி டெல்டாவை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்க்கத் துடிக்கும் மோடி அரசின் கார்ப்பரேட் – காவி பாசிசத்துக்கு எதிராகப் போராடுவோம் ! எனும் முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரம் அமைப்பின் வட்டாரச் செயலாளர் தோழர் அசோக்குமார் தலைமையில் விருதாச்சலம் பேருத்து நிலையத்தில் ஜூன் 6-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இதில் தோழர் கோகுல்கிருஷ்டிபன், RMPI ; தோழர் ராமர், CPI (ML) மக்கள் விடுதலை; தோழர் ராமலிங்கம், மக்கள் அதிகாரம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மக்கள் அதிகாரம் அமைப்பின் உறுப்பினர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டனர்.

This slideshow requires JavaScript.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
கடலூர் மண்டலம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க